Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 31 ஜனவரி, 2022

பத்து சர்வேசுரனுடைய கற்கனைகள் - Ten Commandment's in Tamil

சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?
பத்து.

 பத்தும் சொல்லு.
சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து!

1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக

2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக

3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக

4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக

6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக

7. களவு செய்யாதிருப்பாயாக

8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக

10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;

1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

வியாழன், 27 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 35

புதிய அதிபரை தேர்ந்தெடுத்தல் 

அர்ச். சாமிநாதர், பொலோஞா நகருக்குச் சென்றார். இங்கு தான் இந்த வருடத்தின் பெந்தேகோஸ்தே திருநாளின் போது அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை, அவருடைய சிறிய சகோதரர்களின் பொதுக்கூட்டத்தின் போது சந்தித்திருந்தார். ஆனால், இப்பொழுது, அவர் தமது சபையைப் பற்றிய சிந்தனையில் இருந்தார். அவருடைய சபைசகோதரர்கள், இந்நகரத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தபோதிலும், இன்னும் மடம் ஒன்றும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது. சாமிநாதசபைத் துறவிகள் பொலோஞாவிலுள்ள அர்ச். மஸ்கரெல்லா மரியம்மாளின் தேவாலயத்தில் தலைமையகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், அந்த தேவாலயத்திற்கு மிகச் சொற்ப விசுவாசிகளே வந்தனர். ஏனெனில் அது ஒரு வசதிகுறைவான இடத்தில் இருந்தது. அர்ச். சாமிநாதர், சீடர்களிடம், "நமக்கு இதைவிட பெரிய தேவாலயம் தேவைப்படுகிறது. அருகில் பல்கலைக்கழகம் இருப்பதால், இம்மடத்திற்கு நல்ல பிரசங்கியாரும், இளைஞர்களை சிநேகிப்பவருமான ஒரு அதிபர் தேவைப்படுகிறார்" என்றார்.
இத்திறமைகளைக் கொண்டுள்ள அநேக துறவிகள் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்தில் இருந்தனர். அர்ச். சாமிநாதர், தமது இருதயத்தில் இத்தகைய திறமைகளுடன் திகழும் ஒருவரைக் கண்டறிந்தார். அவர் இம்மடத்திற்கு வந்தால் இதை வெற்றிகரமாக செயல்பட வைப்பார் என்று நினைத்தார். அவர் தான், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான, ஆர்லியன்ஸ் நகரத்தின் சகோ. ரெஜினால்டு. சில மாதங்களுக்கு முன்பாகத்தான் தேவமாதா உத்தரியத்தை இவருக்கு அளித்து, இவருடைய தீராத காய்ச்சலிலிருந்து குணப்படுத்தியிருந்தார்கள். சகோ.ரெஜினால்டு இப்போது தமது பரிசுத்த பூமிக்கான தவயாத்திரை நேர்ச்சையை முடித்துக்கொண்டு, ஜெருசலேமிலிருந்து தமது சபை மடத்தை நோக்கி திரும்பி வருகிறார் என்று அறிந்த அர்ச். சாமிநாதர், " ஆண்டவரே சகோ. ரெஜினால்டுவின் பாதங்களைத் துரிதப்படுத்தியருளும் ! அவர் இங்கு வந்தபிறகே நான் நிம்மதியாக பிரான்சு, ஸ்பெயின் நாடுகளுக்கு செல்லமுடியும்" என்று வேண்டிக் கொண்டார். நவம்பர் மாதம் 1218ம் வருடம் சகோ. ரெஜினால்டு பொலோஞா மடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் இன்னும் அர்ச். சிக்ஸ்துஸ் மடத்திலிருந்த மற்ற நவசந்நியாசிகளுள் ஒரு நவசந்நியாசியாக இருந்தபோதிலும், அர்ச். சாமிநாதரின் விசேஷ கட்டளைக்குப் பணிந்து பொலோஞா மடத்தின் அதிபர் பொறுப்பை கீழ்ப்படிதலினிமித்தம் ஏற்றுக் கொண்டார். 
அவரிடம் பொலோஞாவில் சட்டக்கல்லுாரி இருக்கும் பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிவித்த அர்ச். சாமிநாதர், "ஓ என் மகனே! நன்றாக ஜெபியுங்கள். இதுவரை இல்லாத அளவிற்கு நன்றாக இந்த இளைஞர்களுக்குப் பிரசங்கம் செய்யுங்கள். ஏனெனில் இக்கல்லுாரி மாணவர்கள் நல்ல துறவிகளாக நமது மடங்களில் சேரும் பிரகாசமான எதிர்காலம் இம்மடத்திற்கு இருக்கிறது என்று நம்புகிறேன்" என்று கூறினார். உடனே சகோ. ரெஜனால்டு , " ஆகட்டும் .சுவாமி.'' என்றார். பிறகு, அர்ச்.சாமிநாதர், அங்கிருந்து, புரோயில், துலோஸிலுள்ள தமது சபை மடங்களைச் சந்திக்கச் சென்றார். அங்கிருந்து ஸ்பெயினிலுள்ள செகோவியா நகர் மடத்திற்கு சென்றார். அங்கு யாதொரு மடமும் இதுவரை நிறுவப்படாமல் இருந்தது. தமது சபையின் அதிபர் சுவாமியார் சென்றதும், சகோ.ரெஜனால்டுவின் இருதயம் கனத்தது. இப்பொழுது தான் மற்ற நவசந்நியாசிகளுடன், துறவற ஒழுங்குகளை நன்கு பயிலும்படியாக அர்ச். சாமிநாதருடைய துறவற சபைக்குள் பிரவேசித்திருந்த சகோ. ரெஜினால்டு, தாமே மற்றவர்களுக்கு அதற்குள்ளாக வேத ஒழுங்குகளைப் பற்றி போதிக்கவும், மற்ற துறவிகளால் இதுவரை துவக்கப்படாத ஒரு துறவறமடத்தை நிறுவவும் வேண்டியிருக்கிறதே என்று நினைத்து மிகவும் கலங்கினார். உடனே அவர் தேவாலயத்திற்கு சென்று தேவமாதாவிடம், "ஓ பரிசுத்த தேவமாதாவே! நான் இத்தனைக் காரியங்களையும் எவ்வாறு நிறைவேற்றுவேன்? இளைஞர்களை எப்படி உமது திவ்ய குமாரனிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்? அவர்களை எவ்வாறு இந்த சிற்றாலயத்திற்குக் கொண்டு வந்து நான் பிரசங்கிப்பதைக் கேட்கச் செய்வேன்?' என்று கலக்கத்துடன் மன்றாடினார்.

தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்

 தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்



“அவர் ஊமையாயிருந்த ஒரு பசாசைத் துரத்தினார்”(லூக்.11:14). பசாசினால் நரகத்திற்குக் கூட்டிச்செல்லப்படும் பாவிகள் கண்கள் திறந்தபடியே நரகத்தில் விழுவதில்லை. நரகத்தில் விழுவதற்குமுன்பாக, பாவிகளுடைய சொந்தப் பாவங்களின் திமையினாலேயே பசாசு அவர்களைக் குருடாக்குகிறது. “ஏனெனில் அவர்கள் கெட்ட எண்ணமே அவர்களைக் குருடாக்கினது” (ஞான 2:21). அது அவ்வாறாக அவர்களை நித்தியக் கேட்டிற்கு இழுத்துச் செல்கின்றது. நாம் பாவத்தில் விழுவதற்கு முன்னால், நாம் செய்யும் திமையினால் எல்லையில்லா சிநேக தேவனான சர்வேசுரனை அவமதிக்கிறோம், ஆண்டவரை நோகச்செய்கிறோம் என்றும் அதனால் நம்மேல் அழிவைக் கொண்டு வருகிறோம் என்றும் கண்டுணராதபடிக்கு நம்மைக் குருடராக்க பசாசு திவரித்து உழைக்கின்றது. பாவத்தில் விழுந்தபிறகு வெட்கத்தினால் நமது பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மை ஊமையாக்கும் முயற்சியில் பசாசு ஈடுபடுகிறது.; இவ்வாறு தேவகற்பனையை மிறி பாவத்தில் விழுந்தபிறகு அப்பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் மறைத்தல் என்னும் இன்னும் அதிக பயங்கரத்துக்குரிய
தேவநிந்தையான பாவத்தைக் கட்டிக்கொள்ள வைக்கிறது. இவ்வாறு இரட்டை சங்கிலிகளால் நம்மை பசாசு நரகத்திற்கு இட்டுச்செல்கிறது.
 “ஆண்டவரே என் வாயைக் காவல் படுத்தி, என் உதடுகளைச் சிறைப்படுத்தியருளும்” (சங்.140:3) என்ற தாவிதரசரின் வார்த்தைகளைப் பற்றி விவரிக்கையில் அர்ச். அகுஸ்தினார், “நமது வாயானது தேவதூஷணமாகவோ, அவதூறாகவோ விணாகவோ எதையும் பேசாதபடிக்கு ஒரு கதவினால் அடைக்கப்படவேண்டும். நாம் செய்த பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில்
வெளிப்படுத்துவதற்கு மட்டும் அது திறக்கப்பட வேண்டும். அந்தக் கதவு அழிவதற்கல்ல, ஆனால் திமைகளைத் தடுப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றார். சர்வேசுரனுக்கு எதிராக பேசுவதற்கான சோதனை வரும்போதோ அல்லது பிறர்சிநேகத்திற்கு எதிரான வார்த்தைகளைக் கடும்கோபத்துடன் பேசுவதற்கு சோதனை ஏற்படும்போதோ மௌனத்தை அனுசரிப்பது ஒரு புண்ணியக் கிரியையாகும். ஆனால் பாவசங்கீர்த்தனத்தில் பாவங்களை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பவன் தன் ஆத்துமத்தையே அழிக்கக் கூடிய மாபெரும் தேவ துரோகத்தைக் கட்டிக் கொள்கிறான்.
அர்ச்.அந்தோனினுஸ் பின் வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்: ஒருசமயம் ஒரு அர்ச்சிஷ்டவர், பாவசங்கீர்த்தனம் செய்ய வந்த ஒரு பாவியின் அருகில் பசாசு நிற்பதைக் கண்டார். “அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று அவர் அதை அதட்டினார். அதற்கு அவரிடம், பசாசு, “இவர்கள் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் சமயத்தில் இவர்களிடத்திலிருந்து வெட்கத்தை எடுத்திருந்தேன். பாவசங்கீர்த்தனம் செய்ய வரும் இவர்களிடம், தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படுத்தாதபடிக்கு பாவசங்கீர்த்தனம் செய்வதே அவர்களுக்கு மிக பயங்கரமானதாகும்படிக்கு அந்த வெட்கத்தை; அவர்களிடம் மிண்டும ஏற்படுத்தவே இப்பொழுது இங்கிருக்கிறேன்” என்றது. 
“என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து நாறிப்போயின” (சங். 37:5) எவ்வாறு தொழுநோயினால் வரும் புண்கள் மனித சாPரத்தையேத் தின்று அழித்துக் கொல்கிறதோ, அதே போல் பாவசங்கீர்த்தனத்தில் மறைக்கும் பாவங்கள் இரணப்படுத்தும் புண்களாக மாறி ஞானஜீவியத்தையேக் கொன்று விடும் தொழுநோய்ப் புண்களாகிவிடும். அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், “நாம் பாவத்தினின்று விலகி இருக்கும்படிக்கு, சர்வேசுரன் பாவத்தை வெட்கத்துக்குரிய ஒரு செயலாக்கினார். மேலும் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் போது, நம்மை மன்னிப்பதாக சர்வேசுரன் வாக்களித்திருப்பதன் மூலம் நாம் பாவசங்கீர்த்தனத்தின் மேல் முழு நம்பிக்கைக் கொள்ளச் செய்கின்றார். ஆனால் இதற்கு நேர்மாறாக, பசாசு, அளவற்ற இரக்கமுள்ள ஆண்டவா; நம்மை எப்பொழுதும் மன்னிக்கிறார் என்று கூறி நம்மை பாவம் செய்யத் தூண்டுகிறது. நாம் பாவத்தைக் கட்டிக்கொண்ட பிறகு, பாவசங்கீர்த்தனத்தில் அதை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மிடம் வெட்கத்தைத் தூண்டுகிறது” என்று பிரசங்கிக்கின்றார்.எனவே பிரியமானவர்களே! மகத்துவமிக்கவரும் மகா நன்மையானவருமான நம் நேச இரட்சகரை நோகப்படுத்துகிறோம் என்று நீங்கள் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் போது வெட்கப்படவேண்டும். ஆனால், நிங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை பாவசஙகீர்த்தனத்தில் வெளிப்படுத்து வதற்கு வெட்கப்படுவது
காரணமற்ற மூடச்செயலும் தேவதுரோகமுமாகும். அர்ச்.மரியமதலேனம்மாள் எல்லாருக்கும் முன்பாக நமதாண்டவரின் திருப்பாதங்களில் அமர்ந்து தான் ஒரு பெரும்பாவி என்று அறிவிப்பதற்கும், பலவருடங்கள் துர்மாதரிகையான பாவ ஜீவியத்தில் இருந்த அர்ச்.எகிப்து மரியம்மாள் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கும் வெட்கப்படவில்லையே!; அதேபோல், தன் பாவங்களுக்காக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ததுமல்லாமல், உலகம் முழுவதும் அறியும்படியாக தனது பாவங்களை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியட்ட அர்ச்.அகுஸ்தினார் திருச்சபையின் வேதபாரகராக திகழ்கிறார் என்பதை அறிவோம். இவர்களெல்லாரும் நல்ல பாவசங்கிர்த்தனத்தினால் மட்டுமே பெரும் அர்ச்சிஷ்டதனத்தை அடைந்தார்கள். உலக அரசுகளின் நிதிமன்றங்களில் குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்வானேயாகில் அவனுடைய குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கிறது. ஆனால் நமது நேச இரட்சகரான திவ்ய சேசுநாதர்சுவாமியின் நிதிமன்றத்திலோ தனது பாவங்களை ஏற்று மனஸ்தாபப்படும் ஒரு பாவிக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் அவனுக்கு நித்திய மகிமைக்கான கிரீடத்தையும் அளிக்கிறது. “பாவசங்கீர்த்தனம் செய்த ஒவ்வொரு பாவிக்கும் ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது” என்று அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர் கூறுவார். வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவன் இறந்துவிடாதபடிக்கு மருத்துவரிடம் செல்வது போல, உங்களுடைய ஆத்துமத்தை அழித்துக் கொண்டிருக்கும் அரிக்கும் புண்களான பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டாம். ஏனெனில் அவற்றால் நிங்கள் நித்தியக் கேட்டிற்கு உள்ளாவிர்கள். “உன் உயிரிழப்பதானாலும் உண்மையைச் சொல்ல நாணாதே” (சர்வ 4:24) “ஐயோ இந்தப்பாவத்தைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாயிருக்கிறது” என்று இப்பொழுது கூறுகிறாய். ஆனால் இந்த வெட்கத்தை இப்பொழுது வெற்றிகொள். அப்போது நீ நித்தியத்திற்குமாகக் காப்பற்றப்படுவாய். “ஏனெனில் பாவத்தை ஒரு வெட்கம் கொண்டுவருவது போல், இன்னொரு வெட்கம் மகிமையையும் தேவ வரப்ரசாதத்தைக் கொண்டு வருகிறது” ( iடி.இ4:25). வெட்கம் இருவகைப்படும். 
முதல்வகையான வெட்கம் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த வெட்கமே, பாவசங்கிர்த்தனத்தில் பாவத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது. இரண்டாவது வகையான வெட்கம், பாவசங்கீர்த்தனத்தின் போது கிறிஸ்துவர்களிடத்தில், “இனி பாவம் செய்யமாட்டேன்”;என்ற உத்தமமான பிரதிக்னையை ஏற்படுத்துகிறது. இந்த வெட்கமே, அவனுக்கு இவ்வுலகில் தேவவரப்ரசாதத்தையும் மோட்சத்தில் நித்திய மகிமையையும் பெற்றுத் தருகிறது.

திங்கள், 24 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 34

 துஷ்ட பெண் மனந்திரும்புதல்

ஒரு நாள் அர்ச்.சாமிநாதர் ஜான், ஆல்பர்ட் என்ற இரு நவசந்நியாசிகள் மிக வருத்தத்துடன் மடத்திற்கு திரும்பி வருவதைக் கவனித்து அவர்களிடம் வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள், "சுவாமி! நாங்கள் இன்று மதிய உணவை பிச்சை எடுப்பதற்காக சென்றோம். ஆனால் ஒரு விதவையிடமிருந்து சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கிடைத்தது. அதைக் கொண்டு வந்தபோது, அர்ச். அனஸ்தாசியா தேவாலயத்தினருகில் ஒரு பிச்சைக்காரன், மிகுந்த பசியால் வாடிக்கொண்டிருந்தான். அவன் எங்களுடைய கையில் இருந்த ரொட்டியை, ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் அந்த ரொட்டியைக் கொடுக்கும்படி கேட்டான். நாங்களும் தேவசிநேகத்தை முன்னிட்டு, அவனிடம் அந்த ரொட்டியைக் கொடுத்துவிட்டோம் ஆனால் நமது மடத்தின் மதிய உணவிற்கு இப்பொழுது என்ன செய்வோம்?" என்றனர்.

அதைக்கேட்ட சாமிநாதர், அவ்விரு சகோதரர்களுடைய தயாள குணத்திற்காக, அவர்களை பாராட்டினார். ”இதுவரை பராமரித்து வந்த கர்த்தர், இன்றும் நமது மடத்திற்கு உணவளிப்பார்” என்று அறிவுறுத்தினார்' தேவாலயத்திற்கு சென்று ஜெபித்துவரும்படியும், ஜெபம் முடிந்ததும் மதிய உணவிற்கான மணியை அடிக்கும்படியும் அவர்களிடம் கூறினார். அவ்விருவரும் அர்ச். சாமிநாதர் கூறியபடி உடனே கீழ்ப்படிந்து, கோவிலுக்கு சென்று ஜெபித்தனர். மதிய ஜெபம் முடிந்ததும், வெளியே வந்து உணவிற்கான மணி அடித்தனர். உடனே, காலியாக இருந்த உணவறை மேஜைகள் முன்பாக, ஒவ்வொருவராக அர்ச். சாமிநாதருடைய சீடர்கள் அனைவரும் கூடிவந்து, மதிய உணவுக்கு முன் ஜெபத்தை ஜெபித்தனர். என்ன ஆச்சரியம்! அவர்களுக்கு முன்பாக வெண்ணுடை தரித்த வசீகரமான இரு வாலிபர்கள் சாப்பாட்டறைக்குள் வந்தனர். ரொட்டித் துண்டுகள் நிறைந்த லினன் துணியிலான பைகள், அவர்களுடைய தோளுக்கு முன்னும் பின்னும் தொங்கிக் கொண்டிருந்தன. உடனே துறவிகள், ”இதோ சம்மனசுகள், மறுபடியும் நமக்கு உணவு கொண்டு வந்துள்ளனர்” என்று ஆச்சரியத்துடன் தங்களுடைய மனதுக்குள் நினைத்தனர்.

இம்முறை சகோதரர்களுக்கு, அவர்கள் முதலில் உணவை பரிமாறினர். அதன்பிறகு, நவசந்நியாசிகள், இளம் சந்நியாசிகள், மூத்த சந்நியாசிகள் என்று வரிசைக்கிரமமாக உணவைப் பரிமாறினர். கடைசியாக, அர்ச். சாமிநாதரின் மேஜைமுன்பாக வந்து, அவ்விரு இளைஞர்களும், தங்கள் பையில் இருந்த இறுதி ரொட்டித் துண்டை , அவரிடம் வைத்து விட்டு மறைந்துவிட்டனர். நீண்ட நேரம் இப்புதுமையால் பிரமிப்படைந்திருந்த சந்நியாசிகள் மௌனமாக இருந்தனர். அர்ச். சாமிநாதர், தன் சீடர்களை நோக்கி, ”சர்வேசுரன் நமக்கு அனுப்பிய உணவை உண்போம்" என்று கூறினார். அந்த ரொட்டியுடன் அவர்களுக்கு அன்று திராட்சை இரசமும் பரிமாறப்பட்டிருந்தது. அது முதல் தரமான இரசமாக அதிமிக சுவையுடன் இருந்தது. அவர்கள் உண்டு முடித்த பிறகும், ரொட்டியின் அளவும் திராட்சை இரசத்தின் அளவும் குறையாமல் இருந்த, மற்றொரு அதிசயமான புதுமையைக் கண்டு சந்நியாசிகள் இன்னும் வியப்பில் ஆழ்ந்தனர். இதற்காக துறவிகள் அனைவரும் ”சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக" என்று ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இப்புதுமை அடுத்த இரு நாட்களும் தொடர்ந்து நீடித்தது. அவர்கள் சாப்பிட்ட பிறகும், ரொட்டியும் திராட்சை இரசமும் குறையாமல், சாப்பிடுவதற்கு முன் இருந்த அதே அளவு, இருந்தது. அதனால் அவ்விரு நாட்களும், துறவிகள் உணவை யாசிப்பதற்காக, வெளியே செல்லவில்லை . இதைக் கண்ட அர்ச்.சாமிநாதர், பரிசுத்த தரித்திரத்தை , தன் சீடர்கள் மறவாமல் கடைபிடிக்கும்படிக்கு, தினமும் சாப்பிட்டபிறகும் குறையாமல், வளர்ந்து வந்த உணவை, வெளியே எடுத்துச் சென்று, மற்ற ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், கொடுத்துவிடும்படி கூறினார்.

அர்ச்.சாமிநாதர், சீடர்களிடம், "நாம் அனைவரும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டோம். நமது பராமரிப்பிற்காக ஆண்டவரை மட்டுமே நம்பியதற்காகவும், நமது இரு சகோதரர்கள் ஒரு பிச்சைக்காரருக்கு உணவை மறுக்காமல் கொடுத்ததற்காகவும், திவ்யகர்த்தர், நமக்கு உணவு கொடுத்து பராமரித்தார்" என்று அறிவுறுத்தினார்.

இந்நாள் முதல் கொண்டு, அர்ச். சாமிநாதரின் சபைமடங்களில், துறவற சகோதரர்களுக்கு முதலாகவும், அதன்பிறகு நவசந்நியாசிகள், இளந்துறவிகள், மூத்த துறவிகள் என்ற வரிசையில் எல்லா துறவிகளுக்கும், இறுதியாக சபை அதிபர்சுவாமியாருக்குமாக உணவு பரிமாறப்பட வேண்டும், என்ற சபை ஒழுங்கை ஏற்படுத்தினார். இந்த சபைவிதிமுறை, மற்றெல்லா துறவறமடங்களிலும் கடைபிடித்துவந்த ஒழுங்குமுறைக்கு , முற்றிலும் நேர்மாறாக இருந்தபோதிலும், சம்மனசுகள் கொண்டு வந்த இந்த ஒழுங்குமுறையை , சம்மனசுகள் நினைவாக, எல்லா சாமிநாதர் சபை மடங்களிலும், இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் உத்தமமான பிறர்சிநேகத்தை, பிச்சைக்காரர்கள் மட்டிலும் அனுசரிக்கும்படியான , ஒரு சபைவிதியையும் ஏற்படுத்தினார்.

ஒருநாள் பதிதர்களின் தந்திரசூழ்ச்சியினால், ஒரு அசுத்த பெண் அர்ச். சாமிநாதரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வந்தாள். பாவசங்கீர்த்தனத்தில், தனக்கு இருக்கும் அசுத்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கு, ஏற்ற புத்திமதி கூறவேண்டுமென்று கேட்டாள். பிறகு, அர்ச்சிஷ்டவரை தன் பக்கம் கவர்ந்திழுக்கப் பார்த்தாள். இது பசாசின் தந்திரம் என்று அறிந்த அவர், உடனே, அவளிடம், அவளுக்கிருந்த பாவநாட்டங்களை அகற்றுவதற்கான அறிவுரையை கொடுப்பதற்காக, அன்று மாலை, ஒரு இடத்திற்கு வரும்படி கூறினார். அவளும் அதே இடத்திற்கு, அதே நேரத்திற்கு சென்றாள். அங்கு இரண்டு பெரிய புதர்களில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய பாவநாட்டங்களுக்குப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அர்ச். சாமிநாதர், அந்நெருப்பில் நன்றாக தமது சரீரத்தை புரட்டி எடுத்தார். பிறகு, அவ்விரு பெரிய நெருப்புகளுக்கு நடுவே இருந்துகொண்டு, அர்ச். சாமிநாதர் அவளை நோக்கி இப்பொழுது இங்கு வா. உன் பாவத்திற்கு ஏற்ற இடம் இதுவே என்றார். கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அப்பயங்கரமான நெருப்பைக்கண்டதும், திகிலும் வெட்கமுமடைந்த அந்த துஷ்ட பெண் மனந்திரும்பியவளாக, அங்கிருந்து அகன்று போனாள். நெருப்பினால் யாதொரு பாதிப்புமின்றி, சர்வேசுரனுடைய ஊழியரான அர்ச். சாமிநாதர் அங்கிருந்து வெளியேறி தமது மடத்துக்கு சென்றார்.


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 8

 மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை


உக்ரேன் நாட்டில், சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி: மிக்கேல் எர்லாவ் என்ற இளங்குருவானவர், குருப்பட்டம் பெற்றதும், அகதிகளின் முகா மிற்கு விசாரணைக் குருவாக நியமிக்கப்பட்டார். தூர நாடுகளுக்குச் சென்று, வேத போதகத் தில் ஈடுபட்டு, அஞ்ஞானிகளுக்கு ஆண்டவரைப் பற்றி சுவிசேஷத்தைப்பிரசங்கிக்க வேண் டும் என்பதே, இளங்குருவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இளம் வயதில், அவர் மிக வும் துன்பத்திற்கு ஆளானவர். அவருடைய வாழ்வு துயர் நிறைந்த வாழ்வு எனலாம். அவர், ஆறு வயது, சிறுவனாக இருந்தபோது, பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டனர். கத்தோ லிக்க வேதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே, அவர்கள் கொல்லப்பட்டனர்; அதாவது, வேத சாட்சிகளாகக் கொல்லப்பட்டு, தங்கள் உயிரை நேச ஆண்டவருக்காகக் கொடுத்த னர். அவருடைய அக்காள், திடீரென்று மாயமாக மறைந்தாள். அவள் எங்கே சென்றாள், என்பது பற்றிய செய்தி  ஒன்றும்கிடைக்கவில்லை. குடும்பத்தின் நண்பர் ஒருவர் மிக்கேலை, பி ரான்சு நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். 

இரண்டாவது உலகப்போரின் போது, மிக்கேல் கைது செய்யப்பட்டார். சிறையில் மிகுந்த அவதிப்பட்டார். போருக்குப்பின் விடுதலையானதும், குரு மடத்தில் சேர்ந்து, மிக்கேல் குருப்பட்டம் பெற்று, குருவானார். அவருடைய அதிபர் சுவாமியார், ஒருநாள், அவரிடம், அகதிகள் முகாமிற்குப் போங்கள். அங்கு இருக்கும் அகதிகளின் அவலமான வாழ்வை நீங்கள் அறிவீர்கள். சர்வேசுரன் உங்களுக்கென்று, அங்கு ஏதாவது வேலை வைத்திருப்பார். ஆண்ட வர் பெயரால் போவீராக! என்று கூறி, சங். மிக்கேல் சுவாமியாரை, அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். அங்கே செல்வதற்கு, முதலில் விருப்பமில்லாமல் இருந்தாலும், கீழ்ப் படிதலின் பேரில் உடனே, மிக்கேல் சுவாமியார், அங்கு சென்றார்.

முகாமிற்கு விசாரணைக் குருவாக சென்ற சில நாட்களுக்குள்ளேயே, மிக்கேல் சுவாமி யாரை அங்கிருந்த எல்லாரும் விரும்பினர். காலை முதல் மாலை வரை, அவர்களுக்காகவே, இளங்குருவானவர் உழைத்தார். ஒரு பெண் மாத்திரம் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. அவள் பெயர் நூதனமாக இருந்தது; எதிரில் குரு வந்தால் ஒளிந்து கொள்வாள். அவளுக்கு திடீரென்று இருதய நோய் வந்தது. மரண அவஸ்தைப் பட்டாள். உதவி உதவி என்று கதறி னாள். ஒருவர் குருவை, உதவிக்கு அழைத்தார். மருத்துவரை அழைத்து வரும்படி அவரை அனுப்பி விட்டு, மிக்கேல் சுவாமியார் மட்டும், நோயாளியான அப்பெண் இருந்த அறைக் குள் நுழைந்தார். உடனே, அப்பெண், நீர் யார்? உம்மை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். எங்கு பார்த்தேன் என்று சரியாக நினைவில்லை, என்று கோபத்துடன் சப்தமாகக் கூறினாள். அதற்கு, இளங்குரு , மிக சாந்தமான குரலில், நான் ஒரு கத்தோலிக்கக்குருவானவர். உங்களைச் சந்தித்துப் பேசியதில்லை, என்று கூறினார். அதற்கு, அவள் மிகுந்த கோபாவேசத்துடன்," நான் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டவள்" என்று திரும்பத் திரும்ப உரத்தக் குரலில் அலறினாள். அதற்கு இன்னும் அதிக பொறுமையுடனும் கனிவுடனும், குருவானவர், அவளிடம், அம் மா! தயவு செய்து, நீங்கள் அப்படி நினைக்க வேண்டாம். பாவசங்கீர்த்தனம் செய்யுங்கள், என்று கூறினார். உடனே, அவள் அழுதாள்; நீர் நிரம்பிய கண்களுடன், எனக்கு மன்னிப்புக் கிடையாது, என்று கூறினாள். பாவியின் சாவை சர்வேசுரன் விரும்புவதில்லை. பாவி மனந்தி ரும்ப வேண்டும் என்று தான் , அளவில்லா இரக்கமும் சிநேகமும் உள்ள சர்வேசுரன் ஆசிக் கின்றார். மன்னிக்க முடியாத பாவமே கிடையாது. சர்வேசுரனுடைய இரக்கம் எல்லை யற்றது, என்று திரும்ப திரும்ப வலியுறுத்திக்கூறி, அவளுக்கு குருவானவர் நம்பிக்கையூட்டி னார்.

அந்த பெண், கடவுளா? அவர், ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால், மனிதன் மன்னிக்க மாட்டான். மோட்சத்தில் கூட மன்னிக்க மாட்டான். மனிதர்களை, மோட்சத்தில் இருப்ப வர்களை, எப்பொழுதாவது நான் சந்தித்தால், அவர்கள் என்னை சபிப்பார்கள், என்று அழுது கொண்டே உரத்த சத்தமாய்க் கூறினாள். குருவானவர், அதற்கு, அவளிடம், மோட்சத்தில் யாரும் சபிப்பதில்லை. அங்கிருக்கும் எல்லோரும் அர்ச்சிஷ்டவர்கள். அவர்கள் எல்லோரும், பாவிகள் மனந்திரும்பி மோட்சத்தை அடைய வேண்டும் என்றே, எப்போதும் சர்வேசுர னின் பரிசுத்த சந்நிதானத்தில், இடைவிடாமல் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர், என்று மொழிந்தார். அதைக் கேட்டதும், அப்பெண், அவநம்பிக்கையுடன், தலையசைத்து, நீங்கள் என்னை அறியாததால், இப்படிக் கூறுகிறீர்கள். இப்படி உங்களுடன் பேசுவதற்கு, நான் என்னையே மிகவும் வலுவந்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த வலுவந்தத்திற்கான முயற்சி என் சாவுக்கேக் காரணமாயிருக்கலாம். பரவாயில்லை. எனக்கு அம்மா, அப்பா, குடும் பத்தினர் யாரும் இல்லை. என் வீட்டார் அனைவரையும் உலகப்போர் எடுத்துக் கொண்டது; அந்த போர் அவர்களை, என்னிடமிருந்து பிரித்து விட்டது.

நான் சிறுமியாக இருந்தபோது, நான் படித்த பள்ளிக் கூடத்தில், என் குடும்பத்தை முதலாய் வெறுக்க எனக்குக் கற்பிக்கப்பட்டது... எனக்கு 14 வயது நடக்கும்போது, கத்தோ லிக்க வேதத்தை அனுசரித்த என் பெற்றோரைக் காட்டிக் கொடுக்கும்படி நான் வற்புறுத்தப் பட்டேன். என் பெற்றோரைக் கைது செய்தனர். மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் சத்திய வேதத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனவே, நான் நரகத்திற்குப் போவது உறுதி. சில காலமாக, எதிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. என் தம்பி ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, பிரான்சு நாட்டிற்குச் சென்றான். அங்கு செல்வதற்கு, எனக்கு, அப்போது, அனுமதி கிடைக்கவில்லை, என்று சுருக்கமாக தன் ஜீவியத்தைப் பற்றி விவரித்தாள். இதைக் கேட்டதும், மிக்கேல் சுவாமியாரின் உடல் நடுங்கியது. அந்தப் பெண் சிறுவயதில் காணாமல் போன தன் அக்காளாக இருக்க முடியுமா, என்று சிந்தித்தார். பின் நோயாளிப் பெண்ணின் அருகில் சென்று, அன்னா! அன்னா! என்று மெதுவாக அழைத்தார். உடனே, நோயாளி, தன் கண்களை, அகலத் திறந்தாள். கலக்கமடைந்தவளாக, அவள், குருவிடம், என்ன சொன்னீர்கள்? 25 வருடங்களாக யாரும் அந்தப் பெயரைச் சொல்லி என்னை அழைத்த தில்லையே , என்று கூறினாள். ஆம். அவள், மிக்கேல் சுவாமியாரின் காணாம அன்னாவே தான். தனது அதிபர் சுவாமியார், அகதிகள் முகாமில் சர்வேசுரன், உங்களுக் கென்று ஏதாவது அலுவல் வைத்திருப்பார் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்; சர்வேசுரனி ன் அளவில்லா இரக்கமும் சிநேகமுமுள்ள பராமரிப்பிற்காக, மிக்கேல் சுவாமியார், நன்றி கூறினார். உடனே, நோயாளியின் கரங்களை அன்புடன் பற்றி, என் அன்புள்ள அக்கா அன்னா! என்றார். அதற்கு அன்னா, என் தம்பி, மிக்கேலா, இது? என் பாவ அக்கிரமத்தை, என் தம்பி யிடமா வெளியிட்டேன்? என்று நடுக்கத்துடன் கூறினாள். அதற்கு, அவர், அவளிடம், ஆம். என் பிரியமுள்ள அக்கா! உன் பாவ அக்கிரமங்களுக்காக மனஸ்தாபப் படு.சர்வேசுர னுடைய அளவில்லா சிநேகத்தையும் இரக்கத்தையும் பற்றி சிறிது நேரம் தியானி, என்று கூறியபடியே, சுவாமியார், அவளிடம் பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்து, அதை பக்தி யுடன் முத்தி செய்யும்படிச் செய்தார்.

உடனே, அன்னா, உத்தம மனஸ்தாப மிகுதியால் தேம்பி தேம்பி அழுதுகொண்டே, அதுவரை கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்காகவும், தேவ நம்பிக்கையில்லாமல் இருந்த தற்காகவும், நேச ஆண்டரிடம் மன்னிப்புக் கேட்டாள்; தன் தம்பி மிக்கேல் சுவாமியாரிட மே, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தாள். மிக்கேல் சுவாமியார், அவளுக்கு பாவபொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார்:சர்வேசுரன் பெயரால், உனக்கு பாவ மன்னிப்பிற்கான ஆசீர்வாதத் தை அளிக்கிறேன். நம் அம்மா அப்பா பெயராலும் நான் உன்னை மன்னிப்பேன், என்று கூறி, தன் அக்காளை, ஆசீர்வதித்தார்.

குருவின் கரத்தை அன்னா நேசமுடன் பற்றிக்கொண்டு, மோட்சத்தை எனக்குத் திறந் து விட்டீர்கள். அம்மா, அப்பாவை சந்தித்ததும், பரலோகத்திற்கு எதிராகவும் உங்களுக்கு எதி ராகவும் நான் பாவம் செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று மனந்திரும்பிய ஊதாரிமகன், தன் நல்ல தந்தையிடம் கூறியதையேக் கூறுவேன், என்று கூறினாள். அவள் தன் கரங்களை மார்பின் மேல் வைத்தாள். குரு, இன்னொரு முறை, தன் அக்காளுக்குப் பாவப்பொறுத்தல் ஆசீர்வாதம் அளித்தார். சற்றுப் பின், அவள் இறந்தாள். அருகில் அவளுடைய ஆத்துமத்தை, சர்வேசுரனிடம் ஒப்படைக்கும்படியாக, மரிப்போருக்கான ஜெபத்தை, மிக்கேல் சுவாமி யார் முழங்காலில் இருந்து அழுதபடியே ஜெபித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகளின் பிடியில் சிக்கி, விசுவாசத்தை இழந்த தனது அக்காள், மனந்திரும்பி சர்வேசுரனிடம் வரும் படி, தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் வேண்டி வந்த தன் ஜெபத்தை, தேவமாதா வும், ஆண்டவரும் கேட்டருளியதற்கு, தன் முழு இருதயத்துடன் நன்றி செலுத்தினார். தன் அக்காள் மனந்திரும்புவதற்காக, ஜெபித்துக் கொண்டிருந்த தம்பியையே குருவானவ ராக்கவும், அக்குருவானவரின் மூலமாகவே, அந்த அக்காளை, தம்முடன் ஒப்புரவாக்கவும் திருவுளம் கொண்ட அளவிலா நன்மையுடையவரான சர்வேசுரனின் பராமரிப்பு, மனித அறிவைக் கடந்த பேரதிசயமல்லவா?


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 7

 உத்தரிக்கிற ஆத்துமங்களின் மாதத்திற்கான தியானம்

அர்ச். சியன்னா பெர்நர்தீனுக்கு அர்ச்சிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்ட சமயத்தில், இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸ் நாட்டின் காசியா என்ற ஊரில், பிளாசியோ மசயி என்ற பதினொரு வயது சிறுவன் இருந்தான். சிறுவனின் பெற்றோர், அர்ச். பெர்நர்தீன் மீது, அதிக பக்தி கொண்டிருந்தனர். சிறுவனின் இருதயத்திலும், அவர் மீது, பக்தியை ஏற்படுத்தினர். ஜெபமாலையின் அப்போஸ்தலராக விளங்கிய அர்ச். பெர்நர்தீனுடைய பிரிய சீடர்களாகும் படிக்கு, சிறுவனும், அவன் பெற்றோரும் தினமும் பக்தியுடன், குடும்ப ஜெபமாலை ஜெபித்து வந்தனர். சிறுவனும், அர்ச்சிஷ்டவர் மீது, பக்தியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம், சிறுவ னுக்கு கடின வியாதி ஏற்பட்டது; அவனது பெற்றோர், துயரத்தில் ஆழ்ந்தவர்களாக, பக்தியு டன் ஜெபமாலை ஜெபித்தபடியே, அர்ச். பெர்நர்தீனிடம் தங்களது நேச மகன் சுகமடைவ தற்காக வேண்டிக் கொண்டனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, சிறுவன் இறந்து போனான். அப்போது, தங்கள் நேசமகனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, இன்னும் அதிக பக்தியுடன் அர்ச்சிஷ்டவரிடம், தொடர்ந்து வேண்டிக்கொண்டேயிருந்தனர்.

இறந்த சிறுவனின் உடலை, அடக்கம் செய்வதற்காக, கல்லறைக்கு எடுத்துச் சென்ற னர். திடீரென்று, வழியிலேயே , சிறுவன், ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்ததைப் போல், எழுந்தான். அர்ச். சியன்னா பெர்நர்தீன், எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கிறார். இறந்த பிறகு நிகழும் காரியங்களைப் பற்றியும், பரலோகத்தில், அவர் காண்பித்த அதிச மக்களுக்கு எடுத்துரைக்கும்படியாகவே, எனக்கு உயிர் திரும்பக் கிடைத்திருக்கிறது. இப் புதுமையைப் பற்றிய செய்தி, நேப்பிள்ஸ் நாடு முழுவதும் பரவியது. ஒரு மாதமாக, சிறு வனைப்பார்ப்பதற்காக தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது. அவன் அவர்களிடம், பின்வருமாறு விவரித்தான் : நான் இறந்ததும், அர்ச். பெர்நர்தீன் என் முன் தோன்றினார். என் கரத்தைப் பிடித்து. பயப் படாதே! நான் உனக்கு, காண்பிக்கப்போகிறவற்றை, கவனத்துடன் நோக்கிப் பார். அப்படி யானால், அவற்றைப் பற்றி, நீ மக்களுக்கு எடுத்துரைப்பாய், என்றார். நரகம், உத்தரிக்கிற ஸ்தலம், லிம்போ , மோட்சம் ஆகிய இடங்களுக்கு, அவர் என்னை அழைத்துச் சென்றார் கத்தில் பயங்கரத்திற்குரிய வேதனையில் ஆத்துமங்கள் மூழ்கி, கூக்குரலிட்டு அலறிக் கொண் டிருப்பதைக் கண்டேன். ஆங்காரிகளும், பேராசை பிடித்தவர்களும், கற்பை இழந்தவர்க ளும், நாஸ்திகர்களும், மற்ற மனந்திரும்பாத கன்னெஞ்சரான பாவிகளும் வெவ்வேறு வகை யான வேதனைகளை, நரகத்தில் அனுபவிப்பதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த சிலரை, அங் குப் பார்த்தேன். அப்போது இறந்துபோயிருந்த புற்சரெல்லி, வ்ராஸ்கா என்னும் இருவரும் நரகத்தில் இருந்தனர். தவறானதும் பாவகரமுமான வழியில் சம்பாதித்தப் பொருட்களை வைத்திருந்ததால், வ்ராஸ்கா, நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டிருந்தான். வ்ராஸ்காவின் மகன், இதைப் பற்றிக் கேட்டவுடன், இடி விழுந்தது போல அதிர்ச்சியடைந்தார். சிறுவன், பிளாசி யோ, கூறியது முற்றிலும் உண்மை என்பது, அவருக்குத் தெரியும். உடனே, நரகத்திற்குத் தப்பி, மோட்சத்தை அடைவதற்காக, தன் தகப்பன் சம்பாதித்திருந்த சகல பொருட்களை யும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு துறவற மடத்தில் சேர்ந்து சந்நியாசியானார்.

பின்வருமாறு சிறுவன் மேலும் தொடர்ந்து விவரித்தான். பின், நான் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அங்கே, கட்டிக்கொண்டவெவ்வேறு பாவங் களுக்கேற்ப, ஆத்துமங்கள் பலவிதமான கொடிய உத்தரிப்பு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். எனக்குத் தெரிந்த பலரை, நான் அங்கே பார்த்தேன். தங்கள் வேதனை கள் பற்றி, தம் பெற்றோரிடமும், உறவினரிடமும் தெரிவிக்கும்படி, பலர் என்னிடம் கேட்டுக் கொண்டனர். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலையடைவதற்காக, என்னென்ன ஜெபங்க ளும், திவ்ய பலிபூசைகளும், ஜெபமாலைகளும், தான தர்மங்களும், தபசுமுயற்சிகளும், ஒறுத் தல் உபவாசங்களும் செய்யவேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுக் கூறினர். சிலர் இறந்த தங் கள் உறவினரைப்பற்றி வினவினர்: உம் தந்தை, இன்ன நாளிலிருந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலி ருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மத்தில் செலவழிக்க வேண்டுமென்று, உன் தந் தை, உனக்குக் கூறியிருந்தார். நீயோ, அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை, என்று சிறுவன், ஒருவனிடம் தெரிவித்தான். இன்னொருவனிடம், என் ஆன்ம இளைப்பாற்றிக்காக, இத்தனை திவ்ய பலிபூசைகள் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று, உன் அண்ணன் கேட்டிருந்தார். அவ ருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக, நீ வாக்களித்திருந்தாய். ஆனால், இதுவரை, அதை நீ , நிறைவேற்றவில்லை, என்று சிறுவன். கூறினான்.

மேலும், சிறுவன், மோட்சத்தைப் பற்றிக் கூறினான் : எண்ண முடியாத அணி அணி யான சம்மனசுகள் சேனையினர், மிகுந்த மாட்சிமிக்க பேரொளியுடன் பிரகாசிக்கும் சர்வே சுரனுடைய பத்திராசனத்தைச் சூழ்ந்தபடி, அவர்சந்நிதானத்தின் முன்பாக தாழ்ந்து பணிந்து, எல்லாம் வல்ல அர்ச். தமதிரித்துவசர்வேசுரனை ஆராதித்துக்கொண்டிருந்தனர். சகல அர்ச்சிஷ் டவர்களுக்கும், சம்மனசுகளுக்கும், நித்தியகாலமாக, இடைவிடாமல், சர்வேசுரனை ஆராதித் துக் கொண்டிருப்பதே, மோட்ச பேரின்பமாக இருக்கிறது. சகல அர்ச்சிஷ்டவர்கள், சம்மன சுகளுக்கு மேலாக, மகத்துவமிகுந்த வல்லமையுடனும் மாட்சிமையுடனும், சர்வேசுரனு டைய பத்திராசனத்திற்கு அருகில் வீற்றிருக்கும் தேவமாதாவின் பேரழகு, என் இருதயத் தை மிகவும் வசீகரித்துத் தன் பால் ஈர்த்தது; அங்கேயே தங்கிவிட நான் பெரிதும் ஆசித்தேன், என்று கூறி முடித்தான்.


catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 6

 தேவ பாலன் ஹங்கேரி நாட்டில் நிகழ்த்திய புதுமை 


புடாபெஸ்ட் பங்குகுருவாக இருந்து, பின்னர், மேற்கத்திய நாட்டிற்கு சென்றவரான சங்.நார்பெர்ட் சுவாமியார் நேரில் கண்ட இந்நிகழ்வை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்: 1956ம் வருடம், ஹங்கேரி நாடு, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்த காலம், அது. புடாபெஸ்டில், சிறுமியருக்கான பள்ளிக் கூடம் ஒன்றில், கம்யூனிச வெறி பிடித்த ஓர் ஆசிரியை இருந்தாள். ஜெர்த்ரூத் என்பது அவள் பெயர். அவளும் கத்தோலிக்க வேதத்தை, சிறு வயதில் அனுசரித்திருந்தாலும், கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் கடுமையான சித்திரவதைக்கு உட்பட்டு, சத்திய வேதத்தை மறுதலித்திருந்தாள்; எல்லாவற்றிற்கும் மேலாக, அவளுடைய இருயத்தில் கடவுள் வெறுப்புக் கொள்கையை ஆழமாக பதித்திருந்தனர். ஆகையால், அவள் தன் வகுப்பிலுள்ள மாணவியரின் இருதயங்களிலிருந்து, கத்தோலிக்க விசுவாசத்தை அகற்று வதில் பெரிதும் ஈடுபட்டாள்; கத்தோலிக்க சத்தியங்களை கேலி செய்து நகைப்பாள்; அல்லது, அவர்கள் இருதயங்களில் கம்யூனிச தப்பறைகளை, பதியச் செய்வாள்; இதை, தன் மாபெரும் அலுவலாகக்கருதி, அது, கம்யூனிசத்திற்கு, தான் ஆற்றும் மகத்தான காரியமாக, ஆர்வத்துடன், செய்து வந்தாள். அவள் வகுப்பில், ஆஞ்சலா என்ற ஒரு பக்தியுள்ள சிறுமி இருந்தாள். புத்தி சாலியான அவள் தான், வகுப்பின் மாணவியர் தலைவியாக இருந்தாள். அவள், பங்கு குரு, சங். நார்பெர்ட் சுவாமியாரிடம் சென்று, தினமும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கு, தனக்கு, உத்தரவளிக்க வேண்டும் என்று கேட்டாள்.

அதற்கு, குருவானவர், அப்போது, உன் ஆசிரியை உனக்கு இன்னும் கூடுதல் கஷ்ட மான உபத்திரவங்கள் கொடுப்பாள், என்றார். அதைத் தாங்குவதற்கான ஞானபலத்தை, நிச்சயம் ஆண்டவர் தனக்களிப்பார் என்று, 10 வயது சிறுமி ஆஞ்சலா, வலியுறுத்திக் கூறி, தின மும் திவ்ய நன்மை உட்கொள்வதற்கான அனுமதியை குருவிடமிருந்து பெற்றுக் கொண் டாள். உண்மையாகவே, அந்நாளிலிருந்து, ஆஞ்சலாவிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தைக் கண்ட ஜெர்த்ரூத், மனரீதியான சித்திரவதையால், ஆஞ்சலாவைத் துன்புறுத்தினாள். டிசம்பர் 17ம் தேதியன்று, சிறுமியரிடையே கிறீஸ்துமஸ் திருநாளுக்கான பக்தி பற்றுதல் ஏற்பட்டிருந் தது. இதை உணர்ந்த ஜெர்த்ரூத், திவ்ய குழந்தை சேசுவின் மீது, மாணவியர் கொண்டிருந்த பக்தியை அகற்றுவதற்கு, ஓர் கொடிய தந்திரத்தை பிரயோகிப்பதில் கருத்தாயிருந்தாள்.

ஜெர்த்ரூத், இனிய குரலில், அஞ்ஞான உலகாயுதக் கொள்கைகளை, சிறுமிகளின் இரு தயங்களில் பதியச் செய்வதற்காக, நாம் காணும், அல்லது தொட்டு உணரும் பொருட்கள் மட்டுமே உண்மையில் நிஜமாக இருக்கின்றன; மற்ற எல்லாம் உண்மையில் இல்லாதவை என்று கற்பித்தாள். அதை உணர்த்துவதற்காக, ஆஞ்சலாவை வகுப்பறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, ஆஞ்சலா! உள்ளே வா! என்று அவளை, ஒருமித்த குரலில், எல்லா மாணவிக ளும் அழைக்கும்படிச் செய்தாள். இதில், ஒரு சதி இருக்கிறது என்ற சந்தேகத்துடன், ஆஞ்ச லா, உள்ளே வந்தாள். பிள்ளைகளே! ஆஞ்சலா, நம்மால் தொட்டு உணரப்படுபவளும் காணப்படுவளுமான ஒரு உயிருள்ள சிறுமி! அவளைக் கூப்பிட்டவுடன், அவள் நம் குரலைக் கேட்டாள்; உடனே உள்ளே வந்தாள். ஆனால், உங்கள் கிறீஸ்துமஸ் திருநாளுக்காக நீங்கள் குழந்தை சேசுவைக் கூப்பிட்டால், அவர் உங்கள் குரலைக் கேட்டு வருவாரென்று நீங்கள் நம்புகிறீர்களா? அதெல்லாம் பழைய கால கிறீஸ்துவ மதத்தின் குருட்டு நம்பிக்கைகள், என்று கம்யூனிஸ்டு வாதியான ஆசிரியை, தன் மாணவிகளிடம் அபத்தத்தைக் கற்பித்தாள். அப்போது சிறுமிகளிடையே ஒரு அழுத்தமான மௌனம் நிலவியது. பின்பு மெல்லிய குர லில், சில பிள்ளைகள், மிகுந்த பயத்துடன், ஆம்! நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதை, ஆசிரியைக் கேட்டாள். உடனே, கோபமடைந்த ஜெர்த்ரூத், ஆஞ்சலா! இதற்கு உன் பதில் என்ன? என்று கேட்டாள். இது, ஒரு சூழ்ச்சி என்று இப்போது, ஆஞ்சலாவிற்கு நன்கு புரிந் தது. உடனே, அவள், மிகுந்த பக்தி பற்றுதலுடன், ஆம்! அவர் என் குரலைக் கேட்பார், என்று விசுவசிக்கிறேன்! என்று, உறுதியான தொனியுடன் பதில் கூறினாள். இதைக் கேட்டதும், ஆசிரியை, மிக சப்தமாக பரிகாசமாக சிரித்தபடியே, தன் வகுப்பிலிருக்கும் மாணவிகளைப் பார்த்து, நல்லது! அப்படியானால், நீங்கள் அவரை கூப்பிடுங்கள்! என்று பயங்கரமாக அலறி னாள். வகுப்பிலிருந்த சகல சிறுமிகளும், ஆசிரியையின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் சற்றும் பயப்படாமல், அப்படியே மௌனமாக இருந்தனர். கம்யூனிஸ்டுவாதியின் தப்பறையான உபதேசங்கள், மாணவியரிடையே பயனற்றுப்போனது.

அப்போது, திடீரென்று, மாணவியர் முன்பாக, ஆஞ்சலா பாய்ந்து வந்தாள். அவளு டைய கண்களில் ஒளிவீசியது! தன் சக மாணவியரைப் பார்த்து, அவள், கவனியுங்கள் ! பிள்ளைகளே! நாம் அவரைக் கூப்பிடப்போகிறோம்! ஓ! திவ்ய குழந்தை சேசுவே! வாரும் என்று, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்தபடி, நம்நேச ஆண்டவரை, நம் திவ்ய பாலனை, இங்கு வரவேண்டும் என்று கூவி அழைப்போமாக! என்று உரத்தக் குரலில் கூறினாள். உடனே, வகுப்பிலிருந்த எல்லா சிறுமிகளும், அங்கேயே முழங்காலில் இருந்தபடி, பக்தி பற்றுதலு டன், வாரும்! திவ்ய குழந்தை சேசுவே! ஓ! தேவ பாலனே! வாரும்! என்கிற பாடலைப் பாடத் துவக்கினர். தான் கூறியதற்கு, மாணவியர், இவ்வாறு நடந்து கொள்வார்கள், என்ப தை சற்றும் எதிர்பாராத ஜெர்த்ரூத், இதைக் கண்டு திடுக்கிட்டாள். ஆனால், சிறுமிகள் தொடர்ந்து, மிக ஊக்கத்துடனும், பக்தியுடனும் திவ்ய குழந்தை சேசுவை நோக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய சின்ன தலைவியான ஆஞ்சலாவின் இருதயத் தில் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்கத் துவங்கியது. அவளும் உருக்கமாக, தன் மனதில் மன வல்லய ஜெபங்களுடன் கூட, தேவபாலனிடம் வேண்டிக்கொண்டே இருந்தாள்; அவளின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியதும் , வகுப்பறையின் கதவு, சப்தமில்லாமல் திறந் தது; வகுப்பறைக்கு வெளியே திடீரென்று ஓர் மிகுந்த பிரகாசமுள்ள ஒளி மின்னியது; அம் மாட்சிமிக்க ஒளி மின்னியபடியே, வகுப்பிற்குள் நுழைந்தது. பிறகு, அவ்வொளி, அதிகரித் துக்கொண்டே போனது; பெரிய ஒளியாக, மாபெரும் நெருப்பாக மாறியது; அம்மாபெரும்

பிரகாசமுள்ள நெருப்பின் நடுவில், ஓர் அழகிய பூலோக வடிவிலான கோளம் இன்னும் கூடுதல் தெளிவான ஒளியுடன் தோன்றியது. ஆசிரியையும், மாணவியரும் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அந்த கோளம், தரையில் இறங்கி நின்று திறந்தது; உள்ளிருந்து, மாட்சிமிக்கதும் பேரெழில் மிக்கதும், பல நிறங்களுடன் பிரகாசிப்பதுமான ஓர் அங்கியு டன், திவ்ய குழந்தை அதிலிருந்து தோன்றினார். அவர், சிறுமியரைப் பார்த்துப் புன்னகைத் தார்; அது, அவர்களின் இருதயங்களை ஆழமாக ஊடுருவி, தேவபாலனிடம் ஈர்த்தது. சிறுமி களும் முழு சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் தேவபாலனை நோக்கி புன்முறுவல் செய்தனர். அதன் பின்னர், அந்த கோளம் மறு படியும் மூடிக்கொண்டு, கதவின் வழியாக வெளியே சென்று மறைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆஞ்சலாவும், சக மாணவிகளும், தேவபாலனின் கோளம் சென்ற திசையைப் பார்த்தபடியே, தொடர்ந்து பரவசத்தில் ஆழ்ந் திருந்தனர். வகுப்பு முழுவதும் ஆச்சரியத்தினாலும் பயத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டு, ஓர் மாபெரும் அமைதியுடனிருந்தது. அப்போது, ஆசிரியை, மிகுந்த அச்ச நடுக்கத்துடனும் ஒரு வித மனவியாதியால் பீடிக்கப்பட்டவளாக, அவர் வந்தார்! அவர் வந்தார் ! என்று அலறிக் கொண்டே, வகுப்பை விட்டு வெளியே வராந்தாவில் இறங்கி ஓடினாள்.

சங்.நார்பெர்ட் சுவாமியார், சிறுமிகள் எல்லோரையும், ஒருவர், ஒருவராகத் தனித் தனியாக, அப்போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய சகல காரியங்களையும், வினவினார். எல் லா மாணவிகளும், அந்த நிகழ்வை ஒரே மாதிரியாக விவரித்துக் கூறினர். யாருடைய கூற்றி லும் எந்த முரண்பாடும் இல்லை, என்பதை குருவானவர் நிச்சயப்படுத்தி அறிவிக்கிறார். மன நோயாளிகளுக்கான ஓர் இல்லத்தில், ஜெர்த்ரூத் சிகிச்சை பெற்று வந்தாள். வகுப்பறையில், சிறுமிகளுக்கு முன்பாக, தேவபாலன் அற்புதமாகத் தோன்றிய காட்சி, கடவுள் அற்ற அவ ளுடைய மனதிற்கு, பேரதிர்ச்சியாக இருந்தது; கடவுள் வெறுப்புக் கொள்கையை, ஜெர்த் ரூத்தின் மனதில் கம்யூனிஸ்டு தீவிரவாதிகள் எவ்வளவிற்கு, ஆழமாக பதிய வைத்திருந்தார் களென்றால், கடவுளான தேவபாலன், தன் மாணவியர் மத்தியில் வந்து தோன்றியதை, அவ ளால் ஏற்பதற்கும் நம்புவதற்கும் கூடாமல் போனது. அவள், அவர் வந்தார்! என்று, இடை விடாமல் தொடர்ந்து, கூறிக்கொண்டே இருந்தாள். சின்ன தலைவியான ஆஞ்சலாவின் தலைமையில், சகல மாணவிகளும், தங்களுடைய ஆசிரியையின் மனந்திரும்புதலுக்காகத் தொடர்ந்து வேண்டிக்கொண்டனர். திவ்ய குழந்தை சேசு, அவர்களுடைய மன்றாட்டை நிச்சயம் ஏற்று, ஜெர்த்ரூத்தைத் திருச்சபைக்குள் சேர்த்திருப்பார். இந்த கிறீஸ்துமஸ் திருநாள் சமயத்தில், நம் வீடுகளுக்குள் வந்து நம்மை ஆசீர்வதிக்கும்படியாக, நாமும் தேவபாலனாகிய திவ்ய குழந்தை சேசுவை, பரிசுத்த இருதயத்துடன் வரவேற்போமாக! "


வெள்ளி, 21 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 5

 நம் நேச ஆண்டவருடைய திவ்யபாடுகள் மேல் பக்தி


ஒருசமயம் அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் போர்சியன்குலாவிலுள்ள பரிசுத்த சம்மனசுகளின் இராக்கினியின் தேவாலயத்தினருகே செல்கையில் வாய்விட்டுக் கதறி அழுவதை ஒருவன் கண்டான். உடனே அர்ச்சிஷ்டவரிடம் சென்று, அவர் ஏன் இவ்வளவு துக்கத்துடன் அழுகிறார் என்று வினவினான். அதற்கு அவர், இன்னும் அதிகமாக விம்மி அழுதுகொண்டே, “நம்முடைய நேச ஆண்டவர், மாசற்ற செம்மறிபுருவை போல நமக்காக சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு மரித்தபோது, யூதர்களும் மற்ற அனேக மனிதர்களும் அவருக்கு வருவித்த நிந்தை கஸ்தி நிர்ப்பந்தங்களைக் குறித்து நான் துயரப்பட்டு அழுகிறேன். நம் திவ்ய இரட்சகர் பட்டனுபவித்த இந்த எல்லா பாடுகளுக்கும் காரணமான, நீச மனுஷர்கள்; ஆண்டவருடைய எல்லையில்லா நேசத்தையும், அவர் நமக்காக அனுபவித்த கொடிய உபாதனைகளையும், மறந்து போனதையும் நினைத்து, நான் அழுகிறேன்” என்றார்.  மேலும் “எல்லையில்லா சிநேகமானவர், சிநேகிக்கப்படவில்லையே” என்று கதறிக் கூறிக்கொண்டே சென்றார். 

ஒரு சமயம் காட்டில் அர்ச்.மக்காரியார் நடந்து சென்றபோது, கிழே கிடந்த ஒரு மண்டையோட்டைத் தமது ஊன்றுகோலால் தள்ளினார். அப்போது அது புதுமையாக, அவரிடம், “இங்கே குடியிருந்த அஞ்ஞானியான பூசாரி நான். நானும் இங்கிருந்த அஞ்ஞானிகளும் நரக நெருப்புக்குள்ளே இருக்கிறோம்” என்று பேசியது. உடனேஅதனிடம், “நரகத்திலே அதிக வேதனை அனுபவிப்பவர் யார்?” என்று அர்ச்.மக்காரியார் வினவினார்.அதற்கு அந்த மண்டைஓடு, “நாங்கள் அனுபவிக்கிற வேதனையை விட கெட்டுப்போன கிறிஸ்துவர்கள் அதிக வேதனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குக் கீழே கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மிகுந்த நெருப்பும் அதிக வேதனையும் உண்டாயிருக்கிறது. ஏனென்றால், சேசுநாதர்சுவாமி, மனுஷருக்காக அனுபவித்த பாடுகள் மிது யாதொரு பக்தியுமின்றி, திவ்ய இரட்சகரை விட்டுவிட்டு உலகம், பசாசு, சரீரத்தின் தூண்டுதலின் பேரில் சுயஇச்சைக்கு இடம்கொடுத்து சாவான பாவத்தினால் தேவஇஷ்ட பிரசாதத்தை தங்களிடம் கொன்று போட்டனர்” என்றது.

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 4

 நம் நேச ஆண்டவரின் பாடுபட்ட சுரூபத்தின் மேல் பக்தி


நமதாண்டவர் அர்ச்.ஜெர்த்ரூத்தம்மாளிடம், “நாம் பாடுபட்ட சுரூபத்தை ஒருவன் எத்தனை முறை பக்தியோடு பார்ப்பானோ அத்தனை முறையும் நாம் மிகுந்த சிநேகத்துடன் நம்முடைய அளவி;ல்லாத கருணை பொழியும் திருக்கண்களாலே அவனைப் பார்ப்போம்” என்று திருவுளம்பற்றினார். ஆஸ்திரியா நாட்டில் உயர்குடிப் பெண் சந்தொசால் கத்தரின் மிக்க அழகுடையவளாக இருந்தாள். அதனால் அவளுக்கு மிதமிஞ்சிய அகங்காரமும் இருந்தது. உயர்குடி மக்கள் பலரும் அவளை மணந்து கொள்ள ஆசித்தனர். 
அவளோ, தன்னை மணக்க தகுதியானவர் யாருமில்லை என்று  திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாள். ஒரு நாள் அவள் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தன்னைப் போல் அழகி யாருமில்லை என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அப்போது, அவள் அருகிலிருந்த சேசுநாதர்சுவாமி பாடுபட்ட சுரூபத்தைத் திடீரெனக் கணடாள். அந்தச் சுரூபத்தின் முகம் மிகுந்த துக்கமாயிருக்கிறதைக் கண்டபோது அவளுடைய இருதயத்தில் இருந்த பாவகரமான பற்றுதல்கள் அனைத்தும் புதுமையாக மறைந்ததுமல்லாமல், உத்தமமான மனஸ்தாபமும் தேவசிநேகமும் ஏற்பட்டது. அப்போது அவளிடத்தில் எழுந்த எண்ணமாவது: “எனக்காக நம் நேச ஆண்டவர் இவ்வளவு துக்கமாயிருக்கிறார். அவர் இப்படி இருக்கையில் நான் தகாத சந்தோஷப்படுவேனோ! இந்தத் தகாத சந்தோஷத்தைத் தள்ளிவிட்டு நம் திவ்ய இரட்சகர் பேரில் என் நேசமெல்லாம் வைப்பேன்”. 

உடனே அவள், தன்னை முழுவதும் பரலோக பத்தாவான திவ்ய சேசுநாதர் சுவாமியிடம் அர்ப்பணித்து அவரை முழுவதும் சிநேகித்து வந்தாள். தன் மேல் பிறருக்கு பொல்லாத பற்று உண்டாகாதபடிக்கு ஒரு சந்தியிருந்தும், தன் சரிரத்தை அடித்தும், அடிக்கடி முகத்தை வெயிலில் கருக்கப் பண்ணியும் தன் முகத்தின் வசீகர அழகைக் குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாள். இறுதியாக அர்ச்.தெரசம்மாளின் கார்மேல் சபையில் உட்பட்டாள். அங்கு “சேசுவின் கத்தரீனாள்” என்று தான் அழைக்கப்பட ஆசித்தாள். 
மரணமட்டும் தேவசிநேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து நம் ஆண்டவரின் நேச பத்தினியாக பரிசுத்த கன்னியாஸ்திரியாக வாழ்ந்து வந்தாள். 

புறோவான்ஸ் என்ற நாட்டிலிருந்து ஒரு நல்ல கிறிஸ்துவன், நமதாண்டவர் பாடுபட்ட ஸ்தலங்களைத் தரிசிப்பதற்காக தவயாத்திரையாக பாலஸ்தீனநாட்டிற்கு வந்தான். ஆண்டவர் சஞ்சரித்த ஸ்தலங்களை யெல்லாம் மிகுந்தபக்தியோடு சேவித்துக் கபாலமலைக்குச் சென்றான். வுழியில், “இங்கு சேசுநாதர்சுவாமி முகங்குப்புற விழுந்தார், இங்கு அவர் தமது திவ்யதாயாரைச் சந்தித்தார்” என்று அழுகையோடு தியானித்தபடி சென்றான். மலைமேல் ஏறியதும், “ஆண்டவர் சிலுவையில் அறையுண்டு மரித்த இடம் இதோ”என்று காண்பித்தனர். அப்போது அவன் அந்த ஸ்தலத்தைப் பார்த்து, “என் நேச ஆண்டவரே! நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னே, தேவரீர் பிறந்த இடத்தைக் கண்டேன். தேவரீர் புதுமைகள் செய்த இடங்களையும் பார்த்தேன். தேவரீர் சுகிர்த பிரசங்கங்கள் நிகழ்த்திய இடங்களையும் அழுதுகொண்டு தரிசித்தேன். ஆனால், தேவரீர் என் பாவத்தினால் மரணமடைந்த இடத்தைச் சாகாமல் காணமாட்டேன். ஐயோ, நான் செய்த பாவத்தினால் இவ்விடத்தில் மரணமடைந்த நம் திவ்ய இரட்சகருக்கு அல்லவா துரோகம் செய்தேன்” என்று கூறி மனஸ்தாப மிகுதியால் மயங்கிக் கிழே விழுந்து மரித்தான். அவனோடு சென்றவர்கள், அவன் மயங்கியிருக்கிறான் என்று எண்ணி அவனை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவன் இறந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 33



சிறுவன் உயிர் பெறுதல் 


அர்ச்.சாமிநாதருடைய ஞானதியானப் பிரசங்கங்களை யெல்லாம் தவறாமல் கேட்டு அதன்பிரகாரம் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் நடத்தி வந்தவள், குடதோனா என்ற பெண்மணி. இவள் ரோம் நகரைச் சேர்ந்தவள். இவள் ஒருநாள் அர்ச்.மார்க் தேவாலயத்தில் நடைபெற்ற அர்ச்சிஷ்டவருடைய தியானப் பிரசங்கத்தை வழக்கம்போல் கேட்டு விட்டு தன் விட்டுக்குத் திரும்பினாள். அங்கு தன் மகன் இறந்திருப்பதைக் கண்டாள். மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தாள். அதிர்ச்சியிலிருந்து மீண்டதும் இறந்து போயிருந்த தன் மகனை அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்திற்கு எடுத்துச் சென்றாள். அவள் மடத்துத் தலைவரான அர்ச்.சாமிநாதரிடம் தன் மகனுக்கு உயிரளிக்கும்படி மன்றாடினாள். அவள் மேல் இரங்கியவராக, அர்ச்.சாமிநாதர், பரலோகத்தை நோக்கி தன் கண்களை உயர்த்தி சிறிது நேரம் ஆழ்ந்த ஜெபத்தில் ஈடுபட்டார். பிறகு, இறந்த சிறுவன் மேல் சிலுவை அடையாளத்தை வரைந்து அவனை ஆசீர்வதித்தார். பிறகு, சிறுவனின் கரத்தைப் பிடித்துத் தூக்கி விட்டார். அவனும் புதுமையாக உயிர்பெற்று, உடனே எழுந்து நின்றான். 
இந்நிகழ்வைப் பற்றி சாமிநாதருடைய இளந்துறவற சிடர்கள் பின்வருமாறு உரையாடினர்: சகோ.டான்கிரட் அப்புதுமையைப் பற்றி, “அவர் அவன் மேல் சிலுவை அடையாளத்தால் ஆசீர்வதித்து, அவனை கையைப் பிடித்து எழுப்பினார். உடனே சிறுவனும் எழுந்தான். அவன் புதுமையாக உயிர்பெற்று தன் தாயுடன் பேசுவதைக் காண்பது எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று கூறுகின்றார். 

சகோ.பிலிப், “நமது அதிபர் சுவாமியார் இப்புதுமையைச் செய்வதற்கு முன்பாக நீண்ட நேரம் ஜெபத்தில் ஈடுபட்டிருந்தாரா?” என்று வினவினார். 

அதற்கு, சகோ.டான்கிரட், “இல்லை. ஒரு சிறு ஜெபம் மட்டுமே மௌனமாக ஜெபித்து விட்டு உடனேயே அவர் சிலுவை அடையாளத்தினால் அப்பையனை ஆசீர்வதித்தார். இந்த புதுமையை நிகழ்த்தினார். “ஆனால், அந்த ஜெபத்தை ஜெபிக்கும்போதும், அச்சிறுவனை சிலுவை அடையாளத்தால் ஆசிர்வதிக்கும் போதும், மிக நிதானமாகவும், புன்முறுவலுடனும் மகிழ்ச்சி மிக்க இனிய முகத்துடனும் நமது அதிபர் சுவாமியார் பக்திபற்றுதலுடன் காணப்பட்டார். ஏற்கனவே புதுமை நிகழும் என்று முற்றிலும் அறிந்தவராகவே தோன்றினார்” என்று சகோ.கிரகோரி குறிப்பிட்டார். 

“அவர் சிலுவை அடையாளமிட்டு ஜெபிப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதுவரை வேறு யாரிடமும் நான் பார்த்திராத அளவிற்கு, மிகுந்த பக்தி பற்றுதலுடனும் வணக்கத்துடனும் அவர் அவ்வாறு அர்ச்.தமதிரித்துவ தோத்திர ஜெபமான, அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தை ஜெபிப்பதை பார்த்ததினாலேயே, நான் அவர்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய சபைக்குள் நுழைந்தேன்” என்று சகோ.பிலிப் கூறினார்.
 
பிறகு அங்கிருந்த சகோ.சிக்ஸ்துஸ், சகோ.பிலிப் மற்றும் சகோ.டான்கிரட் போன்ற இளந்துறவிகள், தங்களுடைய சபை அதிபர் சுவாமியார், ஒரு நாளைக்கு பல முறை அர்ச்.தமதிரித்துவத்தை ஸ்தோத்தரித்து சர்வேசுரனுக்கு ஏற்றபிரகாரம் நேர்த்தியான விதத்தில் சிலுவை அடையாளத்தை வரைந்து ஜெபிக்கிறார் என்றும் அதனால் ஏராளமான தேவவரப்ரசாதங்களை அடைகின்றார் என்றும் உணர்ந்தனர். உடனே, தங்களுக்கும் தங்களுடைய சபைக்கும் தேவையான தேவ வரப்ரசாதங்களை அடைந்துகொள்ளும்படிக்கு, இதுவரைக்கும் தங்கள் இளமைப்பருவ முதற்கொண்டு சொல்லிவரும் அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தை இனி தாங்களும் அதிக பக்தி பற்றுதலுடனும் கவனத்துடனும் ஜெபிப்பதாக உறுதி பூண்டனர். மேலும் அவர்கள், “நாம் போதிக்க செல்லுமிடங்களிலெல்லாம் அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரத்தின் மாண்பைப் பற்றி அனைவருக்கும் பிரசங்கிக்க வேண்டும். இந்த மந்திரத்தை வயதானவர்களும், வியாதியஸ்தரும், குழந்தைகளும் என்று எல்லா தரப்பு மக்களும் யாதொரு கஷ்டமுமின்றி எப்பொழுதும் எங்கும் ஜெபிக்கலாம். அப்பொழுது அவர்கள் மோட்சத்திலிருந்து விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அஞ்ஞானம், பதிதம், உலகாயுதத் தப்பறைகள் என்று எதுவும் அவர்களை சர்வேசுரனிடமிருந்தும் தேவமாதாவிடமிருந்தும் பிரிக்காது. மக்கள் அனைவரும் உத்தம கத்தோலிக்க விசுவாசிகளாக மாறுவர். ஒரு சிறு ஜெபம், நன்றாக சொல்லப்படுமேயானால், எத்தகைய உன்னதமான கத்தோலிக்க சமுதாயத்தை உருவாக்கக் கூடிய வல்லமையுடன் திகழ்கிறது என்பதைப் பாருங்கள். இதுபோல ஏராளமான ஞானப்பலனுள்ள ஜெபங்களை நமது திருச்சபை வழியாக நமது நேச ஆண்டவர், நமக்கு வழங்கியிருக்கிறார்.இதுதான் நமது கத்தோலிக்க வேதத்தின் மகிமை”என்று தங்களுககுள் பேசிக் கொண்டிருந்தனர்.

வியாழன், 20 ஜனவரி, 2022

தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம் - அர்ச். அல்போன்ஸ் மரியா லிகோரியார்

தபசுகாலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம்

அர்ச். அல்போன்ஸ் மரியா லிகோரியார் 



“சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” (மத் 17:4). இன்றைய சுவிசேஷத்தில், நமது திவ்ய இரட்சகர், தமது சீஷர்களுக்கு மோட்ச மகிமையின் ஒரு காட்சியை சிறிது நேரம் காண்பிக்க சித்தமானார் என்பதை வாசித்தோம். மோட்சத்தில் அடையப் போகும் உன்னதமான மகிமைக்காக உழைப்பதற் கான ஆவலை தமது சீடர்களின் இருதயங்களில் ஏற்படுத்துவதற்காக, நம் நேச ஆண்டவர் அவர்கள் முன்பாக உருமாறினார். அவர் தமது திவ்ய திருமுகத்தின் பேரொளி மிக்க மகிமையை, தமது சிடர்கள் காண்பதற்கு அனுமதித்தார். அப்போது ஏற்பட்ட பேரானந்தத்தினாலும் மகிழ்ச்சி யினாலும் பரவசமான நிலையில் இருந்த அர்ச்.இராயப்பர், “சுவாமி! நாம் இங்கேயிருக்கிறது நல்லது” என்று கூறுகின்றார்.

ஆண்டவரே, இந்த இடத்தை விட்டு இனி ஒருபோதும் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஏனெனில், உமது திவ்ய திருமுகத்தின் பேரழகு வாய்ந்த மாட்சிமையைக் காண்பது ஒன்றே எங்களுக்குப் போதும். அதுவே, இவ்வுலக மகிழ்வுகளையெல்லாம் விட மிக அதிகமாக எங்களுக்கு ஆறுதலை அளிக்கின்றது. மாபெரும் நன்மையாக திகழும் மோட்சத்தை நமக்கு பெற்றுக்கொடுப்பதற்காக நமது திவ்ய இரட்சகர் தமது விலைமதிப்பில்லாத உயிரையே சிலுவை மரத்தில் கையளித்தார். அப்போஸ்தலர் கூறுவது போல, சர்வேசுரனை சிநேகிக்கும் ஆத்துமங்களுக்கு ஆண்டவர் தயாரித்து வைத்திருக்கும் அளவில்லாத தேவவரப்ரசாதங்களைப் பற்றி இவ்வுலகில் எந்த மனிதனாலும் கண்டுணர முடியாது. 

“சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை, காது கேட்டதுமில்லை, மனிதருடைய இருதயத்துக்கு அவைகள் எட்டினதுமில்லை" (1 கொரி 2:9). இவ்வுலக ஜீவியத்தில் நமது உணர்வுகளால் அனுபவிக்கும் இன்பங்களைத் தவிர வேறெந்த இன்பத்தைப்பற்றியும் நாம் அறியாமலிருக்கிறோம். ஆனால், எவ்வளவு மகத்துவம் மிக்கவையும், பேரின்பத்திற்குரிய அழகு வாய்ந்தவையும், மோட்சத்தில் உள்ளன! மோட்சத்தைப் பற்றி விவரிக்கையில் அர்ச். பெர்னார்டு, “பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பற்றி ஓ மனிதனே நீ அறிய விரும்பினால், அந்த பேரின்ப இராஜ்யத்தில், உன் இருதயம் ஏற்றுக்கொள்ளாத எதுவும் அங்கு இல்லை. நீ விரும்பும் அனைத்தும் அங்குள்ளன, என்பதை அறிந்து கொள்” என்று குறிப்பிடுகின்றார். கீழே இவ்வுலகத்திலும் சில காரியங்கள், நமது உணர்வுகளுக்கு ஒத்துப்போகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், அதே நேரத்தில் எத்தனை எத்தனையோ காரியங்கள் அனேக நேரங்களில் நம்மை எவ்வளவு கடுமையாக உபாதிக்கின்றன என்பதையும் நாம் காண்கின்றோம். 

பகலின் வெளிச்சத்தை வரவேற்கிறோம். ஆனால் இரவின் இருளை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. வசந்த காலம் மற்றும் இலையுதிர்காலங்களில் மகிழ்கின்றோம். ஆனால் குளிர்பனிக்காலம் மற்றும் கோடைக்காலங்களின் கடுமையான சிதோஷ்ண நிலைமை நம்மை வாதிக்கின்றது. மேலும், வியாதியின் உபாதனைகளை நாம் அனுபவிக்க வேண்டும். மனிதர்களின் கொடுமைகளைத் தாங்கவேண்டும். தரித்திரத்தினால் ஏற்படும் வசதிக் குறைவுகளை அனுபவிக்க வேண்டும். நமது அந்தரங்க ஜீவியத்தில் பசாசு தோற்றுவிக்கும் வீண் அச்சங்கள், சோதனைகள், கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும். நமது மனச்சாட்சியில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் நித்திய இரட்சணியத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைப் பற்றிய குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கும். ஆனால் மோட்சத்தை அடைந்த பாக்கியவான் களுக்கு யாதொரு துன்ப துயரமும் இருக்காது. “சர்வேசுரன், அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணிர் யாவையும் துடைப்பார்: இனி மரணமே இராது. இனி துக்கமும், அழுகைச் சத்தமும், துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக் கேட்டேன். அன்றியும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” (காட்சி 21:4,5). 

பரலோகத்தில், மரணமும் மரண பயமும் இல்லை. பாக்கியமான அந்தஸ்தில் அங்கு இருக்கும் பாக்கியவான் களுக்கு துயரம் இல்லை. வியாதி இல்லை. ஏழ்மை இல்லை. வசதிகுறைவு என்ற நிலை இல்லை. பகல், இரவு இல்லை. குளிர், உஷ்ணம் என்ற சீதோஷ்ணம் இல்லை. அங்கு எப்பொழுதும் பகலாகவும், பூத்துக்குலுங்கும் இனிய வசந்த காலமாகவே இருக்கும்.பரலோக இராஜ்யத்தில் உபாதனைகள் இல்லை. பொறாமை இல்லை. ஏனெனில், அங்கு ஒருவர் ஒருவரை கனிந்த சிநேகத்தினால் நேசிப்பர். ஒவ்வொருவரும் மற்றவருடைய மகிழ்ச்சியைக் கண்டு தங்களுடைய சொந்த மகிழ்ச்சிபோல அக்களிப்பர். அங்கு நித்திய கேட்டைப் பற்றிய யாதொரு பயமும் இருக்காது. ஏனெனில் அங்கு ஆத்துமம் தேவவரப்ரசாதத்தில், நித்திய காலத்திற்குமாக நிலைபெற்றிருக்கும். எனவே அங்கு யாரும் பாவம் செய்ய முடியாது. அதனால் சர்வேசுரனை இழக்கவும் மாட்டார்கள். மோட்சத்தில் நிங்கள் விரும்புவது அனைத்தும் இருக்கும். அங்கு எல்லாம் புதியனவாக இருக்கும். புதிய அழகுகள், புதிய அக்களிப்புகள், புதிய மகிழ்வுகள் அங்கு இருக்கும். அந்த பரிசுத்த நகரத்தைப் பார்ப்பதிலேயே நமது கண்கள் பூரண திருப்தியடையும். விலையுயர் இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் வெள்ளியினாலும் அழகிய மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு நகரத்தைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். ஆனால் மோட்சமானது, இதைவிட எல்லையற்ற விதத்தில் உயர்ந்த அழகைக் கொண்டு திகழ்கிறது. அதுவும் அந்த உன்னத இராஜ்யத்தின் அழகுமிக்க மாட்சிமை, அங்கு அரச ஆடைகளை அணிந்துகொண்டு வசிக்கிறவர்களுடைய அழகினால் இன்னும் அதிக மேன்மைக்கு உயர்வடைகின்றது. இவர்கள் எல்லாரும் அரசர்கள் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுகின்றார். 

மோட்சவாசிகள் அனைவரையும் விட அதிமிக மாட்சியும் மகிமையும் மிக்கவர்களும் பேரெழிலழகு வாய்ந்தவர்களுமான பரலோக பூலோக இராக்கினியான நம் தேவமாதாவைக் காணும் பேறு எத்தகைய பேரானந்தத்தை நமக்களிக்கும் என்பதை சற்று தியானிப்போம். நமது நேச ஆண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியின் மகத்துவமிக்க பேரழகைக் காண்பதைப் பற்றியும் தியானிப்போம். இவை நமக்கு எத்தகைய பாக்கியமான பேரின்பங்கள்! ஒரு தடவை அர்ச்.அவிலா தெரசம்மாள் நமது ஆண்டவரின் திவ்யகரத்தைக் காணும் பேறு பெற்றாள். அப்போது அவள் ஆண்டவரின் திருக்கரத்தின் அதிசயத்துக்குரிய பேரழகின் வசிகரத்தைக் கண்ட திகைப்பினால் ஸ்தம்பித்துப்போனாள். மோட்ச நறுமணம் நுகரும் உணர்விற்கு பூரண திருப்தியளிக்கும். பரலோகத்தில் ஒரேதொனியில் ஒன்றிணைந்து இசைவாக எழுப்பப்படும் உன்னதமான கீதங்கள் நமது செவிகளை முழுவதும் திருப்திபடுத்தும். ஒரு தடவை அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் ஒரு சம்மனசானவர் ஒரு இமைப்பொழுது மட்டுமே வயலின் இசைக் கருவியை வாசிப்பதைக் கேட்டார். அப்பொழுது இறந்துவிடும் அளவிற்கு, அவர், பேரானந்தத்தினால் அக்களிப்படைந்தார். சகல அர்ச்சிஷ்டவர்களும் சம்மனசுகளும் தேவமகிமையைப் போற்றிப் பாடுவதைக் கேட்பது எத்தகைய பேரின்பமாக இருக்கும்! “அவர்கள் சதா நித்திய காலங்களிலும் உம்மைத் துதிப்பார்கள்” (சங்.83:4) தேவமாதா சர்வேசுரனைப் போற்றிப்புகழ்வதைக் கேட்பது எத்தகைய மதுரமான இன்பமாக இருக்கும்! அர்ச்.பிரான்சிஸ் சலேசியார், “காட்டில் குயிலின் கீதம் மற்ற எல்லா பறவைகளின் கீதங்களைவிட எவ்வாறு அதிக இனிமையானதாக இருக்கிறதோ, அதைப் போல பரலோகவாசிகளிலேயே அர்ச்.கன்னிமாமரியின் குரலானது அதிக இனிமையானது” என்று கூறுகின்றார். சுருக்கத்தில், மோட்சத்தில் மனிதனால் விரும்பக் கூடியவை அனைத்தும் பேரின்பங்களாக இருக்கின்றன.† 

புதன், 19 ஜனவரி, 2022

தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்

 தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்



நாம் நம்மிலே ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்பதை கண்டுணர்வதற்கு சோதனை நமக்கு அவசியமாகிறது. அநேக கொடூரமான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பவரும் நமது திரளான பாவங்களை மன்னிப்பவருமான சர்வேசுரனின் எல்லையில்லா இரக்கத்திற்கு நன்றி செலுத்துவோம் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுவார். நாம் பாவத்திற்கு எதிரான பிரதிக்கினைகளை எடுக்கும்போது, நமது சொந்த பலத்தையே பெரிதாக நம்புவதும், நம்மை என்றும் பாதுகாக்கும் சர்வேசுரன் மிது அற்ப நம்பிக்கை கொள்வதும் தான் அடிக்கடி, பசாசின் பாவ வலையில் விழும் நிர்பாக்கியம் நமக்கு நேரிடுவதற்கான உண்மையான காரணம். நாம் வெட்கத்துக்குரிய யாதொன்றும் செய்யாமலிருக்கும்போதும், நமது விருப்பப்படி எல்லாம் நிகழும்போதும், நம்மை எதுவும் விழத்தாட்ட முடியாது என்று நம்பத் துணிகின்றோம். 

நமது ஒன்றுமில்லாமையையும் முழு பலவீனத்தையும் மறந்துபோகிறோம். இறந்துபோவோமே தவிர ஒருபோதும் திமையை ஜெயிக்கவிடமாட்டோம் என்று அக்களிப்புடன் பாவத்திற்கு எதிரான எதிர்ப்புகளை அறிவிப்போம். இதன் அருமையான முன்னுதாரணத்தை, “ஒருபோதும் ஆண்டவரை மறுதலியேன்”என்று கூறிய அர்ச்.இராயப்பரின் ஜீவியத்தில் காண்கிறோம்.மனிதன்தன்னிலேயே எவ்வளவு ஒன்றுமில்லாதவனாக இருக்கிறான் என்பதை இராயப்பருக்கு உணர்த்துவதற்காக, ஆண்டவர்,அரசர்களையோ, இளவரசர்களையோ அல்லது மாபெரும் கருவிகளையோ பயன்படுத்தாமல் ஒரு ஊழியக்காரியின் குரலை மட்டுமே பயன்படுத்துகிறார். அதுவும் அவள் வழக்கத்திற்கு மிகவும் வேறுபட்ட வித்தியாசமான விதத்தில் அவரிடம் பேசுகிறாள். ஒரு மணித்துளிக்கு முன்பாக தாம் ஆண்டவருக்காக சாகத்தயாராக இருப்பதாகக் கூறிய இராயப்பர், “அவரை அறியேன்”; என்றும் “யாரைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். அங்கிருந்த யூதர்கள் தாம் கூறுவதை ஏற்றுக்கொள்வதற்காக, மிக உக்கிரமமாக ஆணையிட்டு ஆண்டவரை மறுதலிக்கவும் செய்கிறார். 

ஓ நேச ஆண்டவரே! உமது தேவ உதவியின்றி நாங்கள் தனிமையில் விடப்பட்டால், எங்கள் மட்டில் எதைச் செய்வதற்கு தான் தகுதியுடையவராய் இருக்கிறோம்! சிலர், பல அர்ச்சிஷ்டவர்கள் செய்த மாபெரும் கடின தபசுகளைப் பற்றி பொறாமையாகப் பேசுவார்கள். அவர்கள் தாங்களும் அவ்வாறு தபசு செய்ய முடியும் என்று நம்புவார்கள். நாம் வேதசாட்சிகளின் சரித்திரத்தைப் படிக்கும்போது, நாமும் அவர்களைப் போல நம் திவ்ய இரட்சகருக்காக துன்புறுவதற்கு தயாராக இருப்பதாக கூறுவோம்.

ஏனெனில் இவ்வுலக நிகழ்வுகள் நொடிப்பொழுதில் மறையக்கூடியவை என்றும், அப்பொழுது நாம் பட்டனுபவிக்கும் வாதைகள் குறுகிய காலத்திற்கே என்றும், ஆனால் அதற்கு நமக்குக் கிடைக்கப்போகும் பரிசோ, நித்திய மோட்சம் என்றும் கூறுவோம். ஆனால், நாம் யார் என்றும் அல்லது நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்றும் நமக்கு படிப்பிக்கவே சர்வேசுரன் திருவுளம் கொள்கிறார். பசாசு, நமக்கு சற்று அருகில் வருவதற்கு ஆண்டவர் அனுமதிக்கிறார். இந்தக் கிறிஸ்துவனைப் பார். சற்று நேரத்திற்கு முன்பாக இவன், வெறும் காட்டில் கிடைக்கும் கிழங்குகளையும் மூலிகைகளையும் உண்டு தமது சரீரத்தை மூர்க்கமாக வதைத்துத் தபசு செய்த தபோதனர்களைப் பற்றி பொறாமை கொண்டான். ஆனால், அந்தோ! ஒரு சிறு தலைவலியோ, ஒரு சிறு ஊசி குத்தினாலோ அவன் சரீரத்தில் எவ்வளவு பெரியவனோ அவ்வளவுக்கு அந்த வலி பெரியதாக அவனுக்குத் தோன்றி தனக்காக, அவனை மிகவும் வருந்தச் செய்கிறது. அதனால் அவன் மனமுடைந்தவனாகிறான்.வலி தாங்கமுடியாமல் அழுகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை, அவன் விலங்கிடப்பட்ட எல்லா வேதசாட்சிளைப்போல அநேக தபசுகளை செய்ய விரும்பியிருப்பான். ஆனால், அற்ப விஷயமும் அவனை நிலைகுலைய வைக்கும். அவனை நம்பிக்கை இழக்கச் செய்யும். இதோ இன்னொருவனைப் பார். இவன் தன் ஜிவியத்தை முழுவதும் சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்க விருப்பமுள்ளவனைப் போல் தோன்றுவான். ஆனால் அற்ப காரியத்தையும் அவனால் தாங்க முடியாது. யாராவது அவனுக்கு எதிராக ஒன்றைப் புறணியாக பேசினாலோ, அல்லது, தன்னை சரியாக வரவேற்காவிட்டாலோ, அல்லது மரியாதை இல்லாமல் நடத்தினாலோ, சிறு அநீத செயல் தனக்கு யாராவது புரிந்தாலோ, தான்செய்த காரியத்திற்கு யாராவது நன்றிகெட்டதனமாக நடந்து கொண்டாலோ, உடனே இவனுடைய இருதயத்திற்குள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் அவர்கள் மேல் தோன்றும். எவ்வளவுக்கு அவன் அவர்களை வெறுப்பானென்றால், அவர்களை இனி ஒருபோதும் பார்க்க மாட்டேனென்ற மனநிலையில் இருப்பான். அல்லது அவன் வெளியரங்கமாகவே அவர்களை இழிவாக நடத்துவான். 

எவ்வளவு நாட்கள் இது பற்றிய சிந்தனையில் அவனுக்கு தூக்கம் வராமலிருந்தது. அந்தோ! என் பிரிய சகோதரர்களே! நாம் ஒன்றுமில்லாத வறிய மனிதர்கள். சோதனையின் மட்டில் நாம் எடுத்த தீர்மானங்களைப் பற்றி மிகவும் குறைவாகவே மதிப்பிட்டு அவற்றின் மட்டில் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். சர்வேசுரனின் தயாளத்தையும் தேவவரப்ரசாத உதவியையுமே, நாம் எப்பொழுதும் நமது மரண நேரம் வரைக்கும் நம்பியிருக்க வேண்டும். †


Lentern time Spiritual sermon of St. John Marie Vianney

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 32


சம்மனசுக்கள் உணவு பரிமாறுதல் 


“பாலஸ்தீனத்திற்கு சென்று வந்த பிறகு ரெஜினால்டு சிக்ஸ்துஸ் மடத்தில் துறவற பயிற்சி பெறுவார். அதன் பிறகு சர்வேசுரனுக்கு சித்தமானால், அவர் பொலோஞா நகரத்திற்கு அனுப்பப்படுவார். அங்கு மற்றொரு போதக துறவிகளுக்கான மடத்தை ஏற்படுத்துவார். அந்நகரில் மிகவும் பிரசித்திபெற்ற சட்டக் கல்லூரி இருக்கிறது. அங்குள்ள பேராசிரியர்களும், மாணவர்களும் நம் ரெஜினால்டு சகோதரரின் ஞான முயற்சியினால் தேவ வரப்ரசாதத்தைப் பெறுவர். நம் நேச ஆண்டவரின் உத்தம பிள்ளைகளாக மாறுவர்” என்று அர்ச்.சாமிநாதர் சிந்தித்துக் கொண்டிருந்தார். மேலும் தற்போது அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் 40 இளைஞர்கள் புதிதாக துறவற ஜீவியத்திற்குள் நுழைந்துள்ளனர். போதக துறவிகளாவதற்கான ஆர்வமுள்ள அவர்களுக்கு தகுந்த ஞானப் பயிற்சியை அளிப்பதற்கான அரும்பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தம்மேல் சுமத்தப்பட்டிருப்பதை அர்ச்.சாமிநாதர் உணரலானார். 

அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தின் சமையலறைக்கு பொறுப்பாளரான ஒரு இளந்துறவி அச்சமயம் சாமிநாதரிடம் வந்தார். அவர், “சுவாமி! உணவறை காலியாக இருக்கிறது. இன்று நாம் உண்பதற்கு ஒன்றுமில்லை. ஒரு சில காய்ந்த ரொட்டித் துண்டுகள் தான் உள்ளன. இதுவரை இதுபோல நிகழ்ந்ததில்லை. உணவு கேட்டு வீடுகளுக்கு செல்லும் நம் சகோதரர்கள் ரொட்டி, பாலாடைக் கட்டிகள், காய்கறி, பழங்கள் என்று ஏதாவது உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். இம்முறை அவர்கள் எதையும் கொண்டு வரவில்லை. இப்பொழுது மதிய உணவிற்கான நேரமாகிவிட்டது. இப்பொழுது என்ன செய்யபபோகிறோம்?” என்று வினவினார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர் அவரிடம், “சரி. சாப்பாட்டு மணியை அடியுங்கள்!” என்றார். 

சில நிமிடங்களில் துறவற சகோதரர்கள் அனைவரும் சாப்பாட்டு அறையில் கூடினர். ஆனால் அவர்கள் காலியான தட்டுகளின் முன்பாக தங்களுடைய இருக்கைகளில் அமர்வதற்கு முன்பாக இதுவரை பார்த்திராத இரு இளைஞர்கள் அங்கு தோன்றினர். அவர்கள் புதிதாக சுடப்பட்ட தரமான ரொட்டிகளை உணவறையில் இருந்த அனைவருக்கும் பரிமாறினார்கள். அவர்கள் ஏதோ ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்த துறவிகளும் ஒன்றும் கேட்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்தி உணவை உண்டார்கள். ஆனால் உணவை பரிமாறிய பிறகு அவ்விரு இளைஞர்களும் நின்ற இடத்திலிருந்து திடீரென்று மறைந்து விட்டனர். இவ்வதிசய நிகழ்வைக் கண்ட அனைவரும் அவர்கள் மோட்சத்திலிருந்து வந்த சம்மனசுகள் என்று வியந்தனர். 

அப்போது அர்ச்.சாமிநாதர் அவர்களிடம், “ஆம். தம்மேல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை நல்ல சர்வேசுரன் எவ்வளவு மகத்துவமிக்க விதத்தில் பராமரிக்கிறார் என்பதைப் பாருங்கள்” என்று கூறினார். இப்புதுமை ரோம் நகரெங்கும் பரவியது.

அர்ச்.மார்க் தேவாலயத்தில் அர்ச்.சாமிநாதர் நிகழ்த்திய பிரசங்கங்களைக் கேட்பதற்காக எல்லா வயதினரும் மிக ஆர்வமுடன் பெருந்திரளாகக் கூடினர். “சங்.தோமினிக் சுவாமியார் ஒரு அர்ச்சிஷ்டவர். அவருடைய ஜெபத்திற்கு செவிசாய்த்து நல்ல ஆண்டவர் தமது சம்மனசுகளை அனுப்பி அவருடைய சபையினருக்கு உணவளித்து பராமரிக்கிறார். அவருடைய நிழல் கூட நோயாளிகளைக் குணப்படுத்துகின்றது” என்றெல்லாம் அர்ச்சிஷ்டவருடைய மகிமைகளைப் பற்றி ரோம் நகரத்து மக்கள் வியப்புடன் கூறிவந்தனர். சாமிநாதர் போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு அவருடைய துறவற அங்கியிலிருந்து சிறு சிறு துண்டுகளை வெட்டிச் சென்றனர். அவருடைய ஞாபகமாக  தங்களுடன் வைத்திருக்கும்படியாகவும் வியாதி நேரத்தில் தங்களை மந்திரித்துக் கொள்ளும்படியாகவும் அத்துணியை அவர்கள் எடுத்துச் சென்றனர். 

இதைக் கண்ட அவருடைய சகோதரர்கள், ஒரு நாள் அவரிடம், “சுவாமி! இதை இப்படியே விட்டு விடக்கூடாது. உங்களைத் தொடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுடைய உடையை வெட்டி வெட்டி கந்தலாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் புத்தி புகட்டுவதற்கு எங்களை அனுமதியுங்கள்” என்று கேட்டனர். 

அதற்கு அவர் அவர்களிடம், “வேண்டாம். அவர்கள் எதையும் கெடுதலாக செய்யவில்லை. இந்த ஒரு சிறு கம்பளித்துண்டு, அவர்களுடைய நினைவுகளை சர்வேசுரன்பால் உயர்த்தவும் அவர்களிடம் உத்தமமான தேவ சிநேகத்தையும் தேவ நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் கூடுமானால், அவர்கள் அந்த துணியை வைத்தக் கொள்ளட்டும்” என்று கூறினார். 
ரோம் நகர மக்கள், ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் பலரும் அவரை எப்பொழுதும் எங்கும் பின்தொடர்ந்து செல்வர். தங்களை அவர் ஆசிர்வதிக்கும்படி மன்றாடுவர். அவர் ஒரு தேவாலயத்தில் ஜெபங்களையும் தேவகீர்த்தனை பாடல்களையும் பாடி அவர்களை ஆசீர்வதிப்பார். முன்பு அவர்கள் அதே ஜெபங்களை ஜெபித்தபோது அடையாத புத்துணர்வையும் தேவ வரப்ரசாதங்களையும், இப்போது அபரிமிதமாகப் பெறுவதை உணர்ந்து சர்வேசுரனுக்கு நன்றியும் ஆராதனையையும் செலுத்தினர்

செவ்வாய், 18 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 3

தேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு அஞ்ஞானியான ஒரு சிற்றசரசன் மனந்திரும்பின புதுமை


சாக்சனி தேசத்தில் அஞ்ஞானியான விட்டிக்கின் என்ற ஒரு சிற்றரசன் ரோமாபுரி அரசனுடன் சண்டை செய்தபோது ரோமாபுரி அரசனே போரில் வெற்றி பெற்றதால் அவன் அச்சிற்றரசனுடன் சமாதானாமாய் போனான். அரசன் பாளையம் இறங்கிப்போவதற்குமுன் நாற்பது நாள் தபசுகாலத்தில் ஒரு சந்தி இருந்து கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை ஆகிய பாஸ்குத் திருநாளை அங்கேயே வெகு ஆடம்பரத்தோடு கொண்டாடினான்.
சாக்சனி நாட்டின் சிற்றரசன் ரோமாபுரி அரசனும் மற்றக் கிறீஸ்துவர்களும் அந்தத்திருநாளில் செய்யும் காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசிபோல் அரசனுடைய பாளையத்துக்குப்போனான். திருநாள் முடியுமட்டும், அவன் அங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளை யெல்லாம் நன்றாய்ப் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்து அவன் விட்டிக்கின் என்று அறிந்து அரசனிடத்தில் சொன்னான். இதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய அரசனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். அரசன் இவனைக் கண்டு பட்சத்தோடு வரவேற்று “நீர் இங்கே வரவிரும்பினால், மகிமையோடு வராமல் இந்த நீசவேஷத்தோடு வருவதேன்?”; என்று வினவினான். 
இதற்கு விட்டிக்கின், “இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று
பார்க்கவே மாறுவேடத்தில் வந்தேன்” என்றான்.
அரசன் “என்ன பார்த்தீர்?”; என்று கேட்டதற்கு, அவன், “நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன: 
1-வது வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நீங்கள் சலிப்பாயிருந்து சனிக்கிழமை சந்தோஷமாயிருந்தீர்கள். 
2-வது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் அலங்காரமுள்ள மகிமைமிக்க குழந்தையை நான் கண்டதுமல்லாமல், நீரும் சேவகரும் திவ்யநன்மை
வாங்கினபோது மாட்சிமிக்க அந்த திவ்யகுழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும் சில சேவகர் வாயில்
கஸ்தியோடு கட்டாயத்துடன், போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நான் அறியேன். நீர் சலிப்பாய் இருந்ததற்கு காரணம் இன்னதென்றும் அறியேன்” என்றான். 
அரசன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு “வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய திவ்யகர்த்தர் சேசுநாதருடைய திவ்ய திரு மரணத்தின் சடங்குகளைச் செய்ததினால் ஆண்டவருடைய திவ்ய பாடுகள் மற்றும் மரணத்தின் மட்டில் ஏற்பட்ட துக்கதுயரத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு சனிக்கிழமையன்று, நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கை செய்ததினால் அன்றைக்கு சந்தோஷமாயிருந்தோம்”; என்றான்.
பிறகு அரசன் தேவநற்கருணையின் பரமஇரகசியத்தையும் அவனுக்கு விளக்கிச் சொல்லி, “திவ்ய நற்கருணையிலிருக்கிற சேசுநாதரை நான் காணாதிருக்கையில், அவரை நீர் கண்டதினால், முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை உட்கொண்டதால், ஆண்டவர் கட்டாயமாக அவர்களுடைய வாயில் போகிறதை நீர் கண்டீர்” என்று சொன்னான்.
 இதையெல்லாம் கேட்ட அந்த சிற்றரசனுக்கு கிறிஸ்துவ மதத்தில் சேர ஆசை ஏற்பட்டது. உடனே ஞானஉபதேசம் கேட்டு மேற்றிராணியாரான அர்ச். ஹெர்பர்ட் என்பவருடைய கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு அரசனே ஞானத் தகப்பனாயிருந்தான்.

கிறீஸ்துவர்களே! அந்த ரோமாபுரி அரசன் நம் நேச ஆண்டவரான சேசுநாதர்சுவாமி மேல் வைத்த நேசத்தினாலும் இரக்கத்தினாலும் பெரிய
வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக் கிழமையும் மன வருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் திவ்ய கர்த்தர் நமக்காக அனுபவித்த கஸ்திகளை தியானித்து அவர் பேரில் உங்கள் இருதயங்களில் இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும். திவ்ய கர்த்தர் உங்களுடைய இருதயங்களில் மகிழ்வுடன் இறங்குவதற்கு நீங்கள் தேவ இஷ்டபிரசாத அந்தஸ்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சாவான பாவ அந்தஸதில் திவ்ய நன்மையை உட்கொண்டால் அதுவே உங்கள் நித்திய ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.

திங்கள், 17 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 31


தேவமாதா காட்சியும், உத்தரியமும் 


“கவலைப்படவேண்டாம். தேவமாதா உனது மனதிலிருக்கும் குழப்பம் யாவற்றையும் நீக்கிவிடுவார்கள். விரைவில் நீயும் எங்களைப் போல உத்தம துறவியாவாய். இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து சொல்” என்று அர்ச்.சாமிநாதர் கூறியபோது, அதை ஏற்றுக்கொள்ளாததுபோல ரெஜினால்டு, தலையை அசைத்துக் கொண்டே,“நான் அந்த உன்னதமான துறவற அந்தஸ்தில் மரிப்பதற்கு முற்றும் தகுதியற்றவன். அந்த மகிமையை அடைவதற்கு நான் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே” என்று கூறினார். 
இதைக்கேட்ட அர்ச்.சாமிநாதர், தன் ஜெபத்தையும் தவத்தையும் இன்னும் அதிகரித்தார். ஜெபத்தினுடையவும் துன்பங்களினுடையவும் வல்லமையை நன்கறிந்த சாமிநாதர், தமக்கு மிகப்பிரியமான ஞானமகனாக உருவாக இருக்கும் ரெஜினால்டுவின் ஆன்மசரீர சுகத்திற்காக தொடர்ந்து தேவமாதாவிடம் இரவு பகலாக மன்றாடி வந்தார். அர்ச்.சாமிநாதருடைய மன்றாட்டு விரைவிலேயே கேட்கப்பட்டது. ஒருநாள் காலையில் அவருடைய படுக்கையினருகே சென்றபோது, இந்நாள்வரை சாகக்கிடந்த ரெஜினால்டு, உயிர்பெற்றவராக, தெளிந்த முகத்துடன் படுக்கையில் அமர்ந்து இருந்தார். அவர், குதூகலத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும், அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! எனக்கு சுகம் கிடைத்துவிட்டது. இந்நேரம் வரைக்கும் தேவமாதா இங்கு இருந்தார்கள். அவர்களே என்னை குணப்படுத்தினார்கள்.” என்று கூறினார். 
உடனே, அர்ச்.சாமிநாதர், அவரிடம், “என்னிடம் இதைப்பற்றி எல்லாவற்றையும் கூறு. இது எப்பொழுது? எவ்வாறு நிகழ்ந்தது?” என்று வினவினார்.
 ரெஜினால்டு, “சுவாமி! ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எனக்குக் காய்ச்சல் மிகவும் அதிகரித்தது. உடம்பெல்லாம் நெருப்பாய் கொதித்தது. இனிமேல் என்னால் இந்த உக்கிரமமான காய்ச்சலைத் தாங்கமுடியாது. நான் இனி உயிர் வாழமுடியாது. வெகு சிக்கிரத்தில் இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன். அப்பொழுது திடீரென்று மோட்சத்திலிருந்து தேவமாதா மிகுந்த மாட்சியுடன் இங்கு தோன்றினார்கள். மோட்ச இராக்கினி, மிகுந்த பிரகாசத்துடனும் மகிமையுடனும் பேரழகுடனும் இளவயதுடனும் தோன்றினார்கள். அப்பொழுது, திவ்ய இராக்கினி புரிந்த அந்த பரலோகப் புன்னகையின் மாட்சிமையை என்னால் வர்ணிக்க முடியாது. அதன்பிறகு, அவர்கள் என்னிடம், “இவ்வுலகில் நீ  எதை மிகவும் அதிகமாக விரும்புகிறாய்? என்று என்னிடம் கூறு. அதை நான் உனக்குத் தருவேன்” என்று கூறினார்கள். எனக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒன்றும் புரியவில்லை. எனக்கு இந்த நோய் குணமாகவேண்டும் என்று கேட்கத் தோன்றவில்லை. அப்பொழுது, தேவமாதாவுடன் வந்த இரு மோட்சவாசிகளுள் ஒருவர் என்னிடம், “இதை தேவமாதாவின் கரங்களிலேயே ஒப்படைத்துவிடு. அவர்கள் உனக்கு எது அதிக பொருத்தமானதோ, அதையே உனக்குத் தருவார்கள்” என்று கூறினார். நானும் அவ்வாறே எனக்கு எது தேவை என்பதை தேவமாதாவின் திருவளத்திற்குக் கையளித்தேன். இதனால் மகிழ்வடைந்த மோட்ச இராக்கினி, என்னிடம் வந்து, ஒரு எண்ணையைக் கொண்டு என் மேல் பூசி சிறிது நேரம் ஜெபித்தார்கள். பிறகு, தேவமாதா, என்னிடம்,”மகனே, நல்ல இருதயத்தைக் கொண்டிரு. அர்ச்.சிக்ஸ்துஸ் மடத்தில் நீ ஒரு நல்ல போதக துறவியாக வேண்டுமென்பது சர்வேசுரனுடைய சித்தம். உன் மனக்குழப்பங்கள், அவற்றால் வரும் வியாதி எல்லாம் உன்னை விட்டு நிங்கும். என் உதவியினால் நீ  இந்த பரிசுத்த துறவற ஜீவியத்தில் நிலைத்திருப்பாய்” என்று கூறினார்கள்” என்று தான்
தேவமாதாவால் புதுமையாக குணமான நிகழ்வை அர்ச்.சாமிநாதரிடம் விவரித்தார். 
அப்பொழுது, அர்ச்.சாமிநாதர், அவரிடம், “அதன் பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார். 
அதற்கு அவர், “சுவாமி! இன்னுமொரு விநோதமான காரியம் நிகழ்ந்தது. நம் பரலோக இராக்கினி, என்னிடம் ஒரு வெண் கம்பளியினாலான ஒரு உத்தரியத்தைக் காண்பித்து, “இதோ உன் சபைக்கான துறவற உடை” என்று கூறினார்கள். நான் அந்த வெண்கம்பளி உத்தரியத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தேவமாதாவும் அவ்விரண்டு மோட்சவாசிகளும் மறைந்துவிட்டனர். எனக்கு நினைவு வந்ததும், காய்ச்சல் என்னைவிட்டு முற்றிலும் அகன்றுவிட்டது. நான் பூரண சுகமடைந்துவிட்டேன் என்று உணரலானேன்” என்று கூறினார். 
அர்ச்.சாமிநாதர் தம்முடைய இளந்துறவியை தேவமாதா நேரிலே வந்து புதுமையாக குணப்படுத்தியதை அறிந்து மிகவும் மகிழச்சியடைந்தார். பிறகு, அவர், ரெஜினால்டுவிடம், “சகோதரரே! நாம் நமது பரிசுத்த தேவமாதாவுக்கு நன்றி செலுத்துவோம். தேவமாதா காண்பித்த வெண் கம்பளி உத்தரியத்தின் அர்த்தம் என்ன வென்று அவர்களிடம் கேட்டு மன்றாடுவோம்” என்று கூறினார். பிறகு, இருவரும் சேர்ந்து, ரோம் நகரம் முழுவதும், உலகம் முழுவதும் விரைவிலேயே நேசிக்கப்போகும் அழகிய ஜெபத்தை ஜெபிக்கத் தொடங்கினர். 
“பிரியதத்தத்தினாலே பூரணமரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!..” என்று தேவமாதாவை நோக்கி அருள்நிறை மந்திரத்தை உருக்கமாக இருவரும் ஜெபித்தனர்.
மூன்று நாட்கள் கழித்து, மிண்டும் அர்ச்.சாமிநாதர் ரெஜினால்டுவை சந்திக்க சென்றார். அச்சமயம், அந்த இளந்துறவி விவரித்த காட்சி இன்னுமொருதடவை நிகழ்ந்தது. அர்ச்.தேவமாதா இரண்டு மோட்சவாசிகளுடன் அங்கு தோன்றினார்கள். மாதா, தமது கையில் வைத்திருந்த வெண்கம்பளி உத்தரியத்தைக் கொண்டு ரெஜினால்டுவை அணிவித்தார்கள். பிறகு இக்காட்சி மறைந்தது. இதைப் பார்த்த அர்ச்.சாமிநாதர், உடனே இக்காட்சியின் அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். அதாவது, வெண் கம்பளி உத்தரியத்தை தமது சபையைச் சேர்ந்த துறவிகளுடையவும் கன்னியாஸ்திரிகளுடையவும் துறவற உடையின் அதிமிக பரிசுத்த பாகமாக ஏற்கப்படவேண்டும் என்று தேவமாதா தமக்கு அறிவுறுத்துவதாக உணர்ந்தார். மேலும் இதுவே பரலோகத்திலிருந்து தமது சபைக்குக் கிடைத்த உண்மையான வெகுமானம் என்றும் தமது சபையின் மேல் தேவமாதா கொண்டிருக்கும் விசேஷ விருப்பத்தின் அடையாளம் தான் இந்த உத்தரியம் என்றும் அர்ச்.சாமிநாதர் அறிந்து கொண்டார். 
பிறகு, அர்ச்.சாமிநாதர், மகிழ்வுடனும் உற்சாகத்துடனும், ரெஜினால்டுவிடம், “இந்த பரிசுத்த சின்னத்தை, இப்பரிசுத்த உத்தரியத்தை, நீரே முதலில் பெறவிருக்கிறீர். அதைத் தகுதியுடன் எப்பொழுதும் அணிந்திருக்க தேவையான தேவவரப்ரசாதத்தை சர்வேசுரன் உமக்கு அருள்வாராக!” என்று கூறினார். 
பிறகு, அர்ச்.சாமிநாதர் தேவமாதாவிடமிருந்து அடையப்பெற்ற இப்பரிசுத்த உத்தரியத்தை தமது சபையினர் அனைவரும் அணிவதற்கான ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தார். அந்த நாளில், இதுவரைக்கும் சாமிநாதர்சபை துறவிகள் தங்களுடைய துறவற உடைக்குமேல் அணிந்து வந்த லினன் துணியிலான மேலாடையை நீக்கி விட்டு அதற்கு பதிலாக மாதா கொடுத்த இந்த வெண் கம்பளி உத்தரியத்தை பக்தி பற்றுதலுடன் அணிந்து கொண்டனர். இந்நாளிலிருந்து சாமிநாதர்சபை துறவிகள், “அர்ச்.கன்னிமாமரியின் சகோதரர்கள்” என்ற உயரிய பட்டத்தால் அழைக்கப்பட்டார்கள். ரெஜினால்டுவை தமது சபையில் சேர்த்துக்கொண்டபிறகு, சாமிநாதர், அவர் ஏற்கனவே நேர்ந்துகொண்டபடி, ஆண்டவருடைய பரிசுத்தபூமிக்கு தவயாத்திரையாக செல்லும் பயணத்தைத் தொடரும்படி அனுமதித்தார்.

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 2

 திவ்ய பலிபூசையைப் பழித்த பாவத்தினால் வந்த ஆக்கினை


ஆஸ்திரியா நாட்டில் கொனக்கோ என்ற ஊரில் சிறு பிள்ளைகள் ஆடுமாடு மேய்க்கிறபோது அவர்களுள் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, “கோயிலில் குருக்கள் பூசையை நிறைவேற்றுவதுபோல இங்கு நாமும் பூசை செய்து  விளையாடலாம். ஒரு பீடத்தை செய்து, ஒருவன் குருவைப்போல பூசை செய்ய, ஒருவன் பரிசாரகனைப் போலவும் மற்றவர் பூசை காண்பதுபோலவும் விளையாடலாம்” என்று கூறினான். அதற்கு எல்லாரும் சம்மதித்தனர். அங்கிருந்த ஒரு பெரிய கல்லைப் பீடம் போல வைத்து சுற்றிலும் அநேக பூக்களைக் கட்டினதுமல்லாமல் அந்தப் பீடத்தின்மேல் ஒரு அப்பத்தின் துண்டும் கொஞ்சம் திராட்சை இரசமும் வைத்தார்கள். 
பூசை செய்யக் குறிக்கப்பட்ட பையன் பூசை  உடுப்புகளைப்போல சில சட்டைகளை தன் மேல் போட்டுக்கொண்டு பூசைசெய்யத் துவக்கினான். பூசை செய்தவன் கோவிலில் குருவானவர் திவ்ய பலிபூசை நேரத்தில் செய்கிற சடங்குகளையெல்லாம் செய்தான். இதைக் கண்ட மற்ற பிள்ளைகள் மகிழ்ந்தனர். பிறகு, நடுப்பூசையில் குருவானவர் கூறும் வசீகர வார்த்தைகளை அப்பத்துண்டின் மிதும் திராட்சை இரசத்தின் மிதும் அச்சிறுவன் கூறினான். பிறகு, மற்றவர்களுக்கு நன்மை கொடுக்கிறதைப்போல கொடுக்க அந்த அப்பத்தைத் துண்டு துண்டாய்ப் பிட்கத் துவக்கினான். அந்தச் சமயத்தில் வானத்திலிருந்து நெருப்பு வந்து அந்த பீடத்திலிருந்த அப்பத்துண்டு, இரசம் முதலானவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கினது. மேலும் பீடமாக இருந்த அந்த பெரிய கல்லும் பொடிப்பொடியாய் நொறுங்கியது. அங்கேயிருந்த சிறு பிள்ளைகள் அனைவரும் பயத்தினால் சோர்ந்து நினைவில்லாமல் கிழே விழுந்து மாலை வரை நினைவின்றி மயங்கிக் கிடந்தார்கள். 
பிறகு அவர்களுடைய பெற்றோர்கள் தேடியபோது அவர்கள் எல்லாரும் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். பிள்ளைகளை பலமுறைத் தட்டிக் கூப்பிட்டாலும் அவர்கள் பேசாமல் எழமுடியாமல் கிடக்கிறதைக் கண்டு மிகுந்த பயமும் துக்கமும் அடைந்தார்கள். ஆனால் உயிர் இருக்கிற அடையாளம் கண்டு அவரவர் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அந்த இரவு முழுவதும் அவர்களுக்கு மருந்து கொடுத்தபோதிலும் அந்தப் பிள்ளைகளுக்குப் பேச்சு வரவில்லை.
மறுநாள் அவர்கள் வாய் திறந்து பேசிய பிறகு நடந்த சேதிகளைச் சொன்னார்கள். அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அந்தப் பிள்ளைகள் இருந்த இடத்திற்குத் திரும்பப் போய்ப் பார்க்கிறபோது பிள்ளைகள் சொன்னபடியே வானத்திலிருந்து விழுந்த நெருப்புக் கட்டியால் பீடம் போலிருந்த அந்த பெரியக் கல் நொறுங்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்நகர மேற்றிராணியார் இதை அறிந்ததும் அந்த இடத்தில் ஒரு தேவாலயமும் ஒரு சந்நியாசிகள் மடமும் கட்டினார். அந்தப் பிள்ளைகள் எல்லாரும் தங்களுக்கு புத்தி வந்தபிறகு, அந்த மடத்தில் சேர்ந்து உத்தம சந்நியாசிகளானார்கள்.
கிறிஸ்துவர்களே! வேதகாரியங்களை விளையாட்டாக செய்வது கனமான பாவம் ஆகும். அதிலும் குறிப்பாக நமது திவ்ய வேதத்தின் பரிசுத்த இருதயமாக விளங்கும் திவ்யபலிபூசை சடங்குகளை விளையாட்டாகச் செய்வது சர்வேசுரனுக்குக் கோபத்தை மூட்டும் செயல் ஆகும். எனவே திவ்யபலி பூசை சடங்குகளை மிகுந்த பக்தி பற்றுதலுடன் கண்டு, நம் திவ்ய இரட்சகரிடமிருந்து அபரிமிதமான ஞானபலன்களை அடைவோம்.
x

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 5 - Life History of St. Margaret of Hungary

அர்ச். மார்கிரட்  ஹங்கேரி



13ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹங்கேரி நாட்டை பேலா என்ற அரசர் ஆண்டு வந்தார். அது ஒரு மாபெரும் கத்தோலிக்க நாடாக விளங்கியது. அக்காலத்தில் கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளை அதுவும் முக்கியமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை டார்டார் என்ற காட்டுமிராண்டியினர் கைப்பற்றி அந்நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அரசர் பேலா தன் நாட்டை அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி ஆண்டவரிடம் மன்றாடினார். காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்களுடைய நாடு காப்பற்றப்படுமாகில் அதற்காக தங்களுக்கு பிறக்கும் குழந்தையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுப்பதாக நேர்ந்து கொண்டார். அவ்வாறே ஹங்கேரி யாதொரு திங்குமின்றி காப்பாற்றப்பட்டது. அதனால் அரசர் தனக்குப் பிறந்த குழந்தை மார்கிரட்டை அதன் 3வயது வயதில் வெஸ்ப்ரிம் என்ற இடத்தில் இருந்த அர்ச்.சாமிநாதர் சபை கன்னியர் மடத்தில் விட்டு வந்தார். 

சர்வேசுரனுடைய இல்லமாக விளங்கிய அம்மடத்தில் அக்குழந்தை தனக்கும் அத்துறவறசபையினருக்கான உடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தது. அப்பொழுது குழந்தை மார்கிரட்டுக்கு வயது 4. அந்த மடத்தில் இருந்த மற்ற கன்னியர் அனுசரித்த தபசுகளையும் அர்ச்.மார்கிரட் தனது குழந்தை பருவத்திலேயே கடைபிடிக்கலானாள். சுத்தபோசனம்,ஒருசந்தி,உபவாசம், மயிர்ச்சட்டையை உள்ளாடையாக அணிதல், நேச ஆண்டவரின் திவ்ய பாடுகளை உருக்கத்துடன் தியானித்தபடியே தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், இரவு நேரங்களில் திவ்யசற்பிரசாத நாதருடன் அவருடைய தேவநற்கருணைப் பேழைக்கு முன்பாக நிண்ட நேரம் நிந்தை பரிகார ஜெபங்களை தியானித்துக் கொண்டே தங்கள் நேச ஆண்டவருடன் கண்விழித்து தங்கியிருந்தல் போன்ற தவக்கிரியைகளில் குழந்தை மார்கிரட் ஈடுபட்டாள். 

அர்ச்.சாமிநாதர் சபையின் கட்டளை ஜெபத்தை அவள் அக்குழந்தை பருவத்திலேயே முழுவதும் மனப்பாடம் செய்தாள். அவள் விளையாடும் நேரங்களில் அக்கட்டளை ஜெபத்தை சங்கிதமாக பாடிக் கொண்டே அகமகிழ்வுடன் விளையாடுவாள். அச்சபையின் கன்னியாஸ்திரியாக நித்திய வார்த்தைப்பாடு கொடுத்தால் அதுவே மிகச்சிறந்த திருமணம். அரசரான தன் தந்தைக்கும், தனக்கும், எல்லாருக்கும், அதுவே, ஞானம் மிகுந்த வகையில் தெரிந்தெடுக்கப்பட்ட திருமணமாக, திகழும் என்று தனக்குள் எண்ணினாள்.பிறக்கும் முன்னரே, தான், சர்வேசுரனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதால், அந்தவாக்குதத்தத்திற்கு பிரமாணிக்கமாக விளங்க வேண்டுமென்பதில், அர்ச்.மார்கிரட் மிகவும் கவனத்துடனும் விழிப்புடனும் ஜீவித்து வந்தாள்.

அவளுக்கு 12 வயதானதும், சாமிநாதர் சபையின் தலைமை அதிபர் சங்.ஹம்பர்ட் சுவாமியார் முன்னிலையில் சபையின் வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவளுக்கு 18 வயது ஆனதும் பொஹேமியா நாட்டின் அரசன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதற்காக அவளுடைய தந்தையான பேலா அரசனும் ரோமாபுரி சென்று பாப்பரசரிடத்தில் தன் நேர்ச்சியிலிருந்து விடுதலைபெற்று மார்கிரட்டின் திருமணத்திற்கான அனுமதியையும் வாங்கி வந்தார். ஆனால் தன் தந்தையிடம் அர்ச்.மார்கிரட், “இந்த பொஹேமியா அரசனுடைய கிரீடத்தை விட மகத்துமிக்கவரான மாபெரும் அரசரான பரலோக அரசரைக் கொண்டிருப்பதும் நமது நேச ஆண்டவரை என் இருதயத்தில் குடியிருக்கச் செய்வதினால் எனக்கு ஏற்படும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியையுமே அளவில்லாத வகையில் உயர்வான உன்னதமான அந்தஸ்து என்று மதிக்கிறேன்”; என்று கூறினாள்.

இதைக் கேட்ட பேலா அரசனும் தன் மகளுடைய தேவஅழைத்தலைத் தடைசெய்யாமல் அவளுடைய தேவசிநேக ஜீவியத்திற்கு அனுமதியளித்தார். அதன்பிறகு, அர்ச்.மார்கிரட் தனது துறவற ஜீவியத்தில் இன்னும் அதிக மகிழ்வுடனும் உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் பக்திபற்றுதலுள்ளவளாக ஜீவிக்கலானாள். மடத்தில் யாராவது அவளுடைய அரசகுலத்தின் பெருமையைப் பற்றிப்பேச முற்பட்டால் உடனே அவள் ஹங்கேரி நாட்டை ஆண்டு வந்த, தனது மூதாதையரான அர்ச்.ஹங்கேரி எலிசபெத்தம்மாள், அர்ச்.ஹங்கேரி முடியப்பர், அர்ச்.ஹெட்விக் போன்றவர்களின் பரிசுத்த ஜீவியத்தினுடையவும் தேவ சிநேகத்தை முன்னிட்டு அவர்கள் கடைபிடித்துவந்த ஜெப தப பரிகார ஜீவியத்தின் மாண்பைப்பற்றியும் பேசி, உலக மாண்பின் வீண்பெருமையின் இழிநிலையைப்பற்றி சககன்னியர்கள் கண்டுணரச்செய்வாள். 

அந்நாட்டின் இளவரசி என்பதற்காக சாதாரண அலுவல்களிலிருந்து தனக்கு சலுகை அளிக்கப்படுவதை விரும்பாதவளாக, சமையலறையில் பாத்திரம் கழுவுதல், துணிதுவைத்தல், தரையை சுத்தம் செய்தல் போன்ற சாதாரண வேலைகளையும், இன்னும் மற்ற கனமான அலுவல்களையும் விரும்பி ஏற்று வந்தாள்.

எப்பொழுதும் மகிழ்வுடன் திகழ்ந்து வந்த அவள் நோயாளிகளின் அறையைக் கண்காணிக்கும் அலுலையும் ஏற்று வந்தாள். அர்ச்.மார்கிரட்டின் தேவசிநேகத்தினால் தூண்டப்பட்ட பிறர்சிநேக ஜீவியத்தையும் பரலோக புன்னகை தவழும் அவளுடைய முகத்தையும் கண்டு ஈர்க்கப்பட்டவர்களாக, அந்நோயாளிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவளை வரவேற்பர்.

ஆண்டவருடைய திவ்ய பாடுகளின் தேவஇரகசியங்களை தியானிக்கும் போது அந்நிகழ்வுகளை அவள் நேருக்கு நேராக காட்சியில் பார்ப்பவளாக தன்னையே அத்தியானத்தில் இழந்து விடுவாள். உண்மையாகவே சிநேக தேவ இரட்சகர் அனுபவித்த அத்தகைய கொடூரமான பாடுகளுக்குப்  பரிகாரமாக தொடர்ந்து நீண்ட ஒருசந்தி உபவாசங்களில் இருப்பாள். தன்னையே கொடூரமாக சாட்டையால் அடித்துக் கொள்வாள். அதன் காரணமாக மற்ற தபசுகளையும் கடைபிடிப்பாள். தேவமாதாவின் மிது அவள் மிகுந்த பக்திபற்றுதல் கொண்டிருந்தாள். எல்லா தேவமாதாவின் திருநாட்களிலும் மோட்ச இராக்கினி மிது தனக்கிருந்த நேசத்தை முன்னிட்டு 1000 தடவை அருள்நிறை மந்திரத்தை மிகுந்த பக்திபற்றுதலுடன் ஜெபித்து வருவாள். அதேபோல பரிசுத்த பூமியான ஆண்டவர் வாழ்ந்த பாலஸ்தீனத்தையும், ரோமாபுரி மற்றும் எல்லா புண்ணிய ஸ்தலங்களையும் சென்று தரிசிக்க மிகவும் ஆசித்தாள். ஆனால் அடைபட்ட மடத்தில் இருந்த கன்னிகையான அவள்,அந்த இடங்களுக்கெல்லாம் செல்லக்கூடாததினால், அந்தந்த புண்ணியஸ்தலம் தான் இருந்த இடத்திலிருந்து எவ்வளவு மைல் தொலைவு இருந்ததோ அத்தனை தடவை (அந்த இடத்திற்கு சென்று வருவதற்கு எத்தனை மைல்கள் ஆகுமோ அத்தனை தடவை) அருள்நிறை மந்திரத்தை சொல்லிக் கொண்டே நினைவால் அந்த இடத்திற்கு தவயாத்திரையாக சென்று வருவாள். 

தபசுக் காலத்தில் பெரிய வெள்ளிக்கிழமையன்று, ஆண்டவருடைய திவ்ய பாடுகளின் அகோரத்தையும் அவர் அனுபவித்த கொடூரமான உபாதனைகளையும் குறித்து, அன்றைய தினம் முழுவதும் மார்கிரட்டம்மாள் அழுது கொண்டே இருப்பாள். அடிக்கடி அம்மடத்தில் அர்ச்.மார்கிரட்டம்மாள் ஜெபதியானத்தின் போது பரவச நிலைக்கு சென்று விடுவாள். அவளுடைய அந்நிலையை யாராவது கண்டாலோ அல்லது அவளுடைய பரிசுத்த அந்தஸ்தைப்பற்றி யாராவது குறிப்பிட்டாலா அவள் மிகவும் சங்கடப்படுவாள். அவள் ஜீவிக்கும் போதே அநேக புதுமைகளை நிகழ்த்தியுள்ளாள். அதைவிட அதிகமான புதுமைகள் அவளுடைய இறப்பிற்கு பிறகு நிகழ்ந்தன. அவளுடைய கன்னியர் மடம் இருந்த தீவு முன்னர் பரிசுத்த கன்னிமாமரியின் தீவு என்று அழைக்கப்பட்டது. 

அர்ச்.மார்கிரட்டின் மறைவிற்கு பிறகு நிகழ்ந்த அநேக புதுமைகளின் காரணமாக அத்தீவு மார்கிரட்டின் திவு என்று அழைக்கப்படுகிறது. வெள்ள அபாயம் ஏற்படும்போது அதிலிருந்து தப்புவிப்பதற்காக அர்ச். மார்கிரட்டம்மாளிடம் வேண்டிக் கொள்ளலாம். ஒருமுறை ஹங்கேரியில் உள்ள டான்யூப் நதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டபோது புதுமையாக அர்ச்.மார்கிரட்டம்மாள் அதை தடுத்து நிறுத்தினாள்.

அவள் 1270ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று பாக்கியமான மரணம் அடைந்து தன் நேச ஆண்டவரிடம் மகிமையின் முடியைப் பெறச் சென்றாள்.

சனி, 15 ஜனவரி, 2022

catholic Stories - கத்தோலிக்க சிறுகதைகள் - 1

 அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் செம்மறி ஆடு நடுப்பூசையில் ஆண்டவரை ஆராதித்த புதுமை



அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வைப்பற்றி அர்ச்.பொனவெந்தூர் தமது புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்: ஐந்து காய வரம் பெற்ற அர்ச்.பிரான்சிஸ், திவ்ய கர்த்தரின் பாடுகளைப் பற்றி மிகுந்த பக்தியுடையவராயிருந்ததால், ஆண்டவருடைய பாடுகளின் பேரில் தமக்கு அடிக்கடி நினைவு வரவேண்டும் என்பதற்காக ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தமதருகில் இருப்பதற்குப் பழக்கம் பண்ணினார். அர்ச்.பிரான்சிஸ் எங்கேயிருந்தாலும் அந்த ஆட்டுக்குட்டியும் அவர்கூடவே இருக்கும். செம்மறி ஆடு ஆண்டவருடைய திவ்யபலியின் அடையாளமாக இருப்பதால், அந்த ஆட்டுக்குட்டியைக் காணும்போதெல்லாம், திவ்ய கர்த்தர் பாடுபட்டதை நினைத்து, அழுதுகொண்டு அந்தப் பாடுகளின்பேரில் தியானம் பண்ணுவார்.ஒருசமயம், அர்ச்.பிரான்சிஸ் திவ்யபலிபூசை காண்கிறபோது, அந்த ஆட்டுக்குட்டியும் அவரருகில் படுத்துக்கொண்டது. நடுப்பூசை சமயத்தில் குருவானவர் தேவநற்கருணை எழுந்தருளப்பண்ணுகிற மணிச்சத்தம் கேட்டவுடனே, ஆட்டுக்குட்டி எழுந்திருந்து, தன் முன்னங்கால் இரண்டையும் மடித்துத் தலைகுனிந்து, மகா பரிசுத்த தேவநற்கருணைநாதரை ஆராதித்து வணங்கியது.

அதைக் கண்டு திவ்யபலிபூசையில் எழுந்தருளியிருக்கிற நேச ஆண்டவரான சேசுநாதர்சுவாமியின் பேரில் மிகுந்த பக்தியினால் அழுதார்.
கிறிஸ்துவர்களே! திவ்யபலிபூசை நேரத்தில் குருவானவர் அணிந்திருக்கிற வஸ்திரத்தின் அர்த்தத்தை நிங்கள் அறிந்தால் உங்களுக்கு அதிக பக்தி ஏற்படும். குருவானவர் முதுகில் தரித்திருக்கிற சிறிய துண்டு, யூதர் பரிகாசமாக சுவாமியுடைய திவ்ய திருமுகத்தை மறைத்த வஸ்திரத்தின் அடையாளம். அவர் அணிகிற வெள்ளை அங்கி, சுவாமியை பைத்தியமென்று எண்ணி, பரிகாசமாக ஏரோது, ஆண்டவர் மேல்போட்ட வெள்ளைச் சட்டைக்கு அடையாளம். குருவானவர் தரித்திருக்கிற இடுப்புக் கயிறு, சேவகர் ஆண்டவரைப் பிடிக்கிறபோது அவரைக் கட்டின கயிற்றின் அடையாளம். குருவானவர், கையில் அணிகிற நிண்டப் பட்டு, ஆண்டவரைக் கற்றூணூடே கட்டின அடையாளம். குருவானவர் கழுத்தில் அணிகிற நீண்ட பட்டு உத்தரியம் ஆண்டவர் சிலுவை சுமந்துபோகிற போது யூதர்கள் அவர் முகத்தில் போட்ட கயிற்றின் அடையாளம். குருவானவர் தரித்திருக்கிற பெரிய பட்டு மேலாடை யூதர் பரிகாச ராஜாவாக ஆண்டவர் மேல்போட்ட சிகப்புப் பட்டுக்கு அடையாளம். எனவே திவ்யபலிபூசையில் பக்தியற்று நம் ஆண்டவரை ஆராதியாமல் இருக்கும் கெட்ட கிறிஸ்துவர்களும் அந்த துஷ்ட யூதர்களுடன் சேர்ந்து மிண்டும் திவ்ய இரட்சகரை நிந்திக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்குணர வேண்டும். நாம், திவ்யபலிபூசையைக் காண்கிறபோது, எப்பொழுதும் மிகுந்த பக்தியுடன் ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டும். நடுப்பூசையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய கர்த்தரை நாம் திவ்ய நன்மையில் உட்கொள்ளும் வரை ஆராதித்துக்கொண்டிருக்க வேண்டும். 

அதன்பிறகு தேவமாதாவுடனும், சகல மோட்சவாசிகள், நமது பாதுகாவலான அர்ச்சிஷ்டவர்கள், மற்றும் நம் காவல் சம்மனசானவரின் உதவியுடனும் நம் நேச ஆண்டவரை நம் ஆத்துமத்தில் வரவேற்று ஆராதித்து, அவருடன் உரையாட வேண்டும். பகுத்தறிவில்லாத இந்த ஆடு ஆண்டவரை ஆராதித்ததைப் பார்த்தோம். ஆனால், எத்தனையோ கிறிஸ்தவர்கள், மந்தபுத்தியுள்ளவர்களாக கோவிலில் ஆண்டவருக்கு எந்த பக்தி ஆச்சாரம் எதுவும் காண்பிக்காமல் அசமந்தர்களாக இருப்பதைக் காணும்போது அவர்கள் எதற்காக கோவிலுக்கு வருகிறார்கள்? யாருடைய (பசாசுடைய!!) கருவிகளாக அங்கு செயல்படுகிறார்கள் என்பதை நன்கு சிந்திப்போம்.

வெள்ளி, 14 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 30

 

ரெஜினால்டு சபையில் சேர விரும்புதல்


அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டுவிடம், “உங்களுடைய பிரச்னை உங்களுடைய வருங்கால ஜீவியத்தைப் பற்றியதா?” என்று வினவினார். 

“ஆம். சுவாமி” என்று அவர் பதில் கூறினார். 

மேலும் அர்ச்.சாமிநாதர், “அது என்ன பிரச்சனை என்று சரியாக நான் கூறட்டுமா? சர்வேசுரன் உங்களுக்கு நல்ல மனதையும், சுகத்தையும், நல்ல நண்பர்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கிறார். இவ்வளவு காலமாக நீங்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மாணவர்களிடையே நல்ல கல்வியை போதிப்பதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். ஆனால் இதெல்லாம் உங்கள் இருதயத்தில் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கும் மேலான ஏதோ “அதிகப்படியான ஒன்றை” நீங்கள் ஆசிக்கிறிர்கள். உங்களுடைய நல்ல மனது, உங்களையும் உங்களுடைய எல்லா வெகுமதிகளையும் சர்வேசுரனுடைய ஊழியத்திற்காக உடனே அர்ப்பணிப்பது தான், “அந்த அதிகப்படியான ஒன்று” என்று உங்களுக்கு அறிவுறுத்துகின்றது” என்றார்.

அர்ச். சாமிநாதர் கூறிய இவ்வார்த்தைகள் அவ்விளைஞனின் இருதயத்தில் மாபெரும் பாதிப்பை

ஏற்படுத்தியது. ரெஜினால்டு கண்ணிர் விட்டு அழுதுகொண்டே “சுவாமி! நீங்கள் கூறுவது உண்மை தான். பல ஆண்டுகளாக நம் நேச ஆண்டவருக்காக உலகைத் துறப்பதற்கான தைரியத்தை மன்றாடி வருகிறேன். ஆனால், என் சுயாதீனத்தை மறுதலித்துவிட்டு, ஒரே இடத்தில் கட்டுண்டுவனாக, ஒரு துறவற அதிபருக்கு என்னை முற்றிலும் கிழ்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே, என்னை இது நாள் வரைக்கும் அச்சுறுத்தி வந்திருக்கிறது. மேலும் குருத்துவ அந்தஸ்திற்கான பொறுப்புகள் எவ்வளவு மகத்துவமிக்கவை. அந்த பரிசுத்த அழைத்தலில் நான் என் ஜீவிய காலமெல்லாம் நிலைத்திருப்பேனா? என்றெல்லாம் வீண் அச்சங்கள் என் மனதில் இருந்தன. ஆனால், சுவாமி! இப்பொழுது, சர்வேசுரனுடைய தேவ அனுக்கிரகத்தால், நானும் ஒரு நல்ல துறவியாக முடியும் என்று நம்புகிறேன். சிக்ஸ்துஸ் மடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்கிறிர்களா? உங்களுடைய போதக துறவிகளைப்போல சர்வேசுரனுக்கு என்னையே எவ்வாறு அர்ப்பணிப்பது என்று எனக்கும் காண்பிக்கறீர்களா?” என்றார்.

உடனே தம் கண்கள் மிளிர்ந்தவாறு, அர்ச்.சாமிநாதர்,“நிச்சயமாக, என் மகனே! இன்று நீ பெற்றுக்கொண்ட தேவவரப்ரசாதத்திற்காக சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!” என்றார். 

பிறகு, அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து மறைந்ததும், பசாசின் சூழ்ச்சியால், ரெஜினால்டுவின் பழைய அச்சங்கள்

மீண்டும் அவருடைய மனதை ஆட்கொள்ளலாயின. இதுவரை பாரீஸில் தனது ஜீவியம் உத்தமமானதாகவே இருந்தது என்றும், 30 வயதான தனக்குரிய பழக்கவழக்கங்களை இனிமேல் மாற்றுவது மிகக் கடினமானதென்றும், ஒரு துறவற சபையில் உட்படாமலேயே மோட்சம் சேரமுடியும் என்றும் ரெஜினால்டு சிந்திக்கலானார். இதைப் பற்றி அறிந்ததும், அர்ச்.சாமிநாதர், இந்த ஞானபோராட்டத்தில் ரெஜினால்டு வெற்றியடையும்படியாக, தமது ஜெபதப பரிகாரங்களை இரட்டிப்பாக அதிகரித்தார். தமது சபையின் மற்ற துறவிகளையும், இந்த கருத்துக்காக அதிகம் ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

அவர்களிடம்,“இந்த பிரெஞ்சு இளைஞர், மிக நல்லவர். நமது சபையில் உட்பட்டால் அநேக நற்செயல்களை புரிவார். குறிப்பாக இளைஞர்களை சர்வேசுரன்பால் கொண்டு வருவார். இந்த ஆத்துமத்தை நாம் இழந்து விடாதபடிக்கு தொடர்ந்து ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்று கூறினார்.

ஒருநாள் சிக்ஸ்துஸ் மடத்திற்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். ரெஜினால்டு, காய்ச்சலினால் அவதிபட்டு மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். “இந்த இளைஞர் ஏதோ ஒன்றை நினைத்து மிகவும் கவலைக் கொண்டிருக்கிறார். அது அவருடைய மனதை மிகவும் பாதித்துள்ளது. ஒரு சமயம் அவர் தெளிவடைகின்றார். வேறொரு சமயம் குழப்பத்துக்கு ஆளாகிறார். ஆத்துமத்தையே இழந்துபோகும் அளவிற்கு தன்னை இட்டுச் சென்ற, தனது பாவங்களுக்காக, துக்கப்படும் அவர், பெறப்போகும் தேவவரப்ரசாதத்திற்கு தான் தகுதியற்றவன் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறார்” என்று மருத்துவர் அர்ச்.சாமிநாதரிடம் கூறினார். 

.அதற்கு சாமிநாதர், “ஆனால் நிச்சயமாக அவர் இதிலிருந்து தேறிவிடுவாரா?” என்று வினவினார். 

அதற்கு மருத்துவர், “அது எனக்குத் தெரியாது. ஏனெனில், அவரை உபாதிக்கும் இந்த மன உளைச்சல், அவருடைய தேகபலம் முழுவதையும் தகர்த்துள்ளது. இது அவருக்கு நல்லதல்ல” என்று தயக்கத்துடன் கூறினார். துறவற வார்த்தைபாடுகள் கொடுக்குமுன்னரே, ரெஜினால்டு இறந்துவிடுவாரோ என்ற துயர நினைவால், சிக்ஸ்துஸ் துறவற மடம் முழுவதும் மூழ்கி இருந்தது. அப்பொழுது அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டுவின் படுக்கையண்டையில் வந்து, அவரிடம், “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நம் தேவமாதா, எல்லாவற்றையும் சரியாக மாற்றி, யாதொரு ஆபத்தும் ஏற்படாமல், இந்நோயினின்று உங்களைப் பாதுகாப்பார்கள் என்று நிச்சயமாக நம்புங்கள்” என்றார்.

அப்பொழுது, ரெஜினால்டு, அதை மறுப்பதுபோல, தன் தலையை வேகமாக அசைத்தார்.