Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 17 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 36 - அர்ச். நெபுமுசேன் அருளப்பர் (St. John of Nepomuk May 16)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 

🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி

🌹பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக முதல் வேதசாட்சியாக மரித்த அர்ச். நெபுமுசேன் அருளப்பர் திருநாள்.🌹

🌹இவருடைய இயற்பெயர் ஜான் வெல்ஃப்லின்; 1345ம் வருடம்  பொஹேமியா  (இப்போது செக்கோஸ்லோவாகியா) நாட்டில்,  போமுக் என்ற சந்தை நகரத்தில், பிறந்தார். இந்நகரம் பின்னாளில் நெபோமுக் என்று மாற்றப்பட்டது.

இவர் பிராக் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்; 1383ம் வருடம் முதல் 1387ம் வருடம் வரை, பதுவா பல்கலைக்கழகத்தில் வேத சட்டத்திற்கான பட்டப்படிப்பைப் பயின்றார்.

1393ம் வருடம், பிராக் நகர அதிமேற்றிராணியாரால், அர்ச்.ஜைல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில், பங்கு சுவாமியார்களின் அதிபர் சுவாமியாராக நியமிக்கப்பட்டார். 

பொஹேமியா நாட்டின் அரசியின் ஆன்ம குருவாக இவர் நியமிக்கப்பட்டார். ஒருநாள்,  அந்நாட்டின் அரசன், இவரிடம் , தன் மனைவியான அரசியார், பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களை தன்னிடம்,வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்தினான்!

அதற்கு இவர் மறுத்து விட்டார். உடனே, இவரை அரசன் கொடூரமாக உபாதித்தான்.1393ம் வருடம் மே 16ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத் திருநாளுக்கு முந்தின திருவிழிப்பு நாளன்று, பொஹேமியா அரசனான 4ம் வென்செஸ்லாஸின் உத்தரவின்பேரில், இவர் கைகால்கள் கட்டப்பட்டவராக வில்டாவா ஆற்றின் மீது  பிராக் நகரில் கட்டப்பட்டிருந்த சார்லஸ் பாலத்திலிருந்து, ஆற்றினுள் எறியப்பட்டார்.  பின்னர், இவருடைய உடல்  தண்ணீர் மேல் மட்டத்தைத் தொட்டபோது, அந்த இடத்தின் மேல் புதுமையாக ஐந்து நட்சத்திரங்கள் தோன்றின! இந்த அற்புதத்தை பிராக் நகர் மக்கள் திரளான கூட்டமாக வந்து பார்த்தனர். இதைப் பற்றி, அரசி, அரசனிடம் தெரிவித்தாள்;  இதைக் கேட்டுப் பேரச்சமடைந்த அரசன்,  தன் அறைக்குள் சென்று அடைபட்டவனாக பல நாட்கள் உள்ளேயே இருந்தான்.

300 வருடங்களுக்குப் பின், 1719ம் வருடம் , இவருடைய பரிசுத்த சரீரம் மோல்டாவு ஆற்றில் அழியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். இப்போது தான் அது ஆற்றில் எறியப்பட்டதுபோல் புதுப்பொலிவுடன் இருந்தது! 

இவருடைய கல்லறை பல வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்டபோது, இவருடைய நாக்கு புதுமையாக அழியாமல் இருந்தது!  அதனுடைய வீரத்துவம் வாய்ந்த வேதசாட்சிக்குரிய பரிசுத்த மவுனமே, இத்தகைய மாபெரும் மகிமையை, சர்வேசுரனிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தது.

  அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், பொஹேமியா நாட்டின் அரசாங்கத்தினுடைய அர்ச்சிஷ்டவராகப் போற்றி ஸ்துதிக்கப்படுகிறார்! பாவசங்கீர்த்தனத்தின் இரகசியமான உடைபடா முத்திரையைக் காப்பாற்றுவதற்காக  தன் உயிரை விட்ட முதல் வேதசாட்சியாக இவர் திகழ்கிறார்! புறணிப்பேச்சுகளுக்கு எதிரான புண்ணியங்களின் பாதுகாவலராகவும், இவர் இறந்த விதத்தின் மூலமாக, வெள்ள அபாயத்திலிருந்தும், தண்ணீரில் மூழ்கும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கும் அர்ச்சிஷ்டவராகவும், இவர்  விளங்குகின்றார்.

அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், “புதுமைகளால் மின்னுகிற நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகிமைமிக்க வேதசாட்சி” என்று வர்ணிக்கப்படுகிறார்.🌹✝


🌹அர்ச்.நெபுமுசேன் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


🌹பாவசங்கீர்த்தனத்தின் உடைபடா முத்திரை🌹

🌹இந்த தேவதிரவிய அனுமானத்தின் முத்திரை உடைபடக்கூடாதது! மீற முடியாதது!  திருச்சபைச் சட்டம் 983.1ன் படி, ஞான உபதேசம், பாவசங்கீர்த்தனத்தில், பாவியானவனை, எந்த விதத்திலும், பாவசங்கீர்த்தனத்தைக் கேட்ட ஆன்ம குருவானவர், வார்த்தையினாலோ, அல்லது வேறு எந்த விதத்திலோ, அல்லது எந்த காரணத்திற்காகவோ ( எண் 2490), காட்டிக் கொடுத்தால், அது அவருக்குப் பெரிய பாவாக்கிரமமாகும்.  ஆதலால், தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, அல்லது, தனது நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவோ, அல்லது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை, அது பொய்யானது  என்று  நிரூபிப்பதற்காகவோ,இன்னொருவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகவோ, நீதிமன்ற வழக்கிற்கு உதவி செய்வதோ, பொது மக்களுக்கு எதிராக வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ என்று எந்த காரணத்திற்காகவும், ஒரு குரு, பாவசங்கீர்த்தன இரகசியத்தின் உடைபடா முத்திரையை, முறிக்கக் கூடாது! பாவசங்கீர்த்தனத்தில் கேட்டதை வெளியிடக் கூடாது!

ஒருவனுடைய பாவசங்கீர்த்தனத்தை, வெளிப்படுத்துவதற்குக் குருவானவர்,  மனித சமூக சட்டத்தினால்,  வலுவந்தம் செய்யக்கூடாதவராக இருக்கிறார்!  அல்லது இவர் வேறு எந்த வார்த்தைப்பாடு எடுத்தாலும், உதாரணமாக,  நீதிமன்றங்களில் இவர் சாட்சியாக சொல்லும்போது அங்கு, பரிசுத்த வேதாகமத்தின் மீது சத்தியம் செய்தால் கூட, அதுவும்,  இந்த  பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதிலிருந்து . இவரை விடுவிக்கக் கூடாமலிருக்கிறது! பாவசங்கிர்த்தனத்தில் கூறியவற்றை அப்படியே திரும்பக் கூறுவதன் மூலமாகவோ, அல்லது சில மறைமுகமான அடையாளங்கள் மூலமாகவோ, ஆலோசனை மூலமாகவோ, அல்லது செய்கை மூலமாகவோ ஒரு குருவானவர், பாவசங்கீர்த்தனத்தை வெளிப்படுத்தக் கூடாதவராக இருக்கிறார்! 

பாப்பரசரின் அலுவலகத்திலிருந்து ஒரு தவறா வரம்பெற்ற ஆணை (நவம்பர் 18, 1682ம் வருடம் வெளியிடப்பட்டது), “பாவசங்கீர்த்தனம் செய்தவரின் மனம் நோகச் செய்யும்படி, அல்லது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தும்படியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதும்,  பாவசங்கீர்த்தனத்திலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி  வெளிப்படுத்துவதும், ஒரு குருவானவருக்குக் கட்டாயமாக தடை செய்யப்பட்ட காரியங்களாகும்” என்று பிரகடனம் செய்கிறது.🌹✝


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



🇻🇦

May 1️⃣6️⃣


Martyrdom 🌟🌹

ST. JOHN OF NEPOMUK

(The first martyr of the Confessional Seal)




Jan Velflín was born in AD 1345, in the small market town of Pomuk (later renamed Nepomuk) in Bohemia, now in the Czech Republic


He studied at the University of Prague, then furthered his studies in canon law at the University of Padua from 1383 to 1387.

In 1393, John was made the vicar-general of Saint Giles Cathedral by Jan of Jenštejn, Archbishop of Prague

St. John was confessor of the queen of Bohemia, and a day came when the King demanded from him to tell what the queen had said in the confessional!

St. John refused to divulge the secrets of the confessional to the King. Hence St. John was tortured and then with his hands and feet tied, on the vigil of Ascension, 16 May 1393, he was thrown into the river Vltava from Charles Bridge in Prague at the behest of Wenceslaus IV, King of Bohemia.

Later at the place where his body had hit the water, five stars appeared over the spot. The people of Prague came in great numbers to witness the marvel. The Empress pointed out the miracle to the King, who became terrified and closed himself in his room for several days.

In 1719, about 300 years later his body was found intact in the Moldau River, as if it had been thrown into it minutes before. 

When his tomb was opened again many years later, his tongue was found incorrupt, which for its silence, gave such a great glory to God.

St. John of Nepomuk  is the national saint of Bohemia and is considered the first martyr of the Confessional Seal, a patron against calumnies and, because of the manner of his death, a protector from floods and drowning

🎯

St. John of Nepomuk is described as "gloriosum Christi martyrem miraculisque coruscum"

("a glorious martyr of Christ and sparkling with miracles")



    🍁🍁🍁🍁🍁🍁🍁


THE CONFESSIONAL SEAL❗


The sacramental seal is inviolable. Quoting Canon 983.1 of the Code of Canon Law, the Catechism states, "...It is a crime for a confessor in any way to betray a penitent by word or in any other manner or for any reason" (No. 2490). A priest, therefore, cannot break the seal to save his own life, to protect his good name, to refute a false accusation, to save the life of another, to aid the course of justice (like reporting a crime), or to avert a public calamity. He cannot be compelled by law to disclose a person's confession or be bound by any oath he takes, e.g. as a witness in a court trial. A priest cannot reveal the contents of a confession either directly, by repeating the substance of what has been said, or indirectly, by some sign, suggestion, or action. A Decree from the Holy Office (Nov. 18, 1682) mandated that confessors are forbidden, even where there would be no revelation direct or indirect, to make any use of the knowledge obtained in the confession that would "displease" the penitent or reveal his identity.




🔵




To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

Tamil Catholic Quotes - St. Paschal Baylon

 சேசுநாதர் பரலோகத்தில்  மகிமையாக இருப்பதைப் போலவே, திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்

அர்ச். பாஸ்கல் பயலோன்





Blinking Feature Using CSS - Click Here



அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 35 - அர்ச். பாஸ்கால் பயிலோன் (St. Paschal Baylon - May 17)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 1️⃣7️⃣ம் தேதி


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின்  சரீரமெடுத்த பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச். பாஸ்கால் பயிலோன் திருநாள்🌹



🌹பாஸ்கால், ஸ்பெயின் தேசத்திலுள்ள ஆரகன் நாட்டில் 1540ம் வருடம், மே 24ம் தேதி, பெந்தேகோஸ்தே திருநாளன்று, பிறந்தார்.  திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனின் திருநாளை , ஸ்பெயின் நாட்டினர், திவ்ய இஸ்பிரீத்துவானவரின் பாஸ்கா என்று அழைப்பதால், இவருக்கு பாஸ்கால் என்று இவருடைய பெற்றோர்கள் பெயரிட்டனர். இவர் 22 வயது வரை ஆடு மாடு மேய்க்கும் தொழிலிருந்தார். ஆடு மேய்க்கும்போது, இவர் தன்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று, வருவோர் போவோரிடம், ஏ பி சி டி எழுத்துக்களை தனக்குக் கற்பிக்கும்படிக் கேட்பார். தனக்கு புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்பார். வயலில் வேலை பார்க்கும்போது, கத்தோலிக்க வேதப் புத்தகங்களையும், ஞான நூல்களையும் வாசிப்பார்.

இவர், அர்ச்.அல்காந்தரா இராயப்பரின் சீர்திருத்தப்பட்ட பிரான்சிஸ்கன் துறவற சபையில், ஒரு  பொது நிலை சகோதரராகச் சேர்ந்தார். வாயில்காப்போனாக ஸ்பெயினிலிருந்த அநேக பிரான்சிஸ்கன் துறவற மடங்களில் இவர் பணிபுரிந்தார். இவர் அர்ச்சிஷ்டனத்தனத்தினுடைய உத்தமதனத்தில் எவ்வளவுக்கு அதிகமாக முன்னேறினார் என்றால், காட்சிதியானியாகவும், தேவசிநேகத்தில், குறிப்பாக மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சேசுகிறீஸ்து நாதர் மீது கொண்ட மாபெரும் சிநேகத்தினால், ஆழ்ந்த தியானியாகவும் ஜீவித்து வந்தார். அடிக்கடி பரலோகக் காட்சிகளால் பரவச நிலைமையினுள் மூழ்கி விடுவார். மகா பரிசுத்த தேவநற்கருணையின் முன்பாக இரவில் பல மணி நேரம் ஆழ்ந்த ஜெப தியானத்தில் மூழ்கியிருப்பார். 

1570ம் வருடம் பிரான்சிஸ்கன் துறவற சபையின் பொது தலைமை அதிபர், பாரீஸ் நகரத்திற்கு வர நேர்ந்தது. துறவற சபையின் ஒரு அவசியமான  காரியத்திற்காக, இவரை அதிபரிடம் அனுப்பி வைத்தனர்.  பிரான்சிலிருந்த அநேக நகரங்கள் வழியாக இவர் பயணிக்க நேர்ந்தபோது,  அந்நகரங்கள் எல்லாம் புராட்டஸ்டன்டு பதிதர்கள் கையிலிருந்தன!  அவர்கள் படைக் கருவிகளுடன் இருந்தனர். இருப்பினும்,  மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவரின் மெய்யான திவ்ய பிரசன்னத்திற்கு எதிரான புராட்டஸ்டன்டுகளின் தேவதூஷணமான கருத்துகளுக்கும் வாதங்களுக்கும் எதிராக அந்த புராட்டஸ்டன்டு பதிதர்களுடன், அர்ச்.பாஸ்கால் வாதாடினார்; மகா பரிசுத்த தேவநற்கருணையைப் பற்றிய கத்தோலிக்க வேதசத்தியங்களுடைய மேற்கோள்களுடன் இவர், மிகுந்த ஞானத்துடன், அப்பதிதர்களை, எதிர்வாதம் செய்ய விடாமல். திணறடித்தார்! தர்க்கவாதத்தில் முழு வெற்றியடைந்தார். இதைக் கண்டு சீற்றமடைந்து வெகுண்டெழுந்த பதிதக் கூட்டம், இவரைக் கற்களாலும் தடிகளாலும் அடித்தனர். அப்போது, அதனால். இவருக்கு ஒரு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.  எஞ்சிய ஜீவிய காலம் முழுவதும் அந்த காயத்தினால் ஏற்பட்ட முடத்துடனேயே இவர் வாழ்ந்து வந்தார்.

அர்ச்.பாஸ்கால், 1592ம் வருடம் மே 17ம் தேதி பாக்கியமாய் மரித்தார்; வலேரிய நாட்டின்  அரண்மனை சிற்றாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை , விரைவிலேயே திருயாத்திரை ஸ்தலமாயிற்று! இவருக்கு முத்திப்பேறு பட்டம் 5ம் சின்னப்பர் பாப்பரசர் 1618ம் வருடம் அளித்தார்; 8ம் அலெக்சாண்டர் பாப்பரசர், 1690ம் வருடம் அக்டோபர் 16ம் தேதி அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

13ம் சிங்கராயர் பாப்பரசர், அர்ச்.பாஸ்கால் பயிலோன், “மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகர்!” என்றும் மகா பரிசுத்த திவ்ய நற்கருணை மாநாடுகள் , இனி வரவிருக்கும் மகா பரிசுத்த தேவநற்கருணை பக்திசபைகளுக்கும் பாதுகாவலர்” என்றும்  பிரகடனம் செய்தார். இவர்,  பிரான்சிஸ்கன் துறவ சபை உடுப்பை அணிந்தவராகவும், மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர் பாத்திரத்தை ஏந்தியவராகவும், ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறார்! இது,  இவர் மகா பரிசுத்த தேவநற்கருணையின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்திபற்றுதலை நமக்கு உணர்த்துகிறது.🌹✝

(ஸ்பெயினின் உள்நாட்டுப்போரின்போது(1936-39) கம்யூனிஸ்டுகள் இவருடைய கல்லறையையும் பரிசுத்த அருளிக்கங்களையும் தீக்கிரையாக்கினர்)


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச்.பாஸ்கால் பயிலோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



Source:


🇻🇦

May 1️⃣7️⃣


Feast 🌟

ST. PASCHAL BAYLON

(Seraph of the Most Holy Eucharist)


Paschal was born in the Kingdom of Aragon, Spain on the Feast of Pentecost, 24 May 1540. He was named Paschal by his parents because in Spain, Pentecost is called "Pasch of the Holy Ghost".

He worked as a shepherd till the age of 22. He would carry a book with him and beg passersby to teach him the alphabet and to read, and as he toiled in the fields he would read religious books.

He joined the Reformed Franciscan Order (Alcantarine Reform) as a lay brother and served as a doorkeeper at various Franciscan monasteries in Spain.

He was a mystic and contemplative, and he had frequent ecstatic visions. He would spend hours in the night before the altar in prayer.

The General of the Franciscan Order happening to be at Paris in 1570. Paschal was sent to him for some necessary business of his province. Many of the cities through which he was to pass in France, were in the hands of the Protestants, who were then in arms, Paschal triumphantly defended the Catholic doctrine of the Real Presence of our Lord in the Most Holy Eucharist against the blasphemous assertions of Protestants. For this he was beaten up by Protestants with sticks and stones, and received a wound on one shoulder of which he remained lame as long as he lived.

Paschal died on 17 May, in AD 1592. His tomb in the Royal Chapel in Villareal in the old province of Valencia, immediately became an object of pilgrimage.

Paschal was beatified by Pope Paul V in 1618, & was canonized by Pope Alexander VIII on 16 October 1690 AD.


     🍁🍁🍁🍁🍁🍁🍁


Pope Leo XIII proclaimed St. Paschal Baylon, the "seraph of the Most Holy Eucharist", patron of Eucharistic congresses, and all contemporary and future Eucharistic associations.

Christian art usually depicts him wearing the Franciscan habit and bearing a monstrance, signifying his devotion to the  Most Holy Eucharist.

During the Red Terror at the time of the Spanish Civil War (1936-1939), his grave was desecrated and his relics were burned by the Communists.



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 16 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 34 - அர்ச். சைமன் ஸ்டாக் (St. Simon Stock) (May 16)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி



✨May 1️⃣6️⃣

🌹ஸ்துதியரும் கார்மேல் துறவற சபை அதிபருமான அர்ச். சைமன் ஸ்டாக் திருநாள்🌹

🌹சைமன், இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டு என்ற இடத்தில், கென்ட் பிரபுவின் உயர்குடும்பத்தில், எல்லாராலும் அறியப்பட்டு, மிக உயர்வாக மதிக்கப்பட்ட உத்தம கிறீஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தையாயிருந்தபோதே, மகா பரிசுத்த தேவமாதாவால், தமது சொந்த மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் பேசத்துவக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இவருடைய பெற்றோர்களும், குடும்பத்தின் மற்றவர்களும், அதிதூதரான அர்ச்.கபிரியேல் சம்மனசானவர் கூறிய மங்கள வார்த்தை ஜெபத்தை, இவர் ஜெபிக்கக் கேட்ட சமயத்தில், மகா பரிசுத்த தேவமாதா, இக்குழந்தையைத் தமது சொந்த மகனாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்; இவர் வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே, மகா பரிசுத்த தேவமாதாவின் சிறிய மந்திரமாலை ஜெபத்தை மனப்பாடம் செய்து, தினமும் பாராமல் ஜெபித்து வந்தார். சைமனுக்கு ஆறு வயதானபோது, இவர் தனது அறையில் முழங்காலிலிருந்தபடி, பரிசுத்த வேதாகமத்தைப் படித்து வந்தார்; 12 வயதானபோது, சைமன், வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தபோதனராக, ஒரு பெரிய ஓக் மரத்தினுடைய பொந்திற்குள்  ஏகாந்த்ததில் ஜீவித்து வந்தார். இதன் காரணத்தினாலே, இவருடைய பெயருடன் ஸ்டாக் என்ற பெயரும் சேர்ந்தது. 

ஸ்டாக் என்கிற வார்த்தைக்கு, “பெரிய மரக்கம்பம்” என்று அர்த்தம். இங்கு வசித்தபோது தான், இவர், மகா பரிசுத்த தேவமாதாவின் உதவியால், பசாசின் மீது வெற்றிகொண்டார், என்று, பின்னாளில், தனது சக துறவற சகோதரர்களிடம் கூறினார். இங்கு தபோதனராக ஜீவித்த காலத்தில், சைமன், தண்ணீரை மட்டுமே அருந்தி, சில மூலிகைகளையும், காட்டுச்செடி வேர்களையும், காட்டில் வளரும் ஆப்பிள் பழங்களையும், உண்டு வந்தார். இவ்விதமாக எட்டு வருட காலம், ஏகாந்தத்தில் தபோதனராக ஜீவித்தபிறகு, மற்ற துறவியருடன் சேர்ந்து ஒரு துறவற மடத்தில் ஜீவிக்க அழைக்கப்படுவதை உணர்ந்தவராக, கார்மேல் துறவற சபையில் சேர்ந்தார். இவர் தனது உயர் வேத இயல் கல்வியை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்று முடித்தார்; பின், 1215ம் வருடம், கார்மேல் துறவற சபையின் உபதலைவராக நியமிக்கப்பட்டார்; அர்ச்.சைமன், கார்மேல் துறவற சபை ஐரோப்பா முழுவதும் பரவுவதற்காக அயராமல் உழைத்து வந்தார். அநேக இடங்களில், குறிப்பாக பல்கலைக்கழக நகரங்களான ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், பாரீஸ், பொலோஞா ஆகிய நகரங்களில், புதிய கார்மேல் துறவற சபை மடங்களை ஸ்தாபித்தார். இத்துறவற சபையின் ஜீவிய முறையை, தபோதனர்களுடைய ஜீவிய முறையிலிருந்து, யாசக துறவியர்களுடைய (அர்ச்.பிரான்சிஸ் அசிசியாருடைய சிறிய சகோதரர்களுடைய துறவற சபை மற்றும் அர்ச்.சாமிநாதருடைய  போதகக் குருக்களின் துறவற சபை, யாசக துறவற சபை என்று அழைக்கப்படுகின்றன! அட்ட தரித்திரத்தை அனுசரித்து, பிறரிடம் யாசித்து உணவு உடை ஆகியவற்றை பெற்று ஜீவித்து வந்ததால், இவர்கள் யாசக துறவற சபையினர் என்று அழைக்கப்படுகின்றனர்!)  ஜீவிய முறைக்கு மாற்றியமைக்கும் விதமாக, கார்மேல் துறவற சபையின் விதிமுறைகளை சீர்திருத்தி அமைத்ததில், இவர் பெரும்பங்கை வகித்தார்; மகா பரிசுத்த தேவமாதாவிடம் இவர் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்ததைப் பற்றியும், அநேக ஞான கொடைகளையும், தீர்க்கதரிசன வரத்தையும் இவர் பெற்றிருந்ததைப் பற்றியும் யாவரும் அறிவர்; இவருக்கு 82 வயதானபோது, கார்மேல் துறவற சபையின் பொது தலைமை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;அதன் பின் ஏறக்குறைய 20 வருட காலம்,தனது உன்னதமான பரிசுத்தத்தனத்தினாலும், வருங்காலத்தைக் கண்டறியக்கூடிய நுட்பமான அறிவுத்திறனாலும், விமரிசையாலும், தொடர்ந்து கார்மேல் துறவற சபையை, திறம்படி நிர்வாகம் செய்து வந்தார்; 

அர்ச்.சைமன், இச்சபையின் பொது தலைமை அதிபராக இருந்தபோது, மகா பரிசுத்த தேவமாதாவின் காட்சியைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றார்; அர்ச்.சைமன், இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டுவில் முழங்காலிலிருந்து, ஜெபித்துக் கொண்டிருந்தபோது, மகா பிரகாசமுள்ள ஒளிரும் ஒளியினால் திரளான சம்மனசுகளின் சேனைகள் சூழப்பட்டபடி, மகா பரிசுத்த கார்மேல் மாதா, இவருக்குக் காட்சியளித்தார்கள்! அர்ச்.சைமனிடம், பழுப்பு நிற  கார்மேல் மாதா உத்தரியத்தை,  அளித்து, மகா பரிசுத்த தேவமாதா, அதற்கான ஈடு இணையற்ற தயாள பெருந்தன்மையினுடைய வாக்குறுதியையும், அவருக்கும், அவருடைய ஞான பிள்ளைகளுக்கும், மகா பரிசுத்த தேவமாதாவிற்கு அர்ப்பணிக்கவும், அதன் விசேஷமான அடையாளமான  இம்மகா பரிசுத்த உத்தரியத்தை அணிந்துகொண்டு ஜீவிப்பதற்கு ஆசிக்கிற எல்லோருக்கும், வாக்களித்தார்கள். கார்மேல் உத்தரியத்தை அர்ச்.சைமனுக்கு அளித்தபோது, மகா பரிசுத்த தேவமாதா, அவரிடம், பின்வருமாறு கூறினார்கள்: “ என் பிரிய மகனே! உன் துறவற சபையினுடைய இந்த உத்தரியத்தைப் பெற்றுக்கொள்!  இந்த உத்தரியம், என் ஆதரவின் விசேஷ அடையாளம்! இதை உனக்காகவும், கார்மேல் மலையின் மக்களான உன் துறவற சபையின் பிள்ளைகளுக்காக நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்! இந்த உத்தரியத்தை அணிந்தபடி  இறக்கிற எவனும், நித்திய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவான்! இந்த உத்தரியம், நித்திய இரட்சணியத்தினுடைய அடையாளச் சின்னமாகவும், ஆபத்து சமயத்தில் பாதுகாப்புக் கவசமாகவும், விசேஷ சமாதானத்தினுடையவும், பாதுகாப்பினுடையவும் உறுதிப் பிணையாகவும்  இருக்கிறது!”

உத்தரியம் என்கிற வார்த்தைக்கான “ஸ்காபுலா”  என்கிற இலத்தீன் மூலச் சொல்லின் அர்த்தம்- தோள்பட்டையாகும். அதாவது இருதோள்களிலும்  மாட்டி முன்னும் பின்னுமாக  அணிந்துகொள்ளக்கூடிய முழு நீள உத்தரிய உடுப்பாக இந்த கார்மேல் உத்தரியம், அர்ச்.சைமனுக்கு, மகா பரிசுத்த தேவமாதாவால் அருளப்பட்டது! இவ்விதமாகவே, துறவற குருக்களும்,கன்னியாஸ்திரிகளும், தோளில் துவக்கி , கீழே தரை வரை நீண்டிருக்கும்  முழு நீள உடுப்பாகவே, உத்தரியத்தை அணிந்திருந்தனர்! பொது விசுவாசிகள், இரு சிறு உத்தரியத் துண்டுகள் முன்பக்கமும் பின்பக்கமுமாக இணைக்கப்பட்ட ஒரு உத்தரிய நாடாவை அவர்களுடைய கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்கின்றனர்; ஒரு சுரூபக் கயிற்றை அணிவதுபோல் அணிந்து கொள்கின்றனர்! உத்தரிய சபையில் முறையாக ஒரு கத்தோலிக்க குருவால் சேர்க்கப்பட்ட பிறகே, உத்தரியத்தை எல்லோரும் அணிந்துகொள்ளலாம். கவனத்துடனும், பக்தியுடனும், ஒவ்வொருவரும் கார்மேல் உத்தரியத்தை அணிந்துகொள்கிறபோது மட்டுமே, மகா பரிசுத்த தேவமாதா அளித்திருக்கும் வாக்குறுதியின் ஞான பலன்களை அடைந்துகொள்ளலாம்.

அர்ச்.சைமன் ஸ்டாக் 1265ம் வருடம், தனது 100வது வயதில் பாக்கியமாய் மரித்தார். போர்தோ என்ற இடத்திலுள்ள கதீட்ரல் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்! அச்சமயம், அவர் அந்த மடத்தை பார்வையிடச் சென்றிருந்தார்;  அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த அருளிக்கங்களான எலும்புகள், இன்று வரை இதே கதீட்ரலில் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன! இப்பரிசுத்த அருளிக்கங்களில் ஒரு பகுதி, 186ம் வருடம், இங்கிலாந்திலுள்ள கெனிங்ஸ்டன் கார்மேல் தேவாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு,பூஜிதமாக வணங்கப்படுகின்றன! அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்த மண்டை ஓட்டின் ஒரு பகுதி, இங்கிலாந்திலுள்ள ஆய்ல்ஸ்ஃபோர்டுவில் 1950ம் வருடம், சிறு பீடத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டது; 1564ம் வருடம் முதல் கார்மேல் துறவியர் அர்ச்.சைமன் ஸ்டாக்கின் திருநாளை மே 16ம் தேதி அனுசரித்து வருகின்றனர்!🌹✝

🌹அர்ச்.சைமன் ஸ்டாக்கே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



🔵

Source:

🇻🇦May 1️⃣6️⃣

🌹Feast of St.Simon Stock-Confessor, Reformer and  Superior General of  Carmelite order🌹

🌹Simon was born in Aylesford, England, to one of the most well-known and respected Christian families in the County of Kent.   While still an infant, he was chosen by the Blessed Mother for her own, with his parents and others hearing him recite the Angelic Salutation of the Archangel Gabriel, long before he had learned to speak.   Prodigious as a child, he learned and memorised the Little Office of the Blessed Virgin before he was able to read, reciting it on a daily basis.   He was observed to read the Holy Scripture, kneeling in his room, by the age of six.

At the age of twelve, Simon left home, living as a hermit in the hollowed trunk of a large oak tree, earning him the name Simon “Stock.”   There he triumphed over the demon, as he would later tell his religious, only by the assistance of the Most Holy Virgin.   While living as a hermit, he drank only water and ate only herbs, roots and wild apples. Eventually, after eight years of solitude, Simon felt called back to communion with others and joined the Carmelite Order.   He finished his studies at Oxford and later (in 1215) was appointed Vicar General of the Order

Saint Simon worked tirelessly to spread the Carmelite Order throughout Europe, founding many communities in university towns such as Cambridge, Oxford, Paris and Bologna.   He was responsible for the revision of the Rules of the Order, leading the community from lives as hermits to those of mendicant friars.   Known for his deep devotion to Our Blessed mother, as well as for the spiritual gifts of miracles and prophecy, Simon was elected as the sixth Superior General of the Carmelites at age 82.   He continued to govern the order for twenty years, demonstrating holiness, vision and prudence.

During his tenure as Superior General, Simon was graced with a visitation from the Blessed Mother, to whom he was so devoted.   Radiantly surrounded by a multitude of Angels, Our Lady of Mount Carmel appeared to him as he knelt in prayer at Aylesford, England.   Presenting to him the Carmelite Brown Scapular, she made Her Promise of unparalleled generosity to him, his spiritual children and to all those who wished to consecrate themselves to her by this special sign: Her words were:

“Receive, my beloved son, this scapular of your Order.   It is the special sign of my favour, which I have obtained for you and for your children of Mount Carmel.   He who dies clothed with this habit shall be preserved from eternal fire.   It is the badge of salvation, a shield in time of danger and a pledge of special peace and protection.”

The scapular (from the Latin, scapular, meaning “shoulder blade”) consists of two pieces of cloth, one worn on the chest and the other on the back, which were connected by straps or strings passing over the shoulders.   In certain Orders, monks and nuns wear scapulars that reach from the shoulders almost to the ground as outer garments.   Lay persons usually wear scapulars underneath their clothing, consisting of two pieces of material only a few inches square.   Although the scapular may be worn by any Catholic, even an infant, proper investiture must be done by a priest.   Subsequently, the scapular must be worn in the proper manner, the individual forfeiting its holy benefits if neglectful or careless.

Saint Simon Stock died on 16 May 1265, at the age of 100 and was buried in the cathedral of Bordeaux, where he was visiting at the time of his death.   The Saint’s bones are still preserved in a cathedral in Bordeaux;  a tibia was brought to England in the 1860s for the Carmelite church in Kensington, a part of the skull was enshrined at Aylesford in 1950.   St Simon  has been venerated by the Carmelites since at least 1564 and  celebrate his feast on 16th of  May .


🔵


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

புதன், 15 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 33 - அர்ச். டில சால் பாப்டிஸ்ட் அருளப்பர் (St. John Baptist de LaSalle)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣5️⃣ம் தேதி

🌹ஸ்துதியரான அர்ச். டில சால் பாப்டிஸ்ட் அருளப்பர் திருநாள்🌹


🌹இவர், பிரான்சிலுள்ள ரீம்ஸ் நகரில் கீர்த்திபெற்ற ஒரு உயர்ந்த குடும்பத்தில், ஏப்ரல் 30ம் தேதி, 1651ம் வருடம் பிறந்தார்.  சிறு வயதிலிருந்தே, தன்னிகரற்ற மிகச்சிறந்த அர்ச்சிஷ்டவரும், உன்னத பரிசுத்தத்தனத்தினுடைய புண்ணியங் களால் அலங்கரிக்கப்பட்டவரும், சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியருமாக ஆவார், என்பதை இவருடைய புண்ணியமிகுந்த நன்னடத்தை வெளிப்படுத்தியது! ரீம்ஸ் பல்கலைக்கழகத்தில், இலக்கியத்தையும், தத்துவ இயல் சார்ந்த அறிவியல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்;  இச்சமயத்தில், இவர் கொண்டிருந்த சிறந்த அறிவின் திறன்களும், காண்பவரை மகிழ்விக்கும் இனிய நடத்தையும், சகலரையும், தன்பால் கவர்ந்திழுத்தார்; இருப்பினும், அருளப்பர், தன் சக தோழர்களிடமிருந்து, எப்போதும் தன்னைப் பிரித்துக்கொண்டு, தனிமையான உள்ளரங்க ஜீவியத்திற்குச் செல்லவே பெரிதும் ஆசித்தார்; சர்வேசுரனுடன் தனிமையில் அதிக நேரம் செலவிடுவதையே பெரிதும், ஆசித்துத் தேடினார். குருப்பட்டம் பெற விருக்கும் குருக்களுடைய பட்டியலில், இவருடைய பெயர் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்தாலும், ரீம்ஸ் நகர கதீட்ரல் தேவாலய நிர்வாக அதிகாரிகளான (canons) குருக்களுடைய பட்டியலிலும் இவருடைய 16வது வயதிலேயே, சேர்க்கப்பட்டார். பாரீஸ் நகருக்குச் சென்று, சோர்போன் பல்கலைக்கழகத்தில், வேத இயல் கற்றார்; அர்ச்.சுல்பீஸ் குருமடத்தில் குருமாணவராகச் சேர்ந்தார்.ஆனால், இவருடைய பெற்றோர்கள் மரித்ததால், விரைவிலேயே, இவர், வீட்டிற்குத் திரும்ப நேரிட்டது! அச்சமயம், இவர் தன் இளைய சகோதரர்களுடைய கல்வியை அளிப்பதற்கான அலுவலில் ஈடுபட்டார்; அதே சமயம், இவர்  வேத இயல் கல்வியையும், தடையில்லாமல், கற்று தேர்ச்சிபெற்றார்; ஒரே சமயத்தில் இவ்விரு அலுவல்களையும் திறம்பட மாபெரும் வெற்றியுடன் நிறைவேற்றினார்; இறுதியாக, இவர் குருப்பட்டம் பெற்றார்;  உறுதியானதும் உன்னதமானதுமான கத்தோலிக்க விசுவாசத் துடனும், தன் ஜீவிய காலம் முழுவதும் கொண்டிருந்த ஆத்துமத்தினுடைய அத்தியந்த பக்தி பற்றுதலுடனும், முதல் திவ்ய பலிபூசையை நிறைவேற்றினார்; இதே பக்தி பற்றுதலுடனும் தீவிரமாக அர்ச்.டில சால் பாப்டிஸ்ட் அருளப்பர், தன் ஜீவிய காலம் எல்லாம், மகா பரிசுத்த பரம இரகசியமான இந்த திவ்யபலிபூசையை சகல ஆத்துமங்களின் இரட்சணியத்திற்காக , பற்றியெரியும் ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் நிறைவேற்றி வந்தார்; தன்னையே ஆன்ம இரட்சணிய அலுவலுக்காக முழுமையாக அர்ப்பணித்தார்;  சிறுமிகளுடைய கல்விக்காக ஸ்தாபிக்கப்பட்ட திவ்ய குழந்தை சேசுநாதரின் கன்னியாஸ்திரிகளின் துறவற சபையினருடைய ஆன்ம இயக்குனராக திறம்பட செயல்பட்டு வந்தார்; இக்கன்னியர் சபையை, மாபெரும்  விமரிசையுடன் நிர்வகித்து வழிநடத்தியதுடன் கூட, அக்கன்னியர் மடங்கள் கலைக்கப்படும் நிலையிலிருந்தும், காப்பாற்றினார். இச்சமயத்தி லிருந்து, ஏழை சிறுவர்களுக்கு, சத்திய வேதத்தின் மட்டிலும், நல்லொழுக்கங்கள் மட்டிலும் அளிக்கப்பட வேண்டிய கல்வியின் மீது, இவருடைய கவனம் திரும்பியது; இந்த நோக்கத்திற்காகவே, அதாவது, ஏழை சிறுவர்களை பராமரிப்பதிலும், ஞான உபதேசக் கல்வியை அளிப்பதிலும், இடைவிடாமல் மிகுந்த திறனுள்ள கவனத்துடன் தங்களையே அர்ப்பணிக்கிற துறவற சகோதரர்களுடைய  ஒரு புதிய துறவற சபையை , திருச்சபையில் ஸ்தாபிக்கிற நோக்கத்திற்காகவே,  சர்வேசுரன் இவரை இந்நிலைமைக்கு உயர்த்தினார். தேவ பராமரிப்பு இவரிடம் ஒப்படைத்த இவ்வுன்னத அலுவலை, அநேக எதிர்ப்புகளுக்கும், மாபெரும் துன்ப வருத்தங்களுக்கும் மத்தியில்,  இவர் திறம்பட வெற்றிகரமாக நிறைவேற்றினார். கிறீஸ்துவ பள்ளிக்கூடங்கள், என்று இவர் ஸ்தாபித்த இந்த துறவற சகோதரர்களுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்தார்.

Download Catholic Books (English)

அர்ச். டிலசால் பாப்டிஸ்ட் அருளப்பரர், தன்னுடன் கூட, இம்மாபெரும் கடினமான அலுவலில் உழைத்த ஆண் உதவியாளர்களான அலுவலர்களை, முதலில் தன் இல்லத்தில் வரவேற்று தங்க வைத்தார். பிறகு, அவர்களை ஒரு அதிக பொருத்தமான தங்குமிடத்தில் தங்க வைத்தார்; சிறுவர்களுக்கான ஞான உபதேச கல்வியை ஏழை சிறுவர்களுக்கு அளிப்பதற்காக இவர் திட்டமிட்டிருந்த அருமையான முறையினாலும், அதற்காக இவர் ஏற்படுத்திய விதிமுறைகளாலும், கவர்த்திழுக்கப்பட்டவர்களாக, இந்த அலுவலர்கள் முழுமையாக தூண்டி ஏவப்பட்டார்கள். அவற்றை அவர்கள் பெரிதும் பாராட்டி கொண்டடினார்கள். இக்கல்விமுறையையும், அதற்கான விதிமுறைகளையும், பின்னர், 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர் அங்கீகரித்து உறுதிப்படுத்தினார். 

தாழ்ச்சியினாலும், ஏழ்மை தரித்திரத்தின் மீது கொண்டிருந்த சிநேகத்தினாலும், இவர் முதலில், தனது கதீட்ரல் தேவாலய நிர்வாக அதிபர் குரு பதவியை இராஜினாமா செய்தார்; அத்துடன், தனது ஆஸ்திகளையும் சொத்துக்களையும், விற்று ஏழைகளுக்கு அளித்தார்.  பின்னர், அநேக தடவை முயற்சித்தும் தோல்வியடைந்தபோதிலும், இறுதியாக,  இவர், தானே ஸ்தாபித்த ஏழை சிறுவர்களுக்கான கிறீஸ்துவ பள்ளிக்கூட நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பை,  தனது முழு மன விருப்பத்துடன், இராஜினாமா செய்தார். ஆனால், அதே சமயம், பல்வேறு இடங்களில், இவர் துவங்கியிருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் அதில் பணிபுரியும் சகோதரர்கள் மட்டிலும் இவர் கொண்டிருந்த ஆர்வமுள்ள அக்கறை ஒருபோதும் குறையவில்லை! இவர், அதிக விடாமுயற்சியுடன், தன்னையே சர்வேசுரனுக்கு முழுமையாகக் கையளித்து அர்ப்பணிக்க துவங்கியிருந்தபோதிலும், தமது நிறுவனங்களில் பணிபுரிவதற்குத் தொடர்ந்து சகோதரர்களை அழைத்தும், சேர்த்தும், பராமரித்தும் வந்தார்.  இடைவிடாமல் ஒருசந்தி உபவாசமிருப்பதிலும், சாட்டை கசை வார்களினால் தன் சரீரத்தை அடித்துக்கொள்வதிலும் , இன்னும் மற்ற அநேக கடின தபசு முயற்சிகளிலும், இரவுகண்விழித்து ஜெபிப்பதிலும் ஈடுபட்டவராக தொடர்ந்து எப்போதும் சுயத்தை வெறுத்து வந்தார்! சுய மறுப்பை அனுசரித்து வந்தார்! எளிதில் எல்லோருடைய கவனத்தையும் உத்தமமான புண்ணிய பாதையில் நடத்திச் செல்வதற்குத் தூண்டும் விதமாக, எல்லா புண்ணியங்களிலும் , விசேஷமாக கீழ்ப்படிதலிலும், தேவ திருச்சித்தத்தை எப்போதும் நிறைவேற்றுவதற்கான ஆர்வத்திலும், பாப்பரசர் மட்டில் கொண்டிருந்த சிநேகத்திலும், பக்தியிலும்  சிறந்து விளங்கினார். பேறுபலன்களால் நிறைந்தவராக, பக்திபற்றுதலுடன் இறுதி தேவ திரவிய அனுமானங்களைப்பெற்று, தனது 68வது வயதில் 1719ம் வருடம், ஏப்ரல் 7ம் தேதியன்று, பாக்கியமாய் ஆண்டவரில் மரித்தார்! 13ம் சிங்கராயர் பாப்பரசர், இவருக்கு முத்திப்பேறு பட்டத்தையும், 1900ம் வருடம் ஜுபிலி வருடத்தில் அர்ச்சிஷ்டப் பட்டத்தையும் அளித்தார்.🌹✝


🌹ஸ்துதியரான அர்ச். டி ல சால் பாப்டிஸ்ட் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்! 🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


May 1️⃣5️⃣


St. John Baptist de LaSalle, Confessor

John Baptist de La Salle, born of an honorable family at Rheims, when still a boy showed by his manners and actions that he was called by destiny to the Lord, and was to be adorned with the excellence of holiness. As a youth he studied literature and the philosophical sciences at the academy at Rheims. During this time, although his mental powers and his lively and pleasant disposition endeared him to all, he nevertheless shrank from the company of his fellows, so that, being inclined to solitude, he might the more easily find time for God. Already having been for some time enlisted in the ranks of the clergy, he was enrolled among the canons of Rheims at the age of sixteen years. He went to Paris to study theology at the university of the Sorbonne, and was admitted to the Sulpician seminary. But he was soon forced to return home because of the death of his parents, and undertook the education of his brothers, which he carried on, without meanwhile interrupting his sacred studies, and with the greatest success, as was proved by subsequent events.


He was finally ordained priest, and said his first Mass with the intense faith and ardor of the soul which, throughout his whole life, he brought to those holy Mysteries. Meanwhile, burning with zeal for the salvation of souls, he devoted himself wholly to their service. He undertook the direction of the Sisters of the Infant Jesus, founded for the education of girls; and not only managed them most prudently, but saved their institute from dissolution. From this time onwards he turned his attention to the education of poor boys in religion and good morals. And God had raised him up for this very end, namely, that he should found in his Church a new family of religious men, and should look after boys' schools, especially of poor boys, with unceasing and efficient care. And, indeed, this duty, entrusted to him by Divine providence, was successfully accomplished, in spite of very much opposition and great hardships, by the foundation of an institute of brothers which he named the Christian Schools.

His male associates in this great and arduous work he at first received into his own house; and then, establishing them in a more suitable dwelling, thoroughly inspired them with his method and with those wise laws and regulations which were afterwards confirmed by Benedict XIII. Because of humility and love of poverty, he first resigned his canonry and distributed all his property among the poor; and later also, after many unsuccessful attempts to do so, he of his own will resigned the government of the institute which he had founded. But meanwhile his solicitude for the brothers and for the schools which he had opened in different places, did not lessen, though he began to give himself more diligently to God. Showing his hatred for self in constant fastings, in the use of the discipline and in other austerities, he spent his nights in prayer. At length, conspicuous for every kind of virtue, especially, obedience, and zeal for fulfilling the divine will, and love and devotion to the Apostolic See, full of merit, and having devoutly received the sacraments, he fell asleep in the Lord in the sixty-eighth year of his age. The supreme Pontiff Leo XIII placed him in the list of the Blessed; and, illustrious by new miracles, he was adorned with honors of the Saints in the year of jubilee, 1900.




To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 32 - அர்ச். ஸோஃபியா, மற்றும் குமாரத்திகள் (St. Sophia and her Three daughters)

⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣5️⃣ம் தேதி

🌹உரோமாபுரியைச் சேர்ந்த வேதசாட்சிகளான அர்ச். ஸோஃபியா, மற்றும் குமாரத்திகள் திருநாள்.🌹

🌹ஸோஃபியா இத்தாலியில் பிறந்தார்கள்.  இவர்களுக்கு விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்று முன்று குமாரத்திகள் இருந்தனர். அர்ச்.சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில் 13ம் அதிகாரத்தில் வருகிற 13ம் வசனமாக வருகிற  விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்கிற புண்ணியங்களே இக்குமாரத்திகளுக்குப் பெயர்களாக வைக்கப்பட்டன!

ஸோஃபியா, மூன்று குமாரத்திகளுடன், வேத கலாபனை சமயத்தில், கத்தோலிக்க வேதத்தை அனுசரிப்பதற்காக, உரோமையில் கைது செய்யப் பட்டனர். உரோமை வீரர்கள், ஸோஃபியாவை அச்சுறுத்தி, கத்தோலிக்க வேத விசுவாசத்தை மறுதலிக்கச் செய்ய நிர்ப்பந் திக்கும்படியாக, அவர்களின்  குமாரத்திகளை, ஒவ்வொருவராகக் கொண்டு வந்து, சாகடிக்கும்படியான மிகக் கொடூரமாக சித்திரவதைச் செய்தனர். ஆனால், ஸோஃபியா, வேத விசுவாசத்தில், இன்னும் அதிக உறுதியாயிருந்து, தன் குமாரத்திகளை  வேதசாட்சிய மரணத்தைப் பெற்றுக் கொள்ள உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார்கள். குமாரத்திகள் மூவரும் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்!

அர்ச்.ஸோஃபியா, ஹேட்ரியன் உரோமையை ஆண்ட காலத்தில்,137ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்கள். அர்ச்.கொர்தானியுஸ் மற்றும் அர்ச்.எபிமாகுஸ் கல்லறையில் அர்ச்.ஸோஃபியா, அடக்கம் செய்யப் பட்டார்கள்.

அர்ச்.ஸோஃபியாவின் பரிசுத்த அருளிக்கங்கள் சிலவற்றை ரெமிஜியுஸ், 778ம் வருடம், எஸ்காவு என்ற இடத்திலுள்ள மடத்திற்குக் கொண்டு வந்தார். 2ம் செர்ஜியுஸ் பாப்பரசர், 845ம் வருடம் அர்ச்.ஸோஃபியாவின் பரிசுத்த அருளிக்கங்களை, மோந்தி என்ற இடத்திலுள்ள அர்ச்.மார்டின் தேவாலயத்தின்  பெரிய பீடத்திற்கு இடமாற்றம் செய்தார். 

பனிக்காலத்தில் ஏற்படுகிற பயங்கரமான குளிரிலிருந்து காப்பாற்ற அர்ச். ஸோஃபியாவிடம் வேண்டிக் கொள்வார்கள். ஜெர்மனியில் குளிர்பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு, உதவியாக அர்ச். ஸோஃபியாவிடம் வேண்டிக் கொள்வார்கள். “குளிர்ந்த ஸோஃபியா” என்று அழைப்பார்கள். பனிக்கட்டியின் அர்ச்சிஷ்டவர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.

பல்கேரிய தலைநகர் ஸோஃபியா என்று அர்ச்.ஸோஃபியா  தேவாலயத்தின் பெயராலேயே,, பெயரிடப்பட்டிருக்கிறது; 343ம் வருடம், சார்டிகா சங்கம்  இந்நகரில் ஒரு தேவாலயத்தில் கூடியது.  பின்னர், இதே இடத்தில், 6வது நூற்றாண்டில்,  அர்ச்.ஸோஃபியா தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தலைநகரம், ஸ்ரெடெட்ஸ் என்று பல்கேரிய மொழியில் முதலில் பெயரிடப்பட்டிருந்தது; பின்னர், பிரபலமான அர்ச்.ஸோஃபியா தேவாலயத்தின் பெயர், 1376ம் வருடம் இந்நகருக்கு வைக்கப்பட்டது.🌹✝

🌹வேதசாட்சிகளான அர்ச்.ஸோஃபியா, விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகமே! எங்ளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


 ✨

May 1️⃣5️⃣


Martyrdom 🌟🌹

ST. SOPHIA OF ROME

Sophia was a young woman born in Italy. Sophia had three daughters: Faith, Hope and Charity, who were named after virtues mentioned by Saint Paul in 1 Corinthians 13 :13

Sophia and her three daughters were arrested during the persecution for practicing the Catholic Faith.

The Roman guards took Sophia's daughters one by one, from the oldest to the youngest and tortured them to death in an attempt to force their mother, Sophia, to renounce her faith in Christ. But instead Sophia became more firm in the Faith, and encouraged her daughters to suffer martyrdom.

Sophia was then put to death for the Catholic faith during the reign of pagan emperor Hadrian in 137 AD. She was buried in the cemetery of Gordianus and Epimachus.

Some of her relics were brought by Remigius of Strasbourg to the convent at Eschau in 778. Pope Sergius II transferred her relics around the year 845 to the high altar of the Church of San Martino ai Monti.

    🍁🍁🍁🍁🍁🍁🍁

St. Sophia is invoked against frosts that occurres late in the year; thus she is called kalte Sophie 'cold Sophia' in Germany by those who invoked her aid in planting arable crops. She is thus considered to be one of the "Ice Saints".

The Bulgarian capital city of Sofia is named after the Church of Saint Sophia. In 343 AD, the Council of Sardica was held in the city, in a church located where the current 6th century Church of Saint Sophia was later built. The city, known earlier as Sredets (Средец) in Bulgarian, was renamed Sofia in 1376 after the famous church.





🔵


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

திங்கள், 13 மே, 2024

Tamil Catholic Song Lyrics - மாசில்லாக் கன்னியே

மாசில்லாக் கன்னியே

1. மாசில்லாக் கன்னியே மாதாவே
உம்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே

2. மூதாதையர் செய்தீ முற்பவமுற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்      -    வாழ்க வாழ்க

3. உம்மகன் தாமே உயிர்விடும் வேளை
என்னை உம்மைந்தனாய் ஈந்தனரன்றோ   -    வாழ்க வாழ்க

4. தாயே நீஆனதால் தாபரித்தென்மேல்
நேசம்வைத்தாள்வது நின்கடனாமே               -    வாழ்க வாழ்க

5. பிள்ளைகள் செய்பிழை பெற்றவள் தாங்கிக்
கொள்ளுவாளன்றி பின் கோபம் வையாளே    -  வாழ்க வாழ்க



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


Tamil Catholic Songs lyrics - தேவ ஸ்துதிகள் (During Benediction)

 தேவ ஸ்துதிகள்




சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!

அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனுமான சேசு கிறீஸ்துநாதர் ஸ்துதிக்கப்படுவாராக!

சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய விலைமதியாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக!

பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக!

தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்து ஸ்துதிக்கப்படுவாராக!

சர்வேசுரனுடைய தாயாராகிய அதிபரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக!

அவருடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக!

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம்

ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக!

தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் அர்ச்சியசிஷ்டவர்க ளிடத்திலும் சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 31 - அர்ச். இராபர்ட் பெல்லார்மின் (St. Robert Bellarmine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣3️⃣ம் தேதி

🌹வேதபாரகரும் கர்தினாலுமான அர்ச். இராபர்ட் பெல்லார்மின் திருநாள்🌹


Feast day          13 May (General Roman Calendar, 1932–1969)

Venerated in   Catholic Church

Title as Saint   Confessor and Doctor of the Church

Beatified           13 May 1923 Rome, Kingdom of Italy by Pius XI

Canonized       29 June 1930 Rome, Vatican City by Pius XI



🌹இவர் இத்தாலியின் டஸ்கனி யிலுள்ள மோந்தெபுல்சியானோவில் , 1542ம் வருடம் பிறந்தார்; இவருடைய தாயார், சினிசியா செர்வினி என்பவர், 2ம் மர்செல்லுஸ் பாப்பரசரின் சகோதரியாவார்.

இவர் சிறுவனாயிருந்தபோது, இத்தாலி யிலும், இலத்தீனிலும் அநேகக் கவிதை கள் எழுதினார்; இவர் எழுதிய பாடல் களில் ஒன்று, அர்ச். மரிய மதலேனம் மாள் பற்றிய பாடல், இது உரோமன் கட்டளை ஜெபப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இவர் சேசுசபை மடத்தில் 18வது வயதில் சேர்ந்தார்; 28வது வயதில், 1570ம் வருடம், குருப்பட்டம் பெற்றார்; புராட்டஸ்டன்டு பதிதர்களின் தாக்குதல் களுக்கு ஏற்ப திருச்சபையின் வேத சத்தியங்களின் விளக்க நூல்களை முறைப்படி தயாரித்து பரப்பினார்;  மிக நெருக்கமாகச் சென்று, புராட்டஸ்டன்டு பதிதங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வை நடத்தினார்; 1592ம் வருடம்,இவர், உரோமன் கல்லூரியின் அதிபரானார்; 1598ம் வருடம், மேற்றிராணிமார்களின் பரிசோதகரானார்; 1599ம் வருடம் கர்தினாலானார். உடனே, 8ம் கிளமென்ட் பாப்பரசர், இவரை தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார்; ஜியோடானோ புரூனோ என்ற பதிதனை, அவன் கடைசி வரை பதிதத்தப்பறையிலேயே மூர்க்கனாய் நிலைத் திருந்ததால்,  நெருப்பில் எரிக்கும்படியான தீர்ப்பிற்கு இவர் ஒப்புதல் அளித்தார்; 

1616ம் வருடம், 5ம் சின்னப்பரின் கட்டளைகளின்பேரில், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், கலிலேயோவை, கோபர்நிகன் தப்பறையைக் கைவிடும்படி கூறினார்; கலிலேயோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். 

இராபர்ட் பெல்லார்மின் தனது முதிர்ந்த வயதில், மோந்தேபுல்சியானோ வில் மேற்றிராணியாராக நான்குவருட காலம் அலுவல்புரிந்தார்; அதன்பின், உரோமையிலுள்ள அர்ச்.பெலவேந்திரர் சேசு சபைக் கல்லூரியில் இளைப்பாறி ஓய்வெடுக்கும்படி  தங்கியிருந்தார்; இங்கு, 1621ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதியன்று, 78வது வயதில், அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் பாக்கியமாய் மரித்தார்.🌹✝


🌹அர்ச்.இராபர்ட் பெல்லார்மினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 9 மே, 2024

Reverencing Motherhood - SSPX Sermons

My Catholic Faith - Existence of God (Chapter 6.) கடவுளின் இருத்தல்

கடவுளின் இருத்தல்

(என் கத்தோலிக்க விசுவாசம் (My Catholic Faith) என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)



இயற்கையிலிருந்து கடவுளின் இருத்தலை எப்படி அறிந்துகொள்கிறோம்?

1. உலகத்தின் இருத்தல்,

2. பிரபஞ்சம் முழுவதிலும் நிலவும் ஒழுங்கு மற்றும் இணக்க நிலை மற்றும்

3. நம் மனச்சான்றின் சாட்சியம் ஆகியவற்றின் வழியாக, கடவுள் இருக்கிறார் என்று இயற்கையின் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம்.

உலகத்தின் இருத்தல் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் அது தானாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது.

1. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், ஆகிய அனைவரும், அனைத்தும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மனிதர்களும், மற்றவையும் தாங்களாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது. அவை தொடக்கமில்லாதவராகிய ஒருவரால் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு கைக்கடிகாரம் எப்படித் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியாதோ, அவ்வாறே மனிதர்களும், கிரகங்களும் தங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொண்டிருக்க முடியாது.

விண்வெளி வீரரான கர்ச்சர் என்பவருக்கு, கடவுளின் இருத்தலை மறுத்த ஒரு நண்பன் இருந்தான். ஒரு நாள் அவர்கள் சந்தித்தபோது, இந்த நண்பன் அந்த விண்வெளி வீரரின் இல்லத் தில் ஓர் உலக உருண்டையைக் கண்டான். “இது நன்றாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் யார்?” என்று அவன் கேட்க, கர்ச்சர், “ஏன் கேட்கிறாய்? அது தானாகவே உருவானது!" என்று பதிலளித்தார். இதைக் கேட்டு அந்த நண்பன் மனம் விட்டுச் சிரித்தான். உடனே கர்ச்சர், "மிகப் பெரிய கிரகமாகிய பூமி தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதைவிட, இந்தச் சிறு பூமியுருண்டை தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வது அதிக எளிதாகத்தானே இருந்திருக்கும்?" என்றார். நண்பன் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான்.

2. மணலில் காலடித் தடங்களை நாம் காணும்போது, யாரோ அந்த வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். பிரபஞ்சமோ தன்னைப் படைத்த உன்னதரின் காலடித் தடங்களால் நிறைந்திருக்கிறது. அவரது பதிவை நாம் மனிதனின் மனதில், அளவற்றவரின் மீதான அதன் ஆழ்ந்த நாட்டத்தில், கண்டுணர்கிறோம். கடவுள் என்பவர் இல்லை என்றால், மனிதனின் ஆழ்ந்த முயற்சிக்கு எந்தப் பலனுமிருக்காது, அது அபத்தமானதாக இருக்கும்.

பிரபஞ்ச ஒழுங்கும், இசைவும் கடவுள் இருப்பதை நிரூபிக்கின்றன, ஏனெனில் ஓர் உன்னதமான படைப்பாளரும், ஈடிணையற்ற திறமையோடு அதைப் பாதுகாப்பவருமான ஒருவர் இருக்கிறார் என்ற முடிவுக்கு அவை நம்மை இட்டுச் செல்கின்றன.

1.      யுக யுகமாக, வான்கோள்கள் தங்களுக்குக் குறிக்கப்பட்ட வழித்தடங்களில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் ஒளியும், அழகும், உத்தமமான அமைவும், ஒழுங்கும் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் மாறாத சட்டம் ஒன்றால் ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓர் ஆரஞ்சு விதையை நீ விதைத்தால், அதிலிருந்து ஓர் ஆப்பிள் மரம் வளராது என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். தினமும் காலையிலும், கிழக்கிலும் சூரியன் உதிக்கும் என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். இரவில், உன் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பொழுது விடியும் என்ற உறுதியோடு, சமாதானத்துடன் உறங்கச் செல்ல உன்னால் முடிகிறது.

2. இந்தப் பிரபஞ்ச ஒழுங்கு தற்செயலாக நிகழ்ந்தது என்றோ, அல்லது கோள்கள் தாங்க ளாகவே தங்கள் பாதையை வகுத்துக்கொண்டு இயங்குகின்றன என்றோ சொல்வது, ஒரு கார் தானாகவே ஊரைச் சுற்றி வருகிறது என்று சொல்வது போல, அடிமுட்டாள்தனமாக இருக்கும்!

வானமண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டுகிறது" (சங். 18:1). சர்வேசுரன் (பிரபஞ்சத்தின்) புத்தியுள்ள காரணராக இருக்கிறார்.

3. முற்கால (அஞ்)ஞானியான சிசேரோ: "ஆகாய மண்டலங்களை நாம் ஆராயும்போது, அவை அனைத்தும் அளவற்ற திறமையுள்ள ஒரு ஜீவியரால் வழிநடத்தப்படுகின்றன என்று நாம் அறிய வருகிறோம்" என்றார். மாபெரும் வான சாஸ்திரியான நியூட்டன் கடவுளின் திருப்பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் தொப்பியை அகற்றி, தாழ்ந்து வணங்கினார்.

நம்முடைய மனச்சான்றின் சாட்சியம் எப்படிக் கடவுளின் இருத்தலை நிரூபிக்கிறது?

நம்முடைய மனச்சான்றின் மூலம் நாம் தவறானதினின்று சரியானதைப் பிரித்தறிய முடிகிறது.

1. நம் மனச்சான்று சரியானதை அங்கீகரித்து, தவறானதைக் கண்டனம் செய்கிறது. இவ்வாறு, நாம் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ள உன்னதரான சட்டமியற்றுபவர் ஒருவர் இருக் கிறார் என்றும், அவர் நாம் செய்யும் நன்மைக்குச் சம்பாவனை அளிப்பார் என்றும், தீயவர்களை அவர் தண்டிப்பார் என்றும் நமக்குள் நாம் ஏற்று அங்கீகரிக்கிறோம்.

2. அக, புற சாட்சியத்தையும் மீறி கடவுளின் இருத்தலைப் பிடிவாதமாக மறுப்போர் நாத்திகர் எனப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆங்காரத்தால் குருடாக்கப் படுகிறார்கள். "அவர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும், உணராமலுமிருக் கிறார்கள்... நீங்கள் காதாரக் கேட்டும், உணராதிருப்பீர்கள், கண்ணாரக் கண்டும், காணாதிருப்பீர்கள். ஏனெனில் இந்த ஜனம் ஒருவேளை கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், இருதயத்தால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயமுங் கனத்துப்போய், கேட்கிறதில் காது மந்தமுள்ளவர்களாகி, தங்கள் கண்களையும் மூடிக் கொண்டார்கள்" (மத். 13:13-15) என்னும் நம் ஆண்டவரின் வார்த்தைகள் இவர்களுக்குப் பொருந்துகின்றன.