Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 30 செப்டம்பர், 2023

October 2 - Feast of Guardian Angel

 அக்டோபர் 2

காவலான சம்மனசுக்களின் திருநாள்



பிரவேசம்: சங். 102. 20

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவரு டைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தி துதிப்பாயாக. என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, வாக்குக் கெட்டாத தேவ பராமரிப்பினால் எங்களுக்கு காவலாகத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி வைக்கத் தயை செய்தருளினீரே. நாங்கள் இம்மையில் அவர்களுடைய ஆதரவினால் என்றும் காப்பாற்றப்பட்டு, மறுமையில் அவர்களுடைய கூட்டத்தில் நித்தியமாய் மகிழும்படி உம்மை இரந்து மன்றாடிக் கேட்போருக்கு கிருபை புரிந்தருளும் . - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (யாத். 23. 20-23)

ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாக்கிறதற்கும், நாம் உனக்காக  முஸ்திப்புச் செய்த ஸ்தானத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நாம் ஒரு தூதனை அனுப்புவோம். அவரைச் சங்கித்திருக்கவும், அவருடைய வாக்குக்குச் செவிகொடுக்கவும் அவருக்குப் பயந்து நடக்கவுங்கடவாய். ஏனெனில் நீ பாவஞ் செய்தால் அவர் பொறுப்பதில்லை. நமது நாமம் அவரிடத்திலுண்டு. நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து நாம் திருவுளம்பற்றுகிறதெல்லாம் அனுசரிப்பா யாகில் நாம் உன் பகையாளிகட்குப் பகையாளியாகி உன்னை உபாதிப் பவர்களை உபாதிப்போம்.  நமது தூதன் உனக்கு முன்னே செல்லுவார்.

படிக்கீதம்: (சங். 90. 11-12)

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காக சர்வேசுரன் தம்முடைய சம்மனசுக்களுக்கு கட்டளையிட்டார். – உன் பாதம் கல்லில் இட றாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 102. 21) ஆண்டவருடைய சி;த்தத்தின் படியே நடக்கிற அவருடைய சேனைகளும் ஊழியர்களுமான தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 18. 1-10)

அக்காலத்தில் சீஷர்கள் சேசு நாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: . நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப் பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு!  ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடற லாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 102. 20-21)

சகல சம்மனசுக்களே, ஆண்டவருடைய வார்த்தையைக்கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத் சம்மனசுக்களுக்கு வணக்கமாக நாங்கள் உமக்குச் சமர்ப்பிக்கும் கொடைகளைக் கையேற்றுக் கொள்ளும். அவர்களுடைய இடைவிடாத ஆதரவினால் நாங்கள் இவ்வுலக இடையூறுகளி னின்று விடுவிக்கப்பட்டு, நித்திய சீவியம் வந்து அடையத் தயவாய்த் திருவருள் புரிந்தருளும்.. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (தானி. 3. 38)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங் கள். அவருக்கு தோத்திரம்பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலா கப் போற்றுங்கள்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவர்Pருடைய பரிசுத்த சம்மனசுக்களின் திருநாளில் ஆனந்தம் கொண்டாடித் தெய்வீக பரம இரகசிய அநுமானங்களை உட்கொண்டோம். அவர்களுடைய பாதுகாப்பால் நாங்கள் விரோதிகளுடைய கண்ணிகளினின்று என்றும் விடுதலையடையவும், சகல பொல்லாப்புகளினின்றும் தற்காக்கப்படவும் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …


 


October 3 - St. Therese of Child Jesus

அக்டோபர் 3

குழந்தை சேசுவின் அர்ச். தெரேசம்மாள்

போதகநாடுகளின் பாதுகாவலி




பிரவேசம்: உன்னத சங். 4. 84

லீபானின்று வருவாய் மணவாட்டியே, லீபானின்று வருவாய். என் இருதயத்தை புண்ணாக்கி விட்டாய். என் சகோதரியே, மணவாட்டியே, என் இருதயத்தைக் காயப்படுத்தினாய். (சங். 112. 1) பிள்ளைகளே ஆண்டவரை துதியுங்கள். ஆண்வடருடைய திருநாமத்தை புகழுங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, சிறுவர்களைப்போல் ஆகாவிட்டால் நீங்கள் பரலோக இராச்சயத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று திருவாய் மொழிந்தரு ளினிரே. இருதயத் தாழ்ச்சியிலும் நேர்மையிலும் கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் முன்மாதிரியை இவ்வுலகில் பின்பற்றி நடந்து, நித்திய சம்பாவனையை அடைந்துகொள்ள திருவருள் புரிந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.  - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் 

நிருபம்;  (இசை. 66. 12-14)

ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : இதோ நாம் சமாதானத்தை ஓர் நதியைப்போலும், சனங்களுடைய மகிமையை மடைபுரண்ட வெள்ளம்போலும் அவள் பேரில் ஒடவிடுவோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மாரோடு அணைக்கப் படுவீர்கள், மடியில் சீராட்டப்படுவீர்கள். தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது எங்ஙனமோ அப்படியே உங்களுக்கு ஆறுதல் செய்வோம், நீங்களும் எருசலேமில் சமாதானமடைவீர்கள். இவைகளை நீங்கள் பார்ப்பீர்கள், உங்கள் இருதயமும் சந்தோஷங் கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப்போல் பச்சை கொண்டெழும்; ஆண்டவர் தம் ஊழியர்கள் சார்பாக தம் வல்லபத்தை அறியப் பண்ணுவார்.

படிக்கீதம்: (மத். 11: 25)

பிதாவே பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவரே, நீர் இவற்றை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து, சிறியோர்களுக்கு வெளிபடுத்தி யதால் உம்மை துதிக்கிறேன். – (சங். 70: 5) ஆண்டவரே, என் இளமை துவக்கி என் நம்பிக்கையாய் இருக்கிறீர்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சர். பிர. 39. 17-19) ஆற்றின் கரையில் நடப்பட்ட ரோசாவைப்போல பலன் கொடுங்கள். லீபானைப்போல இனிய வாசனையக் கொடுங்கள். லீலியைப்போல் பூக்களை புஷ்பியுங்கள். வாசனையை வீசுங்கள். தளிர்த்து அழகை அணிந்து கொள்ளுங்கள். சங்கீதத்தை கூடிப் பாடுங்கள். ஆண்டவரை அவருடைய செய்கைகளைப் பற்றி வாழ்த்துங்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 18. 1-10)

அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசுநாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். என்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (லூக்.1. 46-49)

என் ஆத்தும் ஆண்டவரை தோத்திரஞ் செய்கின்றது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் ஆத்துமம் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தமது அடிமையானவர்களுடைய தாழ்ச்சியை இரக்கத்துடன் நோக்கி னார். வல்லபமிக்கவர் மகத்தானவற்றை என்னிடத்திற் செய்தருளுனினார்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் பக்தியுள்ள வேண்டுதல் எங்களுடைய பலியை உமக்கு ஏற்றதாகக்கடவது. அவளுடைய மகிமையைக் குறித்து சிறப்பாக அப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதினால் அவளுடைய பேறுபலன்களை முன்னிட்டு அது உமக்கு உகந்ததாகவும் இருக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (உபா. 32. 10,21)

அவர் அவளைச் சுற்றி நடத்தி, அவளுக்குப் போதித்துத் தன் கண்மணியைப் போல் அவளைக் காத்தருளினார். கழுகு தன் சிறகுகளை விரிப்பதுபோல் அவளை எடுத்துக் கொண்டு தன் தோள்களின்மேல் சுமந்துபோனார். ஆண்டவர் ஒருவரே அவளை நடத்தினார்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாள் தன்னை மனிதருக்காக சிநேகத்தின் பலியாகத் தேவரீருக்கு தகனமக்கிய அச் சிநேகத்தின் அக்கினியால் இந்த திவ்விய பரம இரகசியம் எங்களைப் பற்றி எரிக்கக்கடவது. – தேவரீரோடு …




 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

October 1 - St. Remigius அர்ச். ரெமிஜியார்

 


அக்டோபர் 1

அர்ச். ரெமிஜியார்

மேற். துதியர்.

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . 
.
சபைச் செபம்.

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக் காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணி யாருமான முத்திபேறுபெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய  வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


Previous

Next
 


Sacerdotes Dei - மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2

 மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2
Sacerdotes Dei

பிரவேசம்: தானி. 3. 84,87

சர்வேசுரனுடைய குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பரிசுத்தர்களே, இருதய தாழ்ச்சியுள்ளவர்களே சர்வேசுரனைத் துதியுங்கள். (தானி. 3. 57)  ஆண்டவருடைய சகல கிரியைகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். அவரை என்றென்றைக்கும் துதித்து, எல்லாருக்கும் மேலாக உயர்த்துங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப்பேறுபெற்ற (இன்னாருடைய) வருடாந்திரத் திருநாளில் மகிழச் செய்கிறீரே. அவருடைய பரலோகப் பிறப்பு நாளை கொண்டாகிற நாங்கள் அவருடைய பாதுகாவலையும் பெற்றுக் களிகூரத் தயவாய்க் கிருபை செய்தருளும். தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (2. கொரி. 1: 3-7)

சகோதரரே, சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக் கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்க ளுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார். அதெப்படியென்றால், கிறீஸ்துநாதருடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல், கிறீஸ்துநாதர் வழியாக எங்களுக்கு ஆறுதலும் பெருகிவருகிறது. நாங்கள் துன்பப்பட்டால் அது உங்களுடைய ஆறுதலுக்காகவும், இரட்சண யத்துக்காகவுந்தான். நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்காகத்தான். நாங்கள் தெம்படைந்தால், அது உங்களுடைய தெம்புக் காகவும் இரட்சணியத்துக்காகவுந்தான். அந்த இரட்சணியமானது நாங்கள் எவ்வித பாடுகளைப்படுகிறோமோ, அவைகளை நீங்களும் பட்டனுபவிக்கும்படி செய்கிறது. பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளாயிருக்கிறதுபோல, ஆறுதலுக்கும் பங்காளிகளாயிருப்பீர்களென்று நாங்கள் அறிந்திருக்கிறதினாலே, உங்கள் மேல் எங்களுக்கு உறுதியான நம்பிக்கையுண்டாயிருக்கிறது.

படிக்கீதம்: (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினார். – ஆண்டவரே உம்முடைய கரங்களின் செய்கைகளின்மேல் அவருக்கு அதிகாரம் கொடுத் தருளினீர்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவர் முடி சூட்டிய குரு இவர்தான். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 113. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய உற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

சுவிஷேசம் (மத். 16. 24-27)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீடர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான். ஏனெனில் தன் பிராணனைக் காப்பாற்ற மனதாயிருக்கிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் பிராணனை இழப்பவனோவென்றால் அதைக் கண்டடை வான். மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுமகன் தம்முடைய பிதாவின் மகிமையிலே தன் தூதர்களோடு கூடவருவார். அப்பொழுது ஒவ்வொ ருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாகப் பலன் அளிப்பார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீரைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகம் செய்தோம். ஏனெனில், நமது கரம் அவனுக்கு உதவி புரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு சமர்பிக்கப்பட்ட கொடைகளை தேவரீர் பரிசுத்த மாக்கியருளும். உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலால் அவைகளின் நிமித்தம் எங்கள் பேரில் சாந்தியாகிக் கண்ணோக்கியருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (சங். 20. 4)

ஆண்டவரே, அவர் சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, இச்சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களைப் பாவத்தினின்று பரிசுத்தமாக்கித் தேவரீருடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப் பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் எங்களை பரலோக மருந்தில் பங்குபற்றுவோராகவும் செய்யக்கடவது – தேவரீரோடு …


Previous                                               Download                                                           Next


சனி, 23 செப்டம்பர், 2023

September -29 St. Michael the Archangel

 செப்டம்பர் 29

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் 
ஆலய அபிஷேக திருநாள்



பிரவேசம் (சங். 102. 20)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். (சங். க்ஷை : 1) என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.- பிதாவுக்கும்.....

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் சம்மனசுக்களுடையவும், மனிதர்களுடை யவும் பணிவிடைகளை ஆச்சரியமான ஒழுங்கோடு நடத்திக் கொண்டு வருகிறீரே பரலோகத்தில் தேவரீருக்கு இடைவிடாமல் ஊழியஞ்செய்து, வருகிற வர்களால் இப்பூலோகத்திலும் எங்களுடைய சீவியம் ஆதரித்துக் காப்பாற்றப் படும்படி தயவாய்க் கிருபை செய்தருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் ...

நிருபம்  (காட்சி. 1. 1-5)

அந்நாட்களில் சீக்கிரத்தில் நடக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியர் களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, சர்வேசுரன் சேசுக்கிறீஸ்துவுக்கு ஒப்புவித் ததும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியனாகிய அருளப்பருக்கு அறிவித்ததுமாகிய காட்சி: இவர் சர்வேசுரனுடைய வாக்கியத் துக்குச் சாட்சியஞ் சொல்லி, தாம் கண்ட யாவற்றையும் சேசுக்கிறீஸ்து நாதருடைய சாட்சியாக வெளிப்படுத்தினார். இந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள வாக்கியங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவனும், இதிலே எழுதியிருக் கிறவைகளை அநுசரிக்கிறவனும் பாக்கியவான். ஏனெனில் காலம் சமீபித்திருக் கின்றது. அருளப்பன் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுவதாவது: இருக்கிறவரும், இருந்தவரும், இனி வருபவருமானவராலும், அவருடைய சிங்கா சனத்துக்கு முன்பாக நிற்கிற ஏழு அரூபிகளாலும், சேசுக்கிறீஸ்து நாதராலும் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக. இவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல் பேறானவரும், பூமியின் இராஜாக்களுக்கு அதிபதியுமாயிருக்கிறார். இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மை கழுவினார். 

படிக்கீதம்: (சங். 102. 20, 1)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். - என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என் உள்ளங்கள் யாவும் அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா அதிதூதரான அர்ச். மிக்கேலே, பயங்கரமான தீர்வையில் நாங்கள் நாசமடையாதிருக்கும்படி எங்களை யுத்தவேளையில் காப்பாற்றியருளும். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு! ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப் படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (காட்சி. 8. 3-4)

ஓர் சம்மனசு பொன் தூபகலசத்தைக் கையிலேந்திக்கொண்டு, ஆலயத்தின் பலி பீடத்தினருகில் நிற்க, அவருக்கு ஏராளமான தூபம் அளிக்கப்பட்டது. தூபவர்க்கப் புகை சர்வேசுரனுடைய சமூகத்தில் எழும்பிற்று, அல்லேலுய்யா.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, இப்புகழ்ச்சி பலியை நாங்கள் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்து, எங்களுக்காக பரிந்து பேசும் சம்மனசுக்களுடைய மன்றாட்டின் பெயரால் தேவரீர் அதைத் தயவாய் ஏற்றுக்கொள்ளவும், அது எங்களுடைய இரட்சணியத்துக்கு உதவியாயிருக்கும்படி அருள் செய்யவும் தேவரீரை தாழ்மையாய் கெஞ்சி மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (தானி. 3. 58)

ஆண்டவருடைய சம்மனசுக்களே நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த் துங்கள். அவருக்கு தோத்திரம் பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துங்கள்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய அதிதூதரான முத்திப்பேறு பெற்ற மிக்கேலின் சலுகையில் நம்பிக்கையுள்ள நாங்கள், வாயினால் கேட்பதை ஆத்துமத்தில் பெற்றுக்கொள்ளும்படி தேவரீரை இரந்து மன்றாடுகிறோம். – தேவரீரோடு …



 


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

September - 27 - Sts. Cosmos & Damian - அர்ச். கோஸ்மானும், தமியானும்

 செப்டம்பர் 27

அர்ச். கோஸ்மானும், தமியானும்

வேதசாட்சிகள்



பிரவேசம்: சர். 44. 15-14

பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள், சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள், அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரைக் கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய வேதசாட்சிகளான அர்ச். கோஸ்மானும், தமியானுமென்பவர்களுடைய பரலோக பிறப்புநாளைக் கொண்டாடுகிற நாங்கள், எங்களுக்கு நேரிடவிருக்கும் எவ்வித தீமையினின்றும் விடுவிக்கப்பட, அவர்களுடைய வேண்டுதலைப் பார்த்துத் திருவருள் புரிந்தருள உம்மை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்  (ஞான. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 33. 18-19)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். இருதயத்தில் வேதனைப்படுகிறவர்களுக்கு துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சி யுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா உலகத்தின் அக்கிரமங்களை செயிக்கும். உண்மையான சகோதரத்துவம் இதுவே, இது கிறஸ்துவைப் பின்பற்றி, இப்பொழுது மோட்ச இராச்சியத்தை மகிமையாய் அடைந்து கொண்டது.  அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

உமது நாமத்தை நேசிக்கும் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள். ஏனெனில், ஆண்டவரே, நீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர். ஆண்டவரே, உமது தயாளத்தினால் கேடயம்போல் எங்களை மூடிக் காத்தருளினீர். 

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான்களுடைய உருக்கமுள்ள மன்றாட்டு எங்களுக்குக் குறைவுபடமாலிருக்கக் கடவது. மேலும் அது எங்களுடைய காணிக்கைகளை தேவரீருக்கு உகந்தனவாக்கி, உமது மன்னிப்பை எங்களுக்கு என்றும் அடைந்து கொடுப்பதாக. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 78. 2, 11)

ஆண்டவரே உமது ஊழியர்களுயைட பிரேதங்களை ஆகாயத்தின் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களுடைய சரீரங்களைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போட்டார்கள். கொலையுண்டவர்களுடைய மக்களை உமது புஜபல பராக்கிரமத்தின்படியே காப்பாற்றியருளும். 

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே உமது மக்கள் பரம விருந்தில் பங்கு பற்ற அநுமதிக்கப்பட்டதையும், அவர்களுக்காக அர்ச்சியசிஷ்டவர்கள் செய்யும் பெரும் வேண்டுதலையும் குறித்து, அவர்களை காப்பாற்றியருள உம்மை மன்றாடுகிறோம். – தேவரீரோடு … 




 


September 26 - St. Cyprian and Justina அர்ச். சிப்பிரியான், யுஸ்தீனம்மாள்

 செப்டம்பர் 26

அர்ச். சிப்பிரியான், யுஸ்தீனம்மாள்

வேதசாட்சிகள்



பிரவேசம்: சங். 36: 39

நீதிமான்களுடைய இரட்சணியமோ ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவர் துன்ப காலத்தில் அவர்களை ஆதரிப்பவராயிருக்கிறார். (சங். 1) பொல்லாத வர்களை குறித்து எரிச்சற்படாதே, அக்கிரமஞ் செய்கிறவர்கள் பேரில் பொறாமை கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான அர்ச். சிப்பிரியான் மற்றும் யுஸ்தீனம்மாளுடைய வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே: அவர்களுடைய பேறுபலன்களைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய முன்மாதிரிகைகளினால் பற்றியெரியவும் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்  (எபி. 10. 32-38)

சகோதரரே,. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கி றவர்களுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர் களுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள். எப்படியெனில் விலங்கிடப்பட்டவர் களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள். ஆதலால் மிகுந்த சம்பா வனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார். என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து,  அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். - இருதயத்தில் வேதனைப் படுகிறவர்களுக்குத் துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சியுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, வெண்தூய்மையணிந்த வேதசாட்சிகளின் சேனை உம்மை புகழ்கின்றது. அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 1-8)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளு மில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல்லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக்குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங்கிக்கப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன்றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்;  உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்;. ஆம், அவருக்கே அஞ்சுங்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலங் குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப் படுவதில்லை. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன் ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம்;  அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுமகனும் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார்.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரத்திலிருக்கின்றன. சாவின் பயம் அவர்களை அணுகாது. மதியீனருடைய கண்களுக்கு முன் அவர்கள் மரித்தவர்களாக தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுகிறார்கள். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளின்மேல் களிகூர்ந்து நோக்கியருளும். தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான அர்ச். வேண்டுதலினால் எல்லா ஆபத்துக்களி னின்றும் எங்களைத் தற்காத்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 10. 27)

நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை வெளிச்சத்தில் சொல்லுங்கள். நீங்கள் காதிலே இரகசியமாய்க் கேட்கிறதையும் வீட்டு கூரையிலிருந்து பிரசங்கியுங்கள். 

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே இந்த சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கி தேவரீருடைய வேதசாட்சிகளான அர்ச். சிப்பிரியான் மற்றும் யுஸ்தீனம்மாளுடைய வேண்டுதலினால் எங்களைப் பரலோக மருந்தில் பங்கு பற்றுவோராகவும் செய்யக்கடவது. – தேவரீரோடு …


September 28 - St. Wenceslaus - அர்ச். வென்செஸ்லாவுஸ்

 செப்டம்பர் 28

அர்ச். வென்செஸ்லாவுஸ்

வேதசாட்சி



பிரவேசம்: சங். 44: 15,14

ஆண்டவரே, உமது வல்லபத்தில் நீதிமான் மகிழ்வார். உமது இரட்சிப்பின் பேரில் அவர் வெகுவாய்க் களிகூருவார். தேவரீர் அவர் மன விருப்பத்தை நிறைவேற்றினீர். (சங். 4) ஏனெனில், பேரினிமையின் ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டு வந்து, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சியான அர்ச். வென்செஸ்லாவுஸ் பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற  நாங்கள் அவருடைய வேண்டுதலினால், தேவரீருடைய திருநாமத்தின் நேசத்தில் உறுதிபட திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (ஞானா. 10. 10-14)

ஞானமானது நீதிமானை நேர்வழியாய் கூட்டிப்போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் வெகு இலாபமும் சம்பாவனையும் அடையும்படி செய்ததுமின்றி அவனை மோசஞ் செய்யத் தேடினவர் களிடத்தினின்று அவனை மீட்டு அவனை ஆஸ்திவந்தனாக்கினது. அது சத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றித் துன்மார்க்கரினின்று அவனைப் பாதுகாத்துப் பலமான யுத்தத்தில் அவன் ஜெயங்கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலுமையுள்ளதென்றறிந்து கொள்ளவுஞ் செய்தது. அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்டதில்லை; பாவிகளிடத்தினின்று அவனை மீட்டது; அவனுடன் பாழுங்கிணற்றில் இறங்கினது. அது சிறையிலிருந்து அவனுக்கு இராச செங்கோலைக் கையில் வைத்து அவனை உபாதித்த வர்களை அவன் வசமாக்கினதுமன்றி அவனைக் குற்றஞ் சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தது.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி  பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 20. 4) ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நான் பூலோகத்தில் சமாதானத்தை அனுப்ப வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமாதானத்தையல்ல, வாளையே அனுப்ப வந்தேன்.  எவ்வா றெனில் தன் தகப்பனுக்கு விரோதமாய் மகனையும், தன் தாய்க்கு விரோதமாய் மகளையும், தன் மாமிக்கு விரோதமாய் மருமகளையும் பிரிக்க வந்தேன். ஏனெனில் மனிதனுடைய சத்துருக்கள் அவனுடைய வீட்டாராமே. என்னிலும் தன் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய்ச் சிநேகிக்கிறவன் எனக்குப் பாத்திரவானல்ல் எனக்குமேலாய்த் தன் மகனையாவது மகளை யாவது சிநேகிக்கிறவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் ஜீவனைக் கண்டடைகிறவன் எவனும் அதை இழப்பான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளு கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்க தரிசிக்குரிய சம்பாவனையை அடைவான். நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் ஒரு நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய சம்பாவனையை அடைவான். அவ்வண்ணமே சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் மிகவும் அற்பரான இவர்களில் ஒருவனுக்கு எவனாகிலும் ஒரு பாத்திரம் தண்ணீர் மாத்திரங் குடிக்கக் கொடுத்தாலும், தனது சம்பாவனையை இழந்து போகானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினீர். ஆண்டவரே, உம்முடைய கரங்களின் செய்கைகளின் மேல் அவருக்கு அதிகாரம் கொடுத்தருளினீர்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய கொடைகளையும் செபங்களையும் தேவரீர் கையேற்றுக் கொள்ளும். பரலோக பரம இரகசியங்களால் எங்களைப் பரிசுத்தப்படுத்தி, எங்களுக்கு தயவாய் செவி சாய்த்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (16. 24)

யாதொருவன் என் பின் வர மனதாயிருந்தால், அவன் தன்னைத் தானே பரித்தி யாகஞ் செய்து, தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான் களின் ஞாபகத்தை நாங்கள் இவ்வுலக சேவையினால் கொண்டாடி மகிழ்வது போல், அவர்களுடைய தரிசனையைக் கண்டு நித்தியமாய்க் களிகூரவும் எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …



 


In virtute tua - மேற்றிராணியரல்லாத வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 1

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சி ஒருவர்  பெயரால் - பொது 1

In virtute tua

பிரவேசம்: சங். 44: 15,14

ஆண்டவரே, உமது வல்லபத்தில் நீதிமான் மகிழ்வார். உமது இரட்சிப்பின் பேரில் அவர் வெகுவாய்க் களிகூருவார். தேவரீர் அவர் மன விருப்பத்தை நிறைவேற்றினீர். (சங். 4) ஏனெனில், பேரினிமையின் ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டு வந்து, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சியான (இன்னாருடைய..) பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற  நாங்கள் அவருடைய வேண்டுதலினால், தேவரீருடைய திருநாமத்தின் நேசத்தில் உறுதிபட திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (ஞானா. 10. 10-14)

ஞானமானது நீதிமானை நேர்வழியாய் கூட்டிப்போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் வெகு இலாபமும் சம்பாவனையும் அடையும்படி செய்ததுமின்றி அவனை மோசஞ் செய்யத் தேடினவர் களிடத்தினின்று அவனை மீட்டு அவனை ஆஸ்திவந்தனாக்கினது. அது சத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றித் துன்மார்க்கரினின்று அவனைப் பாதுகாத்துப் பலமான யுத்தத்தில் அவன் ஜெயங்கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலுமையுள்ளதென்றறிந்து கொள்ளவுஞ் செய்தது. அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்டதில்லை; பாவிகளிடத்தினின்று அவனை மீட்டது; அவனுடன் பாழுங்கிணற்றில் இறங்கினது. அது சிறையிலிருந்து அவனுக்கு இராச செங்கோலைக் கையில் வைத்து அவனை உபாதித்த வர்களை அவன் வசமாக்கினதுமன்றி அவனைக் குற்றஞ் சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தது.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி  பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 20. 4) ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 20. 3-4)

தேவரீர் அவர் மன விருப்பத்தை நிறைவேற்றினீர். அவருடைய உதடுகளினின்று வெளிப்பட்ட விண்ணப்பத்தை நீர் தள்ளிவிட்டதில்லை. ஏனெனில், பேரினிமையின் ஆசீர்வாதங்களோடு அவருக்கு எதிர்கொண்டு வந்தீர். – அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்களால் இழைத்த கிரீடத்தை வைத்தீர்.  

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நான் பூலோகத்தில் சமாதானத்தை அனுப்ப வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமாதானத்தையல்ல, வாளையே அனுப்ப வந்தேன்.  எவ்வா றெனில் தன் தகப்பனுக்கு விரோதமாய் மகனையும், தன் தாய்க்கு விரோதமாய் மகளையும், தன் மாமிக்கு விரோதமாய் மருமகளையும் பிரிக்க வந்தேன். ஏனெனில் மனிதனுடைய சத்துருக்கள் அவனுடைய வீட்டாராமே. என்னிலும் தன் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய்ச் சிநேகிக்கிறவன் எனக்குப் பாத்திரவானல்ல் எனக்குமேலாய்த் தன் மகனையாவது மகளை யாவது சிநேகிக்கிறவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் ஜீவனைக் கண்டடைகிறவன் எவனும் அதை இழப்பான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளு கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்க தரிசிக்குரிய சம்பாவனையை அடைவான். நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் ஒரு நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய சம்பாவனையை அடைவான். அவ்வண்ணமே சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் மிகவும் அற்பரான இவர்களில் ஒருவனுக்கு எவனாகிலும் ஒரு பாத்திரம் தண்ணீர் மாத்திரங் குடிக்கக் கொடுத்தாலும், தனது சம்பாவனையை இழந்து போகானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினீர். ஆண்டவரே, உம்முடைய கரங்களின் செய்கைகளின் மேல் அவருக்கு அதிகாரம் கொடுத்தருளினீர்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய கொடைகளையும் செபங்களையும் தேவரீர் கையேற்றுக் கொள்ளும். பரலோக பரம இரகசியங்களால் எங்களைப் பரிசுத்தப்படுத்தி, எங்களுக்கு தயவாய் செவி சாய்த்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (16. 24)

யாதொருவன் என் பின் வர மனதாயிருந்தால், அவன் தன்னைத் தானே பரித்தி யாகஞ் செய்து, தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான் களின் ஞாபகத்தை நாங்கள் இவ்வுலக சேவையினால் கொண்டாடி மகிழ்வது போல், அவர்களுடைய தரிசனையைக் கண்டு நித்தியமாய்க் களிகூரவும் எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …

 


புதன், 20 செப்டம்பர், 2023

September 23 - St. Linus - அர்ச். லீனப்பர்

 செப்டம்பர் 23

அர்ச். லீனப்பர்

பாப்., வேதசாட்சி

பிரவேசம்: 2 அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா, நீ என்னைச் சிநேகிக்கிறாயோ? என் ஆட்டுக்குட்டிகளை மேய், என் ஆடுகளை மேய். (பா.கா.:)  அல்லேலுய்யா, அல்லேலுய்யா.) (சங். 29:1) ஆண்டவரே, தேவரீர் என்னைக் கைதூக்கி, என் பகைவர்கள் என்னை மேற் கொண்டு மகிழாதபடி செய்ததால், உம்மைத் துதிப்பேன்.- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: நித்திய ஆயனே, தேவரீருடைய மந்தையைக் கிருபையாய்க் கண்ணோக்கியருளும்; திருச்சபைக்கு அதி மேய்ப்பனாகத் தேவரீர் ஏற்படுத்திய (உம்முடைய வேத சாட்சியும்) பெரிய குருவுமாகிய முத்திப்பேறுபெற்ற இன்னா ருடைய மன்றாட்டை முன்னிட்டு அதை உமது இடைவிடாத பராமரிப்பினால் காப்பாற்றியருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (1 இரா. 5. 1-4. 10-11)

சகோதரரே, உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதாயத்தை நாடியல்ல, மனப்பிரீதியோடும்,  (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள்போலல்ல் நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள்.  இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

படிக்கீதம்: (சங். 106. 32,31)

ஜனங்களுடைய சபையிலே அவரை ஏத்திப் புகழ்ந்து, மூப்பர்களுடைய ஆசனத்திலே அவரை துதித்துப் புகழ்வார்களாக. - ஆண்டவருடைய இரக்கத் தின் நிமித்தமும், அவர் மனுமக்களுக்கு செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரை துதித்து கொண்டாடுவார்களாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (மத். 16: 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன். அல்லேலுய்யா 

சுவிஷேசம் (மத்;. 16: 13-19)

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர்தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்..

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

இதோ! நம்முடைய வாக்கியங்களை உம் வாயில் ஊட்டினோம். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், இதோ! உன்னைச் சனங்கள் மீதும், இராச்சியங்கள் மீதும் அதிகாரியாய் ஏற்படுத்தியிருக்கிறோம். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை பார்த்து, உமது திருச்சபை விளங்கத் தயை செய்தருளும். அதனால் உமது திருச்சபைக்கு எங்கும் நல்ல பலன் கிடைக்கவும், ஞான மேய்ப்பர்கள் உமது பரிபாலனத்தால் உமது திருநாமத்திற்கு உகந்தவர்களாகும்படியும் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 16. 18)

நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய திருச்சபையை பரிசுத்த போஷிப்பால் செழிக்கும்படி அதை இரக்கமாய் ஆண்டு நடத்தியருளும். அது தேவரீருடைய வல்லமையுள்ள பரிபாலணத்தால் நடத்தப்பட்டு சுயாதீனத்தில் ஓங்கி வளரவும், வேத அநுசாரத்தில் பழுதின்றி நிலைதிருக்கவும் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . . 




 


September 22 - St. Thomas of Villanova - அர்ச். வில்லநோவா தோமையார்

செப்டம்பர் 22

அர்ச். வில்லநோவா தோமையார்

மேற். துதியர் 



பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்த குணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியா ருமான முத்திப்பேறு பெற்ற (இன்னா ருடைய) வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணியாருமான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …. . .

. .




 

 

September 24 -Our Lady of Ransom - உபகாரமாதா திருநாள்

 செப்டம்பர் 24
உபகாரமாதா திருநாள்



பிரவேசம்: 

வாழ்க! பரிசுத்த தாயே, பரலோகத்தையும் பூலோகத்தையும் என்றென்றைக்கும் ஆள்கின்ற அரசனையீன்ற தாயே, வாழ்க! (பா. கா. அல்லேலுய்யா அல்லேலுய்யா) (சங். 44. 2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது. என்னுடைய செய்கைகளை இராசாவுக்குச் சொல்லுகிறேன்.  – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா கிறீஸ்து விசுவாசிகளை அஞ்ஞான சனங்களின் ஆளுகையிலிருந்து மீட்பதற்கு உமது திருக்குமாரனுடைய மகா மகிமையுள்ள மாதாவின் வழியாய், உமது திருச்சபையில் ஒரு புதிய குடும்பத்தை ஏற்படுத்தத் திருவுளங் கொண்டீரே. அவ்வளவு பெரிய வேலையை உண்டாக்கிய தாயாரை பக்தியாய் கொண்டாடுகிற நாங்கள், அவளுடைய பேறுபலன்களையும் மனுப்பேசுதலையும் முன்னிட்டே, எல்லா பாவங்களினின்றும் பேயின் அடிமைதனத்திலிருந்தும் மீட்கப்படக் கிருபை செய்தருள உம்மை மன்றாடுகிறோம் - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 24. 14-16)

ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்; பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமுகத்தில் என் தொழிலைச் செய்தேன். ஆனதால் சியோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாற்றினேன்; எருசலேமில் என் அதிகாரஞ் சென்றது. மகிமைப்படுத்தப்பட்ட பிரசைகளிடத்தில் வேரூன்றினேன்; அவர்கள் சுதந்தரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.

படிக்கீதம்: (சர். 44: 16)

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகரின் தாயாக ஏற்பட்டீரே! நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். வணக்கத்துக்குரியவள். – தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்துமே கொள்ள முடியாதவர் உமது திருவுதரத்தில் மனிதராய் அடங்கலானாரே. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஈன்ற பின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலை கொண்டீர். தேவதாயே எங்களுக்காக மன்றாடும். அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 11. 27-28)

அக்காலத்தில் சேசுநாதர் ஜனக் கூட்டத்துடன் பேசி கொண்டிருந்த போது சம்பவித்ததேதெனில், ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

மரியாயே வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய இரக்கத்தாலும், எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறுபெற்ற மரியாயின் மன்றாட்டினாலும் இக்காணிக்கை எங்களுடைய பாக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் உதவக்கடவது. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

நித்திய பிதாவின் திருக்குமாரனைச் சுமந்த கன்னிமரியாயின் உதரம் பாக்கியம் பெற்றது!  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, எங்கள் இரட்சணியத்துக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறு பெற்ற மரியாயின் வணக்கத்துக்காக தேவரீருடைய உன்னத மகத்துவத்திற்கு இப்பலியை ஒப்புக்கொடுப்பது போல, அவளுடைய சலுகையினால் நாங்கள் என்றும் காப்பாற்றப்படத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


Salve Sancte Parens - பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது

 பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது 
Salve Sancte Parens

பிரவேசம்

வாழ்க! பரிசுத்த தாயே, பரலோகத்தையும் பூலோகத்தையும் என்றென்றைக்கும் ஆள்கின்ற அரசனையீன்ற தாயே, வாழ்க! (பா. கா. அல்லேலுய்யா அல்லேலுய்யா) (சங். 44. 2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது. என்னுடைய செய்கைகளை இராசாவுக்குச் சொல்லுகிறேன்.  – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய அடியார்களாகிய நாங்கள் ஆத்தும சரீர சுகத்தால் இடைவிடாது மகிழவும், எப்பொழுதும் கன்னி கையான மரியாயினுடைய மகிமையுள்ள வேண்டுதலினால் இவ்வுலகத் துயரத் தினின்று விடுதலை பெறவும், நித்திய பேரின்ப பாக்கியத்தை சுகிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 24. 14-16)

ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்; பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமுகத்தில் என் தொழிலைச் செய்தேன். ஆனதால் சியோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாற்றினேன்; எருசலேமில் என் அதிகாரஞ் சென்றது. மகிமைப்படுத்தப்பட்ட பிரசைகளிடத்தில் வேரூன்றினேன்; அவர்கள் சுதந்தரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.

படிக்கீதம்: (சர். 44: 16)

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகரின் தாயாக ஏற்பட்டீரே! நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். வணக்கத்துக்குரியவள். – தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்துமே கொள்ள முடியாதவர் உமது திருவுதரத்தில் மனிதராய் அடங்கலானாரே. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஈன்ற பின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலை கொண்டீர். தேவதாயே எங்களுக்காக மன்றாடும். அல்லேலுய்யா

ஆகமன காலத்தில் படிக்கீதத்தை சொன்னபின், மேலே உள்ள அல்லேலுய்யா கீதத்திற்கு பதிலாக:

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (லூக். 1: 28) மரியாயே, வரப்பிரசாதத் தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள்ளே ஆசீர் வதிக்கப்பட்டவள் நீரே! அல்லேலுய்யா.

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

கன்னி மரியாயே அகமகிழும். பதிதங்கள் அனைத்தையம் தனியாக நீர் ஒருவரே அழித்துவிட்டீர். – நீர் அதிதூதரான கபிரியேலின் வார்த்தையை விசுவசித்தீர். – கன்னிகையாயிருந்து, தேவனும் மனதனுமானவரைப் பெற்றெடுத்தீர். ஈன்றபின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலைகொண்டீர்!. தேவதாயே எங்களுக்காக மன்றாடும்.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (எண். 17: 8) யெஸ்சேயின் கோல் மலர்ந்தது. கன்னிகையானவள் கடவுளும் மனிதனுமானவரைப் பெற்றெடுத்தாள். சர்வேசுரன் தாழ்மையானதைக் தம்மில் மேலானதோடு இணைத்துக்கொண்டு சமாதானத்தை மறுபடியும் அளித்தார்.  அல்லேலுய்யா. – (லூக். 1: 28) மரியாயே வரப்பிரசா தத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அல்லேலுய்யா.

சுவிஷேசம் (லூக். 11. 27-28)

அக்காலத்தில் சேசுநாதர் ஜனக் கூட்டத்துடன் பேசி கொண்டிருந்த போது சம்பவித்ததேதெனில், ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

மரியாயே வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய இரக்கத்தாலும், எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறுபெற்ற மரியாயின் மன்றாட்டினாலும் இக்காணிக்கை எங்களுடைய பாக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் உதவக்கடவது. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

நித்திய பிதாவின் திருக்குமாரனைச் சுமந்த கன்னிமரியாயின் உதரம் பாக்கியம் பெற்றது!  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, எங்கள் இரட்சணியத்துக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறு பெற்ற மரியாயின் வணக்கத்துக்காக தேவரீருடைய உன்னத மகத்துவத்திற்கு இப்பலியை ஒப்புக்கொடுப்பது போல, அவளுடைய சலுகையினால் நாங்கள் என்றும் காப்பாற்றப்படத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


Statuitt - மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

 மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

Statuitt . .

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற (இன்னாருடைய) வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம் (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். – மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலை நிற்கின்றது. .

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109: 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப்படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறீர், அல்லேலுய்யா. – ஆண்டவர் முடிசூட்டிய குரு இவர்தான், அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணியாருமான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


செவ்வாய், 19 செப்டம்பர், 2023

September 21 - St. Matthew - அர்ச். மத்தேயு அப்போஸ்தலர், சுவிசேஷகர்

 செப்டம்பர் 21

அர்ச். மத்தேயு

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 



பிரவேசம்: சங். 36. 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாயத்தைப் பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப் பிரமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (சங். 1) பொல்லாதவர்களைக் குறித்து அருவருப் படையாதே. அக்கிரமஞ் செய்கிறவர்கள்பேரில் வெறுப்பு கொள்ளாதே .- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திபேறுபெற்ற மத்தேயு நாதருடைய மன்றாட்டுகள் எங்களுக்கு உதவியாய் வரக்கடவன, எங்கள் சொந்த பலம் பெற்று கொடுக்க முடியாததை, அவருடைய சலுகை வேண்டுதல் எங்களுக்கு அடைந்து கொடுப்பதாக. - தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (எசே. 1: 10-14)

அந்த நான்கு மிருகங்களின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன. அவைகளின் முகங்களும் இறக்கைகளும் உயர்ந்து விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரு இறக்கைகளும் ஒன்றோடொன்று கூடிச் சேர்ந்திருக்க, மற்றிரண்டும் அவைகளின் சரீரங்களை மூடிக்கொண்டிருந்தன. அவைகள் ஒவ்வொன்றுந் தனக்கு எதிரான திசையில் நடந்தது. எவ்விடத் திற்குப் போகவேண்டுமென்று ஆவி அவைகளை ஏவிவிடுமோ அவ்விடத் துக்குப் போகும்; போகையில் திரும்பி பார்க்கவேமாட்டா. அம்மிருகங்கள் பார்வைக்கு அக்கினிபற்றி எரியுங் கரியைப் போலும் கொளுத்தி விட்டெரியும் விளக்கைப் போலுந் தோன்றும்; அவைகளின் நடுவில் அக்கினிச் சுவாலை ஓடித் திரிய அதினின்று மின்னல் புறப்படும். அம்மிருகங்கள் மினுமினுப்பான மின்னலைப் போல் போகிறதும் திரும்பி வருகிறதுமாயிருந்தன.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் மிகவும் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, அப்போஸ்தலர்களின் மாட்சிமை பொருந்திய கூட்டம் உம்மைப் புகழ்கின்றது. அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத்;. 9. 9-13)

அக்காலத்தில் சேசுநாதர் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னப்பட்ட ஓர் மனிதனைக் கண்டு, அவனை நோக்கி: என் பிறகே வாவென்றார். அவனும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றான். பின்னும் சம்பவித்ததேதெனில், சேசுநாதர் அவன் வீட்டில் பந்தியமர்ந்திருக்கையிலே அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து அவரோடும் அவருடைய சீஷர் களோடுங்கூடப் பந்தி அமர்ந்தார்கள். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் குரு ஆயக்காரரோடும் பாவிகளோடும் அசனம் செய்வானேன் என்றார்கள். சேசுநாதர் அதைக் கேட்டுத் திருவுளம்பற்றினதாவது: சொஸ்தமுள்ளவர்களுக்கு வைத்தியன் வேண்டியதில்லை, நோயாளிகளுக்கே வேண்டும். பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத் தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களை யல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அவர் உம்மிடத்தில் சீவியத்தை கேட்டார். நீர் அவருக்கு அதை அளித்ததீர். அல்லேலுய்யா.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திப்பேறுபெற்ற மத்தேயு நாதருடைய வேண்டுதல்களினால், உமது திருச்சபையின் காணிக்கை தேவரீருக்கு உகந்ததாயிருக்க உம்மை மன்றாடுகிறோம். அவருடைய மகிமையான பிரசங்கங்களினால் உமது திருச்சபை விளங்கப் பெற்றதே. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (சங். 20. 6)

உமது இரட்சிப்பில் அவருடைய மகிமை மகத்தானது. ஆண்டவரே, மகிமையும் பெரும் அழகையும் அவருக்கு அளிப்பீர்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, பரிசுத்த தேவதிரவிய அநுமானங்களைப் பெற்றுக் கொண்ட நாங்கள், உமது அப்போஸ்தலரும், சுவிசேஷகருமான முத்திப்பேறு பெற்ற மத்தேயுநாதருடைய வேண்டுதலைக் குறித்து மன்றாடுவதேதெனில், அவருடைய மகிமைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் எங்கள் இரட்சணியத்துக்கு மருந்தாக உதவக்கடவன.  - தேவரீரோடு . . .

. .


Si diligis me - பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது

 பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது 


Si diligis me

பிரவேசம்: 2 அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா,நீ என்னைச் சிநேகிக்கிறாயோ? என் ஆட்டுக்குட்டிகளை மேய், என் ஆடுகளை மேய். (பா.கா.:)  அல்லேலுய்யா, அல்லேலுய்யா.) (சங். 29:1) ஆண்டவரே, தேவரீர் என்னைக் கைதூக்கி, என் பகைவர்கள் என்னை மேற் கொண்டு மகிழாதபடி செய்ததால், உம்மைத் துதிப்பேன்.- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: நித்திய ஆயனே, தேவரீருடைய மந்தையைக் கிருபையாய்க் கண்ணோக்கியருளும்; திருச்சபைக்கு அதி மேய்ப்பனாகத் தேவரீர் ஏற்படுத்திய (உம்முடைய வேத சாட்சியும்) பெரிய குருவுமாகிய முத்திப்பேறுபெற்ற இன்னா ருடைய மன்றாட்டை முன்னிட்டு அதை உமது இடைவிடாத பராமரிப்பினால் காப்பாற்றியருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

இதே நாளில் மற்றொரு பரி. பாப்பானவரின் ஞாபகச் செபம் சொல்லவேண்டியிருந்தால் பின்வருமாறு:

செபிப்போமாக: சர்வேசுரா, அப்போஸ்தோலிக்கு கற்பாறையினுடைய உறுதியின்மீது அமைக்கப்பட்டிருக்கும் உமது திருச்சபையை நரக வாசல்களின் பயத்திலிருந்து விடுவிக்கிறீNர் (உம்முடைய வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய ஜஇன்னாருடையஸ வேண்டுதலினால் அது உமது சத்தியத்திலே மான்றிசின்று, ஆபத்தின்றி என்றும் காப்பாற்றபட, திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (1 இரா. 5. 1-4. 10-11)

சகோதரரே, உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதாயத்தை நாடியல்ல, மனப்பிரீதியோடும்,  (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள்போலல்ல் நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள்.  இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

படிக்கீதம்: (சங். 106. 32,31)

ஜனங்களுடைய சபையிலே அவரை ஏத்திப் புகழ்ந்து, மூப்பர்களுடைய ஆசனத்திலே அவரை துதித்துப் புகழ்வார்களாக. - ஆண்டவருடைய இரக்கத் தின் நிமித்தமும், அவர் மனுமக்களுக்கு செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரை துதித்து கொண்டாடுவார்களாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (மத். 16: 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 39. 10-11)

மகாசபையிலே தேவரீருடைய நீதியைக் குறித்துப் பிரசங்கித்தேன். ஆண்டவரே, என் உதடுகளை மூடமாட்டேன் என்று நீர் அறிவீர். – நான் உமது நீதியை என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் இரட்ச ணியத்தையுங் குறித்து பேசினேன். – மகாசபையில் உமது தயாளத்தையும் உண்மையையும் மறைத்தேனில்லை.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (மத். 16. 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.. - (சங். 44. 17-18) தேவரீர் அவர்களை உலகமனைத்திற்கும் அல்லேலுய்யா தலைவர்களாக ஏற் படுத்துவீர். ஆண்டவரே, அவர்கள் உமது திருநாமத்தை நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லேலுய்யா. 

சுவிஷேசம் (மத்;. 16: 13-19)

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர்தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்..

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

இதோ! நம்முடைய வாக்கியங்களை உம் வாயில் ஊட்டினோம். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், இதோ! உன்னைச் சனங்கள் மீதும், இராச்சியங்கள் மீதும் அதிகாரியாய் ஏற்படுத்தியிருக்கிறோம். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை பார்த்து, உமது திருச்சபை விளங்கத் தயை செய்தருளும். அதனால் உமது திருச்சபைக்கு எங்கும் நல்ல பலன் கிடைக்கவும், ஞான மேய்ப்பர்கள் உமது பரிபாலனத்தால் உமது திருநாமத்திற்கு உகந்தவர்களாகும்படியும் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

வேறு அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் மகிழ்வுடன் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கையேற்றுக் கொண்டு, முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் உம்முடைய திருச்சபை விசுவாசத்தில் பழுதின்றி மகிழவும், அமைதியுள்ள சீவியத்தால் என்றும் களிகூரவும் திருவருள் புரிந்தருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 16. 18)

நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய திருச்சபையை பரிசுத்த போஷிப்பால் செழிக்கும்படி அதை இரக்கமாய் ஆண்டு நடத்தியருளும். அது தேவரீருடைய வல்லமையுள்ள பரிபாலணத்தால் நடத்தப்பட்டு சுயாதீனத்தில் ஓங்கி வளரவும், வேத அநுசாரத்தில் பழுதின்றி நிலைதிருக்கவும் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . . 

வேறு செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய திருச்சபையில் தேவரீர் அருளிச் செய்த வரப்பிரசாதத்தின் இஸ்பிரித்துவை பொழிந்தருளும். உம்முடைய (வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய (இன்னாருடைய) மன்றாட்டினால் மேய்ப்பருக்கு மந்தையின் கீழ்படிதலும் அல்லது மந்தைக்கு மேய்ப்பரின் பரிவும் குறையாதபடி தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . .


---

For other Common mass for saints please click here



 


Sep. 20 - Saint Eustachius - அர்ச். ஏயுஸ்தாக்கியாரும், துணைவரும் - வேதசாட்சிகள்.

September - 20 
அர்ச். ஏயுஸ்தாக்கியாரும், துணைவரும் - வேதசாட்சிகள்.

பிரவேசம்: சங். 44: 15,14


பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள். அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரை கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது.. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) பரலோக பிறப்புநாளை கொண்டாட எங்களுக்கு கிருபை செய்தருளினீரே. நாங்களும் அவர்களுடைய கூட்டுறவைப் பெற்று, நித்திய பேரின்ப பாக்கியத்தில் களிகூர எங்களுக்கு திருவுளம் புரிந்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

ஞானாகமத்திலிருந்து வாசகம்  (ஞானா. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 125. 5-6)

வேடர்களின் கண்ணிக்கு குருவி தப்பினதுபோல, நம்முடைய ஆத்துமம் தப்பிற்று. – கண்ணி தெறித்துப் போயிற்று. நாமோ விடுதலையானோம். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய நாமத்தினால் நமக்கு சகாயமுண்டாயிருக்கிறது.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 67. 4) நீதிமான் சர்வேசுரன் சமூகத்தில் விருந்து செய்து திருப்தி அடைந்து அகமகிழ்வார்கள். ஆனந்த அக்களிப்படை வார்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (சங். 149. 5-6)

பரிசுத்தவான்கள் மகிமையில் அக்களிப்பார்கள். தங்கள் மஞ்சங்களில் களிகூறுவார்கள். அவர்களுடைய வாயில் சர்வேசுரனுடைய துதிகள் விளங்கும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய பக்தியின் காணிக்கையை தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவை தேவரீருடைய நீதிமான்களின் மகிமையின் பொருட்டு உமக்கு பிரியமுள்ளவனவாகவும், உம்முடைய இரக்கத்தினால் எங்கள் இரட்சணியத்துக்குரியனவாகவுங் கடவன – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 4)

உங்களை துன்புறுத்திகிறவர்களைப் பற்றி அஞ்சாதீர்கள் என்று என் சிநேகி தராகிய உங்களுக்கு சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) வேண்டுதலினால் நாங்கள் வாயால் உட்கொண் டதைச் சுத்தமான இருதயத்தினால் கிரகிக்குமாறு எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …

 


Sapientiam Sanctorum - மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது
Sapientiam Sanctorum

பிரவேசம்: சங். 44: 15,14

பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள். அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரை கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது.. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) பரலோக பிறப்புநாளை கொண்டாட எங்களுக்கு கிருபை செய்தருளினீரே. நாங்களும் அவர்களுடைய கூட்டுறவைப் பெற்று, நித்திய பேரின்ப பாக்கியத்தில் களிகூர எங்களுக்கு திருவுளம் புரிந்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

ஞானாகமத்திலிருந்து வாசகம்  (ஞானா. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 125. 5-6)

வேடர்களின் கண்ணிக்கு குருவி தப்பினதுபோல, நம்முடைய ஆத்துமம் தப்பிற்று. – கண்ணி தெறித்துப் போயிற்று. நாமோ விடுதலையானோம். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய நாமத்தினால் நமக்கு சகாயமுண்டாயிருக்கிறது.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 67. 4) நீதிமான் சர்வேசுரன் சமூகத்தில் விருந்து செய்து திருப்தி அடைந்து அகமகிழ்வார்கள். ஆனந்த அக்களிப்படை வார்கள். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 125. 5-6)

கண்ணீருடன் விதைக்கிறவன் சந்தோஷத்துடன் அறுப்பார்கள். அவர்கள் விதைகளை தெளிக்கையில் அழுதுகொண்டு போனார்கள். ஆனால், தாங்கள் அறுத்த அரிக்கட்டுகளை சுமந்துகொண்டு வருகையில் பெருமகிழ்ச்சியோடு வருவார்கள். 

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (சங். 149. 5-6)

பரிசுத்தவான்கள் மகிமையில் அக்களிப்பார்கள். தங்கள் மஞ்சங்களில் களிகூறுவார்கள். அவர்களுடைய வாயில் சர்வேசுரனுடைய துதிகள் விளங்கும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய பக்தியின் காணிக்கையை தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவை தேவரீருடைய நீதிமான்களின் மகிமையின் பொருட்டு உமக்கு பிரியமுள்ளவனவாகவும், உம்முடைய இரக்கத்தினால் எங்கள் இரட்சணியத்துக்குரியனவாகவுங் கடவன – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 4)

உங்களை துன்புறுத்திகிறவர்களைப் பற்றி அஞ்சாதீர்கள் என்று என் சிநேகி தராகிய உங்களுக்கு சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) வேண்டுதலினால் நாங்கள் வாயால் உட்கொண் டதைச் சுத்தமான இருதயத்தினால் கிரகிக்குமாறு எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …

 


Sep. 19 Saint Januarius - ஜானுவாரியும் (Bishop) துணைவரும் - வேதசாட்சிகள்

செப்டம்பர் 19 

ஜானுவாரியும் (Bishop) துணைவரும் - வேதசாட்சிகள் 



பிரவேசம்: சங். 36: 39

நீதிமான்களுடைய இரட்சணியமோ ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவர் துன்ப காலத்தில் அவர்களை ஆதரிப்பவராயிருக்கிறார். (சங். 1) பொல்லாதவர்களை குறித்து எரிச்சற்படாதே, அக்கிரமஞ் செய்கிறவர்கள் பேரில் பொறாமை கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய..) வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே: அவர்களுடைய பேறுபலன்களைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள் அவர் களுடைய முன்மாதிரிகைகளினால் பற்றியெரியவும் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

அப்போஸ்தலரான முத். சின்னப்பர் எபிரேயருக்கு எழதிய நிருபத்திலிருந்து வாசகம்  (எபி. 10. 32-38)

சகோதரரே,. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கி றவர்களுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர் களுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள். எப்படியெனில் விலங்கிடப்பட்டவர் களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள். ஆதலால் மிகுந்த சம்பா வனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார். என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து,  அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். - இருதயத்தில் வேதனைப் படுகிறவர்களுக்குத் துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சியுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, வெண்தூய்மையணிந்த வேதசாட்சிகளின் சேனை உம்மை புகழ்கின்றது. அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 1-8)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளு மில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல்லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக்குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங்கிக்கப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன்றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்;  உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்;. ஆம், அவருக்கே அஞ்சுங்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலங் குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப் படுவதில்லை. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன் ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம்;  அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுமகனும் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார்.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரத்திலிருக்கின்றன. சாவின் பயம் அவர்களை அணுகாது. மதியீனருடைய கண்களுக்கு முன் அவர்கள் மரித்தவர்களாக தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுகிறார்கள். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளின்மேல் களிகூர்ந்து நோக்கியருளும். தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் . . இன்னாருடைய . .) வேண்டுதலினால் எல்லா ஆபத்துக்களி னின்றும் எங்களைத் தற்காத்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 10. 27)

நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை வெளிச்சத்தில் சொல்லுங்கள். நீங்கள் காதிலே இரகசியமாய்க் கேட்கிறதையும் வீட்டு கூரையிலிருந்து பிரசங்கியுங்கள்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே இந்த சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கி தேவரீருடைய வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய ..) வேண்டுதலினால் எங்களைப் பரலோக மருந்தில் பங்கு பற்றுவோராகவும் செய்யக்கடவது. – தேவரீரோடு …