Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 3 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 15

பதித பெண்கள் மனம் திரும்புதல் 



அந்த மிருகத்தைக் கண்டு அங்கிருந்த பதிதப் பெண்கள் அனைவருடைய இருதயங்களும் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டன. அது எத்தகைய கொடுரமான மிருகமாக இருக்குமோ? அது எங்கிருந்து வருகிறது? அது என்ன செய்யப் போகிறது? என்றெல்லாம் அவர்கள் அஞ்சினர். 

“சுவாமி! அது என்னைத் தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கிளாரட்டா அலறினாள்.

“ஐயோ! வேண்டாம், வேண்டாம்!” என்று ஜென்சியானா கூச்சலிட்டாள். எல்லா பெண்களும் சேர்ந்து அச்சத்தால் கத்தினார்கள். 

அர்ச்.சாமிநாதர் அப்பெண்களை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருந்த மிருகத்தின் மேல் தமது கண்களைப் பதித்தார். உடனே அவருடைய முகம் கடுமையாக மாறியது. அவர் தம் கரங்களை உயர்த்திக் கொண்டு அம்மிருகத்தைப் பார்த்து மிரட்டும் குரலில், “ஏக சர்வேசுரனின் பரிசுத்த திருநாமத்தினால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இங்கிருந்து அகன்று, தொலைந்து போ, சாத்தானே!” என்று அதற்குக் கட்டளையிட்டார். 

தன் கண்களில் திச்சுவாலைகளுடன் திகழ்ந்த அந்த மிருகம் உடனே தான் வந்த பாதையில் நின்றது. அதன் பிறகு, ஒரு நொடிப் பொழுதில், உக்கிரமமான வேகத்துடன் அப்பெண்களின் தலைகளின் மேல் தாவி ஓடி சுவற்றின் அருகில் இருந்த தேவாலயத்தின் மணியடிக்கும் கயிற்றைப் பற்றிக் கொண்டு தேவாலயத்தின் கூரைஉச்சியை அடைந்து மறைந்தது. துர்நாற்றமுள்ள ஒரு புகைமண்டலத்தை ஏற்படுத்தி அதற்குள் மறைந்து போனது. உடனே அப்பெண்கள் மத்தியில் ஒரு அசாதாரணமான மௌனம் ஏற்பட்டது. பிறகு
அப்பெண்கள் அனைவரும் தங்களுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாய் கதறி அழுதனர். 
“ஓ சுவாமி! நீங்கள் தான் எங்களுடைய உயிரைப் காப்பாற்றினீர்கள்! அப்போது தான் அது எங்கள் மேல் பாய்வதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் நீங்கள் அதை அதட்டி, துரத்தி விட்டீர்கள். சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், அது எங்களுடைய கண்களைப் பறித்திருக்கும்” என்று அவர்கள் அர்ச்.சாமிநாதரிடம் கூறினர். அவரும் அவர்களைத் தேற்றும் வகையில் அவர்கள் இருந்த இடத்திற்கு
அருகே வந்தார். 
“பயப்படாதீர்கள்! என் மக்களே! சபிக்கப்பட்ட மிருகம் இப்போது இங்கு இல்லை” என்று அவர், அவர்களிடம் கூறினார். 
உடனே ஜென்சியானா, “ அது என்ன, சுவாமி?” என்று தேவாலயத்தின் கூரை உச்சியை சுட்டிக் காண்பித்து நடுங்கிக் கொண்டே கேட்டாள். 
அதற்கு சாமிநாதர், “அது பசாசு. இது அதனுடைய அசுத்த உருவங்களில்
ஒன்றாகும்” என்றார். பின்னர், அர்ச்.சாமிநாதர் அவர்களிடம் மறுபடியும் சர்வேசுரனைப் பற்றியும், அவருடைய ஏகப் பரிசுத்த கத்தோலிக்குத் திருச்சபையைப் பற்றியும், மனித சரிரத்தைக் கிழித்துக் கொல்லும் அப்பயங்கரமான மிருகத்தைப் போல, திருச்சபையைக் கிழிப்பதற்காக தோன்றிய ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறையின் நாசகரமான திமையைப் பற்றியும் அவர்களுக்கு பிரசங்கிக்கலானார். அவர் அவ்வாறு போதிக்கும் போது, அப்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கவனித்துக்
கேட்டனர். 
பிறகு அவர்கள் அவரிடம், “சுவாமி! இனிமேல் நிங்கள் போதிக்கும் அனைத்தையும் நாங்கள் விசுவசிக்கிறோம். நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம். மிகப் பயங்கரமான தியவர்களாக இருந்திருக்கிறோம். நாங்கள் செய்த பாவத்தைப் பரிகரிப்பதற்கு, நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினர். 
ஒரே நொடிப் பொழுதில் 9 பெண்கள் மனந்திரும்பியதைக் கண்டு அர்ச். சாமிநாதருடைய இருதயம் சர்வேசுரனையும் தேவமாதாவையும் ஆனந்த அக்களிப்புடன், புகழ்ந்து பாடியது. அமைதியாக அவர் அப்பெண்களைப் பார்த்து, “நிங்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஆல்பிஜென்சியப் பதிதத் தப்பறைகளை எல்லா மக்களின் முன்னிலையில் வெளிப்படையாக
மறுதலித்து விட்டுவிட வேண்டும்” என்றார். 
உடனே ஜென்சியானா, “சுவாமி! அதன்பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றாள். அதற்கு புன்னகையுடன் அர்ச்.சாமிநாதர், “உன்னுடைய
இக்கேள்விக்கு பரலோக பூலோக இராக்கினியானயான தேவமாதா தான் பதிலளிக்க வேண்டும். உங்களுடைய ஜீவியத்திற்கான சர்வேசுரனுடைய திருவுளத்தை அறியும்படிக்கு நாம் அவர்களிடம் மன்றாடுவோம்” என்று கூறினார்.
இதன்பிறகு, அர்ச்.சாமிநாதர் பல வாரங்கள் தொடர்ந்து ஜெபத்திலும் தியானத்திலும் நிலைத்திருந்தார். அப்பொழுது அவருடைய இருதயத்தில் உதித்த திட்டமே, பரலோகத்திலிருந்து அவருக்குக் கிடைத்த பதிலாக மனப்பூர்வமாக திர்மானித்தார். அப்பெண்கள் மனந்திரும்பிய
அந்நிலைமையில் தங்களுடைய இல்லங்களில் பல இன்னல்களுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்கள் வசிப்பதற்கு மாற்று இடம் ஒன்றை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும். வந்.டீகோ ஆண்டகையிடம், அர்ச். சாமிநாதர், “ஆண்டவரே! இப்பெண்கள் புரோயிலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றே நமது மோட்ச ஆண்டவள் விரும்புகிறார்கள் என்பதை நான்
நிச்சயமாக அறிவேன்” என்றார்.
“ஒரு மடத்திலா?”
“ஆம். ஆண்டவரே! அங்கிருக்கும் தேவமாதாவின் சிற்றாலயத்தை ஒட்டியே அது கட்டியமைக்கப்பட வேண்டும். நாம் இங்கு பதிதத்திற்கு எதிராக ஆற்ற
வேண்டிய வேதபோதக அலுவலுக்காக, அம்மடத்தில் தங்கியிருந்து, அவர்கள் ஜெபம் செய்ய வேண்டும். மற்ற மனந்திரும்பும் பெண்களையும் நாம் அங்கு அனுப்பலாம். அவர்களையும் மற்ற சிறு பிள்ளைகளையும் பதிதமார்க்கத்தின் அபாயத்திலிருந்து அங்கு பாதுகாக்கலாம்” என்றார். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக