Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சேசுவின் மதுர இருதயம் - Tamil Catholic Songs Lyrics

சேசுவின் மதுர இருதயம் 

1. சேசுவின் மதுர திரு இருதயமே
சிநேக அக்கினி மயமே
தினமும் நீர் எங்கள்
சிநேகமாயிருப்பீர் தேவ தயாநிதியே

 2. மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க மனுமகனாய்ப் பிறந்தாய்
மகிமை பிரதாப கடவுளானாலும்
மாபழி மேற்சுமந்தாய்.

3. கள்ளளைப் போல கசடர்கள் உன்னைக் கடுஞ்சிலுவையி லறைந்தார்
கருணை ஆர் உந்தன் இருதய அன்பின் கரை எவர் கண்டறிவார்

4. உம் திரு ரத்தம் ஒரு துளி முதலாய் உனக்கென வைத்தாயோ ஓய்விலா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திவ்ய இருதயமே

 5. என்றும் எம்மோடு இருந்தருள்
ஈவாய் இனிய நல்லுணவாவாய். இவையெல்லாம் பாரா ஈனர்கள்
நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே

6. நன்மைமேல் நன்மை என்றும் நீ செய்தாய் நாங்களோ தீமை செய்தோம். நன்றியில்லாமல் உன்தயை மறந்தோம் நாணி இப்போ தழுதோம்

7. எங்களைப் பாரும் இடர்குறை தீரும் இனிய நல்லிருதயமே எந்தெந்தப்
பாவ தந்திரம் நின்று
இரட்சிப்ப துன் பொறுப்பே


சனி, 3 பிப்ரவரி, 2024

அன்புருவாய் - Tamil Catholic Songs Lyrics

அன்புருவாய்

1. அன்புருவாய் எம் நடுவில்
ஆசையுடன் வந்துதித்தீர் இந்தப் பொன்னொளியுள் வீற்றிருக்கும்
பூபதியே நமஸ்காரம்

 2. பரலோக உந்நதத்தில்
பாக்கியமாய் வாழ்பவர்
நீர்நரலோக வாசிகளுள்
நலமேது தேடி வந்தீர்?

3. நித்திய பிதாவினண்டை
நிரந்தரம் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை
சுதந்திரமாய்க் கொண்டதேனோ?

 4. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள்
வந்த தென்ன வானரசே.

5. வானமதில் மேலவர்கள்
வாழ்த்தி யென்றும் போற்றுகின்ற
ஞானமே எம் மத்தியை
 நீர் நாடினதே ஆச்சரியம்

சனி, 4 டிசம்பர், 2021

கலங்கரைத் தீபமே - Tamil Catholic Song Lyrics

கலங்கரைத் தீபமே  
கலங்களின் தாரகையே   
துலங்கிடும் மணியே    
கலங்குவோர்க் கதியே    
காத்திடுவாய் தாயே 


மாதர்களின் மாதிரியே 
மாயிருளில் ஒளிர் தாரகையே  
மாதரசியே மனவொளி தாராய் 
மாசு அகலச் செய்வாய் 


தாயெனவே தாவி வந்தோம் 
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி 
கூவிடும் குரல் கேளாய்






to Buy Tamil Christian Books (Catholic) Click here

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

தேவ ஸ்பீரித்து சாந்துவே - Tamil Catholic Songs Lyrics

 இஸ்பீரித்து சாந்துவின் ஏழுவரம் கேட்டல் 

தேவ ஸ்பீரித்து சாந்துவே

(சத், வேத சங்கீர்த்தனை) 






தேவ ஸ்பீரித்து சாந்துவே 

தேவரீர் வாரும் எம்மில் 

மாவரப்ரசாதம் நும்

 மைந்தர் எங்கட்கீயவே


வாரும் ஸ்பீரித்து சாந்துவே

வல்லப அநாதியே 


தேவுலகில் நின்று நும் 

திவ்விய ப்ரகாசத்தின் 

பேரொளி கொள் காந்தியை 

தேவரீர் வரவிடும்


வாரும் ஸ்பீரித்து... 


ஞானம் புத்தி விமரிசை

 அறிவு திடம் பக்தியும் 

தெய்வ பயமாகிய வரங்கள் 

எங்கட்கீயவே


வாரும் ஸ்பீரித்து…


வியாழன், 1 ஏப்ரல், 2021

மாதாவே சரணம் - Tamil Catholic Songs Lyrics

பல்லவி


மாதாவே சரணம் - உந்தன் 

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி


அனுபல்லவி


 மா பாவம் எமை மேவாமல்-2 

காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே


சரணங்கள் 


மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்

 மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் 

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே 



நானிலத்தில் சமாதானமே நிலவ 

நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய 

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்

 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்   - மாதாவே





அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics


பல்லவி 


அன்னையே எங்கள் செல்வதாடு 

அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய 

விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே 

வேண்டி மன்றாடிடாய் 

வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே


சரணம் 


மானிட தேவன் இவ்வுலோகத்தில்

 வந்தித்தனை நாளாயிற்றே 

ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ 

இன்னும் விடாமற் போயிற்றே 


தன்னை உருவாக்கிய தாதாவை 

சற்றும் தேடாமல் விட்டதே 

கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே 

எம் நாடு நம்பிக் கெட்டதே ‘


சூரியன் சந்திரன் முதலான 

சோதிகளைப் பணிந்ததே வீரர் 

அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து 

தொழத் துணிந்ததே


 கண்ணிலே கண்ட தெல்லாம் 

சேவித்து கர்த்தனையே மறந்ததே 

எண்ணியிந் நாட்டையே உன் 

நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே



அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics


பல்லவி 


அழகின் முழுமையே தாயே 

அலகையின் தலை மிதித்தாயே 

உலகினில் ஒளி ஏற்றிடவே 

அமலனை எமக்களித்தாயே


சரணங்கள் 


1. இருளே சூழ்ந்திடும்போதே

உதய தாரகை போலே 

அருளே நிறைந்த மாமரியே 

அருள்வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம் 

அன்னை உனைப் பின் செல்வோம் 

உன்னைத்துணையாய்க் கொள்வோம் 

என்றும் பாவத்தை வெல்வோம்