Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 1 ஏப்ரல், 2021

அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics


பல்லவி 


அன்னையே எங்கள் செல்வதாடு 

அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய 

விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே 

வேண்டி மன்றாடிடாய் 

வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே


சரணம் 


மானிட தேவன் இவ்வுலோகத்தில்

 வந்தித்தனை நாளாயிற்றே 

ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ 

இன்னும் விடாமற் போயிற்றே 


தன்னை உருவாக்கிய தாதாவை 

சற்றும் தேடாமல் விட்டதே 

கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே 

எம் நாடு நம்பிக் கெட்டதே ‘


சூரியன் சந்திரன் முதலான 

சோதிகளைப் பணிந்ததே வீரர் 

அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து 

தொழத் துணிந்ததே


 கண்ணிலே கண்ட தெல்லாம் 

சேவித்து கர்த்தனையே மறந்ததே 

எண்ணியிந் நாட்டையே உன் 

நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக