Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

தேவமாதாவின் முப்பொழுதும் கன்னிமை ஸ்துதிக்கப்படக்கடவது!

 தேவமாதாவின் முப்பொழுதும் கன்னிமை ஸ்துதிக்கப்படக்கடவது!



கி.பி 508-ல் ரோமாபுரியிலே கிறீஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும், சேசு நாதர் பிறந்த பரம இரகசியத்தைப் பற்றி விவாதம் நடந்தது. இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனாலே, அர்ச். கன்னி மரியம்மாள் கர்ப்பம் தரித்தார்கள் என்பதும், சேசுநாதர் அவர்களிடமாய் அற் புதமாய் பிறந்தார் என்பதும், ஆகையால் தேவதாயார், முப்பொழுதும் கன்னிகையாக இருக் கிறார்கள் என்பதும் கிறீஸ்துவர்களின் விசுவாச சத்தியம். இந்த சத்தியங்களைப் பற்றி விளக்கி, கிறீஸ்துவர்கள் வாதாடினர். யூதர்கள் இதற்கு எதிரிடையாக வாதாடினர்.

ஒரு கன்னிகையிடமாக கர்ப்பம் உண்டாவது மனிதரால் கூடாத காரியம். எனினும், அது சர்வேசுரனுடைய அளவில்லா வல்லமைக்கு எளிய காரியம் என்றும், அவ்வாறே பரி சுத்த கன்னிமரியம்மாளிடம், ஆண்டவர் புதுமையாக உண்டானார் என்றும், கிறீஸ்துவர்கள்

எடுத்துரைத்தார்கள். அதற்கு ஆதாரமாக, அர்ச். கபிரியேல் சம்மனசானவர், தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, அர்ச். கன்னிமரியம்மாள், அவரைப்பார்த்து, தான் எப் பொழுதும் கன்னிகையாயிருக்க, இது எப்படியாகும்?" என்று வினவியதையும், அதற்கு சம் மனசு,"சர்வேசுரனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை" என்று பதிலுரைத்ததையும் எடுத்துக் காட்டினர். இவை முதலான நல்லநியாயங்களையும் யூதர்கள் ஒப்புக் கொள்ளாததால், ரோமா புரியிலிருந்து, யூதர்களைத் துரத்துவதற்கு, கிறீஸ்துவர்கள் யோசனை செய்தார்கள். அச் சமயத்தில், தேவதாயார் ஒரு பிறவிக்குருடன் வழியாக, இந்த விவகாரத்தைத் தீர்த்து வைக்க சித்தமானார்கள்.

அந்தப் பிறவிக் குருடன் எழுதப்படிக்கத் தெரியாதவன். எனினும் மிகவும் புத்திசாலி. குருக்கள் சொன்ன ஞானப் பிரசங்கங்களிலிருந்தும், வாசிக்கக் கேட்ட ஞானப் புத்தங்களிலி ருந்தும், அவன் சத்திய வேதத்தை நன்றாய் அறிந்திருந்தான். அன்றியும், அவன் தேவமாதாவின் மீது உத்தமமான பக்தி கொண்டிருந்தான். அவன், யூதர்கள் சொன்ன தேவ தூஷணங்களைக் கேட்டுக் கோபங்கொண்டான். அவன், தன் நம்பிக்கையெல்லாம் தேவதாயார்மேல் வைத்து, யூதர் சபை நடுவே எழுந்து, அவர்களோடு தர்க்கம் செய்தான். யூதர்களின் ஆட்சேபனை களுக்கு இவன் நல்ல நியாயங்களை எடுத்துக் கூறி தடுத்துப் பேசியதால், அவர்கள் வெட்கிப் பேசாமல் இருந்தார்கள்.

அப்போது ஒருவன் எழுந்து,"ஒன்றும் அறியாத மூடனே! பள்ளிக் கூடத்தையும் பார்க்காத நீ, எங்களோடு தர்க்கிக்க வரலாமா? உனக்கு என்ன ஆணவம்? எங்களுடைய வேதத்தில் உண்டான சாஸ்திரங்களைவிட, நீ, அதிக சாஸ்திரம் அறிந்தவனா? நீ பெரும்பாவி. உன்பாவத்துக்கு தண்டனையாக, உன் இரண்டு கண்களும் இருண்டு கிடக்கின்றன. இவை களையெல்லாம், நீ முன் பின் யோசியாமல், எங்களோடு தர்க்கிக்க வந்ததென்ன?" என்றெல் லாம் குருடனை நோக்கிவசை மாரி பொழிந்தான். பிறவிக் குருடன் இந்த வசை மொழிகளை யெல்லாம் பொருட்படுத்தாமல், தைரியமாய் தர்க்கித்து நின்று வெற்றி பெற்றான். இதைக் கண்ட மற்றொரு யூதன், "மரியம்மாள் எப்பொழுதும் கன்னிகை என்று தர்க்கிக்கும் நீ, ஒரு பைத்தியக்காரன். மரியம்மாளின் சேசு , தன் தாய் எப்பொழுதும் கன்னிகையாயிருக்க அற் புதம் செய்தாரென்றால், பிறவிக் குருடனான உன்னைக்குணப்படுத்துவது எளிய காரியமல்ல வா? இந்த எளிய காரியத்தை செய்யக் கூடாத சேசு, தன் தாயாரை, எப்பொழுதும் கன்னி கையாயிருக்க செய்வதெப்படி?" என்று கூறி நகைத்தான்.

அப்போது குருடன், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவால் ஏவப்பட்டு , யூதர்களைப் பார்த்து, " சேசுகிறீஸ்துநாதர் சுவாமி, என் கண்களுக்கு, வெளிச்சத்தைக் கொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டான்."அப்படியானால், நாங்கள், சேசுநாதர் கன்னிமரியம்மாளிடம் அற்புதமாய் உற்பவித்துப் பிறந்தாரென்று விசுவசிப்போம்” என்றனர். எனினும் அவர்களில் ஒருவன் எழுந்து,"சேசுநாதர், உன் கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடியவரல்ல. ஏனெனில் எங்கள் முன்னோர்கள், நீ விசுவசிக்கும் சேசுவை சிலுவையில் அறைந்து, அவர் உண்மையான கடவுளின் குமாரனானால், சிலுவையிலிருந்து இறங்கி, தன்னை, இரட்சித்துக் கொள்ளட்டும் என்றனர். ஆனால், அவராலே, தன்னை இரட்சித்துக்கொள்ளக் கூடாமற் போ யிற்று. எனவே, அவரால், எவ்வாறு உன் கண்களைக் குணப்படுத்த முடியும்?" என்று ஏளனம் செய்தான்.

குருடன்," சேசுகிறீஸ்துநாதர் என்னைக்குணப்படுத்தப்போவதை உங்கள் கண்களால் காணப் போகிறீர்கள். ஆகையால், நீங்கள், இப்போது கொடுத்த வாக்குப்படி நடக்கத் தவ றினால், உங்கள் சொத்துக்களையெல்லாம் அரசாங்கம் பறிமுதல் செய்து. உங்களையும் இந்நக ரத்தை விட்டுத் துரத்துவார்கள்" என்று கூறினான். அதற்கு, அவர்கள் சம்மதித்து, சாட்சியும் வைத்தார்கள். அப்போது பிறவிக் குருடன், இனி வரும் மூன்றாம் நாள், தேவதாயார் தன் திருக் குமாரனை கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தத் திருநாள். அன்றைக்கு நீங்கள் பன்தையோனென்கிற தேவமாதாவின் தேவாலயத்திற்கு வாருங்கள்” என்றான். அதற்கு யூதர் களும் சம்மதித்தனர். அதன்பின் கூட்டம் கலைந்தது.

குருடன் பாப்பாண்டவரிடம் சென்று, நடந்ததையெல்லாம் தெரிவித்தான். அவர் சந் தோஷப்பட்டு, அவன் தேவதாயார்மேல் நம்பிக்கையாயிருக்கும்படி புத்தி சொல்லி, யூதர்களை, கெடுவின்படி, அந்த தேவமாதா கோயிலுக்கு வரும்படி கட்டளையிட்டார். குருடன் அம் மூன்று நாட்களும், தன் வீட்டில் ஒரு சந்தியாயிருந்து, ஆழ்ந்த ஜெபத்தில் நிலைத்திருந்தான். மேலும் எப்பொழுதும் கன்னிகையான தேவதாயாருக்குத்தோத்திரமாக, சில பாடல்களை இயற்றி, அவற்றைப் பாடினான். மூன்றாம் நாள், குறித்தபடி, தேவமாதாவின் தேவாலயத்தில், யூதர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் அநேக ஆயிரம் பேர் வந்து கூடினர். தேவால யம் நிரம்பி வழிந்தது.

அப்போது ஒருவன், பிறவிக் குருடன் கையைப் பிடித்து வழிகாட்டிய படி, நடந்து வந்தான். குருடன் மறுகையால் தடியை ஊன்றி மெல்ல நடந்து வந்து, கோயிலை அடைந் தான். அந்த திரளான கூட்டத்தின் நடுவே, யூதர் மத்தியில் வந்து சேர்வதற்கு, அவன் அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு சேர்ந்த பின், தான் இரண்டு கண்களும் தெரியாத வன் என்று, யூதர்கள் அறியும்படி, தன் முகத்தை நன்றாக, அவர்களுக்குக் காண்பித்தான். பிறகு, அங்கிருந்த குருவானவர்கள், திருநாளைக் குறித்து, ஜெபம் செய்யத் தொடங்கினார் கள். அப்போது குருடன் முழந்தாளிட்டு, முப்பொழுதும் கன்னிகையான மிகவும் பரிசுத்த தேவமாதா, தமது கன்னிமையை, ஒரு புதுமையால் விளக்க வேண்டுமென்று மிகுந்த விசு வாச பக்தி சுறுசுறுப்போடும், நம்பிக்கையோடும், வேண்டிக்கொண்டான். குருக்கள் தங்கள் ஜெபத்தை முடித்ததும், குருடன் தன் வழிகாட்டியை, தேவதாயாரின் சுரூபத்தின் அருகே, தன்னை அழைத்துப் போகும்படி கேட்டான். சுரூபத்தை நெருங்கியதும், அவன், தேவதாயா ருக்குத் தோத்திரமாக, தான் இயற்றிய பாடல்களைப் பாடினான். அவன், அப்பாடல்களைப் பாடி முடிந்ததும், தேவமாதாவின் கிருபையால், புதுமையாக, பார்வையடைந்தான்.

இந்தப் புதுமையைக்கண்ட கிறீஸ்துவர்களும், யூதர்களில் 500 பேரும் தேவதாயாரின் முப்பொழுதும் கன்னிமையை விசுவசித்தார்கள். தேவமாதா, திவ்ய சேசுநாதர் சுவாமியை, குழந்தையாய் தமதுதிருவுதரத்தில் உற்பவித்தற்கு முன்னும், தேவபாலனைப் பெற்ற போதும், திவ்ய பாலனைப் பெற்றெடுத்த பிறகும், கன்னிகையாயிருந்தார்கள் என்கிற கத்தோலிக்க விசு வாச சத்தியம் அந்தப்புதுமையால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் புதுமைக்குப் பிறகும், யூதர்களில் பலர், தாங்கள் கொடுத்த வாக்கின்படி நடக்கத் தவறியதால், அவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து, ரோம் நகரத்தை விட்டு வெளியேறினார்கள். விசுவசித்த 500 யூதர்கள் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையின் மக்களாயினர். பின் கத்தோலிக்க விசுவாசிகள் யாவ ரும், அற்புதமாக தேவமாதாவின் புதுமையால் கண்பார்வை பெற்ற குருடனுடனும், மனந் திரும்பிய யூதர்களுடனும் சேர்ந்து தேவதாயாரையும் ஆண்டவரையும் தோத்திரம் செய்த னர்; எல்லாம் வல்ல சர்வசுரனுக்கு நன்றி செலுத்தினர்.


1 கருத்து:

  1. ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    பதிலளிநீக்கு