Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Books லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 19


போதக துறவற சபையை துவங்குதல் 

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார், அர்ச். சாமிநாதரிடம், விரைவில் அவருடைய போதகக் குருக்களுக்கான சபையும் பாப்பரசரால் அங்கிகரிக்கப்படும் என்றும் அந்த சபைக்கு நன்மை எல்லாம் நிகழும் என்றும் கூறினார். அப்போது அர்ச். சாமிநாதர் இருதய துடிப்பு அதிகரிக்குமளவுக்கு சந்தோஷ மகிழ்வால் நிரம்பினார். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நான் 5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்து எனது சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காக வந்தேன். பிறகு 3 வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்தேன். எனவே உங்கள் சபைக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால்அதைரியப்படாதீர்கள். உங்கள் நம்பிக்கையை நமது ஆண்டவரிடத்தில் வைத்துவிடுங்கள். அவர் உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். பிறகு இருவரும் அர்ச்.இராயப்பரின் பேராலயத்தை விட்டு வெளியேறினர். அர்ச்.பிரான்சிஸ் சாமிநாதரிடம், தனது சீடர்களுடன் இத்தாலி நாடெங்கும் திருச்சபைக்காக தனது சபை ஆற்றி வரும் ஞான அலுவலின் சாராம்சத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அர்ச். சாமிநாதருடைய வேதபோதக அலுவலைப் போலவே அவர்களும், இத்தாலி நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆண்டவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிக் கூறினார். அவர்கள், அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடர்களும் செய்து வந்ததுபோல கல்வியில் தேர்ச்சிபெற்றிருந்த பதிதர்களுடனும் அவர்களுடைய தலைவர்களுடனும் வேதத்தைப் பற்றிய தர்க்கத்தில் ஈடுபடாமலிருந்தபோதிலும், ஆண்டவருடைய சுவிசேஷத்தை போதிப்பதிலே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். 

ஏனெனில் இத்தாலியில் அக்காலத்தில் அநேக உயர்குலக் குடும்பங்கள் உலக சுகபோகங்களிலும் ஆடம்பரமான ஜீவியத்திலும் மிதமிஞ்சிய அளவிற்கு ஈடுபட்டிருந்ததால், வேதவிசுவாசத்தை இழந்துவிடும் அபாயத்திலிருந்தனர். அவர்களுக்கு வேதத்தைப் போதிப்பதிலேயே பிரான்சிஸின் சபையினர் ஈடுபடலாயினர். அர்ச்.பிரான்சிஸ் மற்றும் அவருடைய சிடர்கள் அனைவரும் தங்களுக்கென்று யாதொரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் விட்டு விட்டு வந்தவர்கள். அவர்களுக்கென்று இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களுடைய உடை மற்றும் அன்றாட உணவிற்கு கூட ஒவ்வொரு விடாகச் சென்று பிச்சையெடுப்பார்கள். சாமிநாதரிடம், பிரான்சிஸ், “நமது நேச ஆண்டவருக்காக இவ்வுலகில் நாம் ஏழையாக ஜீவிப்பது எவ்வளவு உன்னதமான ஜீவியம்! அதற்கு ஈடு இணை வேறொன்றும் இல்லை! ஒரு மனிதனுக்கு உடைமைகள் இருப்பின் அவற்றைப் பாதுகாப்பதற்காக பெட்டகங்களையும் ஆயுதங்களையும் அவன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவன் உடைமைகளையும், ஆயுதங்களையும் வைத்திருக்கும்போது அவற்றால் அவன் தனது உறவினருடனும் அயலாருடனும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனிமித்தமே அவனுடைய தேவசிநேகமும் பிறர்சிநேகமும் கூட காயப்பட்டு பாதிக்கும் நிலைமைக்குள்ளாகக் கூடும். சகோ.தோமினிக்! இதை ஒத்துக் கொள்கிறிர்களா?” என்று கூறினார். 

இதுவரை மிகுந்த வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அர்ச்.பிரான்சிஸின் இந்தக் கருத்துக்கு தானும் முழு மனதுடன் உடன்படுவதாக தெரிவித்தார். பல வாரங்கள் ரோமில் இவ்வாறாக இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது அர்ச்.பிரான்சிஸ் கூறிய அநேக காரியங்களையும் அர்ச்.சாமிநாதர் மிகுந்த உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அட்ட தரித்திரத்தை தனது சுபாவத்திலேயே அணிந்து கொண்டவராக, தனது சகோதரி “ஏழ்மை”யை நேசித்து ஜீவித்த அர்ச்.பிரான்சிஸ் அசிசியாரின் உன்னதமான தேவசிநேக ஜீவியத்தையும் அதை விளக்கிக் கூறிய அவருடைய வார்த்தைகளையும் முழு மனதுடனும் உற்சாகத்துடனும் ஏற்று பாராட்டிய பிறகு அவரிடமிருந்து அர்ச்.சாமிநாதர் விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் பாப்பரசர் 3ம் இன்னசன்ட், அர்ச்.சாமிநாதரை வத்திக்கானுக்கு வரவழைத்து, “நேற்று இரவு ஒரு காட்சி கண்டேன். அர்ச்.அருளப்பருடைய லாத்தரன் பேராலயம் இடிந்து விழுவதற்கான மிக ஆழமும் அகலமுமான வெடிப்புகள் அதன் சுவற்களில் தோன்றி அதன் கூரை பிளந்து போகும் அபாயத்தில் இருக்கும் போது நீர் அங்கு தோன்றினிர்.. ” என்று கூறினார்.

 அதற்கு “நானா! அங்கு தோன்றினேன், பரிசுத்த தந்தையே!” என்று பாப்பரசரிடம் சாமிநாதர் வினவினார். 

பாப்பரசர், “ ஆம். நிர் தான் அங்கு தோன்றி, இராட்சதனைப் போல மாபெரும் உருவமாக வளர்ந்து, உமது தோள்களினால், விழ இருந்த பேராலயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டீர். அம்மாபெரும் பிரம்மாண்டமான கதிட்ரல் பேராலயத்தை நீர் ஒரு துளி கஷ்டமுமின்றி உமது கரங்களை நீட்டி தாங்கினீர். நீர் அதைத் தொட்டவுடனே அந்த பேராலயக் கட்டிடத்தின் ஓட்டை, விரிசல் இடிபாடுகள் அனைத்தும் மறைந்து போகவே மீண்டும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நின்றது” என்று பதிலளித்தார். பாப்பரசர் தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதை அர்ச்.சாமிநாதர் மிகுந்த திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் பேச இயலவில்லை. மேலும், பாப்பரசர் அவரிடம், “என் பிரிய மகனே கேளுங்கள்! சில வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது நமது சிறிய நண்பர், சகோதரர் பிரான்சிஸ் என் முன்பாக தோன்றினார். அப்பொழுது அவர் அசிசியிலிருந்து இங்கு வந்து ரோமாபுரியில் தங்கியிருந்தார். அவர் தன்னுடைய பிச்சையெடுக்கும் துறவிகளுடைய சபைக்கான பாப்பரசருடைய அனுமதிக்காகக் காத்திருந்தார். முதன் முதலில் அவரைக் கண்டவுடன் அவருடைய கருத்துக்கள் பின்பற்றமுடியாதபடிக்கு மிகவும் கடினமானவையாகத் தோன்றியதால், அவருடைய சபைக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நேற்று இரவு நான் கண்ட காட்சியைப் போலவே ஒரு காட்சியைக் கண்டேன். அப்பொழுது பிரான்சிஸ் மிகச் சரியானவற்றையே கூறியிருக்கிறார் என்று உணர்ந்தேன். அதாவது தரித்திர ஜீவியத்தைப் பற்றி மக்களிடம் போதித்து, நம் ஆண்டவர் சேசுகிறிஸ்துநாதர்மேல் நமக்குள்ள சிநேகத்தை முன்னிட்டு ஏழ்மையை நாம் அணிந்துகொள்வோமேயாகில், ஆடம்பரமும் தப்பறையுமான இவ்வுலகத்தின் ஜீவிய முறைகள் மறைந்து அழிந்து போகும். அதன்பிறகு இத்தாலியா நாடெங்கும், இவ்வுலகம் முழுவதும் புதியதொரு ஞானஜீவியத்திற்கான சுதந்திரம் மலரும்” என்றார். 

மேலும் பாப்பரசர் தாம் எளிய சகோதரர் பிரான்சிஸின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் கடந்த சில வருடங்களாக அவரும் அவருடைய சிடர்களும் ஆன்ம இரட்சணிய அலுவலில் அரும்பாடு பட்டு உழைத்ததன் பயனாக எண்ணற்ற ஆத்துமங்களை இரட்சணிய பாதைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் சாமிநாதரிடம் கூறினார். பாப்பரசர் 3ம் இன்னசன்ட் மிகுந்த மகிழ்ச்சி அக்களிப்புடன், சர்வேசுரன் ஆத்துமங்களைக் காப்பாற்றுவதற்கான விசேஷ அலுவலுக்காக சாமிநாதரையும் தேர்ந்தெடுத்து உயர்த்தியிருக்கிறார் என்பதை அறிவித்தார். ஆதலால் பாப்பரசர் இந்தப் புதிய பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் துறவற சபையானது உடனே துவங்க வேண்டும் என்று ஆசித்தார்.

எனவே போதக துறவியரின் சபையை துவக்கும்படி பாப்பரசர் அர்ச். சாமிநாதரிடம், “உடனே பிரான்சுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுடைய  சீடர்களை ஒன்று கூட்டி உங்களுடைய சபை விதிமுறைகளை ஏற்படுத்துங்கள். அதன்பிறகு உங்களுடைய சபைவிதிமுறைகளை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். பாப்பரசரிடம் ஆசீர் பெற்றுக் கொண்ட சாமிநாதர், சில நாட்களுக்குப் பிறகு தூலோஸ் மேற்றிராணியார், வந்.ஃபல்குவஸ் ஆண்டகையுடன் மகிழ்ச்சி நிறைந்த இருதயத்துடன் பிரான்சு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேற்றிராணியார் அவரிடம் சபைவிதி முறைகளை அவருடைய ச சீடர்கள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படலாம் என்றும் வேதபோதக அலுவலை பல இடங்களுக்கும் சென்று நிறைவேற்றுவதற்கு 6 சீடர்கள் மட்டும் பற்றாமல் போய்விடும் என்றும் அதற்கு அநேக தேவ அழைத்தல்கள் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதற்கு சாமிநாதர் அவரிடம், “இப்போது நமது பாப்பரசர் நம் பக்கம் இருக்கிறார் என்ற நினைவே எனக்கு மிகுந்த பலமாகவும், எனக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறது. ஓ ஆண்டவரே! நாம் ரோமாபுரிக்கு வந்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன்” என்றார். தூலோஸ் வந்து சேர்ந்ததும் மேற்றிராணியார், சாமிநாதரின் சீடர்கள் எண்ணிக்கை 6லிருந்து 16 ஆக உயர்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிசயப்பட்டு, அச்சபையின் பிற்கால வளர்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து பேருவகை கொண்டார். புரோயிலில் சில  சீடர்களும் தூலோஸில் சில மாதங்களுக்கு முன்பாக பீட்ர் சேலா என்பவர் அன்பளிப்பாக கொடுத்த ஒரு இல்லத்தில் சில சீடர்களுமாக சாமிநாதரின் சீடர்கள் இரண்டு இல்லங்களில் ஜீவித்து வந்தனர். வந்.ஃபல்குவஸ் ஆண்டவர், “என்னால் நம்பவே முடியவில்லையே 16 சீடர்கள் அதற்குள்ளாகவா!” என்றார். அதற்கு சாமிநாதர், “ஆம். ஆண்டவரே! ஆனால் இது ஆரம்பம் தான் என்பதை நாம் நினைக்க வேண்டும். சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால், ஏராளமான தயாளமுள்ள பரந்த இருதயத்துடைய நல்ல மனிதர்கள் நம்முடன் சேர இருக்கிறார்கள்” என்று கூறினார். (தொடரும்)

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 20

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 19

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 18

அர்ச்.சாமிநாதரின் ஜீவியசரித்திரம்: அத்தியாயம் 17






அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 9

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்:  அத்தியாயம் 7

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4



வியாழன், 23 டிசம்பர், 2021

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 1 - அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் St. Alponshus Ligori

 அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம்


மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபையை உண்டாக்கின அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார்


(கி.பி.1696-1787) திருநாள் ஆகஸ்ட் 2ம் தேதி



இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் அர்ச்.அல்போன்ஸ் மரிய லிகோரியார் பூர்வீக உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 1696ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் பிறந்தார். அவருடைய தாய் பக்தியில் அவரை வளர்த்தாள். இளமையிலேயே அர்ச்சிஷ்டதனத்தின் அடையாளக் குறிப்புகள் அவரிடத்தில் காணப்பட்டன. அவர் குழந்தையாயிருக்கும்போது, மகாத்துமாவான ஒரு அர்ச்சிஷ்டவர் அவரை ஆசீர்வதித்துவிட்டு, இவர் 91வயது வரை ஜிவிப்பாரென்றும் மேற்றிராணியாராகி திருச்சபைக்கு மிகப்பெரிய மகிமையாக விளங்குவாரென்றும் திர்க்கதரிசனம் உரைத்தார். சிறுவயதுமுதல் லிகோரியார் தேவஇஷ்டபிரசாதத்தின் ஏவுதலை அனுசரித்து அத்தியந்த பக்தியும் சம்மனசுக்குரிய பரிசுத்ததனமும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தியும் கொண்டு திகழ்ந்தார். அவர் தன் புண்ணிய நன்மாதிரிகையினால் உத்தம கிறிஸ்துவ ஜீவியத்துக்கு உட்படும்படி தன் நண்பர்களைத் தூண்டுவார். இளைஞரானபோது பக்தியுள்ள சபைகளில் உட்பட்டு நோயாளிகளை மடங்களில் சந்தித்து அவர்களுக்கு ஊழியம் செய்வார்.

தேவாலயங்களில் நடக்கும் திவ்ய பலிபூசை, பிரார்த்தனை முதலிய தேவாராதனை சடங்குகளில் தவறாமல் பங்கேற்பார். வாரந்தோறும் திவ்ய நன்மை உட்கொண்டு அனுதினமும் தேவநற்கருணை சந்திப்பார். பக்திகிருத்தியங்களுடன்கூட கல்விகற்பதிலும் கவனத்துடன் ஈடுபடுவார். மேன்மைமிக்க புத்திகூர்மையும் அபாரமான ஞாபகசக்தியும் கொண்டிருந்ததனால், லிகோரியார், தனது 16வது வயதிலேயே இருவேறு உயர்கல்வி பட்டங்களைப் பெற்றார். பிறகு, தந்தையின் விருப்பப்படி சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரானார். அவருக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்ததை அறிந்தவுடன் தன் மூத்தமகனுக்குரிய உரிமையையும், தனது வக்கீல் தொழிலையும் துறந்துவிட்டு தேவமாதாவின் தேவாலயத்தை நோக்கிச் சென்றார். அங்கு தேவமாதாவி;ன் பீடத்தில் தன் உயர்குடிமகனுக்குரிய போர்வாளை தொங்கவிட்டார். தேவமாதாவிடம் குருத்துவத்திற்கான தேவஊழியத்திற்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார். இதனால் தமது குடும்பத்தினரிடமிருந்து வந்த பல இடையூறுகளை லிகோரியார் மிக திடமனதுடன் வெற்றி கொண்டு இறுதியில் குருப்பட்டம் பெற்றார்.

பிறகு, மற்ற சில குருக்களுடன் சேர்ந்து நாட்டுபுறத்திலுள்ள கிராமங்கள் முதலிய சிற்றூர்களிலுள்ள மக்களுக்கு ஞானபிரசங்கங்களை போதித்து ஆங்காங்கே ஆன்ம இரட்சணிய அலுவலை செய்துகொண்டுவந்தார். அதனால் விளைந்த மிகுதியான ஞானநன்மைகளைக் கண்ட லிகோரியார் “மகா பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை” என்ற குருக்களின் சந்நியாச சபையை ஏற்படுத்தினார். அச்சபை குருக்கள் திவ்ய இரட்சகரின் மேலான புண்ணியங்களை அனுசரித்துக் கொண்டு திவ்ய இரட்சகர் பாவனையாக நாட்டுபுறத்தில் சஞ்சரிக்கும் தரித்திர மக்களுக்கு ஞானபிரசங்கங்கள் நிகழ்த்தவும், ஆத்துமநன்மை விசாரிக்கவும் நியமிக்கப்பட்டனர். துவக்கத்தில் சபையில் சிலர் மட்டுமே இருந்தபோதிலும், அவர்கள் அனைவருக்கும் உத்தம புண்ணிய மாதிரிகையானதால் அவர்களுடைய சபை விரைவிலேயே வளர்ந்து விருத்தியடைந்தது. தன் ஞானபிரசங்கங்களினால் அம்மக்களுக்கு ஏராளமான ஞான நன்மைகள் விளையும்படி லிகோரியார் அயராமல் உழைத்தார். ஆன்மஈடேற்றத்திற்காக ஞான நன்மைகள் பயக்கக்கூடிய ஏராளமான பக்திநறைந்த புத்தகங்களை எழுதினார். 

சகல பதிதங்களிலிருந்தும் அஞ்ஞானத்திலிருந்தும் குறிப்பாக அப்போது தோன்றியிருந்த ஜான்சனிச தப்பறையினின்றும் மக்களைப் பாதுகாக்கும் படியும் அவர்களை உத்தம கத்தோலிக்க புண்ணிய ஜிவியத்திற்கு திருப்புவதற்காகவும் எண்ணற்ற அரிய நுரல்களை எழுதினார்0 ஞானபிரசங்க போதனைகளை செய்தார். மனுக்குலத்தின்மீதான ஆண்டவருடைய அளவற்ற சிநேகத்தை மறைத்து, அவரை நடுத்தீர்ப்பவராக மட்டுமே மக்களிடம் போதித்துவந்த ஜான்சனிச பதிதத்தை அழிப்பதற்காக சேசுவின் திவ்ய திரு இருதயத்தின் மிதான பக்தியை எங்கும் பரப்பினார்.

 “சேசுவின் திவ்ய திரு இருதயம்”, “மகா பரிசுத்த தேவ நற்கருணை” என்ற நுரல்களை எழுதினார். உத்தம கிறிஸ்துவ ஜீவியத்திற்கு எண்ணற்ற பாவிகளை மனந்திருப்பினார். தேவமாதாவின் மிது தான் கொண்டிருந்த பக்திபற்றுதலை வெளிப்படுத்தும்படியும், மக்களிடம் மாதா பக்தியை தூண்டி வளர்ப்பதற்காகவும் “அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்” என்ற உன்னதமான அரிய நுரலை எழுதினார். மேலும், “சேசுகிறிஸ்துநாதரின் பத்தினி”, “சேசுவின் பாடுகளும் மரணமும்” “சேசுவின் மனித அவதாரமும், பிறப்பும்,பாலத்துவமும்” “”நன்மரண ஆயத்தம்” போன்ற எண்ணற்ற உயரிய நுரல்கள் அவரால் எழுதப்பட்டன. தேவமாதாவைக்குறித்து மிக உருக்கமாக பக்தி நேசத்துடன் பிரசங்கங்கள் வைப்பார். தேவமாதாவிடம் அவர் கொண்டிருந்த உச்சிதமான பக்திபற்றுதலினால் லிகோரியார் அதிசயமான தேவவரங்களைப் பெற்றிருந்தார். ஒரு நாள் லிகோரியார் பிரசங்கம் செய்தபோது தேவமாதாவின் சுரூபம் முழுதும் பிரகாசித்தது. அதினி;ன்று புறப்பட்ட சில ஒளிக்கதிர்கள் லிகோரியாரின் முகத்திலேயும் பட்டன. மற்றொருநாள் அவர் பரவசமாகி அநேக அடி உயரத்திற்கு ஆகாயத்தில் நிற்கக் காணப்பட்டார். லிகோரியார் நம் ஆண்டவரின் திவ்ய பாடுகளின் மேல் பக்திகொண்டு தினமும் அவற்றை தியானிப்பார். 

தினமும் சிலுவைப்பாதையை பக்திபற்றுதலுடன் தியானித்து செய்வார். திவ்யநற்கருணை பேழைமுன்பாக ஜெபம் செய்யும்போதும், திவ்யபலிபூசை நிறைவேற்றும்போதும் தேவசிநேக அக்கினி மயமான அவருடைய ஆத்துமம் பக்திசுவாலகருக்குரிய ஞான சுவாலையால் உருகுகிறதுபோல காட்சியளிக்கும். அதிசயமான நடுக்கமுற்றுப் பரவசமாவார். எப்போதும் அதிசயமான சம்மனசுக்குரிய பரிசுத்ததனத்துடன் நடந்து பாவமின்றி இருப்பினும், கடின தபசு செய்வார். ஒருசந்தியாலும், இருப்புச்சங்கிலியாலும் மயிர் ஒட்டியானத்தினாலும் மற்ற தவமுயற்சிகளாலும் தன் சாPரத்தை ஒறுத்தார். இரத்தம் வரும்வரை அதை அடித்துக் கொள்வார். இத்தனைப் புண்ணியங்களால் தமக்குப் பிரியமான தம்முடைய ஊழியனுக்கு, ஆண்டவர், திர்க்கதரிசன வரமும், அற்புதங்களை செய்யும் வரமும், மனிதருடைய இருதய இரகசியங்களை கண்டுபிடிக்கும் வரமும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிற வரமும் தந்தருளினார். தாழ்ச்சியினால் நிண்டகாலத்திற்கு மேற்றிராணியார் பதவியை விலக்கி வந்தார். இறுதியில் 13ம் சாந்தப்பர் பாப்பரசரின் ஆணைக்குக் கிழ்படிந்து நேப்பிள்ஸ் நகருக்கருகில் இருந்த அர்ச்.கொத்தர் ஆகத்தம்மாள் என்ற நகரத்தின் மேற்றிராணியாரானார்.

தொடர்ந்து மனதரித்திரமும், மட்டசனமும், சாPர ஒறுத்தலும், தன் மட்டில் கண்டிப்பும் அனுசரித்தார். மற்றவரிடம் மிகுந்த தயாளமும் இரக்கமும், விசேஷமாய் ஏழைகள் மட்டில் தர்ம உதாரத்தையும் அனுசரித்தார். ஒருதடவை நேப்பிள்ஸ் நகரமெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் உடைமைகளை எல்லாம் விற்று அங்கிருநு;த எல்லா ஏழைகளுக்கும் பங்கிட்டளித்தார். 19 ஆண்டுகளாக மேற்றிராணியாராக அயராமால் உழைத்து தன் மேற்றிராசனத்தையும் பல துறவற சபை மடங்களையும் குருமடங்களையும் சிர்திருத்தினார். லிகோரியார் இவ்வாறு ஒரு நிமிடத்தை முதலாய் வீணாக்காமல எல்லோருக்கும் எங்கும் எப்போதும் அயராமல் நன்மை செய்து வந்தார். தனது குருக்கள்சபையைப் போன்றதொரு சன்னியாச சபையை கன்னியாஸ்திரிகளுக்கும் ஏற்படுத்தினார். தன் ஓய்வு நேரத்தில் லிகோரியார் வேதசாஸ்திர நுரல்களையும் அநேக பக்திக்குரிய நுரல்களையும் எழுதினார். வயதுமூப்பின் காரணமாவும் தனக்கிருந்த நோயின் காரணத்தினாலேயும் தன் மேற்றிராசனத்தை விட்டு விட்டு தன் சபையினருடன் தங்குவதற்கு பாப்பானவரிடம் அனுமதி கோரினார்.

கடைசியில் 6ம் பத்திநாதர் பாப்பரசருடைய அனுமதியின்பேரில் நொசெரா என்ற ஊரில் தமது சபை மடத்தில் வந்து சேர்ந்தார். அங்கு புத்தி தெளிவுடனும் திடத்துடனும் ஞானதியான பிரசங்கங்கள் செய்தார். குருத்துவத்துக்கரிய திருப்பணிகள் செய்துவந்தார். லிகோரியார் வயதுமுதிர்ந்த காலத்தில் ஒரு நாள் அவருடைய மடத்தின் அருகில் இருந்த வெசுவியஸ் எரிமலை திடீரென்று நெருப்பைக் கக்க துவங்கியது. இதைக்கண்ட மற்ற சந்நியாசிகள் அவரிடம் கூறியதும், அவர் உடனே வானளாவி நெருப்புடன் வந்த கரும்புகையைப் பார்த்தார். உடனே, அஞ்சி, “சேசுவே” என்று மூன்று முறை கூறினார். பிறகு, அந்த எரிமலையை நோக்கி மிகப்பெரிய சிலுவை அடையாளம் வரைந்தார். என்ன அதிசயம். உடனே அந்த மலை நெருப்பைக் கக்குவதை நிறுத்திற்று. இறுதியில் நோயினால் ஏற்பட்ட தளர்வினாலும் 91 வயது ஆனதாலும் வெகுவாய் சோர்ந்து 1787ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாளன்று பாக்கியமான மரணமடைந்து பேரின்ப மோட்ச இராஜ்யத்திலே சேர்ந்தார்.

பாப்பரசர் 16ம் கிரகோரியார் இவருக்கு 1839ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதியில் அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

சனி, 18 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2: 
இளமையில் ஞானம்


அர்ச்.சாமிநாதருக்கு 14 வயதானதும் அக்காலத்தில் ஸ்பெயினில் பிரசித்தி பெற்ற பலென்சியா பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு 10 வருடமாக உயர்கல்வி பயின்றார். அங்கு நிலவிய யாதொரு சுழலும் அவருடைய தேவசிநேக ஜீவியத்தை பாதிக்கவில்லை. அங்கு படிப்பில் அவருடைய அபரமானஅறிவு திறமையும் பழகுவதில் அவர் கொண்டிருந்த சம்மனசைப்போன்ற பரிசுத்ததனமும் பார்ப்பவர் அனைவரையும் அவர்பால் வெகுவாய் கவர்ந்தது. அவர் பிறந்ததிலிருந்தே சர்வேசுரனுடைய காரியங்கள் மட்டுமே அவரைக் கவர்ந்திருந்ததால், தற்பொழுது அவர் இருந்த பல்கலைக் கழகத்தில் நிலவிய உலகக் கவர்ச்சிகள் அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை. 

அங்கு இவர் பயின்ற உலக அறிவியல் இவருடைய உன்னத ஆவல்களை திருப்திபடுத்தவில்லை. வேதஇயலைப் படிப்பதில் தன்னையே விரைந்து ஈடுபடுத்திக் கொண்டார். அதிலுள்ள உன்னத பரலோக ஜீவசுனையின் நீரானது மேலான பரலோக சத்தியத்தைக் கண்டடையும்படி தன் ஆத்துமத்தில் ஏற்பட்டிருந்த தாகத்தைத் தணிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமத்தின் நிரூபங்களையும் தத்துவ இயலையும் ஆழ்ந்து பயில்வதில் 4 வருடங்கள் ஈடுபடலானார். வேதகல்வியை தகுதியுடன் கற்பதற்கு ஒருவனுடைய இருதயமானது தன் ஊனியல்பை மேற்கொள்ள கற்றறிந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். எனவே அவர் அங்கு கல்வி கற்ற 10 வருடங்களும் திராட்சை இரசம் அருந்தாமல் தபசுடன் ஜீவித்திருந்தார்.

தியோடொரிக் அப்போல்டா என்பவர் அர்ச்.சாமிநாதரைப்பற்றி,;இவர் ஒரு சிறுவனாக இருந்தபோதிலும் ஞானத்தில் ஒரு அறிவு முதிர்ந்த துறவியாக காணப்பட்டார். அவருடைய வயதிற்குரிய இன்பங்களுக்கு மேம்பட்ட வயதினராக ஜீவித்தார். நீதியின் மேல் தாகமுள்ளவராக இருந்தார். அவர் தன்னைச் சுற்றியிருந்த இலக்கு ஏதுமில்லாத மூடத்தனமான உலகத்தை விட திருச்சபையையே பெரிதும் தன் கண்ணென போற்றி மகிழ்வார்.

திருச்சபையின் பரிசுத்த உறைவிடமான மகாபரிசுத்த தேவநற்கருணை பேழையே அவருக்கும் தங்கி மகிழும் ஓய்விடமாக இருந்தது. அவருடைய அன்றாட நேரமெல்லாம் ஜெபத்திற்கும் படிப்பிற்கும் சமமாக ஒதுக்கப்பட்டிருந்தது. சாமிநாதர் கொண்டிருந்த உன்னதமான பக்தி பற்றுதலுக்கும் அவர் பக்திபற்றுதலுடன் வேதகற்பனைகளை அனுசரித்து வந்த ஜீவியத்துக்கும் சம்பாவனையாக சர்வேசுரன் உன்னத ஞானத்தை அவருக்கு அளித்தார். சாமிநாதர் அந்த ஞானத்தைக் கொண்டு மகா கடினமான கேள்விகளுக்கும் மிக எளிதாக விடைஅளிப்பவராக திகழ்ந்தார்; என்று குறிப்பிடுகின்றார்.

1190ம் ஆண்டு இலையுதிர்காலம். ஸ்பெயின் நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பலேன்சியா நகரெங்கும் வறுமை0 அதனால் மக்கள் பசி பட்டினியால் மடிந்தனர். இதைக் கண்ட 20 வயது இளைஞரான சாமிநாதர் தனனிடமிருந்த பணத்தைக் கொடுத்தும் தன் உடைமைகளை விற்றும் அநேக ஏழைகளுடைய வறுமையை நீக்கினார். மேலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த புத்தகங்களையும் விற்பதற்கு தீர்மானித்தார்.

அப்போது அவருடைய சக மாணவ நண்பர்கள் அவரிடம், “ இந்த புத்தகங்கள் இல்லாமல் எவ்வாறு உன் கல்வியை தொடரமுடியும்?”; என்று வினவினர். அதற்கு சாமிநாதர், “இவ்வுலகில் வாழ லேண்டிய மனிதரின் சாரங்கள் இறக்கும் தருவாயில் உள்ளபோது, இந்த இறந்த ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் நமக்கு முக்கியமானவையாகுமோ? நான் இப்புத்தகங்கள் இல்லாமலேயே நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார். அவருடைய இந்த பிறர்சிநேக சேவை அவருக்கு பரலோகத்திலிருந்து இன்னும் மேலான வெகுமதிகளைப் பெற்றுத் தந்தது. சாமிநாதர் எல்லா பாடங்களிலும் முன்னைவிட இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தன் வகுப்பிலேயே முதல் தலைசிறந்த மாணவனாக திகழந்தார். 

இவ்வாறு ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக சாமிநாதர் தன் விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் விற்றதைப்பற்றி ஓஸ்மா நகர மேற்றிராணியார் கேள்விபட்டதும் தீரமிக்க இந்த மாணவர் பிற்காலத்தில் ஒரு நல்ல குருவாக தனக்கு நல்ல உதவியாளராக பணிபுரியக்கூடும் என்று எண்ணி சாமிநாதர் தன்னிடம் வரும்படி ஆசித்தார். 

(தொடரும்) 

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1

வெள்ளி, 8 அக்டோபர், 2021

Download - HIDDEN GOD - HOW DO WE KNOW THAT GOD EXISTS ?

 

Fernand Van Steenberghen
PROFESSOR AT THE UNIVERSITY OF LOUVAIN




HOW DO WE KNOW
THAT GOD EXISTS ?

Vere tu es Deus absconditus,
Deus Israel Salvator!
(Isaias, XLV, 15)

TRANSLATED BY
THEODORE CROWLEY, O.F.M.

READER IN SCHOLASTIC PHILOSOPHY AT
THE queen’s UNIVERSITY, BELFAST



PUBLICATIONS
UNIVERSITAIRES  DE LOUVAIN
2, PLACE CARDINAL MERCIER
LOUVAIN



B. HERDER BOOK CO.

314 NORTH JEFFERSON
SAINT LOUIS
MISSOURI 63103
1966




----------------------------Sample pages---------------------------





























வியாழன், 7 அக்டோபர், 2021

Three Greatest Prayer - by St. Thomas Aquinas

 Download Book - Three Greatest Prayer







The three greatest prayers

by St. Thomas Aquinas 1225?-1274


Publication date 1956

Topics                     : Lord's prayer, Ave Maria, Apostles' Creed

Publisher London  : Burns, Oates and Washbourne, Newman ; Westminster

Digitizing sponsor Kahle/Austin Foundation


Language English

89 pages


THE THREE GREATEST PRAYERS


Commentaries on the Our Father, the
Hail Mary and the Apostles’ Creed


by
ST. THOMAS AQUINAS


Translated, by
LAURENCE SHAPCOTE, O.P.


With an Introduction by
THOMAS GILBY, O.P.

Publishers:
BURNS OATES & WASHBOURNE LTD



Sample Pages of the Book