Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 23 டிசம்பர், 2021

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 2 St. Ambrose Life History in Tamil

 அர்ச். அம்புரோஸ்

(கி.பி.340-398):
திருநாள் டிசம்பர் 7ம் தேதி

அர்ச்.அம்புரோஸ் உரோமாபுரியில் உத்தமமான உயா;ந்த கோத்திரத்துத் தாய் தகப்பனிடத்திலே கி.பி.340ம் வருடம் பிறந்தார்.இவர் பிறந்தபோது அவருடைய வார்த்தைகள் தேனைப் போல மதுரமாயிருக்குமென்பதற்கு அடையாளமாக குழந்தையின் வாயில் தேனீக்கள் கூட்டமாக வந்து மொய்த்தது. இதனாலேயே இவர் அமிர்தநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அவருடைய தகப்பனார் கல்லிய தேசத்து கவர்னராயிருந்தார்.

சிறுவயது முதல் அவருடைய தாய் அவரை நல்லொழுக்கத்தில் நடத்தி வந்தாள். கன்னியாஸ்திரியாயிருந்த அவருடைய அக்காள் பரிசுத்த கற்பின் மேல் அவருக்கு மிகுந்த பற்றுதலை ஏற்படுத்தினாள். அவர் மிகுந்தபுத்திக் கூர்மையுள்ளவராயிருந்ததினாலே, வேத சாஸ்திரங்களை நன்றாய் படித்து பேச்சுச் சிறப்பிலும்,விவேகத்திலும்சிறந்து விளங்கினார். ஆதலால் சிலகாலம் நிதிபதியாக விளங்கினார். உரோமாபுரி அரசன் அர்ச்.அமிர்தநாதரை அநேகம் நாடுகளின்மேல் கவா;னராக நியமித்து அவரை அங்கேப் போகச் சொன்னான். அவர் போகிறபோது, அரசன் அவரைப் பார்த்து “நீர் அந்த நாடுகளை நடுவனாக நடத்தாமல், மேற்றிராணியாரைப்போல் விசாரியும்” என்று சொல்லி யனுப்பினான். அவர் மிலான் பட்டணத்துக்குப்போய் தகப்பனைப் போலே அந்த ஜனங்களை தயவாய் விசாரித்து நடத்தினதாலே, பிரஜைகள் அவர் பேரிலே மிகுந்த பட்சம் வைத்தார்கள். இந்த சமயத்திலே 374ம் ஆண்டில் பதிதனாயிருந்த மிலான் நகர மேற்றிராணியார் இறந்தபிறகு, அந்தப் பட்டணத்திலே அநேகர் கத்தோலிக்கரும் சிலர் பதிதரு மாயிருந்ததினாலே, கோவிலிலே வேறே மேற்றிராணியாரைத் தெரிந்து கொள்வதிலே தங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினர். கலகம் பண்ணத் துவங்கினார்கள். அதனால் அதிகாரியாயிருந்த அமிர்தநாதர் கோவிலுக்குப் போய் அவர்களுக்கு சமாதான நியாயங்களைச் சொல்லிக் காட்டினார். 

அப்பொழுது ஒரு சிறு குழந்தை சத்தமாய் “அம்புரோஸ் தான், நமது மேற்றிராணியார்!” என்று கத்தியது.கோவிலிலேயிருந்தவா;கள் அதைக்கேட்டு, சந்தோஷத்தோடு ஒருமனப்பட்டு அவரை மேற்றிராணியாராகத் தெரிந்து கொண்டார்கள். அர்ச்.அமிர்தநார் அந்தப் பொறுப்பு தனக்கு வராதபடிக்கு அழுதார்0 மன்றாடினார் ஓடியும் போனார். ஆனால் ஒன்றும் பயனில்லாமல் போனது. ஏனென்றால் அந்தப் பட்டணத்தார் அவரைத்தேடிப் பிடித்து அரண்மனைக்குக் கூட்டி வந்து காவல் வைத்ததுமல்லாமல், அமிர்தநாதர் எங்கள் மேற்றிராணியாராயிருக்க வேண்டுமென்று அரசனிடம் மன்றாடும்படி ஆளனுப்பினார்கள். அதற்கு அரசன் சம்மதித்ததினாலே, அமிர்தநாதரும் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. அவர் ஞானஸ்நானத்தினால் அடையும் தேவஇஷ்டபிரசாத அந்தஸ்தை இழக்க பயந்து அதுவரைக்கும் ஞானஸ்நானம் பெறாதிருந்தார். ஆதலால் ஞானஸ்நானம் பெற்று குருப்பட்டம் வாங்கின பிறகு, அவர் தமது 34வது வயதில் மேற்றிராணியார் பட்டம் பெற்றார். பதவிக்கு வந்தவுடனேயே தனக்குண்டான சொத்துக்களை யெல்லாம் கோவிலுக்கும் பிச்சைக்காரருக்கும் கொடுத்தார். எத்தனை அலுவல்களிருந்தாலும் தினசரி திவ்யபலி; பூசையையும், ஞாயிறு பிரசங்கத்தையும் செய்யத்தவற மாட்டார். அவருடைய பிரசங்கத்தினாலே மனந்திரும்பினவர்களுக்குக் கணக்கில்லை. அவா; மகா பரிசுத்தகன்னிமாமரியின் பேரிலேயும், கன்னிமையின் பேரிலேயும் சொன்ன தோத்திரங்களைக் கேட்டு அநேகம் பெண்கள் கன்னியாஸ்திரிகளாய்ப்போனார்கள். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களெல்லாம் ஒருசந்தியாயிருந்து தபசு பண்ணுவார். தியானத்திலே வெகு நேரம் செலவழிப்பார்.

தேவநற்கருணை பேரிலும் தேவமாதா பேரிலும் அவர் வைத்திருச்த விசேஷ பக்தியினாலே வெகு தோத்திரங்களை சொன்னதும் தவிர, அவருண்டாக்கின அநேகம் புத்தகங்கள் வழியாக திருச்சபைக்கு வெகு ஞானநன்மை உண்டாக்கினார். அர்ச்.அமிர்தநாதர் வருங்காரியங்களை முன்னறிவித்தது மல்லாமல அநேகம் புதுமைகளையும் செய்தார். ஆரியப்பதிதரை ஒடுக்குவதில் திருச்சபைக்கு அவா; செய்த நன்மைகள் வாக்குக்கடங்காது. அர்ச்.அகுஸ்தினார்,பதிதத்திலும் ஆசாபாசங்களிலேயும் அகப்பட்டிருந்தபோது அர்ச்.அம்புரோஸ் அவருக்கு புத்தி சொல்லி அவருடைய மனதை சத்திய வேதத்துக்குத் திருப்பி ஞானஸ்நானமும் கொடுத்தார்.

அர்ச்.அகுஸ்தினார் வழியாக திருச்சபைக்குக் கிடைத்த ஞான ஆதாயத்துக்கு அர்ச்.அம்புரோஸே காரணமாயிருந்தார். வேதாக மத்தையும் திருச்சபையின் எழுத்தாளர்களின் நுரல்களையும் படித்து ஆராயத் தொடங்கினார். சிம்பிளியானுஸ் என்னும் குரு இதில் இவருக்கு துணையாக இருந்தார். 381ல் மிலானில் ஒரு சங்கத்தைகூட்டிஅப்பொலினாரிஸ் என்பவருடைய தவறான போதனையைக் கண்டித்தார். ஜஸ்டினா என்ற பேரரசி பதிதர்களுக்கு கோவில் ஒன்றை கொடுத்தததை இவர் அச்சமின்றி தடுத்து நிறுத்தினார். தெயோதோஸ் அரசன் ஒருபட்டணத்திலே நடந்த கலாபனைக்கு தண்டனையாக குற்றமில்லாத ஜனங்களை உயிரச்சேதம் பண்ணினான். அதையறிந்த அர்ச்.அம்புரோஸ் அந்த அக்கிரமத்தைக் கண்டித்து அரசனுக்கு சிட்டெழுதியனுப்பினார்.

அரசன்அப்பொழுது மிலான் நகரத்திலே இருந்தான். சீட்டு வழியாக அவன் தன் அக்கிரமத்தைக் கண்டுபிடித்து பயந்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை அர்ச்.அம்புரோஸ் இருந்த கோவிலுக்குவந்தான். கோவிலுக்குள் நுழைகிற சமயத்திலே அர்ச்சியசிஷ்டவர் அவனை உள்ளே வரவேண்டாமென்று தடுத்தார். அரசனிடத்திலே அவர் தாழ்ச்சியோடு பேசினாலும், அவன் பண்ணின நிஷ்டூரத்தை சரியாகச் சொல்லிக் காட்டினார்.

அதற்கு அரசன், “நான் செய்த நிஷ்டூரத்தைக் கண்டுபிடிக்கிறேன், அதை சர்வேசுரன் பொறுப்பாரென்று தாவீது ராஜாவைப் போல் நம்பியிருக்கிறேன்” என்றான். அதற்கு அர்ச்.அம்புரோஸ் அவனைப் பார்த்து, “நிர் பாவம் செய்வதிலே தாவீது ராஜாவைப் பின் சென்றது போலே தபசு செய்வதிலேயும் அவரைப் பின் செல்லும்” என்று சொன்னார். நல்லதென்று சம்மதித்த அரசன் 8 மாதம் கோவிலுக்குப் புறம்பாயிருந்து அரச மகிமையை விட்டு அழுகையோடே தவஞ் செய்தான். அபராதம் திர்ந்த பிறகு கோவிலுக்கு மறுபடி வந்தான். அர்ச்.அம்புரோஸ் மரணபரியந்தம் எண்ணிறந்த புண்ணியங்களையும் பெரும் செயல்களையும் அற்புதங்களையும் செய்தார்.

கடைசியிலே வியாதியினாலே அவர் அவஸ்தையாயிருக்கும்போது சுற்றியிருந்தவர்கள், “தேவாPர் இன்னும்அதிக நாள் பூலோகத்திலேயிருக்க சர்வேசுரனை வேண்டிக்கொள்ளும”; என்றார்கள். அதற்கு அவர், “நாம் உயிரோடிருக்கிறதற்கு வெட்கப்படவும் சாகிறதற்கு பயப்படவும்ில்லை” என்றார். பிற்பாடு திவ்யநற்கருணையை பக்தியோடு வாங்கி தனக்குதரிசனையானதிவ்ய சேசுநாதர் சுவாமியின் திருக்கரத்திலே தனது ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து அமிர்தநாதரான அர்ச்.அம்புரோஸ் திவ்ய கர்த்தர் பிறந்த 398ம்வருடம் தபசுகாலத்தின் இறுதிசனிக்கிழமையன்று பாக்கியமாய் மரித்தார். †

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக