Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - குருத்தோலைகள் (Palm)

 குருத்தோலைகள்

 நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




மதாண்டவர் தமது மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பு ஜெருசலேம்! பட்டணத்தின் மகிமையாய் பிரவேசித்ததின் ஞாபகார்த்தமாக, குருத்து ஞாயிற்றுக் கிழமையில் குருத்துக்களை மந்திரித்துக் கொடுக்கிற வழக்கம் ஏற்பட்டது. நமது திவ்விய இரட்சகர் பட்டணத்தை நெருங்கி வரும்போது திரளான ஜனங்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் அற்புதமானவரும் புகழ் பெற்ற தீர்க்கதரிசியுமானவரைப் பார்க்க வேண்டுமென்ற வினோதப் பிரியத்தால் வந்தவர்கள். வேறு சிலர் அவருக்குள்ள அற்புத வரத்தைக் காட்டி ஏதாவது புதுமை செய்வாரென்று எண்ணி வந்தவர்கள் இன்னும் சிலர் அவர்மட்டில் விசுவாசங்கொண்டு அவரே வெரு காலமாய் எதிர்ப் பார்க்கப் பட்ட இரட்சகர் என்று அங்கீகரித்தவர்கள்.

ஜனங்கள் கையில் குருத்தோலை பிடித்து, மங்களம் பாடிக்கொண்டு, சேசுநாதர் வரும் வழியில் தங்கள் வஸ்திரங்களை விரித்துச் சங்கைசெய்து, அவரை ஆடம்பரத்துடன் அழைத்துச் சென்றார்கள் என்று சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறது. கீழ்த்திசை நாடுகளில் உள்ள ஈந்து ஓலைகள்தான் அவர்கள் கையில் பிடித்திருந்தவை.


ஈந்தோலையின் கருத்து: ஈந்து ஓலை அல்லது குருத்து ஓலை வெற்றிக்கு அடையாளம். சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காட்டுவதற்கு இதை உபயோகப்படுத்தும் வழக்கம் வெகு சாதாரண மானது. அஞ்ஞான ஜனங்களுள், ஜெயசீலரான தளபதிகளும் வெற்றி வீரரும், ஈந்து ஓலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிமையாய்ச் செல்வது நீண்டகால வழக்கம். யூதர்கள், கூடாரத் திருநாள் எனப்பட்ட மாசூல் உற்சவத்தைச் சிறப்பிப்பதற்குக் குருத்து ஓலைகளை உபயோகித்தார்கள். கிறிஸ்தவ வழக்கப்படி வேதசாட்சி களின் வெற்றியைக் குறிப்பிடுவதற்குக் குருத்து ஓலை உபயோகிக் கப்படுகிறது. குருத்துக்களுள்ள மரம் நிழழும் கனியும் தருவதின் பொருட்டுத் தேவ பராமரிப்பின் பாதுகாவலையும் அருட் கொடை  யையும் கட்டிக்காட்டும் குறியாய் விளங்குகிறது.

குருத்து ஞாயிற்றுக்கிழமையில் மந்திரிப்பதற்கு மிகவும் தகுதியான ஓலை ஈந்து (ஈச்ச மர) ஓலைதான் என்று சொல்லத் தேவையில்லை. இது அகப்படாத இடங்களில், தென்னங் குருத்துகளை அல்லது ஒலிவக் கிளைகளை உபயோகித்துக் கொள்ளலாம்.

குருத்து மந்திரித்தல்: இந்த சடங்கு எக்காலத்தில் ஆரம்பமாயிற்று என்று திட்டமாய்த் தெரியவில்லை. திருச்சபை பஞ்சாங்கங்களுள் மிகப் பழமையானவைகளிலும் இதர புத்தகங்களிலும் காணக் கிடக்கிற சில குறிப்புகளைக் கவனிக்கும்போது. 5-வது நூற்றாண் டிலேயே இது அனுசரிக்கப் பட்டுவந்ததென்று நினைக்கக் காரண முண்டு, ஆயினும், இதைப்பற்றித் திட்டமான விபரம் சுமார் 700-ம் ஆண்டில் அர்ச். பேதா காலத்தில்தான் காண்கிறோம்.

இந்தச் சடங்கு பெரிய பூசைக்கு முன்பு நடைபெறும். பூசை செய்யப் போகிற குருவானவர் ஊதா  காப்பா (மேலங்கி) அணிந்து, இஸ்ராயேலர் வனாந்தரத்தின் வழியாய் சீனாய் மலைக்குச் சென்ற பிரயாணத்திற் கண்ட பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது ஈத்து மரங்களையும், சர்வேசுரன் அவர்களுக்கு பரமண்டலத்திலிருந்து மன்னாவென்னும் போஜனத்தை அனுப்புவதாக வாக்களித்ததையும் எடுத்துரைக்கிற பழைய ஆகமத்தின் பாகங்களை வாசிக்கிறார். இதன்பின் நமது ஆண்டவர் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்த சம்பவத்தை விவரிக்கிற பாகத்தை அர்ச். மத்தேயு சுவிசேஷத்தி லிருந்து வாசிக்கிறார். இது முடிந்ததும், நமக்கு வெற்றியின் குருத் தோலை கிடைக்கும்படியாக மன்றாடும் ஜெபத்தைச் சொல்லி, குருத்துக்களின் பேரிலும் அவற்றைப் பற்றுதலுடன் வைத்திருப் பவர்கள் பேரிலும் தேவ ஆசிரை மன்றாடி, பேழையிலிருந்த நோவாவிடம் புறா கொண்டு வந்த ஒலிவக்கிளையைக் குறித்தும், குருத்து வெற்றிக்கு அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியும் நேர்த்தியான முகவுரை ஒன்று வாசிக்கிறார் அல்லது பாடுகிறார். சாங்க்துஸ் பாடினபின், ஐந்து வெவ்வேறு ஜெபங்கள் சொல்லி (அர்ச்சியசிஷ்டவாரம் என்னும் புத்தகத்தில் காண்க.) குருத்துகளின் பேரில் மும்முறை தீர்த்தம் தெளித்து மும்முறை தூபங்காட்டிப் பின்னும் ஓர் ஜெபம் சொல்லி முடிப்பார்.

இவ்விதம் மந்திரித்தபிறகு, முதன்முதல் குருக்களுக்கும், அவர்களுக் கொடுப்பார். கிராதியருகில் போய்க் குருத்தை வாங்குவது வழக்கமா யிருந்தாலும், நமது தேவாவயங்களில் ஜனத்திரளின் நெருக்கத்தை முன்னிட்டு, அவ்விதம் செய்ய இயலாததால், ஜனங்கள் இருக்கிற இடத்திலே அவைகளை வாங்கிக்கொள்வது பெரும்பாலும் வழக்க மாயிற்று. பூசை நேரத்தில் நமதாண்டவருடைய பாடுகளின் வரலாற்றை வாசிக்கும் போது, கையில் குருத்துகளைப் பிடித்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் குருத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு கோவிலிலிருந்து வேறொரு கோவிலுக்குச் சுற்றுப்பிரகாராமாய் சென்று, இரண்டாவது கோவிலில் பூசை காண்பது வழக்கமாயிருந்தது. இக்காலத்தில் ஒரே கோவிலைச் சுற்றி வருகிறோம். அச்சமயத்தில் குருத்தைப் பிடித்துக் கொண்டு, நமதாண்டவரை ஜெருசலேம் பட்டணத்துக்குள் ஆடம்பர மாய் அழைத்துச் சென்ற சம்பவத்தை ஞாபகப்படுத்தி, மோட்சமாகிய ஜெருசலேம் நகருக்கு நாம் போய்ச்சேரும் வரத்தை ஆண்டவர் நமக்கு அளித்தருளும்படி மன்றாடுவோமாக!

குரு தூபக்கலசத்தில் சாம்பிராணியைப் போட்ட பிறகு: “ஆண்டவரே, நீர் ஈசோப் என்கிற புல்லினால்" என்று துவங்கும் ஆரம்ப வாக்கியத்தை மட்டும் சொல்லிக்கொண்டு தீர்த்தத்தால் மும்முறை குருத்தோலைகளின்மேல் தெளித்து, மும்முறை தூபம் காட்டுகிறார்.


செபம்

சர்வேசுரா, தேவரீருடைய திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துநாதரை எங்களுடைய இரட்சண்யத்தின் பொருட்டு அவர் எங்களிடமாய்த் தம்மைத் தாழ்த்தி, எங்களைத் தேவரீரிடத்தில் மீளவும் சேர்க்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினீரே: அவர் வேதாகமங்கள் நிறைவேறும் பொருட்டு ஜெருசலேமிற்கு எழுந்தருளினபோது. திரளான விசுவாசிகள் மிகுந்த பற்றுதலுள்ள பக்தியோடு தங்களுடைய வஸ்திரங்களையும் குருத்தோலை களையும் அவரது பாதையில் விரித்தார்களே: நாங்களும் அவருக்கு விசுவாசத்தின் பாதையை ஆயத்தஞ் செய்யவும், இடறும் கல்லும், துர்மாதிரிகையின் பாறையும் அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு, உமது திவ்விய சமூகத்தில் எங்களுடைய நற்கிரியைகள் நீதியென்னும் கிளைகளை விட்டுத் தழைக்கவும். நாங்கள் அவருடைய திருப்பாதச் சுவடுகளை பின்செல்ல அருகராகவும் அநுக்கிரகஞ் செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் சர்வேசுரனும், சதாகாலமும் சீவியரும் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமான சேசு கிறீஸ்துவின் பேரால் ஆமென்.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

கிறிஸ்துநாதர் அனுசாரம்

 20.ஆம் அதிகாரம்

ஏகாந்தத்தின் பேரிலும் மௌனத்தின் பேரிலும் வைக்கவேண்டிய பிரியம்





1. நீ தனித்திருந்து உன்னைத்தானே கவனிக்கத்தக்க சமயத்தைத் தேடு; சர்வேசுரனுடைய நன்மைகளை அடிக்கடி நினை. வீண் விநோத விசாரணைகளையெல்லாம் விட்டுவிடு : புத்தியை யோசிக்கச் செய்யும் விஷயங்களைவிட உன் மனதை அனுதாபப்படுத்தி இளகச் செய்யும் விஷயங்களை வாசி. மட்டுத்திட்டமின்றிப் பேசுவதையும், அவசரமின்றி இங்குமங்கும் திரிவதையும், நூதனமானதும் வீணானதுமான பிரஸ்தாபங்களைக் கேட்பதையும் விட்டு நீ விலகினால், பக்திக்குரிய தியானங்களில் நீ கவனஞ் செலுத்துவதற்குப் போதுமானதும் தகுந்ததுமான அவகாசம் உனக்குக் கிடைக்கும். மகா பெரிய அர்ச்சியசிஷ்டர்கள் மனிதருடைய சகவாசத்தைக் கூடுமானபோதெல்லாம் விலக்கி, சர்வேசுரனைச் சேவிக்கும்படி ஏகாந்தத்திற் சீவிப்பதைத் தெரிந்துகொண்டார்கள்.

2.-"மனிதருடன் நான் பழக்கஞ் செய்யும்போதெல்லாம் குறைந்த மனிதனானேன்" என்று செனேக்கா சாஸ்திரி சொல்லியிருக்கின்றார். வெகுநேரம் சம்பாஷிக்கிறவர்கள் அதன் உண்மையை அடிக்கடி அனுபவத்தால் அறிந்துகொள்வார்கள். பேச்சில் மட்டுக் கடவாதிருப்பதை விட ஒன்றும் பேசாமலே இருப்பது அதிக எளிது. மானிடர்கள் நடுவில் தன்னை யோக்கியமாய்க் காப்பதைவிட அறையில் அமைதியாய்த் தனித்திருப்பது அதிக எளிது. அந்தரங்கமும் ஞானமுமான சீவியத்தைச் சீவிக்க விரும்புகிறவன் எவனோ அவன் யேசுநாத சுவாமியுடன் ஜனக்கும்பலினின்று அகன்றுபோக வேண்டியது. அந்தரங்கத்தில் சீவிக்கப் பிரியங் கொள்ளாதவன் ஆபத்தின்றித் தன்னை வெளியே காண்பியான். மௌனப் பிரியனாயிராதவன் எவனும் ஆபத்தின்றிப் பேசான். மனப் பூர்வமாய்த் தாழ்ந்து போகாதவன் எவனும் ஆபத்தின்றி மேலான அந்தஸ்தில் நிலைகொள்ளான். நன்றாய்க் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் எவனும் ஆபத்தின்றி அதிகாரஞ் செலுத்தான். தனக்குள்ளாக நல்ல மனசாக்ஷி யில்லாதவன் எவனும் ஆபத்தின்றி சந்தோஷங் கொள்ளான்.

3. அர்ச்சியசிஷ்டர்களுடைய உறுதியான நிலைமையோ எப்போதும் தேவபயத்தில் பலமாய் வேரூன்றியிருந்தது. தங்களிடத்தில் சிறப்பாக விளங்கும் புண்ணியங்களையும் வரப்பிரசாதங்களையும் நம்பித் தாங்கள் கவனக்குறைவுள்ளவர்களாகவும் தாழ்ச்சிக் குறையுள்ளவர்களாகவும் இருக்கலாமேயென்று அவர்கள்  கருதவில்லை. பாவிகளுடைய உறுதியோ வெனில் ஆங்காரத்தின் பேரிலும் மிஞ்சின நம்பிக்கையின் பேரிலும் ஊன்றியிருக்கிறது; ஆனதால் அது கடைசியில் மோசமாக முடிகின்றது. நீ உத்தம சந்நியாசியாகவும் பக்தியுள்ள வனவாசியாகவும் காணப்பட்ட போதிலும், இவ்வுலகத்தில் பயமில்லாமல் சஞ்சரிக்கலாமென்று பரிச்சேதம் எண்ணாதே.

4. மனிதருடைய எண்ணத்தில் உத்தமராயிருந்தவர்கள்,தங்கள் மிதமிஞ்சின சுய நம்பிக்கையினிமித்தம், அநேகமுறை அதிக பெருத்த ஆபத்துகளுக்கு உள்ளானார்கள். ஆகையால் அனேகர் சற்றும் பயமற்றவர்களா யிராதபடிக்கும், ஆங்காரத்தினால் பெருமை கொள்ளாதபடிக்கும், புறத்தி ஆறுதல்களை அதிக மன உற்சாகத்தோடு தேடாதபடிக்கும் அவர்கட்கு முற்றும் தந்திரசோதனை அற்றுப் போகாதிருப்பதும் அவர்களை அடிக்கடி தந்திர சோதனை அலைக்கழிப்பதும்கூட அதிகப் பிரயோசனமாயிருக்கும். நிலையற்ற இன்பங்களை ஒருபோதுந் தேடாது, உலகக் காரியங்களைப்பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதவன் எவ்வளவோ தூய மனதுடையவனாயிருப்பான்! ஒ! வீண் கவலையெல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டு, இரக்ஷணியத்திற்கும் சர்வேசுரனுக்கும் அடுத்தவைகளை மாத்திரமே சிந்தித்து, தன் நம்பிக்கையை யெல்லாம் சுவாமியின் பேரில் வைத்திருக்கிறவன், எவ்வளவோ ஆழ்ந்த சமாதானமும் அமரிக்கையும் அடைவான்!

5.- துக்க மனஸ்தாபப்படத் தன்னைத்தானே சுறுசுறுப்புடன் அப்பியாசப் படுத்திக்கொள்ளாத எவனும் மேலான ஆறுதலுக்குப் பாத்திரவானல்ல. உண்மையான மனஸ்தாப முணர உமக்கு மனதிருக்குமேயானால், "உங்கள் படுக்கை யறையில் மனஸ்தாபப்படுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கிற பிரகாரம் உன் அறையிற் பிரவேசித்து உலக சந்தடியை நீக்கிவிடு. உன் அறையில் தனிவாசம் செய்வதனால், வெளியில் நீ அநேகமாய் இழந்து போகும் நன்மைகளைக் கண்டடைவாய். அறையில் சாதாரணமாய்த் தங்கி வாசஞ் செய்வது இன்பத் தருகின்றது. அதை அடிக்கடி விட்டகன்று போகிறவனுக்கு அது சலிப்புக் கிடமாகின்றது. நீ மனந் திரும்பின துவக்கத்திலேயே உன் அறைமீது நீ பிரியம் கொண்டு அதில் தங்கியிருந்தால், பிற்காலத் தில் உனக்கு அது பிரிய சிநேகிதன் போலவும், மிகவும் பெரிய ஆறுதலாகவுமிருக்கும்.


6.- மவுனத்திலும் அமரிக்கையிலுமே பக்தியுள்ள ஆத்துமம் விருத்தியடையும்; வேதாகமங்களில் மறைத்திருக்கிற இரகசிய ஞான அர்த்தங்களையுங் கண்டுபிடிக்கும். அப்போது இரவில் கண்ணீர்த் தாரைகளைக் கண்டடையும். அவை அதன் பாவக் கறைகளைச் சுத்தப்படுத்தி எவ்வளவுக்கு அது உலக சந்தடிகளை அகற்றிவிட்டதோ அவ்வளவுக்கு அதைக் கர்த்தருடன் நெருக்கமாய் ஐக்கியப்படுத்துகின்றன. தனக்கு அறிமுகமும் சிநேகமுமானவர்களை விட்டுப் பிரிகிறவன், சர்வேசுரனும் அவருடைய பரிசுத்த சம்மனசுகளும் தன்னை அணுகுவதாக வுணருவான். புதுமை செய்வதைவிட, அந்தகாரச் சீவியத்தில் சீவித்துத் தன் ஆத்தும ரக்ஷணியத்தைக் கவனிப்பது உத்தமம். அரிதாய் வெளியே போகிறதும், தன்னைக் காண்பிப்பதை விலக்குவதும், பிறர் கண்ணுக்கு முதலாய்த் தென்படா மல் ஒதுங்கி ஜீவிக்கிறதும் சந்நியாசியிடத்தில் புகழ்ச்சிக் குரியது.

7.- நீ வைத்துக்கொள்ளக் கூடாதவைகளைக் பார்க்கிறதற்கு ஆசைப்படுவதேன்? 'பூலோகமும் அதன் சுகானுபவங்களும் ஒழிந்துபோகின்றன.' புலன்களின் இச்சைகளால் நீ வெளியே செல்லவும், பயணத்திற்கும் இழுக்கப்படுவாய். ஆனால் அக்காலம் கடந்தபின் மனச்சாக்ஷியில் கலக்கமும் இருதயத்தில் பராக்குமேயன்றி வேறென்ன பயனுண்டாகும்? சந்தோஷமாய் வெளியே புறப்படுகிறவன் பலமுறை கஸ்தியாய்த் திரும்பி வருவான். இரா விழிப்பதில் அநுபவித்த சந்தோஷம் காலையில் துக்கமாக மாறுகின்றது. இவ்விதமாக இலௌகீக சந்தோஷ மெல்லாம் இன்பத்தோடு ஆத்துமத்தில் நுழைந்து, கடைசியில் அதைக் காயப்படுத்திச் சாகடிக்கின்றது. இங்கே நீ பார்க்காத வேறென்னத்தை மற்ற விடங்களில் காணப்போகிறாய்? இதோ வானமும் பூமியும் சகல பூதியங்களும் இருக்கின்றன. பார். அவைகளினின்றே சகலமும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

8.- பூவுலகில் நெடுநாள் நிலைத்திருக்கிற பொருள் யாதொன்றை எவ்விடத்திலாகிலும் நீ காணக்கூடுமோ? நீ சிலசமயம் திருப்தியடைவதாய் நம்புகிறாய்; ஆனால் உன் நம்பிக்கை வீணாய்ப்போம். உன்முன் சகலத்தையும் நீ கண்டாலும், அது விண்காட்சியே தவிர வேறென்ன? பரலோகத்திலிருக்கிற சர்வேசுரனை நோக்கிப் பார்த்து உன் பாவங்களுக்காகவும் அசட்டைத் தனங்களுக்காகவும் அவரை மன்றாடு. விண் காரியங்களை வீணருக்கு விட்டுவிடு; நீயோ சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிவதைமட்டும் கவனி. உன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு, உன் நேசரான யேசுவை உன்னண்டையில் அழைத்துக்கொள். உன் அறையில் அவருடன் தங்கியிரு. வேறெந்த விடத்திலும் அவ்வளவான சமாதானங் காணமாட்டாய். நீ வெளியே புறப் படாமலும் ஊர்ச் செய்திகளைக் காதிற் போட்டுக்கொள்ளாமலு மிருந்தால், உத்தம சமாதானத்தில் அதிக உறுதியாய் நிலைத்திருப்பாய். ஆனால் எப்போது உலக செய்திகளைக் கேட்க நீ பிரியங்கொள்ளுகிறாயோ அப்போது உன் இருதயம் கலக்கத்தினால் வருந்த நேரிடுவது தப்பாது.



அருட்கருவிகள் - விபூதி (Ash)

விபூதி

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

விபூதி என்பது சாம்பல், தபசுகாலத்துக்கு ஆரம்பமாகியிருக்கிற புதன்கிழமை விபூதித் திருநாள் என்று பெயர் வழங்கிவருகிறது. தபசுகாலம் நாற்பது நாள் அடங்கியது. நாம் நமது சரீரத்தைத் தண்டித்து அடக்க வேண்டும் என்பதின் அவசியத்தைத் திருச்சபை நமக்கு இந்த நாட்களில் நினைப்பூட்டுகிறது. தபசு செய்யாமல் அலட்சியமாயிருக்கிறவன் கெட்டழிந்துபோகும் ஆபத்தைத் தேடிக் கொள்கிறான். கிறீஸ்தவன் தனது கடைசி முடிவையும், மண்ணுக்குத் திரும்பிப் போகவேண்டியதையும் எக்காலமும் மறந்துபோகக் கூடாது என்பதும் திருச்சபையின் கருத்து.



நாம் பிறக்கும்பொழுதே, பாவத்தோடு பிறக்கிறோம். பின்னும் புத்தி விபரம் அறிந்தது முதல் எத்தனையோ பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். இவைகளால் சர்வேசுரனுக்கு உண்டாகும் கோபத் தைத் தபசினாலும் பரித்தியாக முயற்சிகளினாலும் தணிக்கப் பிரயாசப்பட வேண்டுமென்று திருச்சபை வலியுறுத்துகிறது. நம் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கடமையை நமக்கு எடுத்துரைப்பதற்காகவே விபூதி திருநாள் அன்று சாம்பலை மந்திரித்து நெற்றியில் பூசுகிற சடங்கு ஏற்படலாயிற்று.

பூர்வீக வழக்கம்:

இருச்சபையில் வழங்கி வருகிற மற்ற அநேக ஆசாரங்களைப் போலவே, சாம்பலின் உபயோகமும் ஜனங்களுக்குள். ஏற்கனவே அநுசரிக்கப்பட்டுவந்த வழக்கங்களில் ஒன்றுதான். பழைய ஆகமங்களில் இதன் உபயோகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது இராஜா தன் பாவங்களுக்காகப் பச்சாதாபப்பட்டு, "சாம்பலைப் போஜனம் போலும் புசித்துக் கண்ணீரால் என் பானத்தைக் கலந்தேன்" என்று கூவினார். யோனாஸ் தீர்க்கதரிசி செய்த பிரசங்கத்தின் பயனாக, நினிவே நகரத்தார் தபசு செய்யத் தீர்மானித்து சாக்குத் துணியை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆகையால் திருச்சபை ஆரம்பத்தில் மனந்திரும்பின யூதர் இந்த வழக்கத்துக்குக் காரணமாயிருந்தார்கள் என்று சொல்ல நியாயமுண்டு.

திருச்சபை ஆரம்ப காலங்களில் சாம்பல் பெரும் பாவிகளுக்கு விதித்த தண்டனைகளில் ஒன்றாயிருந்தது. கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் மன்னிப்படைய வேண்டுமானால், விபூதித் திருநாட் காலையில் தபசுக்குரிய உடை உடுத்திக் கோவில் வாசற்படியில் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களுக்குச் சாக்குத்துணியை அணிந்துகொள்ளக் கொடுத்துச் சாம்பலை அவர்கள் மேல் தூவுவார்கள். அன்று முதல் பெரிய வியாழக்கிழமை வரைக்கும் கோவிலில் பிரவேசிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரசித்தமான பாவிகளல்லாதவர்களில், பக்திமான்கள் சிலர் தாழ்ச்சியின் காரணமாக மேற்கூறினவர்களுக்குப் போலவே தங்கள் பேரிலும் சாம்பலைத் தூவும்படி கேட்டுக் கொண்டார்கள். இதிலிருந்துதான், நாளாவட்டத்தில் கத்தோலிக்கர் யாவருக்கும் சாம்பல் பூசுகிற வழக்கம் உண்டானது. 1090-ம் வருடத்தில் இதைப்பற்றிச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

தற்கால வழக்கம்:

முந்தின வருடக்கில் குருத்து ஞாயிறன்று மந்திரித்த குருத்துகளைச் சுட்டு அந்த சாம்பலைத்தான் விபூதித் திருநாள் அன்று உபயோகிக் கிறார்கள். சில ஞான ஆசிரியர் இதற்கு ஓர் அர்த்தமுங் கூறி விளக்கி யிருக்கிறார்கள். குருத்து வெற்றிக்கு அடையாளம். பாவத்தின் பேரி லும், பசாசின் பேரிலும் நாம் வெற்றி அடையவேண்டும். தாழ்ச்சியும் தபசுமின்றி இந்த வெற்றியை நாம் அடைய முடியாது என்பதற்குச் சாம்பல் அடையாளம் என்று சொல்கிறார்கள்.


சாம்பலை மந்திரிக்கும் போது குருவானவர் சொல் கிற நான்கு ஜெபங்களில் வெகு நேர்த்தியான கருத் துக்கள் நிறைந்துள்ளன. பாவிகளாகிய நம்மை சர்வேசுரன் காப்பாற்றி, சாம்பலும் தூசியுமான நமது பேரில் இரக்கமா யிருந்து, இந்த சாம்பலை  நமக்கு இரட்சண்ய மருந் தாக்கி, நினிவே நகரத் தார் தபசு செய்யத் தீர்மானித்ததைக் கண்டு சர்வேசுரன் அவர்களை அழித்துப் போடாமல் காப்பாற்றின வண்ணம் தபசு செய்து மன்னிப்படைய விரும்புகிற நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவதே இந்த ஜெபங்களில் உள்ள சாராம்சம்.

சாம்பலை மந்திரித்தபின் குருவானவர் அதை எடுத்து இதர குருக்கள் உச்சியிலும் விசுவாசிகளின் நெற்றியிலும் பூசி, "மனிதனே. நீ தூசியாயிருக்கிறாய், மீண்டும் தூசியாய் போவாய் என்று நினைத்துக்கொள்” என்று சொல்கிறார். நாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை இது நமக்கு நினைப்பூட்டு கிறது. ஓர் ஞான ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல் சுட்ட சாம்பலை இன்னும் சுடாத சாம்பலோடு கலக்கிறார். ஆண், பெண், பெரியோர், சிறியோர் சகலரும் இதை நெற்றியில் தரித்துத் தங்கள் கடைசி முடிவை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக. சாம்பலை மந்திரித்துப் பூசுவது நாம் ஒருநாள் மரிக்க வேண்டும் என்பதையும், தாழ்ச்சியும், தபசு முயற்சிகளும் பாவத்துக்குப் பரிகரிக்க அவசியம் என்பதையும் நினைப்பூட்டுவதற்காகவேயன்றி வேறல்ல.

விபூதி மந்திரிக்கும் சடங்கு:

முந்தைய ஆண்டு குருத்து ஞாயிறன்று மந்திரித்த ஒலிவ மரக் கொம்புகள் அல்லது குருத்தோலைகளைச் சுட்டெரித்து எடுத்த சாம்பலைக் குருவானவர் பூசைக்குமுன் மந்திரிக்கிறார். (குரு ஊதா காப்பாவைத் தரித்துக்கொண்டு, பீடத்திலேறி நடுவில் முத்தஞ்செய்து, நிருபப்பக்கஞ் சென்று பின்வருமாறு சொல்லுவார். பாடகர் பாடுவார்கள்.)

ஆரம்ப வாக்கியம் - சங். 68:17:

ஆண்டவரே. உமது இரக்கம் மகா பட்சம் நிறைந்த தாகையால், எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும். ஆண்டவரே, தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்திற் கேற்றபடி எங்களை நோக்கியருளும். (சங். டிெ:2) சர்வேசுரா. தேவரீர் என்னை இரட்சியும்; ஏனெனில் வெள்ளம் என் ஆத்துமம் மட்டும் பெருகி நுழைந்தது. பிதாவுக்கும். (மறுபடியும்: "ஆண்டவரே...."சங்கீதம் வரையில்)

 (குரு அங்கேயே நின்றுகொண்டு, கரங்களைக் குவித்த வண்ணம்:)

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக;
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

செபிப்போமாக: (செபம் 1)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, பச்சாதாபப் படுகிறவர்களை மன்னித்தருளும்; தேவரீரை மன்றாடுகிறவர்கள்மீது இரக்கமாயிரும்: பரமண்டலங்களிலிருந்து உமது பரிசுத்த சம்மனசானவரைத் தயவுகூர்ந்து அனுப்பி, இந்தச் சாம்பலை (இரு முறை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு) ஆசீர்வதித்து அர்ச்சிக்கும்படி செய்தருளும். உமது பரிசுத்த நாமத்தைத் தாழ்ச்சியோடு மன்றாடு கிறவர்களுக்கும். தங்கள் பாவங்களைத் தாங்களே மனதார உணர்ந்து தங்கள் குற்றங்களைக் தாங்களே ஒப்புக்கொண்டு, உமது தெய்வீகத் தயவின் சமுகத்தில் தங்கள் அக்கிரமங்களை நினைத்து, மனம் நொந்து வருந்துகிறவர்களுக்கும், அல்லது உமது தாராளம் நிறைந்த நன்மை பெருக்கத்தைத் தாழ்மையோடும் தளரா நெஞ்சத் தோடும் இரந்து மன்றாடுகிற யாவருக்கும். இந்தச் சாம்பல் இரட் சண்ய சுகந்தரும் மருந்தாயிருப்பதாக! இந்தச் சாம்பலை இட்டுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் மது மகா பரிசுத்த நாமத்தை மன்றாடுவதின் மூலமாகத் தங்கள் பாவங்களினின்று விடுதலை யடையவும், சரீர சுகத்தையும் ஆத்துமப் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகஞ் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

செபிப்போமாக: (செபம் 2)

பாவிகள் அழிந்துபோகவேண்டுமென்றல்ல. ஆனால் அவர்கள் பச்சாதாபப்படவேண்டுமென்று விரும்புகிற சர்வேசுரா, மனித சுபாவத்தின் பலவீனத்தைத் தயவாய்க் கண்ணோக்கி, தாழ்ச்சிக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்படையப் பேறுபெற்றவர்களாகவும் எங்கள் நெற்றியிலிட்டுக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கும் இந்தச் சாம்பலை உமது நன்மைத்தனத்தை முன்னிட்டு (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)ஆசிர்வதித்தருளக் கிருபை செய்து, தாங்களும் சாம்பலாயிருக்கிறோமென்றும், எங்கள் அக்கிரமத்துக் குத் தண்டனையாக மீளவும் சாம்பல் ஆவோமென்றும் அறிந்திருக் கிற நாங்கள் சகல பாவங்களுக்கும் மன்னிப்பையும், மனஸ்தாபப் படுகிறவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிற சம்பாவனையையும் தேவர்ருடைய இரக்கத்தால் அடையும் அநுக்கிரகஞ் செய்தருளும். - எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.


செபிப்போமாக: (செபம் 3)

தாழ்மையைக் கண்டு மனம் இளகுகிறவரும், பாவப் பரிகாரத்தினால் கோபந் தணிகிறவருமான சர்வேசுரா, எங்கள் விண்ணப்பங்களுக்குத் தேவரீருடைய அன்பின் செவிசாய்த்து, இந்தச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் உம் அடியார்கள் சிரசின் மீது உமது ஆசீர்வாத அருளைப் பரிவுடன் பொழிந்து, அவர்களை மனஸ்தாப உணர்ச்சியால் நிரப்பி, அவர்கள் நியாயமாய் கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்து, தந்தருளிய கொடைகள் எந்நாளும் பழுதின்றி நிலைத்திருக்கும்படி கட்டளையிட்டருளும். -எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துளின் பேரால் -ஆமென்,

செபிப்போமாக: (செபம் 4)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, சாம்பலும் சாக்குத் துணியும் அணிந்து தவம் செய்த நினிவே நகரத்தாருக்கு தேவரீருடைய இரட்சண்ய சுகந்தரும் மன்னிப்பையளிக்கச் சித்தமானீரே; தாங்களும் அவர்களைப் போல் மன்னிப் படைவதற்கு ஏற்ற வண்ணம், அவர்களுடைய தவத்தை வெளியரங்கமாய்ச் சாம்பல் பூசிப் பின்பற்றும்படி எங்களுக்குத் தயவாய் அநுக்கிரகஞ் செய்தருளும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

லூர்துமாதா திருநாள் - Our Lady of Lourdes_

 லூர்துமாதா திருநாள்

பிப். 11

-சங். J.M. நிக்கொலாஸ் சுவாமி


பெர்ந்தெத் சூபிரு என்பவள் ஏழை பெற்றோரிடம் பிறந்தவன். அவளுக்கு வயது பதினான்கு. நேர்மையானவள், கீழ்ப்படிந்து நடப்பவள், தன் வாழ்நாளில் மனது பொருந்தி அற்பப் பாவமே செய்யாதவள். அவளுக்கு ஜெபம் என்றால் அதிக பிரியம். வயல் வெளிகளில் அடிக்கடி ஜெபமாலை ஜெபிப்பாள்.

1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாளன்று பெர்ந்தெத். அவளுடைய சகோதரி அந்துவானெற், ஜோன் அபதி என்னும் சிநேகிதி, இம்மூவரும் ஒரு குறுகிய ஓடைப்பக்கம் நடந்துகொண்டிருந்தனர். ஓடையின் அகலம் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும். அன்று வெகு குளிராயிருந்தது. அவர்கள் மூவரும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஓடையின் இடதுபக்கமாக அவர்கள் நடந்து சென்று மஸபியேல் கெபிக்கு எதிராக வந்தார்கள். காலணிகளையும், கால் உறைகளையும் கழற்றிவிட்டு தண்ணீரில் நடத்து ஓடையின் மறுபக்கத்தையடைந்து விறகு பொறுக்குவோம் என பெண்களில் ஒருத்தி கூறினாள். குளிர்ந்த நீரில் நடந்தால் தனக்கு இளைப்பு வியாதி வரும் என பெர்ந்தெத் அஞ்சி, ஜோனை நோக்கி, “என்னை உன் தோளில் வைத்து தூக்கிக் கொண்டு போ” என்றனள். “உனக்கு வரப்பிரியமில்லை யானால் இங்கேயே இருந்துகொள்" என அவள் சொல்லி விட்டாள். பெர்ந்தெத்தைத் தனியே விட்டுவிட்டு இருவரும் மறுபக்கம் சென்றனர்.

பெர்நதெத் தன் காலுறையைக் கழற்ற ஆரம்பிக்கையில், புயல் வீசுவதுபோல் பெரும் சத்தம் கேட்டது. பெர்நதெத் அங்கு மிங்கும் பார்த்தாள். ஒன்றையும் காணோம். சிறிது நேரம் கழித்து முன்போல் அதே சத்தம் கேட்டது. பெர்ந்தெத் பயந்து நிமிர்ந்து நின்று மஸபியேல் கெபிப்பக்கம் திரும்பினாள். குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் ஒன்று வெளிவந்தது. அதற்குப்பின் ஒரு பெண் காணப்பட்டாள். வாலிபப் பெண், மிக அழகுடனிருந்தாள். "அவள் என்னைத் தாயன்புடன் நோக்கி, புன்சிரிப்புக் காண்பித்து, வரும்படி எனக்கு சயிக்கினை காட்டினாள். பயம் என்னை விட்டகன்றது. கண்களைக் கசக்கி மூடித் திறந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் இன்னும் புன்முறுவலுடன் நின்றாள். என்னையறியாமலே ஜெபமாலை யைக் கையில் எடுத்து முழந்தாளிட்டேன். இது தனக்குப் பிரியம் எனத் தெரிவிக்குமாப்போல் அந்தப் பெண் தலையை அசைத்து, தன் வலது கையில் தொங்கிய ஜெபமாலையை எடுத்தாள். ஜெபமாலை தொடங்குமுன் சிலுவை அடையாளம் வரையவேண்டும். வலது கரத்தால் நெற்றியைத் தொட முயன்றேன். கையை உயர்த்த முடிய வில்லை. திமிர்வாதம் போல் இருந்தது. அந்தப் பெண் சிலுவை அடையாளம் வரைந்த பின்னரே. நான் என் கையை உயர்த்தக் கூடியவளானேன். நான் தனியே ஜெபமாலை செய்தேன். அவள் மணிகளை உருட்டிக்கொண்டிருந்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பத்துமணி ஜெபத்துக்குப்பின் என்னுடன் சேர்ந்து, “பிதாவுக்கும் சுதனுக்கும்" என்ற திரித்துவ ஆராதனையைச் சொன்னாள். ஜெபமாலை முடிந்ததும், அவள் குகையினுள் திரும்பினாள். அவளுடன் பொன் நிற மேகமும் மறைந்தது. அவளுக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்.".

பெர்நதெத் ஜெபித்துக்கொண்டிருப்பதை அந்துவானெற்றும் ஜோனும் பார்த்தனர். அங்கு ஜெபித்துக் கொண்டிருக்கும் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். கோவிலில் அநேக ஜெபங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. அது பற்றாதா? ஜெபிப்பதைத் தவிர வேறு எதற்கும் அவள் உதவ மாட்டாள்" என ஜோன் கூறினாள்.

விறகு பொறுக்கிவிட்டு பெண்கள் இருவரும் கெபிப் பக்கமாய்த் திரும்பினர். பெர்ந்தெத் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். மும்முறை அவளை அழைத்தார்கள். அவள் பதிலளிக்கவில்லை. கல் எறிந்தார்கள். ஒரு கல் அவள் தோள் மேல் அடித்தது. அதற்கும் அவள் அசையவில்லை. அவள் செத்துப்போனாளோ என அந்துவானெற் அஞ்சினாள். "செத்துப்போனாள் கீழே விழுந்திருப்பாளே" என ஜோன் சொல்லி அவளுடைய பயத்தை அகற்றினாள். அவர்கள் இவ்விதம் பேசிக்கொண்டிருக்கையில் பெர்ந்தெத் திடீரென பரவசத்தைவிட்டு விழிந்தாள்.

வீட்டுக்குப் போகும் வழியில், தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அவள் வெள்ளையும் நீலமும் கலந்த நிறத்தில் உடை தரித்திருந் தாளென்றும், ஒவ்வொரு பாதத்தின் கீழும் ஒரு மஞ்சள் ரோஜா மலர் இருந்ததென்றும், பெர்ந்தெத் அறிவித்தாள். யாருமே இதை நம்பவில்லை.

இன்னொரு நாள் பெர்நதெத் தன் சிநேகிதிகளுடனும் இன்னும் இருபது சிறுவர்களுடனும் மஸ்பியேல் கெபியருகே நிற்கையில் அந்தப் பெண் தோன்றினாள். பெர்நதெத் கெபியில் தீர்த்தத்தைத் தெளித்தாள். உடனே அந்தப் பெண் புன்முறுவல் பூத்தாள்.

அந்தப் பெண் யாராயிருக்கலாமென பலர் பலவிதமாய் பேசினார்கள். உதவி கேட்டு உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து வந்த ஆத்துமம் என சிலர் நினைத்தார்கள். இவ்விதம் நினைத்தவர்களில் ஒருவர், பெர்ந்தெத்தைப் பார்த்து "அடுத்த முறை அந்தப் பெண் வந்ததும் அவளுக்கு பேனா, மை. காகிதம் இவற்றைக் கொடுத்து, அவளுடைய விருப்பத்தை எழுதும்படி கேள். தான் வருவதன் நோக்கத்தையாவது எழுதட்டும்" என்றார். பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

அந்தப் பெண் சிரித்துக்கொண்டு "நான் சொல்ல இருக்கும் செய்தியை எழுத அவசியமில்லை. இங்கு தொடர்ந்து பதினைந்து நாட்களாக ஒவ்வொரு நாளும் வருவாயா? என்றனள். பெர்நதெத் சரி என்றதும், அந்தப் பெண் "இந்த உலகத்திலல்ல, ஆனால் மறு உலகத்தில் உன்னை நான் பாக்கியவதியாக்குவதாக வாக்களிக்கிறேன்" என்றாள்.

1858-ம் ஆண்டு தபசுகாலத்தில் முதல் ஞாயிறன்று மாதா ஆறாவது முறையாகக் காட்சியளித்தாள், பெர்ந்தெத்திடமிருந்து தன் பார்வையை அவள் அகற்றி கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருடைய முகத்தையும் நோக்கினாள். உடனே மாதாவின் முகத்தில் துயர் பரவியது. திரும்பவும் பெர்நதெத்தை நோக்கி "பாவிகளுக்காக ஜெபி” என முறையிடுகிறாற் போல் மொழிந்தாள்.

பெப்ருவரி 25-ம் நாள் வியாழக்கிழமை ஒன்பதாவது காட்சி. போய் ஊற்று நீரில் கழுவி அதைப் பருகும்படி, தேவதாய் பெர்நதெத்திடம் சொன்னாள். அங்கு ஊற்று ஒன்றும் கிடையாது. ஊற்று அகப்படுமா எனத்தேடிப் பார்த்தாள், ஒன்றும் அகப்படவில்லை.

ஆதலின் அவள் கெபிப் பக்கமாய்த் திரும்பி அன்னை மொழிந்த வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டான். அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. பெர்நதெத் கெபியின் பின்பக்கமாய் ஏறி முழந்தாளிட்டு மணல் கிடந்த ஓர் இடத்தில் தன் கைகளால் ஒரு பள்ளத்தைத் தோண்டினாள். அதுவரை அங்கு ஊற்று கிடையாது. பெர்நதெத் தோண்டியதும் சிறிது தண்ணீர் கழுவவேண்டும், குடிக்கவேண்டும் என மாதா சொல்லி இருந்ததால், மண் கலந்திருந்த அந்த நீரை எடுத்து பெர்ந்தெத் தன் முகத்தில் பூசி, ஊற்றிலிருந்து வந்த நீரை மண்ணோடு குடித்தாள். இன்னொரு விசுவாச முயற்சியையும், தாழ்ச்சி யையும் தேவதாய் கேட்டாள். அருகிலிருந்த சில இலைகளைச் சாப்பிடும்படி தேவதாய் சொன்னதும் பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

இந்த நிலையில் அவள் தன் பழைய இடத்திற்கு வருவதைக் கண்ட மக்களில், விசுவாசிகள் விசனித்தார்கள். அவிசுவாசிகள் சத்தமாய்க் கேலி செய்தார்கள். பின் பெர்நதெத் தன் முகத்தைக் கழுவிகொண்டு மாதாவை நோக்கலானாள்.

அந்த அற்புத ஊற்று சீக்கிரம் உலகப் பிரசித்தியடைந்தது. மறுநாளே அந்த ஊற்று நீர் பெருக்கெடுத்து கேவ் நதியில் போய் விழத் தொடங்கியது. லூயி பூரியெட் என்னும் கல்வெட்டும் குருடன் அந்த ஊற்று நீரில் தன் கண்களைக் கழுவினான். உடனே கண் பார்வை பெற்றான். இதுவே லூர்து நாயகியின் முதற் புதுமை வைத்தியர் களால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு குழந்தையை அதன் தாய், ஊற்று நீரில் குளிப்பாட்டினாள். குழந்தை உடனே முழுச் சுகமும் பலமும் பெற்றது. பாக்களின் அவிசுவாசம் அகன்றது.

"பாவிகளுக்காக" இன்னொரு தாழ்ச்சி முயற்சியும் தபசு முயற்சியும் செய்யும்படி தேவதாய் பெப்ருவரி 26-ம் நாளன்று. அதாவது பத்தாவது காட்சியில் அறிவித்து, “தவம்!, தவம்!, தவம்!" என்றான். "பாவிகளுக்காகத் தரையை முத்தி செய்" என அன்னை கூறியதும், பெர்நதெத் அவ்விதமே செய் தாள். ஆற்றை நோக்கி வந்த சரிவில் கெபியின் முன் முழந்தாளிட்டு அப்படியே நகர்ந்து தரையை முத்தமிட்டுக்கொண்டே உயர ஏறினாள், மக்களும் அவளைப் பின்பற்றி தரையை முத்தி செய்தார்கள். அவள் சயிக்கினை காட்டியதும் அநேகர் முழந்தாளிட்டு பாவிகளுக்காக தரையை முத்தி செய்துகொண்டே பர ஏறினார்கள். இவ்விதம் பலமுறை நடந்தது.

பதினோராவது முறையாக காட்சியளிக்கையில் அந்தப் பெண் “குருக்களிடம் போய், இங்கு எனக்கு ஒரு கோவில் கட்டச்சொல்" என்றாள்.

பெர்நதெத் போன சமயத்தில், பங்குக் குருவான பெரமால் சுவாமியார் தோட்டத்தில் கட்டளை ஜெபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். தோட்ட வாசலைத் திறந்த சத்தம் கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்து, “யார்? என்ன வேண்டும்?" என்றார்.

நான் பெர்ந்தெத் சூபிரு" என அவள் கூறியதும், அவர் அவளை உச்சிமுதல் பாதம்வரை நோக்கிவிட்டு, "ஓ நீயா அந்த சிறுமி? உன்னைப்பற்றி பல அபூர்வக் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். உள்ளே வா" என்றார்.

தான் வந்த நோக்கத்தை பெர்நதத் அறிவித்தாள். அவளிடம் அவர் பல கேள்விகள் கேட்க, யாவற்றிற்கும் அவள் தக்க பதிலளித்தாள். விசாரணை முடிந்ததும் அவர் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவியபின், பெர்நதெத்தின் முன் நின்று, “உன்னை அனுப்பிய அந்த அழகிய பெண்ணிடம் பின்வருமாறு சொல் "தான் அறியாதவர் களுடன் ஒன்றும் வைத்துக்கொள்ள பங்கு சுவாமி விரும்புவதில்லை; எல்லாவற்றிற்கும் முன் அவள் தன் பெயரைச் சொல்லவேண்டும்; கோவில் கட்ட தனக்கு உரிமை உண்டென அவள் எண்பிக்க வேண்டும்; கோவில் கட்டப்பட அவளுக்கு உரிமை உண்டானால், நான் சொல்வதன் பொருள் அவளுக்கு விளங்கும். அவளுக்கு விளங்கா விட்டால் பங்குக் குருவுக்கு இனிமேலாக செய்தி சொல்லி  அனுப்பலாகாது என அவளிடம் சொல்" என்றார்.

மார்ச் 2-ம் நாள் பதினான்காம் முறையாக அந்தப் பெண் தோன்றினாள். கோவில் கட்டப்பட வேண்டும் என்றதுடன் சுற்றுப்பிரகாரங்கள் அங்கு வர தான் விரும்புவதாக அவள் தெரிவித்தாள்.

இன்னொரு முறை பெர்ந்தெத் பங்குக் குருவை அணுகினாள். இம்முறை அவர் கோபித்தார். "நீ பொய் சொல்கிறாய். அவளுக்காக எப்படி நாம் சுற்றுப்பிரகாரங்களை நடத்துவது? உன்னைப்போன்ற வர்களை லூர்து நகரில் வைத்திருப்பதே துன்பம். பட்டணத்தையே நீ குழப்பிவிடுகிறாய். மக்கள் உன் பின் ஓடும்படி செய்கிறாய். உனக்கு ஒரு மெழுகுதிரி தருகிறேன். நீயே சுற்றுப்பிரகாரமாயிரு. அவர்கள் உன்னைப் பின்செல்வார்கள். குருக்கள் தேவையில்லை" என்றார்.

"தான் எவரையும் என் பின் வரும்படிச் சொல்லவில்லை. அவர்கள் தாமாக வருகிறார்கள். சுற்றுப் பிரகாரங்களைப்பற்றி அந்தப் பெண் கேட்டதை நான் எவரிடமும் சொல்லவில்லை; உங்களிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன்" என பெர்நதெத்  மொழிந்ததும், அவர் பெர்நதெத் பக்கமாய்த் திரும்பி, “நீ ஒன்றையும் பார்க்கவில்லையா? குகையிலிருந்து ஒரு பெண் வர முடியாது. அவளுடைய பெயர் உனக்குத் தெரியாது. அப்படியானால் அங்கு ஒன்றும் இருக்க முடியாது" என்றார்.

பெர்நதெத் பயந்து, சுண்டெலியைப்போல் தன்னை அடக்கிக் கொண்டாள். சுவாமியாருக்கு முரட்டுச் சத்தம். அங்குமிங்கும் நடந்துகொண்டு "யாராவது இப்பேர்ப்பட்ட கதையைக் கேட்டது உண்டா? ஒரு பெண்ணாம்! அவளுக்குச் சுற்றுப் பிரகாரம் வேண்டுமாம்!" எனக் கத்தினார். பின் அவர் "கெபியில் ஒரு காட்டு ரோஜாச் செடி மேல் அவள் காட்சியளிப்பதாகச் சொல்கிறாய். அந்தச் செடி பூக்கும்படி அவள் செய்யட்டும். அப்படியானால் நீ சொல்வதை நான் நம்புகிறேன். உன்னுடன் நானும் மஸபியேல் கெபிக்கு வருவதாக வாக்களிக்கிறேன்” என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்டு இருபதாயிரம் ஜனங்கள் கெபியருகே கூடிவிட்டார்கள். இராணுவ வீரர்களை அங்கு கொண்டுவர வேண்டி யிருந்தது. உருவிய வாளை ஏந்திய ஒருவன் துணையாக நின்று பெர்ந்தெத்தைப் பத்திரமாய் அழைத்துச் சென்றான்.

அந்தப் பெண் தோன்றியதும் பங்கு கவாமியாருடைய விருப்பத்தை பெர்ந்தெத் தெரிவித்தாள். பெண் சிரித்தாளேயொழிய தான் இன்னார் என்று சொல்லவில்லை.

மார்ச் 24-ம் நாளன்று பெர்ந்தெத் கெபிக்குச் சென்றாள். ஏற்கனவே அந்தப் பெண் அங்கு நின்றாள். அவளைக் காத்திருக்கப் பண்ணியதற்காக பெர்நதெக் மன்னிப்புக் கேட்டாள். மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என அந்தப் பெண் கூறியதும் பெர்நதத் தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, ஜெபமாலையை எடுத்தாள். ஜெபிக்கையில் ஒரு யோசனை வந்தது. அவள் யார் எனக் கேட்க ஆசை உண்டாயிற்று. "தான் யாரெனச் சொல்லும்படி அவளைக் கெஞ்சிக் கேட்டேன். அந்தப் பெண்ணோ இதற்குமுன் செய்தது போலவே செய்தாள்; தலை குனிந்து புன்சிரிப்புப் பூத்தாள்; பதில் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் சற்று துணிவு வந்தது. தயவுசெய்து உங்கள் பெயரைத் தெரிவியுங்கள் என்றேன். முன்போலவே அவள் தலைகுனிந்து புன்னகை பூத்தாளேயொழிய பதிலொன்றும் சொல்ல வில்லை. மௌனமாயிருந்தாள். நான் அவளுடைய பெயரை அறிய பாத்திரவதியல்ல என அங்கீகரித்து மூன்றாம் முறையாகக் கேட்டேன்."

அந்தப் பெண் ரோஜாச் செடிமேல் நின்றுகொண்டிருந்தாள். புதுமைச் சுரூபத்தின் மாதா நிற்கிறாப்போல் நின்றாள். நான் மூன்றாம் முறையாக என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், அவளுடைய முகம் மாறியது. தாழ்ச்சியுடன் தலை குனிந்தாள். கரங்களைக் குவித்து அவற்றை மார்புவரை உயர்த்தினாள். பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெதுவாகக் கரங்களை விரித்து, என் பக்கமாய்ச் சிறிது சாய்த்து "அமல உற்பவம் நானே" என்று சொல்லி உடனே மறைந்தாள்.

அந்த வார்த்தைகளை மறந்து விடாதபடி பெர்ந்தெத் வீட்டுக்கு வரும் வழியில் அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தாள். நேரே பங்கு சுவாமியாரிடம் போய்த் தெரிவித்தாள். கோவில் கட்ட பணம் இருக்கிறதா என அவர் கேட்க, பெர்நதெத் இல்லை என்றாள். "என்னிடமும் கிடையாது. அந்தப் பெண்ணைத் தரச் சொல்" என அவர் கூறினார்.

அந்தப் பெண் கேட்ட கோவில் அவளுக்குக் கிடைத்தது. பெரமால் சுவாமியே அதைக் கட்டினார். இன்று அது தற்கால உலகிலேயே மிக்க அழகுவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாய்த் திகழ்கிறது.

அந்த அழகிய பெண்ணை பெர்நதெத் கடைசி முறையாகப் பார்த்தது 1858-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் கார்மேல் மாதா திருநாளன்று. அன்றைய காட்சி பதினைந்து நிமிடம் நீடித்தது.



Short History of Our Lady of Lourdes


புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 19 - அர்ச். பிரான்சிஸ் சவேரியார் (St. Francis Xavier)

 வாழ்க்கை வரலாறு

அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று சத்திய வேதத்தைப் போதித்ததினால் அவர் சிந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் நமது ஞானத் தந்தையாகவும் இருக்கிறார். ஆனால் இந்த நவீன காலங் களில் அவர் மீதான பக்தி மறைந்து வருகிறது. ஆன்ம தாகம் நிறைந்த அவரது வாழ்வை அறிந்து, அவரைக் கண்டுபாவித்து, அவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அவர் மீது விசேஷ பிள்ளைக் குரிய பக்தி கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. (ஆர்)

இந்தியாவின் அப்போஸ்தலர்

உ லகமெங்கும் சென்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் உன்னத அலுவல் நமது ஆண்டவரால் திருச்சபை வசம் ஒப்பு விக்கப்பட்டது. இந்த அலுவலைக் கத்தோலிக்கத் திருச்சபை, அப்போஸ்தலர் காலமுதல் இதுவரையில் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வுத்தம தொழிலுக்கு தேவ திருவுளத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வேத போதகர் திருச்சபையின் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்று தூர தேசங்களுக்குச் சென்று கத்தோலிக்க சத்தியங்களைப் போதித்து ஆயிரக்கணக்கான அஞ்ஞானிகளைத் திருச்சபையின் செல்வ மக்களாக்கியிருக்கின்றனர். 16-ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்திப் பெற்ற வேதபோதகர்களுள் முதன்மையானவர் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் என்றால் மிகையாகாது. இவருக்கு அக்காலத்தில் வசித்த பரிசுத்த பாப்புவாகிய 8-ம் உர்பன் இந்தியாவின் அப்போஸ்தலர் என்னும் பட்டமளித்தார். 

பிறப்பு 

இந்தப் பெரிய அப்போஸ்தலர் பிறந்த இடம் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த நவார் நாட்டிலுள்ள சேவியேர் மாளிகை. இவர் பிறந்தது 1506-ம் ஆண்டு. இவரது தாய் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை நவார் நாட்டு இராஜாவாகிய 3-ம் ஜான் ஆல்பிரட் என்பவரின் பிரதான மந்திரிகளுள் ஒருவர்.

அர்ச். சவேரியார் பிறந்த சேவியேர் மாளிகை

பிரான்சிஸ் சவேரியாரின் குடும்பத்தில் உதித்த ஆறு மக்களுள் இவர்தான் கடைசிப்பிள்ளை. இவரது சகோதரி மதலேன் என்பவள் காந்தியா நாட்டிலுள்ள அர்ச். கிளாரா மடத்து சிரேஷ்ட தாயாராக மாட்சிமை பொருந்திய உத்தியோகத்தை வகித்து வந்தார். சகோதரரோ அக்காலத்து வழக்கம்போல் இராணுவத்தில் சேர்ந்து கீர்த்திப் பெற்று விளங்கினர். 

பாரீஸ் நகர் பல்கலைக்கழகம் 

பிரான்சிஸ் சிறுவயதிலேயே கல்வி கற்பதில் பெரும் ஆவல் கொண்டிருந்தபடியால், அவரது தாய் தந்தையர் அவரைப் பாரீஸ் நகர் பல்கலைக்கழகத்திற்குத் தமது கல்விப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்தும்படி அனுப்பினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உயர்தரக் கல்வி ஸ்தாபனங்களுள் அதிமிக சிறப்பும், மேன்மையும் பெற்று விளங்கியது பாரீஸ் பல்கலைக் கழகமாகும். பலதேசத்து மாணவர் வந்துகூடி படிக்குமிடமும் இதுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஆசிரியருள் பிரசித்திபெற்ற அறிஞர்கள் ஆசிரியர் தொழில் நடத்திவந்ததும் இந்தப் பல்கலைக்கழகத்திலேதான். சுபாவத்தில் நுட்பமான புத்தியுள்ள இளைஞனாகிய பிரான்சிஸ் வெகு கவனமாய்ப் பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இளமையிலேயே உயர்ந்த கல்விப் பட்டங்களைப் பெற்று, பெரியோரால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். இவரை அர்ச். பார்பரா கல்லூரியின் பிரதம ஆசிரியருள் ஒருவராக நியமித்தார்கள். தமது சகோதரர்கள் இராணுவத்தில் பெயரும். புகழும் பெறுவதுபோல், தாம் கல்வி துறையில் கீர்த்தியும் செல்வாக்கும் அடையவேண்டுமென்பது பிரான்சிஸ் சவேரியாரின் ஒரே ஆசையாயிருந்தது.

அர்ச். இஞ்ஞாசியார்

ஆனால் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று செய்யும் என்னும் பழமொழிக்கேற்ப நமது நல்ல ஆண்டவர் பெருந்தன்மையும், புத்தி தீட்சண்யமுமுள்ள சவேரியாரை தமது ஊழியத்துக்கு அழைக்க சித்தமாயிருந்தார். "நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உலக இரட்சகர் தமது அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறாரன்றோ? அவ்வாறே இப்போது தாம் சவேரியாரைத் தமது அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டதாக அவருக்கு அறிவிக்கும்படி அர்ச். இஞ்ஞாசியாரை அவரிடம் அனுப்பினார். 

அர்ச். இஞ்ஞாசியார் சவேரியாரைப் போலவே ஸ்பெயின் தேசத்து பிரபுகுலத்தில் பிறந்தவர். அவரைப் போலவே தொடக்கத்தில் இவ்வுலக பெருமை, மகிமையை நாடித் திரிந்தவர். ஆனால் இஞ்ஞாசியார் தேவ திருவுளத்தால் அற்புதமாய் ஏவப்பட்டு, பூலோக சுக செல்வங்கள் அழிவுக்குரியவையென்று உணர்ந்து, உலகத்தைத் துறந்து, கடுந்தபம் புரிந்து, தன்னை அடக்கி, சேசுவின் திரு ஊ ழியத்துக்குத் தன்னை முழுவதும் கையளித்திருந்தவர். இவர் தம்மோடு சேர்ந்து தேவ பணிபுரிய ஓர் புதிய சன்னியாச சபையை ஏற்படுத்த கருத்துக் கொண்டவராய் பாரீஸ் பல்கலைக் கழகத்திற்கு வந்து, பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பெருங் குணாதிசயங்களைக் கண்ணுற்ற அவரைத் தமது தோழனாகத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்து, அவரிடம் சென்று. "பிரான்சிஸ், உலக முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழந்துபோவாயானால் என்ன பிரயோசனம்” என்று சொல்வார். ஆனால் வின் மகிமை யென்னும் உலக மாய்கையில் சிக்குண்டு அழைக்கழிக்கப்பட் டிருந்த அவரது இருதயத்துக்கு அர்ச். இஞ்ஞாசியார் சொன்ன புத்திமதி வேப்பங்காயைப் போல கசப்பாயிருந்தது. உலக சுக செல்வத்தை ஒருங்கே மறுத்து சன்னியாசக்கோலம் பூண்டு தரித்திர திசையில் நடமாடித்திரிந்த இஞ்ஞாசியாரை ஓர் ஏழை மாணவன் என்று எண்ணியிருந்த சவேரியார் அவரை இகழ்ந்து அலட்சியம் செய்தார்.

ஆயினும் இஞ்ஞாசியார் அவதைரியப்படாமல், அர்ச்சியசிஷ்டவர் களுக்குரிய அற்புத தாழ்ச்சி, பொறுமையுடன் சவேரியாரை அணுகி, அவருடைய குலம், குணம், கல்வி, ஒழுக்கம், சாதுர்ய சாமர்த்தியம், யுக்தி, யோசனை ஆகிய சுபாவ நன்மைகளைப் புகழ்ந்துப் பேசி, இத்தகைய சுகிர்த இலட்சணங்களை ஆபரணமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் கத்தோலிக்க வாலிபன் இவ்வுத்தம சுபாவக் கொடைகளைத் தன் இரட்சகரின் திரு ஊழியத்தில் செலவழிப்பதே அழிவில்லாப் புகழ்பெற ஏற்ற வழி என்று அவர் உணருமாறு எடுத்துரைத்தார். சவேரியார் இஞ்ஞாசியாரோடு நெருங்கிப் பழகவே, அவரது யதார்த்த குணத்தையும் பெருந்தன்மையையும் உயர்குலப் பிறப்பையும் கண்டு, மனச்சாட்சியின் குரலுக்குச் செவிக்கொடுத்து, திவ்விய இஸ்பிரித்துசாந்துவின் பரிசுத்த ஏவுதலுக்கு இணங்கி, தம்மை இஞ்ஞாசியார் வசம் ஒப்படைத்தார். இஞ்ஞாசியாரும், அவரை உற்சாகப்படுத்தி தமது உற்ற தோழனாக ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அர்ச் இஞ்ஞாசியார் சேசு சபையை ஸ்தாபிக்கும்போது அச்சபையின் அஸ்திவாரக் கற்கள்போன்ற பத்துபேருள் பிரான்சிஸ் சவேரியார் ஒருவராயிருந்தார்.

இந்தியா வருகை 

1537-ம் ஆண்டு அர்ச். ஸ்நாபக அருளப்பர் திருநாள் அன்று சவேரியாருக்கு வெனிஸ் நகரில் குருப்பட்டம் அளிக்கப் பட்டது. அதன்பின் அர்ச். இஞ்ஞாசியாரும் அவர் தோழர் களும் உரோமையில் ஆத்தும இரட்சண்ய அலுவலில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக் கையில், போர்த்துக்கல் தேசத்து இராஜா இந்தப் புது குருமாரின் பக்திப் பற்றுதலையும், வேதபோதகத் திறமையையும் கேள்வியுற்று, இவர்களுள் ஆறுபேரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென்று பரிசுத்த பாப்பரசருக்கு மனு செய்துகொண்டார். அக்காலத்தில் நமது தேசமாகிய இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முன்வந்து முயற்சி செய்தவர்கள் போர்த்துக்கீசியரே. நமது பரிசுத்த பிதா இராஜாவின் மன்றாட்டுக்கிணங்கி அர்ச் இஞ்ஞாசியார் விருப்பப் பிரகாரம் பிரான்சிஸ் சவேரியார். சீமோன் ரொட்ரிகோஸ் என்னும் இரண்டு சேசுசபைக் குருமாரைப் போர்த்துக்கலுக்கு அனுப்பினார். ரொட்ரிக்கோஸ் சுவாமியார் லிஸ்பன் நகரில் இருக்க நேர்ந்ததால், பிரான்சிஸ் சவேரியார் மாத்திரம் இந்தியாவுக்குப் புறப்பட வேண்டிய தாயிற்று. சங். சவேரியார் சுவாமி தமது 35-ம் வயதில், 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சுப்பலேறி, தமது சொந்த தேசம், அன்புள்ள தாய், சகோதரர், சகோதரி, உற்றார் உறவினர் சகலரையும் விட்டு அந்நியராகிய அஞ்ஞான இந்தியர்களுக்கு சத்திய வேதத்தைப் போதிக்க இந்தியாவை நோக்கிப் புறப்பட்டு 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கோவா துறைமுகத்தில் வந்திறங்கினார்.

கோவா 

அர்ச். சவேரியார் காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரை யோரத்திலுள்ள சில துறைமுகப் பட்டணங்கள் போர்த்துக்  கீசியருக்குச் சொந்தமானவையாயிருந்தன. இவைகளுள் பிரதான மானது கோவா நகர். இந்த கோவா மாநகரில்தான் மேற்றிராணியாரும் அரச பிரதிநிதியாகிய உயர் அதிகாரிகளும் வசித்தனர். புதிதாய் வந்திறங்கின சங். சவேரியார் சுவாமியார் தினமும் அதிகாலையில் திவ்விய பலிபூசை நிறைவேற்றியபின், கோவாவிலுள்ள தர்ம மருத்துவமனைகளுக்குச் சென்று வியாதியஸ் தருக்கு ஆத்தும சரீர நன்மைகள் செய்வார். தொழுநோய் மருத்துவ மனையே அவரது விசேஷ அன்புக்குரியதாயிருந்தது. பிறகு சிறைச் சாலைகளுக்குப் போய் அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலளிப்பார். கோவாவில் வீடு வீடாய்ச் சென்று தான் சேகரித்தப் பொருட்களையும் தர்ம பணத்தையும் நோயாளிகளுக்கும் கைதிகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பார். மாலை நேரத்தில் ஓர் சிறு மணியை அடித்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்துபோய் சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட்டிச் சேர்த்துவந்து அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பார். பிள்ளைகளின் ஆத்துமத்தைக் காப்பாற்றி அவர் களுடைய இளம் பிராயத்தில் புண்ணிய நற்பண்புகளை விதைத்தால், பிள்ளைகள் மூலமாய்ப் பெற்றோரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்குவது எளிது என்பதே அவருடைய அபிப்பிராயம். சங். சவேரியார் சுவாமியுடைய முயற்சியின் பலனாக பிள்ளைகள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்சென்று அவருடன் கோவிலுக்குள் சென்று வேத ஞான சத்தியங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொள்வார்கள். கற்றுக்கொண்டதை அநுசரித்து பக்தி விசுவாசமுள்ள சிறு சம்மனசுகளாக மாறிவிட்டதுமன்றி, வேத விசுவாசத்தில் சீர்குலைந்து திரிந்த தங்கள் தாய் தந்தையரையும் தங்களோடு ஞானோபதோத்துக்கு அழைத்துச் செல்வார்கள். கோவா நகர் கிறீஸ்தவர்களும் தங்கள் மத்தியில் ஓர் பரிசுத்த குருவானவர் எழுந்தருளி வந்திருக்கிறாரென்று நன்குணர்ந்து அவரது பிரசங் கத்தைக் கேட்க ஓடிவருவார்கள். அவரது பக்தியார்வம் நிறைந்த வார்த்தைகள் பாவிகளின் இருதயத்தில் ஆணிபோல் பதிந்து தெய்வ பயத்தை உண்டாக்கி அவர்களை நடுங்கச் செய்தன. தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு உத்தம கிறீஸ்தவர்களானார்கள். 


தென்கீழ்க் கடலோரப் பகுதியில் 

பகலில் இவ்வாறு ஆத்தும இரட்சண்யத்திற்காக அயராது உழைத்த அர்ச். சவேரியார் இரவில் அதிக நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவிடுவார். தனது சரீர சுகத்தை ஒரு பொருட்டாய் எண்ணாது, களைப்புக்கும் தவிப்புக்கும் அஞ்சாமல், பிறர் ஆத்தும நன்மைக்காக அவர் சில மாதங்கள் உழைத்தபின், இந்தியாவின் தென்கீழ்க் கடலோரமாகிய முத்துக்குளித்துறையில், கன்னியாகுமரிக்கும் மன்னாருக்கும் நடுவிலுள்ள ஊர்களில் வசித்த பரதகுல மக்களுக்கு ஞான உதவி புரியும்பொருட்டு 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வந்து சேர்ந்தார்.


அர்ச். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வந்ததும் அங்குள்ள பரதர்களில் அநேகர் சில வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தும். அவர்களை வேதத்தில் ஸ்திரப் படுத்த குருமார் இல்லாத குறையால் இந்தப் புதுக் கிறீஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருந்த அஞ்ஞானிகளைப் போலவே வேத ஞான அறிவில்லாத வர்களாயிருப்பதைக் கண்டார். கோவாவில் எப்படி கிறீஸ்தவர்கள் மத்தியில் உழைத்தாரோ அதே விதமாய்ப் பரதர்கள் மத்தியிலும் உழைத்து, புதுக் கிறீஸ்தவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்த அஞ்ஞானப் பரதர்களுக்கு வேதம் போதித்து தமது கையாலேயே ஞானஸ்தானம் கொடுத்தார்.

முத்துக்குளித்துறையில் தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் ஞான ஆறுதலையும் தக்கவாறு வர்ணிக்கத் தன்னால் இயலாது என்று அர்ச். சவேரியார் உரோமைக்குத் தனது சபைக் குருமாருக்கு எழுதி யிருக்கிறார். திரளான கூட்டமாய் தன்னிடம் வந்த பரதகுலத்தாருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் தனது கரங்களைத் தூக்க முடியவில்லை என்றும், களைப்பினால் பேசமுதலாய் பலமில்லை யென்றும் சொல்லுகிறார். அம்மக்களின் ஆச்சரியத்துக்குரிய பக்திப் பற்றுதலையும், வேத சத்தியங்களைக் கற்றறிய அவர்களுக்கு இருந்த அணைகடந்த ஆவலையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர்கள் எப்போதும் என்னோடுகூட இருக்க ஆசித்து, என்னை எப்போதும் சூழ்ந்துகொண்டிருப்பதால் ஜெபிக்க நேரமின்றி, அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொண்டு என் கட்டளை ஜெபத்தை ஜெபித்து முடிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குள் யாராவது வியாதியாய் விழுந்தால் சவேரியாருடைய ஜெபமாலை அல்லது பாடுபட்ட சுரூபத்தை வாங்கிக்கொண்டு போய் குணப்படுத்துவார்கள். 

முத்துக்குளித்துறையில் மரணத்தறுவாயிலிருந்த அஞ்ஞானக் குழந்தைகளைத் தேடிச்சென்று ஞானஸ்நானம் கொடுப்பார். இவ்வாறு இவர் கையால் ஞானஸ்நானம் பெற்று இறந்து மோட்சபாக்கியம் பெற்ற குழந்தைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கு மேல் இருக்கு மென்று அர்ச். சவேரியார் கணக்கிட்டிருக்கிறார்.

அர்ச் சவேரியார் மணப்பாட்டு வழியாய் பலமுறை பிரயாணஞ் செய்தும் அவ்வூரிலேயே அநேக மாதம் தங்கியும் இருக்கிறார். 1542-ம் ஆண்டு மணப்பாடு அவருடைய பரிசுத்த பாதங்களினால் முதன் முதலாக அர்ச்சிக்கப்பட்டது. மறு வருடம் சுமார் நான்கு மாதம் அங்கேயே தங்கியிருந்தார். 1544 ம் வருடத்தில் மாத்திரம் மணப்பாட்டிலிருந்து 12 கடிதங்கள் எழுதினாரென்றால் எத்தனை முறை அவர் அங்கு சென்றிருக்கவேண்டுமென நாமே எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 1548-ம் ஆண்டில் தமது தோழர்களுக்கு தியானம் கொடுத்து அவர்களுக்கான புத்திமதிகளை எழுதிக் கொடுத்தது மணப்பாட்டில்தான். ஏழைகளின் உணவாகிய சாதமும் தண்ணீருமே அவர் அருந்திய அநுதின உணவு. வேலை முடிந்தபின் ஓர் எளிய குடிசையில் தரையில் மூன்று மணி நேரம் படுத்துறங்குவார். மீதி நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஆழ்த்திருப்பார். அவர் வழக்கமாய் ஜெபதபம் புரிந்துவந்த குகையை இன்றும் மணப்பாட்டில் காணலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் முத்துக்குளித் துறையெனப் பெயர்பெற்று விளங்கும் பரதர் நாடே அர்ச். சவேரியாரின் விசேஷ அன்பின் ஸ்தானமாயிருந்தது என்று மேற்கூறியவைகளைக் கொண்டு எளிதாக அறிந்துக் கொள்ளலாம். அவரது ஞான மக்களாகிய பரத குலத்தாரும் அர்ச். சவேரியார் தங்கள் முன்னோருக்குச் செய்தருளிய எண்ணிலா உபகார சகாயங்களை மறவாமல் அவரைத் தங்கள் அருமைத் தந்தையென்று போற்றிப் புகழ்ந்து ஸ்துதித்து வருகின்றனர். அர்ச். சவேரியார் வேதம் போதிக்கச் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவது எளிதல்ல. ஆனால் அவர் இலங்கை, மலாக்கா, மொலுக்கஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போய் இந்தியாவுக்குத் திரும்புகையில் தமது பரதருல மக்களை பாசத்தோடு சந்தித்து அன்புடன் ஆசீர்வதிக்க ஆவலுடன் முத்துக்குளித் துறைக்குப் போவார்.

சீனதேசம்


அர்ச். சவேரியார் இந்தியாவை விட்டு கடைசியாக புறப்பட்டது 1552-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. சீனதேசம் புகுந்து அங்குள்ள அஞ்ஞான சீனருக்கு வேதம் போதிக்கவேண்டுமென்பது அவரது தீராத ஆவல், ஆனால் அந்நிய தேசத்தார் எவரும் சீனதேசத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்பது அத்தேசத்தின் கண்டிப்பான சட்டம். அப்படி இச்சட்டத்தை மீறி தேசத்திற்குள் பிரவேசிப்பவர்களைச் சிரச்சேதம் செய்வது வழக்கம். அர்ச். சவேரியார் இதை அறிந் திருந்தும், தேவசிநேகத்தால் பற்றியெறிந்த அவர் இருதயம் சீனர்களுக்கு வேத ஞானப்பிரகாசம் அளிக்கவேண்டுமென்று அவரை ஏவித்தூண்டிக்கொண்டேயிருந்தது. ஆதலால் தனக்கு வரவிருக்கும் உயிர்சேதத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சீனதேசத்துக்குச் செல்லத் தீர்மானித்து, 1552-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்ஷியன் தீவு போய்ச் சேர்ந்தார். இந்த இடம் சீன தேசத்தின் கீழ்க்கரையோரத்தில் கான்டன் நகருக்கு எதிரே இருக்கும் ஓர் சிறு தீவு, அங்கே வந்திருந்த போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் அர்ச்சியசிஷ்டவரை சந்தோஷத் துடன் வரவேற்று, அவர் திவ்விய பலிபூசை செய்ய ஓர் சிற்றாலயமும் கட்டிமுடித்தனர். சிலநாள் அத்தீவில் சிறுவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்துவந்தார். அங்கிருந்து சீன தேசத்திற்குப் போக ஏதாவது வர்த்தக கப்பல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு கொடிய ஜுரம் கண்டது. 

மரணம்

மரணம் அடுத்திருக்கிறது என்று தூரதிருஷ்டியால் அறிந்துகொண்ட அர்ச். சவேரியார் தமது நேச ஆண்டவரின் வருகைக்கு தன்னைத் தயார்செய்து கொண்டு ஆவலோடு காத்திருந்தார். “ஒ. மிகவும் பரிசுத்த திரித்துவமே, தாவீதின் குமாரனாகிய சேசுவே, என்மீது இரக்கமாயிரும்." "தாயே உம்மைத் தாயென்று காண்பித் தருளும்" என்னும் மனவல்ய ஜெபங்களே அவரது கடைசி சம்பாஷனையாக இருந்தது. 1552, டிசம்பர் 2-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு தனது கரங்களில் பாடுபட்ட சுரூபத்தை இறுகப் பிடித்து அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டே மெதுவாய்,

"ஆண்டவரே, உம்மை நம்பினேன், ஒருபோதும் கைவிடப் படேன்” என்னும் இனிய ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே தனது ஆத்துமத்தைத் தன் அதிமிக அன்புக்குரிய ஆண்டவரிடம் கையளித்தார்.

பிரான்ஸ் தேசத்தின் பெயர்பெற்ற பிரசங்கியாகிய பூர்தலு என்பவர் அர்ச். சவேரியாரைப்பற்றி பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்: அப்போஸ்தலர்கள் செய்த புதுமைகளையெல்லாம் அர்ச். சவேரியாரும் செய்தார். அவர்களைப் போலவே அற்புதமாய் பல பாஷை பேசும் வரமும், தீர்க்கதரிசன வரமும், புதுமை செய்யும் வரமும் அவருக்கிருந்தது. பல தேசங்களில் திரிந்து கணக்கற்ற அஞ்ஞானிகளை மனந்திருப்பியதில் அப்போஸ்தலர்களுக்கு சம அப்போஸ்தலராயிருந்தது மாத்திரமல்ல, அவர்களில் பலருக்கு மேலானவருமாயிருந்தார். அவர் கரங்களில் ஞான தீட்சைப் பெற்றவர்கள் 12 லட்சத்திற்கு அதிகமான அஞ்ஞானிகள், சத்திய வேதத்தைக் கேட்டிராத 200-க்கு அதிகமான இராச்சியங்களில் வேதத்தைப் போதித்து ஏக திரித்துவ மெய்யங்கடவுளின் மேலான ஆராதனையை ஸ்தாபித்தார். எண்ணிறந்த அஞ்ஞான விக்கிர கங்களை உடைத்துத் தகர்த்தார். கடலிலும் தரையிலும் அவர் செய்த பிரயாணங்கள் உலக முழுவதையும் மும்முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும். அவர் சென்றவிட மெல்லாம் சத்திய திருச்சபை செழித்தோங்கி வளர்ந்தது. அவருக்குமுன் குருக்கள் பாதம் படாத ஜப்பான் தேசத்தில் முதன்முதலில் சத்திய வேதத்தை நாட்டினவர் இந்த அர்ச்சியசிஷ்டவர்தான்.

சவேரியாரே எம் நல்ல தந்தையே!
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 18 அர்ச். அருளப்பர், (St. John)

  அர்ச். அருளப்பர், 

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

 

அர்ச். அருளப்பர் செபதேயுவின் மகனும், அர்ச்.  பெரிய யாகப்பர் (St. James) அவர்களின் சகோதரரும் ஆவார். ஆண்டவருடைய பொது ஊழியத்தின் முதல் ஆண்டில், நம்முடைய கர்த்தரால் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார்.

📜✍🏻+ அர்ச். மார்க் (3, 17): "(மற்றவர்கள் யாரெனில்) செப்தேயுவின் குமாரனாகிய யாகப்பர், யாகப்பருடைய சகோதரனாகிய அருளப்பர்; இவ்விருவருக்கும் இடியின் மக்களென்று அர்த்தமுள்ள போவா னெர்கேஸ் என்று பெயரிட்டார்."

யாகப்பர் மற்றும் அருளப்பர் ஆகியோர் சேசுவால் "போனெர்ஜஸ்" அல்லது "இடியின் மகன்கள்" என்று அழைக்கப்பட்டனர், ஒருவேளை அர்ச். மார்க் 9:38 மற்றும்  இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகரங்களை தண்டிக்க அர்ச். லூக். 9:54 ல் "அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.. இல் காட்டப்பட்டுள்ள வைராக்கியம் போன்ற சில குணாதிசயங்களின் காரணமாக இருக்கலாம்.

அருளப்பர் எப்போதும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்ட சீடராக அழைக்கப்படுகிறார், மேலும் பன்னிரண்டு பேரில் ஒருவரே இரட்சகரை அவரது பாடுகளின் நேரத்தில் கைவிடாது தொடர்ந்து சென்றார். நம் ஆண்டவர் அவரைத் தன் தாயின் பாதுகாவலராக ஆக்கியபோது அவர் சிலுவையின் அடியின் மரியாளோடு நின்றார். 

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 19:26-27 "சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார். 

* 27. மெய்யான கிறீஸ்துவர்களெல்லோரும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்டு அவருக்குச் சீஷர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர் தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனை நோக்கி, இதோ! உன் தாயென்று சொல்லும்போது, தம்முடைய திரு மாதாவை எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தாயாராக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்.

அருளப்பரின் பிற்கால வாழ்க்கை முக்கியமாக ஜெருசலேமிலும் எபேசஸிலும் கழிந்தது. ஆசியா மைனரில் பல தேவாலயங்களை நிறுவினார். அவர் நான்காவது சுவிசேஷத்தையும், 3 நிருபங்கள் மற்றும் காட்சியாகமம் புத்தகத்தையம் எழுதியுள்ளார். - இவை அனைத்தும் கி.பி 70 இல் ரோமானியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது.

அருளப்பர் எப்போதும் கழுகுடன் ஒப்பிடப் படுகிறார். ​​அவரது உயர்ந்த சிந்தனையின் மூலம், அர்ச். அருளப்பர், நாசரேத்தின் இயேசுவின் தெய்வீகத்தின் வேடபாரகர் ஆவார். வியக்க வைக்கும் நினைவாற்றலைக் கொண்ட அவர், கிறிஸ்துவின் பிரசங்கங்களை வாசகருக்கு புரியும் படியாகவும்,  தெளிவாகவும் எழுதினார். இதனாலே பிற்காலத்திலும் கூட மீண்டும் உருவாக்க முடிந்தது. 

அர்ச். அருளப்பர் 95ம் வருடம் ரோமை அரசர் Domitian உத்தரவால் ரோமையில் கைது செய்யப்பட்டார். அவரை கொதிக்கும் எண்ணெயில் தள்ளினர். ஆனால் அவருக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. மாறாக அவர் முன்னிலும் அதிக ஆரோக்கியமுள்ளவராக வெளியே வந்தார்.


பேரரசர் பின்னர் அர்ச். அருளப்பரை பாத்மோஸ் தீவுக்கு வெளியேற்றினார், ஆனால் ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். அப்போஸ்தலர்களில் அருளப்பர் மட்டுமே மற்ற அப்போஸ்தலர்களை போல் வேதசாட்சி மரணம் அடையாமல் எபேசுஸ் நகரில் இயற்கையான மற்றும் அமைதியான மரணம் அடைந்தார். Saint Epiphanus கூற்றுப்படி அருளப்பருடைய மரணத்தின் பொது அவருக்கு வயது 96.

கிறிஸ்தவ சித்திரங்களில் (holy picture)(படம்) எப்போதும் ஒரு கழுகு இருக்கும். இது தீர்க்கதரிசி எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக சொல்லியது. (எசே. 1:10) "அவைகளின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன." 



English ::

December 27

APOSTLE ST. JOHN THE EVANGELIST

John, the son of Zebedee, and the brother of St. James the Great, was called to be an Apostle by our Lord in the first year of His public ministry.

📜✍🏻+ St. Mark (3, 17): "And James the son of Zebedee, and John the brother of James; and he named them Boanerges, which is, The sons of thunder:"

James and John were called by Jesus “Boanerges,” or “sons of thunder,” perhaps because of some character trait such as the zeal exemplified in Mark 9:38 and Luke 9:54, when John and James wanted to call down fire from heaven to punish the Samaritan towns that did not accept Jesus.

John is also called "beloved disciple" and the only one of the Twelve who did not forsake the Saviour in the hour of His Passion. He stood faithfully at the cross when our Lord made him the guardian of His Mother.

John's later life was passed chiefly in Jerusalem and at Ephesus. He founded many churches in Asia Minor. He wrote the fourth Gospel, the 3 Epistles, and the Book of Revelation, - all of which were composed after the destruction of Jerusalem by the Romans in 70 A.D.

Compared with an eagle by his flights of elevated contemplation, Saint John is the supreme Doctor of the Divinity of Jesus of Nazareth. Endowed with an astounding memory, he was able even in his later years, to reproduce the discourses of Christ in such a way as to make the reader experience their power and impact on their audiences as if present to hear them.

John was arrested and brought to Rome in 95 AD and he was by order of Emperor Domitian cast into a cauldron of boiling oil but came forth unhurt and more healthy.

The emperor then banished St. John  to the island of Pathmos, but was freed a year later. He is the only Apostle who died a natural death, surviving all his fellow apostles.

Saint John died in peace at Ephesus in the third year of the reign of emperor Trajan, that is, the hundredth of the Christian era, or the sixty-sixth from the crucifixion of our Lord, Saint John then being about ninety-four years of age, according to Saint Epiphanus.

     🍁🍁🍁🍁🍁🍁🍁


John the Evangelist is usually depicted as a young man. In Christian art, John is symbolically represented by an eagle, one of the creatures envisioned by Ezekiel (1:10)



அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17. - அர்ச். லூசியா (அர்ச். பிரகாசியம்மாள்)

 St.Lucy's Feast - Dec 13 - celebrated as festival of lights

திருநாள்: டிசம்பர் 13


Born .      கி.பி 283

இடம்         Syracuse, Roman Empire

தந்தை     பெயர் தெரியவில்லை 

தாய்          யுற்றிக்கியா

Died      304 Syracuse, Western Roman Empire


பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் வேதசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கத்தோலிக்க கிறிஸ்தவராக  வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை ஆண்டவருக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார் 

இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் அர்ச். ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும்  அர்ச். ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு அர்ச். ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் அர்ச். ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய்? உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு ஆண்டவருக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை சர்வேசுரன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.

லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .

 இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்' "இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள்" என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "ஆண்டவருக்கு சொந்தமானவள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல இஸ்பிரித்து சாந்துவானவர்  துணை நிற்பார் .ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்வோர் யாவரும் இஸ்பிரித்து சாந்துவானவரின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது இஸ்பிரித்து சாந்துவானவர் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள்" என்றார் , லூசியா . 

இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற அர்ச். லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் அர்ச். லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது . 

தேவமாதா பிறந்த நாள் - Birth of Our Lady (September 8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி



கடவுளுக்கு அழகிய நாள். இந்த நாளில் பூமியில் பேரதிசயம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் சிருஷ்டி என்றாலும் அவள் பிதாவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள குமாரத்தி, நித்திய வார்த்தையாகிய சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக இருந்தவள், இஸ்பிரீத்துசாந்துவின் நேச பத்தினி. அவள் சிறு குழந்தை என்றாலும் சகல சிருஷ்டிகளையும்விட மகத்துவத்திலும் பதவியிலும் உயர்ந்தவள். இதற்கு முன் இருந்தவர்கள், இனி இருக்கப் போகிறவர்கள் அனைவரிலும் மேம்பட்டவள். ஏனெனில் ஏனைய சிருஷ்டிகள் கடவுளது ஊழியர்களே; மரியாயோ கடவுளுடைய குமாரத்தி, கடவுளுடைய மாதா, கடவுளுடைய பத்தினி, சுபாவத்திற்கு மேலான கொடைகள் அனைத்தையும் அவள் நிரம்பக் கொண்டிருந்தாள். பிதாவாகிய சர்வேசுரனது. வல்லமையின், சுதனுடைய ஞானத்தின், இஸ்பிரீத்துசாந்துவுடைய அன்பின் உயர்ந்த சிருஷ்டிப்பு அவள். பிதா சுதன் இஸ்பிரித்துசாந்து இவர்களுடன் அவள் அந்நியோன்னிய உறவுகொள்ளவேண்டியிருந்தமையால் அவள் இவ்வுன்னத நிலையில் உண்டாக்கப்பட்டாள். அவளை அவர்கள் அன்புடன் நோக்கினார்கள். கண்டு ஆனந்தம் கொண்டார்கள்; ஒருவன் தன் கைவேலையைக் கண்டு இன்புறுவதுபோல் அவர்கள் மரியாயைக் கண்டு இன்புற்றார்கள்.

ஓ மரியாயே, தொட்டிலில் இருக்கும் நீர் பூமியில் கடவுளது பரகதி, வர்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவள், மாசு மறுவின் நிழல் முதலாய் அணுகாதவள். நீர் இன்னும் குழந்தை யாயிருக்கும்போதே மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் உம்மைக் கண்டு மகிழ்ந்தது. ஓ நீர் பாக்கியவதி. கடவுளுக்குப் பிரியப் படுவது மிகப்பெரும் பாக்கியமாகும். இந்தப் பாக்கியத்தை, ஓ என் அன்னையே, நீர் பிறந்தநாளில் இருந்தே நீர் அனுபவித்திருக்கிறீர். நான் பரிசுத்த வாழ்வு நடத்துவேனானால், அனைத்தையும் கடவுளுக்காகச் செய்து வருவேனானால், இந்தப் பாக்கியத்தை நானும் ஓரளவு அனுபவிக்கலாம். ஓ என் சர்வேசுரா, உமக்குப் பிரியப்பட வேண்டுமானால், என்னிடம் நல்ல மனது இருக்க வேண்டும். உமக்கு பிரியப்பட நான்  சிரமத்தைப் பாராமல் முயல வேண்டும்.

மரியாயி பிறந்த நாள் அவளுக்கு அழகிய நாள். தன் தாயான அன்னம்மாளால் தான் அன்புடன் நேசிக்கப்படுவதையும், பரகதிக்கு பூமியானது அன்பளிப்பாகத் தரக்கூடிய மிக்க அழகிய கொடையாக அன்னம்மாளால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவத்திற்கு தான் ஒப்புக்கொடுக்கப்படுவதையும், மூன்று தேவ ஆட்களாலும் அன்புடன் தான் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் பார்ப்பது மரியாயிக்கு எத்தனையோ ஆனந்தத்தை அளித்திருக்கவேண்டும். தன் பரிசுத்த அன்னையின் பக்தி உணர்ச்சிகளுடன் தன்னையும் ஒன்றித்து, தன்னை முழுமையும் மகோன்னதரான கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதும், அவருக்காகவே வாழத் தீர்மானிப்பதும். மரியாயிக்கு எத்தனை மகிழ்ச்சி தந்தது. அவளது காணிக்கையைக் கண்ட கடவுள் அவளுக்கு உயர்ந்த கொடைகளை நிரம்பக் கொடுத்தது என்ன காட்சி! “ஓ என் நேசமே, நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதே கிடையா" என்னும் உன்னத சங்கீதாகம வசனங்களால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் தன்னை வந்திப்பதைக் கண்டு, அவள் எத்தனை மகிழ்ந்திருப்பாள்! "இவள் எவ்வளவு அழகானவள்! பூமியில் மலர இருக்கும் இம்மலர் எத்தனை அழகு பொருத்தியது!" என சம்மனசுக்கள் அனைவரும் சேர்ந்து கூறி வாழ்த்தியதை அவள் கேட்டாள். "மரியாயி அருணோதயம் போன்றவள்; சந்திரனைப் போல் அழகுள்ளவள், சூரியனைப்போல் காந்தி படைத்தவள்" (உந்.சங்.6:9) மகிழ்ச்சியடைய இத்தனை காரணங்கள் இருந்தன. மரியாயோ "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது; என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கிறது" என தன் உள்ளத்தில் உரைத்தாள்.

பரிசுத்த கன்னிகையின் மகிழ்ச்சியுடன் ஒன்றித்து கடவுளை மகிமைப்படுத்தி, மரியாயை வாழ்த்துவோமாக. நமது மகிழ்ச்சியனைத்தையும் கடவுளில் வைக்கவும், வேறெந்த மகிழ்ச்சியையுமே தேடாதிருக்கவும் அவளிடமிருந்து கற்றுக்கொள்வோமாக. கடவுளில் மாத்திரமே. உண்மையான மகிழ்ச்சி உண்டு; இதுமாத்திரமே இருதயத்தைப் பூரணமாய்த் திருப்தி செய்கிறது, பரசுதியின் முன் சுவையைத் தருகிறது. மரியாயி பிறந்த நாள் மானிட சந்ததிக்கு அழகிய நாள். அது மகிமை பொருந்திய நாள். ஆதாமின் சந்ததியில் பிறந்த ஒரு குழந்தை கடவுளின் மாதாவும், கடவுளின் பத்தினியுமாகத் தேர்த்தெடுக்கப்படுவது மனித சுபாவத்திற்குப் பெருத்த மகிமையல்லவா? இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

அது பாக்கியமான நாள். நீதியின் சூரியனானவரின் முன்னோடியான நட்சத்திரம் உதித்த நாள், தேவ நீதியின் சமுகத்தில் மானிடரின் மத்தியஸ்தியாகவும், மனிதருக்காக பரிந்து பேசுகிறவளாகவும் இருக்கவேண்டியவன் பிறந்த நாள் பாக்கியமான நாளே.

அது நம்பிக்கையின் நாள். ஏனெனில் இந்தத் திருக் குழந்தை ஒரு நாள் நம் அன்னை ஆவாள்; நம்மைப்பற்றி கடவுள் கொண்டுள்ள அன்பும் இரக்கமும் நிறை திட்டங்களை நிறைவேற்ற இவள் ஒத்துழைப்பாள்.

தொட்டிலில் இருக்கும்பொழுதே அவள் ஜெபிக்கிறாள். அவள் தன்னை அர்ச்சித்து புண்ணியங்களில் நாளுக்குநாள்  அதிகரிக்கும் வண்ணம் தனக்காக ஜெபிக்கிறாள். நமக்காக அவள் ஜெபிக்கிறாள், ஏனெனில் தனது வேலை உலகத்தைக் காப்பாற்றுவதும், மானிட இரட்சண்யத்தைப்பற்றிய கடவுளது திட்டங்களில் ஒத்துழைப்பதும் என அவள் அறிவாள்.

கடவுள் பூமியில் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை இவ்விதம் நாம் நிறைவேற்றுகிறோமா? நம்மையும் பிறரையும் அர்ச்சிக்க நாம் உழைக்கிறோமா?

தேவதாய் மேல் நமக்குள்ள பக்தியைப் புதுப்பித்து, அவளுக்கு உகந்த பிள்ளையாய் வாழ நாம் உறுதி செய்வோமாக.

மரியாயைப் பூமிக்கு தந்து, அவளை நம் அன்னையாகவும் நமக்காகப் பரிந்து பேசுகிறவளாகவும், நம் மத்தியஸ்தியாகவும். நம் இரட்சகியாகவும் நியமித்ததற்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோமாக

அருட்கருவிகள் - தீர்த்தம் (Holy Water)

தீர்த்தம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

Sancta Maria, 2012 September-October issue


எப்பொருளையும் சுத்தஞ் செய்வதற்கு இயற்கையில் ஏற்பட்டது தண்ணீரே. இதனிமித்தமே அது உட்சுத்தத்துக்கு அடையாளமென்று சகல மதத்தினராலும் கருதப்படுவது ஆச்சரியமன்று. கிரேக்கரும் உரோமானரும் தங்கள் வேத சடங்குகளில் தண்ணீர் தெளிப்பதை ஓர் முக்கிய அம்சமாக அனுசரித்து வந்தார்கள். சுற்றுப்பிரகாரங்களின் போது, அதைக் கொண்டுதான் பட்டணங்களைச் சுத்திகரித்தார்கள். வயல்களில் பயிரிடுவதற்கு முன், அவைகளைத் தீர்த்தத்தால் தெளிப்பது வழக்கமாயிருந்தது. படைவீரர் யுத்தகளத்துக்குச் செல்லுமுன், தேவர்களின் ஆதரவை அடையும்படி தீர்த்தத்தால் தெளிக்கப் பெற்றார்கள். எஜிப்தியர்களுக்குள் தீர்த்த உபயோகம் வெகு சாதாரணமாயிருந்தது. அவர்களுடைய குருக்கள் ஒவ்வொரு பகலும் இரவும் இருமுறை அதில் ஸ்நானம் செய்ய வேண்டியிருந்தது. நமது நாட்டிலும் இவ்வழக்கம் பிறமதத்தினருள் இருந்து வருவதை அறிவோம். யூதருடைய பலிபொருட்களும் திருப்பாத்திரங்களும் பிரஜைகளுமே தீர்த்தம் தெளிக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றிய சட்ட திட்டங்கள் யாத்திராகமத்திலும், லேவியர் ஆகமத்திலும் காணக்கிடக்கின்றன.

பழைய ஆகமங்களினின்றே, திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற தீர்த்தத்தைப் பற்றிய சடங்கு முறைகளில் அநேக அம்சங்கள் தெரிந்து கொள்ளப்பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. திருச்சபையில் தீர்த்தத்தின் உபயோகம் அப்போஸ்தவர் காலந் தொட்டே வழங்கி வருகிறது என்று சொல்லக் காரணமுண்டு. யூதர்களுடைய அநுஷ்டானத்தில் ஏற்கனவே இருந்த இந்தச் சடங்கை, அவர்கள் மனந்திரும்புவதற்கு ஓர் தூண்டுதலாக, அர்ச், மத்தேயு, கிறீஸ்தவர்களுக்குள் ஏற்படுத்தினார் என்று சிலர் நினைக்கிறார்கள். முதலாவது அலெக்சாந்தர் என்னும் பாப்பானவர் 117-ம் வருடத்தில் எழுதின ஒரு நிருபத்தில் தீர்த்தப் பிரயோகத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறதுமல்லாமல், 4-வது நூற்றாண்டில் திருச்சபை உபயோகித்த ஆசாரமுறைப் புத்தகத்தில் இதைப்பற்றி விரிவாய் எழுதியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில், பெரிய பூசை ஆரம்பிக்கு முன், ஜனங்கள் பேரில் தீர்த்தந்தெளிக்கும் வழக்கம், 4 ம் சிங்கராயர் என்னும் பாப்பானவர் காலத்திலிருந்து (9-ம் நூற்றாண்டு) நடந்துவருகிறது. கோவிலில் கதவண்டை தீர்த்தத்தொட்டி அமைக்கிற வழக்கம் வெகு பூர்வீகமானது. இரண்டாவது நூற்றாண்டிலேயே இது ஏற்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். மத்திய நூற்றாண்டுகளில் விசுவாசிகள் கோவிலில் பிரவேசிக்கையில் மாத்திரம் தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைந்துகொள்வார்கள். கோவிலைவிட்டு வெளியே போகையில் அவ்விதம் செய்ததில்லை. சர்வேசுரனுடைய வீட்டில் பிரவேசிக்கு முன் சுத்திகரஞ்செய்வது அவசியமேயல்லாது, அதற்குப் பின் அவசியமில்லை என்கிற எண்ணம் இந்த வழக்கத்துக்குக் காரணமாகும். ஆனால், இக்காலத்தில் கோவிலில் பிரவேசிக்கும் போதும் வெளியே போகும்போதும் இரு தடவைகளிலும் தீர்த்தம் உபயோகிக்கிறோம். திருச்சபை இதற்குப் பலனைக் கட்டளை யிட்டிருப்பதினால், இவ்விதம் செய்வதே நல்லது.

Holy water font in the entrance of Saint Mary of the Angels Catholic Church Chicago Illinois

நான்கு வகை தீர்த்தம்:

1. ஞானஸ்நான தீர்த்தம்: இது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு மாத்திரம் உபயோகிப்பது. பெரிய சனிக் கிழமையிலும் இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்கு முந்தின தினத்திலும் இதை மந்திரிக்கிறார்கள்.

2. அபிஷேகத் தீர்த்தம்: கோவில் அபிஷேகத்துக்கு மேற்றிராணியார் உபயோகிக்கிற தீர்த்தம்

3. பெரிய சனிக்கிழமை தீர்த்தம்: இதிலிருந்துதான் ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிக்கப்படுகிறது.

4. சாதாரண தீர்த்தம்: இது அவசியமுள்ள போதெல்லாம் மந்திரித்துக் கொள்ளலாம். வீடுகளிலும் கோவில்களிலும் விசுவாசிகளுடைய உபயோகத்துக்காக வைத்திருப்பது இதுவே. ஆகையால் இதையே "தீர்த்தம்" என்று சொல்வது வழக்கம். இதைப்பற்றி விசுவாசிகள் அறிந்திருப்பது அவசியம்.

தீர்த்தம் மந்திரித்தல்:

தீர்த்தம் மந்திரிக்கையில் குருவானவர் சொல்லுகிற ஜெபங்களில் முக்கியமானவை, உப்பின் பேரிலும் தண்ணீர் பேரிலும் சொல்லுகிற பசாசை ஓட்டும் ஜெபங்களேயாகும். நமது ஆதித்தாய் தகப்பன் சர்வேசுரனுடைய கற்பனையை மீறுவதற்குப் பசாசு காரணமாயிருந்ததுமன்றி, மனிதனுடைய உபயோகத்துக்காக ஏற்பட்ட தாபர வஸ்துக்களின்மீதும் அது வல்லமை அடைந்ததாகத் திருச்சபையின் பிதாக்கள் கருதுகிறார்கள். இந்த கணிப்பைப் பின்பற்றி, தேவ ஊழியத்துக்காக யாதாமொரு தாபர பொருளை அர்ச்சிக்க வேண்டியபொழுது, துஷ்ட அரூபியின் வல்லமை அதைவிட்டு நீங்கும்படியாகப் பசாசை ஓட்டும் ஜெபத்தை அதன்பேரில் சொல்ல வேண்டுமென்று திருச்சபை கற்பித்திருக்கிறது.

தீர்த்தம் மந்திரிக்கிற சடங்கில் உள்ள ஜெபங்கள் வெகு நேர்த்தி யானவை. அவைகள், தீர்த்தப் பிரயோகத்தைக் குறிக்குங் காரணங்களை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றன. உப்பின்பேரில் சொல்கிற ஜெபத்தால், "அதை உபயோகிக்கிற விகவாசிகளுக்கு ஆத்தும சரீர சௌக்கியம் உண்டாகவேண்டு மென்றும், அது தெளிக்கப்படுகிற இடத்திலிருந்து பசாசு அகன்றுபோக வேண்டு மென்றும், அது யார் யாரைத் தொடுமோ அவர்கள் எல்லோரும் அர்ச்சிக்கப்பட்டு, சகலவித அசுத்தத்தினின்றும் சுத்தியடைந்து, அந்தகார அரூபிகளின் வல்லமையினின்று விடுதலை அடைய வேண்டுமென்றும்" சுயஞ்சீவியரான கடவுளை மன்றாடுகிறோம். தண்ணீர்பேரில் சொல்லுகிற ஜெபங்களில், துஷ்ட அரூபிகள் அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவத்தின் வல்லமையால் இவ்வுலகத்தை விட்டு அறவே ஒழியவும், மனுக்குலத்தின்மட்டில் அவைகளுக்கு யாதொரு அதிகாரம் இல்லாமற்போகவும் மன்றாடுகிறோம். பசாசுக்களைத் துரத்தவும் வியாதிகளைக் குணப்படுத்தவும் பயன்படும்படியாகச் சர்வேசுரன் தண்ணீரை ஆசீர்வதித்து, அது தெளிக்கப்படும் இடங்களின்றும் வியாதியும், பசாசின் வலையும் அகன்றுபோகச் செய்யும்படியும் பிரார்த்திக்கிறோம். இதன்பின்னர், குருவானவர் உப்பைத் தண்ணீரில் கலக்கிறார். இறுதியாய், சர்வேசுரன் இந்த உப்பையும் தண்ணீரையும் அர்ச்சித்து, அது எங்கெங்கே தெளிக்கப்படுமோ அங்கங்கே இருந்து சகல துஷ்ட அரூபிகளும் ஓடிப்போக திவ்விய இஸ்பிரீத்துசாந்துவானவர் அவ்விடங்களில் வாசஞ்செய்ய வேண்டுமென்று மன்றாடுகிற ஜெபத்தைச் சொல்கிறார்.

Blessing of Church Bell at Our Lady of Immaculata Church, St. Mary's, USA

உப்பை உபயோகிப்பதின் கருத்து:

சுத்தஞ்செய்வதற்கும் நெருப்பை அணைப்பதற்கும் தண்ணீர் உபயோகப்படுவதுபோல், எந்தப் பொருளும் புழுத்துக் கெட்டுப்போகாதபடி பாதுகாப்பதற்கு உப்பு உபயோகப்படுகிறது. ஆகையால், தீர்த்தத்திலுள்ள தண்ணீர் பாவக்கறைகளை சுத்தஞ் செய்யவும், நமது ஆசாபாசங்களின் தணலை அணைப்பதற்கும் அடையாளமாயிருக்கிறது. உப்பானது, பாவத்தில் நாம் மீண்டும் தவறி விழாதபடி நம்மைப் பாதுகாப்பதற்கு அடையாளமாயிருக்கிறது. அது ஞானத்துக்கு உருவகமாகவும் இருக்கிறது. நமது திவ்விய இரட்சகர் அப்போஸ்தலரை பூமியின் உப்பு என்று அழைத்தார். ஏனெனில், சுவிசேஷ அறிவு அவர்கள் வழியாய் உலகமெங்கும் பரவ வேண்டியிருந்தது. உப்பின் உபயோகம் யூதருக்குள் வழங்கி வந்ததுமன்றி, திருச்சபையிலும் 2-வது அல்லது 3-வது நூற்றாண்டிலேயே அநுசரிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தீர்த்தப் பிரயோகம்:

திருச்சபை எந்தப் பொருளை மந்திரிக்கும்போதும் தீர்த்தத்தை உபயோகிக்கிறது என்று சொல்லலாம். திருச்சபை ஆசாரமுறைப் புத்தகத்தில், நூற்றுக்கணக்கான இதன் பிரயோகத்தைக் காணலாம். மெய்விவாகம், அவஸ்தைபூசுதல், வியாதிக்காரருக்கு நற்கருணை கொடுத்தல், மரித்தோரை அடக்கஞ் செய்தல் ஆகிய இச்சமயங்களிலும் தீர்த்தம் உபயோகிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனங்கள்பேரில் தீர்த்தம் தெளிப்பதற்கு இருவித கருத்து உண்டு. முதலாவது, அது பாவத்தினின்று நம்மைச் சுத்திகரித்து அர்ச்சித்து ஞானஸ்நானத்தை நினைப்பூட்டுகிறது. இரண்டாவது, நாம் காணப்போகிற பூசை நேரத்தில் நேரிடக்கூடிய பராக்குகளை விலக்கவேண்டும் என்று அறிவித்து, அவைகளை விலக்குவதற்கு உதவியாயிருக்கிறது. 

தீர்த்தம் தெளிக்கும்போது, அது ஒவ்வொருவர் பேரிலும் விழ வேண்டுமென்ற அவசியமில்லை. தெளிக்கிற சமயத்தில் அங்கு கூடியிருப்பவர்கள் எல்லோரும் அதன் பலனை அடைகிறார்கள். பராக்கின்றி பக்தியுடன் பூசை காண்பதற்கு இது உதவியாயிருப்பதினால் ஞாயிற்றுக் கிழமை சகலரும் என்பது தெளிவாகிறது.

பூசை துவக்குமுன் தீர்த்தம் தெளிக்கிற சமயத்தில் கோவிலில் இருக்கப் பிரயாசைப்பட வேண்டும் ஒவ்வொருவரும் தனித்தனியே தீர்த்தத்தைத் தொட்டு உபயோகித்துக் கொள்ளும் ஒவ்வொரு தடவையும் நூறு நாட் பலன் அடையலாம். இந்தப் பலனை அடைவதற்கு, பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரிந்துசாத்து வுடையவும் நாமத்தினாலே என்று சொல்லித் தீர்த்தத்தால் சிலுவை அடையாளம் வரைந்துகொள்ள வேண்டியதுமல்லாமல், தன் பாவங்களைப்பற்றி மனஸ்தாபப்படுவதும் அவசியம். கோவில் வாசலண்டையில் இருந்து சற்று நேரம் கவனித்துப் பார்ப்போமானால், அங்கு வருகிறவர்கள் போகிறவர்களில் எவ்வளவு சொற்பப்பேர் இந்த நிபந்தனைகளை அநுசரிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம். எத்தனையோ பேர் ஈயை விரட்டுவதுபோல் ஓர் அடையாளத்தைக் காட்டிவிட்டு போகிறார்கள். தீர்த்தத்தை உபயோகிப்பதினால் பிரயோசனம் இருக்குமென்றாலும், அதற்கு அளிக்கப்பட்ட பலனை அடைய விரும்புகிறவர்கள் மேற்கூறிய நிபந்தனைகளை அனுசரித்தாலொழிய அந்தப்பலனை அடையமாட்டார்கள் என்று அறிந்திருப்பது நல்லது. 

To Read more please click here