Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 ஜூலை, 2022

தபசுக்காலத்திற்கான தியானம்:

சிலுவைப்பாதையின் 4ம் ஸ்தலம்

வெள்ளிக் கிழமைப் புதுமை-24ம் புதுமை

திவ்ய சேசுநாதர்,கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து செல்கிறார், என்ற செய்தியை அறிந்ததும், தேவமாதா, தம் திவ்ய குமாரன் மரிக்கிற சமயத்தில் அவருடன் கூட, அவர் அருகில் இருக்க விரும்பி, கல்வாரி மலையை நோக்கிப் புறப்பட்டார்கள். தேவமாதா வுக்கு, திவ்ய குமாரன் எந்த வழியாய்ச் செல்கிறாரென்று,மற்றவர்களைக் கேட்பதற்கான தேவை ஏற்படவில்லை. அதேனென்றால், கர்த்தர் சிலுவை சுமந்துபோகிறபோது, அவருடைய திருச்சரீரத்திலிருந்த திருக்காயங்களிலிருந்து புறப்பட்ட திரு இரத்தம், அவர் போகிற வழி யில், சிந்தியிருந்ததென்றும், அதைக் கண்டு, நமது திவ்ய குமாரன் போன வழியை அறிந்து கொண்டோமென்றும், தேவமாதா, அர்ச்.பிரிஜித்தம்மாளுக்கு அறிவித்தார்கள்.

வியாகுலமாதா, திவ்ய கர்த்தர், பின்னால் சென்ற போது, அவருடைய கனிவுள்ள பரி சுத்தமான திருமுகத்தைக் காணும்படியாக, திவ்ய குமாரனுக்கு எதிராகப் போவதற்கு ஆசித்

கள்; அதன் காரணமாக, தேவமாதா, ஆண்டவருக்குப் பின்னால் போகிறதை விட்டு, பக் கத்தில் சென்று, திவ்ய சேசுநாதரை, நேருக்கு நேராக நோக்கியபடி, எதிர் பக்கத்திலிருந்து வந்தார்கள். அப்போது, கண்ட பயங்கரமான காட்சியால், தேவமாதா, மகா கஸ்தி வியா குலமடைந்தார்கள்: மகா பலவீனமுள்ளவருமாய், இரத்தத்தினால் முழுவதும் நனைந்தவரு மாய், பலவகை அசுத்தங்களால் அழுக்கடையப்பட்டவருமாய், இரண்டு கள்ளர்களுக்கு நடு

வே பாரமான சிலுவை சுமந்து கொண்டு வருகிறவருமாய்த் தமது நேசமுள்ள திவ்யகுமா ரனைக் கண்டார்கள்.கண்டவுடனே, தேவமாதா, எப்படி அழுது வியாகுலப்பட்டார்கள் என்று வார்த்தையால் விவரிக்க முடியாது.

இதைப் பற்றி, அர்ச். அன்செல்ம், தமது நூலில் எழுதியிருப்பதாவது: தேவமாதா, தம் திவ்ய குமாரனுக்கு எதிரேபோன சமயத்தில் சேசுநாதரைக் கட்டியிருந்த கயிறுகளை,அவிழ்க் கிறதற்கும், அவருடைய காயங்களைக் கட்டுகிறதற்கும், அவருடைய திருமுகத்தில் வடிகிற திருஇரத்தத்தைத் துடைக்கிறதற்கும், மிகுந்த ஆசையாயிருந்தார்கள்; ஆனால், சேவகர்கள் தடைசெய்ததால், வியாகுலமாதாவால்,ஆண்டவருக்கு ஒரு உதவியும் செய்யக்கூடாமல் போனது. இது தவிர, ஆண்டவர் தமது நேசதாயாரைப் பார்ப்பதற்காக, தமது கண்மேல் உறைந்து போய், கண்ணை மறைத்துக்கொண்டிருந்த, தமது திரு இரத்தத்தைத் தம் திருக்கரத் தினால், தள்ளினாரென்று, அர்ச்.பிரிஜித்தம்மாள், திருச்சபைக்கு அறியச் செய்தாள். இப்படித் தள்ளின பிற்பாடு,திவ்ய கர்த்தர், தம்முடைய பரிசுத்தத் தாயார் அழுகிறதைக் கண்டு, சிலு வை சுமந்து கொண்டு போகிற வேதனையை விட அதிகம் துன்புற்றார்.

ஒரு சமயம், ஒரு அஞ்ஞானி, மகா பக்தியுடனும், ஆசையுடனும், சர்வேசுரனுடைய வேதத்தில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவருடைய குழந்தை செத்துப்போனது. அப்போது, உறவினரும், பிராமணரும், மற்றவரும் வந்து, நீ பழைய தேவர்களைக் கும்பிடா மல் விட்டுவிட்டதாலும், கிறீஸ்துவ வேதத்தில் சேர்ந்ததாலும், உன்னுடைய குழந்தை துபோனது, என்று துர்ப்புத்தி கூறினர். அந்த துர்ப்புத்திக்கு இடம்கொடாமல், சத்திய வேதத் தில் அவர் உறுதியாயிருந்தார். பிறகு, அவருடைய மாடுகள் இறந்தன,முன்பைவிட அவர்கள் அதிக துர்ப்புத்தி கூறினர். அதற்கும், அவர் இடம்கொடுக்கவில்லை. கடைசியில், அவருக்கு ஒரு கடின வியாதி வந்தது. உடனே, கோடங்கி சாஸ்திரக்காரனை அழைப்பதற்கும், துர்ப் புத்தி கூறினர். அவர்களில், ஒருவன், அவரிடம், நீ, உன் சரீரம், மனைவி, மக்கள் பேரில் நேசமா யிருக்கிறாயல்லவா. அவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பது உன் கடமையல்லவா? என்று கேட்டான். அப்போது, அவர்களிடம்,அவர்,நீங்கள் அபத்தமான வார்த்தை கூறுகிறீர் கள். அதேனென்றால், நான் சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றிக்கொண்டதால், எனக்கு நன் மை வந்ததல்லாமல், தீமை ஏற்படவில்லை.

வேதத்தில் சேராத உலகத்திற்கு பொல்லாப்பு வருகிறதில்லையோ? என்று கூறிவிட்டு,பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்து, அவர்களிடம், இதோ அகில உலகத்தின் கர்த்தர். இவர் தாயார்,சகல சிருஷ்டிகளுக்கெல்லாம் மேலான வர்கள். அவர்களுக்கு முன்,நானும் என் குடும்பத்தினரும்,ஒரு நீசப் பூச்சிக்கு சமானம்.ஆண் டவர், என் பாவத்திற்காகப் பாடுபடுகிறபோது, அவர் தாயார் வெகு வியாகுலப்பட்டாலும், அவர் அந்தப் பாடுகளை விடவில்லை. நான் வியாதியால் கொஞ்சம் துன்பம் அனுபவிக்கிற போது, என் சரீரத்துக்காக,கர்த்தரை மறந்துவிடலாமோ?என்று கூறினார். அவர் கூறிய நியா யத்திற்கு எதிராக அவர்களால் ஒன்றும் கூற முடியாமல் போனது. ஆண்டவரும், வியாகுல மாதாவும்,நமக்காக இவ்வளவு பாடுபட்டார்களென்றுஉணர்ந்து, அவர்களுடைய வியாகுலங்களின் மீது,பக்தியுடனிருப்போம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக