Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

catholic songs tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
catholic songs tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2022

St. Anthony Devotion (day 17) in Tamil

 பிரில் பட்டணத்துக் கெபிகள்


அர்ச். அந்தோனியாருடைய தாழ்ச்சியையும், புண்ணியங்களையும் அவர் செய்துவந்த அற்புதங்களையும் பசாசுகள் கண்டு கலங்கி அவருடைய உயிரை வாங்கத் தேடின சேன் ஜூனியன் (St. Junien) என்னும் ஊரில் பிரசங்கம் கேட்கவந்த திரனான சனங்களுக்குக் கோயிலில் இடமில்லாமையால் வெளியில் ஒரு மைதானத்தில் மேடைபோட்டு அம்மேடைமேல் குருப்பிரசாதிகளும் பிரபுக்களும் அந்தோனியாரைச் சுற்றி நின்றிகொண்டிருக்கும் படியான ஏற்பாடு செய்தார்கள். அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் துவக்குகிறதுக்குமுன் அதைக் கெடுக்க நினைத்திருந்த பசாசுகளின் மோசக் கருத்தை ஞான திருஷ்டியால் அறிந்து சனங்களைப் பார்த்து; பிரசங்கத்தின்போது என்ன சம்பவித்தபோதிலும் அதனால் யாதொரு கெடுதியும் நடவாதென்று அறிவித்தபிறகு பிரசங்கத்தை ஆரம்பித்தார். நடுச்சமயத்தில் மேடை அதிர்ந்து விழ அதைப்பற்றி ஒருவரும் கவனிக்கவுமில்லை, ஒருவருக்கும் சேதமும் இல்லை. அந்தோனியார் மற்றொரு உயர்ந்த ஸ்தலத்தில் ஏறி துவக்கின பிரசங்கத்தை முடித்தார். சனங்கள் அவருடைய ஞான திருஷ்டிகைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.



கடைசியில் பிரிவ் பட்டணம் வந்து சேர்ந்தார். அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த ஐசுவரியவான் ஒருவர் அவ்விடத்தில் அவர் ஒரு மடங் கட்டுவதற்கு வேண்டிய ஆஸ்தி வைப்பதாகச் சொன்னார். ஆனால் தனிவாசத்தை நேசித்த அர்ச்சியசிஷ்டவர் அடுத்தாற்போலத் தனித்துக் கெபிகள் இருப்பதாகக் கண்டு அங்கே அடிக்கடி போய்க் கொண்டிருப்பார். அந்தத் தனித்தவிடத்தில்தான் தம்முடைய ஆசைக்குத் தக்க அளவு செபத்திலும், தியானத்திலும், தவத்திலும், ஏகாந்தத்திலும் எப்போதும் சர்வேசுரனுடைய சமூகத்தில் காலத்தைச் செலவழித்தார். பாறையினின்று துளித்துளியாய் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபடியால் தமது கையால் ஒரு குழி தோண்டி தண்ணீரைத் தாம் உபயோகப்படுத்தி வந்தார். "பாறையில் உன் வாசஸ்தலத்தைத் தெரிந்து கொள்" என்றாற் போல அந்தோனியார் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்தார். சேசுநாதரே அந்தப் பாறை, அவரிடத்தில் தான் உன் வாசஸ்தலமும், உன் நினைவுகளும், உன் பட்சமும் இருக்கவேண்டியது. வனாந்தரத்தில் யாக்கோபு பாறையின்மேல் தலைவைத்து நித்திரை போகையில், பரமண்டலந் திறந்து அதனின்று இறங்கின சம்மனசுகளோடு சம்பாஷணைசெய்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதுபோலவே சேசுநாதரிடத்தில் தன் வாசஸ்தலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆத்துமமும் ஆசீர்வதிக்கப்படும். அர்ச். அந்தோனியார் தமது விரலினால் பள்ளம் தோண்டி தண்ணீரை அதில் விழும்படி செய்தார். திருயாத்திரை ஸ்தலங்களில் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பாதத்தின் அடியிலோ, வேறெந்த அற்புத விதமாகவோ உண்டான ஊற்றின் நீரைக்கொண்டு சர்வேசுரன் அநேகம் புதுமைகளைச் செய்யத் திருவுளமானார். 13-ம் நூற்றாண்டு முதல் பிரிவ் பட்டணத்தை அடுத்த கெபியின் ஊற்றில் அநேக அற்புதங்கள் நடந்து வருகின்றன. ஞானஸ்நானத்துக்குச் சேசுநாத சுவாமி தண்ணீரைத் தெரிந்துகொண்டார். கடல் நீரின்மேல் நடந்தார். தாமே தண்ணீரால் ஞானஸ்நானம் பெறத் திருவுளமானார். கடலின் அலைகளுக்குக் கட்டளையிட்டார். உடனே அமரிக்கை உண்டானது. இக்காலத்திலும் 1858-ம் வருஷம் பிரஞ்சு தேசத்தில் லூர்துமாநகரில் மஸபியேல் கெபியில் அர்ச். தேவ மாதா பெர்நதெத்தம்மாளுக்குக் காட்சி தந்த ஸ்தலத்தில் ஏற்பட்ட ஊற்றுநீரைக்கொண்டு அவ்விடத்தில் மாத்திரமல்ல, அந்த அற்புதமான தண்ணீர் எந்தெந்தத் தேசங்களுக்குக் கொண்டு போகப்படுகின்றதோ, அவ்விடங்களிலெல்லாம் வருஷாவருஷம் நடந்து வரும் புதுமைகளுக்குக் கணக்குண்டோ?


மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தை நாம் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும்போது அதனால் நமக்கு அநேகம் பலன்களுண்டு. அந்தோனியார் இத்தாலியா தேசத்தில் அநேகவிடங்களில் கிணறுகளும் ஊற்றுகளும் எடுக்கச் செய்து அத்தண்ணீரால் அநேக வியாதிஸ்தரை குணப்படுத்தினார். பிரிவ் கெபி தண்ணீருக்கு விசேஷ குணம் கட்டளையிட்டிருக்கிறார். அதனால் அநேகர் சௌக்கியப்பட்டிருக்கிறார்கள். நாமும் கூடுமானபோது நம்பிக்கையோடு அதைப் பிரயோகித்துக்கொள்ளக்கடவோம். தீர்த்தத்தினாலும், சிலுவையினாலும், மற்ற அநேக புண்ணிய முயற்சிகளாலும் நமது அற்ப குற்றங்களை நிவாரணஞ் செய்யக்கடவோம். எவ்வளவுக்கு நம்முடைய ஆத்துமம் பரிசுத்தமாயிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை அடையப் பாத்திரவான் களாவோம்.


செபம்


ஓ வல்லமையும் பிறசிநேகமும் உள்ளவரான அரிச் அந்தோனியாரே, பிரிவ் நகரத்துக் கெபிகளின் தண்ணீரால் ஆத்தும வியாதிகளையும் சரீர நோய்களையும் தீர்த்தீரே, வியாதியினால் பலமற்றிருக்கும் அடியேன் மேல் இரக்கமாயிரும். ஆங்காரம், கோபம், மோகம் இவை முதலானவைகளே என் தீராத வியாதி. எனக்கு ஆத்தும சரீர சுகத்தை நீர் அடைந்து அடியேன் என்றென்றைக்கும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யும்படிக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை: தர்மம் செய்கிறது.,


மனவல்லயச் செபம்: புதுமைகளால் விளங்கினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



செவ்வாய், 26 அக்டோபர், 2021

St. Anthony Sermon in Tamil - அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங்கம்

 

கடவுள் சிநேகமாக இருக்கிறார்.


(அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங்கம் ) இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு நிருபத்தின் முதல் பகுதி , "கடவுள் சிநேகமாயிருக் கிறார்" (1 அரு. 4:8) என்னும் இந்த முதல் வாக்கியத்தோடு பொருந்துவதாக இருக்கிறது. சிநேகம் எல்லாப் புண்ணியங் களிலும் மேலான புண்ணியம் என்பதால், நாம் ஒரு சுருக்க மான, தனிப் பிரசங்கம் ஒன்றை அதன்பேரில் தருவோம். நாம் கடவுளையும் நம் அயலானையும் ஒரே வித அன்பைக் கொண்டு, இஸ்பிரீத்து சாந்துவானவராகிய அன்பைக் கொண்டு நேசிக்கிறோம், ஏனெனில் கடவுள் சிநேகமாயிருக் கிறார். அர்ச். அகுஸ்தினார் இதைப் பற்றி, "சர்வேசுரனை, அவர் பொருட்டு, உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக, உன் அயலானை உன்னைப் போல நேசிப்பாயாக என்ற அன்பின் கட்டளை கடவுளால் தரப்பட்டுள்ளது. கடவுளின் நிமித்தம் உனக்கு நன்மையானது எதுவோ அதைத் தேடுவதன் மூலம், உன்னை நீ நேசிக்க வேண்டும். இதே முறையில், அதே கடவுளின் நிமித்தம் உன் அயலானுக்கு நன்மையானதும், அவனுக்குத் தீங்கா யிராததுமான காரியத்தைத் தேடுவதன் மூலம், அவனையும் நீ நேசிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உன் அயலான்தான்; நீ தீங்கு செய்யக்கூடிய மனிதன் யாருமில்லை" என்று கூறுகிறார்.

''உன் முழு இருதயத்தோடும் (புத்தி), உன் முழு ஆத்துமத்தோடும் (சித்தம்), உன் முழு மனதோடும் (நினைவு) உன் தேவனாகிய ஆண்டவரை நேசிப்பாயாக" என்ற வார்த்தைகளில் நாம் கடவுளை நேசிக்க வேண்டிய முறைமை குறித்துக் காட்டப்படுகிறது. நம் புத்தியும், சித்தமும், நினைவுமாகிய ஆன்ம சத்துவங்கள் யாரிடமிருந்து வருகின்றனவோ, அந்த சர்வேசுரனுக்கே அவை அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதற்கு நம் வாழ்வின் எந்த பாகமும் விதிவிலக்கு அல்ல. நம் மனதிற்குள் வரும் எந்த ஒரு காரியமும் அன்பினால், அதன் கடைசி இலக்காகிய கடவுளையே நோக்கியதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட நிருபத்தில், அர்ச். அருளப்பர் கடவுள் மீதும், அயலான் மீதும் கொள்ளும் அன்பைப் பற்றி நமக்கு அதிகம் எடுத்துச் சொல்லி, அதைக் கடைப்பிடிக்கும்படி நம்மை உற்சாகப் படுத்துகிறார். "தம்முடைய ஏக குமாரனால் நாம் ஜீவிக்கும்படிக்குச் சர்வேசுரன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினாலே, சர்வேசுரன் நமது பேரில் வைத்த சிநேகம் வெளிப்பட்டது'' (1அரு.4:9). பிதாவானவர் நம் மீது வைத்த இந்த நேசம் எவ்வளவு பெரியது! நாம் அவரால் வாழும்படியாகவும், அவரை நாம் நேசிக்கும்படியாகவும், அவர்தம் ஏகபேறான திருச்சுதனையே நமக்காக நம்மிடம் அனுப்பினார். ஏனெனில் அவரின்றி வாழ்வது உண்மையில் மரணமாகவே இருக்கிறது. "சிநேகியாதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்" (1 அரு.3:14).

யார் வழியாக சர்வேசுரன் உலகத்தைப் படைத்தாரோ, அந்தத் தமது நேச குமாரனையே நமக்குத் தரும் அளவுக்கு மிக அதிகமாக அவர் நம்மை நேசித்தார் என்றால், நாமும் ஒருவரை யொருவர் நேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். "நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை யைத் தருகிறேன், நீங்கள் ஒருவர் ஒருவரை நேசியுங்கள்" (அரு. 13:34). ஆடம்பரமாக உடை அணிந்திருந்த அந்தப் பணக்காரன் இந்தக் கட்டளையை நிறைவேற்றவில்லை, எனவே அவன் மரணத்தில் நிலைகொண்டிருந்தான். நேசமாகிய உண்மையான வாழ்வு அவனிடம் இல்லாத தால் அவன் உயிருடன் புதைக்கப்பட்டான் என்றும் கூட நீங்கள் சொல்லலாம். தனது முன்னுரிமைகளைத் தவறான வழியில் அவன் பயன்படுத்துவதால் பாவம் செய்கிறான்.

அர்ச். அகுஸ்தினார் இப்படிச் சொல்கிறார்: "நேசிக்கப்பட வேண்டிய நான்கு காரியங்கள் இருக்கின்றன. ஒருவர் நமக்கு மேலே இருக்கிறார். அவர் கடவுள். இரண்டாவதாக நாம் இருக் கிறோம். மூன்றாவது காரியம், நம் அருகில் இருக்கிறது. அது நம் அயலார். நான்காவது காரியம் நமக்குக் கீழே இருக்கிறது, அது நம் சரீரம்." அந்த செல்வந்தன் தன் உடலை எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தான். கடவுளையும், தன் சொந்த ஆன்மாவையும், தன் அயலானையும் பற்றியோ அவன் சற்றும் கவலைப்படவில்லை. அதனால்தான் அவன் தண்டனைத் தீர்ப்படைந்தான்.

"நம் சரீரத்தை நம் பொறுப்பிலுள்ள ஒரு நோயாளியைப் போல நாம் நடத்த வேண்டும். அது விரும்பினாலும், அதற்கு நன்மையாக இராத பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை அதற்குத் தர நாம் மறுக்க வேண்டும். அதற்கு நன்மையானதும், ஆனால் அது விரும்பாததுமான பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் அதற்கு வற்புறுத்தித் தர வேண்டும். நம் சரீரம் நமக்குச் சொந்தமல்ல, மாறாக, மிகப் பெரும் விலை கொடுத்து நம்மை வாங்கியவரை நம் சரீரத்தில் மகிமைப்படுத்தும்படியாக, அது உண்மையில் அவருக்கே சொந்தமாயிருக்கிறது என்பது போல நாம் நம் சரீரத்தை நடத்த வேண்டும்" (காண்க. 1 கொரி.6:20) என்கிறார் அர்ச். பெர்னார்ட்.

"நீ நம்மை மறந்து நம்மை உன் முதுகின் பின்னாலே தள்ளிப்போட்டதினிமித்தம் நீயும் உன் குற்றத்தையும், உன் வேசித்தனத்தையும் சுமந்து கொள் என்று தேவனாகிய ஆண்டவர் சொல் கிறார்" (எசேக். 23:35) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறும் கடவுளின் கண்டனத்தை நம்மீது வருவித்துக் கொள்ளாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். நாம் நம் சரீரங்களை நான்காவது, கடைசி இடத்தில் வைத்துத்தான் நேசிக்க வேண்டும், "சரீரத்தின் பொருட்டே நாம் வாழ்கிறோம் என்பது போல் அல்லாமல், அது இல்லாவிடில் நாம் வாழ முடியாது என்பதற்காகவே அதை நாம் நேசிக்க வேண்டும்.'' ஆமென். (இக்கட்டுரை அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங் கங்கள் அடங்கிய Antonius Patavinus Sermones என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

Matha Parikara Malar – March – June 2020

சனி, 17 ஏப்ரல், 2021

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோற்கு i Tamil Catholic Song Lyrics



பல்லவி


 தாயே  உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு 

தஞ்சமும் ஆதரவும் நீரே


சரணங்கள் 

1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்

திருத்தயை கேட்க நீரோ அறிந்து 

தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை 

ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து 


உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள் 

உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார் 

கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக் 

கறையினால் துறை சேரார் இன்னும் தாயே 


தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன் 

தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ! 

தூய கருணை நிறை ஆயே இவர்

துயரெல்லாம் நீக்க வரும் தாயே


உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்

உழன்று வருந்து வதினாலும் 

நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச

நாடுதந் தாதரிப்பீர் ஆயே


 5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக

பரிதவிப் போர்க் குதவி நீரே 

சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம் 

சென்றோர்க்கு இராக்கினியும் நீரே




செவ்வாய், 6 ஏப்ரல், 2021

எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் - Tamil Christian Lyrics



 எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்

 திவ்விய ஸ்பீரித்து சாந்துவே 2

அடியோர் உள்ளத்தில் எழுந்தே 

வருவீர் இனிய சிநேக தேவனே


உலக இருளை அகற்ற உமது 

பரலோக ஒளி தாருமே 2

உண்மைக் கண்டு நன்மை பெற

 நாதனே அருள் செய்குவாய் 


நன்மை பயக்கும் ஞானக் கொடைகள் 

 யாவும் அளிப்பாய் பரமனே 2

நல்வழியை நாங்கள் கண்டு 

நற்கதி பெறச் செய்குவாய் 


ஞானம் புத்தி விமரிசையுடன் 

அறிவு திடம் பக்தியும் 2

தெய்வபயமான வரங்கள் 

ஏழும் எமக்கு ஈவாயே


தேவ ஸ்பீரித்து சாந்துவே - Tamil Catholic Songs Lyrics

 இஸ்பீரித்து சாந்துவின் ஏழுவரம் கேட்டல் 

தேவ ஸ்பீரித்து சாந்துவே

(சத், வேத சங்கீர்த்தனை) 






தேவ ஸ்பீரித்து சாந்துவே 

தேவரீர் வாரும் எம்மில் 

மாவரப்ரசாதம் நும்

 மைந்தர் எங்கட்கீயவே


வாரும் ஸ்பீரித்து சாந்துவே

வல்லப அநாதியே 


தேவுலகில் நின்று நும் 

திவ்விய ப்ரகாசத்தின் 

பேரொளி கொள் காந்தியை 

தேவரீர் வரவிடும்


வாரும் ஸ்பீரித்து... 


ஞானம் புத்தி விமரிசை

 அறிவு திடம் பக்தியும் 

தெய்வ பயமாகிய வரங்கள் 

எங்கட்கீயவே


வாரும் ஸ்பீரித்து…


வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஞானம் நிறை கன்னிகையே - Tamil Catholic songs lyrics

 


ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே

 ஞானம் நிறைக் கன்னிகையே


அனுபல்லவி 


மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 

பலி பீடமுமாய் அலங்கரித்தாரே-ஞானம் 


பாவ நிழலே அணுகா 

பாதுகாத்தார் உம்மையே பரமன் 

தாயுதரம் நீர் தரித்திடவே-2

தனதோர் அமல தலமெனக் கொண்டார்-ஞானம் 

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே 

மக்கள் இஸ்ராயேல் தாரகையே-2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி-ஞானம் 


வாக்குத் தத்த பெட்டகமே

வானகம் சேர்க்கும் வாசலே

மகிழ் ஒளி நல்கும் விடி வெள்ளியே-2 

மெய் மனம் நொந்தோர்க் காறுதலே-ஞானம்


கிருபை தயாபத்து மந்திரம் - Tamil Catholic Songs Lyrics



1. கிருபை தயாபத்தின் மாதாவாய் 

இருக்கின்ற இராக்கினியே வாழ்க


        பல்லவி 


வாழ்க வாழ்க மாதாவே

வாழ்க வாழ்க மாதாவே 


2. எமதுயிர் தஞ்சமும் நீராமே

எமது நல் மதுரமும் நீராமே - வாழ்க 


3. பரதேச ஏவையின் மக்கள் யாம்

பரிவாக உம்மை யழைக்கின்றோம் - வாழ்க 


4. இந்தக் கண்ணீ ர் கணவாய் நின்று

உம்மையே நோக்கி அழுகின்றோம் - வாழ்க 


5. ஆதலின் எமக்காக வேண்டுகின்ற

மாதயை மாமரி விழி பாரும் - வாழ்க 


6. பரதேச மிதையாம் கடந்த பின்னர்

திருக்கனி சேசுவின் முகங்காட்டும் - வாழ்க 


7. கிருபாகரியே தயா பரியே

மரியே மதுர மா கன்னிகையே - வாழ்க


ஸ்பீரித்து சாந்துவே வாரும் -Tamil Catholic Song Lyrics



ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2 

அன்பான தேவனே

அடியோர் உள்ளத்தே இறங்கும் 



உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப்போவோம் பாருமே

 எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய் ஜோதியே 

வாரும் ஞான ஜோதியே (2) 


நரக மோடுலகு சேர்ந்தே 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே 

நீர் வேதனையார் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே (2) 


திருப்ரசாதம் தரவாரும் 

தீங்கில்லாமல் நாமிருப்போம் 

தேவனே நீர் காவல் செய்வோர்க்கு 

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே (2)


வியாழன், 1 ஏப்ரல், 2021

மாதாவே சரணம் - Tamil Catholic Song lyrics


Our Lady of Snow, Tuticorin
பல்லவி


மாதாவே சரணம் - உந்தன் 

பாதாரம் புவிக்காதாரம் - கன்னி


அனுபல்லவி


 மா பாவம் எமை மேவாமல்-2 

காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே


சரணங்கள் 


மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்

 மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் 

ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 

பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே 



நானிலத்தில் சமாதானமே நிலவ 

நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய 

உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்

 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்   - மாதாவே