Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 29 ஜூன், 2017

திரிதெந்தின் திவ்விய பலி பூசை - Traditional Latin Mass

திவ்விய பலி g+சையின் சாதாரண பாகம்

முதல் பாகம்

ஆயத்தப் g+சை : உபதேச பாகம்
பலியோடு சேராத பாகம்
முதல் பிரிவு
ஆயத்தம்: தீர்த்தம் தெளித்தலிருந்து சபை செபம் வரையில்
குரு g+சை உடுப்புகளை அணிந்து கொண்டு பாத்திரத்தை கையிலேந்தி பீடத்தின் முன் நடுவே தரையில் முழந்தாட்படியிட்டுப் பீடத்திலேறிப் பாத்திரத்தை மத்தியில் வைத்த பின், g+சைப்புத்தகத்தினிடம் போய், அன்றைய பாகத்தைத் திறந்த வைத்தபின், நடுவில் வந்து மேல ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாடுபட்ட சுரூபத்தை நோக்கி சிரம் பணிந்து கீழே வருகிறார்.