Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 21 டிசம்பர், 2023

Sacramentals - An explanation in Tamil

 அருட்கருவிகள் - ஓர் விளக்கம்
Sacramentals - An explanation


அருட்கருவிகள் - உதாரணங்கள்


1. நம்மை அர்ச்சிப்பதற்கு தேவதிரவிய அனுமானங்களைத் தவிர வேறே வெளி வழிவகைகள் உண்டா?

திருச்சபை உபயோகிக்கும் அருட்கருவிகள் உண்டு.

2. அருட்கருவிகள் என்பதற்கு அர்த்தமென்ன?

தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாக, திருச்சபை தனது மன்றாட்டினால் நமக்கு வேண்டிய சில நன்மை சகாயங்களை, விசேஷமாய் ஞான நன்மைகளை, அடைந்து கொடுக்கும்படி உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கிருத்தியங்களே (செயல்கள்) அருட்கருவிகள் எனப்படும்.

3. இவ்விடம் கிருத்தியங்கள் அல்லது செயல்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் தற்காலமாயிருந்து. அதற்குப்பின் நிலையற்றதாயிருந்தால் கிருத்தியம் அல்லது செயல்கள் எனப்படும். உதாரணமாக: மந்திரித்தல்.

4. இவ்விடம் பொருட்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் நிலையுள்ளதாயிருந்தால், அது பொருள் எனப்படும்.

உதாரணமாக: தீர்த்தம், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள் முதலியவைகள்.

5. அருட்கருவிகள் எப்படித் தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாயிருக்கின்றன?

அருட் கருவிகளும் தேவதிரவிய அனுமானங்களைப் போல், தம் வழியாய் அடையக்கூடுமான இலௌகிக நன்மைகளையோ அல்லது ஞான நன்மைகளையோ குறித்துக்காட்டும் வெளியரங்கமான அடையாளங்களாயிருக்கின்றன.

6. தேவதிரவிய அனுமானங்களுக்கும் அருட்கருவிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

(1) தேவதிரவிய அனுமானங்களெல்லாம் சேசு கிறீஸ்துநாதரால் உண்டாக்கப்பட்டன. அருட்கருவிகளோ திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் திருச்சபை புதுத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் புது அருட்கருவிகளை உண்டாக்கலாம்.

7. அருட்கருவிகள் எத்தனை வகைப்படும்?

அவைகளை ஆறு பிரிவாய்ப் பிரிக்கலாம்.

(1) செபங்கள் அதாவது திருச்சபையால் கற்பிக்கப்பட்டு அதன் பெயரால் சொல்லப்படும் செபங்கள். உதாரணமாக: ஞானஸ்நானம், அவஸ்தைப்பூசுதல் கொடுக்கப்படும்போது சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த செபம், பூசைச் செபம், திருச்சபையின் கட்டளைப்படி குருக்கள் செபிக்கும் சங்கீதமாலை முதலியவைகள். ஒவ்வொருவரும் தனித்தனியே செபிக்கும் செபம் அருட்கருவியல்ல.

(2) தீர்ந்தத் தெளித்தலும், திருப்பூசுதலும்,

(3) மந்திரிக்கப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தல்

(4) பூசையின் துவக்கத்திலும், திவ்விய நன்மை கொடுக்கும்போதும், கட்டளை செபம் செபிக்கும்போதும் சொல்லப்படுகிற பாவசங்கீர்த்தன மந்திரம்.

(5) திருச்சபை கற்பிக்கிற தானதர்மங்களும், ஆத்தும சரீர சம்பந்தமான சகல தமக்கிரியைகளும்,

உதாரணமாக: விசுவாசப்பரம்புதல், பாலர் சபை, அர்ச். இராயப்பர் காசு முதலியவைகளுக்குச் செய்யும் தர்மம், ஞானோபதேசம் கற்றுக் கொடுத்தல், வியாதிக்காரரைச் சந்தித்தல் முதலியவைகள். மற்றப்படி ஒவ்வொருவரும் தன் இஷ்டப்படி செய்யும் தானதர்மம் அருட்கருவியல்ல.

(6) திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டு ஜனங்கள் பேரிலாவது, யாதொரு பொருள் பேரிலாவது, அர்ச். பாப்பாண்டவர். மேற்றிராணிமார்கள், குருக்கள் கொடுக்கிற சகலவித ஆசீர்வாதங்களும், அவ்விதமாய் மந்திரிக்கப்பட்ட பொருட்களும்.

8. அருட்கருவிகளால் விசேஷமாய் விளையும் நன்மைகள் எவை? 

பலவித நன்மைகளை, விசேஷமாய் ஞான நன்மைகளை வருவிக்க அருட்கருவிகளுக்குச் சக்தியிருக்கின்றது. (1) நம்மிடத்தில் ஸ்திரமான பக்திப் பற்றுதலை எழுப்பி, நாம் பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்யும்படி வேண்டிய உதவி வரப்பிரசாதத்தைப் பெறுவிக்கிறதுமின்றி, பாவப்பொறுத்தலை அடைய நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

(2) மனப்பற்றுதலற்ற சகல அற்பப்பாவங்களும் மன்னிக்கப்படும்.

(3) பசாசானது இருக்கக்கூடிய இடங்களிலும், ஆட்களிலும், பொருட்களிலும் நின்று அதைத் துரத்துகின்றன.

(4) அநேக பிரபஞ்சத் தீமைகளினின்று இரட்சிக்கின்றன. இப்படியே வியாதி, தொத்துநோய், இடி, பஞ்சம் முதலிய துன்ப துரிதங்களிலும், ஆபத்து விபத்துக்களிலும் நின்று காப்பாற்றுகின்றன. மேலும் பற்பல இலௌகீக நன்மைகளையும் அளிக்கின்றன. உதாரணமாக: மழை, சௌக்கியம், வெள்ளாண்மை.

(5) மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு இன்னும் வரவேண்டிய அநித்திய ஆக்கினையும் நீங்கிப்போகலாமென்பது சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.

9. அருட்கருவிகளுக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு வேண்டிய ஆயத்தம் என்ன?

விசுவாசம், பக்தி, பாவங்களின் மேல் மனஸ்தாபம் முதலிய பற்றுதல்கள் அவசியம். மெய்யான மனஸ்தம் இல்லாமல் யாதொரு அற்பப்பாவமும் மன்னிக்கப்படாது. அருட்கருவிகளைப் பெறுபவர்களின் ஆயத்தத்துக்குத் தகுந்தபடி அதிகமான பலனைப் பயக்குவதினால், அவைகளால் வரும் நன்மைகளை ஏராளமாய் அடையும்படி நல்ல ஆயத்தமாயிருக்க வேண்டியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக