Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 29 ஜனவரி, 2024

பூசைப் பலிபோல் - Lyrics for Tamil catholic songs

 பூசைப் பலிபோல்



1. பூசைப் பலிபோல் பாக்கியசெல்வம் புவியில் இல்லையே
புவிநிரம்ப பொன்தந்தாலும் பலிக்கு ஈடில்லையே
பரமனே இப்பலிபொருளாய் எழுந்தருள்வாரே
பக்தி ஆவல் நிரம்ப பலியை ஒப்புக்கொடுப்போமே (2) -(பூசைப் பலிபோல்)

2. அள்ள அள்ளக் குறையா சுரக்கும் அமுதம் நிறை சுனையே
அன்பில் சிறந்து உயர்ந்து நின்ற கல்வாரிப் பலியே
எல்லையில்லா பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவநோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே - (2) - (பூசைப் பலிபோல்)

 3. சோம்பல் அசதி சோர்வனைத்தும் தூரத்தள்ளியே
சீர்நிறைப்பலி ஆவல் நிரம்ப செலுத்திடுவோமே
ஆண்டவனுக்கேற்ற நன்றி ஆராதனையுமே
அளித்து பாவமன்னிப்பருளும் அடைந்திடுவோமே - (2) - (பூசைப் பலிபோல்)


Tamil Catholic songs lyrics


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக