Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஆண்டவர் உயிர்த்தெழுந்த திருநாளுக்கான தியானப்பிரசங்கம்

 அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்-

நன்மரண ஆயத்தம்:29ம் தியானம்

மோட்சப் பேரின்பம்:ஆத்துமமானது, சர்வேசுரனுடைய மகா பரிசுத்த சந்நிதிக்குச் சென்று,அவரை தரிசிக்கும் பேரின்பத்திற்குள் பிரவேசித்த உடனே,அது முதல், அதற்கு யா தொரு துன்பதுரிதமும் இராமல் போய்விடும்.கர்த்தர் அதன் கண்களிலிருந்து சகல கள் ரையும் துடைத்து விடுவார். மோட்சவாசிகள், மரணமென்பதை அறிய மாட்டார்கள்.புலம் புவதும், அழுவதும், துக்கதுயரமென்பதும், மோட்சத்தில் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட சகல உலகைச்சேர்ந்த பழைய சங்கதிகளெல்லாம் கடந்து போய்விட்டன! சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர், இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாய் உண்டாக்கினேன் என்று திருவுளம்பற்றுவார் (காட்சி. 20). அந்தப் பரலோக இராஜ்ஜியத்தில் வியாதியில்லை.தரித்திர முமில்லை; கஷ்டநஷ்டமும் இல்லை. பகல், இரவுஎன்னும் கால பேதமும் இல்லை. குளிரும், உஷ்ணமும் இல்லை. நித்திய பகலும், நித்திய சமாதானமுமாக விளங்கும்.

இடைவிடாத வசந்தகாலம். எவ்வித சந்தோஷமும் கூடிநிறைந்திருக்கும். காய்ம காரமோ,எவ்வித கலக உபத்திரவங்களோ, மோட்சத்தில் காணக் கிடையாது; உத்தமமான சிநேகம் நிறைந்த மோட்ச இராஜ்ஜியத்தில் எல்லோரும், ஒவ்வொருவரையும் உருக்கமாக நேசிப்பார்கள். ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சந்தோஷ ஆனந்த பாக்கியத்தைக் கண்டு, அது, தங்களுடைய சொந்தக் காரியம்போல் எண்ணி அகமகிழ்வார்கள்; அங்கே, வியாகுலம், அச்சம் என்பது கிடையாது; ஏனெனில், தேவ இஷ்டப்பிரசாதத்தில், உறுதிப் பட்ட ஆத்துமமானது, இனிமேல் பாவத்தைக் கட்டிக்கொள்ளவும், கடவுளை இழந்து போக

உடியதில்லை. இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றேன். சகலமும் புதிது; சக லருக்கும் சந்தோஷ திருப்தியையும், ஆறுதலையும் விளைவிக்கும். மனோகரத்தை உண்டாக்கத் தக்கவை எல்லாம் அங்கே உண்டு.சர்வ அலங்காரமும் உடைத்தான அந்தப்பரம நகரத்தைப் பார்ப்பதால், கண்களுக்கு ஆனந்த சந்தோஷம் உண்டாகும். பளிங்குக் கண்ணாடியினால், பரவப்பட்ட தெருக்களும் சுத்த வெள்ளியினால், மதில்கள் கட்டப்பட்டும், தூய பொன்னி னால் மேற்கூரைகள் மூடப்பட்டும், அழகிய பொருட்களினாலும், சிறந்த கூண்டுகளினாலும் ஜோடித்து அலங்கரிக்கப்பட்டும் உள்ள அரண்மனைகளும் உள்ள ஒரு நகரத்தைப் பார்க்கும் போது, எவ்வளவோ மதுரமான ஒரு மனசந்தோஷமுண்டாகும். ஆ! இவை எல்லாவற்றை யும் பார்க்க எத்தனையோ தடவை, மோட்ச பரகதி மேலானதாயிருக்கும்! அவ்வளவாக, அந்த மோட்ச வாசிகள் அனைவரும் ஒட்டலோகராய், இராஜரீக பொன் பட்டாடைகளை, அணிந்திருப்பதைப் பார்ப்பது, கண்களை எவ்வளவோ, பறிக்கும்!

அர்ச். அகுஸ்தீன் கூறுகிறபடி, அங்குள்ளவர்கள் எல்லோரும் அரசர்கள். அப் பட்டணத்தில் வசிப்பவர்கள் எவ்வளவு பேரோ, அவ்வளவு பேரும் இராஜாக்கள்! ஆ! மோட்ச இராக்கினியாக தேவமாதாவின் தரிசனம் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்? பரகதி முழுவதும், அவர்கள் அதிக சிறந்தவர்கள்! கடைசியாய் திவ்ய செம்மறியானவரும்,பத்தாவு மாகிய திவ்ய சேசுநாதரின் தரிசனம், காட்சி எப்பபேர்ப்பட்டதாயிருக்கும்? அர்ச்.தெரசம் மாள், ஒருதடவை, கர்த்தராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் திருக்கரத்தினுடைய ஜோதிப் பிரகாசம், சற்றே மின்னி மறைவது போன்ற காட்சி கண்டாள்; அதன் சௌந்தரியமும், அழ கும் எவ்வளவு பெரியதாக இருந்ததென்றால், அவள் அதனால்,ஸ்தம்பித்து மயங்கி விழுந்தாள். பரலோகத்தின் சுகந்த மணமும், வாசமும், நாசியை முற்றும் கவர்ந்து கொள்ளும். மோட்ச வாசிகளின் சங்கீதங்களும், இனிமை நிறைந்த பாடல்களும் செவிக்கினிய மதுரமான இன் பத்தைக் கொடுக்கும்.

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், ஒருசமயம், ஒரு சம்மனசு,தன் கையில் இருந்த வயலின் இசைக்கருவியில் ஒரு ஒலியை எழுப்பி,இசைத்ததைக் கேட்டவுடன், தனக்குண்டான பேரானந்த சந்தோஷத்தால், இறந்து போகும் அளவிற்கு மூர்ச்சையடைந்தார்; அப்படியா னால், மோட்ச வாசிகளாகிய சகல அர்ச்சிஷ்டவர்களும், சகல சம்மனசுகளும் ஒன்றாய்க் கூடி, திவ்ய கர்த்தருடைய மகிமையைப் பாடுவதென்றால், எப்படி இருக்கும்? அவர்கள், எக்கால மும், உம்மைப் பாடித் துதிப்பார்கள் (சங்.83).இது, இவ்வாறு உன்னதமான காரியமாயி ருக்க, மோட்ச இராக்கினியாகிய தேவமாதா, தாமே கடவுளைத் துதிப்பது எவ்வளவு மகி மைக்குரியதும் ஆனந்த சந்தோஷ பாக்கியம் தரும் காட்சியாக விளங்கும்! பரலோக வீட்டி லும், தேவமாதா, பாடித்துதிப்பது எப்படி இருக்குமென்றால், ஒரு நந்தவனத்தின் மத்தியில் உட்கார்ந்து பாடும் நைட்டிங்கேல் என்னும் பறவையின் இனிய குரல், மற்ற எல்லா பறவை களினுடைய சத்தத்திற்கெல்லாம் மேலானதாக விளங்குவதுபோல், தேவதாயின் இனிமை நிறைந்த குரலும், சகல அர்ச்சிஷ்டவர்களின் குரலையும் விட மேலானதாயிருக்கும், என்று அர்ச்.பிரான்சிஸ்கு சலேசியார் கூறுகின்றார்.

ஒரே வார்த்தையில் கூறவேண்டுமெனில், மோட்சத்திலே, நாம் விரும்பவும் ஆசிக்க வும் கிரகிக்கவும் தக்க சகலவித இன்ப சந்தோஷங்களும் இருக்கும். ஆயினும், இதுவரை, விவரிக்கப்பட்ட சகல இன்ப சந்தோஷங்களெல்லாம், பரலோக இராஜ்ஜியத்திலுள்ள இன்ப சந்தோஷங்களில் மிகச் சிறியவையும் கடைசியுமானவை. மோட்ச பேரின்பம் முற்றிலும் அடங்கியிருப்பது, சர்வ நன்மைச் சொரூபியாகிய சர்வேசுரனிடத்திலேயே! அர்ச். அகுஸ்தீன்

) அனுபவிக்க எதிர்பார்க்கும் எல்லா பாக்கியமும், சர்வேசுரன் என்னும் ஒரு வார்த்தையிலேயே அடங்கியிருக்கின்றது. கடவுள் நமக்கு சம்பாவனையைத் தருவதாக வாக்களித்திருப்பதெல்லாம், அவருடைய மோட்ச வீட்டின் அழகிலும், மாட்சி மிக்க சிறப் பிலும், அதிசய பேரின்ப அமைப்பிலும், அதன் நானாவித இன்ப சந்தோஷங்களிலும் மாத் திரமல்ல! எல்லாவற்றிலும் முக்கிய சம்பாவனை சர்வேசுரனே!அதாவது:அவரை முகமுகமாய் தரிசிப்பதும், நேசிப்பதுமே முக்கிய சம்பாவனையும் பேரின்பமுமாகும். நாம், உனது மித மிஞ்சின சம்பாவனையாமே (ஆதி. 15).

அர்ச்.அகுஸ்தீன், சபிக்கப்பட்டவர்களுக்கு சர்வேசுரன் தமது திருமுக தரிசனத்தைக் காண்பித்தால், உடனே, அக்ஷணமே, நரகமானது, இனிய பரகதியாக மாறிவிடும், என்று கூறுவார். மீண்டும் அர்ச். அகுஸ்தீன் கூறுகிறதாவது:பூமியினின்று பிரிந்துபோகும் ஆத்துமத் திடம், நீ சர்வேசுரனை ஒரே ஒரு முறைமாத்திரம் பார்த்து விட்டு, அதன்பின் உடனே, நித்திய நரகத்திற்குப் போய் சகல ஆக்கினைகளையும் சகிக்க இஷ்டமோ அல்லது சர்வேசுரனைக் காண வும் மாட்டாய்! நரகத்திற்குப் போகவும் மாட்டாய்! இவ்விரண்டில் உனக்கு எதுப் பிரிய மோ, அதைத் தெரிந்துகொள்! என்று அறிவிக்கப்பட்டால், அந்த ஆத்துமம், சர்வேசுரனை தரிசிக்கவும், அதன்பின், நரக ஆக்கினைகளெல்லாவற்றையும் சகிக்கவும் சம்மதிக்கும்.

பூமியில் சஞ்சரிக்கும் நாம், சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிப்பதும், அவரை நேசிப் பதும் எப்படிப்பட்டதென்று, கண்டறியக்கூடாதவர்களாக இருக்கிறோம். ஆனால், சிற்சில சம்பவங்களைக் கொண்டு, அறியலாம். அதாவது: தேவசிநேகம் எவ்வளவிற்கு இனிமையான தென்றால்,ஜீவனோடு இருக்கையிலேயே, சில அர்ச்சிஷ்டவர்கள், ஆத்துமத்தை மாத்திரமல் லாமல், அவர்களுடைய சரீரத்தை கூட மேலே உயர்த்தும் வல்லமையைப்பெற்றிருந்தனர். அர்ச்.பிலிப்பு நேரியார், பரவசத்தில் இருந்தபோது, அவருடைய இருதயத்தில் கூடுதலாக அதிகரித்த தேவசிநேகத்தின் காரணமாக, ஒரு முறை, தாம் தாங்கி பலமாய்ப்பிடித்து நின்ற ஒரு பெஞ்சு பலகையோடு கூடவே, வானத்தில் மேலே உயர்த்தப்பட்டார். அதேபோல், அர்ச். அல்காந்தரா இராயப்பர், பக்தி பரவசத்திலிருந்தபோது, அவர் கையில் பிடித்திருந்த ஒரு மரம், வேருடன் பிடுங்கப்பட்டு, பூமிக்கு மேலே உயர்த்தப்பட்டார்!

அநேக வேதசாட்சிகள், தாங்கள் படும் மகா கொடிய வேதனைநிறைந்த ஆக்கினைகள் மத்தியில், தங்கள் இருதயத்திலுள்ள தேவசிநேக மதுரத்தினால், மலர்ந்த முகத்துடன், அக மகிழ்ந்து அந்த சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டனர். வேதசாட்சியான அர்ச்.வின்செந்தி யார், வேத சாட்சிக்குரிய கொடிய துன்ப உபத்திரவங்களை அனுபவித்துக்கொண்டே, இனி மை நிறைந்த மதுர குணத்துடன், அங்கு தம்மை உபாதித்தவர்களுடன் உரையாடினார்; அதைக் கண்டகூடியிருந்த மக்கள், அவரிடம், துன்பத்தை அனுபவிப்பதற்கு ஒரு மனிதரும், இனிமையாக உரையாடுவதற்கு வேறு ஒருவருமாக, இரண்டு மனிதர்கள் இருக்கின்றனர் என்று நம்பக்கூடிய அளவிற்கு, அவர் அத்துன்ப உபாதைகளை சாந்தகுணத்துடன் பொறு மையாக சகித்துக் கொண்டு, இன்முகத்துடன் உரையாடினார், என்று அர்ச். அகுஸ்தீன் எழுதி யிருக்கின்றார்.

அர்ச். லாரன்ஸ் வேதசாட்சியாக, இரும்பு அடுப்பின்மீது கிடந்து எரியும்போது, கொ டுங்கோலனை நோக்கி, இந்தப் பக்கம் வெந்து விட்டது;இப்போது, என்னைப்புரட்டி சாப்பிடு, என்று இன்முகத்துடன் கூறினார்.அர்ச்.லாரன்சின் இருதயம், அப்போது, வெகுவாய், தேவ

சிநேக அக்கினியினால் பற்றியெரிந்தபடியால், இந்த அடுப்பு நெருப்பு, அவருக்கு ஒரு பொ ருட்டாகத் தோன்றவில்லை. இது தவிர, சில வேளைகளில், ஓர் பாவியானவன், இப்பூலோகத் திலேயே,தன் பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு அழும்போது, எவ்வளவோ சந் தோஷ மனோகர இன்பத்தை அனுபவிக்கிறான்." சுவாமி! உமக்காக அழுவதே, இவ்வளவு அமிர்தமாய்த் தோன்றினால், உமக்காக ஆனந்த சந்தோஷப்படுவது எப்படி இருக்குமோ!” என்று அர்ச்.பெர்னார்டு உரைக்கின்றார்.

மேலும் சில வேளைகளில், ஓர் ஆத்துமமானது. ஆண்டவர் தனக்குச் செய்திருக்கும் நன்மையையும், தன் மேல் திவ்ய சேசுநாதர் பொழிந்து வரும் அளவற்ற தயாளமும், அந்த நேச ஆண்டவர் தனக்குக் காண்பித்ததும், காண்பித்து வருவதுமான சிநேகப் பெருக்கத்தை யும், ஓர் தியான ஜெப நேரத்தில், பிரகாசிக்கும் ஓர் ஞான ஒளியினால், கண்டுணரும்போது, அனுபவிக்கும் சந்தோஷமும், ஆச்சரியமும் எவ்வளவோ பெரியதாயிருக்கும்! அத்தருணத் தில், அந்த ஆத்துமம், உடைந்து, தகர்ந்தாற்போல சிநேகப் பெருக்கத்தால் வாடி மயங்கும். இப்படியிருக்க, இந்தத் தருணங்களில் நாம் இப்பூமியில், நம் நேச ஆண்டவரை, அவர் சுயம் பாயிருக்கிறபடி, காண்கிறதில்லை. ஒருவித அந்தகாரத்தில் தான் காண்கிறோம்: “நாம் இப் போது ஓர் கண்ணாடி வழியாக அந்தகாரமாய்க் காண்கிறோம். ஆனால், அப்போதோ முகமுக மாய்க் காண்போம்” (1 கொரி 13).

இப்போது நமது கண் ஒருவிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது; சர்வேசுரன், விசுவாசம் என்னும் திரைச் சீலையினால், மறைக்கப்பட்டிருக்கிறார். தம்மை முழுவதுமாக, அவர் நமக்கு, நன்றாகக் காண்பிக்கிறதில்லை.ஆனால், அந்தக் கட்டு,நமது கண்களிலிருந்து, அவிழ்க்கப்பட்டு, திரைச்சீலையும், உயர்த்தப்பட்டு,ஆண்டவரை முகமுகமாய்த் தரிசிக்கும்போது, எப்படியிருக் கும்?அப்போது ஆண்டவரின் மாபெரும்பேரழகு, சௌந்தரியம் எத்தன்மையானதென்றும், அவர் எவ்வளவோ மகத்துவமிக்கவரென்றும், எவ்வளவோ நீதியுடையவரென்றும், எவ்வள வோ சாங்கோபாங்கமுடையவரென்றும், எவ்வளவோ நம் நேசத்திற்குரியவர் என்றும், நம் மை சிநேகிக்கிறவரென்றும் அறிவோம்.

ஆ! சர்வ நன்மைச் சொரூபியாகிய சர்வேசுரா! எத்தனையோ தடவை, தேவரீரின் சிநேகத்தைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டு ஓடிப்போன அந்த நிர்ப்பாக்கிய பாவி நானே! ஆகையால், உம்மை மறுபடியும் காண்பதற்கும், நேசிப்பதற்கும், நான் ஒருவிதத்திலும் பாத் திரவானேயல்ல. அதெப்படியிருந்தாலும், தேவரீர் என்பேரில் வைத்த இரக்கத்தினிமித்தம், உமதுமேல், சற்றும் இரக்கம் வையாமல், ஓர் சிலுவையில் மரிக்கும்படி தீர்வையிட்டுக் கொண்டீரே! அந்த உமது மரணம், நான் மீண்டும் தேவரீரை ஓர் நாள், முகமுகமாய்க் கண்டு களிப்பேனென்றும், என் சக்தி கொண்ட மட்டும், உம்மை நேசிப்பேனென்றும், நம் பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒருபோதும்,உம்மைக் காணாமல்,உம்மை இழந்து போ கும் ஆபத்து, எனக்கு இன்னும், இருப்பதினாலும், என் பாவாக்கிரமங்களினால், இதன்முன் நான் உம்மை இழக்க நேரிட்டிருப்பதினாலும், எனக்கு இன்னும் மீதியாயிருக்கும், ஜீவிய காலத்தில், நான் என்ன செய்வேன்? தேவரீருக்கு துரோகம் செய்துகொண்டே திரிவேனோ? இல்லை. என் நேச சேசுவே! நான் தேவரீருக்கு விரோதமாய்க்கட்டிக்கொண்ட துரோகங்க ளுக்காக, என்னாலியன்ற அளவு மனஸ்தாபப்பட்டு, அவற்றை அருவருத்துத் தள்ளுவேன். உமக்கு விரோதமாய் நான் புரிந்த நிந்தை அவமானங்களுக்காக, மிகவும் மனஸ்தாபப்பட்டு, என் முழு இருதயத்தோடு, உம்மை நேசிக்கிறேன்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக