Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 8 ஏப்ரல், 2013

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .


குறிப்பு 
             இயற்பெயர்                  : பெர்தினாந்து      

            பிறப்பு :                              1195
            ஆகுஸ்தினார் சபை :  1210
            பிரான்சிஸ்கன் சபை: 1220
            இறப்பு :                              13.ஜூன் 1231

            புனிதர் பட்டம்              : 1232
           
  பிரான்சிஸ்கன் சபை துறவி, திருச்சபை இன் வேத போதகர்., கோடி அற்புதர், பதுவை புனிதர்....


பிறப்பு 

அர்ச் . அந்தோணியார் போர்த்துகல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்னும் ஊரில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார்.
அந்தோனியாரின் பெற்றோர் அவரை ஒரு கதோலிக்க பள்ளியில் அவரை படிக்க வைத்தனர். அவருடைய ஆசிரியர்கள் அவர் ஒரு வீரனாக வருவார் என்றனர். ஆனால்  அவர் தந்தையோ அதனை மறுத்தார். அவருடைய தந்தைக்கோ அவர் ஒரு நல்ல நீதிமானாக வரவேண்டும் என்ன்பதுதன் ஆசை. 

துறவறம் 

ஆனால்  அந்தோனியார் தன்னுடைய 15 வயதில் ஆகுஸ்தினார் சபையில் சேர   ஆவல் கொண்டார்.1210 ஆம் வருடம் ஆகுஸ்தினார் சபையில் சேர்ந்தார். அவர் சபையில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் அவருடைய நண்பர்கள் அவரை அடிகடி அவரை சந்தித்தனர். இதை அவர் விரும்பாததால் தன்னை coimbra நகரில் உள்ள  ஹோலி கிராஸ் மடத்துக்கு மாற்ற கேட்டு கொண்டார்.

அங்கே அவர் எட்டு வருடங்கள் இறையியல் படித்தார். பின்பு அவர் 1219இல்  குருப்பட்டம் பெற்றார். ஒரு நாள் சில துறவிகளை அவர் மடத்தில் கண்டார். அவர்களிடம் அவர்கள் யார்? எங்கே இருந்து வருகிறார்கள்? என்று வினவினார். அப்போது நாங்கள் ஒரு பிரான்சிஸ்கன் சபை துறவிகள் என்றும், ஆப்ரிக்காவில் உள்ள மோர்ரகோ என்னும் நாட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்று சர்வேசுரனை பற்றி அந்த நாட்டு மக்களுக்கு போதிக்கவும், சில நேரத்தில் வேதசாட்சி மரணம் அடையலாம் என்றும் அந்தோணியாரிடம் சொன்னார்கள். இதை கேட்ட அவர் தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடைய ஆசை கொண்டார்.

பிரான்சிஸ்கன் சபை

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தால்  தானும் ஒரு வேதசாட்சி மரணம் அடையலாம் என்று எண்ணி 1220 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.  பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தான் தன் பேரை அந்தோணியார்  என மாற்றி கொண்டார். சபையில் சேர்ந்த பிறகு அவர் தானும் Morocco தேசம் சென்று வேதம் போதிக்க அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.  அந்தோணியார்  1220 ஆம் ஆண்டு அவர் Morroco  செல்ல கப்பலில் ஏறினார். ஆனால் ஆண்டவருடைய சித்தம் அவர் Morroco சென்று வேத சாற்றி ஆவது அல்ல. எனவே அவர் கப்பல் பயணத்தில் உடல் நிலை சரி  திரும்ப வேண்டியதாயுற்று. கப்பல் கடல் புயலில் சிக்கி போர்துக்கள் நாட்டிலே உள்ள Sicily  அருகே வந்தது.


புதிய அழைப்பு  

அந்தோணியார் Messina  நகரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடத்தில் ஓய்வு எடுத்தார்.மே மாதம் 30,1221 அன்று Assisi  நகரிலே பிரான்சிஸ்கன் சபை துறவிகளின் மாநாடு நடைபெற இருப்பதை அரிந்தார் . ஒரு வாரம் கழித்து ஐரோப்பா தேசத்து பிரான்சிஸ்கன் துறவிகள் அர்ச் பிரான்சிஸ் அசிசி யுடன் சேர்ந்து ஜெபிக்கவும், அவருடைய வார்த்தைகளை கேட்கவும் வந்திருந்தனர்.
அந்த மாநாடுக்கு பிறகு அனைவருக்கும் எங்கு பணி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அந்தோணியார் Monte  Paolo என்னும் இடத்திருக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவர் ஒரு தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  ஒரு முறை Forli  என்னும் இடத்தில் குருப்பட்டம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. அன்று பிரசங்கம் செய்யும் துறவிக்கு பிரசங்கம் செய்ய இயலவில்லை.  ஒருவரும் பிரசங்கம் செய்ய முன் வரவில்லை. எனவே அந்த மடத்தின் தலைவர் அந்தோணியாரிடம் சென்று அவருக்கு என்ன தோணுகிறதோ அதை பிரசங்கம் செய்ய சொன்னார். அன்று அவர் செய்த பிரசங்கம் அங்கு இருந்த அனைவரயும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. அவர் செய்த பிரசங்கம் பற்றி அர்ச் , பிரான்சிஸ் அசிசியாருக்கு சொல்லப்பட்டது. அசிசியார் அவரை குரு மாணவர்களுக்கும் மற்றும் இத்தாலி முழுவது சென்று இறையியல் போதிக்கவும் சொன்னார
அர்ச்  அந்தோணியாரின் பேராலயம் , பதுவா .

போதகர் மற்றும் ஆசிரியர்.

அந்தோணியார் இத்தாலி மட்டும் பிரான்ஸ் தேசம் முழுவதும் பயணம் செய்து போதித்து வந்தார். அவர் பலரை தன்னுடைய பிரசங்கத்தால் சர்வேசுரன் பக்கம் இழுத்தார்.  அவர் தப்பறைகளுக்கு ஒரு சம்மடியகவே இருந்தார்.  அந்தோணியார்  பிறருடைய பாவங்களை குறித்து அவர்களிடம் நேரடியாகவே பேசினார்.
ஒருமுறை  Archbishop Simon De Sully என்பவர் அந்தோணியாரை பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார். Archbishop தன்னை பற்றி பெருமையாக பேசுவார்  என்று எண்ணி இருந்தார். அங்கு பெரும் திரளான மக்கள் கூடி இருந்தனர். அனால் அந்தோணியார் அந்த Archbishop குற்றங்களை அங்கு அந்த மக்கள் முன்னிலையில் சொன்னார். 1223 ஆம்  ஆண்டு பிரான்சிஸ்கன் துறவிகளுக்கு என்று ஒரு  இறையியல் பள்ளி ஒன்றை அவர் நிறுவினார்.

அர்ச். பிரான்சிஸ் அசிசியார் இறந்த பிறகு மடத்தின் தலைவராக அவரை தேர்வு செய்தனர். 1230 ஆம் ஆண்டு அந்த பதவியை துறந்து மீண்டும் போதிக்கும் அலுவலை செய்தார். அதே வருடம் அந்தோணியார் அப்போது போப்பாண்டவராக இருந்த Gregory IX முன்பு பிரசங்கம் செய்யும் அலுவல் அவருக்கு கிடைத்தது. அந்தோணியார் செய்த பிரசங்கத்தை கேட்ட போப் அவரை "வாக்குத்தத்தின் பெட்டகம்" என்று அழைத்தார்.  அந்தோணியார் தவக்காலம் முழுவதும் பதுவா நகரிலே போதித்து வந்தார். அதை கேட்பதற்கு ஆயிரகணக்கான மக்கள் அங்கு கூடினர்.

அந்தோணியாரின்  இறுதி நாட்கள்.

அந்தோணியார்  பதுவா  நகருக்கு  போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார்.
ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella  என்னும் ஊரிலே தனது 35 வயதில்  இறந்தார். 
அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதை அப்போது போப் ஆகா இருந்த Gregory IX  அந்தோணியாருக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்..

1263 ஆம் ஆண்டு அவரது கல்லறையில் இருந்து அவரது புனித பண்டங்களை எடுப்பதற்காக கல்லறையை திறந்தனர். என்ன ஆச்சரியம் அவரது உடல் எல்லாம் அழிந்து போயிற்று. ஆனால்  அவரது நா மட்டும் அழியாமல் அப்பிடியே இருந்தது. அவர் இறந்தது 1231. இன்றும் சர்வேசுரனை பற்றி மக்களுக்கு போதித்த அவரது நா அழியாமல் பதுவா  நகரிலே அவரது ஆலயத்தில் உள்ளது.


அர்ச்  அந்தோணியாரின் சுருபதையோ அல்லது அவரது படங்களை பார்க்கும் போது இரண்டு ஒற்றுமைகளை பார்க்கலாம்.

1.  அர்ச்  அந்தோணியார் கையில் இருக்கும் குழந்தை சேசு.
            அர்ச் அந்தோணியார் தன் நண்பன் திசே என்பவருடைய வீட்டில் ஜெபித்து கொண்டு இருக்கும்  போது குழந்தை சேசு அவருக்கு தோன்றி அவருடன் விளையாடி கொண்டு இருந்தது. அதை அவர் நண்பர் கதவு  சாவி துவாரத்தின் வழியே பார்த்தார். அதனை அறிந்த அந்தோணியார் தான் சாகும் வரை அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி கொண்டார்.
2. அவரது கையில் உள்ள லில்லி மலர்.
             1680 வது வருடம் ஆஸ்திரியா நாட்டில் உள்ள கோவிலில் அவரது திருநாள் அன்று ஒரு நபர் லில்லி மலரை அந்தோணியாரின் சுருபத்தில் வைத்து விட்டு சென்றார். கொஞ்ச நாள் கழித்து அந்த லில்லி வாடாமல் இரண்டு புதிய பூக்கள் பூத்திருந்தன.


----------

நீங்கள் Christian புத்தகங்களை Download செய்ய இங்கே Click  செய்யவும்.

நன்றி...............wwww.singamparayi.blogspot.in



உங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிய படுத்த  கிழே  கிளிக் செய்யவும்.

robinlourdhu1@gmail.com


11 கருத்துகள்:

  1. பெயரில்லாமார்ச் 05, 2020

    Thanks for my project

    பதிலளிநீக்கு
  2. Very usefull information. One suggestion can please add some images about the contant.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜூன் 07, 2022

    AMEN 🙏🙏🙏🙏 pray for me new child gift lady grand me Anthoniya
    🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு