Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 13 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - திரிகால ஜெபம் (The Angelus)

 திரிகால ஜெபம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

இந்த  ஜெபம் காலை. நடுப்பகல், மாலை இம்மூன்று  வேளைகளிலும் சொல்லப் படுவதால் திரிகால ஜெபம் என்றழைக்கப்படுகிறது. நமதாண்டவர் மனித அவதாரமான சம்பவத்தை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. இந்தப் பக்தி முயற்சிக்கு ஆரம்பம் யாதொன்றும் திட்டமாய் சொல்ல முடியாது. ஆயினும் சில குறிப்புகளை உத்தேசமாய் எடுத்துரைக்கலாம். முன்னாட்களில் ஜனங்கள் எல்லோரும் விளக்கை அனைத்துவிட்டு நித்திரைக்குப் போகும்படி மணிக் கணக்கு சில நேரங்களில் ஏற்பட்டிருத்தது. அது எவ்வாறெனில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டணக்கிலுள்ள பெரிய மணி அடிக்கப்படும் அந்த மணிச் சத்தம் கேட்ட பிறகு, எந்த வீட்டிலும் வெளிச்சம் இருக்கக் கூடாது. ஒருவரும் விழித்து இருக்கக்கூடாது என்ற சட்டம் ஏற்பட்டிருந்தது. நாளடைவில் இந்த மணியே கிறிஸ்தவ தேசங்களில் இராச் செபத்துக்கு ஜனங்களை அழைக்கும் அடையாளமாயிற்று. 

காலையில் மணி அடித்தவுடன் சமாதானத்துக்காக மூன்று பர. மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லும்படியாக முதன் முதல் 1318-ம் ஆண்டில் இத்தாலியா தேசத்தைச் சேர்ந்த பார்மாவில் உண்டான கட்டளையே, அதிகாலை மணி அடித்து ஜெபம் சொல்வதற்கு ஆரம்பம் என்று கூற நியாயமுண்டு, மத்தியான வேளையில் மணி அடித்தது. ஆரம்பத்தில் வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் நமதாண்டவருடைய பாடுகளின்பேரில் தியானிக்க வேண்டுமென்று இது ஜனங்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டு வந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மற்ற நாட்களிலும் மத்தியான மணி அடித்துக் காலை, மாலை சொல்கிற ஜெபங்களையே சொல்லும்படி, 1456-ம் ஆண்டின் 3-வது கலிஸ்துஸ் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டார்.

துவக்கத்தில், அருள் நிறை மந்திரத்தின் முதற்பாகத்தை மும்முறை ஜெபிப்பதே திரிகால ஜெபமாயிருந்தது. திரு ஸ்தல மீட்புக்காக இது கட்டளையிடப்பட்டது. நாளடைவில்தான் இப்போது இருக்கிற பிரகாரம், மூன்று வசனங்களும், மூன்று அருள் நிறை மந்திரமும், மன்றாட்டும் சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டானது. ஒவ்வொரு நாளும் மும்முறை நமதாண்டவரின் மனித அவதாரத்தை ஞாபகப்படுத்தி நமது சீவியமும் தஞ்சமும் மதுரமுமாகிய தேவதாயின் சலுகையைத் நேடுவதற்கு நம்மை ஏவித் தூண்டுகிற இந்த ஜெபம் வெகு பிரயோசனமானதென்று சொல்லத் தேவையில்லை.

பாஸ்கு காலத்தில் அதாவது உயிர்த்த சனிக்கிழமை மாலையிலிருந்து அர்ச் தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் “ஆண்டவருடைய சம்மனசானது" என்னும் செபத்துக்குப் பதிலாக, "பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூரும்" என்னும் ஜெபத்தைச் சொல்லிவருகிறோம். 596-ம் ஆண்டில். அர்ச். கிரகோரியார் பாப்புவாயிருந்த பொழுது உரோமை நகரில் உண்டான கொள்ளைநோய் அகன்று போகும்படியாக அர்ச். பாப்பானவரும் விசுவாசிகளும் ஜெபித்துக்கொண்டு சுற்றுப்பிரகாரமாய் வருகையில், வானத்திலிருந்து சம்மனசுக்கள் இந்த வசனங்களைப் பாடினார்கள் என்றும், அந்த கணமே கொள்ளை நோய் விலகிப் போயிற்றென்றும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். ஆணால். இந்த ஜெபம் மத்திய நூற்றாண்டு காலத்தில் உண்டானதென்று மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடும்.

பலன்கள்: 


திரிகால ஜெபம் சொல்கிற ஒவ்வொரு தடவைக்கும்  
நூறு நாள் பலனும், அநுதினமும் மும்முறை சொல்லி வருகிறவர்களுக்கு மாதக்கடைசியில் பரிபூரண பலனும் 1724-ம் ஆண்டிலேயே, 13 ம் ஆசிர்வாதப்பர் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டருளினார். இந்தப் பலன்களை அடைவதற்கு நியமித்திருந்த நிபந்தனைகளை 13 ம் சிங்கராயர் 1884 in ஆண்டில் மாற்றி இலகுவாக்கினார். இதனிமித்தம் இப்பலன் களை அடைவதற்கு அவசியம் முழந்தாளிலிருந்து மணிச் சத்தம் கேட்கிற வேளையில் திரிகால ஜெபம் சொல்லவேண்டுமென்று நிபந்தனை யில்லை. சனிக்கிழமை சாயந்திரமும் ஞாயிற்றுக் கிழமையும். நீங்கலாக மற்ற நாட்களில் முழந்தாளிலிருந்து சோல்வதே ஒழுங்கு. ஆயினும் பலனை அடைவதற்கு இது அவசியமில்லை. ஆகையால் பகிரங்கமான பொது ஸ்தலங்களில் இருக்க நேரிடும் காலங்களிலும் இத்த ஜெபத்தைச் சொல்வது எளிதாயிருக்கிறது. மேலும், மணிச்சத்தம் கேட்கையில் ஜெபித் தால்தான் பலன் உண்டு என்கிற நிபந்தனையும் எடுபட்டுப் போனதினால், மணிச்சத்தம் கேட்கக்கூடாத இடங்களில் இருப்பவர்களும் காலை, மாலை, மத்தியானம் இந்த ஜெபத்தைச் சொல்லி அதற்குக் குறிக்கப்பட்ட பலன்களை யெல்லாம். அடைந்துகொள்ளலாம். ஆண்டவருடைய சம்மனசானது என்கிற ஜெபம் தெரியாதவர்கள் 5 தடவை அருள் நிறை மந்திரம் சொன்னால், அந்தப் பலன்களை அடையக்கூடும்
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக