Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 18 அர்ச். அருளப்பர், (St. John)

  அர்ச். அருளப்பர், 

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

 

அர்ச். அருளப்பர் செபதேயுவின் மகனும், அர்ச்.  பெரிய யாகப்பர் (St. James) அவர்களின் சகோதரரும் ஆவார். ஆண்டவருடைய பொது ஊழியத்தின் முதல் ஆண்டில், நம்முடைய கர்த்தரால் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார்.

📜✍🏻+ அர்ச். மார்க் (3, 17): "(மற்றவர்கள் யாரெனில்) செப்தேயுவின் குமாரனாகிய யாகப்பர், யாகப்பருடைய சகோதரனாகிய அருளப்பர்; இவ்விருவருக்கும் இடியின் மக்களென்று அர்த்தமுள்ள போவா னெர்கேஸ் என்று பெயரிட்டார்."

யாகப்பர் மற்றும் அருளப்பர் ஆகியோர் சேசுவால் "போனெர்ஜஸ்" அல்லது "இடியின் மகன்கள்" என்று அழைக்கப்பட்டனர், ஒருவேளை அர்ச். மார்க் 9:38 மற்றும்  இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகரங்களை தண்டிக்க அர்ச். லூக். 9:54 ல் "அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.. இல் காட்டப்பட்டுள்ள வைராக்கியம் போன்ற சில குணாதிசயங்களின் காரணமாக இருக்கலாம்.

அருளப்பர் எப்போதும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்ட சீடராக அழைக்கப்படுகிறார், மேலும் பன்னிரண்டு பேரில் ஒருவரே இரட்சகரை அவரது பாடுகளின் நேரத்தில் கைவிடாது தொடர்ந்து சென்றார். நம் ஆண்டவர் அவரைத் தன் தாயின் பாதுகாவலராக ஆக்கியபோது அவர் சிலுவையின் அடியின் மரியாளோடு நின்றார். 

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 19:26-27 "சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார். 

* 27. மெய்யான கிறீஸ்துவர்களெல்லோரும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்டு அவருக்குச் சீஷர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர் தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனை நோக்கி, இதோ! உன் தாயென்று சொல்லும்போது, தம்முடைய திரு மாதாவை எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தாயாராக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்.

அருளப்பரின் பிற்கால வாழ்க்கை முக்கியமாக ஜெருசலேமிலும் எபேசஸிலும் கழிந்தது. ஆசியா மைனரில் பல தேவாலயங்களை நிறுவினார். அவர் நான்காவது சுவிசேஷத்தையும், 3 நிருபங்கள் மற்றும் காட்சியாகமம் புத்தகத்தையம் எழுதியுள்ளார். - இவை அனைத்தும் கி.பி 70 இல் ரோமானியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது.

அருளப்பர் எப்போதும் கழுகுடன் ஒப்பிடப் படுகிறார். ​​அவரது உயர்ந்த சிந்தனையின் மூலம், அர்ச். அருளப்பர், நாசரேத்தின் இயேசுவின் தெய்வீகத்தின் வேடபாரகர் ஆவார். வியக்க வைக்கும் நினைவாற்றலைக் கொண்ட அவர், கிறிஸ்துவின் பிரசங்கங்களை வாசகருக்கு புரியும் படியாகவும்,  தெளிவாகவும் எழுதினார். இதனாலே பிற்காலத்திலும் கூட மீண்டும் உருவாக்க முடிந்தது. 

அர்ச். அருளப்பர் 95ம் வருடம் ரோமை அரசர் Domitian உத்தரவால் ரோமையில் கைது செய்யப்பட்டார். அவரை கொதிக்கும் எண்ணெயில் தள்ளினர். ஆனால் அவருக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. மாறாக அவர் முன்னிலும் அதிக ஆரோக்கியமுள்ளவராக வெளியே வந்தார்.


பேரரசர் பின்னர் அர்ச். அருளப்பரை பாத்மோஸ் தீவுக்கு வெளியேற்றினார், ஆனால் ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். அப்போஸ்தலர்களில் அருளப்பர் மட்டுமே மற்ற அப்போஸ்தலர்களை போல் வேதசாட்சி மரணம் அடையாமல் எபேசுஸ் நகரில் இயற்கையான மற்றும் அமைதியான மரணம் அடைந்தார். Saint Epiphanus கூற்றுப்படி அருளப்பருடைய மரணத்தின் பொது அவருக்கு வயது 96.

கிறிஸ்தவ சித்திரங்களில் (holy picture)(படம்) எப்போதும் ஒரு கழுகு இருக்கும். இது தீர்க்கதரிசி எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக சொல்லியது. (எசே. 1:10) "அவைகளின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன." 



English ::

December 27

APOSTLE ST. JOHN THE EVANGELIST

John, the son of Zebedee, and the brother of St. James the Great, was called to be an Apostle by our Lord in the first year of His public ministry.

📜✍🏻+ St. Mark (3, 17): "And James the son of Zebedee, and John the brother of James; and he named them Boanerges, which is, The sons of thunder:"

James and John were called by Jesus “Boanerges,” or “sons of thunder,” perhaps because of some character trait such as the zeal exemplified in Mark 9:38 and Luke 9:54, when John and James wanted to call down fire from heaven to punish the Samaritan towns that did not accept Jesus.

John is also called "beloved disciple" and the only one of the Twelve who did not forsake the Saviour in the hour of His Passion. He stood faithfully at the cross when our Lord made him the guardian of His Mother.

John's later life was passed chiefly in Jerusalem and at Ephesus. He founded many churches in Asia Minor. He wrote the fourth Gospel, the 3 Epistles, and the Book of Revelation, - all of which were composed after the destruction of Jerusalem by the Romans in 70 A.D.

Compared with an eagle by his flights of elevated contemplation, Saint John is the supreme Doctor of the Divinity of Jesus of Nazareth. Endowed with an astounding memory, he was able even in his later years, to reproduce the discourses of Christ in such a way as to make the reader experience their power and impact on their audiences as if present to hear them.

John was arrested and brought to Rome in 95 AD and he was by order of Emperor Domitian cast into a cauldron of boiling oil but came forth unhurt and more healthy.

The emperor then banished St. John  to the island of Pathmos, but was freed a year later. He is the only Apostle who died a natural death, surviving all his fellow apostles.

Saint John died in peace at Ephesus in the third year of the reign of emperor Trajan, that is, the hundredth of the Christian era, or the sixty-sixth from the crucifixion of our Lord, Saint John then being about ninety-four years of age, according to Saint Epiphanus.

     🍁🍁🍁🍁🍁🍁🍁


John the Evangelist is usually depicted as a young man. In Christian art, John is symbolically represented by an eagle, one of the creatures envisioned by Ezekiel (1:10)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக