Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக