Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 மார்ச், 2021

மாசில்லாக் கன்னியே -Tamil Catholic Songs

மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே

மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் - வாழ்க வாழ்க

உம்மகன் தாமே உயிர்விடும் வேளை என்னை உம்மைந்தனாய் ஈந்தனரன்றோ - வாழ்க வாழ்க

தாயே நீ ஆனதால் தாபரித்தென்மேல் நேசம்வைத்தாள்வது நின்கடனாமே - வாழ்க வாழ்க

பிள்ளைகள் செய்பிழை பெற்றவள் தாங்கிக் கொள்ளுவாளன்றி பின் கோபம் வையாளே - வாழ்க வாழ்க





1 கருத்து: