Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024
சேசுவின் மதுர இருதயம் - Tamil Catholic Songs Lyrics
சனி, 3 பிப்ரவரி, 2024
அன்புருவாய் - Tamil Catholic Songs Lyrics
சனி, 4 டிசம்பர், 2021
கலங்கரைத் தீபமே - Tamil Catholic Song Lyrics
கலங்கரைத் தீபமே
கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே
கலங்குவோர்க் கதியே
காத்திடுவாய் தாயே
மாதர்களின் மாதிரியே
மாயிருளில் ஒளிர் தாரகையே
மாதரசியே மனவொளி தாராய்
மாசு அகலச் செய்வாய்
தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்
செவ்வாய், 6 ஏப்ரல், 2021
தேவ ஸ்பீரித்து சாந்துவே - Tamil Catholic Songs Lyrics
இஸ்பீரித்து சாந்துவின் ஏழுவரம் கேட்டல்
தேவ ஸ்பீரித்து சாந்துவே
(சத், வேத சங்கீர்த்தனை)
தேவ ஸ்பீரித்து சாந்துவே
தேவரீர் வாரும் எம்மில்
மாவரப்ரசாதம் நும்
மைந்தர் எங்கட்கீயவே
வாரும் ஸ்பீரித்து சாந்துவே
வல்லப அநாதியே
தேவுலகில் நின்று நும்
திவ்விய ப்ரகாசத்தின்
பேரொளி கொள் காந்தியை
தேவரீர் வரவிடும்
வாரும் ஸ்பீரித்து...
ஞானம் புத்தி விமரிசை
அறிவு திடம் பக்தியும்
தெய்வ பயமாகிய வரங்கள்
எங்கட்கீயவே
வாரும் ஸ்பீரித்து…
வியாழன், 1 ஏப்ரல், 2021
மாதாவே சரணம் - Tamil Catholic Songs Lyrics
பல்லவி
மாதாவே சரணம் - உந்தன்
பாதாரம் புவிக்காதாரம் - கன்னி
அனுபல்லவி
மா பாவம் எமை மேவாமல்-2
காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே
சரணங்கள்
மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம்
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்
பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் - மாதாவே
அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics
பல்லவி
அன்னையே எங்கள் செல்வதாடு
அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய
விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே
வேண்டி மன்றாடிடாய்
வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே
சரணம்
மானிட தேவன் இவ்வுலோகத்தில்
வந்தித்தனை நாளாயிற்றே
ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ
இன்னும் விடாமற் போயிற்றே
தன்னை உருவாக்கிய தாதாவை
சற்றும் தேடாமல் விட்டதே
கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே
எம் நாடு நம்பிக் கெட்டதே ‘
சூரியன் சந்திரன் முதலான
சோதிகளைப் பணிந்ததே வீரர்
அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து
தொழத் துணிந்ததே
கண்ணிலே கண்ட தெல்லாம்
சேவித்து கர்த்தனையே மறந்ததே
எண்ணியிந் நாட்டையே உன்
நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே
அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics
பல்லவி
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே
சரணங்கள்
1. இருளே சூழ்ந்திடும்போதே
உதய தாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே
அருள்வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம்
உன்னைத்துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்