Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5

 -ப்ளாஞ்ச் அரசியை சந்திக்கிறார்


முதன் முதலாக ஒரு ஆல்பிஜென்சிய பதிதனை மனந்திருப்புவதில் அடைந்த வெற்றியைக் குறித்து அர்ச்.சாமிநாதரின் இருதயம் விவரிக்கமுடியாத நன்றியினாலும் உறுதியான திர்மானத்தினாலும் நிறைந்திருந்தது. நம் சத்திய வேத விசுவாசத்தை பிரசங்கிப்பதையே வேதபோதக அலுவலாகக் கொண்ட ஒரு சந்நியாச சபையை நிறுவுவதற்கான திர்மானம் அவரிடம் ஏற்பட்டது. வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் காஸ்டிலின் அரசனுடைய தூதுவர்களாக பிரான்சு நாட்டின் அரசனையும் காணச்சென்றனர். அப்போது 8ம் லூயிஸ் அரசன் அந்நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவி ப்ளாஞ்ச் அம்மாள் ஒரு பக்திமிகுந்த நல்ல கத்தோலிக்க பெண்மணி. ப்ளாஞ்ச் அரசிக்குக் குழந்தை இல்லாததால் மிக துயரத்தில் இருந்தாள்.

அதைக்கண்ட அர்ச்.சாமிநாதர் அவள் மேல் இரங்கி, அவளிடம் ஜெபமாலையைப் பற்றிக் கூறினார். அவ்வுன்னத ஜெபமாலையை தினமும் செய்து வரும்படி அவளுக்கு அறிவுரை கூறினார். அர்ச்சிஷ்டவருடைய புத்திமதியை, ப்ளாஞ்ச் அரசி உடனே முழுமனதுடன் கடைபிடித்து தினமும் ஜெபமாலையை பக்தியுடன் ஜெபித்து வந்தாள். ஜெபமாலை பக்தியை தன் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் பரப்பினாள். குழந்தை வரத்திற்காக ஜெபமாலையில் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தன் நாட்டு பிரஜைகளிடம் விண்ணப்பித்தாள். அவர்களும் தன்னுடன் சேர்ந்து ஜெபமாலை செய்யும்படி ஏற்பாடு செய்தாள். பிரான்சு நாட்டு அரசனும், அரசியும், அந்நாட்டு மக்கள் அனைவரும் இவ்வாறு சேர்ந்து ஜெபமாலை ஜெபித்ததின் விளைவாக அந்த அரசதம்பதியருக்குப் பிறந்தவர்தான் மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.லூயிஸ் அரசர். இவர் 9ம் லூயிஸ் அரசராக பிரான்சை ஆண்டார். 1215ம் ஆண்டு பிறந்தார். ப்ளாஞ்ச் அம்மாள் தன் குழந்தைக்கு உத்தம கத்தோலிக்க வேதத்தின் ஞானஉபதேசத்தைக் கற்பித்து வந்தாள்0 தன் மகன் லூயிஸ் ஒரு பட்சமுள்ள, பக்தியுள்ள அரசனாக நீதியுடன் பிரான்சை ஆளவேண்டுமென்று ஆசித்தாள். 

அவள் தன் மகனிடம், “மகனே! பாவமே உலகத்தில் மாபெரும் திமை என்பதை ஒருபோதும் மறவாதே! நான் உன்னை நேசிப்பது போல எந்தத் தாயும் தன் மகனை நேசித்ததில்லை. என்றாலும் நீ ஒரு சாவான பாவம் செய்து நம் நேச ஆண்டவரை மனநோகச் செய்வதை விட நீ சாவதைப் பார்க்க ஆசிப்பேன்” என்று அடிக்கடி கூறுவாள். இவர் தனது 12ம் வயதிலேயே, தன் தந்தையான 8ம் லூயிஸ் இறந்ததால், பிரான்சின் அரசரானார். அதாவது 1227ம் ஆண்டு முதல் 1270ம் ஆண்டு வரை உத்தமமான விதத்தில் மெய்யான கத்தோலிக்க அரசராக பிரான்சை ஆண்டு வந்தார். தினமும் காலையில் திவ்யபலிபூசையை பக்தியுடன் கண்டு தன் நாட்டிற்காக ஒப்புக் கொடுப்பார். அதன் பிறகே, தன் அரச அலுவல்களைக் கவனிப்பார். விசுவாச பிரமாணத்தில் “வார்த்தையானவர் மாமிசமானார்”என்று கூறும்போதும் ஆண்டவரின் திவ்ய பாடுகளில் “ஆண்டவர் மரித்தார்” என்ற சுவிசேஷம் வாசிக்கப்படும்போதும் முழந்தாளிடும் வழக்கத்தை துவக்கியவர் இவரே.

இவர் தன் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டார். தான் ஞானஸ்நானம் பெற்ற நாளையே ஆடம்பரமாகக் கொண்டாடுவார். தினமும் 100 ஏழைகளுக்கு உணவைஅளிப்பார். திமைகளையும் பாவத்தையும் அகற்றி பிரான்சு நாட்டை நல்லொழுக்கமுள்ள கத்தோலிக்க நாடாக மாற்றுவதில் அரும்பாடு பட்டார்.தேவதூஷணமாக பேசுபவர்களுக்கும் தியவார்த்தைகளைப் பேசுபவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்டத்தை ஏற்படுத்தினார். இவ்வாறு இவருடைய காலம் கத்தோலிக்க நாடான பிரான்சின் பொற்காலம் என்று அழைக்கப் படுகின்றது.

இவ்விருபெரும் அர்ச்சிஷ்டவர்களையும் இணைத்த இந்நிகழ்வை எப்போதும் நினைத்து மகிழும் அர்ச்.சாமிநாதர் சபையினர் அர்ச்.லூயிஸ் அரசரை “மகா பரிசுத்த ஜெபமாலையின் குழந்தை” என்று அழைக்கின்றனர். அடுத்த கோடைகாலத்தில் காஸ்டிலின் இளவரசனுடன் டென்மார்க்நாட்டின் இளவரசியின் திருமணமானது நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் டென்மார்க் நாட்டின் இளவரசி திடீரென்று இறந்து போகவே வந். டீகோ ஆண்டகை அரசனுடைய தூதுக்குழுவிலிருந்து விடுபட்டவராக அப்போதைய மூன்றாம் இன்னசன்ட் பாப்பரசரை சந்திப்பதற்காக அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரிக்கு சென்றார். † (தொடரும


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக