Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 25 செப்டம்பர், 2014

சின்ன குறிப்பிடம் - ஐந்தாம் பிரிவு (Tamil Catchism - part V)

ஐந்தாம் பிரிவு 


மனிதனுடைய முடிவுகள் 



49.  பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

          சாவு 

50.  சாவுக்குப் பின் சம்பவிப்பதென்ன?
    
         தனித் தீர்வை 

51.  தனித் தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

         நரகம் 

52.  பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

         மோட்சம் 

53.    தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரியாத ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

           உத்தரிக்கிற ஸ்தலம் 


54.  உத்தரிக்கிற ஸ்தலதில் என்னவாக இருக்கிறார்கள்?
  
          தங்கள் பாவங்களுக்கு தக்க வேதனைப் பட்டு உத்தரிக்கிரார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

55.   தனித் தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

         பொதுத் தீர்வை உண்டு.

56.  பொது தீர்வை எப்போது நடக்கும்?
  
         உலகம் முடிவிலே நடக்கும்.

57.   உலகம் எப்படி முடியும்?

          உலகமெல்லாம் நெருப்பிலே வேக மனிதர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள்.

58.   பின்னும் என்ன சம்பவிக்கும்?
   
          சேசுநாதர் சுவாமி மனிதர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு  நடுத் தீர்க்க வருவார்.

59.   எப்படி நடுத் தீர்ப்பார்?

         அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறிய பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசிர்வதித்து மோட்சத்திற்கு கூட்டி கொண்டு போவார்.

60.   பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

         சர்வேசுரனை ஒருகாலும் காணாமலும் ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அனுபவிப்பார்கள்.

61.  நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

        சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். 








ஆறாம் பிரிவு 










புதன், 24 செப்டம்பர், 2014

சின்ன குறிப்பிடம் - நான்காம் பிரிவு (Tamil Catchism - part IV)

நான்காம் பிரிவு 

இஸ்பிரித்து சாந்துவின் வருகையும் திருச்சபையும் 



40. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன
செய்தார்?
      
       தம்முடைய அப்போஸ்தலருக்கு திடனாக இஸ்பிரித்து சாந்துவை அனுப்பினார்.

41. இஸ்பிரித்து சாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

     உலகின் எத்திசையிலும் பிரசங்கித்து திருச்சபையை பரவ செய்தார்கள்.

42. திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

     சேசுநாதர் சுவாமி தான்.

43. அவர் தமக்கு பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை நியமித்தார்?

      அர்ச்.  இராயப்பரை நியமித்தார்.

44. அர்ச். இராயப்பருக்கு பதிலாக திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

      அர்ச்.  பாப்பானவர்.

45. மற்ற அப்போஸ்தலருக்கு பதிலாக இருப்பவர்கள் யார்?

      மேற்றிராணிமார்கள் 

46. சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

      கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.

47. திருச்சபை சொல்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டா?

    இல்லை.

48. இல்லையென்கிறதற்கு அத்தாட்சி என்ன?

     திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கினியைப் போல் உனக்கு ஆக கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.










ஐந்தாம்  பிரிவு 



Download Catholic Tamil books


You can download  for free and in pdf format.

i have collected some Catholic Books and Documents in Tamil.  Which will be very useful for you.
If you find any good catholic books pls give the link in the comment.  so that others too can download.







To download books (right Click & Save link us)


Documents about Family 

குடும்பம் 

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

Download Catholic Tamil Books

You can download Tamil catholic books for free and in pdf format.

i have collected some Catholic Books and Documents in Tamil.  Which will be very useful for you.
If you find any good catholic books pls give the link in the comment.  so that others too can download.




To download books (
right Click & Save link us)