Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

catholic christian lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
catholic christian lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2022

St. Anthony Devotion (day 17) in Tamil

 பிரில் பட்டணத்துக் கெபிகள்


அர்ச். அந்தோனியாருடைய தாழ்ச்சியையும், புண்ணியங்களையும் அவர் செய்துவந்த அற்புதங்களையும் பசாசுகள் கண்டு கலங்கி அவருடைய உயிரை வாங்கத் தேடின சேன் ஜூனியன் (St. Junien) என்னும் ஊரில் பிரசங்கம் கேட்கவந்த திரனான சனங்களுக்குக் கோயிலில் இடமில்லாமையால் வெளியில் ஒரு மைதானத்தில் மேடைபோட்டு அம்மேடைமேல் குருப்பிரசாதிகளும் பிரபுக்களும் அந்தோனியாரைச் சுற்றி நின்றிகொண்டிருக்கும் படியான ஏற்பாடு செய்தார்கள். அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் துவக்குகிறதுக்குமுன் அதைக் கெடுக்க நினைத்திருந்த பசாசுகளின் மோசக் கருத்தை ஞான திருஷ்டியால் அறிந்து சனங்களைப் பார்த்து; பிரசங்கத்தின்போது என்ன சம்பவித்தபோதிலும் அதனால் யாதொரு கெடுதியும் நடவாதென்று அறிவித்தபிறகு பிரசங்கத்தை ஆரம்பித்தார். நடுச்சமயத்தில் மேடை அதிர்ந்து விழ அதைப்பற்றி ஒருவரும் கவனிக்கவுமில்லை, ஒருவருக்கும் சேதமும் இல்லை. அந்தோனியார் மற்றொரு உயர்ந்த ஸ்தலத்தில் ஏறி துவக்கின பிரசங்கத்தை முடித்தார். சனங்கள் அவருடைய ஞான திருஷ்டிகைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.



கடைசியில் பிரிவ் பட்டணம் வந்து சேர்ந்தார். அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த ஐசுவரியவான் ஒருவர் அவ்விடத்தில் அவர் ஒரு மடங் கட்டுவதற்கு வேண்டிய ஆஸ்தி வைப்பதாகச் சொன்னார். ஆனால் தனிவாசத்தை நேசித்த அர்ச்சியசிஷ்டவர் அடுத்தாற்போலத் தனித்துக் கெபிகள் இருப்பதாகக் கண்டு அங்கே அடிக்கடி போய்க் கொண்டிருப்பார். அந்தத் தனித்தவிடத்தில்தான் தம்முடைய ஆசைக்குத் தக்க அளவு செபத்திலும், தியானத்திலும், தவத்திலும், ஏகாந்தத்திலும் எப்போதும் சர்வேசுரனுடைய சமூகத்தில் காலத்தைச் செலவழித்தார். பாறையினின்று துளித்துளியாய் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபடியால் தமது கையால் ஒரு குழி தோண்டி தண்ணீரைத் தாம் உபயோகப்படுத்தி வந்தார். "பாறையில் உன் வாசஸ்தலத்தைத் தெரிந்து கொள்" என்றாற் போல அந்தோனியார் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்தார். சேசுநாதரே அந்தப் பாறை, அவரிடத்தில் தான் உன் வாசஸ்தலமும், உன் நினைவுகளும், உன் பட்சமும் இருக்கவேண்டியது. வனாந்தரத்தில் யாக்கோபு பாறையின்மேல் தலைவைத்து நித்திரை போகையில், பரமண்டலந் திறந்து அதனின்று இறங்கின சம்மனசுகளோடு சம்பாஷணைசெய்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதுபோலவே சேசுநாதரிடத்தில் தன் வாசஸ்தலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆத்துமமும் ஆசீர்வதிக்கப்படும். அர்ச். அந்தோனியார் தமது விரலினால் பள்ளம் தோண்டி தண்ணீரை அதில் விழும்படி செய்தார். திருயாத்திரை ஸ்தலங்களில் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பாதத்தின் அடியிலோ, வேறெந்த அற்புத விதமாகவோ உண்டான ஊற்றின் நீரைக்கொண்டு சர்வேசுரன் அநேகம் புதுமைகளைச் செய்யத் திருவுளமானார். 13-ம் நூற்றாண்டு முதல் பிரிவ் பட்டணத்தை அடுத்த கெபியின் ஊற்றில் அநேக அற்புதங்கள் நடந்து வருகின்றன. ஞானஸ்நானத்துக்குச் சேசுநாத சுவாமி தண்ணீரைத் தெரிந்துகொண்டார். கடல் நீரின்மேல் நடந்தார். தாமே தண்ணீரால் ஞானஸ்நானம் பெறத் திருவுளமானார். கடலின் அலைகளுக்குக் கட்டளையிட்டார். உடனே அமரிக்கை உண்டானது. இக்காலத்திலும் 1858-ம் வருஷம் பிரஞ்சு தேசத்தில் லூர்துமாநகரில் மஸபியேல் கெபியில் அர்ச். தேவ மாதா பெர்நதெத்தம்மாளுக்குக் காட்சி தந்த ஸ்தலத்தில் ஏற்பட்ட ஊற்றுநீரைக்கொண்டு அவ்விடத்தில் மாத்திரமல்ல, அந்த அற்புதமான தண்ணீர் எந்தெந்தத் தேசங்களுக்குக் கொண்டு போகப்படுகின்றதோ, அவ்விடங்களிலெல்லாம் வருஷாவருஷம் நடந்து வரும் புதுமைகளுக்குக் கணக்குண்டோ?


மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தை நாம் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும்போது அதனால் நமக்கு அநேகம் பலன்களுண்டு. அந்தோனியார் இத்தாலியா தேசத்தில் அநேகவிடங்களில் கிணறுகளும் ஊற்றுகளும் எடுக்கச் செய்து அத்தண்ணீரால் அநேக வியாதிஸ்தரை குணப்படுத்தினார். பிரிவ் கெபி தண்ணீருக்கு விசேஷ குணம் கட்டளையிட்டிருக்கிறார். அதனால் அநேகர் சௌக்கியப்பட்டிருக்கிறார்கள். நாமும் கூடுமானபோது நம்பிக்கையோடு அதைப் பிரயோகித்துக்கொள்ளக்கடவோம். தீர்த்தத்தினாலும், சிலுவையினாலும், மற்ற அநேக புண்ணிய முயற்சிகளாலும் நமது அற்ப குற்றங்களை நிவாரணஞ் செய்யக்கடவோம். எவ்வளவுக்கு நம்முடைய ஆத்துமம் பரிசுத்தமாயிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை அடையப் பாத்திரவான் களாவோம்.


செபம்


ஓ வல்லமையும் பிறசிநேகமும் உள்ளவரான அரிச் அந்தோனியாரே, பிரிவ் நகரத்துக் கெபிகளின் தண்ணீரால் ஆத்தும வியாதிகளையும் சரீர நோய்களையும் தீர்த்தீரே, வியாதியினால் பலமற்றிருக்கும் அடியேன் மேல் இரக்கமாயிரும். ஆங்காரம், கோபம், மோகம் இவை முதலானவைகளே என் தீராத வியாதி. எனக்கு ஆத்தும சரீர சுகத்தை நீர் அடைந்து அடியேன் என்றென்றைக்கும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யும்படிக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை: தர்மம் செய்கிறது.,


மனவல்லயச் செபம்: புதுமைகளால் விளங்கினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



வியாழன், 23 டிசம்பர், 2021

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 1 - அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் St. Alponshus Ligori

 அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம்


மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபையை உண்டாக்கின அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார்


(கி.பி.1696-1787) திருநாள் ஆகஸ்ட் 2ம் தேதி



இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் பூர்வீக உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1696ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பிறந்தார். அவருடைய தாய் பக்தியில் அவரை வளர்த்தாள். இளமையிலேயே அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளக் குறிப்புகள் அவரிடத்தில் காணப்பட்டன. அவர் குழந்தையாயிருக்கும்போது, மகாத்துமாவான ஒரு அர்ச்சிஷ்டவர் அவரை ஆசீர்வதித்துவிட்டு, இவர் 91வயது வரை ஜிவிப்பாரென்றும் மேற்றிராணியாராகி திருச்சபைக்கு மிகப்பெரிய மகிமையாக விளங்குவாரென்றும் திர்க்கதரிசனம் உரைத்தார். சிறுவயதுமுதல் லிகோரியார் தேவஇஷ்டபிரசாதத்தின் ஏவுதலை அனுசரித்து அத்தியந்த பக்தியும் சம்மனசுக்குரிய பரிசுத்ததனமும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியும் கொண்டு திகழ்ந்தார். அவர் தன் புண்ணிய நன்மாதிரிகையினால் உத்தம கிறிஸ்துவ ஜீவியத்துக்கு உட்படும்படி தன் நண்பர்களைத் தூண்டுவார். இளைஞரானபோது பக்தியுள்ள சபைகளில் உட்பட்டு நோயாளிகளை மடங்களில் சந்தித்து அவர்களுக்கு ஊழியம் செய்வார்.

தேவாலயங்களில் நடக்கும் திவ்ய பலிபூசை, பிரார்த்தனை முதலிய தேவாராதனை சடங்குகளில் தவறாமல் பங்கேற்பார். வாரந்தோறும் திவ்ய நன்மை உட்கொண்டு அனுதினமும் தேவநற்கருணை சந்திப்பார். பக்திகிருத்தியங்களுடன்கூட கல்விகற்பதிலும் கவனத்துடன் ஈடுபடுவார். மேன்மைமிக்க புத்திகூர்மையும் அபாரமான ஞாபகசக்தியும் கொண்டிருந்ததனால், லிகோரியார், தனது 16வது வயதிலேயே இருவேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்றார். பிறகு, தந்தையின் விருப்பப்படி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரானார். அவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்ததை அறிந்தவுடன் தன் மூத்தமகனுக்குரிய உரிமையையும், தனது வக்கீல் தொழிலையும் துறந்துவிட்டு தேவமாதாவின் தேவாலயத்தை நோக்கிச் சென்றார். அங்கு தேவமாதாவி;ன் பீடத்தில் தன் உயர்குடிமகனுக்குரிய போர்வாளை தொங்கவிட்டார். தேவமாதாவிடம் குருத்துவத்திற்கான தேவஊழியத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். இதனால் தமது குடும்பத்தினரிடமிருந்து வந்த பல இடையூறுகளை லிகோரியார் மிக திடமனதுடன் வெற்றி கொண்டு இறுதியில் குருப்பட்டம் பெற்றார்.

பிறகு, மற்ற சில குருக்களுடன் சேர்ந்து நாட்டுபுறத்திலுள்ள கிராமங்கள் முதலிய சிற்றூர்களிலுள்ள மக்களுக்கு ஞானபிரசங்கங்களை போதித்து ஆங்காங்கே ஆன்ம இரட்சணிய அலுவலை செய்துகொண்டுவந்தார். அதனால் விளைந்த மிகுதியான ஞானநன்மைகளைக் கண்ட லிகோரியார் “மகா பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை” என்ற குருக்களின் சந்நியாச சபையை ஏற்படுத்தினார். அச்சபை குருக்கள் திவ்ய இரட்சகரின் மேலான புண்ணியங்களை அனுசரித்துக் கொண்டு திவ்ய இரட்சகர் பாவனையாக நாட்டுபுறத்தில் சஞ்சரிக்கும் தரித்திர மக்களுக்கு ஞானபிரசங்கங்கள் நிகழ்த்தவும், ஆத்துமநன்மை விசாரிக்கவும் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில் சபையில் சிலர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் உத்தம புண்ணிய மாதிரிகையானதால் அவர்களுடைய சபை விரைவிலேயே வளர்ந்து விருத்தியடைந்தது. தன் ஞானபிரசங்கங்களினால் அம்மக்களுக்கு ஏராளமான ஞான நன்மைகள் விளையும்படி லிகோரியார் அயராமல் உழைத்தார். ஆன்மஈடேற்றத்திற்காக ஞான நன்மைகள் பயக்கக்கூடிய ஏராளமான பக்திநறைந்த புத்தகங்களை எழுதினார். 

சகல பதிதங்களிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் குறிப்பாக அப்போது தோன்றியிருந்த ஜான்சனிச தப்பறையினின்றும் மக்களைப் பாதுகாக்கும் படியும் அவர்களை உத்தம கத்தோலிக்க புண்ணிய ஜிவியத்திற்கு திருப்புவதற்காகவும் எண்ணற்ற அரிய நுரல்களை எழுதினார்0 ஞானபிரசங்க போதனைகளை செய்தார். மனுக்குலத்தின்மீதான ஆண்டவருடைய அளவற்ற சிநேகத்தை மறைத்து, அவரை நடுத்தீர்ப்பவராக மட்டுமே மக்களிடம் போதித்துவந்த ஜான்சனிச பதிதத்தை அழிப்பதற்காக சேசுவின் திவ்ய திரு இருதயத்தின் மிதான பக்தியை எங்கும் பரப்பினார்.

 “சேசுவின் திவ்ய திரு இருதயம்”, “மகா பரிசுத்த தேவ நற்கருணை” என்ற நுரல்களை எழுதினார். உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். தேவமாதாவின் மிது தான் கொண்டிருந்த பக்திபற்றுதலை வெளிப்படுத்தும்படியும், மக்களிடம் மாதா பக்தியை தூண்டி வளர்ப்பதற்காகவும் “அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்” என்ற உன்னதமான அரிய நுரலை எழுதினார். மேலும், “சேசுகிறிஸ்துநாதரின் பத்தினி”, “சேசுவின் பாடுகளும் மரணமும்” “சேசுவின் மனித அவதாரமும், பிறப்பும்,பாலத்துவமும்” “”நன்மரண ஆயத்தம்” போன்ற எண்ணற்ற உயரிய நுரல்கள் அவரால் எழுதப்பட்டன. தேவமாதாவைக்குறித்து மிக உருக்கமாக பக்தி நேசத்துடன் பிரசங்கங்கள் வைப்பார். தேவமாதாவிடம் அவர் கொண்டிருந்த உச்சிதமான பக்திபற்றுதலினால் லிகோரியார் அதிசயமான தேவவரங்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் லிகோரியார் பிரசங்கம் செய்தபோது தேவமாதாவின் சுரூபம் முழுதும் பிரகாசித்தது. அதினி;ன்று புறப்பட்ட சில ஒளிக்கதிர்கள் லிகோரியாரின் முகத்திலேயும் பட்டன. மற்றொருநாள் அவர் பரவசமாகி அநேக அடி உயரத்திற்கு ஆகாயத்தில் நிற்கக் காணப்பட்டார். லிகோரியார் நம் ஆண்டவரின் திவ்ய பாடுகளின் மேல் பக்திகொண்டு தினமும் அவற்றை தியானிப்பார். 

தினமும் சிலுவைப்பாதையை பக்திபற்றுதலுடன் தியானித்து செய்வார். திவ்யநற்கருணை பேழைமுன்பாக ஜெபம் செய்யும்போதும், திவ்யபலிபூசை நிறைவேற்றும்போதும் தேவசிநேக அக்கினி மயமான அவருடைய ஆத்துமம் பக்திசுவாலகருக்குரிய ஞான சுவாலையால் உருகுகிறதுபோல காட்சியளிக்கும். அதிசயமான நடுக்கமுற்றுப் பரவசமாவார். எப்போதும் அதிசயமான சம்மனசுக்குரிய பரிசுத்ததனத்துடன் நடந்து பாவமின்றி இருப்பினும், கடின தபசு செய்வார். ஒருசந்தியாலும், இருப்புச்சங்கிலியாலும் மயிர் ஒட்டியானத்தினாலும் மற்ற தவமுயற்சிகளாலும் தன் சாPரத்தை ஒறுத்தார். இரத்தம் வரும்வரை அதை அடித்துக் கொள்வார். இத்தனைப் புண்ணியங்களால் தமக்குப் பிரியமான தம்முடைய ஊழியனுக்கு, ஆண்டவர், திர்க்கதரிசன வரமும், அற்புதங்களை செய்யும் வரமும், மனிதருடைய இருதய இரகசியங்களை கண்டுபிடிக்கும் வரமும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிற வரமும் தந்தருளினார். தாழ்ச்சியினால் நிண்டகாலத்திற்கு மேற்றிராணியார் பதவியை விலக்கி வந்தார். இறுதியில் 13ம் சாந்தப்பர் பாப்பரசரின் ஆணைக்குக் கிழ்படிந்து நேப்பிள்ஸ் நகருக்கருகில் இருந்த அர்ச்.கொத்தர் ஆகத்தம்மாள் என்ற நகரத்தின் மேற்றிராணியாரானார்.

தொடர்ந்து மனதரித்திரமும், மட்டசனமும், சாPர ஒறுத்தலும், தன் மட்டில் கண்டிப்பும் அனுசரித்தார். மற்றவரிடம் மிகுந்த தயாளமும் இரக்கமும், விசேஷமாய் ஏழைகள் மட்டில் தர்ம உதாரத்தையும் அனுசரித்தார். ஒருதடவை நேப்பிள்ஸ் நகரமெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் உடைமைகளை எல்லாம் விற்று அங்கிருநு;த எல்லா ஏழைகளுக்கும் பங்கிட்டளித்தார். 19 ஆண்டுகளாக மேற்றிராணியாராக அயராமால் உழைத்து தன் மேற்றிராசனத்தையும் பல துறவற சபை மடங்களையும் குருமடங்களையும் சிர்திருத்தினார். லிகோரியார் இவ்வாறு ஒரு நிமிடத்தை முதலாய் வீணாக்காமல எல்லோருக்கும் எங்கும் எப்போதும் அயராமல் நன்மை செய்து வந்தார். தனது குருக்கள்சபையைப் போன்றதொரு சன்னியாச சபையை கன்னியாஸ்திரிகளுக்கும் ஏற்படுத்தினார். தன் ஓய்வு நேரத்தில் லிகோரியார் வேதசாஸ்திர நுரல்களையும் அநேக பக்திக்குரிய நுரல்களையும் எழுதினார். வயதுமூப்பின் காரணமாவும் தனக்கிருந்த நோயின் காரணத்தினாலேயும் தன் மேற்றிராசனத்தை விட்டு விட்டு தன் சபையினருடன் தங்குவதற்கு பாப்பானவரிடம் அனுமதி கோரினார்.

கடைசியில் 6ம் பத்திநாதர் பாப்பரசருடைய அனுமதியின்பேரில் நொசெரா என்ற ஊரில் தமது சபை மடத்தில் வந்து சேர்ந்தார். அங்கு புத்தி தெளிவுடனும் திடத்துடனும் ஞானதியான பிரசங்கங்கள் செய்தார். குருத்துவத்துக்கரிய திருப்பணிகள் செய்துவந்தார். லிகோரியார் வயதுமுதிர்ந்த காலத்தில் ஒரு நாள் அவருடைய மடத்தின் அருகில் இருந்த வெசுவியஸ் எரிமலை திடீரென்று நெருப்பைக் கக்க துவங்கியது. இதைக்கண்ட மற்ற சந்நியாசிகள் அவரிடம் கூறியதும், அவர் உடனே வானளாவி நெருப்புடன் வந்த கரும்புகையைப் பார்த்தார். உடனே, அஞ்சி, “சேசுவே” என்று மூன்று முறை கூறினார். பிறகு, அந்த எரிமலையை நோக்கி மிகப்பெரிய சிலுவை அடையாளம் வரைந்தார். என்ன அதிசயம். உடனே அந்த மலை நெருப்பைக் கக்குவதை நிறுத்திற்று. இறுதியில் நோயினால் ஏற்பட்ட தளர்வினாலும் 91 வயது ஆனதாலும் வெகுவாய் சோர்ந்து 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாளன்று பாக்கியமான மரணமடைந்து பேரின்ப மோட்ச இராஜ்யத்திலே சேர்ந்தார்.

பாப்பரசர் 16ம் கிரகோரியார் இவருக்கு 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதியில் அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

சனி, 17 ஏப்ரல், 2021

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோற்கு i Tamil Catholic Song Lyrics



பல்லவி


 தாயே  உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு 

தஞ்சமும் ஆதரவும் நீரே


சரணங்கள் 

1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்

திருத்தயை கேட்க நீரோ அறிந்து 

தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை 

ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து 


உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள் 

உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார் 

கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக் 

கறையினால் துறை சேரார் இன்னும் தாயே 


தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன் 

தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ! 

தூய கருணை நிறை ஆயே இவர்

துயரெல்லாம் நீக்க வரும் தாயே


உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்

உழன்று வருந்து வதினாலும் 

நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச

நாடுதந் தாதரிப்பீர் ஆயே


 5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக

பரிதவிப் போர்க் குதவி நீரே 

சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம் 

சென்றோர்க்கு இராக்கினியும் நீரே




செவ்வாய், 6 ஏப்ரல், 2021

எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் - Tamil Christian Lyrics



 எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்

 திவ்விய ஸ்பீரித்து சாந்துவே 2

அடியோர் உள்ளத்தில் எழுந்தே 

வருவீர் இனிய சிநேக தேவனே


உலக இருளை அகற்ற உமது 

பரலோக ஒளி தாருமே 2

உண்மைக் கண்டு நன்மை பெற

 நாதனே அருள் செய்குவாய் 


நன்மை பயக்கும் ஞானக் கொடைகள் 

 யாவும் அளிப்பாய் பரமனே 2

நல்வழியை நாங்கள் கண்டு 

நற்கதி பெறச் செய்குவாய் 


ஞானம் புத்தி விமரிசையுடன் 

அறிவு திடம் பக்தியும் 2

தெய்வபயமான வரங்கள் 

ஏழும் எமக்கு ஈவாயே


வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஞானம் நிறை கன்னிகையே - Tamil Catholic songs lyrics

 


ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே

 ஞானம் நிறைக் கன்னிகையே


அனுபல்லவி 


மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 

பலி பீடமுமாய் அலங்கரித்தாரே-ஞானம் 


பாவ நிழலே அணுகா 

பாதுகாத்தார் உம்மையே பரமன் 

தாயுதரம் நீர் தரித்திடவே-2

தனதோர் அமல தலமெனக் கொண்டார்-ஞானம் 

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே 

மக்கள் இஸ்ராயேல் தாரகையே-2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி-ஞானம் 


வாக்குத் தத்த பெட்டகமே

வானகம் சேர்க்கும் வாசலே

மகிழ் ஒளி நல்கும் விடி வெள்ளியே-2 

மெய் மனம் நொந்தோர்க் காறுதலே-ஞானம்


கிருபை தயாபத்து மந்திரம் - Tamil Catholic Songs Lyrics



1. கிருபை தயாபத்தின் மாதாவாய் 

இருக்கின்ற இராக்கினியே வாழ்க


        பல்லவி 


வாழ்க வாழ்க மாதாவே

வாழ்க வாழ்க மாதாவே 


2. எமதுயிர் தஞ்சமும் நீராமே

எமது நல் மதுரமும் நீராமே - வாழ்க 


3. பரதேச ஏவையின் மக்கள் யாம்

பரிவாக உம்மை யழைக்கின்றோம் - வாழ்க 


4. இந்தக் கண்ணீ ர் கணவாய் நின்று

உம்மையே நோக்கி அழுகின்றோம் - வாழ்க 


5. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற

மாதயை மாமரி விழி பாரும் - வாழ்க 


6. பரதேச மிதையாம் கடந்த பின்னர்

திருக்கனி சேசுவின் முகங்காட்டும் - வாழ்க 


7. கிருபாகரியே தயா பரியே

மரியே மதுர மா கன்னிகையே - வாழ்க


ஸ்பீரித்து சாந்துவே வாரும் -Tamil Catholic Song Lyrics



ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2 

அன்பான தேவனே

அடியோர் உள்ளத்தே இறங்கும் 



உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப்போவோம் பாருமே

 எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய் ஜோதியே 

வாரும் ஞான ஜோதியே (2) 


நரக மோடுலகு சேர்ந்தே 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே 

நீர் வேதனையார் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே (2) 


திருப்ரசாதம் தரவாரும் 

தீங்கில்லாமல் நாமிருப்போம் 

தேவனே நீர் காவல் செய்வோர்க்கு 

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே (2)


வியாழன், 1 ஏப்ரல், 2021

மாதாவே சரணம் - Tamil Catholic Song lyrics


Our Lady of Snow, Tuticorin
பல்லவி


மாதாவே சரணம் - உந்தன் 

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி


அனுபல்லவி


 மா பாவம் எமை மேவாமல்-2 

காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே


சரணங்கள் 


மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்

 மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் 

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே 



நானிலத்தில் சமாதானமே நிலவ 

நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய 

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்

 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்   - மாதாவே





சூரியன் சாய - Tamil Catholic Songs Lyrics


1. சூரியன் சாய காரிருள் மெல்ல

சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை 

பாருல கெங்கும் நின்றெழுந் தோங்கும்.. 

பண்புயர் கீதம் வாழ்க மரியே


2. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்

பாலகர் நின்று வீடு திரும்ப 

அர்ச்சய கோபுரங் களிசைக்கும்

ஆனந்த கீதம் வாழ்க மரியே 


3. மாயவுலகிற் சிக்கியுழன்று

வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை 

தாயகங் காட்டி கண்ணீர் துடைத்து

 சஞ்சலந் தீர்க்கும் வாழ்க மரியே


 4. சுந்தர வாழ்க்கை தோற்ற மறைய

துன்ப அலைகள் கோஷித் தெழும்பும் 

அந்திய காலை எம்மரு குற்றும்

 ஆதரவீயும் வாழ்க மரியே








புதன், 31 மார்ச், 2021

Tamil Catholic Songs Lyrics in Tamil

 தேவ அன்னை பாடல்கள் 


இஸ்பிரித்து சாந்து பாடல்கள்  



திவ்விய பலிபூசை பாடல்கள்