Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 23 பிப்ரவரி, 2019

Our Lady Quotes (Tamil)


பெற்றோர்களுக்குரிய சங்கை மரியாதை!

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய மிக விலைமதிப்பில்லா கொடைகளில் ஒன்று, அவர்கள் உள்ளத்தில் பெரியவர்களுக்கு ‘சங்கை மரியாதை செலுத்தும்“ உணர்வை ஊட்டுவதேயாகும்.  பெரியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய இம்மதிப்பு மரியாதை உலகில்  குறையும் போது பாவங்கள் மலிந்து துன்பங் களும் பெருகி மரணங்கள் அதிகரிக்கும்.
மனித வாழ்வின் ஜீவியமும், சந்தோ­மும் பெரியவர் களுக்கு, பெற்றோர்களுக்கு, அர்ச்சிஷ்டவர்களுக்கு, அர்ச்சிஷ்ட பண்டங்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு, சங்கை மரியாதையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சங்கை மரியாதை என்ற புண்ணியத்தின் அடித்தளமானது குழந்தைகளின் உள்ளத்தில், அவர்கள் தங்கள் பெற்றோரை மதித்து சங்கை செய்யக் கற்றுக்கொள்ளும் போது இடப்படுகிறது.  சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தங்களை மதித்து, மரியாதையுடன் நோக்குவதற்குத் தகுதியில்லாத ஈன வாழ்வை ‡ துர்மாதிரிகையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இதன் காரணமாக இத்தகைய பெற்றோரின் குழந்தைகள் சங்கை மரியாதை என்ற இந்த புண்ணியத்தின் அடித்தளமின்றி வளர்ந்து, பின்னர் தெய்வ பயமின்றி மூர்க்கர்களாய் தங்கள் பாவங்களில் நிலைகொண்டு விடுகிறார்கள். 
சில சமயங்களில் பெற்றோர் நல்லவர்களாய் இருக்கும் போதிலும், தங்கள் குழந்தைகளின் மனதில் இப்புண்ணியத்தின் விதையை விதைக்கத் தவறி விடுகிறார்கள்.  குழந்தைகள் தங்கள் விருப்பம் போல், தங்களுக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்வதை அனுமதிக்கும் போதும்,  அல்லது தவறு செய்யும் போது கண்டித்து திருத்தாதப்போதும் குழந்தைகள் சுயநலம் மட்டுமே நிறைந்த மனதுள்ளவர்களாக வளர்கிறார்கள்.  அத்தகைய குழந்தைகள் உள்ளங்களில் சிறதளவும் சங்கை மரியாதை என்பதே இல்லாமல் இருக்கிறார்கள்.  அத்தகைய குழந்தைகள் பெரியோர்களானதும் அவர்களது வாழ்வு எப்படி கிறீஸ்தவப் பண்புள்ளளதாக இருக்கும்?

நான்காவது கட்டளை


நம் அனைவருக்கும் தேவ கட்டளைகள் மனப்பாடமாகத் தெரியும்.  இதில் நான்காவது கட்டளை ‘பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக!“ என்று கற்பிக்கிறது!  இக்கட்டளை வெறும் கீழ்ப்படிதலை மட்டும் கற்பிக்கவில்லை.  மாறாக அதற்கும் மேலான சங்கை மரியாதையையும் கட்டளையிடுகிறது.  கீழ்ப்படிதல் அவசியம் தான்.  ஆனால் அதுமட்டும் போதாது.  ‘சங்கித்திருத்தல்“ என்றால் பெற்றோருக்கு பயந்து, நேசித்து, மதித்து மேலும் கீழ்ப்படிய வேண்டியதைக் குறிக்கிறது.  குழந்தைகள் செய்ய வேண்டிய நல்ல காரியங்களில் பெரியோரை மதித்து சங்கை செய்வதுதான் முதலில் வருகிறது.  இந்தப் புண்ணியம்தான் குழந்தைகள் பின்னர் பெரியவர் களானதும் தங்கள் வாழ்நாள் முழுவதிலும் தெய்வபயத்துடன் வாழ முதல் தயாரிப்பாகத் திகழ்கின்றது.  வேதாகமத்தில் நாம் வாசிப்பது போல, நீடித்த வாழ்வை இவ்வுலகில் வாழ்வதற்கு இன்றியமையாத நிபந்தனை: பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டிய சங்கை மரியாதையாகும்.  இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்.  இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் நீடித்த சந்தோ­மான வாழ்வை வாழலாம் என்று சொல்லப்படவில்லை.  ஏனென்றால், சந்தோ­மான வாழ்வு வாழ்வதற்கு இன்னும் மற்ற அநேக புண்ணியங்களும் தேவைப்படுகின்றன.  இதன் சரியான பொருள்: பெற்றோர்களுக்கு அடங்கி அவர்களை சங்கை செய்யாத பிள்ளைகள் மோசமான துன்பங்களுக்கு இட்டுச்செல்லும் பாதையில் ‡ அழிவின் பாதையில் போகிறார்கள் என்பதாகும்.   

உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி சங்கை மரியாதை செய்வது என்று கற்றுக் கொடுங்கள்

இதைக் கற்றுக் கொடுக்காத பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெரும் அநீதியை செய்கிறார்கள்.  தங்கள் பெற்றோரை மதிக்க, சங்கை செய்து கீழ்ப்படிய கற்றுக்கொள்ளாத பிள்ளைகள் சர்வேசுரனுக்கு சங்கை செய்யக் கற்றுக்கொள்வது அரிது!  இதைக் கற்றுக் கொடுப்பதற்கு குடும்ப ஜெபம் மிக உதவியாக இருக்கிறது.  பெற்றோர்கள் குடும்ப ஜெபத்தை பக்தியோடு சொல்லும் போதும், பரிசுத்த காரியங்களைப் பற்றி பேசும் போதும் பரிசுத்தமான பொருட்களை கையாளும் போதும் பிள்ளைகளும் அப்படியே கீழ்ப்படிதலுடன் தங்கள் பெற்றோர் மட்டில் உயர்ந்த எண்ணமும் அதைத் தொடர்ந்து சங்கை மரியாதை செய்யும் எண்ணமும் அவர்கள் மனதில் வந்துவிடுகிறது. 


எனவே கத்தோலிக்கப் பெற்றோரே!  உங்கள் பிள்ளைகள் உத்தமர்களாக வேண்டுமானால் பெரியவர்களை, பெற்றோர்களை சங்கை மரியாதை செய்ய கற்றுக் கொடுங்கள்.

மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சணியமாயிரும்

  மரியாயின் மாசற்ற இருதயமே

 எங்கள் இரட்சணியமாயிரும்



வானத்தில் பெரியதொரு அடையாளம் காணப்பட்டது.  ஓர் பெண் சூரியனை ஆடையாக உடுத்தி, தன் பாதங்களின் கீழ்  சந்திரனையும், தன் சிரசின் மேல் பன்னிரு நட்சத்திரங்கள் அடங்கிய கிரீடத்தையும் தரித்திருந்தாள்.
  - காட்சியாகமம் 12: 1


வியாழன், 21 பிப்ரவரி, 2019

St. Therese Quotes (Tamil) 1

ஆன்மாக்களுக்குப் போதிக்க இயேசுவுக்கு நூல்களோ, அல்லது கற்றறிந்த ஞானிகளோ தேவையில்லை. மறை வல்லுனர்களுக்கெல்லாம் மறை வல்லுனராகிய அவர் வார்த்தைகளின் ஒலி இன்றியே கற்பிக்கிறார் (கிறீஸ்துநாதர் அநுச்சாரம், மூன்றாம் பிரிவு, அத். 43:3). அவர் பேசியதை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. ஆனாலும் அவர் எனக்குள் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

                                                         அர்ச். குழந்தை தெரசம்மாள்


புதன், 20 பிப்ரவரி, 2019

தேவதூதர்களின் மகத்துவம்

தேவதூதர்களின் மகத்துவம் ஆழம் காண முடியாததும்,
கரைகள் அற்றதுமான பெருங்கடலுக்கு ஒப்பானது. அது, மனித
மனத்திற்கு எட்டாத பெரும் பாதாளம்! தேவதூதர்களின் இயல்பு
அல்லது சுபாவம் எந்தக் குறைபாடுமில்லாத பூரண முழுமையாக
இருக்கிறது. தேவதூதர்களில் மிகச் சிறியவர்களும் கூட, தேவதாயார்
நீங்கலாக, மற்ற அனைத்து புனிதர்களையும் விட மேலானவர்கள்
என்று புனித அம்புரோஸ் கூறுகிறார்.



“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு



நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசுவிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப உதவிக்குஎன்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோலிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.


Tamil Catholic Quotes & Prayer 2


Tamil Catholic Quotes & Prayer 1

எங்களைப் படைத்து காப்பாற்றி ஒளி தந்து மோட்சப் பாதையில் நடத்தும் பிதா சுதன் இஸ்பிரித்துசாந்து என்னும் திரித்துவ ஏக சர்வேசுரனுக்கு எல்லாப் படைப்புகளாலும் ஸ்துதியும் தோத்திரமும் என்றென்றைக்கும் உண்டாகக்கடவது.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

எப்போது ஒரு வீட்டில் கத்தோலிக்கச் சுழ்நிலை ஏற்படும்?


 மெய்யான தேவனும் மெய்யான
மனிதனுமானவரான நமது ஆண்டவரின் அரசாட்சியின்
கீழ் அவ்வீட்டின் அனைத்தும் உட்படும் போது. நான்
அனைத்தும் என்று கூறுவது, நமது ஜெபதவங்களை
மட்டுமல்ல, மாறாக, நமது பொழுது போக்குகள், நமது
உணவுகள், நமது உடையணிகள், நமது பேச்சுக்கள்
போன்றவற்றையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன

Tamil Quotes 1


Catholic tamil Quotes

Quotes on Prayer

CHRIST THE kiNG


திங்கள், 11 பிப்ரவரி, 2019

நரகம் என்னும் சத்தியம்


நரகம் ஆவதென்ன?
நரகம் என்பது நித்திய தண்டனைக்குக் கடவுளால் தீர்ப்பிடப்பட்டவர்கள், சர்வேசுரனை ஒரு போதும் காணாமல், அவியாத அக்கினியில் பசாசுக்களோடு நித்திய காலமும் எரிந்துகொண்டேயிருக்கிற, சகல விதமான வேதனை களும் நிறைந்த இடம் என்று ஞான உபதேசக் கோர்வை கூறுகிறது (பக்கம் 292).

நரகம்
(1) வேதாகமத்தில் நம் ஆண்டவரால் போதிக்கப்பட்ட சத்தியமாகவும்,
(2)கத்தோலிக்கத் திருச்சபை பாரம்பரியமாக விசுவசித்துப் போதித்து வரும் சத்தியமாகவும்
(3) மனித புத்திக்கும், நியாயத்திற்கும் முழுவதும் ஒத்ததாகவும் இருக்கிறது.
நரகம் உண்டென்பதும், அதன் தண்டனை நித்தியமானது என்றும், எப்போதும் திருச்சபை விசுவசித்து வந்துள்ளது. நரகவாசிகளின் தண்டனைக்கு முடிவுண்டு என்று சொல்லத் துணிந் தவர்களைக் கொன்ஸ்தாந்திநோப்பிள் பட்டணத்து இரண்டாம் பொதுச் சங்கம் திருச்சபை விலக்கத் தண்டனையைக் கொண்டு தண்டிக்கிறது.
நரகம் என்பது சர்வ வல்லப சர்வேசுரன் தம்மை எதிர்த்துப் பகைத்து விரோதிக்கும் துரோகிகளைத் தண்டிக்கும்படி ஏற்படுத்திய ஆக்கினை ஸ்தலம், வேதவாக்கி துன்பங்களும் குடியிருக்கும் இடம், இருளடர்ந்த சிறைக்கூடம், அக்கினிப் பெருங்கடல், நெருப்புக் காளவாய், பயங்கரமுள்ள குகை, நன்மையொன்றும் இல்லாத சபிக்கப்பட்ட ஸ்தலம். பேய்கள் வாழும் சுடுகாடு என்று அர்ச். இஞ்ஞாசியாரின் தியானப் பிரசங்கங்களின் தொகுப்பு நூலாகிய மன்ரேசா கூறுகிறது.
நரகத்தில் இரண்டுவித முக்கியமான வேதனைகள் உண்டு. 1) சர்வேசுரனை இழந்து போனதினால் ஆத்துமம் அனுபவிக்கும் இழப்பின் வேதனை. 2) ஐம்புலன்களின் வேதனை. (கண், காது, வாய், மூக்கு, ஸ்பரிசம் (தொடு உணர்வு)).
இந்த அத்தியாயத்தில், சர்வேசுரனை இழந்து போனதால் ஆத்துமம் அனுபவிக்கும் கொடிய இழப்பின் வேதனையை நாம் சற்று விரிவாக ஆராய்வோம். 1. சர்வேசுரனை இழந்து போகும் வேதனை
சர்வேசுரனை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்துபோவதுதான் சபிக்கப்பட்டவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் சகல தண்டனைகளிலும் அதிக அகோரமான தண்டனையாக இருக்கிறது.
ஆன்மா சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறது. அது அவரிடமிருந்தே பிறக்கிறது. சர்வேசுர னாகிய அந்தப் பெருங்கடலில் அது ஒரு துளியாக இருக்கிறது. மனிதக் கருவோடு இணைக்கப் படும் வரை, அது தன்னைப் படைத்தவரை முழுமையாக அறிந்திருக்கிறது. அவரே தன் இறுதிக் கதி என்பதையும் அது நன்றாக உணர்ந்திருக்கிறது.

ஆனால் மனிதக் கருவோடு அது இணைக்கப்படும் விநாடியில், ஜென்மப் பாவத்தின் கொடூர நஞ்சு அதைத் தீண்டுவதால், அது வரை தான் கொண்டிருந்த நித்திய நன்மையானவரைப் பற்றிய அறிவையும், காட்சியையும் ஆத்துமம் முழுமையாக இழந்து போகிறது. ஜென்மப் பாவ தோஷங் களில் ஒன்றாகிய இருட்டடிக்கப்பட்ட அறிவு, கடவுளை ஆத்துமம் “மறந்து போகச் செய்கிறது. ஞானஸ்நானத்தின் மூலம் இந்த ஜென்மப் பாவம் ஆன்மாவிலிருந்து கழுவி அகற்றப்பட்ட பிறகும், ஜென்மப் பாவ தோஷம் அதை விட்டு விலகாதிருப்பதால், தொடக்கத்தில் தான் கொண் டிருந்த கடவுளைப் பற்றிய துலக்கமான அறிவை ஆத்துமமானது உடலை விட்டுப் பிரியும் வரை மீண்டும் பெற்றுக் கொள்வதில்லை. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஓர் ஆத்துமம் எந்த அளவுக்கு, சர்வேசுரனை அறிந்து, நேசித்து, அவருக்கு ஊழியம் செய்து அவரை நெருங்கிச் செல் கிறதோ, அந்த அளவுக்கு அது கடவுளை அதிகமாக ஞாபகப்படுகிறது, கடவுளின் கண நேர, கடந்துபோகிற ஒரு காட்சியும்கூட அவ்வப்போது பரிசுத்தமுள்ள ஆன்மாவுக்கு அருளப்படுகிறது. எனினும், எந்த விதமான மூடுதிரையுமின்றி, ஆன்மா கடவுளை முழுமையாக மீண்டும் அறிந்து கொள்ள, மரணத்தால் அது தன் உடலிலிருந்து பிரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
பரிசுத்த அந்தஸ்தில் மரிக்கும் ஆத்துமத்தின் பாக்கிய நிலை : நேரடி மோட்சம்!
தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் தன் சகல பாவங்களுக்கும் முழுமையாக மன்னிப்புப் பெற்று, அவற்றிற்குரிய பரிகாரங்களையும் முழுமையாக நிறைவேற்றி விட்ட நிலையில், தன் சரீரத்தை விட்டுப் பிரிந்து நித்தியத்திற்குள் நுழைகிற ஆன்மா மெய்யாகவே பாக்கியம் பெற்றது! மரணம் அதற்கு நித்தியப் பேரின்பத்தின் வாசலாக இருக்கிறது! இதோ, அந்தப் பரிசுத்தமான மனிதன் இறந்த இடத்திலேயே கிறீஸ்துநாதர் அவனுக்குக் காட்சியளித்து, “நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக்காரியங்களில் பிரமாணிக்கமாயிருந்ததினால், அநேக காரியங்களின் மேல் உன்னை அதிகாரியாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி... என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே! வா. உலகமுண்டானது முதல் உனக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்” என்று அவனை வரவேற்பார். அந்த ஆத்துமத்தின் கண்கள் திறக்கப்படும்! அது தன் சர்வேசுரனை மீண்டும் அவர் இருக்கிறபடி கண்டுகொள்ளும்! அந்தக் காட்சியே அதன் நித்தியப் பேரின்பமாக இருக்கும். இதோ அந்த ஆன்மாவின் மகா பரிசுத்த திருமாதா மகிழ்ச்சியோடு அதை வரவேற்க சம்மனசுக்களின் படையணிகளோடு இறங்கி வருகிறார்கள்! மோட்சத்தின் கதவுகள் திறக்கின்றன! இனி நித்திய காலமும், சர்வேசுரனோடும், தன் திவ்ய அன்னையுடனும், அனைத்து தேவதூதர்கள், புனிதர்களோடும் பேரின்ப பாக்கியத்தை அனுபவிக்கும்படி இந்த பாக்கியம் பெற்ற ஆன்மா மோட்சத்திற்குள் நுழைகிறது!
"இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணு வார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வேசுரன்தாமே அவர்களுடைய தெய்வமாக அவர்களோடு இருப்பார். சர்வேசுரன் அவர்களுடைய கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின” (காட்சி (திருவெளி.) 21:3,4).
உத்தரிக்கிறஸ்தலத்தின் வழியாக: காத்திருத்தலின் ஏக்க நிலை!
ஆனால், மரிக்கும்போது பாவசங்கீர்த்தனம், அவஸ்தைப்பூசுதல் போன்ற தேவத்திரவிய அனுமானங்களால் சாவான பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவ இஷ்டப்பிரசாத நிலையில்
இருந்தாலும், இன்னமும் தன் பாவங்களுக்காக முழுமையாகப் பரிகாரம் செய்யாத ஆன்மா தனது தெய்வீக நடுவரால் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறது. தன் பாவங்களுக்கு உத்தரித்து, முழுமையாகப் பரிகாரம் செய்யும் வரை அது கடவுளைக் காண இயலாது. பரிசுத்த மில்லாத எதுவும் கடவுளின் இராச்சியத்தில் பிரவேசிக்க முடியாது என்பதுதான் இதன் காரணம். மகா கொடூரமான உத்தரிக்கிற நெருப்பின் வேதனையையும் தாண்டி, கடவுளைக் காண வேண்டும் என்ற அந்த ஆன்மாவின் துடிப்பும், வேதனையுமே அதன் மிகப் பெரிய வாதையாக இருக்கும்.
சாவான பாவத்தோடு மரிக்கும் ஆத்துமத்தின் பரிதாப நிலை : நரகம்!
ஆனால் தன் சாவான பாவங்களுக்கு தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் மன்னிப்புப் பெறாத நிலையில் மரிப்பவனின் நிலை எவ்வளவு பயங்கரத்துக்குரியது, எவ்வளவு அவலமானது! அவனது உடலிலிருந்து ஆன்மா பிரிந்த கணத்தில், அதே இடத்தில், அவனது நித்திய நடுவர் அவனுக்குத் தோன்றுகிறார்! இந்த ஆத்துமத்தின் கண்களும் திறக்கப்படுகின்றன. இந்தக் கணத்தில், தன்னை ஈன்றெடுத்தவரும், தனது இறுதிக்கதியுமான சர்வேசுரனை அந்த ஈன ஆன்மா மீண்டும் கண்டுகொள்கிறது! ஆனால் இதோ, அதன் முன்பாக இருக்கிற இந்த தெய்வீக நடுவரின் காட்சியோ அதனால் தாங்க இயலாததாக இருக்கிறது!
எந்த பயங்கரமுள்ள தேவ பிரசன்னம் இஸ்ராயேலின் பாளையத்திலிருந்த இலட்சக்கணக் கான மக்களை நடுநடுங்கச் செய்ததோ (யாத். 19:16), யாருடைய தெய்வீகப் பிரசன்னத்தால் மக்கள் அனைவரும் குரல்களையும் சுடரொளிகளையும், எக்காளத்தின் ஒலியையும், புகைந்து கொண்டிருந்த (சீனாய்) மலையையும் தரிசித்து, அச்சமுற்றுத் திடுக்கிட்டு, மோயீசனை நோக்கி: "நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடு பேச வேண்டாம், பேசினால் உயிர் போய்விடும்” (யாத். 20:18,19) என்றார்களோ, அந்த வல்லமை மிக்க, பாவத்தை வெறுத்துப் பகைக்கிற எரிச்சலுள்ள தேவனுக்கு முன்பாக, இதோ இந்த ஆன்மா தன்னந்தனியாக நிற்கிறது! ஓ, ஒவ்வொரு மனிதனும் இதை நினைவில் கொள்ளட்டும்! இந்நிலையிலிருந்து தப்ப எவனாலும் முடியாது! நீ மரிக்கும்போது உன் ஆன்மாவில் சாவான பாவக்கறை இருக்குமானால், இந்த நீதியுள்ள சர்வேசுரனுக்கு முன்பாக நீயும் தன்னந்தனியாக நிற்க வேண்டியிருப்பது உனக்கு எப்பேர்ப்பட்ட பயங்கரமாக இருக்கும்!
இதோ, அவர்தீர்ப்பிடுகிறார்! “சபிக்கப்பட்டவனே! என்னை விட்டகன்று, பசாசுக்கும் அதன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போ... பிரயோஜனமற்ற இந்த ஊழியனைப் புறம்பான இருளிலே தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டா யிருக்கும்” (மத்.25:41,30).
பாவி இந்த பயங்கரமுள்ள தீர்ப்பைக் கேட்டு நடுங்குகிறான்! பதைபதைத்துத் துடிக்கிறான்! எப்படியாவது இந்த தீர்ப்பு மாற்றப்படலாகாதா என்று தவித்துச் சோர்ந்து போகிறான்! இதோ, இந்தத் தீர்ப்புக்காகவே காத்திருந்த பசாசுக்கள் நெருப்பாலான சங்கிலிகளால் அவனைப் பிணைத்து இழுத்துக்கொண்டு நரகத்தினுள் போய் விழுகின்றன! எல்லாம் முடிந்து போயிற்று!
நரகத்தில் எல்லா விதமான துன்பங்களும் நிறைந்திருக்கின்றன.
என்பது உண்மைதான். ஆனால் அவை எல்லாவற்றிலும் மிகக் கொடூரமானது, இனி நித்தியத் திற்கும் கடவுளை இழந்து போனேனே என்ற ஆத்துமத்தின் வேதனைதான். சமீப காலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் நாம் காணும் ஒரு செய்தியை நினைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகள் தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட போர்வெல் குழிகளுக்குள் விழுந்து சிக்கிக்கொண்டு இறந்து போகிறார்கள். 100 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு இன்னும் உயிரோடிருக்கிற அந்தக் குழந்தையின் மனநிலையை சிந்தித்துப் பாருங்கள்! அவன் தன்னைப் பெற்றவளை நினைக்கிறான்! அன்பும், கதகதப்பும் நிறைந்த அவளுடைய மடியை நினைக்கிறான். அவளிடம் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடத் துடிக்கிறான். ஆனால் அது அவனால் முடியாது. மிகக் கொடூரமான வேதனைதான் இது! ஆனால் கடவுளை இழந்து, அவருக்காக நித்தியத்திற்கும் ஏங்கிக்கொண்டேயிருக்கப் போகிற ஆத்துமத்தின் வேதனைக்கும், துன்பதுயரத்திற்கும் முன்பாக, இந்தக் குழந்தையின் வேதனை ஒன்றுமேயில்லை எனலாம்! அ அர்ச். சாமிநாதர் சபையின் அதிபராயிருந்த முத். ஜோர்டான் ஒரு முறை ஒரு மனிதனைப் பிடித்திருந்த சாத்தானிடம்: "கடவுளின் காட்சியைப் பெற அனுமதிக்கப்படுவதற்கு நீ எதைத் தர ஆயத்தமாயிருப்பாய்?" என்று கேட்டபோது, சாத்தான் இப்படிப் பதில் சொன்னான்: "கூர்முனை களும், ஆண்களும், ஊசிகளும் வெளிப்புறத்தில் கொண்ட ஒரு தூண் பூமியிலிருந்து மோட்சத் திற்கு ஊன்றப்பட்டிருக்குமானால், ஒரு சில விநாடிகளாவது அந்த தெய்வீகத் திருமுகத்தின் காட்சியை உற்றுநோக்க அனுமதிக்கப்படுவதற்காக, இன்றிலிருந்து தீர்வையின் நாள் வரை அத்தூணின் மீது மேலும் கீழுமாக இழுத்துச்செல்லப்பட நான் மகிழ்ச்சியோடு சம்மதிப்பேன்!!"
ஆ. சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் இந்தப் பேரிழப்பு எவ்வளவு நிர்ப்பாக்கியமானது! அது அனுபவிக்கிற இந்தக் கொடூர வேதனையை எந்நிலையிலும் மனிதரால் விளங்கிக்கொள்ள முடியாது. மனித அறிவுக்கு இது எட்டாது. இதையே அர்ச். பொனவெந்தூர், "நரகத்திலுள்ள சபிக்கப்பட்டவர்கள் வேறெதையுமன்றி எப்போதும் கடவுளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். இது அவர்களை சொல்லிலடங்காத விதமாக வாதிக்கும். கடவுளைப் பற்றிய சிந்தனை தரும் வாதையை விடப் பெரிய வாதை எதுவும் சபிக்கப்பட்ட ஆத்துமத்திற்கு இல்லை என்கிறார்.
ஆம்! தன் இறுதிக் கதியும், சகல நன்மைச் சுரூபியும், தான் உலகில் இருந்த வரை அளவற்ற விதமாகத் தன்னை நேசித்தவரும், தம்மையே முழுமையாக தனக்குக் கையளித்தவருமான சர்வேசுரனை எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் ஆன்மா துடிக்கிறது, தவிக்கிறது, ஏங்கிச் சோர்ந்து போகிறது. ஆனால் பாவம் கடவுளுக்கும் சபிக்கப்பட்ட ஆன்மாவுக்குமிடையே ஒரு பெரும் சுவராக நின்று பிரிக்கிறது. கடவுள் அடிக்கடி இந்தச் சுவரைத் தாண்டி வருகிறார், நரக அக்கினிக்கு மத்தியிலும் அந்த ஆத்துமத்தைத் தண்டித்துத் துன்புறுத்து வதற்காக! ஆனால் ஆத்துமத்தால் இந்தச் சுவரை இனி ஒருபோதும் தாண்டி வெளியே வரமுடியாது!
இந்த வார்த்தைகள் அதீதமானவை என்று தோன்றலாம். ஆனால் அர்ச். தொன் போஸ்கோ கண்ட கனவு இது உண்மை என்று எண்பிக்கிறது. அவர் தமது காவல் சம்மனசானவரால் ஒரு முறை நரகத்தைக் காணும்படி கனவில் அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது நரகத்தின் வாசலில் அவர் நின்று கொண்டிருக்கிறார். இனி அவரே நேரடியாகப் பேசுவதைக் கேட்போம்: - "நான் கடும் திகிலோடு ஏறிட்டுப் பார்த்தபோது, தொலைவில் ஒருவன் அந்தச் சரிவான சாலையில் கட்டுப்படுத்தப்பட முடியாத வேகத்தில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவன் அருகில் வந்தபோது, அவன் என் (விடுதிச்) சிறுவர்களில் ஒருவன்தான் என்று நான் கண்டு கொண்டேன். கலைந்திருந்த அவனது தலைமுடியின் ஒரு பகுதி அவன் தலை மீது குத்திட்டு நிற்க, மறு பகுதி காற்றில் பின்பக்கமாகத் தள்ளப்பட்டது. தண்ணீரில் விழுந்து மிதக்கும் முயற்சியில் கைகளை அடித்துக் கொள்பவனைப் போல, அவனது கரங்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவன் நிற்க விரும்பினான், ஆனால் முடியவில்லை. நீட்டிக் கொண்டிருந்த கற்களில் கால் இடறியதால், அவன் தொடர்ந்து இன்னும் வேகமாக விழுந்து எழுந்து கொண்டிருந்தான். “நாம் அவனுக்கு உதவி செய்வோம், அவனைத் தடுத்து நிறுத்துவோம்” என்று நான் கத்தினேன். ஒரு வீண் முயற்சி யாக அவனைத் தடுக்க என் கரங்களை நீட்டவும் செய்தேன்.
“அவனை விட்டு விடும்” என்று என் வழிகாட்டி பதில் சொன்னார். “ஏன்?”
"கடவுளின் பழிதீர்த்தல் எவ்வளவு பயங்கரமுள்ளது என்று உமக்குத் தெரியாதா? அவரது நீதியுள்ள கடுஞ்சினத்திலிருந்து தப்பியோடிக் கொண்டிருப்பவனை உம்மால் தடுத்து நிறுத்தி விடமுடியும் என்று நினைக்கிறீரா?''
இதனிடையே அந்தச் சிறுவன், கடவுளின் கடுங்கோபம் தன்னை இன்னும் துரத்திக் கொண்டு வருகிறதா என்று பார்க்கும் முயற்சியில் நெருப்புமயமான தன் பார்வையைப் பின்னோக்கித் திருப்பியிருந்தான். அடுத்த கணம் அவன் கால் இடறி கீழே விழுந்து உருண்டு, அந்த மலையிடுக்கின் அடிவாரத்திற்கு வந்து, தனது ஓட்டத்தில் தான் தஞ்சமடைய வேறு நல்ல இடம் கிடைக்காது என்பது போல், அந்த வெண்கலக் கதவில் வேகமாக மோதினான்.
“அவன் ஏன் கடும் அச்சத்தோடு பின்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்?” என்று நான் கேட்டேன்.
"ஏனெனில் கடவுளின் கடுங்கோபம் நரகத்தின் வாசல்களையும் ஊடுருவி அவனைச்  சென்றடைந்து, நரக நெருப்பின் மத்தியிலும் கூட அவனை ச்சித்திரவதை செய்யும்!” அது சிறுவன் கதவில் மோதியதும், அது ஒரு பெரும் கர்ஜனையோடு வேகமாகத் திறக்க, அடுத் தடுத்து, உள்ளேயிருந்த ஓராயிரம் கதவுகள் காதைச் செவிடாக்கும் இடியோசையுடன் திறந்தன. கண்ணுக்குத் தெரியாத, மிகுந்த வன்மையுள்ள, எதிர்க்கப்பட முடியாத கடும் சூறாவளியால் வீசி யெறியப்பட்ட ஒரு பிரமாண்டமான பொருளால் தாக்கப்பட்டது போல அவைதிறந்தன. ஒன்றுக்குப் பின் ஒன்றாக, ஒன்றுக்கொன்று கணிசமான தூரத்தில் இருந்த இந்த வெண்கலக் கதவுகள் ஒரு கணம் மட்டுமே திறந்திருக்க, அந்த இடைவெளியில், வெகு தூரத்தில், தீச்சூளையைப் போன்ற ஒன்றைக் கண்டேன். சிறுவன் அதனுள் விழவும், அதிலிருந்து நெருப்புப் பந்துகள் தெறிப் பதையும் நான் கண்டேன். எவ்வளவு வேகமாக அவை திறந்தனவோ, அவ்வளவு வேகமாக அவை மீண்டும் மூடிக் கொண்ட ன.” (ஆதாரம்: "Forty Dreams of St. John Bosco," compiled and edited by Fr. J.Bacchiarello, S.D.B.).
மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரித்து, தன் நெற்றியிலாவது, தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக் கொள்கிறவன் எவனோ, அவன் தேவ கோபாக்கினையின் பாத்திரத்தில் ஒரு கலப்புமின்றி வார்க்கப்பட்ட அவரது கோபாக்கினையாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், செம்மறிப் புருவையானவருக்கு முன்பாகவும் அக்கினியிலும், கந்தகத்திலும் உபாதிக்கப்படுவான் என்று இஸ்பிரீத்துசாந்துவானவர் எச்சரிக்கிறார் (காட்சி .14:9,10).
"நாம் நமது காரியத்தை அதிஷக்கிரமான கோபத்தோடு நிறைவேற்றுவோம். நம் கண் கிருபையின்றிப் பார்க்க, நாம் அவர்கள் மீது இரக்கமற்றிருப்போம்” என்று கடவுள் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வாயிலாக எச்சரிக்கிறார் (8:18). “உங்களில் எவன் விழுங்கும் அக்கினியோடு வசிக்கக் கூடும்? உங்களில் எவன் நித்திய தீச்சுவாலையில் வாசம் செய்வான்?” என்று இசையாஸ் தீர்க்கதரிசியின் மூலமாக ஆண்டவர் கேட்கிறார் (33:14). "சகலராலும் கைவிடப்பட்டு, நீ அறியாத நாட்டில் உன் எதிரிகளுக்கு உன்னை அடிமையாக்குவோம்; ஏனெனில், நமது கோபாக் கினையை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்” என்று ஆண்டவர் சபிக்கப்பட்ட ஆன்மாவை நோக்கிக் கூறுகிறார் (எரேமி.17:4). "கறேரென்று மரண இருள் சூழ்ந்ததும், துரதிருஷ்டமானதும் மிகவும் இருண்டதும், சாவின் நிழல் சூழ்ந்ததும், அலங்கோலம் நிறைந் ததும், நித்திய பயங்கரம் குடிகொண்டுள்ளதுமான தேசம்... அந்த தேசத்திற்கு நான் போனால் இனி திரும்பி வர மாட்டேன்” என்று யோபு கூறுகிறார் (10:21-22).
தண்ணீரில் வாழும் மீன் அந்தத் தண்ணீரையே தன் உயிரின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. அதிலிருந்துதான் தனக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற்றுக் கொள்கிறது. நீர்த்தாவரங் களிலிருந்தும், நீரில் வாழும் பிற உயிர்களிலிருந்தும் தனக்குத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்கிறது. அதன் மேலும், கீழும், வலமும், இடமும், முன்னும், பின்னும், தண்ணீர்தான் அதைச் சூழ்ந்திருக்கிறது. ஆயினும், இப்படி தண்ணீரில் இருக்கும் வரை அந்த மீன் அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை .
ஆனால் அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு கரையிலுள்ள மணலில் விழுந்து துடிக்கும்போதுதான் நீரின் இன்றியமையாத தேவையை உணர்கிறது. எப்படியாவது மறுபடியும் நீருக்குள் போய்விட விரும்புகிறது. அது முடியாதபோது அது தன் உயிரையே இழந்து போகிறது.
ஆத்துமத்தின் காரியத்திலும் இதுதான் நிகழ்கிறது. "சகலமும் ஆண்டவராலும், அவரைக் கொண்டும் அவரிலும் உண்டாயிருக்கிறது" (உரோ. 11:36) என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். நாம் இருப்பதும், இயங்குவதும், ஜீவிப்பதும் அவரிலேதான். சூரிய ஒளியின் பிரசன்னத்திலிருந்து பூமி ஒருபோதும் விலக முடியாததுபோல, ஆத்துமம் கடவுளின் பிரசன்னத்திலிருந்து ஒருபோதும் விலக முடியாது. அது அவரையே தன் தொடக்கமாகவும், இறுதிக்கதியாகவும் கொண்டுள்ளது, அவராலேயே சுவாசிக்கிறது, அவராலேயே ஜீவிக்கிறது. எனினும் பரிதாபத்திற்குரிய முறையில், மனிதன் இந்த மாபெரும் உண்மையைப் பெரும்பாலும் நினைப்பதில்லை.
மீனானது நீரிலிருந்து விலக்கப்படுவது போல, சாவான பாவத்தோடு மரித்து, நரகத்திற்குத் தீர்வையிடப்படுகிற ஓர் ஆத்துமம் ஒரு விதத்தில் தேவ பிரசன்னத்திலிருந்து விலக்கப்படுகிறது என்று சொல்லலாம். சுடுமண்ணில் கிடக்கும் மீன், அந்தச் சூட்டின் வேதனையை விட, பிராண வாயு விலக்கப்பட்ட வேதனையை அதிகமாக உணர்வது போல, கொடிய நெருப்புக்கு மத்தி யிலும் ஆத்துமம் தான் இழந்துபோன கடவுளின் பிரசன்னத்திற்காகவே அதிகமாக ஏங்கித் தவிக்கிறது. எப்படியாவது தன் ஏக கதியாக இருந்த அவரை அடையத் துடிக்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், இனி அது அவரது நித்திய எதிரியாகவே நிலைத்திருக்கப் போகிறது!
“உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே ஒரு பெரும் பாதாளம் ஸ்திரமாய் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் இங்கேயிருந்து அங்கே வரவும், அங்கேயிருந்து இங்கே வரவும் மனதிருந்தாலும், கூடாததாயிருக்கிறது” (லூக்.16:26) என்று ஆபிரகாம் சொல்வது பாவமாகிய பாதாளத்தைப் பற்றியே
தமது "தியானங்களின் தொகுப்பில், அர்ச். கேண்ட்டர்பரி ஆன்செல்ம் தீர்ப்புக்காக தெய்வீக நடுவ ரின் முன்பாக நிற்கிற ஒரு பாவியின் வாய்மொழியாகக் கூறுவதைக் கேளுங்கள்: “சபிக்கப்பட்டவன்! நான் சபிக்கப் பட்டவன்! யாருக்கு எதிராக நான் பாவம் செய்திருக் கிறேன்? ஓ நான் கடவுளையே அவசங்கை செய்து விட்டேன், சர்வ வல்லபரின் கடுங்கோபத்தைத் தூண்டி னேன். நீசப் பாவியாகிய நான் என்ன செய்து விட்டேன்! யாருக்கு எதிராக நான் இதைச் செய்தேன்! எவ்வளவு கொடுமையான முறையில் இதைச் செய்திருக்கிறேன். ஐயோ, ஐயோ! சர்வ வல்லபரின் கடுஞ்சினமே, என்மீது விழாதே! உன்னை நான் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? உன் பாரத்தைத் தாங்கக்கூடிய எதுவும் என்னில் இல்லையே! இங்கே, பாவங்கள் குற்றஞ் சாட்டுகின்றன. அங்கே, நீதியோ அகோரமாயிருக்கிறது! கீழே நரகம் என்னை விழுங்கத் தன் வாயை அகலத் திறந்திருக்கிறது; மேலேயோ கோபமுள்ள நித்திய நடுவர் இருக்கிறார்; எனக்குள், சுட்டெரிக்கிற மனசாட்சி; என்னைச் சுற்றிலுமோ, நெருப்பாய்த் தகிக்கிற பிரபஞ்சம்! இப்படி சிக்கிக்கொண்டிருக்கிற பாவி எங்கே பறந்தோடிப் போவான்? இறுகக் கட்டப்பட் டிருக்கிற நான் எங்கே பதுங்கி ஒளிந்து கொள்வேன்? எப்படி என் முகத்தை மறைத்துக் கொள் வேன்? ஒளிந்துகொள்ள வாய்ப்பேயில்லை, வெளிக்குத் தோன்றுவதோ தாங்க முடியாததாக்கிறது; நான் ஏங்கித் தேடுவது எங்கேயும் காணப்படவில்லை. நான் அருவருக்கிற காரியமோ, எல்லா இடங்களிலும் இருக்கிறது! இனி என்ன ஆகும்? பயங்கரத்துக்குரிய இந்த உன்னத தேவனின் கரங்களிலிருந்து என்னை விடுவிப்பவன் யார்?” ("Meditations" of St. Anselm of Canterbury).
நரகத்தின் இந்தக் குறிப்பிட்ட வேதனை பற்றி நம் ஆண்டவரே அர்ச். சியென்னா கத்தரீனம்மாளுக்குக் கூறிய வார்த்தைகளைக் கேளுங்கள்:
“நரக வேதனைகளில் முதன்மையானது, என் காட்சி தங்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பதாகும். இது எந்த அளவுக்கு அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தண்டனை யாக இருக்கிறது என்றால், அவர்களுக்கு நான் இரண்டு வாய்ப்புகள் தருவதாகக் கற்பனை செய்து கொள். ஒன்றில் அவர்கள் நரகத்தின் எல்லா வகையான கொடிய வேதனைகளுக்கும் மத்தியில் என்னை எப்போதும் தரிசிக்கலாம், அல்லது அவர்கள் வேறு எந்த விதமான நரக வேதனைகளும் இல்லாமலிருக்கலாம். ஆனால் என் தேவ காட்சி அவர்களுக்குக் கிடைக்காது. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும்படி நான் அவர்களுக்கு வாய்ப்புத் தருவேன் என்றால், மிக உறுதி யாக அவர்கள் இந்த முதலாவது வாய்ப்பைத்தான் தேர்ந்து கொள்வார்கள்.”
இறுதி வரை இந்தக் கொடூர வாதையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஆத்துமம் மெய்யாகவே பாக்கியம் பெற்றது! கிறீஸ்தவனே! பரலோக இராச்சியத்தில் உன் தேவனாகிய ஆண்டவரோடும், உன் திருமாதாவோடும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களோடும் நித்திய காலமும் பேரின்ப பாக்கியம் அனுபவிப்பதற்காகவே இவ்வுலகில் விடப்பட்டிருக்கிறாய். இதுவே கடவுளின் சித்தம். ஆனால் நீ உன் விருப்பப்படி வாழ்ந்து, நரகத்தில் உன்னையே வீழ்த்திக்கொள்வாய் என்றால், அதற்குரிய குற்றவாளி நீமட்டுமே.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

Guardian Angel

¼>k#>ìï¹[ ¶[¸[ >[ç\çB å\Âz sáÂþÂ
ïVâ|Dý ¯tl[*m åVD ïVbD cÅ¡ Îò >Vl[ ¶[A^á
cÅkVzD. \M> ¶[Aï¹¼é¼B tï© AM>\VªmD, tïÝ
>V«Vá\VªmD, tï c®]BVªm\Vª, tï¡D >[ªé\uÅm
\Vª ¶[A Îò >V¥ç¦Bm.

நரகம்: மறுக்க முடியாத ஒரு நித்திய உண்மை !!


நரகம்: மறுக்க முடியாத ஒரு நித்திய உண்மை !

நரகம்: மறுக்க முடியாத ஒரு நித்திய உண்மை !
கத்தோலிக்கத் திருச்சபை போதித்து வரும் விசுவாச சத்தியங்களில் மிக முக்கியமானதும், ஒரு வகையில் மற்ற அநேக சத்தியங்களுக்கு அடிப்படையானது மாகிய ஒரு சத்தியம் இன்று மறுக்கப் படுவதை நாம் காணமுடிகிறது. அது மறுக்கப்படுவது மட்டுமல்ல, அதை விட அதிகமாக, மறைக்கவும் படுகிறது. நரகம் என்ற ஒன்று இருக்கிறது, இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் பாவத் திற்குத் தண்டனையாக அங்கு செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்ற நித்திய சத்தியம்தான் அது!


1908-ல் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதரால் வெளியிடப்பட்ட "ஞான உபதேசம், ” நரகத் தைப் பின்வருமாறு வரையறுத்தது: “நரகம் என்பது தீயவர்கள் தண்டிக்கப்படும் ஓர் இடமாகும். அங்கு அவர்களுக்கு நித்தியத்திற்கும் கடவுளின் காட்சி மறுக்கப்படுகிறது, அங்கு அவர்கள் பயங்கரமான வாதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்” (Lesson 37th: on the Four Last Things, Question 1379).
ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானப் பரிணாம சிந்தனைகள், இந்த விசுவாச சத்தியத்தை அகற்றி விட்டு, அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. எனவே, நரகம் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பதை நிரூபிப்பதும், அதைப் பற்றி மக்களை எச்சரிப்பதும், மோட்சம் செல்ல அவர்களுக்கு உதவுவதும்தான் இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.
நரகத்தைப் பற்றிய தியானம் எப்படிப்பட்ட அச்சம் தருகிற, பயங்கரமான தியானமாக இருக்கிறது! ஆன்மாக்களுக்கு இந்த சத்தியத்தைப் பற்றி மேலிருந்து ஞான வெளிச்சம் தரப்பட வேண்டும், அவர்களது மனங்களில் இந்த சத்தியம் உறுதிப்பட வேண்டும் என்ற ஏக்கம்தான் இந்தக் கட்டுரை வெளிவரக் காரணம். இது பாவத்தையும், நரகத்தையும் பற்றி மேலோட்ட மாகப் பேசுபவர்களின் கற்பனையான கனவுகளிலிருந்து இருதயத்தையும், மனதையும் விடுவிக் கிறது. தொன் போஸ்கோவின் நரகக் கனவில் வரும் வழிகாட்டி, ஓர் எல்லைக் கோட்டை சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கோட்டிற்கு அப்பால், இனி அன்பு இல்லை, நண்பர்கள் இல்லை, எந்த விதமான ஆறுதலும், தேறுதலும், சுகமும் இல்லை. ஒழுக்கங்கெட்ட உலகத்தைப் பின்செல்பவர்களுக்காக அங்கே கடும் அச்சமும், நம்பிக்கையின்மையும் மட்டுமே காத்திருக்கிறது.
நரகத்தைப் பற்றிப் பேசி மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை இதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. இவர்கள் முதலில் ஒரு காரியத்தை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தேவ சுதனானவர் எதற்காக மனிதனானார்? "அவர் தேவரூபமாயிருக்கையில்... தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனித ரூபமாகக் காணப் பட்டார், தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டும் அதாவது சிலுவை மரணமட்டும் கீழ்ப்படித் லுள்ளவரானார்” (பிலிப்.2:6-8) என்றால், அதற்குக் காரணம் என்ன? மனிதனைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும், அதன் பயங்கர விளைவாகிய நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற்காகவே அவர் மனிதனானார். கிறிஸ்துவின் மனிதாவதாரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இது.

ஆனால் இந்த மிக அத்தியாவசியமான, இன்றியமையாத போதனை இன்று போதிக்கப் படுகிறதா? இல்லை! இல்லவேயில்லை! கிறீஸ்துநாதர் மனிதர் கண்டு பால் முன்னுதாரண மனிதராக, உத்தமமான மனிதராக (The Ideal Man) மக்களுக்குக் காட்டப் படுகிறார். மிகச் சிறந்த “மனித மதிப்பீடுகளை நமக்குத் தரவே அவர் வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு வகையில் மனுக்குலத்தை இரட்சிக்க அவர் வந்த தாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆனால் எதிலிருந்து இரட் சிக்க வந்தார் என்பதில்தான் கத்தோலிக்க போதனையில் இருந்து பலர் வேறுபடுகிறார்கள். "சமுதாய சீர்கேடுகள், செல்வந்தர்களாலும், அதிகாரமுள்ளவர்களாலும் ஏழைகள் ஒடுக்கப்படுதல், அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகள், அநீதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை” போன்ற தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க உலகில் பிறந்த ஒரு வீரநாயகராக, வெறும் உலகத் தீமைகளிலிருந்து மட்டும் மனிதனை மீட்க வந்த ஒரு போராளியாக அவர் இன்று முன்னிறுத்தப் படுகிறார். ஆனால் இது உண்மையா?
"இம்மைக்காக (இவ்வுலக நல்வாழ்வுக்காக) மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனிதர்களிலும் நாம் அதிகப் பரிதாபத்துக்குரியவர் களாயிருப்போம்” (1கொரி.15:19) என்று நம்மை எச்சரிக்கிறார் அப்போஸ்தலர்.
பரிசுத்த வேதாகமம் முழுவதும், நேரடியாகவும், மறைமுகமாகவும் நரகத்தைப் பற்றிக் கூறி நம்மை எச்சரிக்கிறது. அதில் ஒரு சில தேவ வாக்கியங்களைப் பார்ப்போம்:
"கோழைகளும், அவிசுவாசிகளும், அருவருப்புக்குரியவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரக ஆராதனைக்காரர், பொய்யர் அனைவரும் அக்கினியும், கெந்தகமும் எரிகிற தடாகத்திலே பங்கடைவார்கள். இரண்டாம் மரணம் இதுவே” (காட்சி .21:8).
"பாவத்தைச் செய்கிறவன் பசாசின் மகனாயிருக்கிறான். ஏனெனில் பசாசானது ஆதிமுதல் பாவஞ்செய்கின்றது. ஆனால் பசாசின் கிரியைகளை அழிக்க வேண்டுமென்றே தேவசுதன் தோன்றினார்” (1 அரு.3:8).
தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்தும், நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற் காகவே கிறீஸ்துநாதர் உலகில் தோன்றினார் (மத்.2:21 காண்).
"சர்வேசுரன் நம்மைத் தமது கோபமுனிவுக்கென்றல்ல, நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் வழியாய் இரட்சணியம் அடைவதற்கென்றே நியமித்திருக்கிறார்” (1 தெச. 5:9).
"ஆண்டவர் தம் அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் மகிமைப்படத்தக்கவரும், அவரை விசுவசித்த சகலரிடமும் ஆச்சரியப்படத்தக்கவருமாய் வரும்போது பொல்லாதவர்கள் ஆண்டவருடைய சன்னிதானத்திலும், அவரது வல்லமையின் மகிமையிலும் நின்று தள்ளப்பட்டு, கேட்டுக் குள்ளாகி நித்திய தண்டனையை அடைவார்கள்” (2 தெச. 1:9).
இந்த வேதாகம வாக்கியங்களும், ஏன் வேதாகமம் முழுவதுமே நரக சத்தியத்திற்கு சாட்சி யாக இருக்கின்றன. மனிதனைப் பாவத்தினின்றும், நரகத்தினின்றும் மீட்டு இரட்சிப்பதற் காகவே சேசுநாதர் உலகிற்கு வந்தார் என்பது, ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன் வரை சகல கத்தோலிக்கர்களும் எந்தக் கேள்வியுமின்றி உறுதியாக விசுவசித்து வந்த சத்தியமாக இருந்தது. ஆனால் இன்று இந்த போதனை மறைக்கப்படுகிறது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத அவலமான, வேதனையளிக்கிற உண்மையாக இருக்கிறது.

இனி, “நீங்கள் விசுவாசத்தில் நிற்கிறீர்களோ என்று நீங்களே உங்களைச் சோதித்தறியுங்கள். நீங்களே உங்களைப் பரீட்சித்துக் கொள்ளுங்கள்” (2கொரி.13:5). இச்சத்தியத்தை விசுவசித்து, நரகத்தினின்று தப்பித்து, மோட்சத்தை அடைவது, உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமையாகும். - அடுத்து, “நரகம் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை . ஆனால் ஞான உபதேசம் (மறைக் கல்வி) என்ற பெயரில் அதைப் பற்றி எடுத்துக்கூறி குழந்தைகளை அச்சுறுத்துவது அவசியமற்றது. நல்லவர்களாக வாழும்படி அவர்களிடம் கூறுவது போதுமானது” என்று சிலர் வாதிடுகிறார்கள்.
“மறைக்கப்படும் சத்தியம், மறுக்கப்படுகிற சத்தியமாகும்” என்பதை இவர்கள் உணரவில்லையா? மகன் பள்ளிக்குச் செல்லும் வழியில் திறந்திருக்கிற பெரிய சாக்கடைக் குழியைப் பற்றி ஒரு தாய் அவனை எச்சரித்து அனுப்புவது தவறா? அப்படி எச்சரித்தால் குழந்தை பயந்து விடுவான் என்று இவர்கள் வாதிடுவார்களா? கொள்ளை நோய் பரவும் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பிற நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்வதில்லையா? தீவிரவாதம் தலைவிரித் தாடுவதும், எந்த விதத்திலும் மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாதிருப்பதுமான நாட்டிற்குத் தன் மகனை வேலைக்கு அனுப்ப எந்தத் தகப்பன்தான் விரும்புவான்? மகனே விரும்பினாலும் கூட அங்கு செல்லாதபடி தடுக்க, தந்தை தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுக்க மாட்டானா?
இந்த உதாரணங்கள் எல்லாம் வெறுமனே மனித உயிரை மட்டும் சார்ந்தவை. ஆனால் நரகத்தைப் பற்றிய சத்தியத் திருச்சபையின் போதனை மனித ஆத்துமங்களை அந்த நரகத் திலிருந்து காப்பாற்றி இரட்சிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதால், அது முன்கூறிய வைகளை விட எவ்வளவோ உந்நதமானதும், அத்தியாவசியமுமான போதனையாக இருக்கிறது. கிறீஸ்துநாதர் திருச்சபையை ஸ்தாபித்ததின் நோக்கம் இது மட்டுமே. இதை விட்டு விட்டு வேறு ஒரு நோக்கத்திற்காகத் திருச்சபை உழைக்குமென்றால், அது ஒன்றில் உண்மையான திருச்சபை யாக இருக்க முடியாது, அல்லது அது கிறீஸ்துநாதருக்கு விரோதமான ஒரு புதிய பாதையில் பயணிக்கிற ஒரு சபையாக மட்டுமே இருக்கும் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!
அர்ச். அந்தோனி மரிய கிளாரெட் சொல்வதாவது: “நெருப்பால் நிறைந்திருக்கிற ஒரு குழிக்குள் விழவிருக்கும் ஒரு மனிதனை நான் கண்டால், ஓடிப் போய் அவனை எச்சரிக்க அவன் அதில் விழாதிருக்க உதவும்படி என் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்ய மாட்டேனா? அப்படியிருக்க, நரக நெருப்பின் படுகுழிக்குள் விழுவதிலிருந்து பாவிகளைக் காப்பாற்ற நான் ஏன் இன்னும் அதிகமாக முயலக் கூடாது? நான் விசுவசிக்கிற அதே சத்தியங்களை விசுவசிக்கிற மற்ற குருக்கள், தங்கள் மந்தையைச் சேர்ந்த விசுவாசிகள் நரகத்தின் இந்த தாங்க முடியாத நித்தியத்தைத் தவிர்க்கும்படி, நரகத்தைப் பற்றி அவர்களுக்கு ஏன் போதிப் பதில்லை, அவர்களை ஏன் எச்சரிப்பதில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தேவ விசுவாசம் என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள ஆண்களும், பெண்களுமாகிய பொது நிலையினர், தேவைப்படுகிறவர்களுக்கு இந்த எச்சரிக்கையை ஏன் தருவதில்லை என்பது எனக்கு இன்னும் வியப்புக்குரிய காரியமாகவே இருக்கிறது. இரவின் நடுவில் ஒரு வீடு தீப்பற்றிக் கொள்கிறது, அதில் வசிப்போரும், அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், முதலில் அந்த விபத்தைக் காணும் எவனும், தெரு நெடுக ஓடி, “நெருப்பு! நெருப்பு! அந்த வீடு தீப்பிடித்து எரிகிறது!'' என்று கூச்சலிட மாட்டானா? அப்படி யிருக்க, பாவத்தில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் கண்விழிக்கிறபோது, தாங்கள் நரகத்தின் நித்திய தீச்சுவாலைகளில் இருக்கக் காண்பதைத் தடுக்கும்படி ஏன் யாருமே அவர்களை எச்சரிப்பதில்லை?” புனிதரின் இந்த வார்த்தைகள் இந்நாட்களில் இன்னும் எவ்வளவு அதிகப் பொருத்தமானவையாக இருக்கின்றன!
அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார்: “பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் அநேக ஆயர்களும், ஆத்தும் மேய்ப்பர்களும் பங்குபெற்றார்கள். ஒரு புகழ் பெற்ற கத்தோலிக்க போதகர் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். அவர் தம் பிரசங்கத்தை தயார் செய்துகொண்டிருந்தபோது, ஒரு பசாசு பயங்கரத் தோற்றத்தோடு தோன்றி, அவரிடம்: “உம் புத்தகங்களை மூடி வையும். இந்த ஆயர்கள், ஆத்தும மேய்ப்பர்களுக்கு உண்மையாகவே பயனுள்ள ஒரு பிரசங்கம் செய்ய விரும்புகிறீர் என்றால், எங்கள் சார்பாக இந்த வார்த்தைகளைச் சொல்லும்: “ஆயர்கள், ஆத்தும மேய்ப்பர்களின் அசட்டைத்தனத்தால் ஏராளமான விசுவாசிகள் நித்தியத்திற்கும் சபிக்கப்படுகிறார்கள் என்பதற்காக இந்த ஆயர்களுக்கும், ஆத்தும் மேய்ப்பர்களுக்கும் இருளின் அரசர்களாகிய நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீங்கள் எங்களுக்குச் செய்யும் இந்த உபகாரத்திற்காக, நீங்கள் நரகத்தில் எங்களோடு இருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு ஒரு சன்மானம் தருவோம்!” என்றது.''
உலகம் மிக வேகமாகத் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆன்ம மேய்ப் பர்கள் உலகின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, ஆன்மாக்களோ உறங்கிக் கொண்டிருக்கின்றன! நோவேயின் நாட்களில் எப்படியிருந்ததோ, அப்படியே மனுமகனின் வருகையிலும் இருக்கும். எவ்வாறெனில் பெருவெள்ளத்திற்கு முந்தின நாட்களிலே, நோவா என்பவர் பேழையில் பிரவேசிக்கும் நாள் வரையில் ஜனங்கள் உண்டும், குடித்தும், பெண் கொண்டும், கொடுத்து மிருந்து, பெருவெள்ளம் வந்து சகலரையும் வாரிக்கொண்டு போகும்வரைக்கும் உணரா திருந்தார்கள். அவ்விதமே மனுமகனுடைய வருகையிலும் இருக்கும்” என்ற நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருப்பதை எங்கும் காண்கிறோமே! ஐயோ! ஆத்துமங்களை இந்த பயங்கரத்திலிருந்து காப்பாற்ற யார் முன்வருவார்கள்!
“நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது பரலோகத் தினின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவான்” (கலாத். 1:8) என்று அப்போஸ்தலர் எச்சரிப்பதை ஆன்ம மேய்ப்பர்கள் கவனத்தில் கொள்ளட்டும்!
பாத்திமாவில் 1917 ஜூலை 13 அன்று பரிசுத்த ஜெபமாலை மாதா தன் மூன்று குழந்தைகளுக்கு நரகத்தைத் திறந்து காட்டி னார்கள். இந்தக் குழந்தைகளில் இளையவளான ஜஸிந்தாவுக்கு அப்போது ஆறு வயதுதான் ஆகியிருந்தது. இந்தக் காட்சி எந்த அளவுக்கு அவர்களை நடுங்கச் செய்தது என்றால், லூஸியா தனது மூன்றாம் நினைவுக் குறிப்பேட்டில் "இக்காட்சி ஒரு கண நேரம்தான் நீடித்தது. நமது மோட்ச அன்னைக்கு நன்றி. நாங்கள் மோட்சம் செல்வோம் என்று முதல் காட்சியிலேயே அவர்கள் கூறியிருந்தார்கள். இல்லாவிட்டால் திகிலாலும், பயத்தாலும் நாங்கள் இறந்தே போயிருப்போம்” என்று எழுதுகிறாள். ஆம். உள்ளபடியே சில வினாடிகள் மட்டும் காண்பிக்கப்பட்ட அந்த நரகக் காட்சியும் கூட, அவர்களுடைய உயிரைப் பறிக்கும் அளவுக்கு மிக பயங்கரமானதாக இருந்தது. கொடிய பசாசுக்களும்,
சபிக்கப்பட்ட ஆத்துமங்களும் அந்த மகா பயங்கரமுள்ள நெருப்புக் கடலில் சொல்லிலடங்காத கொடூர வேதனைகளுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்டு அந்தக் குழந்தைகள் நடுங்கிப் போனார்கள். ஆயினும் ஞானத்துக்கு இருப்பிடமாகிய திவ்ய கன்னிகை, நரகத்தை அக்குழந்தைகளுக்குத் திறந்து காட்ட சற்றும் தயங்கவில்லை. நரகத்தைப் பற்றிய போதனை எந்த அளவுக்கு அனைத்திலும் மிக முக்கியமானது என்பதை நிரூபிக்க இந்த ஒரு சாட்சியமே போதுமானது.
எனவே, ஒரு போலியான காரணத்தைக் கூறி, நரகப் பசாசைப் போல, தேவ அன்னையை விடத் தங்களை அதிக ஞானமுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள யாரும் இனி துணிய வேண்டாம்!
வேதபோதகர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் புதிய வேதபோதகக் களங் களைத் தேடி ஆத்தும் தாகத்தோடு செல்லக் காரணமாயிருப்பது இந்த நரக சத்தியமே. பாரிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராயிருந்த நம் ஞானத் தகப்பன் அர்ச். சவேரியாரை, இந்த இந்திய நாட்டிற்கு இழுத்து வந்து, எந்த வசதியும் இல்லாத இந்நாட்டில் கால்நடையாகவே
ரியச் செய்ததும் இந்த நரக சத்தியமே. கிறீஸ்துநாதர் ஏற்படுத்திய தேவத் திரவிய அநுமானங்கள், அவற்றின் மூலமாகவும், ஜெபம் முதலிய வேறு வழிகளின் மூலமாகவும் மனிதர் மீது வெகு தாராளமாக சர்வேசுரனால் பொழியப்படும் வரப்பிரசாதம் ஆகியவற்றின் நோக்கம் ஆன்மாக்களை நரகத்திலிருந்து மீட்டு இரட்சிப்பதே தவிர வேறு எதுவுமில்லை.
நரகம் இருக்கிறது! உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அதில் விழும் ஆபத்து இருக்கிறது. அதிலிருந்து தன் ஆன்மாவைக் காத்துக்கொள்வது ஒன்றே மனித வாழ்வின் ஏக இலட்சியமாக இருக்கிறது. இதற்கு மாறான போதனையெல்லாம் பசாசிடமிருந்தே வருகிறது. - இந்தக் கட்டுரை முழுவதிலும் நரக தண்டனைகளும், இந்த நரகத்திலிருந்து ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவதற்கான வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

எனவே ஆண்டவரே வெளிப்படுத்திய இந்த சத்தியத்தை விசுவசித்து, முழு மனதோடு அதை ஏற்றுக்கொண்டு, அநுதினமும் அதைப் பற்றி சிந்தித்து, முடிந்த வரை அதைப் பிறருக்கு போதித்து, உங்களுடையவும், பிறருடையவும் இரட்சணியத்தை அடைந்து கொள்ள முன்வருவீர்களாக!