Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஜூலை 16-ம் தேதி பரி. கார்மேல் உத்தரிய மாதாவின் ஞாபகம்

 ஜூலை 16-ம் தேதி 

பரி. கார்மேல் உத்தரிய மாதாவின் ஞாபகம்



பிரவேசம் 

கன்னிகையான முத்திப்பேறுபெற்ற மரியாயிக்கு வணக்கமாக இத்திருநாளைக் கொண்டாடுகிற எல்லோரும் ஆண்டவ ரிடத்தில் அகமகிழ்வோமாக; அவளுடைய திருநாளில் சம்மனசுக்கள் ஆனந்தித்து சர்வேசுரனுடைய திருக்குமாரனைப் புகழ்கின்றார்கள்.* (சங். 44:2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது; என்னுடைய செய்கைகளை மன்னனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.-பிதாவுக்கும்......

சபை செபம்:

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உமது திவ்விய மாதாவாகிய மகா முத்திப்பேறுபெற்ற என்றுங் கன்னிகையான மரியம்மாளின் சபைக்குக் காரமேல் என்ற பரிசுத்த பட்டத்தைச் சூட்டி, அதனை அலங்கரித்தருளினீரே ; அவளுடைய ஞாபகத்தை இன்று பக்தி ஆசாரத்துடன் சிறப்பித்துக் கொண்டாடுகிற நாங்கள் அவளுடைய சகாயங்களால் காப்பாற்றப்பட்டு, நித்திய பேரின்ப பாக்கியத்திற்கு வந்துசேர அருகராகும்படி தயவாய்த் திருவருள் புரிந்தருளும். - அவரே தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்.

ஞானாகமத்திலிருந்து வாசகம்:-

சர்வ. 24: 23 31

நான் முந்திரிகைச் செடியைப்போல சுகந்தமான வாசனயின் இனிமையை வீசி னேன்; என்னுடைய பூக்கள் மாண்பினுடையவும், யோக்கியத்தையினுடையவும் கனிகளாம். நான் அரிய நேசத்தினுடையவும், பயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த நம்பிக்கையினுடையவும் தாயாயிருக்கிறேன். என்னிடமே எல்லா நன்னெறியினுடையவும், உணமையினுடையவும் வரம் உண்டு; என்னிடமே சீவியத்தினுடையவும், புண்ணியத்தினுடையவும் சகல நம்பிக்கை யெல்லாம். என்னை ஆசிக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து சேருங்கள்; என் கனிகளினால் நிரப்பப்படுங்கள். என் ஆவியானது தேனைவிட இனிப்பாயிருக்கின்றது; என் சுதந்தரம் தேனையும்,  அதன் இனிய சுவையையும்விட மேலானது. எக்காலத்துக்கும் தலைமுறைகளுக்கும் என் ஞாபகம் நிலைத்திருக்கும். என்னைப் புசிப்பவர்கள் இன்னமும் பசிகொள்ளுவார்கள்; என்னை அருந்துகிறவர்கள் இன்னமும் தாகங்கொள்ளுவார்கள். என் மொழி கேட்கிறவன் மோசம் போகமாட்டான்; என்னில் தங்கள் கிருத்தியங்களைச் செய்கிறவர்கள் பாவஞ் செய்யமாட்டார்கள். என்னை மகிமைப் படுத்துகிறவர்கள் நித்திய சீவியத்தை அடைவார்கள்.

படிக்கீதம்

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகருடைய தாயாராக ஏற்பட்டீரே; நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள்; வணக்கத்துக்குரியவள். - தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்தும் கொள்ளமுடியாதவர் உமது திரு உதரத்தில் மனிதனாய் அடங்கலானாரே!

அல்லேலுய்யா, அல்லேலுய்யா.-  தேவதாயே. நாங்கள் இழந்த சீவியம் எங்களுக்கு உம்மாலேதான் கொடுக்கப் பட்டது; வானத்திலிருந்து வந்தவரைச் சிசுவாகத் தரித்து, உலகிற்கு இரட்சகராகப் பெற்றெடுத்தீர் அல்லேலுய்யா.

 சுவிசேஷ வாக்கியம்

லூக். 11:27-28.

 ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல்

கன்னித்தாயே, எங்களைத் தேவ சந்நிதியில் நினைவுகூர்ந்து, எங்களுக்காக  நன்மையானவைகளைப் பேசி, எங்கள்மேலுள்ள தேவகோபம் தணியும்படி செய்தருளும்.

அமைதி மன்றாட்டு 

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக்கைப்  பொருள்களை அர்ச்சித்தருளும்; தேவதாயாகிய முத்திப்பேறுபெற்ற மரியம்மாளின் மகா பலனுள்ள வேண்டுதலைப் பார்த்து, அவை எங்களுக்கு இரட்சணியத்துக்குரியவைகளாகும்படி கிருபைசெய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.-தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்..... அதே சேசுக்கிறீஸ்துவின் பெயரால்

உட்கொள்ளுதல்

பூலோகத்தில் அதியோக்கியமான அரசியே, என்றுங் கன்னிகையான மரியாயே, எங்களுடைய சமாதானத்திற்காகவும் மன்றாடும்; சகலத்திற்கும் இரட்சகரும் ஆண்டவருமான கிறீஸ்துவைப் பெற்றவளே

உட்கொண்டபின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய மகிமை நிறைந்த தாயாகிய என்றுங் கன்னிகையான மரியம்மாளின் பக்திக்குரிய வேண்டுதல் எங்களுக்கு ஆதரவாயிருக்கக்கடவது; அவள் தம்முடைய இடைவிடாத சகாயங்களால் நிரப்பப்பட்டவர்களைச் சகல இடையூறுகளினின்று விடுவித்து, தமது அன்பினால் அவர்களை ஒன்றிக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.- அதே பிதாவாகிய சர்வேசுரனோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில்...!

ஜூலை -15 அர்ச். ஹென்றி அரசர், துதியர்

 ஜூலை -15

அர்ச். ஹென்றி

அரசர், துதியர்



பிரவேச கீதம்: சங். 36: 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாத்தை பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப்பிராமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 1). பொல்லாதவர்களை குறித்து அருவருப்படையாதே. அக்கிரமம் செய்கிறவர்களின்பேரில் கொள்ளாதே. - பிதாவுக்கும் . . . 

சபைச் செபம்

சர்வேசுரா, தேவரீர் உம்முடைய துதியரான முத்திப் பேறுபெற்ற (அர்ச். ஹென்றி. ) வருஷாந்ததிர திருநாளினால் மகிழச் செய்கீறிரே. அவருடைய பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற நாங்கள் அவருடைய முன்மாதிரிகளை பின்பற்றி நடக்கத் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு ...

ஞானாகமத்திலிருந்து வாசகம்

சர்வ. 31. 8-11

 குற்றமில்லாது காணப்பட்ட ஆஸ்திக்காரன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலுந் திரவியத்திலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான்.  அவன் யார்? அவனைப் புகழுவோம்; ஏனெனில், தன் சீவியகாலத் தில் அதிசயங்களைச் செய்தான்.  அதில் பட்சிக்கப்பட்டு உத்தமனானவன் எவனோ அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும்; மீறி நடந்திருக்கக்கூடும்; ஆனால் மீறினவனல்ல, தின்மை செய்திருக்கக் கூடும், ஆனால் செய்யவில்லை. ஆனதால் அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலையாக்கப்பட்டன; பரிசுத்தருடைய சபையாவும் அவன் தர்மங்களைப் பிரசித்தப்படுத்தும்.

படிக்கீதம்: சங். 91: 13-14

நீதிமான் பனையைப்போல் வளம்பெற்று லீபானிலுள்ள சேதுரு மரத்தைப்போல் ஆண்டவருடைய ஆலயத்திலே செழித்தோங்குவான். - (சங். 3.) காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிக்கும்படியாக.

அல்லேலுய்யா, அல்லேலுய்யா. - (இயாக. 1: 12) துன்பத்தை சகிக்கிறவன் பாக்கியவான். ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர் சீவியத்தின் முடியைப் பெற்றுக் கொள்வான். அல்லேலுய்யா.

சுவிசேஷம்

அர்ச். லூக்கா எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி:

லூக். 12: 35-40

அக்காலத்தில்: சேசுநாதர் தம் முடைய சீஷர்களுக்குத் திருவுளம்பற்றின தாவது: உங்கள் இடைகள் வரிந்து கட்டப்பட்டிருக்க, எரிகிற விளக்குகள் உங்கள் கரங்களில் இருக்கக்கடவன. தங்கள் எசமான் கலியாணத்திலிருந்து எப்பொழுது திரும்புவானோ என்று காத்துக்கொண்டு, அவன் வந்து கதவைத் தட்டினவுடனே திறக்கும் ஊழியரை ஒத்தவர்களாக இருங்கள். எசமான் வரும்பொழுது விழித்திருக்கக் காணும் அவ்வூழியர்களே பாக்கியவான்கள். அவன் தன் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியில் அமர்த்தி, அருகில் வந்து அவர்களுக்குப் பரிமாறுவானென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்கிறேன். அவன் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, மூன்றாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, அவ்வண்ணமே அவர்கள் விழித்திருக்கக் காண்பானாகில், அவ்வூழியர்கள் பாக்கியவான்களாமே. மேலும், குடும்பத் தலைவன் திருடன் வரும்மணிநேரத்தை அறிந்திருப்பானாகில், சந்தேகமில்லாமல் விழித்திருந்து தன் வீட்டைக் கன்னமிட விடமாட்டான் என்பதை அறியக்கடவீர்கள். அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், என்றார்.

ஒப்புக்கொடுத்தல்: சங்.88:25

நமது உண்மையும், நமது இரக்கமும் அவரோடிருக்கும்; நமது நாமத்தால் அவருடைய வல்லமை உயரும். [பா.கா.: அல்லேலுய்யா.)

காணிக்கைச் செபங்கள் 

எல்லாம்வல்ல சர்வேசுரா, உமது அர்ச்சிஷ்டவருடைய மகிமைக்காக நாங்கள் தாழ்மையுடன் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாகி. எங்கள் உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு ...

அமைதி மன்றட்டு 

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்களின் ஞாபகமாகத் தோத் திரப் பலிகளைத் தேவரீருக்குப் பலியிடுகிறோம்: இவைகளினால் இப்பொழுதும் எப்பொழுதும் நேரக் கூடிய தீமைகளினின்று விடுதலையாவோம் என நம்பியிருக் கிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்

உட்கொள்ளுதல்: மத் 24: 46-47

எசமான் வரும்போது விழித்திருக்கிறவனாய்க் காணப்படும் ஊழியன் பாக்கியவான்; தன் செல்வம் அனைத் துக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். [பா.கா.: அல்லேலுய்யா.)

உட்கொண்டபின்

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா, பரலோக போசனத்தினாலும்  பானத்தினாலும் உண்பிக்கப்பட்ட நாங்கள் யாருடைய ஞாபகமாக அவற்றைப் பெற்றுக் கொண்டோமோ, அவருடைய செபங்களினால் பாதுகாக்கப்படத் தேவரீரை இரந்து மன்றாடுகிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்...


சனி, 15 ஜூலை, 2023

மேற்றிராணியரல்லாத துதியர் ஒருவர் பெயரால் - பொது (Os Justi)

மேற்றிராணியரல்லாத துதியர் ஒருவர் பெயரால் - பொது

Os Justi

பிரவேசம்: சங். 36: 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும். அவருடைய நாவு நியாயத்தைப் பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப்பிரமாணம் அவருடைய இருதயத் திலிருக்கிறது. (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 1) பொல்லா தவர்களைக் குறித்து அருவருப்படையாதே: அக்கிரமம் செய்கிறவர்கள் பேரில் வெறுப்பு கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உம்முடைய துதியரான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே. அவருடைய பரலோக பிறப்புநாளைக் கொண்டாடுகிற நாங்கள் அவருடைய முன் மாதிகையைப் பின்பற்றி நடக்கத் தயவாய்க் கிருபை செய்தருளும். தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

ஞானகமத்திலிருந்து வாசகம்  (சர்வப். 31. 8-11)

குற்றமில்லாது காணப்பட்ட ஆஸ்திக்காரன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலுந் திரவியத்திலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான். அவன் யார்? அவனைப் புகழுவோம்; ஏனெனில், தன் சீவிய காலத்தில் அதிசயங்களைச் செய்தான். அதில் பட்சிக்கப்பட்டு உத்தம னானவன் எவனோ அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும்; மீறி நடந் திருக்கக்கூடும்; ஆனால் மீறினவனல்ல, தின்மை செய்திருக்கக் கூடும், ஆனால் செய்யவில்லை. ஆனதால் அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலையாக்கப் பட்டன் பரிசுத்தருடைய சபை யாவும் அவன் தர்மங்களைப் பிரசித்தப்படுத்தும்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான் பனையைப்போல வளம்பெற்று, லிபானிலுள்ள சேதுரு மரத்தைப் போல ஆண்டவருடைய ஆலயத்திலே செழித்தோங்குவான். (சங். 3) காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிக்கும்படியாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (இயாக. 1. 12) துன்பத்தைச் சகிக்கிறவன் பாக்கியவான்: ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர், சீவியத்தின் முடியை பெற்றுக் கொள்வான், அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும்;:. செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைநிற்கின்றது.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (இயாக. 1: 12) துன்பத்தைச் சகிக்கிறவன் பாக்கியவான். ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர், சீவியத்தின் மூடியை பெற்றுக் கொள்வான். - (சர்வ. 45: 9) ஆண்டவர் அவரை நேசித்து, அவரை அலங்கரித்தார். மகிமையின் ஆடையை அவருக்கு உடுத்தினார், அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 35-40)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீடர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: உங்கள் இடைகள் வரிந்து கட்டப்படவும், எரிகிற தீபங்கள் உங்கள் கைகளில் இருக்கவுங்கடவது.  தங்கள் எஜமான் வந்து தட்டும்போது, உடனே அவருக் குத் திறக்கும்படியாக அவர் கலியாணத்தினின்று எப்பொழுது திரும்புவாரென்று காத்திருக்கிற மனிதருக்கு நீங்கள் ஒப்பாயிருக்கக்கடவீர்கள்.  எஜமான் வரும் போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியரே பாக்கியவான்கள்;  அவர் தமது இடையை வரிந்து கட்டி, அவர்களைப் பந்தியமரச்செய்து, அவர்களில் ஒவ்வொருவரிடத்திலும் போய் அவர்களுக்குப் பரிமாறுவாரென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலும், மூன்றாஞ் சாமத்தில் வந்தாலும், அவ்வண்ணமே காண்பாராகில், அவ்வூழியர் பாக்கியவான்கள். அல்லாமலும், திருடன் இன்ன வேளையில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், சந்தேகமற விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிந்து கொள்ளுங்கள். அப்படியே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் நினையாத வேளையில் மனுமகன் வருவார் என்று திருவுளம்பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

நமது உண்மையும், நமது இரக்கமும் அவரோடிருக்கும். நமது நாமத்தால் அவருடைய வல்லமை உயரும். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்களின் ஞாபகமாகத் தோத்திரப் பலிகளைத் தேவரீருக்குப் பலியிடுகிறோம். இவைகளினால் இப்பொழுதும் எப்பொழுதும் நேரக்கூடிய தீமைகளிலிருந்து விடுதலையாவோம் என நம்பியிருக்கிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 24. 46-47)

எசமான் வரும்போது விழித்திருக்கிறவனாய்க் காணப்படும் ஊழியன் பாக்கியவான். தன் செல்வம் அனைத்துக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா, பரலோக போசனத்தினாலும் பானத்தி னாலும் உண்பிக்கப்பட்ட நாங்கள் யாருடைய ஞாபகமாக அவற்றை பெற்றுக் கொண்டோமோ, அவருடைய செபங்களினால் பாதுகாக்கப்படத் தேவரீரை இரந்து மன்றாடுகிறோம். தேவரீரோடு . . .


வெள்ளி, 14 ஜூலை, 2023

ஜூலை - 14 அர்ச். போனவெந்தூர் மேற்., துதி., வேதபா.

  ஜூலை - 14

அர்ச். போனவெந்தூர்

மேற்., துதி., வேதபா.



பிரவேச கீதம்: சர்வப். 15:5.

சபை நடுவில் பேச ஆண்டவர் அவருக்கு நாவன்மை அளித்தார்: விவேகமும், அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவருக்குத் தந்தருளினார்: மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 91:2) ஆண்ட வரைப் புகழ்வது நலமே; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவதும் நலமே. V. பிதாவுக்கும்... சபை நடுவில். 

சபை மன்றாட்டு :

சர்வேசுரா, உம்முடைய மக்களுக்கு முத்திப்பேறுபெற்ற போனவெந்தூரா நாதரை நித்திய ஈடேற்றத்தின் போதகராக தந்தருளினீரே. சீவிய வாழ்வின் போதகராக எங்களால் இவ்வுலகில் போற்றப்படுகிற அவரை மோட்சத்திலே மனுபேசுகிறவராக அடைய நாங்கள் அருகராகும்படித் திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். உம்மோடு . . . 

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(II தீமோத். 4:1-8)

மிகவும் பிரியமானவரே: சர்வேசுரன் முன்பாகவும், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப் போகிறவராகிய யேசுகிறிஸ்துநாதர் முன்பாகவும், அவருடைய ஆகமனத்தையும் அரசாட்சியையுங் குறித்து உமக்குச் சாட்சியாகக் கற்பிக்கிறதாவது: நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம் பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக எவ்விதப் பொறுமையோடும் உபதேசத்தோடும் கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. ஏனெனில் மனிதர்கள் குணமான உபதேசத்தைச் சகிக்க மாட்டாமல், காதரிப்புள்ளவர்களாய், சுய இச்சைகளுக்கு இசைவான போதகர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, சத்தியத்திற்கு செவிகொடாமல் விலகி, கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிற காலங்கள் வரும். நீரோ விழிப்பாயிருந்து,  எல்லா விதத்திலும் பிரயாசைப்பட்டு, சுவிசேஷகனுக்குரிய தொழிலைச் செய்து, உம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவீராக; மன அமைதியுள்ளவராயிரும். நானோ இதோ பலியாகப் போகிறேன் என் தேகக்கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கிறது. நல்ல யுத்தம் செய்தேன், என் அயனத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.

படிக்கீதம் சங்.36:30, 31, 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்: அவரது நாவும் நியாயத்தை நவிலும். V. கடவுள் கட்டளை அவர் உள்ளத்தில் இருக்கின்றது: அவரது நடை தடுமாறாது.

அல்லேலூயா, அல்லேலூயா .(சர்ப் 45:9) ஆண்டவர் அ மீது அன்புகொண்டு அவரை அணி செய்தார்; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.

மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (மத் 5:1319)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது.  நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.  வேதப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை என்கிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானமும் பூமியும் ஒழிந்து போகுமுன் வேதப்பிரமாணத்திலுள்ள சகலமும் நிறைவேறுமொழிய அதில் ஓர் சிறு அட்சரமாவது ஓர் புள்ளியாவது நிறைவேறாமற் போவதில்லை. ஆகையால் மிகவும் சிறிதாகிய இந்தக் கற்பனைகளில் ஒன்றை மீறி, அவ்வண்ணமே மனிதருக்குப் போதிப்பவன் மோட்ச இராச்சியத்தில் மிகவும் சிறியவனாக எண்ணப்படுவான். அவைகளை அனுசரித்துப் போதிப்பவனோ மோட்ச இராச்சியத்தில் பெரியவனாக எண்ணப்படுவான். 

ஒப்புக்கொடுத்தல்: சங்.91: 13

நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான். லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான். (T.P. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். போனவெந்தூரா நாதரின் வருஷாந்திர திருநாள் எங்களை உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாகும்படி தேவரீரை மன்றாடுகிறோம். இப்பாவ பரிகாரப் பலியின் பக்தி நிறைந்த ஒப்புகொடுத்தலினால் அது அவரது பரலோக மகிமையை அதிகரிக்கவும், எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதத்தின் கொடைகளை அடைந்து கொடுக்கவுங்கடவது. தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில். . . 

உட்கொள்ளுதல் லூக் 12:42, 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T.P. அல்லேலூயா)

உட்கொண்ட பின் :

ஆண்டவரே, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். போனவெந்தூரா நாதரின் வருஷாந்திர திருநாள் எங்களை உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாகும்படி தேவரீரை மன்றாடுகிறோம். இப்பாவ பரிகாரப் பலியின் பக்தி நிறைந்த ஒப்புகொடுத்தலினால் அது அவரது பரலோக மகிமையை அதிகரிக்கவும், எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதத்தின் கொடைகளை அடைந்து கொடுக்கவுங்கடவது. தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில். . . 


வேதபாரகர் பெயரால் - பொது (In Medio)

 வேதபாரகர் பெயரால் - பொது 


(In Medio)


பிரவேச கீதம்: சர்வப். 15:5.

சபை நடுவில் பேச ஆண்டவர் அவருக்கு நாவன்மை அளித்தார்: விவேகமும், அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவருக்குத் தந்தருளினார்: மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 91:2) ஆண்ட வரைப் புகழ்வது நலமே; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவதும் நலமே. V. பிதாவுக்கும்... சபை நடுவில். 

சபை மன்றாட்டு :

செபிப்போமாக: சர்வேசுரா, உம் முடைய மக்களுக்குப் அர்ச்....ஐ நித் திய மீட்பின் தொண்டராகத் தந்தருளினீர். மண்ணுலகில் அவரை வாழ்க்கையின் போதகராகப் பெற்ற நாங்கள் நித்தியத்திலும் அவரை எங்களுக் காகப் பரிந்து பேசுவோராக அடையும் தகுதிபெறச் செய்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(II தீமோத். 4:1-8)

மிகவும் பிரியமானவரே: சர்வேசுரன் முன்பாகவும், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப் போகிறவராகிய யேசுகிறிஸ்துநாதர் முன்பாகவும், அவருடைய ஆகமனத்தையும் அரசாட்சியையுங் குறித்து உமக்குச் சாட்சியாகக் கற்பிக்கிறதாவது: நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம் பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக எவ்விதப் பொறுமையோடும் உபதேசத்தோடும் கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. ஏனெனில் மனிதர்கள் குணமான உபதேசத்தைச் சகிக்க மாட்டாமல், காதரிப்புள்ளவர்களாய், சுய இச்சைகளுக்கு இசைவான போதகர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, சத்தியத்திற்கு செவிகொடாமல் விலகி, கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிற காலங்கள் வரும். நீரோ விழிப்பாயிருந்து,  எல்லா விதத்திலும் பிரயாசைப்பட்டு, சுவிசேஷகனுக்குரிய தொழிலைச் செய்து, உம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவீராக; மன அமைதியுள்ளவராயிரும். நானோ இதோ பலியாகப் போகிறேன் என் தேகக்கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கிறது. நல்ல யுத்தம் செய்தேன், என் அயனத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.

படிக்கீதம் சங்.36:30, 31, 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்: அவரது நாவும் நியாயத்தை நவிலும். V. கடவுள் கட்டளை அவர் உள்ளத்தில் இருக்கின்றது: அவரது நடை தடுமாறாது.

அல்லேலூயா, அல்லேலூயா .(சர்ப் 45:9) ஆண்டவர் அ மீது அன்புகொண்டு அவரை அணி செய்தார்; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.

(முன் தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல் சங். 111 : 1.3, 

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவர் கட்டளைகளை பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமைபெற்றிருக்கும்: நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும் : அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சர்வப். 45:9) ஆண்டவர் அவர் மீது அன்புகொண்டு, அவரை அணி செய்தார் ; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார்.

அல்லேலூயா. V. (ஓசே. 14: 6) நீதிமான் லீலியைப்போல் தளிர்விடுவான். ஆண்டவர் திருமுன் என்றென்றும் செழித்திருப்பான். அல்லேலுயா.

மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (மத் 5:1319)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது.  நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.  வேதப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை என்கிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானமும் பூமியும் ஒழிந்து போகுமுன் வேதப்பிரமாணத்திலுள்ள சகலமும் நிறைவேறுமொழிய அதில் ஓர் சிறு அட்சரமாவது ஓர் புள்ளியாவது நிறைவேறாமற் போவதில்லை. ஆகையால் மிகவும் சிறிதாகிய இந்தக் கற்பனைகளில் ஒன்றை மீறி, அவ்வண்ணமே மனிதருக்குப் போதிப்பவன் மோட்ச இராச்சியத்தில் மிகவும் சிறியவனாக எண்ணப்படுவான். அவைகளை அனுசரித்துப் போதிப்பவனோ மோட்ச இராச்சியத்தில் பெரியவனாக எண்ணப்படுவான். 

ஒப்புக்கொடுத்தல்: சங்.91: 13

நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான். லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான். (T.P. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, உம்முடைய மறை ஆயரும் (துதியரும்) மறை வல்லுநருமான.... உடைய உருக்கமான மன்றாட்டு எங்களுக்குக் குறைபடாமலிருப்பதாக, அந்த மன்றாட்டு எங்கள் காணிக்கைகளை உமக்கு உகந்தன வாக்கி, உமது மன்னிப்பை எங்களுக்கு என்றும் பெற்றுத்தருவதாக. உம்மோடு...

உட்கொள்ளுதல் லூக் 12:42, 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T.P. அல்லேலூயா)

உட்கொண்ட பின் :

செபிப்போமாக: ஆண்டவரே,உம் பலிகள் எங்களுக்கு மீட்பு அளிக்கும் படி உம் மறை ஆயரும் (துதியரும்) புகழ்மிக்க மறை வல்லுநருமான அர்ச்... உம்மை அணுகி எங்களுக்காகப் பரிந்து பேச வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு 


(மற்றொரு வாசகம்)

ஞானாகமத்திலிருந்து வாசகம் (சர்வப். 39:6-14)

நீதிமான் தன்னை உண்டாக்கின கடவுள் மட்டில் விழித்திருப்பதற்குத் தன் இருதயத்தைக் கையளிப்பான்; உன்னத ஆண்டவருடைய சமூகத்தில் மன்றாடுவான். செபத்தில் தன் வாயைத் திறப்பான்; தன் குற்றங்களுக்காக மன்றாடுவான். ஏனெனில், மகத்தான ஆண்டவர் மனது வைப்பாரேயாகில் அறிவினால் அவனை நிரப்புவார். தமது ஞானத்தின் போதகங்களை மழையைப் போல வரவிடுவார்; அவனும் தன் செபத்தில் ஆண்டவரைத் தோத்தரிப் பான். அவர் அவனுடைய யோசனை யையும் மார்க்கத்தையும் நடத்துவார்; மறை பொருட்களை யோசித்துப் பார்ப் பான். தமது போதகத்தின் மார்க் கத்தை வெளியாக்குவார், ஆண்டவர் உடன்படிக்கையின் கட்டளையில் மகிமை கொள்ளுவான். அநேகர் அவ னுடைய ஞானத்தைப் புகழ்வார்கள்: சதாகாலத்திற்கும் அழிவடையமாட் டான். அவன் ஞாபகம் போய்விடாது; தலைமுறை தலைமுறைக்கும் அவன் பெயர் கொண்டாடப்படும். ஞானத்தைப் பிரசைகள் அவன் சொல்லிக் காட்டுவார்கள், பரிசுத்த சபையும் அவன் புகழ்ச்சியைக் கொண்டாடும்.

புதன், 12 ஜூலை, 2023

மடாதிபர் - பொது (Os Justi)

 மடாதிபர் - பொது 

(Os Jus

பிரவேச கீதம் : சங். 36 : 30.31 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்; அவரது நாவும் நியாயத்தை நவிலும்; கடவுள் கட்டளை அவர் உள் ளத்தில் இருக்கின்றது. (T. P. அல்லே லூயா, அல்லேலூயா). (சங். 36: 1) திங்கிழைப்போரைக் கண்டு மனம் பதறாதே; தீமை செய்வோரின் நிலை கண்டு பொறாமை கொள்ளாதே. V. பிதாவுக்கும்.... நீதிமானின்.

சபை மன்றாட்டு :

செபிப்போமாக: ஆண்டவரே, மடாதிபரான அர்ச். ......எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக ; எங்கள் பேறு பலன்களால் அடைய இயலாததை அவர் ஆதரவினால் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறோம். உம்மோடு....

ஞானாகமத்திலிருந்து வாசகம் 

(சர்வப். 45. 1 - 6 )

 சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் பிரியப்பட்டவர் மோயீசனென்பவர்; அவருடைய ஞாபகங் கொண்டாடப்பட்டது. பரிசுத்தருடைய மகிமையில் அவரைச் சமானமாக்கினார்; சத்துராதிகளுடைய பயத்தில் அவரை மகிமைப்படுத்தினார்; தமது வார்த்தைகளால் கொடிதான காரியங்களை அடக்கினார். அரசர் முன்பாக அவரை மகிமைப்படுத்தினார், தமது சனங்களுக்கு முன்பாக அவருக்குக் கற்பித்தார்; அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார். விசுவாசத்திலும், சாந்த குணத்திலும் அவரைப் பரிசுத்தராக்கினார்; சகல மனிதரிடத்தினின்று அவரை தெரிந்துகொண்டார்  அவருக்குச் செவிகொடுத்தார்; அவர் வேண்டுதலைக் கேட்டார்; அவரை மேகத்திற்குள் கூட்டிப் போனார். சனங்களுக்கு முன்பாக அவருக் குக் கட்டளைகளைக் கொடுத்தார்; சீவியத்தினுடையவும், நடத்தையினுடையவுஞ் சட்டத்தையுந் தந்து, தமது உடன்படிக்கையை யாக்கோபுக்கும், தமது தீர்மானங்களை இஸ்ராயேலுக்கும் போதிக்கும்படி கொடுத்தார்.

தியானப் பாடல் : சங்.20:4-5.

ஆண்டவரே, இனிய ஆசிகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தீர். அவரது தலையில் மணிமுடி சூட்டினீர். V. அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி னார்; அவருக்கு நீர் என்றென்றும் நீடிய வாழ்வை வழங்கினீர்.

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங்.91:13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்; லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான்.  அல்லேலூயா ...

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்: சங். 111 : 1-3.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன். அவர் கட்டளைகளைப் பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றிருக்கும்; நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும்; அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 91: 13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்: லீபானின் சேதுரு மரம்போலப் படர்ந்து வளர்வான்.

அல்லேலூயா. V. (ஓசே. 14:6) நீதி மான் லீலியைப்போல் தளிர்விடுவான் ; ஆண்டவர் திருமுன் என்றென்றும் செழித்திருப்பான். அல்லேலூயா.

* மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி 

(மத். 19:27-29)

அக்காலத்தில் இராயப்பர் மாறுத்தாரமாக, சேசுநாதரை நோக்கி: இதோ நாங்கள் எல்லாவற்றையுந் துறந்து விட்டு, உம்மைப் பின்சென்று வந்தோமே. அதனால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என, சேசுநாதர் அவர்களுக்குச் சொன்னதாவது: மறு ஜென்மத்தில் மனுமகன் தம்முடைய மகிமை பத்திராசனத்தில் வீற்றிருக்கும் போது, என்னைப் பின் சென்ற நீங்களும், இஸ்ராயேலருடைய பன்னிரண்டு கோத்திரங்களையும் நடுத் தீர்ப்பவர்களாகப் பன்னிரண்டு சிம்மாசனங்களில் உட்காருவீர்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும் என் நாமத்தைப் பற்றி வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தந்தையையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது, விட்டுவிட்ட எவனும், நூறுமடங்கு பெறுவான், நித்திய சீவியத்தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் என்றார்.

காணிக்கைப் பாடல்:  சங். 20. 3-4. 

ஆண்டவரே, அவன் இதயத்தின் ஆவலை நிறைவு செய்தீர் ; அவனுடைய விண்ணப்பத்தை நீர் புறக்கணிக்க வில்லை; அவன் தலையில் மணிமுடி சூட்டினீர். (T.I'. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப் பீடத்தின் மேல் நாங்கள் வைத்த காணிக்கைகள், மடாதிபரான அர்ச்.   உடைய வேண்டுதலால், எங்களுடைய மீட்புக்குப்பலனுள்ளதாகுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... 

உட்கொள்ளுதல் : லூக், 12 42 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T. P. அல்லேலூயா.)

உட்கொண்ட பின் 

செபிப்போமாக: ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இந்தத் திருஅனு மானமும், மடாதிபரான அர்ச்......... உடைய வேண்டுதலும் எங்களை என்றும் காப்பனவாக ;இதனால் நாங்கள் அவரது புனித வாழ்வைப் பின்பற்றி அவரது வேண்டுதலின் அடைந்துகொள்வோமாக. உம்மோடு.


திங்கள், 10 ஜூலை, 2023

July 11 - St. Pius I, Pope & Martyr

JULY 11, St. Pius I

Pope & MARTYR

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT John 21: 15-17

Si díligis me, Simon Petre, pasce agnos meos, pasce oves meas. (Ps. 29:1) Exaltábo te, Dómine, quóniam suscepísti me, nec delectásti inimícos meos super me. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Si díligis Me, Simon Petre, pasce agnos meos, pasce oves meas. .

பிரவேச கீதம்: அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா, நீ என்னை அன்பு செயதால், என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப் பாயாக, என் ஆடுகளை மேய்ப்பாயாக. (T. P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 29:1) ஆண்டவரே, நீர் என்னைக் கை தூக்கி விட்டீர். என் எதிரிகள் என்னை வென்று மகிழாதபடி செய்தீர். எனவே, உம்மைப் புகழ்வேன். V. பிதாவுக்கும்... சீமோன்.

COLLECT

Gregem tuum, Pastor ætérnæ inténde: et per beátum Pium Martyrem atque Summum Pontíficem tuum, perpétua protectióne custódi; quem totíus Ecclésiæ præstitísti esse pastórem. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: நித்திய ஆயரே, உம் மந்தையைத் தயவுடன் கண்ணோக்கி யருளும், திருச்சபை அனைத்திற்கும் ஆயராக நீர் நியமித்த (வேதசாட்சியும் தலைமை ஆயருமான) தலைமை ஆயரான அர்ச்....வழியாக, அதை இடைவிடாது பாதுகாத்தருளும். உம்மோடு....

EPISTLE 1 Peter 5: 1-4, 10-11

Caríssimi: Senióres, qui in vobis sunt, óbsecro consénior et testis Christi passiónum, qui et ejus, quæ in futúro revelánda est, glóriæ communicátor: páscite qui in vobis est gregem Dei, providéntes non coácte, sed spontánee secúndum Deum, neque turpis lucri grátia, sed voluntárie; neque ut dominántes in cleris, sed forma facti gregis ex ánimo. Et, cum apparúerit princeps pastórum, percipiétis immarcescíbilem glóriæ corónam. Deus autem omnis grátiæ, qui vocávit nos in ætérnam suam glóriam in Christo Iesu, módicum passos ipse perfíciet, confirmábit solidabítque. Ipsi glória et impérium in saecula sæculórum. Amen.

அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(1 இரா. 5:1-4,10-11)

மிகவும் பிரியமானவர்களே : உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறிஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக்குப் பங்காளியமாகிய நான் மூப்பர்களைக் கேட்டுக் கொள்கிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக் கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல,கடவுளுக்கேற்ற வலிய மனத்தோடும்; இழிவான ஆதா யத்தை நாடியல்ல, மனப் பிரீதியோடும்; (கர்த்தருடைய) சுதந்திரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள் போலல்ல, நல்ல மனத்தோடும் மந்தைக்கு மாதிரி களாகக் கண் காணித்து வாருங்கள் இவ்வித மாய், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்வீர்கள், கிறிஸ்து யேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக் காலம் துன்பப்படு கிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அனவரத காலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

GRADUAL Psalm 106: 32,31

Exáltent eum in ecclésia plebis: et in cáthedra seniórum laudent eum. Confiteántur Dómino misericórdiae ejus, et mirabília ejus filiis hóminum

LESSER ALLELUIA Matthew 16: 18

Allelúja, allelúja. Tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam. Allelúja.

தியானப் பாடல்: 123:7-8

வசங். 106 32,31 மக்களின் சபையில் அவரைப் புகழ்ந்தேந்து வார்களாக: மூப்பரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக. V. ஆண்டவரின் இரக்கத் தையும், மக்களுக்கு அவர் புரிந்த வியப்புக்குரிய செயல்களையும் முன்னிட்டு அவருக்கு நன்றி செலுத்துவார்களாக,

அல்லேலூயா, அல்லேலூயா. (மத். 16: 18) உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், அல்லேலூயா.

GOSPEL Matthew 16: 13-19

In illo témpore: Venit Jesus in partes Cæsaréæ Philíppi, et interrogábat discípulos suos, dicens: Quem dicunt hómines esse Fílium hóminis? At illi dixérunt: Álii Joánnem Baptístam, álii autem Elíam, álii vero Jeremíam aut unum ex prophétis. Dicit illis Jesus: Vos autem quem me esse dícitis? Respóndens Simon Petrus, dixit: Tu es Christus, Fílius Dei vivi. Respóndens autem Jesus, dixit ei: Beátus es, Simon Bar Jona: quia caro et sanguis non revelávit tibi, sed Pater meus, qui in cælis est. Et ego dico tibi, quia tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam, et portæ ínferi non prævalébunt advérsus eam. Et tibi dabo claves regni cælórum. Et quodcúmque ligáveris super terram, erit ligátum et in cælis: et quodcúmque sólveris super terram, erit solútum et in cælis.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி மத். 16. 13-19

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத் தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர் தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

OFFERTORY Jeremias 1: 9-10

Ecce, dedi verba mea in ore tuo: ecce, constítui te super gentes et super regna, ut evéllas et déstruas, et ædífices et plantes.

காணிக்கைப் பாடல்:எரேமியாஸ். 19.10

இதோ! என் ஏவுதலின்படி உன்னைப் பேசவைத்தேன். பறிக்கவும் அழிக்கவும் கட்டவும் நடவும் புறவினத்தார் மீதும் அரசுகள் மீதும் இதோ! நான் உன்னைத் தலைவன் ஆக்கினேன். (T P அல்லேலூயா).

SECRET

Oblátis munéribus, quǽsumus, Dómine, Ecclésiam tuam benígnus illúmina: ut, et gregis tui profíciat ubique succéssus, et grati fiant nómini tuo, te gubernánte, pastóres. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, உமக்கு அளித்த காணிக்கை களைப் பார்த்து, திருச்சபை மீது இரங்கி ஒளிவீசும். உமது மந்தையின் வெற்றி எங்கும் ஓங்கவும், உமது தலமையின்கீழ் உம் ஆயர்கள் உமது பெயருக்கு உகந்த வர்கள் ஆகவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...

COMMUNION Matthew 16: 18

Tu es Petrus, et super hanc petram ædificábo Ecclésiam meam.

உட்கொள்ளுதல்: மத்.16:18

உன் பெயர் பாறை, இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (T.P. அல்லேலூயா)

POSTCOMMUNION

Refectióne sancta enutrítam gubérna, quǽsumus Dómine, tuam placátus Ecclésiam: ut poténti moderatióne dirécta, et increménta libertátis accípiat et in religiónis integritáte persístat. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, உம் திருவுணவால் ஊட்டப்பெற்ற உமது திருச்சபையைத் தயவுடன் ஆண்டருளும். அது திறமைவாய்ந்த ஆட்சியின் கீழ வழி நடத்தப்பட்டு, சுதந்திரத்தில் வளர்ச்சியடையவும், குறையற்ற ஞான வாழ்வில் நிலைத்து நிற்கவும் செய்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..

ஞாயிறு, 9 ஜூலை, 2023

July 10 - SEVEN HOLY BROTHERS, MARTYRS, & STS. RUFINA & SECUNDA,

JULY 10, SEVEN HOLY BROTHERS, MARTYRS, & STS. RUFINA & SECUNDA,

VIRGINS & MARTYRS

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT Psalms 112: 1, 9

Laudáte, púeri, Dóminum, laudáte nomen Dómini: qui habitáre facit stérilem in domo, matrem filiórum lætántem. (Ps. 112: 2) Sit nomen Dómini benedíctum: ex hoc nunc, et usque in sæculum. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Laudáte, púeri, Dóminum, laudáte nomen Dómini: qui habitáre facit stérilem in domo, matrem filiórum lætántem.

பிரவேச கீதம்: சங். 112: 1, 9,

சிறுவர்களே, ஆண்டவரைப் புகழ்ந் தேத்துங்கள்: அவர் திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவர் மலடி யைப் பிள்ளைகளின் மகிழ்வுடைய தாயாக்கி விட்டிலே குடியிருக்கச் செய்கிறார். V. (சங்.112:2) இன்று முதல் என்றென்றும் ஆண்டவரின் பெயர் போற்றப்படுவதாக. V. பிதாவுக்கும்.. சிறுவர்களே.

COLLECT

Præsta, quæsumus, omnípotens Deus: ut, qui gloriósos Mártyres fortes in sua confessióne cognóvimus, pios apud te in nostra intercessióne sentiámus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, புகழ்வாய்ந்த வேதசாட்சி கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை யிடுவதில் வீரர்களாகத் திகழ்ந்ததை அறிந்திருக்கிறோம்: எங்களுக்காக அவர்கள் உம்மிடம் அன்புடன் பரிந்து பேசுவதை நாங்கள் உணரு மாறு செய்தருள உம்மை மன்றாடு கிறோம். உம்மோடு. . ..
LESSON: Prov 31:10-31 Mulíerem fortem quis invéniet? Proculet de últimis fínibus prétium ejus. Confídit in ea cor viri sui, et spóliis non indigébit. Reddet ei bonum, et non malum, ómnibus diébus vitæ suæ. Quæsívit lanam et linum, et operáta est consílio mánuum suárum. Facta est quasi navis institóris, de longe portans panem suum. Et de nocte surréxit, dedítque prædam domésticis suis, et cibária ancíllis suis. Considerávit agrum, et emit eum: de fructu mánuum suárum plantávit víneam. Accínxit fortitúdine lumbos suos, et roborávit bráchium suum. Gustávit, et vidit, quia bona est negotiátio ejus: non exstinguétur in nocte lucérna ejus. Manum suam misit ad fórtia, et dígiti ejus apprehénderent fusum. Manum suam apéruit ínopi, et palmas suas exténdit ad páuperem. Non timébit dómui suæ a frigóribus nivis: omnes enim doméstici ejus vestíti sunt duplícibus. Stragulátam vestem fecit sibi: byssus et púrpura induméntum ejus. Nóbilis in portis vir ejus, quando séderit cum senatóribus terræ. Síndonem fecit et véndidit, et cíngulum tradidit Chananaeo. Fortitúdo et decor induméntum ejus, et ridébit in die novíssimo. Os suum apéruit sapiéntiæ, et lex cleméntiæ in lingua ejus. Considerávit sémitas domus suæ, et panem otiósa non comédit. Surrexérunt fílii ejus, et beatíssimam prædicavérunt: vir ejus, et laudávit eam. Multæ fíliæ congregavérunt divítias, tu supergréssa es univérsas. Fallax grátia, et vana est pulchritúdo: mulier timens Dóminum, ipsa laudábitur. Date ei de fructu mánuum suárum, et laudent eam in portis ópera ejus.

ஞானாகமத்திலிருந்து வாசகம்

பழ. 31. 10-31

வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளுடைய விலைமதிப்பு. அவன் கணவனின் இருதயம் அவளில் நம்பிக்கை கொள்ளுகின்றது; கொள்ளைப் பொருள்களும் அவனுக்குக் குறைவுபடாது. அவள் அவனுக்குத் தன் சீவிய நாட்களனைத்தும் தின்மையை அல்ல நன்மையையே மாறாக அளிப்பாள். ஆட்டு ரோமத்தையும் சணல் நூலையுந் தெரிந்தெடுத்துத் தன் கரங்களின் சாமர்த்தியத்தால் வேலை செய்தான். தூரத்தினின்று தன் அப்பத்தைக் கொண்டுவருகின்ற வர்த்தகர்களின் கப்பல்போலானாள். இராவிலேயே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும் தன் ஊழியக்காரிகளுக்கு ஆகார வர்க்கங்களையுந் தந்தாள். வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள்; தன் கைகளின் பலனால் முந்திரிகை தோட்டத்தையும் நட்டாள். திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புஜத்தையும் பலப்படுத்தினாள். அவள் சுவைபார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது. வன்மையான காரியங்களுக்குத் தன் கரங்களை இட்டாள்; அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன. வகை இல்லாதவனுக்குத் தன் கரங்களைத் திறந்தாள்; தன் உள்ளங் கைகளை ஏழைக்கு நீட்டினாள். பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றிப் பயப்பட மாட்டாள்; ஏனெனில் அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள். கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறாள்; மெல்லிய சணலும் தூமிர வஸ்திரமும் அவளுடைய போர்வையாம். அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாசலில் மகிமை பெறுவான். மூடுதாரையும் செய்து விற்றாள்; கனானேயனுக்கு அரைக்கச்சையையுங் கொடுத்துவிட்டாள். வல்லமையும் செளந்தரியமும் அவளுக்கு உடை(யாம்;) கடைசி நாளிலும் அவள் நகைப்பாள். ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள்; அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறையாம். தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தைப் புசிப்பாள். அவளுடைய புத்திரர் எழுந்து அவளை மகா பாக்கியவதியென்று பிரசங்கித்தார்கள்; அவளுடைய பத்தாவும் அவனைப் புகழ்ந்தான். பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள்; நீ(யோ) சகலரையும் மேற்கடந்தாய். அந்தமும் பொய்யும் செளந்தரியமும் வியர்த்தமாம்; ஆண்டவ ருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவளுடைய கரங்களின் பலனி னின்று அவளுக்குத் தாருங்கள்; அவளுடைய கிரிகைகளே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.

Psalms 123: 7, 8

Anima nostra, sicut passer, erépta est de láqueo venántium. Láqueus contrítus est, et nos liberáti sumus: adjutórium nostrum in nómine Dómini, qui fecit cælum et terram.

தியானப் பாடல்: 123:7-8

வேடரின் கண்ணியிலிருந்து சிட்டுக் குருவிபோல் எங்கள் ஆன்மா விடுவிக்கப்பட்டது. V. கண்ணி அறுந்தது, விடுதலை பெற்றோம்: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவியுண்டு: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

அல்லேலூயா, அல்லேலூயா.V. உலகின் பாவங்களை வென்ற உண்மையான சகோதர உறவு இதுவே: இது சேசு கிறிஸ்துவைப் பின்பற்றி உன்னத மோட்சத்தை அடைந்தது. அல்லேலூயா.

GOSPEL Matthew 12: 46-50

In illo témpore: Loquénte Jesu ad turbas, ecce mater ejus, et fratres stabant foris, quæréntes loqui ei. Dixit autem ei quidam: Ecce mater tua, et fratres tui foris stant, quæréntes te. At ipse respóndens dicénti sibi, ait: Quæ est mater Mea, et qui sunt fratres Mei? Et exténdens manum in discípulos Suos dixit: Ecce mater Mea et fratres Mei. Quicúmque enim fécerit voluntátem Patris Mei, Qui in Cælis est: ipse Meus frater et soror, et mater est.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி மத். 12. 46-50

சேநாதர் சுஜனங்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், இதோ, அவருடைய தாயாரும் சகோதரரும் வெளியே நின்று அவரிடத்தில் பேசும் படி வழிபார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆகையால் ஒருவன் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டு வெளியில் நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இதைச் சொன்னவனுக்கு அவர் பிரத்தியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார் என்று சொல்லி, தமது சீஷர்கள் பக்கமாய்க் கையை நீட்டி: இதோ என் தாயாரும், என் சகோதரரும்; ஏனெனில் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாயிருக்கிறான் என்றார்..

OFFERTORY Psalms 123: 7

Anima nostra, sicut passer, erépta est de láqueo venántium. Láqueus contrítus est, et nos liberáti sumus

காணிக்கைப் பாடல்:சங். 123:7-8,

வேடரின் கண்ணியிலிருந்து சிட்டுக் குருவிபோல் எங்கள் ஆன்மா விடுவிக்கப்பட்டது. V.கண்ணி அறுந்தது, விடுதலை பெற்றோம்.

SECRET

Sacrifíciis præséntibus, quæsumus, Dómine inténde placátus: et, intercedéntibus Sanctis tuis, devotióni nostræ profíciant, et salúti. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum..

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, இப்பலிப் பொருட்களை மனம் இரங்கிக் கண்ணோக்கியருளும்: உம்முடைய புனிதர்களின் வேண்டுதலினால், அவை எங்கள் பக்திக்கும் மீட்பிற்கும் பயன்படவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... (T. P. அல்லேலூயா)..

COMMUNION Matthew 12: 50

Quicúmque fécerit voluntátem Patris Mei, Qui in Cælis est: ipse Meus frater, et soror, et mater est, dicit Dóminus..

உட்கொள்ளுதல்: மத்.12:50..

பரலோகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ, அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்.

POSTCOMMUNION

Deus: ut intercedéntibus Sanctis tuis, illíus salutáris capiámus efféctum: cujus per hæc mystéria pignus accépimus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய புனிதர்களின் வேண்டுதலினால், இத்திருப்பலியின் வழியாக மீட்பின் பிணையை நாங்கள் பெற்றுக்கொண்டது போல், மீட்பின் பயனையும் அடைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு..

To Download in PDf file

July 10 - Latin ENglish

Tamil

சனி, 8 ஜூலை, 2023

Mass Proper in Latin - Tamil - JULY 8, ST. ELIZABETH OF PORTUGAL, QUEEN & WIDOW

JULY 8, ST. ELIZABETH OF PORTUGAL,

QUEEN & WIDOW

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT Psalms 118: 75, 120

Cognóvi, Dómine, quia ǽquitas judícia tua, et in veritáte tua humiliásti me: confíge timóre tuo carnes meas, a mandátis tuis tímui. (Ps. 118: 1) Beáti immaculáti in via: qui ámbulant in lege Dómini. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Cognóvi, Dómine, quia ǽquitas judícia tua, et in veritáte tua humiliásti me: confíge timóre tuo carnes meas, a mandátis tuis tímui.

பிரவேச கீதம்: சங். 118 : 75, 120.

ஆண்டவரே, உம்முடைய ஆணைகள் நீதியானவை என அறிந்திருக்கிறேன்; நீர் எனக்குத் துயர் தந்தது முறையே: என் உடலை உம் அச்சத்தால் ஊடுருவும்: உம் ஆணைக்கே அஞ்சி நின்றேன். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா.) (சங். 118 : 1) ஆண்டவருடைய நெறியைப் பின்பற்றி பழுதற்று வாழ்வோர் பேறுபெற்றோர். V. பிதாவுக்கும்... ஆண்டவரே.

COLLECT

Clementíssime Deus, qui beátam Elísabeth reginam, inter céteras egrégias dotes, béllici furóris sedándi prærogatíva decorásti: da nobis, ejus intercessióne; post mortális vitae, quam supplíciter pétimus, pacem, ad ætérna gáudia perveníre. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: இரக்க மிகுந்த சர்வேசுரா, அரசியான அர்ச். எலிசபெத்தம்மாளுக்குப் பல்வேறு சிறந்த கொடைகளுடன், போர் வெறியை அடக்கும் மேலான வரத்தையும் தந்து அவளை அணி செய்தீர்: அவளுடைய வேண்டுதலால், இவ்வுலக வாழ்வில் நாங்கள் பணிவுடன் வேண்டும் அமைதியைப் பெற்றபின், நித்திய பேரின்பத்திற்கு வந்து சேர எங்களுக்கு அருள்புரிவீராக உம்மோடு...

LESSON: Prov 31:10-31

Mulíerem fortem quis invéniet? Proculet de últimis fínibus prétium ejus. Confídit in ea cor viri sui, et spóliis non indigébit. Reddet ei bonum, et non malum, ómnibus diébus vitæ suæ. Quæsívit lanam et linum, et operáta est consílio mánuum suárum. Facta est quasi navis institóris, de longe portans panem suum. Et de nocte surréxit, dedítque prædam domésticis suis, et cibária ancíllis suis. Considerávit agrum, et emit eum: de fructu mánuum suárum plantávit víneam. Accínxit fortitúdine lumbos suos, et roborávit bráchium suum. Gustávit, et vidit, quia bona est negotiátio ejus: non exstinguétur in nocte lucérna ejus. Manum suam misit ad fórtia, et dígiti ejus apprehénderent fusum. Manum suam apéruit ínopi, et palmas suas exténdit ad páuperem. Non timébit dómui suæ a frigóribus nivis: omnes enim doméstici ejus vestíti sunt duplícibus. Stragulátam vestem fecit sibi: byssus et púrpura induméntum ejus. Nóbilis in portis vir ejus, quando séderit cum senatóribus terræ. Síndonem fecit et véndidit, et cíngulum tradidit Chananaeo. Fortitúdo et decor induméntum ejus, et ridébit in die novíssimo. Os suum apéruit sapiéntiæ, et lex cleméntiæ in lingua ejus. Considerávit sémitas domus suæ, et panem otiósa non comédit. Surrexérunt fílii ejus, et beatíssimam prædicavérunt: vir ejus, et laudávit eam. Multæ fíliæ congregavérunt divítias, tu supergréssa es univérsas. Fallax grátia, et vana est pulchritúdo: mulier timens Dóminum, ipsa laudábitur. Date ei de fructu mánuum suárum, et laudent eam in portis ópera ejus.

ஞானாகமத்திலிருந்து வாசகம்

பழ. 31. 10-31 வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளுடைய விலைமதிப்பு. அவன் கணவனின் இருதயம் அவளில் நம்பிக்கை கொள்ளுகின்றது; கொள்ளைப் பொருள்களும் அவனுக்குக் குறைவுபடாது. அவள் அவனுக்குத் தன் சீவிய நாட்களனைத்தும் தின்மையை அல்ல நன்மையையே மாறாக அளிப்பாள். ஆட்டு ரோமத்தையும் சணல் நூலையுந் தெரிந்தெடுத்துத் தன் கரங்களின் சாமர்த்தியத்தால் வேலை செய்தான். தூரத்தினின்று தன் அப்பத்தைக் கொண்டுவருகின்ற வர்த்தகர்களின் கப்பல்போலானாள். இராவிலேயே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும் தன் ஊழியக்காரிகளுக்கு ஆகார வர்க்கங்களையுந் தந்தாள். வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள்; தன் கைகளின் பலனால் முந்திரிகை தோட்டத்தையும் நட்டாள். திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புஜத்தையும் பலப்படுத்தினாள். அவள் சுவைபார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது. வன்மையான காரியங்களுக்குத் தன் கரங்களை இட்டாள்; அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன. வகை இல்லாதவனுக்குத் தன் கரங்களைத் திறந்தாள்; தன் உள்ளங் கைகளை ஏழைக்கு நீட்டினாள். பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றிப் பயப்பட மாட்டாள்; ஏனெனில் அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள். கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறாள்; மெல்லிய சணலும் தூமிர வஸ்திரமும் அவளுடைய போர்வையாம். அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாசலில் மகிமை பெறுவான். மூடுதாரையும் செய்து விற்றாள்; கனானேயனுக்கு அரைக்கச்சையையுங் கொடுத்துவிட்டாள். வல்லமையும் செளந்தரியமும் அவளுக்கு உடை(யாம்;) கடைசி நாளிலும் அவள் நகைப்பாள். ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள்; அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறையாம். தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தைப் புசிப்பாள். அவளுடைய புத்திரர் எழுந்து அவளை மகா பாக்கியவதியென்று பிரசங்கித்தார்கள்; அவளுடைய பத்தாவும் அவனைப் புகழ்ந்தான். பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள்; நீ(யோ) சகலரையும் மேற்கடந்தாய். அந்தமும் பொய்யும் செளந்தரியமும் வியர்த்தமாம்; ஆண்டவ ருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவளுடைய கரங்களின் பலனி னின்று அவளுக்குத் தாருங்கள்; அவளுடைய கிரிகைகளே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.

GRADUAL Psalms 44: 3, 5

Diffúsa est grátia in lábiis tuis: proptérea benedíxit te Deus in ætérnum. Própter veritátem et mansuetúdinem, et justítiam: et dedúcet te mirabíliter déxtera tua. Allelúja, allelúja. Spécie tua, et pulchritúdine tua inténde, próspere procéde, et regna. Allelúja.

தியானப் பாடல்: சங்.44:3,5.

உம்முடைய சொற்களில் அருள் விளங்குகின்றது; ஆகையால், சர்வேசுரன் என்றென்றைக்கும் உமக்கு ஆசியளித்தார். V. உண்மை, சாந்தம், நீதியின் பொருட்டு, உமது வலக்கரம் வியத்தகு முறையில் உம்மை வழி நடத்தும்.

அல்லேலூயா, V. (சங்.44:5) உமது அல்லேலூயா. எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும் அல்லேலூயா.

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்:

கிறிஸ்துவின் மணமகளே வாரும், ஆண்டவர் உமக்கென ஆயத்தம் செய்துள்ள நித்திய முடியைப் பெற்றுக்கொள்ளும். V. (சங். 44: 8,5.) நீதியை விரும்பினீர்; அநீதியை வெறுத்தீர். எனவே ஆண்டவர், உம் ஆண்டவர், உம்முடைய தோழரினும் மேலாக மகிழ்ச்சி தரும் தைலத்தால் உம்மை அபிஷேகஞ் செய்தார். V. உம் எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 44:5) உமது எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும்.

அல்லேலூயா. V. உண்மை, சாந்தம், நீதியின்பொருட்டு, உமது வலக்கரம் வியத்தகு முறையில் உம்மை வழி நடத்தும். அல்லேலூயா.

GOSPEL Matthew 13: 44-52

In illo témpore: Dixit Jesus, discípulis suis parábolam hanc: Símile est regnum coelórum thesáuro abscóndito in agro: quem qui invénit homo, abscóndit, et præ gáudio illíus vadit, et vendit univérsa quæ habet, et emit agrum illum. Íterum símile est regnum coelórum hómini negotiatóri, quærénti bonas margaritas. Invénta autem una pretiósa margaríta, abiit, et véndidit ómnia quæ hábuit, et emit eam. Íterum símile est regnum coelórum sagénæ missæ in mare, et ex omni génere píscium congregánti. Quam, cum impléta esset, educéntes, et secus littus sedéntes, elegérunt bonos in vasa, malos autem foras misérunt. Sic erit in consummatióne sæculi: exíbunt Ángeli, et separábunt malos de médio justórum, et mittent eos in camínum ignis: ibi erit fletus, et stridor déntium. Intellexístis hæc omnia? Dicunt ei: Étiam. Ait illis: Ideo omnis scriba doctus in regno coelórum, similis est hómini patrifamílias, qui profert de thesáuro suo nova et vétera.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி

மத். 13. 44-52

அக்காலத்தில் சேசுநாதர் திருவுளம் பற்றினதாவது: பரலோக இராச்சியமானது ஓர் நிலத்தில் புதைந்திருக்கிற புதையலுக்கு ஒப்பாயிருக்கின்றது. அதைக் கண்ட மனிதன் அதை மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினால் போய், தனக்குள்ள யாவையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளுகிறான். மீளவும் பரலோக இராச்சியமானது நல்ல முத்துக்களைத் தேடுகிற வர்த்தகனுக்கு ஒப்பாயிருக்கின்றது. அவன் விலையேறப்பெற்ற ஓர் முத்தைக் கண்ட மாத்திரத்தில், போய், தனக்குண்டான யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்ளுகிறான். அல்லாமலும் பரலோக இராச்சியமானது கடலில் வீசப்பட்டு எவ்வகை மச்சங்களையுஞ் சேர்த்து வாரிக்கொள் ளும் வலைக்கு ஒப்பாயிருக்கின்றது. அது நிறைந்த பின், வெளியில் இழுத்துக் கரையில் உட்கார்ந்து நல்லவைகளைத் தெரிந்தெடுத்து, பாத்திரங்களில் வைத்துக்கொண்டு, ஆகாதவைகளைப் புறம்பே எறிந்துவிட்டார்கள். இவ்வண்ணமே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர் புறப்பட்டுப்போய் நீதிமான்கள் நடுவிலிருந்து தீயோரைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். பின்னும் அவர்: நீங்கள் இவையெல்லாம் கண்டுபிடித்தீர்களோ? என்றார். அதற்கு அவர்கள்: ஆம் என்றார்கள். அப்போது அவர்களை நோக்கி அவர் சொன்னதாவது : ஆகையால் பரலோக இராச்சியத்துக்கடுத்தவைகளிலே தேர்ந்த வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் வெளியில் எடுத்துக் காட்டுகிற வீட்டெஜமா னுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

OFFERTORY Psalms 44: 3

Diffúsa est grátia in lábiis tuis: proptérea benedíxit te Deus in ætérnum. et in sǽculum sǽculi.

காணிக்கைப் பாடல்:சங். 44 : 3,

உம்முடைய சொற்களில் அருள் விளங்குகின்றது. ஆகையால், சர்வேசுரன் என்றென்றைக்கும் உமக்கு ஆசியளித்தார். (T. P. அல்லேலூயா).

SECRET

Accépta tibi sit, Dómine, sacrátæ plebis oblátio pro tuórum se méritis, de tribulatióne percepísse cognóscit auxílium. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

காணிக்கை மன்றட்டு

ஆண்டவரே, எங்கள் துன்ப வேளையில் உம்முடைய புனிதர்களின் பேறு பலன்கள் எங்களுக்குத் துணைபுரிந்ததை உணர்கின்றோம்: எனவே, அவர்களைச் சிறப்பிக்க உம் திருச்சபை உமக்களிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாய் இருப்பதாக. உம்மோடு...

COMMUNION Psalms 44: 8

Dilexísti justítiam, et odísti iniquitátem: proptérea unxit te Deus, Deus tuus, óleo lætítiæ præ consórtibus tuis.

உட்கொள்ளுதல்: சங். 44:8.

நீதியை விரும்பினீர், அநீதியை வெறுத்தீர்: எனவே ஆண்டவர், உம் ஆண்டவர், உம்முடைய தோழரினும் மேலாக மகிழ்ச்சி தரும் தைலத்தால் உம்மை அபிஷேகஞ் செய்தார். (T. P. அல்லேலூயா).

POSTCOMMUNION

Satiásti, Dómine, famíliam tuam munéribus sacris: ejus, quǽsumus, semper interventióne nos refóve, cujus solémnia celebrámus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, உமது குடும்பத்தைத் திருக்கொடைகளால் நிறைவூட்டினீர் ; நாங்கள் விழாக் கொண்டாடும் இந்தப் புனிதையின் வேண்டுதலினால் எங்களை என்றும் தேற்றுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

This is for a personal use only.

It contains my own translation.

thanks for your understanding.
Deo Gratias!!

வியாழன், 6 ஜூலை, 2023

Download Catholic Book 3 - TEEN-AGER'S SAINT_ Monsignor James Morelli

 


Book Name: TEEN-AGER'S SAINT

by: Monsignor James Morelli 

Edited by William Peil

Grail Publication

NIHIL OBSTAT:

Joseph G. Brokhage, S.T.D. Censor librorum

IMPRIMATUR:

 Paul C. Schulte, D.D. Archbishop of Indianapolis

Feast of the Purification of B. M. V. February 2, 1954




Download St. Maria Goretti books

Download St. Maria Goretti books

Click on the Green Button to Download.

Download Catholic Book 2 - SAINT Maria Gorett! by MARIE CECILIA BUEHRLE



saint maria goretti _1950 _ by_MARIE CECILIA BUEHRLE

Download Click on the image


Book Name:    SAINT Maria Gorett!

Author Name:  MARIE CECILIA BUEHRLE

Publication Year : 1950

Published by: The Bruce Publishing COMPANY: Milwaukee

Nihil Ohstat :  


Nihil obstat quominus imprimatur:

I. Epuarpus Cor Fey, S.J.

Pont. Univ. Gregor. revisor delegatus

Romae, die 25 Aprilis, 1950

Nihil obstat: SyLvrus ROMANI, S.R.R.C.

Adv. . . . Subpromotor Generalis

Die 27 Aprilis, 1950


Imprimatur: E Vicariatu Urbis, die 19. IV. 5



Download Catholic Book 1 - "Lily of the marshes, the story of Maria Goretti"

 Happy Feast day of St. Maria Goretti...


CLICK ON THE IMAGE TO DOWNLOAD THE BOOK


 6 July – St Maria Goretti (1890-1902) Virgin and Martyr, known as “Saint Agnes of the 20th Century.” 

Born 16 October 1890 at Corinaldo, Ancona, Italy – choked and stabbed to death during a rape attempt on 6 July 1902 at the age of 12.  

She was Canonised on 24 June 1950 by Pope Pius XII    

The ceremony was attended by 250,000 including her mother, the only time a parent has witnessed her child’s Canonisation.   

Patronages – against poverty, against the death of parents, of children, girls, martyrs, poor people, rape victims, young people in general, Children of Mary, Diocese of Albano, Italy, Albano Laziale, Italy (proclaimed on 5 May 1952 by Pope Pius XII), Latina, Italy.   Attributes  – Fourteen lilies; farmer’s clothing; (occasionally) a knife.


Book Name:   Lily of the marshes, the story of Maria Goretti

Author Name:  ALFRED MacCONASTAIR, C.P.

Publication Year : 1951

Published by: THE MACMILLAN COMPANY: NEW YORK - 1951

Nihil Ohstat : Camillus Barth, C.P. Censor Deputatus

Imprimi Potest : 
Gabriel Gorman, C.P., Provincial





DOWNLOAD HERE - LILLY OF THE MASHES - THE STORY OF MARIA GORETTI