Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச்  அஞ்சேம்மாள் ( st .Agnes )  
அர்ச் ஆக்ன்ஸ் 

குறிப்பு 

பிறப்பு         : 28 Jan 292
இறப்பு         : 21 Jan 304
மரணம்       :தலை வெட்டப்பட்டு வேதசாட்சி மரணம்.
கன்னியர்களின் பாதுகாவலி.



செயிண்ட் ஆக்னஸ் ஜனவரி 28, 292 ரோமன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார்  ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். அவரது பெயரை கிரேக்கம் மொழியில் "தூய" மற்றும் லத்தீன் மொழியில்  "ஆட்டுக்குட்டி"  என்று பொருள். அவர் வயதில் வளர வளர அவருடைய அழகிளும்  வளர்ந்தார்.பல இளைஞர்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர் இயேசுவே வேண்டும் என்று அறிவித்து யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
தனது  கற்பை பரலோக துணை கிறிஸ்து நாதருக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவள் அதற்காக அவள் மரணத்தையும் ஏற்க தயாராக இருந்தாள் . அவள் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்த காலம். பேரரசர் Diocletian அவளை சித்திரவதை மற்றும் மரணதிற்கு பயமுறுத்தினான்.

அவள் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்தவர்களில்  prefect Sempronius என்பவரின் மகனும் ஒருவன். மீண்டும் ஒருமுறை தன் மகனை மணந்து கொள்ள அவன் அவளிடம் கேட்டான் . அவள் இரண்டாவது முறையும் முடியாது என்று பதில் சொல்ல அவனுக்கு கோபம் வந்தது. அவள் கிறிஸ்தவர் என்பதால் அவளை சித்திரவதை செய்து கொலை செய்ய போவதாக மிரட்டினான். அவர் எதற்கும் பணியவில்லை. தன்  கற்பின் மீது அவள் பற்று கொண்டு இருந்தாள் .ரோமன் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள், அவளை  ஒரு வேசி இடத்திற்கு அனுப்ப prefect Sempronius அவனுக்கு ஆலோசனை கூறினர். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவளுடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்க பட்டது.
அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  prefect Sempronius மகன் அதிக ஆசை கொண்டான். அதனால் அவன் தன் கண்ணையே குத்தி காயபடுதினான். அர்ச் ஆக்னஸ் அவனை குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததை கேள்வியுற்ற prefect Sempronius அதற்கு காரணம் அர்ச் ஆக்னஸ் தான் என்று குற்றம் சாட்டினான். 

முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளி அவரை கொலை செய்ய முயன்றான். ஆனால் நெருப்பு ஒன்றும் அவரை  செய்யவில்லை.
பின் அவரை வாளினால் தலை வெட்ட பட அவர் தனது 12 வயதில் வேத சாட்சி மரணம் அடைந்தார். 
பிற்காலத்தில் அர்ச் ஆக்னஸ்அவர் ஒரு அனைவருக்கும் பிடித்தமான புனிதையாக மாறினார். Emperor Constantine என்பவருடைய மகள் அர்ச் ஆக்னஸ் கல்லறையில் ஒரு ஆலயம் கட்டினார் .



அர்ச் அந்தோணியாரின் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக