Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

Digital Dangers - New Series

 Welcome back to the SSPX Podcast, where we're diving into our new series, Digital Dangers! In this ten-part series, we’ll answer questions about modern technology's complicated nature and its lurking hazards. In a world where technology reigns supreme, we'll explore its effects on us, our children, and our eternal destiny. How do we shield ourselves and our loved ones from the perils of the online, artificial world? Are smartphones a blessing or a curse? How can we safely navigate the digital landscape without damaging the sanctuary of our family homes? Join us as we tackle these questions and more throughout the series.

Subscribe to the SSPX YouTube channel here: https://www.youtube.com/c/SSPXNewsEng... Stay Connected on Social Media: Twitter:   / sspxen   Facebook:   / sspxen   Instagram:   / sspx_en   SSPX News Website:https://fsspx.news/en Visit website: https://sspx.org/en


1.  Introduction

சனி, 17 பிப்ரவரி, 2024

சரீர ஒறுத்தல்

சரீர ஒறுத்தல்.

1. உணவின் காரியத்தில், முடிந்த வரை, எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் உண்ணும்படி உங்களைக் கட்டுப்படுத்துங்கள். அர்ச் அகுஸ்தீனார் கடவுளிடம் பேசிய இந்த வார்த்தைகளைச் சிந்தியுங்கள்: 'ஓ என் சர்வேசுரா, ஒரு தீர்வாக மட்டுமே உணவு உட்கொள்ளும்படி நீர் எனக்குக் கற்பித்திருக்கிறீர். ஆ! ஆண்டவரே, இங்கே சில சமயங்களில் அளவைத் தாண்டி உணவு உட்கொள்ளாதவர்கள் எங்களில் யாருண்டு? அப்படிப்பட்ட ஒருவன் இருந்தால், அந்த மனிதன் மேலானவன், அவன் உம் திருநாமத்திற்கு மாபெரும் மகிமை செலுத்துபவனாக இருக்கிறான் என்று நான் சொல்வேன்"

2. நீங்கள் தேவையின் வரம்பைத் தாண்டாதபடியும், இன்பத்திற்கு உடந்தர உங்களையே நீங்கள் அனுமதியாதபடியும், கடவுளிடம் அடிக்கடி ஜெபியுங்கள், அவர் தம் வரப்பிரசாதத்தைக் கொண்டு உங்களுக்கு உதவும்படி ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள்.

3. தேவைக்காகவோ, அல்லது வசதியின் நிமித்தமாகவோ அன்றி, உணவுகளுக்கு இடையில் எதையும் உட்கொள்ளாதீர்கள்.

4. ஒருசந்தி, சுத்தப்போசனத்தை அனுசரியுங்கள். ஆனாலும் அவற்றை கீழப்படிதலின் கீழும், இரகசியமாகவும் மட்டுமே அனுசரியுங்கள்.

5. சரீர ரீதியான ஏதாவது ஒரு திருப்தியை அனுபவிப்பது உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை , ஆனாலும் கடவுளுக்கு நன்றி கூறி, ஒரு பரிசுத்தமான, சுத்தக் கருத்தோடு அப்படிச் செய்யுங்கள்.

6. உங்கள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதில் எல்லா மந்த உணர்வையும், விடிந்த பிறகும் சுகமாக படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதையும் தவிருங்கள். உங்களால் முடியுமானால் படுக்கைக்குச் செல்லவும், விழித்தெழவும் ஒரு நேரத்தைக் குறித்துவிட்டு, அதைக் கண்டிப்பான முறையில் கடைபிடியுங்கள்.

7. பொதுவாக, தேவையான அளவுக்கு மட்டும் ஓய்வெடுங்கள்; உங்கள் உழைப்பை அலட்சியம் செய்யாமல், வேலை செய்ய தாராளமாக உங்களை ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடல் அளவுக்கு அதிகமாக சோர்ந்துபோகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் உடலுக்கு அதிக சௌகரியமும், சொகுசும் தந்துவிடாதபடி கவனமாயிருங்கள். அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஒரு சிறிதளவு மட்டுமே நீங்கள் உணர்ந்தாலும் கூட, அந்த நிமிடமே அதை ஓர் அடிமையைப் போல நடத்துங்கள்.

8.நீங்கள் சற்று சுகவீனமாக உணர்ந்தால், உங்கள் மோசமான மனநிலையின் காரணமாக மற்றவர்களுக்கு ஒரு தொந்தரவாக இருப்பதைத் தவிருங்கள்; உங்களுக்காக முறையிடும் வேலையை உங்கள் தோழர்களிடம் விட்டுவிடுங்கள்; உங்களைப் பொறுத்தவரை, நம் எல்லாப் பலவீனங்களையும் மெய்யாகவே சுமந்து கொண்ட தேவ செம்மறிப்புருவையானவரைப் போல பொறுமையாகவும், மௌனமாகவும் இருங்கள்.

9. மிக அற்பமான ஒரு வியாதியை, உங்கள் அன்றாட வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க அல்லது அவற்றைச் செய்யாமல் விலக்க, ஒரு காரணமாக்கி விடாதபடி விழிப்பாயிருங்கள். 'விதிகளாக மாறுகிற ஒவ்வொரு விதிவிலக்கையும் கொள்கை நோயைப் போல ஒருவன் அருவருத்து ஒதுக்க வேண்டும்" என்று அர்ச் பெர்க்மான்ஸ் அருளப்பர் எழுதியுள்ளார்.

10. நோய் என்னும் சோர்வூட்டுகிற ஒறுத்தலை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; தாழ்ச்சியோடும், பொறுமையோடும், நிலைமையோடும் அதை அனுசரியுங்கள்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

Tamil Christian Quotes - 11 St. Therese of Avila

 "தனது அன்பனுக்குத் திருப்தி வருத்தமாத்திரம் தேடுகிறவன் அவனுக்குப் பிரியமுள்ள தெல்லாம் செய்ய விரும்புவான்" அர்ச். தெரேசம்மாள் 


for more Tamil Quotes

Tamil Christian Quotes - 10 - St. Augustine

 "சர்வேஸ்வரனை நேசி, பின்பு உனக்கு மனதானதெல்லாம் செய்."  

அர்ச். அகுஸ்தீனார்


https://www.tamilcatholicblog.co.in/amil-catholic-songs-lyrics


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ - ST. ONESIMUS


வேதசாட்சியான அர்ச்‌.ஒனேசிமுஸ்‌ 




இவர்‌ பிறப்பினால்‌ ஃபிர்ஜியனாகவும்‌, பிலமோன்‌ என்பவரின்‌ அடிமையாகவும்‌ இருந்தார்‌. அர்ச்‌.பிலமோன்‌, என்பவர்‌ ஏற்கனவே அப்‌போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரால்‌ கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்‌டிருந்தார்‌. 

இவர்‌, தன்‌ எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்‌; பின்‌ எதிர்பாராதவிதமாக, உரோமையில்‌, சிறைபட்‌டிருந்த அர்ச்‌. சின்னப்பரை இவர்‌ சந்திக்க நேர்ந்தது. அர்ச்‌. சின்னப்பர்‌ இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம்‌ கொடுத்தார்‌. பின்‌, இவரை,  இவருடைய எஜமானரான அர்ச்‌. பிலமோனிடம்‌ அனுப்பி வைத்தார்‌. அச்சமயம்‌, அர்ச்‌. சின்னப்பர்‌, ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம்‌ கொடுத்து அனுப்பினார்‌. அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக்‌ கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில்‌, பிலமோனிடம்‌, அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும்‌ மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும்‌, அர்ச்‌. சின்னப்பர்‌ கேட்டுக்‌ கொள்வதை வாசிக்கிறோம்‌. 

அர்ச்‌. சின்னப்பரின்‌ அறிவுரையின்பேரில்‌, பிலமோன்‌, ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்‌தை அளித்தார்‌; அதன்‌ பின்,‌ தன்‌ ஞான தந்தையான அர்ச்‌.சின்னப்பர்‌ ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில்‌, ஒனேசிமுஸ்‌, திரும்பி அப்போஸ்தலரான அர்ச்‌. சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்‌.அவருக்கு பிரமாணிக்கத்துடன்‌ ஊழியம்‌ செய்து வந்தார்‌. 

 அர்ச்‌. சின்னப்பர்‌, கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம்‌ கொடுத்தனுப்பியபோது, அவருடன்‌ ஒனேசிமுஸையும்‌  சேர்த்து அனுப்பி வைக்தார்‌.(கொலொ 4:7-9).  பின்னர்‌, ஒனேசிமுஸ்‌, உரோமாபுரி ஆளுநனால்‌, மிகக்‌ கொடிய உபத்திரவங்களால்‌ சித்ரவதை செய்யப்பட்டார்‌; திருமணம்‌ செய்யாமல்‌ பரிசுத்த ஜீவியம்‌ ஜீவிக்கும்‌ கத்தோலிக்கக்‌ குருத்துவத்தைப்‌ பற்றி இவர்‌ பிரசங்கித்தபோது, அதைக்‌ கேட்டுக்‌ கோபமடைந்த உரோமை ஆளுநன்‌, இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள்‌ தொடர்ந்து உபாதித்தான்‌: இவருடைய கால்களையும்‌, கைகளையும்‌ குண்டாந்தடியால்‌ அடித்து, முறித்தனர்‌; பின்‌ கல்லால்‌ எறியப்பட்டு கி.பி.95ம்‌ வருடம்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌. சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச்‌ சகலமும்‌ நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்‌; அவர்கள்‌, தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்‌.சின்னப்பர்‌ உரோமையருக்கு எழுதிய நிரூபம்‌ 8:28).

அர்ச்‌.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


Tamil Catholic Quotes

Tamil Catholic Songs Lyrics


Tamil Christian Quotes 9 - St. Teresa of Avila

 அர்ச். தெரேசம்மாள் "பத்துப்பிரசங்கங் கேட்பதைவிட அது சிலவிசை சாங்கோபாங்கத்தில் அதிக விருத்தியடைய உதவியாகும். ஏனெனில் ஞாயம்பேசாமல் மவுனமாயிருக்கையில் இருதயத்தின் சுதந்தரத்தை யுடையவர்களாய், தங்கள் பேரில் உலகம் நன்மையோ, தின்மையோ எது சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதிருக்கவும் ஆரம்பிக்கின்றார்கள்"

Tamil Christian Quotes 8 - St. Philip Neri

 "அர்ச்சியசிஷ்டவனாவதற்கு மெய்யாகவே மனதுள்ளவன் அபத்தமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டாலும் பரிச்சேதம் அதை மறுத்துப்பேச ஞாயஞ்சொல்ல முயலவொண்ணாது" என்று அர்ச். பிலிப்புநேரி 

Tamil Christian Quotes 7 - St. Chrysostom

 அர்ச். கிறிசொஸ்தோம் "அர்ச்சியசிஷ்டவனாகவும், தாழ்ச்சியுள்ளவனா கவும் இருக்க மனமுள்ளவன் மற்றவர்கள் தன்னைத் திருத்தும்போது கீழ்ப்படிந்து, தன்பேரிலுள்ள தப்பிதத்தை யுணர்ந்து பிரலாபிப்பான். ஆனால் ஆங்காரியானவனோ பிரலாபித்தாலும் மற்றவர்கள் தன் குற்றத்தைக் கண்டு கொண்டதினாலே பிரலாபித்து அதினால் கலங்கி மறுத்து உத்தாரஞ்சொல்லித் தனக்கறிவிப்பவன் பேரில் கோபங் கொள்வான்"

Tamil Christian Quotes -6 St. Jane Frances de Chantal

"மெய்யாகவே, தாழ்ச்சியுள்ளவனாயிருப்பவன், எவ்வளவுக்கு நிந்திக்கப்படுவானோ அவ்வளவுக்கும் அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்வான்"  அர்ச். ஷாந்தால் அருளம்மாள்  (Jane Frances de Chantal )

Tamil Christian Quotes 5 - St. Francis De Sales

 "அவமானங்களைப் பொறுமையுடனே சகிப்பது; தாழ்ச்சிக்கும் மெய்யான புண்ணியத்துக்கும் உரைகல்

 அர்ச். பிராஞ்சிஸ்கு சலேசியார்

Tamil Christian Quotes 4 - St. John of the Cross

 சிலுவை அருளப்பர் "ஆ என்னாண்டவரே! நீர் என்பேரிலுள்ள பகூத்தைப் பற்றி இவ்வளவாக நிந்தைப்பட்டிருக் கையிலே உமது பேரிலுள்ள நேசத்தைப்பற்றி நானும் துன்பப்படவும், நிந்திக்கப்படவும் கேட்டுக்கொள்வதைவிட வேறொன்றுங் கேளேன்"

Tamil Christian Quotes 3

 "நிந்தையின் மட்டிலே சகிப்பில்லாதவன் புதுமைகளைச் செய்து வந்த போதிலும் மெய்யாகவே அவன் சாங்கோபாங்கத்துக்கு மிகவும் அகன்றவனாயிருக்கிறான்'' என்று அர்ச். தோமாஸென் பவர் (St. Thomas Aquinas) வசனிக்கின்றார்

Tamil Christian Quotes 2

. அர்ச்.  தோமாஸ் ஆகெம்பீஸென்பவர் "மெய்யாகவே தாழ்ச்சி யுள்ளவனா யிருப்பவன் தன்னைத் தானே நிந்திப்பது மன்றி தான் பிறரால் நிந்திக்கப்படவும் ஆசிப்பான்"

Tamil Catholic Quotes 1

 "நீ, சகல மனிதரிலுங் கடைகெட்டவனாக உன்னைப் பாவித்துக் கொள்ளாவிட்டால், மற்றவர்கள் உன்னிலும் மேலாக எண்ணப்பட நீ ஆசியாவிட்டால், சாங்கோபாங்கத்தில் விருத்தியடைந்திருப்பதாக நம்பாதே"  அர்ச். தெரேசம்மாள்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

St. Agatha (Feb. 5) - Lives of Saints in English

 Virgin and Martyr in Catania (238–252)

Feast on February 5th.

The seventh general persecution, during which Saint Agatha was martyred, was, according to all historians, the bloodiest and cruelest of all. Saint Cyprian informs us that its purpose was not only the death of Christians: the cruelty was graduated through a series of refinements, so that the victim would survive the torments. They did not want to grant the crown too soon. They wearied her in the hope of breaking her courage, and if, by the mercy of God, she happened to die before the appointed time, the executioners believed themselves deceived. Saint Augustine gives the reason for these atrocities: "The persecutors," he says, "had realized that the more Christians they put to death, the more would arise from their blood." They feared depopulating the empire if they had to kill so many thousands of believers.

Saint Agatha is arrested as a Christian.

It was during this cruel persecution that the blessed Agatha, born in Catania around 238 to noble and wealthy parents, deserved to receive the crown of martyrdom. Quintianus, the governor of the province of Sicily, having noticed Agatha's beauty, which, according to the acts of her martyrdom, surpassed that of all the girls of her time, conceived a violent passion for her. He sought by all possible means to satisfy his criminal desires, and when the edict of Emperor Decius was issued, ordering that every Christian, regardless of rank or gender, must sacrifice in the temples, Quintianus hastened to take advantage of this decree to seize Agatha and ordered her arrest.

The soldiers went to the young girl's residence and said to her:

- An edict of death has just been issued by the emperor and the proconsul against anyone who refuses to worship the gods and render them the due cult. But we hope that you will offer incense to them in their temple so that, with all due honor, we can present you to the proconsul Quintianus.

As the virgin vehemently refused, the soldiers prepared to take her to the governor. Before they laid hands on her, Agatha entered her room and, kneeling with her eyes raised to the sky, she prayed:

- Lord Jesus, only You know the affections of my heart, only You know with what joy and eagerness I have given You my faith and love. And now, Lord, I implore You, do not allow a man, given to all vices, to rob my body of its virginity's flower; hasten to come to my aid: do not deliver me to the devil and his satellite, the proconsul, lest he say, "Where is her God?" But I offer myself to You as a victim, receive my sufferings as a pledge of my love, because only You are my God, and to You alone is due glory forever and ever.

After thus praying, she promptly and joyfully surrendered to the lictors. During the journey, meditating on the celestial beauties of virtue, she said:

- By the grace of Christ, to preserve my body's purity, I have struggled against Satan, the author of evil, who has sown in the human heart the seed of all shameful passions of voluptuousness; I have overcome him and trampled him underfoot. I have then entrusted my soul to Christ, and I hope that He will grant me the grace to lose this body in its virginal beauty.

She is delivered to a woman of ill repute.

Quintianus, faithful to the satanic orders of the emperor, refrained from delivering the virgin immediately to torture. Instead, he ordered Agatha to be taken to a woman of ill repute named Aphrodise, who had in her house seven daughters as corrupt as herself, so that, through the words and examples of these wretched women, Agatha would be led to sacrifice to the gods and yield to the proconsul's infamous desires.

For thirty days, the virgin was forced to live in this odious company. These demons of lust, with infernal perseverance, sought to corrupt the chaste spouse of Jesus Christ. She, with tears in her eyes but a valiant heart, told them:

- Know that nothing in the world can ever separate my soul and thoughts from the love of Christ. Your words are like the wind, your promises like a stormy rain, your threats like a river, but this impetuous river, you can unleash it against my house, and it will not be shaken because it is founded on the firm rock that is Christ, the Son of the living God.

She spoke thus because her soul, like the thirsty deer mentioned by the Psalmist, desired to quench itself with the living waters of suffering, bitter for those who do not love but sweet and delightful for those who bear in their hearts the true love of Jesus Christ.

Aphrodise, seeing her unyielding in her resolution to die for the name of Christ rather than consent to sacrifice to idols, went to the proconsul:

- It would be easier, she said, to soften rocks or give iron the flexibility of lead than to remove from this young girl's soul the love of Jesus Christ. My daughters and I, day and night, have given her no moment of rest, and despite our persistence, we have achieved nothing other than making her more steadfast in her resolution. Neither supplications nor threats could make her hesitate even for a moment. I myself offered her precious pearls, magnificent adornments, houses in the city and the countryside, numerous slaves, but she valued none of these things more than the ground she tramples underfoot.

Before the proconsul's tribunal.

Quintianus, disappointed in his expectations, ordered the virgin to be secretly brought to his tribunal and said to her:

- What is your status?

- I am from a noble and illustrious family, and my parents possess immense wealth.

- If you are of noble and illustrious status, why do you want to lower yourself to the role of a servant?

- I am the servant of Christ, and that is why you see me acting as a servant.

- But you are truly free, Agatha; how can you call yourself a slave?

- Our nobility and our greatest glory lie in submitting to the law of Christ.

- So, do we not share in nobility, we who take pride in despising the service of your Christ?

- Truly, you have reached a degree of servitude where not only have you become slaves to your sins, but also worshippers of insensible matter. The honors due only to the true living God, you render to wood and stone.

- The blasphemous words you have just uttered will each receive the punishment they deserve. But why do you persist in refusing to give our gods the honors due to them?

- Do not call them gods, but demons, those whose images you fashion in bronze and whose marble figures you cover with gold.

- Cease to blaspheme, Agatha; come to your senses and sacrifice to the gods; otherwise, I will subject you to ignominious torments with common criminals, and you will be the cause of the eternal shame that will fall upon your family.

- I wish your wife to be like your goddess Venus, and you to resemble your great god Jupiter.

At these words, Quintianus, angered, ordered Agatha to be slapped. After that, he said to her:

- Do not dare, with your insolent words, to insult your judge.

- How! Agatha replied, do you then not want to be counted among those whom you have just called gods?

- Ah! You want, through your insults, to force me to inflict cruel torments upon yourself!

- I am amazed that such a wise man has come to the point of folly of not wanting to be like his gods and not wanting to conform his life to theirs! If these are your gods and you honor them as such, I have made you a good wish. Why then have you taken offense at the words by which I told you to conform your life to theirs? But if their likeness is abhorrent to you, then call them with me abominable and perverse beings.

- Each of your words is blasphemy; sacrifice to the gods, or prepare yourself for terrible punishments.

- The wild beasts to which you will deliver me will soften at the name of Jesus Christ. If you throw me into the fire, angels will come to spread a beneficial dew over me. If you strike me with rods, the Spirit of truth dwelling within me will know how to deliver me from your hands.

Shaking his head, the proconsul ordered Agatha to be led to a dark dungeon. As she was being taken away, Quintianus wanted to try one last time to bend her:

- Reflect, Agatha, and see how advantageous it is for you to avoid the torments I am preparing for you.

- It is rather you who should repent if you want to avoid eternal torments.

Angry, Quintianus then had the virgin taken to prison. She entered with the joy of one invited to a wedding feast, commending the outcome of the battle to God.

Unyielding constancy in torment.

The next day, Quintianus again brought Agatha before him:

- Well, what have you resolved regarding your salvation?

- My salvation is Christ.

- Until when, foolish one, will you persist in uttering guilty words? Renounce Christ and begin to honor our gods. Do not desire premature death.

- Renounce your own stone and wooden gods and serve the true God, your Creator; otherwise, you will undergo endless torments.

The enraged president ordered the martyr to be beaten with rods, and during this barbaric execution, he said to her:

- Change your resolution, and I will immediately stop the torture.

- Your torments are a source of delight to me, and I rejoice as one who has just received good news and discovered a rich treasure. These torments bring me joy because you can only make them last for a while. Wheat is carefully stored in granaries only after being separated from the straw. The same applies to my soul: it cannot enter paradise until your soldiers have subjected my body to various torments.

Quintianus, in a fit of rage, ordered that, after tormenting her breast, it be torn off.

As this horrible torture could not overcome Agatha's steadfastness, the governor had her taken back to prison, strictly forbidding, under severe penalties, any doctor to approach her and ordering at the same time that she be given neither bread nor water.




Saint Peter appears to Saint Agatha and heals her.

Around midnight, a venerable old man, preceded by a child holding a torch, appeared before Agatha:

- This impious tyrant has subjected your body to cruel torments, but your steadfastness in suffering inflicts even more cruel ones on him; that's why he mutilated you and tore off your breast. But God reserves intolerable torments for him throughout eternity. I was present while you endured all these cruel torments, and I saw that it would be possible to heal you, which is why I have come.

- I have never, replied Agatha, used any medicine for my body, and it would be shameful for me to abandon this resolution made since my youth.

- I am also a Christian, said the old man again; trust in me, I can heal you, and my presence here has no other purpose. Virgin of Christ, fear nothing from me.

- And what could I fear? Agatha replied. You are very advanced in age, and I am a child whose entire body is nothing but a wound. Nevertheless, I prefer these wounds to take away my soul's last breath rather than show them to you. I thank you, venerable father, for being willing to come to relieve me, but know that no medicine made by human hands will ever touch my body.

- Why such a resolution?

- Because I have Our Lord Jesus Christ, who with a single sign can heal all ills, and whose word alone makes the paralyzed walk and the lame leap. It is He, if He wills, who will restore health to His unworthy servant.

Then, the old man said with a smile:

- It is He Himself who has sent me to you; I am His apostle Peter. Look at your body; it is healed.

At these words, Saint Peter disappeared.

Raising her eyes to heaven, Agatha gave thanks to God in these words:

- I thank you, O Jesus, my Lord, for remembering me and sending your apostle to support my soul and heal the wounds of my body.

After her prayer, Agatha saw that her wounds were healed, and her breast had been miraculously restored. Throughout the night, a bright light filled the prison. The frightened guards fled, leaving the doors open. Agatha's fellow captives advised her to escape, but the saint replied:

- I do not want to deprive myself of the crown of glory reserved for the battles I still have to endure. I do not want to be a cause of punishment for my guards. I have the help of Jesus Christ, the Son of God, on my side. Until the end, I will persevere in confessing the faith of the one who comforted and healed me.

Glorious death.

Four days later, the president had her brought before his tribunal:

- How long will you persist in contempt for the edicts of the emperors? Sacrifice to the gods; otherwise, I will make you endure torments more cruel than the previous ones.

- Your words are in vain, Agatha replied, and the edicts of your emperors are unjust. Tell me, miserable one devoid of reason, what help can I expect from your gods of stone and wood? Has not my Lord Jesus given me another breast in place of the one you tore off?

Quintianus, in a fit of rage, exclaimed:

- Who dared to heal you?

- It is Jesus Christ, the Son of the living God.

- Again, you pronounce the name of your Christ, of whom I do not want to hear in any way!

- I am not allowed to silence the name of the one I invoke in the depths of my heart.

- We will soon see if your Lord Jesus will come to your aid.

At the same time, the judge ordered the hall to be scattered with broken pots, to spread burning coals, and to lay Agatha on them after stripping her of her clothes. But as soon as the holy martyr was laid on this bed of pain, an earthquake shook the walls, part of which crushed a counselor of the president named Sylvain and another of his friends named Theophile, who was encouraging Quintianus to have Agatha martyred. The entire city of Catania was also shaken by the earthquake. The frightened citizens went to the praetorium, but the proconsul, fearing a people's uprising, ordered Agatha to be taken to prison and withdrew himself into a secluded room.

Agatha, entering her cell, lifted her hands to heaven and said:

- I thank you, O Lord my God, for deeming me worthy to endure hard battles for your name. It is You, O Jesus, my Savior, who have given my soul the burning desire to renounce the joys of the world and have kept my body pure from all defilement. Hear me now, I beg you; allow your servant to leave this earth and go to you.

Then she gave her soul to this heavenly Bridegroom, for whom she had endured so many harsh battles. The Christians of Catania, upon hearing the news of the glorious martyr's death – which occurred on February 5, 252 – immediately rushed, without fear of the proconsul, took her body covered in such glorious wounds, and prepared to bury her with great honors. As these precious relics were placed in the sarcophagus prepared for them, it is said that a young man of celestial beauty appeared, accompanied by a procession of a hundred children dressed in magnificent clothes. No one had seen this young man in the city of Catania before. He entered the place where the revered remains of Agatha were being embalmed and placed a marble plaque under her head on which were engraved these words: "Holy soul, devoted, honor of God, protector of the homeland." He waited until the coffin was closed, then he disappeared. No one saw him again, and many thought he was an angel.

The news of this event soon spread throughout Sicily, so much so that even the Gentiles and Jews themselves had great reverence for the tomb of the glorious martyr.

Cult of Saint Agatha.

After the peace granted to the Church in 312, the fame of Saint Agatha spread, and great Doctors such as Saint Ambrose, Saint Augustine, Saint Damase, Saint Isidore, Saint Gregory the Great, and many others praised her in their writings.

From Sicily, her cult spread beyond Naples and Benevento, and a city was founded under her patronage, currently the seat of a bishopric, Saint Agatha of the Goths, where Saint Alphonsus Liguori was bishop. Her patronage was also given to churches in Rome, Lombardy, and France.

Her feast was elevated to a double rite by Clement XI on August 26, 1713.

In 1040, a Greek captain, after defeating the Saracens who infested Sicily, sent to Constantinople some bodies of saints, including those of Saint Agatha and Saint Lucy (of Syracuse), to attract God's blessings on the Eastern Empire through their intercession. But before the Venetians brought back the relics of Saint Lucy to Venice in 1205, the inhabitants of Catania had recovered those of their patroness in 1126, thanks to a valiant warrior, Gislibert. On August 17 of that same year, the bishop received them with great honor and triumphantly carried them to his cathedral, where they are still venerated. The eighth centenary was solemnly celebrated on August 17, 1926, under the presidency of Cardinal Lualdi, papal legate.

Since then, Catania has always had great devotion to its heavenly Patroness, to whom the city attributes the protection it has enjoyed from the eruption of Mount Etna in 253 to the dreadful earthquake of December 28, 1908.


A. Bousquet.

Consulted sources. – Acts of the martyrdom of Saint Agatha. – Abbe J.-B. Brun, Life of Saint Agatha (Paris, 1867.) – Prof. Salvatore Rombo, Vita e Culto di Sant’ Agata (1889). – (V. S. B. P., No. 103.)




















அர்ச். கொன்சாலோ கார்ஸியா (St. Gonsalo Garcia)

 அர்ச். கொன்சாலோ கார்ஸியா  (St. Gonsalo Garcia)




குருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் சபையின் பொதுநிலை சகோதரர் மற்றும் வேதசாட்சி :  (Franciscan Lay Brother and Martyr)


பிறப்பு : ஃபெப்ரவரி 5, 1557

வசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா (Vasai, Mumbar, Portuguese India)

இறப்பு : ஃபெப்ரவரி 5, 1597

நாகசாகி, ஜப்பான் (Nagasaki, Japan)

முத்திபேறு பட்டம் : செப்டம்பர் 14, 1627

திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)

புனிதர் பட்டம் : ஜூன் 8, 1862

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)



அர்ச். கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் வேதசாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, புனிதர் பட்டம் பெற்ற முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.

இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் கொங்கண்(Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான அர்ச்.  பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.

"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வசையில் பணியாற்றிய "செபஸ்தியோ கான்கால்வ்ஸ்" என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.

இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.

மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.

ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை ஆண்டவரின் புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.


புனிதர் பட்டமளிப்பு :

1627ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.

இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.

அர்ச். ஆகத்தா - St. Agatha, February 5

அர்ச். ஆகத்தா (பிப்ரவரி 05
கன்னிகை, வேதசாட்சி



நிகழ்வு

நம் புனிதை ஆகத்தா கொடுங்கோலனும் காமுகனுமாகிய குயின்டசின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளைச் சிறையில் அடைத்து, பலவாறாக சித்ரவதை செய்து, அவளுடைய மார்புகளை குறடுகளால் சிதைத்து, குற்றுயிராய் போட்டிருந்தான்.

அப்போது அவள் இருந்த சிறையின் கதவுகளைத் திறந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார். அவருடைய கையில் கொஞ்சம் மருந்து இருந்தது. அவர் ஆகத்தாவிடம் வந்து, “அம்மா! உன்னுடைய உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் மருந்து தடவிவிடுகின்றேன். இதனால் உன்னுடைய காயங்கள் ஆறி, வேதனை தணிந்து விரைவில் நீ குணம் பெறுவாய்” என்றார். ஆகத்தா அவரிடம், “நான் ஆண்டவருக்காக எத்தகைய பாடுகளை மனமுவந்து ஏற்கத் தயார். தயவுசெய்து நீங்கள் என்னுடலில் மருந்து தடவி, நான் ஆண்டவருக்காக பாடுகள் படுவதை தடுத்து விடாதீர்கள்” என்றார். அதற்கு அந்த மனிதர் அவரிடம், “அம்மா! நான் வேறு யாருமல்ல இயேசுவின் தலைமைச் சீடராகிய இராயப்பர்தான். என்னை இங்கே ஆண்டவர் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். அவர்தான் என்னை உன்னுடைய காயங்களில் மருந்து தடவி விடச் சொல்லி, விசுவாசத்தில்
 இன்னும் திடப்படுத்திவிட்டு வரச் சொன்னார்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்து ஆகத்தா, இராயப்பர் தன்னுடைய காயங்களில் மருந்து தடவ அனுமதித்தாள். இதனால் அவள் மறுநாளே உடல் நலம்தேறி, புதுப்பொழிவு பெற்றாள்.

வாழ்க்கை வரலாறு

காத்தோலிக்க கிறிஸ்தவ நெறியை பின்பற்றவது என்பது இன்றைக்கு இருப்பது போல் அன்று அவ்வளவு சுலபமல்ல, கிறிஸ்தவம் படிப்படியாக வளர்ந்த அந்த தொடக்க காலகட்டங்களில் கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்து வாழ்வது என்பது மிகவும் சவாலான காரியம். அத்தகைய சூழலிலும் ஆண்டவர் இயேசுவை தன்னுடைய ஆண்டவராக, எல்லாமுமாக ஏற்றுக்கொண்டு, அவருக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர்தான் கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். ஆகத்தா.

ஆகத்தா கி.பி மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் (235 -251) பிறந்தவர், இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். அக்காலத்தில் உரோமையை குயின்டஸ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் உரோமைக் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு, கிறிஸ்துவை வழிபடுகின்றவர்களை எல்லாம் கொடுமையாகச் சித்ரவதை செய்து கொலை செய்தான். இவனுடைய அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படாது கிறிஸ்துவின் மீது உறுதியான விசுவாசம் கொண்டு விளங்கியவர்தான் ஆகத்தா.

ஆகத்தா கிறிஸ்துவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறாள் என்ற செய்தி மன்னன் குயின்டசுக்குத் தெரிய வந்தது. எனவே, அவன் படைவீரர்களை அனுப்பி ஆகத்தாவை இழுத்து வரச் சொன்னான். மன்னனின் உத்தரவின்பேரில் படைவீரர்கள் அவரை மன்னனுக்கு முன்பாக இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆகத்தாவை ஒருகணம் பார்த்த மன்னன் அவளுடைய அழகில் மயங்கி, அவளைச் சித்ரவதை செய்ய விரும்பாமல், தன்னுடைய ஆசைக்கு உட்படுத்த நினைத்தான். ஆனால் ஆகத்தாவோ, “நான் ஆண்டவருக்கு என்னையே முழுமையாய் அர்ப்பணித்து விட்டேன். அதனால் யாருக்கும் என்னைத் தருவதாய் இல்லை” என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்தாள். இதனால் மன்னன் அவரை சிறையில் அடைத்து அவருடைய சதையை பிய்த்து எடுத்து பலவாறாக சித்ரவதை செய்தான். அப்படியிருந்தாலும் ஆகத்தா தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் சினமுற்ற மன்னன் அவரை எரியும் தீயில் போட்டு கொன்று போட்டான்.

ஆகத்தா இறக்கும்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். அப்படியிருந்தாலும் அவர் ஆண்டவர் இயேசுவுக்காக செய்த தியாகம் அளப்பெரியது.

கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

விசுவாசத்திற்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்கிய அர்ச். ஆகத்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.



ஆண்டவருக்கு முழுமையாய் நம்மை அர்ப்பணித்தல்

அர்ச். ஆகத்தாவின் வாழ்க்கை வரலாற்றை நாம் வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எப்படி ஆண்டவருக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழ்ந்தார் என்பதுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது.

தன்னுடைய ஆசைக்கு ஆகத்தா இணங்க மறுத்ததும் குயின்டஸ் என்ற அந்தக் காமுகன் அவரை அப்போடிசியா என்ற விலைமகளிடம் அனுப்பி வைத்து, தன்னுடைய மாயவலையில் சிக்க வைக்க நினைத்தான். ஆனால், விலைமகளின் திட்டம் ஆகத்தாவிடம் செல்லுபடியாக வில்லை. மட்டுமல்லாமல் அந்த விலைமகன் ஆகத்தாவிடம் தான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கேட்டான். தான் போட்ட திட்டம் கைகொடுக்காததினால் கடும்கோபம் கொண்ட மன்னன் அதன்பிறகு ஆகத்தாவை பலவாறாக சித்ரவதை செய்து கொலை செய்தான். இப்படி எத்தனையோ சோதனைகள், அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஆகத்தா ஆண்டவர் இயேசுவுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்தது நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

அர்ச். ஆகத்தாவின் விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்த அர்ப்பண உணர்வை, உறுதியான விசுவாசத்தை நமதாக்குவோம். அதன்வழியாக ஆண்டவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சேசுவின் மதுர இருதயம் - Tamil Catholic Songs Lyrics

சேசுவின் மதுர இருதயம் 

1. சேசுவின் மதுர திரு இருதயமே
சிநேக அக்கினி மயமே
தினமும் நீர் எங்கள்
சிநேகமாயிருப்பீர் தேவ தயாநிதியே

 2. மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க மனுமகனாய்ப் பிறந்தாய்
மகிமை பிரதாப கடவுளானாலும்
மாபழி மேற்சுமந்தாய்.

3. கள்ளளைப் போல கசடர்கள் உன்னைக் கடுஞ்சிலுவையி லறைந்தார்
கருணை ஆர் உந்தன் இருதய அன்பின் கரை எவர் கண்டறிவார்

4. உம் திரு ரத்தம் ஒரு துளி முதலாய் உனக்கென வைத்தாயோ ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திவ்ய இருதயமே

 5. என்றும் எம்மோடு இருந்தருள்
ஈவாய் இனிய நல்லுணவாவாய். இவையெல்லாம் பாரா ஈனர்கள்
நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே

6. நன்மைமேல் நன்மை என்றும் நீ செய்தாய் நாங்களோ தீமை செய்தோம். நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நாணி இப்போ தழுதோம்

7. எங்களைப் பாரும் இடர்குறை தீரும் இனிய நல்லிருதயமே எந்தெந்தப்
பாவ தந்திரம் நின்று
இரட்சிப்ப துன் பொறுப்பே


அர்ச். பிளெய்ஸ் (St. Blaise)

அர்ச். பிளெய்ஸ் ✠ (St. Blaise)



*வேதசாட்சி, பரிசுத்த உதவியாளர் : (Hieromartyr, Holy Helper)

*பிறப்பு : தெரியவில்லை
செபஸ்டீ, வரலாற்று ஆர்மேனியா (Sebastea, historical Armenia)

*இறப்பு : கி.பி. 316


*பாதுகாவல் :
விலங்குகள், கட்டிடப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தொண்டை, கல் வெட்டும் தொழிலாளர், செதுக்கும் பணி செய்பவர்கள், கம்பளி தொழிலாளர்கள், குழந்தைகள், "மராட்டி" (Maratea), "இத்தாலி" (Italy), "சிசிலி" (Sicily), "டாலமஷியா" (Dalmatia), "டப்ரோவ்னிக்" (Dubrovnik), "சியுடாட் டெல் எஸ்ட்" (Ciudad del Este), "பராகுவே" (Paraguay), "காம்பானரியோ" (Campanério), "மேடிரா" (Madeira), "ரூபியரா" (Rubiera).

அர்ச். பிளெய்ஸ், ஒரு மருத்துவரும், பண்டைய "வரலாற்று ஆர்மேனியாவின்" (Historical Armenia) "செபஸ்டீ" (Sebastea) எனுமிடத்தின் ஆயருமாவார். இது, தற்கால "மத்திய துருக்கி" (Central Turkey) நாட்டிலுள்ள "சிவாஸ்" (Sivas) எனுமிடமாகும்.

நம்மிடமிருக்கும் அவரைப்பற்றிய முதல் குறிப்பு, 5ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உள்ள ஒரு மருத்துவர், "அடியஸ் அமிடெனஸ்" (Atius Amidenus) மருத்துவ எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது; தொண்டையில் சிக்கியிருக்கும் பொருட்களை நீக்கி சிகிச்சையளிப்பதில் அவரது உதவி அங்கு இருந்திருக்கிறது. அர்ச் பிளெய்ஸ், வேதசாட்சி என்ற மகத்துவம் பெற்ற இடம், "செபஸ்டீ" (Sebastea) என்று அறிவித்தது, இத்தாலியின் பெரும் வர்த்தகரும், ஆராய்ச்சியாளரும், மற்றும் எழுத்தாளருமான "மார்க்கோ போலோ" (Marco Polo) ஆவார். இத்திருத்தலம் "சிட்டாடல்" மலைக்கு (Citadel Mount) அருகில் இருப்பதாக 1253ம் ஆண்டு அறிவித்தவர், பிளெமிஷ் பிரான்சிஸ்கன் மிஷனரியும், மற்றும் ஆராய்ச்சியாளருமான (Flemish Franciscan missionary and explorer) வில்லியம் (William of Rubruck) ஆவார். இருப்பினும், அது தற்போது இல்லை.

தாம் பிறந்த ஆர்மேனியாவின் செபஸ்டீ நகரில், தமது இளமையில் தத்துவம் கற்ற இவர், ஒரு மருத்துவராக பணியாற்றினார். உடல் வியாதிகளை குணமாக்கிய அர்ச். பிளெய்ஸ், ஒரு ஆன்மாக்களின் மருத்துவர் ஆவார். அனைத்து பகுதிகளிலிருந்தும், உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்துவதற்காக மக்கள் அவரிடம் திரண்டனர். தாமாக தம்மைத் தேடி வந்த விலங்குகளைக்கூட அவர் குணப்படுத்தியதாகவும், பின்னாளில், அவர் அவைகளால் உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், தமது தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு குகைக்கு சென்று செப வாழ்வில் ஈடுபட்டார். "செபஸ்டீ" ஆயராக, பிளெய்ஸ், தமது மக்களுக்கு தமது வாய் வார்த்தைகளை முன்னுதாரணமாக அறிவுறுத்தினார். கடவுளுடைய ஊழியரான பிளெய்ஸின் மகத்தான நற்பண்புகளும், பரிசுத்த தன்மைகளும் அவருடைய பல அற்புதங்களால் உறுதிப்படுத்தப்பட்டன.

(Acta Sanctorum) எனும் புனிதர்களின் சரித்திர பதிவு நூலின்படி, இவர் அடித்து துன்புறுத்தப்பட்டும், கூரிய இரும்பினாலான முனைகள் கொண்ட சீப்பு போன்ற ஆயுதத்தால் (Iron comb) சித்திரவதை செய்யப்பட்டும், இறுதியில் தலை வெட்டப்பட்டும், மறைசாட்சியாக படுகொலை செய்யப்பட்டார்.

316ம் ஆண்டு, "கப்படோசியாவின்" ஆளுநரான (Governor of Cappadocia) "அக்ரிகோலா" (Agricola) என்பவரும், "லெஸ்ஸர் ஆர்மேனியா" (Lesser Armenia) என்றும், "ஆர்மேனியா மைனர்" (Armenia Minor) என்றும் அழைக்கப்படும் அதிகாரியும் இணைந்து, "ரோமப்பேரரசர்" (Emperor of the Roman Empire) "லிசினியஸ்" (Licinius) என்பவரின் உத்தரவின்படி, கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். பிளெய்ஸ் பிடிபட்டார். விசாரணை மற்றும் கடுமையான வாதங்களின் பின்னர், அவர் சிறையில் தள்ளப்பட்டார். பின்னர் அவர் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், தமது ஒரே குழந்தையின் தொண்டையில் மீன் முள் சிக்கியதால் துயருற்ற தாய் ஒருவர், இவரது காலடியில் வந்து விழுந்தாள். தமது குழந்தையை குணமாக்க வேண்டி அவரது பரிந்துரையை வலியுறுத்தினாள். நின்று, அவளுடைய துயரத்தைத் தொட்டு, அவர் குழந்தைக்காக செபித்தார்.; குழந்தை குணப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தொண்டை காயங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பிளேஸ் அழைக்கப்படுகிறார்.

கவர்னரின் வேட்டைக்காரர்கள் அவரை திரும்ப செபஸ்டீ கொண்டு செல்லும் வழியில், ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தனர். அந்த பெண்ணுடைய ஒரே பன்றியை ஒரு ஓநாய் பிடித்ததாக அழுதாள். பிளெய்ஸின் கட்டளையின்பேரில், ஓநாய் பன்றியை உயிருடனும் காயப்படுத்தாமலும் விட்டுச் சென்றது.

இவரது நினைவுத் திருநாளானது, "இலத்தீன்" (Latin Church) திருச்சபைகளில் ஃபெப்ரவரி மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.


St. Blaise


Little is known about St. Blaise, a 4th-century bishop who died a martyr. He was forced to flee due to religious persecution. While hiding in a cave, legend has it that he was discovered by a group of hunters, who found him surrounded by wild animals he had tamed. The hunters dragged him off to prison. On the way, he encountered a mother with a young son who had a bone stuck in his throat. Blaise commanded the bone be dislodged, and the child coughed up the bone.

St. Blaise's feast day is celebrated with the Blessing of the Throats with the following prayer:

Through the intercession of St. Blaise, bishop and martyr, may God deliver you from ailments of the throat and from every other evil. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen.


St. Blaise is also venerated as one of the "Fourteen Holy Helpers," a group of saints invoked as early as the 12th century in Germany and who are honored on Aug. 8: St. Denis of Paris (headache and rabies), St. Erasmus or Elmo (colic and cramp), St. Blaise (throat ailments), St. Barbara (lightning, fire, explosion and sudden and unprepared death), St. Margaret (possession and pregnancy), St. Catherine of Alexandria (philosophers and students, and wheelwrights), St. George (protector of soldiers), Sts. Achatius and Eustace (hunters), St. Pantaleon (tuberculosis), St. Giles (epilepsy, insanity, and sterility), St. Cyriac (demonic possession), St. Vitus (epilepsy), and St. Christopher (travelers). The German Dominicans promoted this veneraion, particularly at the Church of St. Blaise in Regensburg (c. 1320).

சனி, 3 பிப்ரவரி, 2024

அர்ச்.அருளானந்தர் -St. John de Britto (Feb. 4)

பிப்ரவரி 04ம் தேதி
ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்.அருளானந்தர் திருநாள்.


அர்ச். அருளானந்தர் என்று அழைக்கப்படுகிற, அர்ச்.ஜான் டி பிரிட்டோ, 1647ம் வருடம், மார்ச் 1ம் தேதியன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில், அரச குடும்பத்தைச் சேர்ந்த உயர் குலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பெரைரா, பிரேசிலில் போர்த்துக்கல் அரசருடைய பிரதிநிதியாக பொறுப்பேற்றிருந்தபோது, மரித்தார். அருளானந்தர்,1662ம் வருடம் சேசு சபையில் சேர்ந்தார். உலகப் புகழ் பெற்ற கோயிம்பரா பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து விட்டு, இவர், தென்னிந்தியாவிலுள்ள மதுரையை 1673ம் வருடம், அடைந்தார்;

 இது, சேசு சபையினருடைய வேதபோதக அலுவலுக்கான மண்டலத்தைச் சேர்ந்தது. மற வர்கள் நிறைந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்தபகுதியில், இவர் கத்தோலிக்க வேதத்தைப் போதித்தார். அரசன் இவரை 1684ம் வருடம் கைது செய்து, சிறையில் வைத்தான். பின்னர், நாட்டை விட்டு, இவரை வெளியேற்றினான். இவர் மறுபடியும் 1687ம் வருடம், லிஸ்பனுக்குத் திரும்பினார். இவருடைய நண்பரும் அரசருமான 2ம் பேத்ரோ, இவரைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள பெரிதும் ஆசித்தார்; இவருக்கு வேதபோதக அலுவல்களுக்கான நிதித் துறையின் அதிபராக பொறுப்பை அளித்தார்.ஆனால், 1690ம் வருடம்,இவர் தன்னுடன் 24 புதிய வேதபோதகக் குருக்களுடன், அதே மறவ இராஜ்ஜியத்திற்குத் திரும்பி வந்தார். தமிழ் மொழியைக் கற்று அதில் தேர்ச்சியடைந்தார்; தமிழிலேயே ஞான உபதேசத்தைக் கற்றுக்கொடுத்தார். அநேக மறவர்களை கத்தோலிக்கர்களாக மனந்திருப்பினார்; மறவ நாட்டில், இவ்விதமாக இவர் மேற்கொண்ட வேதபோதக அலுவலில் அமோக வெற்றியடைந்தார்.

 மறவ இளவரசனான தடியத்தேவனை மனந்திருப்பினார்; இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியைமட்டும் வைத்துக் கொண்டு மற்ற பெண்களை விலக்க வேண்டும் என்கிற அர்ச்சிஷ்டவரின் அறிவுறுத்தலுக் கேற்ப அவனும் அதே போல் செய்தான். அவ்வாறு விலக்கப்பட்ட ஒரு பெண், அண்டை நாட்டின் அரசனான சேதுபதியின் சகோதரரின் மகளான தால், அந்த அரசன், கிறீஸ்துவர்களை உபாதிக்கலானான். அர்ச். அருளானந்தரும், அவருடைய சக குருக்களும், கைது செய்யப்பட்டு, இராமநாதபுரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு, பிராமணர்கள், அர்ச். அருளானந்தரைக் கொல்ல வேண்டும் என்ற ஆலோசனையை அரசனுக்குக் கூறினர். அர்ச்.அருளானந்தரை தண்ணீர் தொட்டியில் அமிழ்த்தியும், இந்துக் கோவிலுக்குள் அடைத்து வைத்தும், கரடு முரடாயிருக்கிற பாதைகளில், குதிரையில் கட்டி இழுக்கப்பட்டும், சித்ரவதைச் செய்தனர்.

 1693ம் வருடம், பிப்ரவரி 4ம் தேதி, அவ்வருடத்தின் தபசுக்காலத்தின் முதல்நாளான சாம்பல் புதன் கிழமையன்று, அர்ச். அருளானந்தரை, ஓரியூர் மணலிற்கு இட்டுச் சென்றனர். இவருடைய தலையை வெட்டுவதற்கு, மிகக் கூர்மையான ஒருவாளுடன், ஒரு கொலைஞன், தயாராயிருந்தான். அர்ச். அருளானந்தர், அவனுக்கு சமாதானம் கூறி வாழ்த்தினார்; பின் மணலில் முழங்காலிலிருந்து, தன் தலையைக் குனிந்தபடி, கொலைஞனுக்குத் தன் கழுத்தைக் காண்பித்தார்.


திரளாகக் கூடியிருந்த மக்கள் முன்பாக, அர்ச். அருளானந்தர், நமதாண்டவருக்காக தலை வெட்டப்பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தி, வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார். ஒருவர் தலை வெட்டப்படும்போது, அந்த நபர் முன்பக்கமாகத் தரையில் விழுவார்; ஆனால், அர்ச். அருளானந்தர், தலைவெட்டப்பட்டபோது, பின்பக்கமாக விழுந்தார்; இவருடைய வீரத்துவத்தை, சர்வேசுரன் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதை, இதன் மூலம வெளிப்படுத்துகிறார்.

கோலியாத் முன் பக்கமாக தரையில் விழுந்தான்; அது வெட்கத்திற்குரிய காரியம் என்பதைக் காண்பிக்கிறது. அர்ச்சிஷ்டவருடைய கைகால்களை வெட்டி, அவருடைய சரீரம் மட்டும், ஒரு கம்பில் ஊடுருவக்குத்தப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. அதிலிருந்து வடிந்த இரத்தம், மணிலில் பட்டு, அந்த பிரதேசம் முழுவதுமுள்ள மணல் எல்லாம் சிவப்பாக மாறியது. இந்த புதுமையை இன்றும் கூட, ஓரியூரில் நாம் காணலாம்; இந்த அற்புத செந்நிற மண்ணை, வீடுகளுக்கு பக்திபற்றுதலுடன், அருளிக்கத்தைப்போல் பாவித்து பயன்படுத்தியவர்களுக்கு அநேக புதுமைகள் நிகழ்ந்துவருகின்றன.

இதனாலேயே இவர், அற்புத செந்நிற மண்ணின் அர்ச்சிஷ்டவர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய சரீரத்தை, கிறீஸ்துவர்கள், இரகசியமாக, வணக்கத்துடன் எடுத்துப் பத்திரமாக, சேசு சபைகுருக்கள் மூலமாக, போர்த்துக்கல் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அர்ச். அருளானந்தரான அர்ச். ஜான் டி பிரிட்டோவின் உத்தம பக்தியுள்ள கத்தோலிக்க தாயார், தன் பிரிய மகன், ஆண்டவருக்காக வேதசாட்சியாக தமிழ் மறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதைக்கேட்டு, துக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய வேதசாட்சியும், அர்ச்சிஷ்டவருமான தாய் என்பதைக் குறித்து பெருமையடைந்தார்கள். லிஸ்பனுக்கு வந்த தன் மகனுடைய சரீரத்தை வாங்க வந்தபோது, கறுப்பு உடை அணியாமல், திருமண உடை அணிந்து வந்து, ஆடம்பரமாக வாங்கினார்கள்.

 அர்ச். அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அற்புத சீலி ஆனந்த வேலி - Tamil Catholic Songs Lyrics

அற்புத சீலி ஆனந்த வேலி

தாய் மனோகரி குணாகரி கிருபாகரி
 தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி

1. அற்புத சீலி ஆனந்த வேலி
    நற்கதி தாராயம்மா
    தற்பரன் தாயே அன்னாளின் சேயே
    ஆள்வா யென்னாளுமம்மா

2. தாவீது தந்த தாய் மரி எந்தன்
    தாயகம் நீரே யம்மா
    பாவிகள் தம்பம் பக்தியின் பிம்பம்
    பாதம் தொழுதோம் அம்மா

3. ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம்
    கொண்டவர் நீரே யம்மா
    கன்ம வினைகள் என் மனம் கொள்ளா
     காப்பதும் கடனே அம்மா.


Our Lady Songs Lyrics 

சதா சகாய தாயே - Tamil Catholic Songs Lyrics

சதா சகாய தாயே



சதா சகாய தாயே
சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும்
உமையே தினம் நினைந்தாலே

1. உதய தாரகை இருளில்
நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோம் பாவமும்
களைவாய் பரம நாயகியே

பயமும் கவலை நீர்
பதும அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும்
நீயென நிதம் புகழுவோம் - சதா சகாய தாயே

2. புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
 புனித மாமரியே
 சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே  - பயமும் கவலை

நித்திய ஸ்துதிக்குரிய - Tamil Catholic Song Lyrics

நித்திய ஸ்துதிக்குரிய



1. நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கே
 பக்தியாய் ஆராதனை
 எத்திசையும் புரிவோம்

2. அல்பகலாகத் தேவா
அடைபட்டிருப்பது ஏன்?
அடியோர் கவலை தீர்த்து
ஆறுத லீந்திடவே

3. அன்பின் அவதாரமே
இன்ப எம் சோதரமே
துன்புறும் இந்நேரமே
வந்தோ முந்தன் பதமே

 4. ஜீவிய அப்பமாக
தேவனே இங்கெழுந்தீர்
பாவிஎம் மீது கொண்ட
பாசத்திற்கீடு முண்டோ

5. தாழ்ச்சிக்கொரு முடியாய்
ஆட்சியிதில் புரிய
மீட்சிபுரி அப்பத்தை
மேதினியோர்க் கீந்தீரே

 6. வானோரதிசயமே
ஈனோரெம் போஜனமே
ஞானோர்கள் முப்பலமே
ஞாலத்திற்கோர் தீபமே

அன்புருவாய் - Tamil Catholic Songs Lyrics

அன்புருவாய்

1. அன்புருவாய் எம் நடுவில்
ஆசையுடன் வந்துதித்தீர் இந்தப் பொன்னொளியுள் வீற்றிருக்கும்
பூபதியே நமஸ்காரம்

 2. பரலோக உந்நதத்தில்
பாக்கியமாய் வாழ்பவர்
நீர்நரலோக வாசிகளுள்
நலமேது தேடி வந்தீர்?

3. நித்திய பிதாவினண்டை
நிரந்தரம் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை
சுதந்திரமாய்க் கொண்டதேனோ?

 4. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள்
வந்த தென்ன வானரசே.

5. வானமதில் மேலவர்கள்
வாழ்த்தி யென்றும் போற்றுகின்ற
ஞானமே எம் மத்தியை
 நீர் நாடினதே ஆச்சரியம்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

அர்ச். நொலாஸ்கி ராயப்பர் திருநாள். St. PETER NOLASQUE.

சனவரி மாதம் 31-ந் தேதி. 
அர்ச். நொலாஸ்கி ராயப்பர் 
St. PETER NOLASQUE (1189-1256)
துதியர்



அர்ச். நொலாஸ்கிராயப்பர் பிரான்ஸ் இராச்சியத்திலே உத்தம குலத்தவரான தாய் தகப்பனிடமிருந்து பிறந்தார். அவர்  குழந்தையாயிருக்கையில் அவரிடத்தில் சில அதிசயமான காரியங்கள் சம்பவித்தன. அவையாவன: தேன் ஈக்கள் கூட்டமாய்ப் பறந்து அந்தக் குழந்தையின் அருகில் வந்து அதின் வலது கையிலே மொய்த்துத் தேன் இராட்டை உண்டாக்கிற்று. அந்தக் குழந்தையை யாதொரு பதிதன் பட்சத்தினாலே கையில் ஏந்திக்கொள்ளுஞ் சமயத்திலே அது முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் சிறு கையினாலே அவனைத் தள்ளும். ஆனால் சத்திய திருச்சபைக்குட்பட்ட யாதொரு குரு அந்தக் குழந்தையைக் கையிலே ஏந்தினால் அது சந்தோஷமாய்ப் போகும். இந்த ஆச்சரியமான காரியங்களைக் கண்டவர்கள் பிற்காலத்தில் அவருக்கு வரப்போகிற அர்ச்சியசிஷ்டதனத்தின் அடையாளம் இப்போதுதானே காணப்படுகிறது என்பார்கள். சிறு வயது துவக்கி அவர் வெகு விருப்பத்தோடே தரித்திரர்களுக்குத் தருமஞ் செய்துகொண்டு வந்தார். எப்போதும் விரத்தராயிருக்க வார்த்தைப்பாடு செய்து கற்போடே மற்றச் சகல புண்ணியங்களையும் அநுசரித்துவந்தார்.

 அவருக்கு வாலிப வயது நடக்கிறபோது அவருடைய தாய் தகப்பன் இறந்து போனார்கள், அவர் இருந்த நாட்டிலே அல்பிழென் சேஸென்கிற பதிதர் மிகவும் பலத்ததினாலேயும் அர்ச். கொலாஸ்கி ராயப்பர் அந்தப் பதிதர்மேலே வெகு அருவருப்பாயிருந்ததினாலேயும் அந்தப் பதிதர் இருந்த சீமையைவிட்டு அப்புறம்போக மனதாயிருந்து தமது உடமையெல்லாம் விற்றுப்போட்டுத் தாம் எஸ்பானியா ராச்சியத்திலுள்ள செறாத்தென்கிற மலையிலுள்ள தேவமாதாவின் கோவிலுக்குப் பயணமாய்ப் போனார். அப்படிக்கொத்த பயணம் பசாசுக்குப் பொருந்தா ததினாலே பசாசுகள் மனுஷரூபமாய் அவருக்குக் தரிசனையாகி, வழியிலிருக்கிற கள்ளர் உன்னைப் பிடித்து உன் தட்டுமுட்டைப் பறித்துக்கொண்டு  உன்னைக் கொன்று போடுவார்கள், ஆகையால் நீ அப்புறம் போகாதே, என்று சொல்லிப் பயம் வருவிக்கப் பிரயாசப்பட்டன. அதற்கு அர்ச். நொலாஸ்கிராயப்பர், அந்தப் பொல்லாப்பிலே நின்று சேசுநாதர் என்னை இரட்சிப்பாரென்றார். அந்த வார்த்தை கேட்டவுடனே பசாசுகள் அக்ஷணத்திலே பொறுக்கக் கூடாத நாற்றம் வீசிக் காணாமற்போயின.

அவர் முன்சொல்லப்பட்ட கோவிலைச் சேர்ந்து அதை மகா பத்தியோடே சேவித்த பிற்பாடு பர்செலோனென்கிற பட்டணத்துக்குப் போனார். அதிலே துலுக்கர் கையிலே அகப்பட்ட அநேக கிறீஸ்துவர்கள் துலுக்கர் பண்ணின நிஷ்டூரத்தினாலே கிறீஸ்துநாதருடைய திருவேதத்தை விட்டுத் துலுக்கர் மதத்தில் உட்படக் கிட்டின தறுவாயாயிருக்கிறதை அவர் கண்டு அவர்கள் ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் இரட்சிக்கத்தக்கதாக அவர்களை மீட்கத் தமது கையிலிருந்த பணமெல்லாஞ் செலவழித்தார். மேலும் மற்றப் பேரை மீட்கத் தமக்கு வகையில்லையென்று கண்டு அவர்களை மீட்கிறதற்கு ஆச்சரியமான உபாயம் நினைத்தார். அதாவது: தாம் விலைபட்டு அந்தப் பணத்தைக்கொண்டு அவர்களை மீட்கிறதற்காகிலும், அல்லது அவர்களை விடுவித்து அவர்களுக்குப் பதிலாய் அந்த விலங்கிலே தாம் இருக்கிறதற்கென்கிலும் ஆசையாய் இருந்தார். அவர் கொண்ட அப்படிக் கொத்த நல்ல மனதின்பேரிலே சர்வேசுரன் தமக்குண்டான பிரியத்தைக் காண்பிப்பதற்காக புதுமை பண்ணினார்.

அதெப்படியென்றால் அர்ச். இராயப்பர் ஒரு இராத்திரி தியானத்தில் இருக்கிறபோது மோட்ச விராக்கினி அவருக்குத் தரிசனையாகி, வேதங் கேளாதவர்களிடத்தில் அடிமையாயிருக்கிற கிறீஸ்துவர்களை மீட்கிறதை நோக்கமாகக் கொண்டு ஒரு சபை நம்மைக் குறித்து நீ உண்டாக்கினால் அந்தப் புண்ணியம் நமது திருக்குமாரனுக்கும் நமக்கும் வெகு பிரியமாயிருக்கு மென்று சொல்லி மறைந்தாள். அவர் அதைக் கேட்டுத் தேவமாதாவின் உதவியால் உடனே அந்தச் சபையை உண்டாக்கினார். அப்படிக்கொத்த சபையில் உட்பட்டவர்கள் கிறீஸ்துவர்களிடத்திலே பிச்சை வாங்கி அந்தப் பணமெல்லாம் முன் சொல்லப்பட்ட அடிமைகளை மீட்கிறதிலே செலவழிப்பதுமல்லாமல், பணமில்லாத சமயத்திலே மேற்சொல்லிய அடிமைகளை மீட்க வேண்டிய அவசரமிருந்தால் தாங்கள் அடைமானமாயிருந்து அவர்களை விடுவிக்க வார்த்தைப்பாடு கொடுப்பார்கள்.
அர்ச் இராயப்பர் உண்டாக்கின அப்படிக் கொத்த சபையைக்கொண்டு திருச்சபைக்கு வந்த நன்மை இவ்வளவு என்று வரையறுக்கமுடியாது. இதல்லாமல் அவர் வரு காரியங்களைத் தீர்க்க வருங் தரிசிபோலே அநேகம்விசை வெளிப்படுத்துவார். தேவமாதாவுங் காவலான சம்மனசும் அநேகம்விசை தமக்குத் தரிசனையாவதினால் அவர் வெகு சந்தோஷத்தை அடைவார். துலுக்கருடைய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்கவும், மீட்கக் கூடாதவர்களை விசாரித்து ஞான உபதேசஞ் சொல்லி விசுவாசத்திலே தேற்றவும் மிகுந்த பிரயாசைப்பட்டார். அதற்கு வெகு பயணமுஞ் செய்தார். அதினிமித்தம் தாமுஞ் சிறைப்பட்டு விலங்கில் இருந்தார். அவருடைய புண்ணியங்களைப் பார்த்த அநேகந் துலுக்கரும் மனந்திரும்பிக் கிறீஸ்துவர்களானார்கள். அவர் மரணகாலம் வருமட்டுஞ் சகல புண்ணியங்களின் நெறியில் மகா சுறுசுறுப்போடே நடந்தபிற்பாடு, தமக்குச் சாவு கிட்டியிருக்கிறதென்று புதுமையாக அறிந்து, தாம் உண்டாக்கின சபையில் உட்பட்டவர்களை அழைப்பித்து அடிமைகளை மீட்கிற வேலையிலே அவர்கள் சுறுசுறுப்பாயிருக்கப் புத்திசொல்லிக் கர்த்தர் பிறந்த ஆயிரத்திருதூற்றைம்பத்தாறாம் வருஷத்தில் மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். இராயப்பர் பிறசிநேக மென்கிற புண்ணிய பாதையிலே எவ்வளவோ சுறுசுறுப்போடே நடந்தாரென்று கேட்டீர்களே. அந்தப்பிரகாரமாய் நீங்கள் புறத்தியாரை வாயினாலே மாத்திரமல்ல, சுகிர்த கிரியையினாலேயுஞ் சிநேகிக்க வேண்டும். புறத்தியாரிடத்திலே ஆண்டவருடைய சாயல் இருக்கிறதென்று நீ நினைத்தால் புறத்தியார் உனக்கு உறவின் முறையாசல்லா திருந்தாலும் நீச சாதியானாலும் அநேகங் குறையுள்ளவர்களாயிருந்தாலுந் தரித்திரர்களாய் உனக்கு உதவாதவர்களா யிருந்தாலும் அவர்களைச் சிநேகிக்கவேண்டும். உன் வீட்டுக்கு வந்த துரையின் பிரதிநிதியிடத்திலே குறையிருந்தாலுந் துரையுடைய பிரதிநிதியென்கிற பதவி முகாந்தரமாக அவனுக்கு ஆசாரக் குறைபண்ணாமல் சங்கை பண்ணு வாயே. அந்தப்பிரகாரமாய் மனுஷரிடத்திலே ஆண்டவருடைய சாயலிருக்கிற முகாந்தரமாக அவர்களைச் சிநேகிக்க வேண்டும். யாதொருவன்  நல்ல வேலை செய்கிற முகாந்தரமாகவும் உனக்கு அவன் உதவுகிற முகாந்தரமாகவு மாத்திரம் அவனைச் சிநேகித்தால் மாடு குதிரை நாய் முதலான மிருகங்களைச் சிநேகிப்பது போல் மனுஷரைச் சிநேகிக்கிறாய். இதற்கு அர்த்தமேதென்றால் நாய் வேட்டைக்கும் மாடு உழவுக்கும் குதிரை சுமை எடுப்பதற்கும் உதவுகிறதால் அவைகள் பேரிலே பட்சமாயிருப்பா யல்லோ?

 அவ்வாறே மனிதரைச் சிநேகித்தால் மனி தன் பேரிலே வைத்த சிநேகத்துக்கும் மிருகத்தின் பேரிலே வைத்த நேசத்துக்கும் வேற்றுமையில்லை. இது தகுமோ? ஆகையால் பிறர் ஆண்டவர் சாயலாய் உண்டாக்கப்பட்டதினாலேயும் அவர்களை சிநேகிக்க கடவுள் கட்டளையிட்டபடியினாலேயும் விசேஷமாய் அவர்களைச் சிநேகிக்க வேண்டும்.

ஆனால் சுவிசேஷகராகிய அர்ச். அருளப்பர் சொன்னபடியே வாயினாலே மாத்திரம் புறத்தியாரைச் சிநேகியாமல் கிரியையினாலே சிநேகிக்க வேண்டும். இதற்கு அர்த்தமேதென்றால் முன் சொன்னபடியே துருக்கியரிடம் அகப்பட்டு அடிமைகளான கிறீஸ்துவர்களை மீட்க அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டது போலே பிறருடைய ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் வந்த இக்கட்டுக் கஸ்திகளை நீக்கவும் அவர்களுக்கு நன்மை உபகாரஞ் செய்யவும் பிரயாசைப் படவேண்டும். அதுவே பிறரைக் கிரிகையினாலே சிநேகிக்கிற வகையாகும். இதல்லாமல் பிறருக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போக அர்ச். இராயப்பர் பிரயாசைப்பட்டாரென்று சொன்னோம். நீ செய்த பாவத்தினால் உன் ஆத்துமத்துக்கு வந்த அடிமைத்தனம் நீங்கிப்போகப் பிரயாசைப்படாமல் இருக்கலாமோ. எந்த நிஷ்டூரமுள்ள எசமானையும்விட பசாசு அதிக நிஷ்டூரமுள்ளதாயிருக்கின்றது. நீ சாவான பாவங் கட்டிக்கொணடிருந்தால் பசாசின் அடிமையாய்ப் போனாயே. முன் சொல்லப்பட்ட அடிமைத்தனத்தைப் பார்க்க உன் அடிமைத்தனம் அதிக கெடுதியாயிருக்கும். ஆனால் இந்த அடிமைத்தனம் சில பேர்களுக்குத் தோன்றாதிருக்கிறதை ஓர் உவமையைக் கொண்டு வெளிப்படுத்துவோம். இலாகிரி மயக்கத்திலே கிடக்கிறவனுடைய காலிலே விலங்கு போட்டால் மயக்கந் தெளியுமட்டும் அது அவனுக்குத் தோன்றாது. அவன் தெளிந்து விழித்தபிறகு தோன்றும். பாவ மயக்கத்தில் அகப்பட்டவர்களுக்குப் பாவத்தின் அடிமைத்தனம நன்றாய்த் தோன்றாதிருந்தாலும் அந்த மயக்கம் நீங்கின பிறகு சீவனோடே இருக்கிற போதாகிலுஞ் சொத பிறகென்கிலும் நன்றாய்த் தெரியப்படும்.

மரணத்துக்குப் பிறகு மாத்திரந் தோன்றினால் அது மாறாமல் நித்திய கேடாயிருக்கும். ஆகையால் சாவான பாவத்தின் வழியாக நீங்கள் பசாசின் அடிமைத்தனத்தில் அகப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருக்கவேண்டும். அதிலே அகப்பட்டால் நல்ல பாவசங்கீர்த்தனத்தின் வழியாகப் பாவத்தின் அடிமைத் தனந் தள்ளியொழிக்க வேண்டும். இத்தகைய நல்ல மனது உங்களுக்கு உண்டாக அர்ச். இராயப்பரைக் குறித்து 3 கர். 3 மங், வேண்டிக்கொண்டு அவர்பேரில் பக்தியுள்ள உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுங்கள்.

St. Peter Nolasco is the founder of the order of Our Lady of Ransom (Mercedarians, or Nolascans), a religious institute originally designed to ransom Christian captives from the Moors.

St. Peter Nolasco was canonized by Pope Urban VIII in 1628.

தேவதிரவிய அனுமானங்கள் III - அவஸ்தைப்பூசுதல் (Extremeunction) (தொடர்ச்சி)

Extreme Unction (Part 1)


அவஸ்தைப்பூசுதல்
தேவதிரவிய அனுமானங்கள்  

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி. 1941

அவஸ்தைப்பூசுதலுக்கு ஆரம்பமாகக் 1. குருவானவர் மூன்று ஜெபங்கள் சொல்கிறார். அவையாவன :-

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதரே எங்கள் தாழ்மையான பிரவேசத்தால், இந்த வீட்டிலுள்ள நித்திய பாக்கியமும், தேவ செழிப்பும் களங்கமற்ற சந்தோஷமும் பலனுள்ள சிநேகமும், நீடித்த சுகமும் பிரவேசிப்பதாக: இந்த இடத்திலிருந்து பசாசுகளின் உறவு அகன்று போவதாக: சமாதானத்தில் சம்மனசுகள் வந்து கூடுவார்களாக: சகலவித தீய விரோதமும் இவ்விட்டினின்று அகலுவதாக. பரிசுத்தரும் இரக்கமுள்ளவருமாய்ச் சதாகாலத்துக்கும் பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் நிலைத்திருக்கிற ஆண்டவரே, எங்கள் பேரில் உமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி, எங்கள் வார்த்தையை ஆசீர்வதித்து, எங்கள் தாழ்மையான பிரவேசத்தை அர்ச்சித்தருளும். ஆமென்.

நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் இந்த வீட்டை யும் இதில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து அவர்களுக்குக் காவலாக பரிசுத்த சம்மனசைக் கட்டளையிட்டு, தமது பிரமாணத்தின் அதிசயங்களை அவர்கள் உணரும் வண்ணம் தமக்குப் பணிவிடை புரியச்செய்து, அவர்களிட மிருந்து அந்தகார வல்லமைகளை அப்புறப்படுத்தி, சகலவித பயத்தினின்றும் கலக்கத்தினின்றும் அவர்களை விடுவித்து, அவர்களை இவ்வீட்டில் சுகமாய்க் காப்பாற்றும்படி மன்றாடுவோமாக.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்திய சர்வேசுரா. எங்கள் மன்றாட்டுக்கிரங்கி, இந்த வீட்டில் வசிக்கிறவர்கள் எல்லோரையும் காப்பாற்றிப் போஷித்து, பாதுகாத்து ஆதரித்து உதவிபுரிவதற்காகப் பரமண்டலத்தி லிருந்து உமது பரிசுத்த சம்மனசை அனுப்பியருளும். ஆமென்.

2. இந்த ஜெபங்களின் முடிவில், பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லப்படும்: வியாதியற்றவரே இதைச் சொல்ல லாம்; அநேக சமயங்களில் இது இயலாததால், அங்கு இருப்ப வர்கள் இதைத் தமிழில் சொல்வது தகுதியானது. குருவானவர், வியாதியஸ்தர்மேல் ஆண்டவர் கிருபைக்கூர்ந்து, அவனது பாவங்களை மன்னித்தருள்வாராக என்று சொல்லி, அவனை ஆசீர்வதித்து, அவஸ்தைப்பூசுதலுக்கு ஆயத்த ஜெபமாகப் பின்வருவதைச் சொல்கிறார்:

"பிதாவுடையவும் சுதனுடையவும்  * இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே, நமது கரங்களை வைப்பதினாலும், மகிமைக்குரிய பரிசுத்த கன்னிமரியம்மாளாகிய தேவதாயின் மன்றாட்டினாலும், அவளுடைய பரிசுத்த பத்தாவாகிய சூசையப்பர், சகல பரிசுத்த தூதர், அதிதூநர், பிதாப் பிதாக்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர், வேதசாட்சிகள், ஸ்துதியர். கன்னியர், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டினாலும், பசாசின் சகலவித வல்லமையும் உன்னை விட்டு அகன்று போவதாக. ஆமென்." 

(* அடையாளமிட்ட வார்த்தைகளை உச்சரிக்கையில் குருவானவர் மும்முறை வியாதியஸ்தர் பேரில் சிலுவை அடையாளம் வரைகிறார்.).

3. இதன்பின்னரே, அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமான சடங்கு நடக்கிறது. குருவானவர் அர்ச்சியசிஷ்ட எண்ணெயில் தமது பெருவிரலைத் தோய்த்து, வியாதியஸ்தன் கண்கள், காதுகள், நாசிகள், உதடுகள், உள்ளங்கை, பாதங்களில் பூசுகிறார். அவ்விதம் பூசுகையில், “ஆண்டவர் இந்தப் பரிசுத்த தைலத்தாலும் அவரது அதிமிக நேசத்துக்குசிய இரக்கத்தாலும், (பார்வையால், கேள்வியால், மோப்பத்தால், உணவு - பேச்சால், ஸ்பரிசத்தால், தடையால்) கட்டிக்கொண்ட பாவங்களை மன்னிப்பாராக" என்று அந்தந்த அவயவத்துக்குத் தகுந்ததைச் சொல்லிக்கொண்டு பூசுகிறார். கூடுமானால் வியாதியுற்றவர் அல்லது அவனுக்குக் கேட்கும்படி அங்கிருப்பவர்களில் ஒருவர் இந்த மன்றாட்டுகளைச் சொல்வது நலம். அவையாவன: ஆண்டவரே. பார்வையால் நான் சுட்டிக் கொண்ட பாவங்களை மன்னித்தருளும்: கேள்வியால்..... மற்றதும் இப்படியே. பாதத்தில் தைலம் பூசுவது சங்கடமா யிருக்கும் பட்சத்தில், அதை விட்டுவிடலாம். ஓர் குருவானவருக்கு அவஸ்தை கொடுப்பதானால் உள்ளங்கையில் பூசாமல், கைக்கு வெளிப்புறத்தில் தைலம் பூசுவார்கள்; இதற்குக் காரணம், அவர் குருப்பட்டம் பெற்ற சமயத்தில் உள்ளங் கைகள் ஏற்கனவே அர்ச்சிக்கப்பட்டதினாலேயே.

குறிப்பு : காதிலும், உள்ளங்கையிலும், பாதங்களிலும் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் பூசுவதற்கு தடையில்லாவண்ணம், அங்குள்ளோரில் ஒருவர் உதவி புரியவேண்டும்.

4. தைலம் பூசி முடிந்த பிறகு, குருவானவர், "சுவாமி கிருபையாயிரும், கிறீஸ்துவே கிருபையாயிரும்” என்று மன்றாடி, பரலோக மந்திரமும் பின்வரும் சிறிய மன்றாட்டுகளையும் சொல்கிறார்: என் தேவனே, உம்மிடம் நம்பிக்கையா யிருக்கிற உமது அடியானை (அல்லது அடியாளை) இரட்சியும். ஆண்டவரே, உமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்து, சீயோனிலிருந்து அவனை (அவளை) காப்பாற்றும், ஆண்டவரே, சத்துராதியின் சமூகத்தில் அவனுக்குத் தேவரீர் தைசியக் கோபுரமாயிரும். சத்துரசதி அவனுக்கு விரோதமாய் யாதொன்றும் செய்ய இயலாமலும், அக்கிரமத்தின் புத்திரன் அவனுக்குத் தீங்கு செய்ய சக்தி யில்லாமலும் போவானாக! ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.”

குறிப்பு : இந்த ஜெபங்களில், வியாதியுற்றவருக்கு மாத்திரமல்ல. வீட்டிலுள்ள சகலருக்கும் தேவையான வரங்களை மன்றாடுவதால், எல்லோரும் இவைகளிலுள்ள கருத்தோடு ஒன்றித்து மன்றாடுவார் களாக.

5. பின்னர் மூன்று ஜெபங்கள் சொல்லப்படுகின்றன

அவையாவன:-

பிரார்த்திக்கக்கடவோம்

"உங்களில் யாதொருவன் வியாதியாயிருக்கிறானோ. அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக, அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக செபிப்பார்கள்: அப்போது விசுவாசமுள்ள செபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோ டிருந்தால், அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும்" என்று உமது அப்போஸ்தலராகிய இயாகப்பர் வழியாய் திருவுளம்பற்றியிருக்கிற தேவனாகிய ஆண்டவரே, எங்கள் திவ்விய இரட்சகரே, இஸ்பிரித்துசாந்துவின் அருளால் இந்த வியாதிக்காரனுடைய (வியாதிக்காரியுடைய) நோயைக் குணப்படுத்தி, அவனது காயங்களை சொஸ்தப்படுத்திப் பாவங்களை மன்னித்து, ஆத்தும சரீர வாதனையெல்லாம் அவனைவிட்டு அகற்றி, உள்ளும் புறம்பும் அவனுக்குப் பூரண சௌக்கியத்தை தயவாய்த் தந்து, இவ்வண்ணம் அவன் உமது இரக்கத்தின் உதவியால் மீண்டும் சுகமடைந்து தனது பழைய அலுவல்களை செய்யும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் சிவியருமாய் இராச்சிய பரிபாலகரு மாயிருக்கிற சர்வேசுரா. ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவரே, சரீர பலவீனத்தால் நொந்து கிடக்கிற உமது அடியானை(ளை)க் கண்ணோக்கி, நீர் சிருஷ்டித்த ஆத்துமத்தைப் பலப்படுத்தி, உமது தண்டனை களால் அவன் சீரடைந்து உமது அளிழ்தத்தால் இரட்சிக்கப்பட்டதாக உணரும் படி செய்தருள உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவ ராகிய சேசு கிறீஸ்துநாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபமுள்ள பிதாவே. நித்திய சர்வேசுரா, உமது ஆசீர்வாதத்தின் பலனை வியாதியுற்ற சரீரத்திற்கு அளிப்பதினால், அனந்த தயையுடன் உமது கை- வேலையைக் காப்பாற்றுகிறீரே, உமது நாமத்தை மன்றாடுகிற எங்கள் அருகே தயவாய் அண்டி வந்து, உமது அடியானை வியாதி யினின்று குணப்படுத்தி சௌக்கியத்தைத் தந்து, உமது வலது கரத்தால் அவனை தூக்கி எடுத்து, உமது சத்துவத்தால் அவனைப் பலப்படுத்தி, உமது வல்லமையால் அவனைக் காப்பாற்றி, விரும்பத்தக்க சகலவித செழிப்புடன் அவனை "உமது பரிசுத்த திருச்சபைக்கு மீண்டும் கொடுத்தருளும்." இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்து நாதர் பேரால் தந்தருளும். ஆமென்.

அவஸ்தைப்பூசுதல் இத்தோடு முடிவு பெறுகிறது. இதற்குப்பின்னர், அப்போஸ் தலிக்க ஆசீர்வாதம் கொடுப்பது வழக்கம். இதற்குப் பரிபூரண பலம் உண்டு. இதை அடைய வியாதியுற்றவர் கூடுமானால் வாயினால், அல்லது உள்ளத்தில் “சேசுவே என்னை இரட்சியும்" என்று சொல்லவேண்டும்