Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 27 ஜனவரி, 2022

தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்

 தபசுகாலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான தியானம்



“அவர் ஊமையாயிருந்த ஒரு பசாசைத் துரத்தினார்”(லூக்.11:14). பசாசினால் நரகத்திற்குக் கூட்டிச்செல்லப்படும் பாவிகள் கண்கள் திறந்தபடியே நரகத்தில் விழுவதில்லை. நரகத்தில் விழுவதற்குமுன்பாக, பாவிகளுடைய சொந்தப் பாவங்களின் திமையினாலேயே பசாசு அவர்களைக் குருடாக்குகிறது. “ஏனெனில் அவர்கள் கெட்ட எண்ணமே அவர்களைக் குருடாக்கினது” (ஞான 2:21). அது அவ்வாறாக அவர்களை நித்தியக் கேட்டிற்கு இழுத்துச் செல்கின்றது. நாம் பாவத்தில் விழுவதற்கு முன்னால், நாம் செய்யும் திமையினால் எல்லையில்லா சிநேக தேவனான சர்வேசுரனை அவமதிக்கிறோம், ஆண்டவரை நோகச்செய்கிறோம் என்றும் அதனால் நம்மேல் அழிவைக் கொண்டு வருகிறோம் என்றும் கண்டுணராதபடிக்கு நம்மைக் குருடராக்க பசாசு திவரித்து உழைக்கின்றது. பாவத்தில் விழுந்தபிறகு வெட்கத்தினால் நமது பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மை ஊமையாக்கும் முயற்சியில் பசாசு ஈடுபடுகிறது.; இவ்வாறு தேவகற்பனையை மிறி பாவத்தில் விழுந்தபிறகு அப்பாவத்தை பாவசங்கீர்த்தனத்தில் மறைத்தல் என்னும் இன்னும் அதிக பயங்கரத்துக்குரிய
தேவநிந்தையான பாவத்தைக் கட்டிக்கொள்ள வைக்கிறது. இவ்வாறு இரட்டை சங்கிலிகளால் நம்மை பசாசு நரகத்திற்கு இட்டுச்செல்கிறது.
 “ஆண்டவரே என் வாயைக் காவல் படுத்தி, என் உதடுகளைச் சிறைப்படுத்தியருளும்” (சங்.140:3) என்ற தாவிதரசரின் வார்த்தைகளைப் பற்றி விவரிக்கையில் அர்ச். அகுஸ்தினார், “நமது வாயானது தேவதூஷணமாகவோ, அவதூறாகவோ விணாகவோ எதையும் பேசாதபடிக்கு ஒரு கதவினால் அடைக்கப்படவேண்டும். நாம் செய்த பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில்
வெளிப்படுத்துவதற்கு மட்டும் அது திறக்கப்பட வேண்டும். அந்தக் கதவு அழிவதற்கல்ல, ஆனால் திமைகளைத் தடுப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றார். சர்வேசுரனுக்கு எதிராக பேசுவதற்கான சோதனை வரும்போதோ அல்லது பிறர்சிநேகத்திற்கு எதிரான வார்த்தைகளைக் கடும்கோபத்துடன் பேசுவதற்கு சோதனை ஏற்படும்போதோ மௌனத்தை அனுசரிப்பது ஒரு புண்ணியக் கிரியையாகும். ஆனால் பாவசங்கீர்த்தனத்தில் பாவங்களை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பவன் தன் ஆத்துமத்தையே அழிக்கக் கூடிய மாபெரும் தேவ துரோகத்தைக் கட்டிக் கொள்கிறான்.
அர்ச்.அந்தோனினுஸ் பின் வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்: ஒருசமயம் ஒரு அர்ச்சிஷ்டவர், பாவசங்கீர்த்தனம் செய்ய வந்த ஒரு பாவியின் அருகில் பசாசு நிற்பதைக் கண்டார். “அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று அவர் அதை அதட்டினார். அதற்கு அவரிடம், பசாசு, “இவர்கள் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் சமயத்தில் இவர்களிடத்திலிருந்து வெட்கத்தை எடுத்திருந்தேன். பாவசங்கீர்த்தனம் செய்ய வரும் இவர்களிடம், தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படுத்தாதபடிக்கு பாவசங்கீர்த்தனம் செய்வதே அவர்களுக்கு மிக பயங்கரமானதாகும்படிக்கு அந்த வெட்கத்தை; அவர்களிடம் மிண்டும ஏற்படுத்தவே இப்பொழுது இங்கிருக்கிறேன்” என்றது. 
“என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து நாறிப்போயின” (சங். 37:5) எவ்வாறு தொழுநோயினால் வரும் புண்கள் மனித சாPரத்தையேத் தின்று அழித்துக் கொல்கிறதோ, அதே போல் பாவசங்கீர்த்தனத்தில் மறைக்கும் பாவங்கள் இரணப்படுத்தும் புண்களாக மாறி ஞானஜீவியத்தையேக் கொன்று விடும் தொழுநோய்ப் புண்களாகிவிடும். அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர், “நாம் பாவத்தினின்று விலகி இருக்கும்படிக்கு, சர்வேசுரன் பாவத்தை வெட்கத்துக்குரிய ஒரு செயலாக்கினார். மேலும் நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் போது, நம்மை மன்னிப்பதாக சர்வேசுரன் வாக்களித்திருப்பதன் மூலம் நாம் பாவசங்கீர்த்தனத்தின் மேல் முழு நம்பிக்கைக் கொள்ளச் செய்கின்றார். ஆனால் இதற்கு நேர்மாறாக, பசாசு, அளவற்ற இரக்கமுள்ள ஆண்டவா; நம்மை எப்பொழுதும் மன்னிக்கிறார் என்று கூறி நம்மை பாவம் செய்யத் தூண்டுகிறது. நாம் பாவத்தைக் கட்டிக்கொண்ட பிறகு, பாவசங்கீர்த்தனத்தில் அதை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு நம்மிடம் வெட்கத்தைத் தூண்டுகிறது” என்று பிரசங்கிக்கின்றார்.எனவே பிரியமானவர்களே! மகத்துவமிக்கவரும் மகா நன்மையானவருமான நம் நேச இரட்சகரை நோகப்படுத்துகிறோம் என்று நீங்கள் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் போது வெட்கப்படவேண்டும். ஆனால், நிங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை பாவசஙகீர்த்தனத்தில் வெளிப்படுத்து வதற்கு வெட்கப்படுவது
காரணமற்ற மூடச்செயலும் தேவதுரோகமுமாகும். அர்ச்.மரியமதலேனம்மாள் எல்லாருக்கும் முன்பாக நமதாண்டவரின் திருப்பாதங்களில் அமர்ந்து தான் ஒரு பெரும்பாவி என்று அறிவிப்பதற்கும், பலவருடங்கள் துர்மாதரிகையான பாவ ஜீவியத்தில் இருந்த அர்ச்.எகிப்து மரியம்மாள் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கும் வெட்கப்படவில்லையே!; அதேபோல், தன் பாவங்களுக்காக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ததுமல்லாமல், உலகம் முழுவதும் அறியும்படியாக தனது பாவங்களை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியட்ட அர்ச்.அகுஸ்தினார் திருச்சபையின் வேதபாரகராக திகழ்கிறார் என்பதை அறிவோம். இவர்களெல்லாரும் நல்ல பாவசங்கிர்த்தனத்தினால் மட்டுமே பெரும் அர்ச்சிஷ்டதனத்தை அடைந்தார்கள். உலக அரசுகளின் நிதிமன்றங்களில் குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்வானேயாகில் அவனுடைய குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கிறது. ஆனால் நமது நேச இரட்சகரான திவ்ய சேசுநாதர்சுவாமியின் நிதிமன்றத்திலோ தனது பாவங்களை ஏற்று மனஸ்தாபப்படும் ஒரு பாவிக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் அவனுக்கு நித்திய மகிமைக்கான கிரீடத்தையும் அளிக்கிறது. “பாவசங்கீர்த்தனம் செய்த ஒவ்வொரு பாவிக்கும் ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது” என்று அர்ச்.கிறிசோஸ்தம் அருளப்பர் கூறுவார். வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவன் இறந்துவிடாதபடிக்கு மருத்துவரிடம் செல்வது போல, உங்களுடைய ஆத்துமத்தை அழித்துக் கொண்டிருக்கும் அரிக்கும் புண்களான பாவங்களை பாவசங்கீர்த்தனத்தில் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டாம். ஏனெனில் அவற்றால் நிங்கள் நித்தியக் கேட்டிற்கு உள்ளாவிர்கள். “உன் உயிரிழப்பதானாலும் உண்மையைச் சொல்ல நாணாதே” (சர்வ 4:24) “ஐயோ இந்தப்பாவத்தைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாயிருக்கிறது” என்று இப்பொழுது கூறுகிறாய். ஆனால் இந்த வெட்கத்தை இப்பொழுது வெற்றிகொள். அப்போது நீ நித்தியத்திற்குமாகக் காப்பற்றப்படுவாய். “ஏனெனில் பாவத்தை ஒரு வெட்கம் கொண்டுவருவது போல், இன்னொரு வெட்கம் மகிமையையும் தேவ வரப்ரசாதத்தைக் கொண்டு வருகிறது” ( iடி.இ4:25). வெட்கம் இருவகைப்படும். 
முதல்வகையான வெட்கம் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த வெட்கமே, பாவசங்கிர்த்தனத்தில் பாவத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கிறது. இரண்டாவது வகையான வெட்கம், பாவசங்கீர்த்தனத்தின் போது கிறிஸ்துவர்களிடத்தில், “இனி பாவம் செய்யமாட்டேன்”;என்ற உத்தமமான பிரதிக்னையை ஏற்படுத்துகிறது. இந்த வெட்கமே, அவனுக்கு இவ்வுலகில் தேவவரப்ரசாதத்தையும் மோட்சத்தில் நித்திய மகிமையையும் பெற்றுத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக