Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஏப்ரல், 2021

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோற்கு i Tamil Catholic Song Lyrics



பல்லவி


 தாயே  உத்தரிக்கும் ஸ்தலத்தோர்க்கு 

தஞ்சமும் ஆதரவும் நீரே


சரணங்கள் 

1. தீயில் மெலிந்து வெந்து சோர்ந்து உந்தன்

திருத்தயை கேட்க நீரோ அறிந்து 

தூயவான் கதியினிற் சேர்ந்து உம்மை 

ஸ்துதித்திட அருள் செய்வீர் புரிந்து 


உலகம் பசாசைத் தினம் வென்றார் தங்கள் 

உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார் 

கலகமெல்லாம் கடந்த பின்னும் சொற்பக் 

கறையினால் துறை சேரார் இன்னும் தாயே 


தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ உந்தன் 

தயை விட்டால் துயர் விட்டுப் போமோ ! 

தூய கருணை நிறை ஆயே இவர்

துயரெல்லாம் நீக்க வரும் தாயே


உம் மகன் தன்னைக் காணாதாலும் தீயில்

உழன்று வருந்து வதினாலும் 

நன்மை நிறை கன்னியாந் தாயே மோட்ச

நாடுதந் தாதரிப்பீர் ஆயே


 5. பாவிகட் கடைக்கலம் நீரே-மிக

பரிதவிப் போர்க் குதவி நீரே 

சேவிப் போர்க்கு துணையும் நீரே-தம் 

சென்றோர்க்கு இராக்கினியும் நீரே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக