Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - குருத்தோலைகள் (Palm)

 குருத்தோலைகள்

 நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




மதாண்டவர் தமது மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பு ஜெருசலேம்! பட்டணத்தின் மகிமையாய் பிரவேசித்ததின் ஞாபகார்த்தமாக, குருத்து ஞாயிற்றுக் கிழமையில் குருத்துக்களை மந்திரித்துக் கொடுக்கிற வழக்கம் ஏற்பட்டது. நமது திவ்விய இரட்சகர் பட்டணத்தை நெருங்கி வரும்போது திரளான ஜனங்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் அற்புதமானவரும் புகழ் பெற்ற தீர்க்கதரிசியுமானவரைப் பார்க்க வேண்டுமென்ற வினோதப் பிரியத்தால் வந்தவர்கள். வேறு சிலர் அவருக்குள்ள அற்புத வரத்தைக் காட்டி ஏதாவது புதுமை செய்வாரென்று எண்ணி வந்தவர்கள் இன்னும் சிலர் அவர்மட்டில் விசுவாசங்கொண்டு அவரே வெரு காலமாய் எதிர்ப் பார்க்கப் பட்ட இரட்சகர் என்று அங்கீகரித்தவர்கள்.

ஜனங்கள் கையில் குருத்தோலை பிடித்து, மங்களம் பாடிக்கொண்டு, சேசுநாதர் வரும் வழியில் தங்கள் வஸ்திரங்களை விரித்துச் சங்கைசெய்து, அவரை ஆடம்பரத்துடன் அழைத்துச் சென்றார்கள் என்று சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறது. கீழ்த்திசை நாடுகளில் உள்ள ஈந்து ஓலைகள்தான் அவர்கள் கையில் பிடித்திருந்தவை.


ஈந்தோலையின் கருத்து: ஈந்து ஓலை அல்லது குருத்து ஓலை வெற்றிக்கு அடையாளம். சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காட்டுவதற்கு இதை உபயோகப்படுத்தும் வழக்கம் வெகு சாதாரண மானது. அஞ்ஞான ஜனங்களுள், ஜெயசீலரான தளபதிகளும் வெற்றி வீரரும், ஈந்து ஓலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிமையாய்ச் செல்வது நீண்டகால வழக்கம். யூதர்கள், கூடாரத் திருநாள் எனப்பட்ட மாசூல் உற்சவத்தைச் சிறப்பிப்பதற்குக் குருத்து ஓலைகளை உபயோகித்தார்கள். கிறிஸ்தவ வழக்கப்படி வேதசாட்சி களின் வெற்றியைக் குறிப்பிடுவதற்குக் குருத்து ஓலை உபயோகிக் கப்படுகிறது. குருத்துக்களுள்ள மரம் நிழழும் கனியும் தருவதின் பொருட்டுத் தேவ பராமரிப்பின் பாதுகாவலையும் அருட் கொடை  யையும் கட்டிக்காட்டும் குறியாய் விளங்குகிறது.

குருத்து ஞாயிற்றுக்கிழமையில் மந்திரிப்பதற்கு மிகவும் தகுதியான ஓலை ஈந்து (ஈச்ச மர) ஓலைதான் என்று சொல்லத் தேவையில்லை. இது அகப்படாத இடங்களில், தென்னங் குருத்துகளை அல்லது ஒலிவக் கிளைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.

குருத்து மந்திரித்தல்: இந்த சடங்கு எக்காலத்தில் ஆரம்பமாயிற்று என்று திட்டமாய்த் தெரியவில்லை. திருச்சபை பஞ்சாங்கங்களுள் மிகப் பழமையானவைகளிலும் இதர புத்தகங்களிலும் காணக் கிடக்கிற சில குறிப்புகளைக் கவனிக்கும்போது. 5-வது நூற்றாண் டிலேயே இது அனுசரிக்கப் பட்டுவந்ததென்று நினைக்கக் காரண முண்டு, ஆயினும், இதைப்பற்றித் திட்டமான விபரம் சுமார் 700-ம் ஆண்டில் அர்ச். பேதா காலத்தில்தான் காண்கிறோம்.

இந்தச் சடங்கு பெரிய பூசைக்கு முன்பு நடைபெறும். பூசை செய்யப் போகிற குருவானவர் ஊதா  காப்பா (மேலங்கி) அணிந்து, இஸ்ராயேலர் வனாந்தரத்தின் வழியாய் சீனாய் மலைக்குச் சென்ற பிரயாணத்திற் கண்ட பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது ஈத்து மரங்களையும், சர்வேசுரன் அவர்களுக்கு பரமண்டலத்திலிருந்து மன்னாவென்னும் போஜனத்தை அனுப்புவதாக வாக்களித்ததையும் எடுத்துரைக்கிற பழைய ஆகமத்தின் பாகங்களை வாசிக்கிறார். இதன்பின் நமது ஆண்டவர் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்த சம்பவத்தை விவரிக்கிற பாகத்தை அர்ச். மத்தேயு சுவிசேஷத்தி லிருந்து வாசிக்கிறார். இது முடிந்ததும், நமக்கு வெற்றியின் குருத் தோலை கிடைக்கும்படியாக மன்றாடும் ஜெபத்தைச் சொல்லி, குருத்துக்களின் பேரிலும் அவற்றைப் பற்றுதலுடன் வைத்திருப் பவர்கள் பேரிலும் தேவ ஆசிரை மன்றாடி, பேழையிலிருந்த நோவாவிடம் புறா கொண்டு வந்த ஒலிவக்கிளையைக் குறித்தும், குருத்து வெற்றிக்கு அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியும் நேர்த்தியான முகவுரை ஒன்று வாசிக்கிறார் அல்லது பாடுகிறார். சாங்க்துஸ் பாடினபின், ஐந்து வெவ்வேறு ஜெபங்கள் சொல்லி (அர்ச்சியசிஷ்டவாரம் என்னும் புத்தகத்தில் காண்க.) குருத்துகளின் பேரில் மும்முறை தீர்த்தம் தெளித்து மும்முறை தூபங்காட்டிப் பின்னும் ஓர் ஜெபம் சொல்லி முடிப்பார்.

இவ்விதம் மந்திரித்தபிறகு, முதன்முதல் குருக்களுக்கும், அவர்களுக் கொடுப்பார். கிராதியருகில் போய்க் குருத்தை வாங்குவது வழக்கமா யிருந்தாலும், நமது தேவாவயங்களில் ஜனத்திரளின் நெருக்கத்தை முன்னிட்டு, அவ்விதம் செய்ய இயலாததால், ஜனங்கள் இருக்கிற இடத்திலே அவைகளை வாங்கிக்கொள்வது பெரும்பாலும் வழக்க மாயிற்று. பூசை நேரத்தில் நமதாண்டவருடைய பாடுகளின் வரலாற்றை வாசிக்கும் போது, கையில் குருத்துகளைப் பிடித்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் குருத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு கோவிலிலிருந்து வேறொரு கோவிலுக்குச் சுற்றுப்பிரகாராமாய் சென்று, இரண்டாவது கோவிலில் பூசை காண்பது வழக்கமாயிருந்தது. இக்காலத்தில் ஒரே கோவிலைச் சுற்றி வருகிறோம். அச்சமயத்தில் குருத்தைப் பிடித்துக் கொண்டு, நமதாண்டவரை ஜெருசலேம் பட்டணத்துக்குள் ஆடம்பர மாய் அழைத்துச் சென்ற சம்பவத்தை ஞாபகப்படுத்தி, மோட்சமாகிய ஜெருசலேம் நகருக்கு நாம் போய்ச்சேரும் வரத்தை ஆண்டவர் நமக்கு அளித்தருளும்படி மன்றாடுவோமாக!

குரு தூபக்கலசத்தில் சாம்பிராணியைப் போட்ட பிறகு: “ஆண்டவரே, நீர் ஈசோப் என்கிற புல்லினால்" என்று துவங்கும் ஆரம்ப வாக்கியத்தை மட்டும் சொல்லிக்கொண்டு தீர்த்தத்தால் மும்முறை குருத்தோலைகளின்மேல் தெளித்து, மும்முறை தூபம் காட்டுகிறார்.


செபம்

சர்வேசுரா, தேவரீருடைய திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துநாதரை எங்களுடைய இரட்சண்யத்தின் பொருட்டு அவர் எங்களிடமாய்த் தம்மைத் தாழ்த்தி, எங்களைத் தேவரீரிடத்தில் மீளவும் சேர்க்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினீரே: அவர் வேதாகமங்கள் நிறைவேறும் பொருட்டு ஜெருசலேமிற்கு எழுந்தருளினபோது. திரளான விசுவாசிகள் மிகுந்த பற்றுதலுள்ள பக்தியோடு தங்களுடைய வஸ்திரங்களையும் குருத்தோலை களையும் அவரது பாதையில் விரித்தார்களே: நாங்களும் அவருக்கு விசுவாசத்தின் பாதையை ஆயத்தஞ் செய்யவும், இடறும் கல்லும், துர்மாதிரிகையின் பாறையும் அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு, உமது திவ்விய சமூகத்தில் எங்களுடைய நற்கிரியைகள் நீதியென்னும் கிளைகளை விட்டுத் தழைக்கவும். நாங்கள் அவருடைய திருப்பாதச் சுவடுகளை பின்செல்ல அருகராகவும் அநுக்கிரகஞ் செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனும், சதாகாலமும் சீவியரும் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துவின் பேரால் ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக