Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 19 ஜனவரி, 2022

தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்

 தபசுக்காலத்தின் முதல் ஞாயிறுக்கான ஞான தியான பிரசங்கம்: அர்ச்.மரிய வியான்னி அருளப்பர்



நாம் நம்மிலே ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்பதை கண்டுணர்வதற்கு சோதனை நமக்கு அவசியமாகிறது. அநேக கொடூரமான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பவரும் நமது திரளான பாவங்களை மன்னிப்பவருமான சர்வேசுரனின் எல்லையில்லா இரக்கத்திற்கு நன்றி செலுத்துவோம் என்று அர்ச்.அகுஸ்தினார் கூறுவார். நாம் பாவத்திற்கு எதிரான பிரதிக்கினைகளை எடுக்கும்போது, நமது சொந்த பலத்தையே பெரிதாக நம்புவதும், நம்மை என்றும் பாதுகாக்கும் சர்வேசுரன் மிது அற்ப நம்பிக்கை கொள்வதும் தான் அடிக்கடி, பசாசின் பாவ வலையில் விழும் நிர்பாக்கியம் நமக்கு நேரிடுவதற்கான உண்மையான காரணம். நாம் வெட்கத்துக்குரிய யாதொன்றும் செய்யாமலிருக்கும்போதும், நமது விருப்பப்படி எல்லாம் நிகழும்போதும், நம்மை எதுவும் விழத்தாட்ட முடியாது என்று நம்பத் துணிகின்றோம். 

நமது ஒன்றுமில்லாமையையும் முழு பலவீனத்தையும் மறந்துபோகிறோம். இறந்துபோவோமே தவிர ஒருபோதும் திமையை ஜெயிக்கவிடமாட்டோம் என்று அக்களிப்புடன் பாவத்திற்கு எதிரான எதிர்ப்புகளை அறிவிப்போம். இதன் அருமையான முன்னுதாரணத்தை, “ஒருபோதும் ஆண்டவரை மறுதலியேன்”என்று கூறிய அர்ச்.இராயப்பரின் ஜீவியத்தில் காண்கிறோம்.மனிதன்தன்னிலேயே எவ்வளவு ஒன்றுமில்லாதவனாக இருக்கிறான் என்பதை இராயப்பருக்கு உணர்த்துவதற்காக, ஆண்டவர்,அரசர்களையோ, இளவரசர்களையோ அல்லது மாபெரும் கருவிகளையோ பயன்படுத்தாமல் ஒரு ஊழியக்காரியின் குரலை மட்டுமே பயன்படுத்துகிறார். அதுவும் அவள் வழக்கத்திற்கு மிகவும் வேறுபட்ட வித்தியாசமான விதத்தில் அவரிடம் பேசுகிறாள். ஒரு மணித்துளிக்கு முன்பாக தாம் ஆண்டவருக்காக சாகத்தயாராக இருப்பதாகக் கூறிய இராயப்பர், “அவரை அறியேன்”; என்றும் “யாரைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். அங்கிருந்த யூதர்கள் தாம் கூறுவதை ஏற்றுக்கொள்வதற்காக, மிக உக்கிரமமாக ஆணையிட்டு ஆண்டவரை மறுதலிக்கவும் செய்கிறார். 

ஓ நேச ஆண்டவரே! உமது தேவ உதவியின்றி நாங்கள் தனிமையில் விடப்பட்டால், எங்கள் மட்டில் எதைச் செய்வதற்கு தான் தகுதியுடையவராய் இருக்கிறோம்! சிலர், பல அர்ச்சிஷ்டவர்கள் செய்த மாபெரும் கடின தபசுகளைப் பற்றி பொறாமையாகப் பேசுவார்கள். அவர்கள் தாங்களும் அவ்வாறு தபசு செய்ய முடியும் என்று நம்புவார்கள். நாம் வேதசாட்சிகளின் சரித்திரத்தைப் படிக்கும்போது, நாமும் அவர்களைப் போல நம் திவ்ய இரட்சகருக்காக துன்புறுவதற்கு தயாராக இருப்பதாக கூறுவோம்.

ஏனெனில் இவ்வுலக நிகழ்வுகள் நொடிப்பொழுதில் மறையக்கூடியவை என்றும், அப்பொழுது நாம் பட்டனுபவிக்கும் வாதைகள் குறுகிய காலத்திற்கே என்றும், ஆனால் அதற்கு நமக்குக் கிடைக்கப்போகும் பரிசோ, நித்திய மோட்சம் என்றும் கூறுவோம். ஆனால், நாம் யார் என்றும் அல்லது நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம் என்றும் நமக்கு படிப்பிக்கவே சர்வேசுரன் திருவுளம் கொள்கிறார். பசாசு, நமக்கு சற்று அருகில் வருவதற்கு ஆண்டவர் அனுமதிக்கிறார். இந்தக் கிறிஸ்துவனைப் பார். சற்று நேரத்திற்கு முன்பாக இவன், வெறும் காட்டில் கிடைக்கும் கிழங்குகளையும் மூலிகைகளையும் உண்டு தமது சரீரத்தை மூர்க்கமாக வதைத்துத் தபசு செய்த தபோதனர்களைப் பற்றி பொறாமை கொண்டான். ஆனால், அந்தோ! ஒரு சிறு தலைவலியோ, ஒரு சிறு ஊசி குத்தினாலோ அவன் சரீரத்தில் எவ்வளவு பெரியவனோ அவ்வளவுக்கு அந்த வலி பெரியதாக அவனுக்குத் தோன்றி தனக்காக, அவனை மிகவும் வருந்தச் செய்கிறது. அதனால் அவன் மனமுடைந்தவனாகிறான்.வலி தாங்கமுடியாமல் அழுகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை, அவன் விலங்கிடப்பட்ட எல்லா வேதசாட்சிளைப்போல அநேக தபசுகளை செய்ய விரும்பியிருப்பான். ஆனால், அற்ப விஷயமும் அவனை நிலைகுலைய வைக்கும். அவனை நம்பிக்கை இழக்கச் செய்யும். இதோ இன்னொருவனைப் பார். இவன் தன் ஜிவியத்தை முழுவதும் சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்க விருப்பமுள்ளவனைப் போல் தோன்றுவான். ஆனால் அற்ப காரியத்தையும் அவனால் தாங்க முடியாது. யாராவது அவனுக்கு எதிராக ஒன்றைப் புறணியாக பேசினாலோ, அல்லது, தன்னை சரியாக வரவேற்காவிட்டாலோ, அல்லது மரியாதை இல்லாமல் நடத்தினாலோ, சிறு அநீத செயல் தனக்கு யாராவது புரிந்தாலோ, தான்செய்த காரியத்திற்கு யாராவது நன்றிகெட்டதனமாக நடந்து கொண்டாலோ, உடனே இவனுடைய இருதயத்திற்குள் பழிவாங்கும் எண்ணமும் வெறுப்பும் அவர்கள் மேல் தோன்றும். எவ்வளவுக்கு அவன் அவர்களை வெறுப்பானென்றால், அவர்களை இனி ஒருபோதும் பார்க்க மாட்டேனென்ற மனநிலையில் இருப்பான். அல்லது அவன் வெளியரங்கமாகவே அவர்களை இழிவாக நடத்துவான். 

எவ்வளவு நாட்கள் இது பற்றிய சிந்தனையில் அவனுக்கு தூக்கம் வராமலிருந்தது. அந்தோ! என் பிரிய சகோதரர்களே! நாம் ஒன்றுமில்லாத வறிய மனிதர்கள். சோதனையின் மட்டில் நாம் எடுத்த தீர்மானங்களைப் பற்றி மிகவும் குறைவாகவே மதிப்பிட்டு அவற்றின் மட்டில் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். சர்வேசுரனின் தயாளத்தையும் தேவவரப்ரசாத உதவியையுமே, நாம் எப்பொழுதும் நமது மரண நேரம் வரைக்கும் நம்பியிருக்க வேண்டும். †


Lentern time Spiritual sermon of St. John Marie Vianney

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக