Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 30 செப்டம்பர், 2015

சின்னக் குறிப்பிடம் (ஏழாம் பிரிவு) Tamil Catechism (Part VII)

ஏழாம்  பிரிவு

தேவ வரப்பிரசாதமும், செபமும் தேவ திரவிய அனுமானங்களும் 

79.  பாவத்தை விலக்கி மோட்சம் அடைவதற்கு நம்முடைய சொந்த பலன் போதுமா?
         போதாது.  நமக்கு தேவ வரப்பிரசாதத்தின் அனுக்கிரகம் வேண்டியது.

80.   தேவ வரப்பிரசாதம் எத்தனை வகை உண்டு?

          இரண்டு வகை உண்டு 
                                  1. தேவ இஷ்டப்பிரசாதம் 

                                   2. உதவி வரப்பிரசாதம்                          

81. தேவ வரப்பிரசாதங்களை அடைவது எப்பிடி?

              செபத்தினாலும், தேவ திரவிய அனுமானங்களினாலும் அடையலாம்.

82.  அடிக்கடி செபம் செய்ய வேண்டுமா?

                    வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.

83. தேவ திரவிய அனுமானங்கள் எத்தனை?
         ஏழு 

84.  ஏழும்  சொல்லு?


85. ஞானஸ்தானம் ஆவதென்ன?

          ஜென்ம பாவத்தையும் கர்ம பாவத்தையும் போக்கி, நம்மை சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற  தேவ திரவிய அனுமானம் 

86.   உறுதி பூசுதல் ஆவதென்ன 

               நம்மை சத்திய வேதத்திலே திடப்படுத்துகிறதற்காக இஸ்பிரித்துசாந்துவையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்கு கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

87.  நற்கருணை ஆவதென்ன?

                  அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும்  முந்திரிகை இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் சேசுநாதர் சுவாமியுடைய திருச்சரீரமும் திரு இரத்தமும் தேவ சுபாபமும் அடங்கியிருக்கிற  தேவ திரவிய அனுமானம்.

88. பச்சாதாபம் ஆவதென்ன?

               ஞானஸ்தானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களை எல்லாம்  விமோச்சனமாக்குகிற தேவ திரவிய அனுமானம்.

89.  அவஸ்தை பூசுதல் ஆவதென்ன?

                 வீயாதிகாரரிடத்தில் மீதியான பாவங்களுக்கு பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரிரத்துக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட தேவ திரவிய அனுமானம்.

90.  குருத்துவம் ஆவதென்ன

                  திவ்ய பலிபூசை செய்யவும், தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் சுதந்திரம் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

91.   மெய்விவாகம் ஆவதென்ன

              சமுசாரியாகிறவர்களுக்கு தேவ ஆசிர்வாதத்தையும் அவர்கள் தர்ம வழியில் நடக்கவும் தங்கள் பிள்ளைகளை தக்க பிரகாரமாய் நடப்பிக்கவும் வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

92.  தேவ திரவிய அனுமானம். ஆவதென்ன?

                தேவவரப்பிரசாதத்துக்கு அடையாளமாகவும் அதனை ஆத்துமத்துக்கு கொடுத்தருளும் சாதனமாகவும், சேசுநாதர் சுவாமி ஏற்படுத்தின திருசடங்கே தேவ திரவிய அனுமானம்..

93.  தேவ திரவிய அனுமானங்களுக்குள்ளே  ஒரே விசை மாத்திரம் பெறக் கூடிய தேவ திரவிய அனுமானம்.எவை?

                           1.  ஞானஸ்தானம்
                           2. உறுதி பூசுதல்
                           3.  குருத்துவம்

94.  இம்மூன்றையும் ஒரே விசை மாத்திரம் பெறக் கூடும் ஏன்?

             அவைகளால் நமது ஆத்துமத்தில் அழியாத ஊர் தெய்வீக அட்சரம் பதியப்படுவதினாலே

95.  தேவ திரவிய அனுமானம். நிறைவேறும்படி எத்தனை காரியங்கள் வேண்டியது

            அதற்கான பொருளும்,வார்த்தையும் அவைகளை சரியாய் அனுசரிக்கும் குருவும் ஆகிய இம்மூன்றும்


ஞானஸ்தான விவரம் 

96. ஞானஸ்தானம் கொடுக்கிறதெப்படி?

            1.வது திருச்சபை ஞானஸ்தானம் கொடுக்கிற கருத்தோடு நானும் ஞானஸ்தானம் கொடுக்கிறேன் என்று நினைத்து கொள்கிறது.
            2. வது பிள்ளைக்கு இட வேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலை மீது தண்ணீர் வார்கிறபோது  தான் தானே சொல்ல வேண்டியதாவது 
                             "பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே நான் உன்னை கழுவுகிறேன்"

97.  அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்தானம் கொடுக்கலாமா?

             அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்கலாம்.



            

தேவ திரவிய அனுமானங்கள் (Seven Sacraments in Tamil)

தேவ திரவிய அனுமானங்கள் 



1.   ஞானஸ்தானம் 


2.  உறுதி பூசுதல் 


3. நற்கருணை 



4. பச்சாதாபம் (பாவசங்கீர்த்தனம்)



5. அவஸ்தைபூசுதல் 


6.  குருத்துவம் 


7. மெய்விவாகம்   

ஏழு தலையான புண்ணியங்கள்

ஏழு தலையான புண்ணியங்கள் 




1.   தாழ்ச்சி 


2.  பொறுமை 


3.  கற்பு 


4. உதாரம் 


5. மட்டசனம் 


6. பிறர் சிநேகம் 


7. சுறுசுறுப்பு 

ஏழு தலையான பாவங்கள்

ஏழு தலையான பாவங்கள் 




  1. ஆங்காரம் 
  2. கோபம்
  3. மோகம் 
  4. லோபித்தனம் 
  5. போசனைப் பிரியம் 
  6. காய்மகாரம் 
  7. சோம்பல் 

திங்கள், 28 செப்டம்பர், 2015

திருச்சபை கட்டளைகள்

திருச்சபை கட்டளைகள் மொத்தம்

 ஆறு




  1. ஞாயிற்று கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்கிறது.
  2. வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கிர்த்தனம் செய்கிறது 
  3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.
  4. வெள்ளிக் கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்த போசன நாட்களில் சுத்த போசனமும் ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது 
  5. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடு கல்யாணம் செய்யாதிருக்கிறது 
  6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு  நம்மாலான உதவியை செய்கிறது 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பத்து கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து


  1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே: நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக 
  2. சர்வேசுரனுடைய நாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக 
  3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
  4. பிதாவையும் மாதவையும் சங்கித்திருப்பாயாக 
  5. கொலை செய்யாதிருப்பாயாக 
  6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக 
  7. களவு செய்யாதிருப்பாயாக 
  8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக 
  9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக 
  10. பிறர் உடைமையை  விரும்பாதிருப்பாயாக 

இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கற்பனைகளுள் அடங்கும் 
  •           எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
  • தன்னை தான் நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது]]

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book
முதல் பிரிவு 
ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில் 

1. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர்  யார் ?
   
    சர்வேசுரன் 

2. எத்தனை சர்வேசுரன்?

     ஒரே சர்வேசுரன் 

3. அவர் தேவ சுபாவத்திலே ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையிலே எப்படி இருக்கிறார்?
  
     திரித்துவமாய் இருக்கிறார்.

4. திரித்துவமாய் இருக்கிறார் என்பதற்கு அர்த்தம் என்ன?

     ஆள் வகையிலே மூவராய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

5. இந்த மூன்று ஆட்களுக்கு பெயர் என்ன?

     பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்து.

6.  பிதா சர்வேசுரனா?

     சர்வேசுரன்.

7.  சுதன் சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

8.  இஸ்பிரித்து சாந்து சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

9/ மூவரும் மூன்று சர்வேசுரனா? ஒரே சர்வேசுரனா?

    ஒரே சர்வேசுரன்.

10.  எப்படி ஒரே சர்வேசுரன்?

      இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்,ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினலே மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11.  இவர்களுக்குள்ளே வல்லமை மகிமை முதலான இலட்சனத்தில்  வித்தியாசம் உண்டோ?

      இல்லை.  மூவரும் எல்லாத்திலும் சமமாயிருக்கிரார்கள்.

12.  இப்படி ஏகமும்  திருத்துவமாய் இருக்கிற சர்வேசுரனுக்கு பிரதான இலட்சணங்கள் எத்தனை?

     ஆறு.

13.   ஆறும் சொல்லு?
  
  1. சர்வேசுரன் தாமாய் இருக்கிறார்.
  2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
  3. சரீரம் இல்லாமலிருகிறார்.
  4. அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிறார்,
  5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
  6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

இரண்டாம் பிரிவு 


உலக சிரிஸ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும் 



14.  சர்வேசுரன் எல்லாத்துக்கும் ஆதி காரணமாய் இருப்பது எப்படி?
           
           பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கி காப்பாற்றுகிரதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

15.  சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் எவை?

            சரீரமில்லாத சம்மனசுக்களும் சரீரமும் ஆத்துமமும் உள்ள மனிதர்களும் தான்.

16.  சம்மனசுக்கள் எல்லாரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைக் கொண்டார்களா?

           இல்லை.   சிலர் ஆங்கரதினாளே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.

17.  இப்படி கேட்டுப் போன சம்மனசுக்கள் பெயர் என்ன?

          பசாசுக்கள்.

18.  சர்வேசுரன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்?

          தம்மை அறிந்து சிநேகித்து சேவிக்கவும் அதனால் மோட்சம் அடையவும் உண்டாக்கினார்.

19.  அவர் எந்த அந்தஸ்திலே ஆதிப் பெற்றோரை உண்டாக்கினார்?

        பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

20.    அவர்கள் அதை போக்கடித்ததெப்படி?
           
            பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே அதைப் போக்கடித்தார்கள்.

21.  அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியர்ருக்கும் வந்த கேடு என்ன?

       பசாசுக்கு அடிமையாகி, சாவு நரகம் முதலிய ஆக்கினைக்கு பாதிரவான்கள் ஆனார்கள்.

மூன்றாம் பிரிவு

மனிதனுடைய இரட்சிப்பு

22.  நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?
 
      அர்ச். தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் தான்

23.   அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
       இஸ்பிரித்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவி;த்து அற்புதமாய் பிறந்தார்.

24.   யாரிடத்தினின்று பிறந்தார்?
        ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னிமரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார்.

25.   சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
         சேசு என்னும் பெயரிட்டார்கள்.

26.   சேசு என்னும் பெயருக்கு அர்த்தமென்ன?
         நம்மை இரட்சிக்கிறவர்.

27.  ஆகையால் சேசு கிறிஸ்துநாதர் யார்?
  
           நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனேயாம்.

28.   சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?
         33 ஆண்டுகாலம் இருந்தார்.

29.  இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?
      
            சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து நம்முடைய திவ்விய வேதத்தை போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30.  சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?

       தேவசுபாவம் மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.


31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?

       மனித சுபாவத்திலே பாடுபட்டார்.

32.  யாருக்காக பாடுபட்டார்?

       நமக்காக பாடுபட்டார்.

33.  என்ன பாடுபட்டார்?

        போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34.  அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?

       பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது

35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?

        மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.

36.  உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
 
        40 நாட்கள்.

37.  அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?

       அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?

        பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

39.  இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?

       சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார்.  சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.

நான்காம் பிரிவு 

இஸ்பிரித்து சாந்துவின் வருகையும் திருச்சபையும் 



40. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன
செய்தார்?
      
       தம்முடைய அப்போஸ்தலருக்கு திடனாக இஸ்பிரித்து சாந்துவை அனுப்பினார்.

41. இஸ்பிரித்து சாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

     உலகின் எத்திசையிலும் பிரசங்கித்து திருச்சபையை பரவ செய்தார்கள்.

42. திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

     சேசுநாதர் சுவாமி தான்.

43. அவர் தமக்கு பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை நியமித்தார்?

      அர்ச்.  இராயப்பரை நியமித்தார்.

44. அர்ச். இராயப்பருக்கு பதிலாக திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

      அர்ச்.  பாப்பானவர்.

45. மற்ற அப்போஸ்தலருக்கு பதிலாக இருப்பவர்கள் யார்?

      மேற்றிராணிமார்கள் 

46. சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

      கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.

47. திருச்சபை சொல்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டா?

    இல்லை.

48. இல்லையென்கிறதற்கு அத்தாட்சி என்ன?

     திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கினியைப் போல் உனக்கு ஆக கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.

ஐந்தாம் பிரிவு 


மனிதனுடைய முடிவுகள் 



49.  பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

          சாவு 

50.  சாவுக்குப் பின் சம்பவிப்பதென்ன?
    
         தனித் தீர்வை 

51.  தனித் தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

         நரகம் 

52.  பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

         மோட்சம் 

53.    தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரியாத ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

           உத்தரிக்கிற ஸ்தலம் 


54.  உத்தரிக்கிற ஸ்தலதில் என்னவாக இருக்கிறார்கள்?
  
          தங்கள் பாவங்களுக்கு தக்க வேதனைப் பட்டு உத்தரிக்கிரார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

55.   தனித் தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

         பொதுத் தீர்வை உண்டு.

56.  பொது தீர்வை எப்போது நடக்கும்?
  
         உலகம் முடிவிலே நடக்கும்.

57.   உலகம் எப்படி முடியும்?

          உலகமெல்லாம் நெருப்பிலே வேக மனிதர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள்.

58.   பின்னும் என்ன சம்பவிக்கும்?
   
          சேசுநாதர் சுவாமி மனிதர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு  நடுத் தீர்க்க வருவார்.

59.   எப்படி நடுத் தீர்ப்பார்?

         அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறிய பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசிர்வதித்து மோட்சத்திற்கு கூட்டி கொண்டு போவார்.

60.   பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

         சர்வேசுரனை ஒருகாலும் காணாமலும் ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அனுபவிப்பார்கள்.

61.  நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

        சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். 


ஆறாம் பிரிவு
கற்பனைகளும், பாவமும், புண்ணியமும்

62.  மோட்சத்தை அடைவதற்கு வேத சத்தியங்களை விசுவசிகிரதல்லாமல் இன்னும் செய்யவேண்டியதென்ன?

                     சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்து பாவத்தை தள்ளி புண்ணியத்தை செய்ய வேண்டியது.

63.   சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?
                    
                        பத்து

64.   பத்தும் சொல்லு?
                    

65.   திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
                      
                        ஆறு

66.   ஆறும் சொல்லு?


67.   பாவம் ஆகிறதென்ன?

                         தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்

68.   எத்தனை வகை பாவம் உண்டு?

                            ஜென்ம பாவம்
                             கர்ம பாவம்

69 .ஜென்ம பாவம் ஆவதென்ன?
        
            ஆதித்தாய் ஆதித் தகப்பனாலே உண்டாகி நம்மோடு கூடப் பிறக்கிற பாவம்.

70. கர்ம பாவம் ஆவதென்ன?

           அவரவர் புத்தி விவரம் அறிந்த பிற்பாடு மனது பொருந்தி செய்கிற பாவம்.

71. கர்ம பாவம் எத்தனை வகையுண்டு?

          சாவான பாவம், அற்ப பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

72. சாவான பாவம் ஆவதென்ன?

          தேவ இஷ்டப் பிரசாதத்தை போக்கடித்து நம்மை நரகத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

73. அற்ப பாவம் ஆவதென்ன?

         நம்மிடத்தி;ல் தேவசிநேகத்தை குறைத்து சாவான பாவத்துக்கு வழியுமாக்கி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

74. தலையான பாவங்கள் எத்தனை?
        
            ஏழு

75. ஏழும் சொல்லு?


76. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?

            விசுவாசம்
            நம்பிக்கை
            தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.

77. தலையான பாவங்களுக்க எதிரான புண்ணியங்கள் எத்தனை?

      ஏழு

78. ஏழும் சொல்லு?














Download Traditional Tamil Catholic Songs for free.... Click here....

வியாழன், 2 ஜூலை, 2015

Visitation of Our Lady


July 2: Feast of the Visitation of Our Lady, 

instituted in 1385 by Pope Urban IV

Mary’s first thought after the Archangel’s visit was to hasten to the little city of Ain Kharin and congratulate her cousin Elizabeth on the wonderful event about to take place. As Mary hastened along, those who met her little realized that she bore the Son of God – outwardly humble, sweet, and gracious to all.

So the little girl from Nazareth passed unobserved upon her way. But as she raised her voice in loving salutation to Elizabeth, when entering the house, a marvelous thing happened, for the unborn infant in Elizabeth’s womb leaped for joy as he heard the voice of God’s Mother sounding in his ears. Elizabeth, stricken with amazement, cried out:

“Blessed art thou among women, and blessed is the fruit of thy womb. And whence is this to me, that the mother of my Lord should come to me? For behold, as soon as the voice of thy salutation sounded in my ears, the infant in my womb leaped for joy. And blessed art thou that hast believed, because those things shall be accomplished that were spoken to thee by the Lord.”



In that instant Elizabeth knew that she was standing in the presence of God; knew that the little girl standing before her was God’s Mother; knew all that had taken place at Nazareth; knew of Mary’s fiat.

Then Mary lifted up her voice in high thanksgiving and gave forth the marvelous canticle:

“My soul doth magnify the Lord. And my spirit hath rejoiced in God my Savior. Because He hath regarded the humility of His handmaid; for behold from henceforth all generations shall call me blessed. Because He that is mighty, hath done great things to me; and holy is His name. And His mercy is from Generation unto generations, to them that fear Him. He hath shewed might in His arm: He hath scattered the proud in the conceit of their heart. He hath put down the mighty from their seat, and hath exalted the humble. He hath filled the hungry with good things; and the rich He hath sent empty away. He hath received Israel His servant, being mindful of His mercy: As He spoke to our fathers, to Abraham and to his seed forever.”

In this Magnificat of the humble little girl of Nazareth there is an intense personal note; she sees why it is that she is exalted – her humility. She prophesies as well as she sings, and foretells her future glory. Then she tells that God’s mercy follows those that fear Him; she sings of God’s might; she returns to the thought of God’s mercy, and with this mercy in mind, the little virgin ends her triumphant song.

For three months Mary and Elizabeth rejoiced in each other's company and gave thanks to God for all the wonderful mercy He had bestowed on them – one, the mother of the Herald of God, the other, the Mother of God Himself. Yet these months saw nothing outwardly extraordinary; it was just the quiet outwardly ordinary daily round, such as might be seen in any family.

After those three months the Virgin set out on her way home to Nazareth, and her return was as little noted as her going. She came full of joy and she returned full of joy, for no hint of coming sorrow cast a shadow upon her.

This Feast of the Visitation of Our Lady was instituted by Urban IV, in the year 1385, and confirmed by Boniface IX, in the year 1389.

Feast of the Visitation of Our Lady


சனி, 23 மே, 2015

தேவமாதாவின் மகிமை

1. தேவதாயின் மூலமாகத் தான் இயேசு நாதர் இந்த உலகில் வந்தார். அவர் மூலமாகத்தான் இந்த உலகை அவர் ஜெயம் கொள்வார்
2.  மாதா இஸ்பிரித்துசாந்து வினால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தாழ்ச்சியின் காரணமாக ஒரு மறைந்த வாழ்வு வாழ்ந்தார்
3.  அவர் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார்.
4.  ஆண்டவர் அவரை அவர் உற் பவித்தது முதல் அவர் தம் ஆத்தும சரிரத்தோடு பரலோகத்துக்கு ஆரோபணம் ஆகும் வரையில் அவரை மறைத்து வைத்திருந்தார்.
5. அவருடைய பெற்றோருடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்
வானதூதர் களுடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்.
6.  பிதாவாகிய சர்வேசுரன் அவருக்கு புதுமைகளை செய்யும் வரம் கொடுத்திருந்தாலும் அவர் அதை இந்த உலகில் வாழும் போது செய்யவில்லை
7.  சுதனாகி சர்வேசுரன் தமது அளவு கடந்த ஞானத்தை மாதாவுக்கு  கொடுத்தார். ஆனாலும் அவர் பேசியது குறைவே
8.  இஸ்பிரித்துசாந்து சுவிஷேகர்களையும் அப்போஸ்தலர்களையும் மாதாவைப் பற்றி கொஞ்சமாக பேசவும் எழுதவும் .தூண்டினார். அப்போது தான் யேசுவைப் பற்றி அதிகமாக உலகுக்கு சொல்ல முடியும் என்பதால் தான்
9.   ஆண்டவர் அவரை எவ்வளவு மகிமைப்படுத்தினார என்றால் வானதூதர்கள் அனைவரும் " அருள் நிறைந்த மரியாயே " என்று புகழ்கின்றனர்.  மரியாயினுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக  காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
10 . இந்த உலகம்  முழுவதும் மரியாயின் மகிமையால் நிறைந்துள்ளது.
11. ஆண்டவருக்கு மாதாவினுடைய பெயரால் பல கத்தோலிக்க தேவாலயங்கள் கட்டப்பட்டு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. முந்தைய காலங்களில் கோவில்களில் தேவதாய்க் கென ஒரு பீடம் உண்டு.
13. தேவதாய் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும,அன்பிற்கும், சேவைக்கும் முற்றும் உரியவர்.
14. ஆண்டவர் தமது மிகப் பெரிய காரியங்களை மரியாயின் மூலம் நிறைவேற்ற அவரைப் படைத்தார். ஆண்டவர் அந்த திட்டங்களில் மாறுதலையோ அல்லது மாற்றமோ செய்ய மாட்டார்.
15.  பிதாவாகிய சர்வேசுரன் தமது குமாரனை அர்ச். தேவதாயின் மூலம் இந்த உலகுக்கு தர சித்தமானார்.  பல பிதா பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டில் உள்ள அர்ச்சிஷ்டவர்களும் சுமார் 4000 வருடங்கள் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தாலும், ஆண்டவர் இந்த உலகிற்கு வந்தது தாய் மரியாள் மூலமாகத் தான்.
அர்ச். அகுஸ்டின் சொல்வது போல் கடவுள் தம்முடைய குமாரனை தேவதாயின் மூலம் உலகுக்கு தர சித்தமானார்.
16. சேசுநாதர்  சுவாமி நம்மை இரட்சிப்பதற்காக மரியாயிடத்தில் மனிதவதாரம் எடுத்தார். எனவே நாம் தேவதாய்  மூலமாகவே இரட்சிக்கப்படுவோம்.
17. சேசு நாதார் சுவாமி மனித அவதாரம் எடுப்பதற்கு முன்  அர்ச். கபிரியேல் சம்மனசு மூலம் அனுமதி கேட்ட பின் தான் மரியாயினிடத்தில் மனித அவதாரம் எடுத்தார்.
18. தேவசு தன் அவருடைய உதரத்திலே ஒரு புது ஆதாமாக உருவெடுத்தார்.
19. தேவதாய் ஆண்டவரை பெறும் போது மட்டுமல்ல, அவருடைய இறப்பிலும்  அவரோடு கல்வாரி மலையிலே இருக்க சித்தமானார்
20. பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமை கடவுள் கேட்ட போது தமது ஒரே மகனை பலி கொடுக்க சித்தமானார்.  அதே போல் தேவதாயும் தாம் பாலுட்டி சீராட்டி வளர்த்த மகனையும் கல்வாரி மலையில் நமக்காக ஒப்பு கொடுத்தார்.
21. ஆண்டவருடைய 30 வருட மறைந்த வாழ்வு சுவிஷேஷத்தில் சொல்லப் படவில்லை. அவர் மரியாளுக்கும் சூசைக்கும் கீழ்படிந்திருந்தார்.
22. தேவமாதாவினுடைய வார்த்தையே எலி செபத்தம்மாள் வயிற்றில் இருந்த ஸ்நாபக அருளப்பரை பரிசுத்தமாக்கியது.
23. பிதாவாகிய சர்வேசுரன் உலகில் உள்ள எல்லா ஜலத்தையும் ஒன்றினைத்து அதற்கு கடல் என்று அழைத்தார்.  அதைப் போல் தமது வரப்பிரசாதங்களையும் ஒன்றினைத்து அதற்கு மரியாள் என்று பெயரிட்டார்.
24.  தேவதாய் மூலமாக தான் அனைத்து மோட்ச வரப்பிரசாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.
25.  தேவமாதா இந்த உலகில் கடவுளின் தாயாகவே இருந்தார்.
26.  சேசு நாதரும் இந்த உலகில் உள்ள குழந்தைகள் தன் தாயை எவ்வாறு நேசிக்கு மோ அதைவிட  மேலாகவே அவர் மாதாவை நேசித்தார்.
27. சேசுநாதருக்கு மாதா தாயாக இருந்தாலும் இந்த உலகத்து தாய்மார்களைப் போல தன் மகனுக்கு கட்டளைகளை கொடுக்கவில்லை.
28. தேவமாதா கர்த்தரிடத்தில் இருந்து  எதையும் கேட்கவோ ஆசிக்கவோ இல்லை .
29. சேசுநாதர் முன்னிலையில் மாதாவினுடைய ஜெபங்களும் மன்றாட்டுகளும்  அதிக பலம் வாய்ந்தது.
30 . அவருடைய தாழ்ச்சியின்  காரணமாக மோட்சத்திலுள்ள தூதர்கள் மற்றும் சகல அர்சிஷ்டவர்கள் மீதும் சகல அதிகாரங்களும்  கொடுக்கப்பட்டுள்ளது.
31. ஆண்டவர் மாதாவை வானுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் அரசியாகவும் , அவருடைய படைகளுக்கு தலைவராகவும், ஞான பலன்களுக்கு பாதுகாவலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களை பகிர்ந்து அளிப்பவராகவும், மனிதர்களுக்கு மனு பேசுகிறவராகவும், அவருடைய பகைவர்களை அழிப்பவராகவும்  ஏற்படுத்தினார்.
32. பிதாவாகிய சர்வேசுரன் தேவமாதாவை உலக முடியும் மட்டும் தமது மனு குலத்தின் தாயாக இருக்க விரும்புகிறார்.
33. நமக்கு இயற்கையாகவும் உடல் ரீதியாகவும் தாய் தந்தை இருப்பது போல, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலும், ஞான விதத்திலும் தாய் தந்தையாக மரியாளும் பிதாவாகிய சர்வேசுரனும்  இருக்கிறார்கள்
34. ஆண்டவர் தேவதாயை பிந்தைய காலங்களில் அதிகமாக வெளிபடுத்த சித்தமானார்.
           1.  எனெனில் தேவமாதா தன்னையே இந்த உலகில்  இருந்து ஒளித்துக் கொண்டார்.
             2.  மாதா தன்னையே ஒரு புழுதியை விட தாழ்வாக தாழ்த்திக் கொண்டார்.
               3.  தேவமாதவின் தாழ்மையான வாழ்க்கை
                4. தேவதாய்  தான் சேசுநாதர்  இந்த உலகில் வரக் காரணமாக இருந்தார்
                  5.  சேசு நாதருடைய இரண்டாம்  வருகையும் தேவமாதாவின்  மூலமாக மட்டுமே இருக்கும்.
                    6.  நாம் சேசுநாதரை அடைவதற்கு உத்தமமான  வழி தேவமாதா ஒருவர்  மட்டுமே
35.  தேவமாதாவை கண்டடைகிறவர்கள் எல்லோரும் வாழ்வை கண்டடைகிறார்கள்.  அதாவது சேசுநாதரை கண்டடைகிறார்கள்.
36. தேவமாதாவை தேடாத யாரும்  அவரை கண்டடைவதில்லை.   அவரை அறியாத யாரும்  அவரை தேட மாட்டார்கள். எனவே தேவமாதா முந்தைய காலங்களை விட பிந்தைய காலங்களில் அதிகமாக அறியப்பட வேண்டும்.
37.