Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

download Catholic Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
download Catholic Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஏப்ரல், 2021

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோற்கு i Tamil Catholic Song Lyrics



பல்லவி


 தாயே  உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு 

தஞ்சமும் ஆதரவும் நீரே


சரணங்கள் 

1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்

திருத்தயை கேட்க நீரோ அறிந்து 

தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை 

ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து 


உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள் 

உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார் 

கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக் 

கறையினால் துறை சேரார் இன்னும் தாயே 


தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன் 

தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ! 

தூய கருணை நிறை ஆயே இவர்

துயரெல்லாம் நீக்க வரும் தாயே


உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்

உழன்று வருந்து வதினாலும் 

நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச

நாடுதந் தாதரிப்பீர் ஆயே


 5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக

பரிதவிப் போர்க் குதவி நீரே 

சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம் 

சென்றோர்க்கு இராக்கினியும் நீரே




வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஞானம் நிறை கன்னிகையே - Tamil Catholic songs lyrics

 


ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே

 ஞானம் நிறைக் கன்னிகையே


அனுபல்லவி 


மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2 

பலி பீடமுமாய் அலங்கரித்தாரே-ஞானம் 


பாவ நிழலே அணுகா 

பாதுகாத்தார் உம்மையே பரமன் 

தாயுதரம் நீர் தரித்திடவே-2

தனதோர் அமல தலமெனக் கொண்டார்-ஞானம் 

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே 

மக்கள் இஸ்ராயேல் தாரகையே-2

வானோர் துதிக்கும் இறைவியே வாழி-ஞானம் 


வாக்குத் தத்த பெட்டகமே

வானகம் சேர்க்கும் வாசலே

மகிழ் ஒளி நல்கும் விடி வெள்ளியே-2 

மெய் மனம் நொந்தோர்க் காறுதலே-ஞானம்


ஸ்பீரித்து சாந்துவே வாரும் -Tamil Catholic Song Lyrics



ஸ்பீரித்து சாந்துவே வாரும் - 2 

அன்பான தேவனே

அடியோர் உள்ளத்தே இறங்கும் 



உமது ஞானம் இல்லாதாகில் 

தவறிப்போவோம் பாருமே

 எமதஞ்ஞானத்தை நீக்கவே 

எழுந்தருளும் மெய் ஜோதியே 

வாரும் ஞான ஜோதியே (2) 


நரக மோடுலகு சேர்ந்தே 

நம்மை ஐயோ கெடுக்குதே 

விரைவாய் வாரும் தேவனே 

நீர் வேதனையார் எம்மை மீட்கவே 

வாரும் எம்மை மீட்கவே (2) 


திருப்ரசாதம் தரவாரும் 

தீங்கில்லாமல் நாமிருப்போம் 

தேவனே நீர் காவல் செய்வோர்க்கு 

ஆனந்தமே தூயானந்தமே

வாரும் காவல் தாருமே (2)


ஞாயிறு, 10 மார்ச், 2019

மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்




மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்

அர்ச். தோமினிக் சாவியோ தன் கற்பை பழுதின்றி காப்பற்ற பெரு முயற்சி செய்வார்.  ஒரு சமயம் ஒரு வினோத காட்சிகள் நடக்கும் கடைத் தெரு வழியாக அவர் தன் தோழர்களோடு செல்ல நேரிட்டது.  மற்றவர்கள் அக்காட்சிகளை கண்டு ரசித்துக் கொண்டே போனார்கள். ஆனால் சாவியோ தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
இதை கண்ட நண்பர்கள் இக்காட்சிகளை எல்லாம் இப்பொழுது பார்த்துச் சந்தோ´க்கவிட்டால் உன் கண்களை எதற்காக வைத்து கொண்டிருக்கிறாய் என்று ஏளனமாக கேட்டார்கள்.  அதற்கு அவர் நான் மோட்சம் சென்றவுடன் மாதாவின் திருமுகத்தை பார்க்கப் போகும் இக்கண்களைக் கொண்டு இந்தக் காட்சிகளை காண விரும்பவில்லை என்று பதிலளித்தார்.



Our Lady Quotes (Tamil) மரியாயின் மகிமை



மரியாயின் மகிமை

“இவளிடமாய் கிறிஸ்தெனப்படுகிற சேசுநாதர் பிறந்தார்” (மத். 1: 16) என்று சொல்வதே போதுமானதே ! இதைவிட அதிகப்படியாக  இக்கன்னிகையின் மகிமைகளைப்  பற்றி சுவிசேஷத்தில் ஏன்    தேடுகிறீர்கள்?  மாதா கடவுளிள் தாய்.  என்று அத்தாட்சி கொடுப்பதே போதுமே! இந்த அத்தாட்சியிலே மாதாவின் சகல சலுகைகளும் விவரமாய் கூறிவிட்ட சுவிசேஷகர்கள் அவைகளைப்பற்றி தனித்தனியே கூறத்தேவையில்லை.

- அர்ச். வில்லனோவா தோமையார்.