Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தேவ தோத்திர பாடல்கள்

           


மனமே வா தொழுவோம் கண்ணிகள்

(தே.தோ.கீ.)



1. மனமே வா தொழுவோம் பரமானந்தமாம் கடவுள் 

மலர்நேர் பொற்பதம் போற்ற எந்நாளும் நீ 

மனமே வா தொழுவோம்.


2. நினைவே நீ நினையாய் நம்மை நேசிக்கும ஆண்டவரை 

நினைவாலே அவர் நேசப் பெருக்கத்தை 

நினைவே நீ நினையாய்.


3. நெஞ்சே நீ ஸ்துதிப்பாய் ஒளிர் நித்தியன் பாதமதை 

நெஞ்சால் என்றவர் திவ்ய புகழ் நிதம் 

நெஞ்சே நீ ஸ்துதிப்பாய்.


4. மலர்காள் நீர் ஸ்துதிமின் பல மாங்கனி பூங்கனிகாள் 

மலர்காள் தேன் பொழிந்தே ஸ்துதிப்பீர்களே.

 மலர்காள் நீர் ஸ்துதிமின்.


5. விண்மீன் விண்ணொளிகாள் தொனிவோடிசை பாடளிகாள் 

விண் ஆள் ஆண்டவர் மாட்சியைப்பாடுவீர் 

விண்மீன் விண்ணொளிகாள்.