Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 29 மார்ச், 2015

அன்னையுடைய ஏழு வியாகுலங்கள் ( Devotion to Our Lady of Sorrows)


தேவ தாய் அர்ச். பிரிஜிட் அவர்களுக்கு காட்சி அளித்து, அன்னையுடைய ஏழு வியகுலங்களை தியானித்து, ஏழு அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை தினமும் செபித்தால் அன்னை அவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
அந்த வாக்குறுதிகள் 
  •   அவர்களுடைய குடும்பங்களுக்கு  அமைதியை அருளுவேன்.
  • அவர்களுக்கு ஞான வெளிச்சத்தை கொடுப்பேன்.
  • அவர்களுடைய துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய பணிகளில் அவர்களுக்கு துணையாகவும் இருப்பேன்.
  • அவர்கள் என்னை நோக்கி கேட்கும் எல்லா நன்மைகளையும் அவர்களுக்கு நான் அளிப்பேன்.
  • அவர்கள் மோட்சம் செல்ல வேண்டிய அனைத்து உதவிகளையும் சேசுவிடம் இருந்து பெற்று தருவேன்.
  • அவர்களுடைய ஞான யுத்தத்திலே அவர்களுக்கு அரணாகவும்,  அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன்.
  • அவர்களுடைய மரண நேரத்தில் நானே அவர்களுக்கு தோன்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்.
  • இந்த பக்தியை அதிகமாக பரப்புகிறவர்களுக்காக நான் என் மகனிடம் அவர்களுக்காக மன்றாடி, அவர்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் நீக்கும் படியாக மன்றடுவேன். அவர்களுடைய மரண சமயத்தில் அவர்களுடைய அற்ப பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பெற்று உததரிக்கிற ஸ்தலத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பேன்.
அன்னையுடைய ஏழு வியாகுலங்கள் 
  1.   சிமியோன் தீர்க்கதரிசியுடைய தீர்க்கதரிசனம் (லூக். 2. 34-35)
  2.   எகிப்து தேசத்துக்கு தப்பியோடியது. (மத் . 2. 13-14)
  3.  குழந்தை சேசு கோவிலில் காணாமல் போனது.(லூக். 3. 43-45)
  4. தேவமாதா தனது குமாரனை சிலுவை சுமந்து போகும் போது சந்தித்தது.
  5. சேசுநாதர்  சிலுவையில் அறையப்பட்டது.
  6. சேசுநாதர் சிலுவையில் இருந்து இறக்கி மாதா மடியில் வளர்தப்பட்டது.
  7. சேசுநாதர் அடக்கம் பண்ணப்பட்டது.

To download Catholic Songs pls Click here...

To download Catholic Books pls click here..

To download life history of St. Antony in Mp3 pls Click here...


புதன், 25 மார்ச், 2015

மங்கள வார்த்தை திருநாள் (மார்ச் 25)

"இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது "


அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்திலே கபிரியேல் தூதர் மாமரிக்கு மங்கள வார்த்தை சொன்னதை விரிவாக நமக்கு சொல்லுகிறார். அர்ச். லூக்காஸ் அதிகாரம் 1 வசனம் 26 – 38.  கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டிலுள்ள நசரேத்தூருக்கு சர்வேசுரனால் அனுப்பப்பட்டு தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர்; எனப்பட்ட ஓர் மனிதனுக்க விவாகப் பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார்.  அந்த கன்னிகையின் பெயர் மரியம்மாள்.  தேவதூதன் அவள் இருந்த இடத்தில் பிரவேசித்து பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே என்றார்.  இதை அவள் கேட்ட மாத்திரத்தில் இந்த வார்த்தையினால் கலங்கி இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக்கையில், தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்ச வேண்டாம், எனெனில் சர்வேசுரனுடைய கிருயை பெற்றிருக்கிறீர்.  இதோ, உமது உதரத்தில் கெற்பந் தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்.  அவருக்கு யேசு என்னும் நாமம் சூட்டுவீர்.  அவர் பெரியவராயிருப்பார்.  உன்னதமானவருடைய சுதன் எனப்படுவார்.  ஆண்டவராகிய சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்கு கொடுப்பார்.  அதலால் அவர் யாக்கோபின் கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார்.  அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது.  என்றார்.
அப்போது மரியம்மாள் தேவதூதனை நோக்கி “இது எப்படியாகும்?  நான் புருஷனை அறியனே” என்று சொல்ல, தேவதூதன் அவளுக்கு மாறுத்தாரமாக: இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளுவார்.  உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்: ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.  இதோ உமது பந்துவாகிய எலிசெபத்தும் தம் முதிர் வயதிலே ஓர் புத்திரனைக் கெர்ப்பந்தரிக்கிறாள்.  மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.  ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார். அதற்கு மரியம்மாள் “இதோ ஆண்டவருடைய அடிமையாளவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது”..

வியாழன், 5 மார்ச், 2015

Download Lives of Saints in Tamil

You can download life history of Daily saints in Tamil. Its in a very simple text.  These books are not a full life history of Saints in Tamil.  Its a brief History of Saints in Tamil.

There are Twelve books are here.  Twelve month Twelve books.

You can download and please share with others.

Thank You..



January  -  Click Here


February  -  Click Here


March  -  Click Here

April  -  Click Here

May -  Click Here

June  -  Click Here

July  -  Click Here

August -  Click Here

September -  Click Here

October  -  Click Here

November  -  Click Here

December -  Click Here


To Download more Catholic Tamil Books Pls Click Here

+
AVE MARIA