Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

அர்ச் சிசிலியா (St.Ceceilia) வாழ்க்கை வரலாறு in Tamil

அர்ச் சிசிலியா (St.Ceceilia) 
குறிப்பு 
பிறப்பு      : தெரியவில்லை 
இறப்பு      : 177 ஆம்  ஆண்டு Nov .22
மரணம்    : வேத சாட்சி மரணம்.

உடல் அழியாமல் இன்னும் உள்ளது.


அர்ச் சிசிலியா ஒரு ரோமன் புனிதை. அவரது பிறந்த ஆண்டு தெரியவில்லை, ஆனால் அவர் ரோம் நகரில் 177 கி.பி. இறந்தார் என்று  நம்பப்படுகிறது. அவருடைய உடல் அழியா நிலையில் 1599 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடல் தான் முதல் முதலில் அழியாமல் இருந்த முதல் புனிதை என அறிய படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள்  அர்ச் சிசிலியா ஒரு ரோமன் கிறிஸ்தவரின் மகள் என்று கூறுகின்றனர். பெற்றோருடைய வற்புறத்தலால் Valerian of Trastevere என்ற வாலிபனை திருமணம் செய்தார்.  ஆனால்  அவருடைய விருப்பமோ ஒரு கன்னியாக இருப்பது மட்டுமே. திருமண நாள் அன்று அவர் ஆண்டவரிடம் "ஆண்டவரே நான் எந்த குழப்பமும் இல்லாமல் என் மனது மற்றும் உடல் துய்மையாக வைத்திருக்க உ த வும்,  

திருமணம் முடிந்த பிறகு வீடு சென்ற பின் அர்ச் சிசிலியா தன்  கணவனை பார்த்து சொன்னதாவது தன்னுடைய கற்பை ஒரு காவல் சம்மனசு கோபத்துடன் காத்து வருவதாக சொன்னார். அர்ச் சிசிலியாவிடம் அப்படி என்றல் உன் காவல் சம்மனசை எனக்கு காட்டு என்றான். அர்ச் சிசிலியா அவனிடம் நீ பார்க்க வேண்டுமானால் நீ கத்தோலிக்க திருச்சபையை விசுவசித்து ஞனஸ்தானம் பெற்றால் மட்டுமே நீ அவரை பார்க்க முடியும். என்றார். 

தன் மனைவி சொன்னதை விசுவசித்து அவனும்  ஞனஸ்தானம் பெற்றான். அன்று இரவு தன் மனைவி ஜெபிக்கும் பொது இரு காவல் சம்மனசுக்கள் அவள் அருகே நிற்பதை கண்டான். அவர்கள் அர்ச் சிசிலியா தலையின் மீது ரோஜா மற்றும் லில்லியால் அலங்கரிக்க பட்ட கிரிடத்தை சூட்டினர். அவனுடைய சகோதரனும் ஞனஸ்தானம் பெற்றான். இரு சகோதரர்களும் பணகரர்களாக இருந்ததால் வேதசாட்சி மரணம் அடைந்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உதவி செய்தனர். கிறிஸ்தவர்களுடைய சடலங்களை அவர்கள் பக்தியுடன் புதைத்தனர். 

ரோம் நகரிலே கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆளுநன் Almachius என்பவர் முன் கொண்வரப்பட்டனர். அவர்கள் பொய்யன் கடவுளை வழிபட மறுத்தனர். எனவே அவர்களை வாலால் வெட்டி கொன்றான். இதை அறிந்த  அர்ச் சிசிலியா அவர்களது உடலை பக்தியுடன் கல்லறையில் வைத்தார். 
இதனை அறிந்த  ஆளுநன் Almachius அர்ச் சிசிலியாவையும் கைது செய்தான். அர்ச் சிசிலியாவையும் அவளின்  அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க சொன்னான். ஆனால் அர்ச் சிசிலியா அதை மறுத்தார். எனவே குளிக்கும் அறையில் சூடான வெந்நீர் உற்றி கொல்ல முயன்றனர். ஆனால் அந்த வெந்நீர் அவளை ஒன்றும் செய்யவில்லை.

பின் அவளை தலை வெட்டுண்டு கொலை செய்ய அனுப்பினான்.   மூன்று முறை வெட்டப்பட்டு ஆனால் முழுவதும் வெட்டபடாமல்  கழுத்து தொங்கி கொண்டு இருந்தது. தலை வெட்டுண்டு முன்று நாட்கள் உயிருடன் இருந்தார்.
அவள் அந்த மூன்று நாளும் வலியுடன் ஆண்டவரை புகழ்ந்து பாடிக்கொண்டு இருந்தார். இறுதியாக அவர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் இறந்தார்.

அவருடைய கல்லறை 817 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டு ரோமில் உள்ள அவரது ஆலயத்துக்கு மாற்ற பட்டது. 1599 ஆம் ஆண்டு மீண்டும் அவரது கல்லறையை திறந்த போது  அவரது உடல் அழியாமல் இருப்பதை கண்டனர்.
இப்போதும் நாம் ரோம் நகரில் உள்ள அவரது ஆலயம் சென்ட்ரல் அவரது அழியா உடலை காணலாம்.

அர்ச் அஞ்சேம்மாள் ( st .Agnes ) வாழ்க்கை வரலாறு

அர்ச். அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .(தமிழில்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக