Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்- THE INCORRUPTIBILITY OF SAINTS III (தொடர்ச்சி )



அர்ச். ஜோசபாத் 

போலந்து நாட்டில் விலாடிமீர் என்னும் இடத்தில அர்ச். ஜோசபாத்  1580 ல் பிறந்தார்.சிறுவயதில் வியாபாரம் செய்து வந்த அவர் அர்ச். பேசில் என்பவரின் சபையினரால் நடத்தப்பட்டு வந்த வில்லான் என்னும் இடத்தில உள்ள சபையில் சேர்ந்து ஜோசபாத் என்னும் பெயர் பெற்றார். குருபட்டம் பெற்ற அவர் 1617ல் போலாய் நகர அதிமேற்றானியரராக அபிஷேகம் செய்பட்டார்.

    ஜோசபாத் தமது வாழ் நாட்களை அவர் நாட்டில் நிலவி வந்த பிரிவினை சபையினரை மனம் திருபுவதிலே செலவிட்டு வந்தார். 1623ம் ஆண்டு விரோதிகளால் கொல்லப்பட்டு  அருகில் இருந்த நதியில் தூக்கி வீசப்பட்டார்.

ஐந்து நாட்களுக்கு பிறகு  எந்தவிதமான அழிவுமில்லாத அவரது சரிரம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு எட்டாம் உர் பாண் பாப்பரசரால் புனித பட்ட சடங்குகள் தொடங்கப்பட்டன. அதன் முதல் கட்டமாக அவரது கல்லறை திறக்கப்பட்டது.

புனிதர் வேத சாட்சியம் அடைந்த ஐந்தாவது வருடத்தில் கல்லறை திறக்கப்பட்டது. சரிரம் எந்தவிதமான அழிவுமின்றி முழுமையாக பாதுகாக்கப்பட்டு இருந்தது.  சரிரத்தில் அணிவிக்க பட்டுருந்த உடுப்புக்கள் மக்கி போய்  இருந்தன. அச்சமயத்தில் சரீரத்தின் முகத்தில் வியர்வை துளிகள்  இருப்பதை மக்கள் கண்டனர்.

1637ல் மீண்டும் சரீரம் பரிசோதனைக்கு திறக்கப்பட்டது. சரீரம் வெளிறி காணப்பட்டது. வேத சாட்சியத்தின் போது ஏற்பட்ட பல்வேறு காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1650ல் அர்ச். சோபியா தேவாலயத்தில் அவருடைய சரீரம் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயம் சரீரத்தின் வெட்டு காயத்திலிருந்து புதிய சிவப்பு இரத்தம்  வழிந்தது.

பின்னர் பல அரசியல் காரணங்களால் பல இடங்களில் அவரது சரீரம் மாற்ற பட்டு  பாதுகாக்கப்பட்டது. பின்பு 1767ல் மீண்டும் அவரது சரீரம் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டது. பின் ரோமாபுரியில் உள்ள இராயப்பர் தேவாலயத்தில் சரீரம் வைக்கப்பட்டுள்ளது. 1867ம் வருடம் 13ம் சிங்கராயர் பாப்பரசர் அர்ச். ஜோசபாத்திருக்கு  புனிதர் பட்டம் வழங்கினார்.


அர்ச்சிஷ்டவர்களின் வரலாறு 

சனி, 27 ஏப்ரல், 2013

Download Free Books

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்- THE INCORRUPTIBILITY OF SAINTS II(தொடர்ச்சி )

அர்ச். ஆஞ்சலா மெர்சி 




அர்ச். ஆஞ்சலா மெர்சி  மார்ச் மாதம் 21ம் தேதி 1474ல் இத்தாலி நாட்டிலே பிறந்தார். அவளுடைய 10 வது வயதிலே தனது பெற்றோரை இழந்தார். தனது மூத்த சகோதரியுடன் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்தனர். அவளுடைய சகோதரியும் திடிரென நோயுற்று கடைசி தேவ திரவிய அனுமானங்களை பெறாமல் இறந்து போனது அவரை மிகவும் கவலை அடைய செய்தது.
பின் அவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையிலே சேர்ந்தார்.அவர் தன்னுடைய சகோதரிக்காக தினமும் செபம் செய்து வந்தார். அவர் சர்வேசுரனிடம் தன்னுடைய சகோதரியுடைய நிலைமை பற்றி தனக் காண்பிக்குமாறு ஆண்டவரிடம் வேண்டினாள் . அவருக்கு அவளுடைய சகோதரி மோட்சத்தில் இருப்பது போன்ற காட்சி அருளப்பட்டது. அவருடைய இருபது வயதில் அவரது மாமாவும் இறந்து போனார். பின்னர் தன்னுடைய வீடு வந்து அதனை ஒரு ஞான உபதேசம் கற்பிக்கும் பள்ளியாக அதை மாற்றினார்.
1535 ஆம்  ஆண்டு அவர் Order of Ursulines என்ற சபையை தொடங்கினார்.  அவர் ஜனவரி மாதம் 27 ஆம் நாள் 1540 ஆம் ஆண்டு இறந்தார்.

இறந்த  அர்ச். ஆஞ்சலா மெர்சி உடலை அடக்கம் செய்ய 30 நாட்களகியது. இருப்பினும் சரீரத்தில் எந்த விதமான துர்வாடையோ அழிவோ ஏற்படவில்லை. புனிதையின் கல்லறை பிற்காலத்தில் பற்பல சமயத்தில் திறக்கப்பட்டது. சரீரத்தில் எந்தவிதமான அழிவும் ஏற்படவில்லை. 1907 ஆம் ஆண்டு திருச்சபை அதிகாரிகள் முன் கல்லறை திறக்கப்பட்டு சான்று எழுதப்பட்டது. மீண்டும் 1939 கல்லறை திறக்கப்பட்டு புனிதையின் அழியா சரீரம் அழகிய கண்ணாடி பேழையில் Presciya நகரில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.



அர்ச். தெரேசே  மார்கரெட் (St. Teresa Margaret)



இவர் Arezzo நாட்டில் 1747 ஆம்  ஆண்டு ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர்  Anna Maria Redi என்பது ஆகும்  தனது பள்ளி பருவம் முடிந்த பிறகு அவர் கார்மலேட் சபையில் சேர்ந்தார். அங்கு தான் அவரது பெயரை அர்ச். தெரேசே  மார்கரெட் என மாற்றி கொண்டார். 

தெரசா மார்கரெட் ஒரு தனியார் மற்றும் ஆன்மீக நபர். அவர் வார்த்தைகள் பற்றிய ஒரு சிறப்பு தியான அனுபவம் வழங்கப்பட்டது அந்த வார்த்தை John 4:8, "God is love."  

அவர் தனது 23ஆம் வயதில் 1770 ல் இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது உடல் விரைவாக கெட ஆரம்பித்ததை பார்த்த கன்னியர்கள் முறைப்படி அடக்கம்  செய்யும்முன் உடல் கெட்டுவிடுமோ என்று அஞ்சினர். அனால் அவரது உடல் அதிசயமாக பாதுக்கப்பட்டது. மறுநாள் அவருடைய உடல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து  பார்த்தார்கள் அவரது உடல் அவர் துங்கும் போது  எப்பிடி இருப்பரோ அப்படியே இருந்தது.
அவரது உடல் Florence மடத்திலே இன்னும் உள்ளது.


அர்ச். பத்தாம் பத்தி நாதர். (St. Pius X)



இவர் தான் திருச்சபையின் 257 வது பாப்பாண்டவர். 1903 முதல் 1914 வரை பாப்பரசராக இருந்தார். இவர் ஆகஸ்ட் 20,1914 ல் இறந்தார். மே மாதம் 30ம் நாள் அவருடைய கல்லறை திறக்கப்பட்டு அர்ச். இராயப்பர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
                    30 வருடத்திருக்கு பிறகு அவரது பெட்டி திறக்கப்பட்டது. அவருடைய உடல் அழியாமல் அப்படியே இருந்தது. அவருக்கு முத்தி பேருப்பட்டம்  குடுத்த பிறகு அவரது உடல் வாடிகன் தேவாலயத்திற்கு மற்ற பட்டது.மே 29 ஆம் நாள், 1954 ஆம் ஆண்டு அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக வாடிகனில் வைக்கப்பட்டு உள்ளது.
இவர் நற்கருனையின் பாப்பரசர் எனவும் அழைக்கப்பட்டார்.

லான்சியானோ நகர் புதுமை (Miracle of Lanciano)

லான்சியானோ நகர் புதுமை 


   8 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் லான்சியானோ  நகரில் உள்ள அர்ச். பேசில் சபையைச் சேர்ந்த மடாலயம் ஒன்றில் திவ்யபலி பூசை செய்து கொண்டு இருந்த ஒரு குருவானவர் நடுப் பூசைக்குப் பின் "நான் உச்சரித்த சில வார்த்தைகளால் இந்த அப்ப ரசம் ஆண்டவருடைய சரீரமாகவும் இரத்தமாகவும் மாறி விடுமா?" என சந்தேகப்பட்டார். என்ன ஆச்சர்யம்! திடிரென வசீகரிக்கபட்ட அப்பம் அவர் கண் முன்பாகவே வெட்டி எடுக்கப்பட்ட மாம்சமகவே மாறியது. சேசுவின்  திரு இரத்தம் ஐந்து இரத்த கட்டிகளாக உறைந்தது.  இதை கண்ட குருவானவர் கண்ணீர் விட்டு அழுது ஆராதித்தார்.


     பின்னர் சேசுவின்  திருசரீரத்தையும் திருஇரத்தத்தையும் அழகிய பொன் கதிர்ப் பாத்திரத்திலும், படிக கிண்ணத்திலும் பக்தி மேரையாக வைக்கப்பட்டது.1200 ஆண்டுகளாக இன்றும் அழியாமல் நிரந்தர புதுமையாக இருக்கிறது.

     நான்கு முறை திருசரீரத்தையும்  திரு இரத்தத்தையும் அறிவியல் முறைப்படி பரிசோதனை செய்யப்பட்டது. கடைசியாக 1970 நவம்பர் 8 ஆம் நாள் அரெஸ்ஸோ நகர் மருத்துவ கல்லுரி பேராசிரியர் Dr. Odoardo Linoli,  சியன்னா மருத்துவ கல்லுரி  பேராசிரியர்  Dr. Ruggero Bertelli ஆகியோரின்  தலைமையில் திருச்சபையின் அதிகாரிகள் முன்னிலையில் பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
அதன் முடிவு 1971 மார்ச் 4ம் தேதியன்று பரிசுத்த பாப்பரசர் ஆறாம் சின்னப்பரிடம் சமர்பிக்கபட்டு வெளியிடப்பட்டது.

பரிசோதனையின் முடிவுகள்.

  1. இம் மாமிசம் மானிட இருதய சுவரின் தசை. (Tissue of the Myco Cardium) எந்த விதமான செயற்கை முறையான பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்படவில்லை.
  2. இரத்தமானது மானிட இரத்தமாகும்.
  3. மாமிசமும் இரத்தமும் AB  என்ற இரத்த பிரிவை சார்ந்தது.
  4. இரத்தமானது குளோரைடு, பாஸ்போரஸ், மக்னிசியம், பொட்டாசியம்  சோடியம்  ஆகிய தாதுக்களை குறைந்த அளவிலும் கால்சியம் தாது அதிக அளவிலும் கொண்டது.
  5. சாதாரண புதிய இரத்தம்  போல் ப்ரோட்டனின் சத்தை கொண்டது.
ஆதாரம்.
"Euchirstic Miracles" by Joan Corroll Cruz

ஜேசுவின் திரு இரத்தத்தை மகிமைப் படுத்தும் விதமாக ஜூலை மாதம் முழுவதையும் திருச்சபை தனியே குறித்து உள்ளது.

சேசுவின் திரு இரத்தத்தின் திருநாள் ஜூலை முதல் தேதி ஆகும்.



ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

அர்ச். செபஸ்தியார் (St. Sebastian life History in Tamil)


அர்ச். செபஸ்தியார் (St. Sebastian)

Bornc. 256
Diedc. 288
Honored in
Catholic Church
Eastern Orthodoxy
Oriental Orthodoxy
Anglicanism
Aglipayan Church
FeastJanuary 20 (Catholic),
December 18 (Eastern Orthodox)
AttributesTied to a post, pillar or a tree, shot by arrows, clubbed to death
PatronageSoldiers, plague-stricken, archers, holy Christian death, athletes

அர்ச். செபஸ்தியார் 256ம் ஆண்டு பிறந்தார்.  அவர் ஒரு கிறிஸ்தவர். இவர் ஒரு மறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து வந்தார். 283ம் ஆண்டு அவர் ரோமன் போர்ப்படையில் பணியில் சேர்ந்தார்.  அவருடைய பணித்திறமையை பார்த்து வியந்தனர். ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று அறியாமலேஅவரை ரோமானிய படையின் தளபதியாக மிக பதவி உயர்த்தப்பட்டார்.  ஆனால் அவர் பல கைதிகளை நல்ல கிறிஸ்தவர்களாக மரிக்க உதவி செய்தார்.  

அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தெரியவந்தபோது அவரையும் கொலை செய்ய வேண்டும் என்று ரோமன் உயர் அதிகாரி உத்தரவிட்டான்.  அவருக்கு ஒரு வரம் கொடுக்கப்பட்டிருந்தது. அது என்னவென்றால் சிலுவை அடையாளத்தினால் குணமாக்கும் வரம்.  அந்த வரத்தினால் அவர் பலரை குணமாக்கினார்.  ரோமன் உயர் அதிகாரி செபஸ்தியார் தன்னை இனத்தை காட்டிக் கொடுத்த துரோகி. எனவே அவரை மிக கொடூரமாக கொல்ல வேண்டும் என்று எண்ணி, அவரை ஒரு மரத்தில் கட்டி அம்பால் எய்து கொல்ல உத்தரவிட்டான். செபஸ்தியாரின் மீது அம்புகள் எய்தனர்.  அவர் விரைவில் இறந்து விடுவார் என்று எண்ணி அவரை எய்த அம்புகளோடு அப்படியே வி;ட்டுவிட்டு சென்றனர்.  ஆனால் ஐரின் என்ற பெண் விரைந்து வந்து அவரது உடலை கல்லறையில் அடக்கம் செய்;ய வந்தாள்.  செபஸ்தியார் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கண்டு, செபஸ்தியாரை தன் வீட்டில் மறைவாக வைத்து மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.  அவரும் விரைவில் குணமாகினார்.

விரைவில் மீண்டும் தன்னை கொலை செய்ய ஆணையிட்ட அந்த ரோமன் அதிகாரியிடம் சென்று கிறிஸ்துவைப் பற்றி போதித்தார்.  தன்னால் கொலை செய்யப்பட்ட செபஸ்தியார் மீண்டும் உயிருடன் தன்னிடம் வந்து போதிப்பதைப் பற்றி அதிசயப்பட்டான்.  அந்த ரோமன் அதிகாரியால் மீண்டும் அவரை கொலை செய்ய ஆணையிட்டான்.  இந்த முறை செபஸ்தியாரை அடித்துக் கொன்று சகதியில் எரிந்து விட்டனர்.  அவர் ஐரின் என்ற பெண்ணுக்கு காட்சியளித்து தன் உடல் இருக்கும் இடத்துக்கு சென்று அதை அடக்கம் பண்ண கேட்டுக் கொண்டார்.  அவரும் சென்று அவரது உடலை நல்ல முறையில் அடக்கம் செய்தார். 

அர்ச். செபஸ்தியார் பல பிணி, நோய்களை குணமாக்க வல்லவர்.  அதனால் தான் எப்பொழுது எல்லாம் பிளேக், காலரா போன்ற நோய்கள் வருகிறதோ அப்போது அர்ச். செபஸ்தியார் உருவ சுருபத்தைக் ஊர் முழுவதும் பவனியாக வருகிறார்கள் நம் கிறிஸ்தவர்கள். 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அர்ச் பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier) வாழ்க்கை வரலாறு (தமிழில்)

அர்ச்  பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier)


அர்ச்  பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavierஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். 


கல்வி

1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த அர்ச்  சவேரியார், அங்குள்ள அர்ச் பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது அர்ச் சவேரியாருக்கு அர்ச் இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்,"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற  இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார்,சவேரியாருக்கு எடுத்துரைக்க சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

குருத்துவமும் இந்திய வருகையும்


சவேரியாரின் பயணங்கள்

இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் சின்னப்பரை  சந்தித்து வேதம் போதிப்பதற்கான  தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அர்ச்  சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் பணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் 
வேதம் போதிக்கும் பணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது வேதம் போதிக்கும் பணியைச் செய்துவந்தார்.


மறைப்பணி

1543இல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் வேதம் போதிக்கும் பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் அர்ச்  சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம். கி.பி. 1544-ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவே அவர் அர்ச்  சவேரியாரின் உதவியை நாடினார். விசய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார். புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக அர்ச்  சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.
“They called me great king, but hereafter for ever they will call you the Great Father”
என்று மன்னர்  சவேரியாரை நன்றியுணர்வுடன் பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு அர்ச்  சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது.  ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது அர்ச்  சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.

மரணம்

அர்ச்  சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார்.

[தொகு]அழியா உடல்


சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவைவந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் அர்ச்  சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ அர்ச்  சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் அர்ச் சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.



அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .

Download Free Catholic Tamil Songs


அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil


வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்- THE INCORRUPTIBILITY OF SAINTS

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்
அழியா சரிரம் என்று சொன்னால் அது உடலில் இருந்து உயிர் பிரிந்து பல நாட்கள் அல்லது வருடங்கள்  ஆகியும் அந்த உடல் அழியாமல் இருப்பது ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் பல புனிதர்கள் உடல் இன்னும் அழியாமல் எப்படி இறந்தார்களோ அப்படியே இன்னும் உள்ளது..


அர்ச். ஆகத்தா(St. Agatha)

       அர்ச். ஆகத்தா அவர்களின் உடல் பதினோராம் நூற்றாண்டில் அழியாமல் கண்டு பிடிக்க பட்டது. அவர்களுடைய உடல் இன்னும் அழியாமல் சர்வேசுரனால் பாதுகாக்கபடுகிறது. அவள் ரோம் அதிகாரியை திருமணம் செய்ய மறுத்ததாலும் அவள் ஒரு கிறிஸ்தவள்  என்பதாலும் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டு வேதசாட்சி மரணம் அடைந்தார்.  இன்று அவர் மார்பக புற்று நோய் உள்ளவர்களின் பாதுகாவலியாக  உயர்த்த பட்டு  உள்ளார்.


அர்ச். காத்தரின் லபோரே (St. Cahterine  Laboure) (1806-1876)


     அர்ச். கத்தரின் 31 டிசம்பர் 1876 ஆம் ஆண்டு இறந்தார். இவர் ஒரு கன்னியாஸ்திரி ஆவார்.  இவர் இறந்து 56 ஆண்டுகள் கழித்து இவருடைய கல்லறையை திறந்த போது  இவருடைய உடல் அழியாமல் இருப்பதை கண்டு பிடித்தனர். இன்னமும் அவருடைய கண்கள் அவர் இறந்த போது எந்த நிறத்தில் இருந்ததோ அதே நிறத்தில் உள்ளது. இவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Ruc du Bac(Paris) என்னும் ஆலயத்தில் வைத்து பாதுகாக்க படுகிறது. அவருடைய உடல் இன்றும் நேற்று இறந்தவர் உடல் போல் காணப் படுகிறது.

அர்ச். பெர்னதேத்தே (St. Bernadette Sobirous)(1844-1879)


     அர்ச் பெர்னதேத்தே 1879 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் அவர் இறந்த 30 ஆண்டுகளுக்கு பின் 1909 செப். மாதம் 2 ஆம் தேதி  திறக்கப்பட்டது.
திறந்த போது அவருடைய முகம் மற்றும் அவருடைய கைகள் அழியாமல் அப்படியே இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடைய கல்லறை திறக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ அப்படியே அந்த உடல் இருந்தது.அவருடைய உடல் பிரான்ஸ் நாட்டில் உள்ள அவரது கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.


அர்ச் சிசிலி (St. Ceceilia)

தன்  கணவர் வேதசாட்சி மரணம் அடைந்ததை அறிந்த  அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். இதனை அறிந்த  ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின்  அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.

பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான்.   மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல்  கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.

அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது  அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.

அர்ச். கிளரா அசிசி (St. Clare of  Assisi)(1194-1253)
       
அர்ச். கிளரா 1253 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய கல்லறை 1850 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது.  அவர் அணிந்திருந்த உடை அவருடைய உடம்பு எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்  இருந்தன. ஆனால்  அவருடைய மண்டை ஓடு மட்டும் அப்பிடியே இருந்தது. 597 ஆண்டுகள் கழித்து  அவருடைய கல்லறையில் அவருடைய மண்டை ஓடு  அழியாமல் இருப்பதை கண்டு 29 செப்.1872 அன்று Santa Chiara  என்ற தேவாலயத்திற்கு அவருடைய எலும்புகளை கொண்டு சென்றனர். இப்போதும் இந்த ஆலயத்திற்கு சென்றால் அவருடைய மண்டை ஓடு காணலாம்.



அர்ச்  சவேரியார் (St. Francis Xavier)

அர்ச்  சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விட்டார்.

அழியா உடல்


சவேரியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி 
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவைவந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் அர்ச்  சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ அர்ச்  சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் அர்ச் சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது







அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)



அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil

அர்ச் சிசிலியா (St.Ceceilia) 
குறிப்பு 
பிறப்பு      : தெரியவில்லை 
இறப்பு      : 177 ஆம்  ஆண்டு Nov .22
மரணம்    : வேத சாட்சி மரணம்.

உடல் அழியாமல் இன்னும் உள்ளது.


அர்ச் சிசிலியா ஒரு ரோமன் புனிதை. அவரது பிறந்த ஆண்டு தெரியவில்லை, ஆனால் அவர் ரோம் நகரில் 177 கி.பி. இறந்தார் என்று  நம்பப்படுகிறது. அவருடைய உடல் அழியா நிலையில் 1599 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடல் தான் முதல் முதலில் அழியாமல் இருந்த முதல் புனிதை என அறிய படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள்  அர்ச் சிசிலியா ஒரு ரோமன் கிறிஸ்தவரின் மகள் என்று கூறுகின்றனர். பெற்றோருடைய வற்புறத்தலால் Valerian of Trastevere என்ற வாலிபனை திருமணம் செய்தார்.  ஆனால்  அவருடைய விருப்பமோ ஒரு கன்னியாக இருப்பது மட்டுமே. திருமண நாள் அன்று அவர் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் எந்த குழப்பமும் இல்லாமல் என் மனது மற்றும் உடல் துய்மையாக வைத்திருக்க உ த வும்,  

திருமணம் முடிந்த பிறகு வீடு சென்ற பின் அர்ச் சிசிலியா தன்  கணவனை பார்த்து சொன்னதாவது தன்னுடைய கற்பை ஒரு காவல் சம்மனசு கோபத்துடன் காத்து வருவதாக சொன்னார். அர்ச் சிசிலியாவிடம் அப்படி என்றல் உன் காவல் சம்மனசை எனக்கு காட்டு என்றான். அர்ச் சிசிலியா அவனிடம் நீ பார்க்க வேண்டுமானால் நீ கத்தோலிக்க திருச்சபையை விசுவசித்து ஞனஸ்தானம் பெற்றால் மட்டுமே நீ அவரை பார்க்க முடியும். என்றார். 

தன் மனைவி சொன்னதை விசுவசித்து அவனும்  ஞனஸ்தானம் பெற்றான். அன்று இரவு தன் மனைவி ஜெபிக்கும் பொது இரு காவல் சம்மனசுக்கள் அவள் அருகே நிற்பதை கண்டான். அவர்கள் அர்ச் சிசிலியா தலையின் மீது ரோஜா மற்றும் லில்லியால் அலங்கரிக்க பட்ட கிரிடத்தை சூட்டினர். அவனுடைய சகோதரனும் ஞனஸ்தானம் பெற்றான். இரு சகோதரர்களும் பணகரர்களாக இருந்ததால் வேதசாட்சி மரணம் அடைந்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உதவி செய்தனர். கிறிஸ்தவர்களுடைய சடலங்களை அவர்கள் பக்தியுடன் புதைத்தனர். 

ரோம் நகரிலே கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆளுநன் Almachius என்பவர் முன் கொண்வரப்பட்டனர். அவர்கள் பொய்யன் கடவுளை வழிபட மறுத்தனர். எனவே அவர்களை வாலால் வெட்டி கொன்றான். இதை அறிந்த  அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். 
இதனை அறிந்த  ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின்  அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.

பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான்.   மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல்  கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.

அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது  அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)

 

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச்  அஞ்சேம்மாள் ( st .Agnes )  
அர்ச் ஆக்ன்ஸ் 

குறிப்பு 

பிறப்பு         : 28 Jan 292
இறப்பு         : 21 Jan 304
மரணம்       :தலை வெட்டப்பட்டு வேதசாட்சி மரணம்.
கன்னியர்களின் பாதுகாவலி.



செயிண்ட் ஆக்னஸ் ஜனவரி 28, 292 ரோமன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார்  ஒரு நல்ல கத்தோலிக்க குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். அவரது பெயரை கிரேக்கம் மொழியில் "தூய" மற்றும் லத்தீன் மொழியில்  "ஆட்டுக்குட்டி"  என்று பொருள். அவர் வயதில் வளர வளர அவருடைய அழகிளும்  வளர்ந்தார்.பல இளைஞர்கள் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர் இயேசுவே வேண்டும் என்று அறிவித்து யாரையும் திருமணம் செய்ய இசைவு அளிக்கவில்லை.
தனது  கற்பை பரலோக துணை கிறிஸ்து நாதருக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவள் அதற்காக அவள் மரணத்தையும் ஏற்க தயாராக இருந்தாள் . அவள் வாழ்ந்து வந்த நேரம் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்த காலம். பேரரசர் Diocletian அவளை சித்திரவதை மற்றும் மரணதிற்கு பயமுறுத்தினான்.

அவள் திருமணம் செய்ய மாட்டேன் என்று மறுத்தவர்களில்  prefect Sempronius என்பவரின் மகனும் ஒருவன். மீண்டும் ஒருமுறை தன் மகனை மணந்து கொள்ள அவன் அவளிடம் கேட்டான் . அவள் இரண்டாவது முறையும் முடியாது என்று பதில் சொல்ல அவனுக்கு கோபம் வந்தது. அவள் கிறிஸ்தவர் என்பதால் அவளை சித்திரவதை செய்து கொலை செய்ய போவதாக மிரட்டினான். அவர் எதற்கும் பணியவில்லை. தன்  கற்பின் மீது அவள் பற்று கொண்டு இருந்தாள் .ரோமன் சட்டம் கன்னியை கொலை செய்வதற்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள், அவளை  ஒரு வேசி இடத்திற்கு அனுப்ப prefect Sempronius அவனுக்கு ஆலோசனை கூறினர். அதன்படி அவர் அங்கு அனுப்பப்பட்டார். அங்கு அவளுடைய கற்பு அற்புதமான முறையில் பாதுகாக்க பட்டது.
அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  prefect Sempronius மகன் அதிக ஆசை கொண்டான். அதனால் அவன் தன் கண்ணையே குத்தி காயபடுதினான். அர்ச் ஆக்னஸ் அவனை குணப்படுத்தினார். தன் மகனுக்கு நடந்ததை கேள்வியுற்ற prefect Sempronius அதற்கு காரணம் அர்ச் ஆக்னஸ் தான் என்று குற்றம் சாட்டினான். 

முதலில் அவரை நெருப்புக்குள் தள்ளி அவரை கொலை செய்ய முயன்றான். ஆனால் நெருப்பு ஒன்றும் அவரை  செய்யவில்லை.
பின் அவரை வாளினால் தலை வெட்ட பட அவர் தனது 12 வயதில் வேத சாட்சி மரணம் அடைந்தார். 
பிற்காலத்தில் அர்ச் ஆக்னஸ்அவர் ஒரு அனைவருக்கும் பிடித்தமான புனிதையாக மாறினார். Emperor Constantine என்பவருடைய மகள் அர்ச் ஆக்னஸ் கல்லறையில் ஒரு ஆலயம் கட்டினார் .



அர்ச் அந்தோணியாரின் புதுமைகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil