Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 4 செப்டம்பர், 2013

மங்கள வார்த்தை

மங்கள வார்த்தை

(சுருக்கமான வியாக்கியானம்)
            சர்வேசுரன் அனைத்தையும் சிறப்புற செய்வார் – என்றும் இவை அனைத்தும் நமது படிப்பினைக்காக தரப்பட்டது என்றும் நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அதே போன்றுதான் மங்களவார்த்தை நிகழ்ச்சியின்போதும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு வார்த்தைகளும், சிறப்புற கோர்க்கப்பட்டுள்ளது. அதனை அர்ச். லூக்காஸ் எழுதிய சுவிஷேத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து காண்போம்.

இங்கே மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.

1. மாதாவின் கவனத்தை தன்னிடம் திருப்ப தேவதூதன் கூறியது.
1.1. வித்தியாசமான முறையில் வாழ்த்தியது  பிரியதத்ததினாலே பூரணமானவளே
1.2. அதன் அர்த்தம்  கடவுள் உம்முடனே
1.3. அதன் விளைவு  ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
2. மனிதாவதார இரகசியத்தை வெளிப்படுத்தியது.

2.1. நடக்கப்போவதை முன்னறிவித்தல்  இதோ, உமது உதிரத்தல் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்…(லூக்.1:31)
2.2. அவர் யார்  அவர் பெரியவராயிருப்பார் … அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார். (லூக்.1:32,33)

3. இது கடவுளின் செயல் என்பதை நிரூபித்தல்
3.1. எலிசபெத்தின் உதாரணம்  உமக்குப் பந்துவாகிய எலிசபெத்… மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
3.2. உதாரணம் எடுத்துரைக்கும் உண்மை ..ஏனெனில் சர்வேசுரனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக