Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அர்ச்‌. முதலாம்‌ மர்செல்லுஸ்‌ (St. Marcellus - I)

  ஜனவரி 16

 வேதசாட்சியான

அர்ச்‌. முதலாம்‌ மர்செல்லுஸ்‌

பாப்பரசர்‌  

தியோக்ளேஷியனுடைய ஆட்சியின்‌ இறுதி காலத்தில்‌, பாப்பரசர்‌ மர்‌செல்லினுஸ்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டபிறகு, பாப்பரசர்‌ ஸ்தானம்‌, மூன்றரை வருட காலம்‌ காலியாகவே இருந்தது. கி.பி.308ம்‌ வருடம்‌, முதலாம்‌ மர்செல்லுஸ்‌ பாப்பரசரானார்‌. இவர்‌, திருச்சபை அதிகார அமைப்பை சீர்திருத்தம்‌ செய்தார்‌; விசுவாசத்தை இழந்தவர்‌கள்‌ மறுபடியும்‌ மனந்திரும்பி வந்தபோது, அவர்கள்‌ மேல்‌, இவர்‌ மிகவும்‌ இரக்கமாயிருந்தார்‌. ஆனால்‌, லாப்சி என்கிற மக்கள்‌, விசுவாசத்தை மறுதலித்தபிறகு, அதற்காக மனஸ்தாபப் படாததால்‌, இவர்‌ அவர்களை மன்னிக்கவில்லை. 

மாக்சென்ஷியுஸ்‌ சக்கரவர்த்தி, இவரை நாடு கடத்தினான்‌. பின்‌னர்‌, குருக்கள்‌ இவரை விடுவித்துக்‌ காப்பாற்றி, லூசினா என்கிற ஒரு விதவையின்‌ இல்லத்தில்‌ தங்க வைத்தனர்‌. லூசினா என்ற பக்தியுள்ள விதவை, பாப்பர சருக்குரிய மேரை வணக்கத்தையும்‌ செலுத்தினாள்‌; தன்‌ இல்லத்தை, பாப்பரசருக்கு ஒரு தேவாலயமாகப்‌ பயன்படுத்தும்‌ படியாக விட்டுக் கொடுத்தாள்‌. கிறீஸ்துவ திருவழிபாடுகள்‌ இந்த தேவாலயத்தில்‌ நிகழ்வதைப்‌ பற்றிக் கேள்வியுற்ற சக்கரவர்த்தி, இந்த தேவாலயத்தை, ஒரு குதிரை இலாயமாக மாற்றினான்‌. அதிலிருந்த மிருகங்களை கவனிக்கும்படி, பாப்பரசரை வலுவந்தம்‌ செய்தான்‌. 

வேதனைக்குரிய இந்த துயரமான சூழலில்‌, பாப்பரசர்‌ மர்செல்லுஸ்‌, கி.பி.310ம்‌ வருடம்‌, ஜனவரி 16ம்‌ தேதியன்று, மரித்தார்‌. முதலில்‌ இவர்‌, சுரங்கக்‌ கல்லறையிலிருந்த அர்ச்‌.பிரிஸ்சிலாவின்‌ கல்லறையில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌; பின்னர்‌, உரோமாயுரி அர்ச்‌.இராயப்பர்‌ தேவாலயத்தில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌.

 அர்ச்‌.மர்செல்லுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக