Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
வெள்ளி, 19 ஏப்ரல், 2024
தேவ தோத்திர பாடல்கள் - தேவ ஸ்பிரித்து சாந்துவே
தேவ தோத்திர பாடல் - தயாபர ராணி
வியாழன், 1 ஏப்ரல், 2021
மாதாவே சரணம் - Tamil Catholic Songs Lyrics
பல்லவி
மாதாவே சரணம் - உந்தன்
பாதாரம் புவிக்காதாரம் - கன்னி
அனுபல்லவி
மா பாவம் எமை மேவாமல்-2
காவீரே அருள் ஈவீரே - கன்னி-மாதாவே
சரணங்கள்
மாசில் உம் மனமும் சேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம்
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம்
பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் - மாதாவே
நானிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக ரஷ்யா ஆஸ்திகம் அடைய
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம்
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் - மாதாவே
சூரியன் சாய - Tamil Catholic Songs Lyrics
1. சூரியன் சாய காரிருள் மெல்ல
சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை
பாருல கெங்கும் நின்றெழுந் தோங்கும்..
பண்புயர் கீதம் வாழ்க மரியே
2. பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும்
பாலகர் நின்று வீடு திரும்ப
அர்ச்சய கோபுரங் களிசைக்கும்
ஆனந்த கீதம் வாழ்க மரியே
3. மாயவுலகிற் சிக்கியுழன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகங் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலந் தீர்க்கும் வாழ்க மரியே
4. சுந்தர வாழ்க்கை தோற்ற மறைய
துன்ப அலைகள் கோஷித் தெழும்பும்
அந்திய காலை எம்மரு குற்றும்
ஆதரவீயும் வாழ்க மரியே
அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics
பல்லவி
அன்னையே எங்கள் செல்வதாடு
அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய
விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே
வேண்டி மன்றாடிடாய்
வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே
சரணம்
மானிட தேவன் இவ்வுலோகத்தில்
வந்தித்தனை நாளாயிற்றே
ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ
இன்னும் விடாமற் போயிற்றே
தன்னை உருவாக்கிய தாதாவை
சற்றும் தேடாமல் விட்டதே
கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே
எம் நாடு நம்பிக் கெட்டதே ‘
சூரியன் சந்திரன் முதலான
சோதிகளைப் பணிந்ததே வீரர்
அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து
தொழத் துணிந்ததே
கண்ணிலே கண்ட தெல்லாம்
சேவித்து கர்த்தனையே மறந்ததே
எண்ணியிந் நாட்டையே உன்
நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே
அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics
பல்லவி
அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே
சரணங்கள்
1. இருளே சூழ்ந்திடும்போதே
உதய தாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே
அருள்வழி காட்டிடுவாயே
அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம்
உன்னைத்துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்