Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 31 ஜனவரி, 2024

லூர்து மாமலை - Tamil Catholic Song Lyrics

 லூர்து மாமலை

1. லூர்து மாமலையோரம் மசபியேல்
கெபியில் தோன்றிய தாய்
பாரில் வதியும் மைந்தர் பார்த்திட
வானலோகம் நீத்த தாய்

ஆவே ஆவே கீதம் தானுமே தேவாதி
தேவன் அன்னையர்க்கே
நாவால் போற்றுவோம் பாவால்
வாழ்த்துவோம் ஜீவ தாரகை மாதல்லோ

2. ஜென்ம தோஷம் ஏதுமில்லா
ஜெனித்த கன்னி மாமரியே
செல்வி சிறுமி பெர்னதெத்தை
ஜெபிக்க சொன்ன ஜெபமாலை - ஆவே ஆவே

3. பூவோர் தேடிடும் அன்பு ஆதிக்கம்மாறா
தென்றும் ஓங்கிடவே
சீராய் ஜெபமும் தீரா தபமும்
கோருவீர் என்றோதினார்  -  ஆவே ஆவே



அழகின் முழுமையே தாயே - Tamil Catholic songs Lyrics

 அழகின் முழுமையே தாயே

பல்லவி

அழகின் முழுமையே தாயே
அலகையின் தலை மிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே
அமலனை எமக்களித்தாயே

சரணங்கள்

1. இருளே சூழ்ந்திடும்போதே
உதய தாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே
அருள்வழி காட்டிடுவாயே

2. அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம்
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்





வாழ்வை அளிக்கும் - Tamil Catholic Songs lyrics

 வாழ்வை அளிக்கும்


வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

சரணங்கள்

1. ஏனோ இந்தப் பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவிமேல்

2. உலகம் யாவும் வெறுமையே
உனை யான் பெறும்போது
உறவு என்று இல்லையே - உன்
உறவு வந்ததால்

3. எந்த மன்னர் உன்னைப்போல்
பொங்கும் அன்பினால்
வந்து எமது நடுவிலே
தங்கி மகிழுவார்

4. அன்பு ஒன்றைக் கேட்கின்றாய்
அதையே தருகின்றேன்
இதயத் தன்பு யாவுமே
இனிதே தருகின்றேன்

வானோர் போஜனமே - Tamil Catholic song lyrics

 

தேவநற்கருணை ஆத்துமத்தின் போஜனம்

1. வானோர் போஜனமே மாமரியாயின்
மகனாய் உதித்தோனே - உம்மை
வாழ்த்தி நாம் ஸ்துதித்து போற்றிடுவோமே
வானுலகாள்வோனே.

2. பூங்காவில் வைத்த தீங்கனி போலே
பொழிலுயிர் தருவோனே - நாங்கள்
தீங்கு சூழ்ந்திடும் பேய் ஆங்காரம் நின்று
நீங்கிட அருள்வாயே.

3. ஜீவியம் அளித்து பாவிகள் மோட்சம்
சேர்ந்திடச் செய் அமுதே - எம்மைத்
தேற்றியே நித்தம் காத்து ரட்சிப்பாய்
திவ்விய போஜனமே

4. மக்களைத் தேற்ற மிக்குறும் அன்பால்
வானில் நின்றே வருவாய் எம்மை
வானில் சேர்த்திடவே பானமாயுமது
மேனி ரத்தம் அளிப்பாய்.

5. தந்தை தன் மக்கள் நொந்திடா அருகில்
வந்திருப்பது போலே -நீயும் இந்தப்
பூவுலகில் சொந்தம் பாராட்டி
சந்நதமே இருப்பாய்.

6. கன்னியின் வயிற்றில் உன்னரும் வகையாய்
கனியென உதித்தோனே - எம்மைக் காத்து
ஆண்டிடுவாய் பார்த்துத் தேற்றிடுவாய்
கன்னியர் போஜனமே.





தேவ திரு அமுது - Tamil Catholic Songs Lyrics

 தேவ திரு அமுது


1. விண்ணோர் வீடும் போதாதே என்னே உமது தயை
     மண்ணோர் உயர்ந்திடவே மறைந்தாய் அப்பாதில் 

தேவ திரு அமுதே ஜீவன் தரு கனியே
பாவ வினையகற்றும் பரம போஜனமே!

2. அன்னை தந்தை எவர்தானும் உம்மை போலுண்டோ
     தன்னைப் பலியாக்கும் பெலிக்கான் ஆனீரே

3. என்பால் கொண்ட அன்பதுவே அரசே நீருமது
     என்பும் தசை யாவும் ஈந்தீர் ஆண்டவரே

4. நீவிர் என்னுள் எழுந்தருள ஏழை தகுதியல்லேன்
    சொல்வீர் ஓர் வார்த்தை நானே சுகம் பெறுவேன்

5. பூவில் வருந்தி சுமை சுமப்போர் அருகில் வாருமென்று
    கூவி அழைத்திடுமோர் ஆண்டவர் குரல் கேண்மின்



அர்ச். மர்த்தீனம்மாள் - St. MARTINA

சனவரி மாதம் 30-ந் தேதி. க. வே.
அர்ச். மர்த்தீனம்மாள் திருநாள்.
St. MARTINA

ரோமாபுரியில் உயர்ந்த வங்கிஷபதிகளிடத்தினின்று அர்ச். மர்த்தீனம்மாள் பிறந்தாள். அந்தம்மாள் சிறு வயதாயிருக்கையிலே தாய்தகப்பன் இறந்து போனதினாலே அவர்களுடைய ஆஸ்திகளுக்கெல்லாம் அவள் உடையவளானாள். அவளுக்குத் திரவிய மிகுதியும் வயது கொஞ்சமுமாயிருந்தாலும் அவள் ஞான நன்மைகளாகிற புண்ணியங்களை அடைய ஆஸ்திகள் எல்லாவற்றையும் விற்றுப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தாள். பிறகு அந்த நாட்டு இராயனாகிய அலேக்சாந்தரென்கிறவன் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலாபத்தை எழுப்பி அர்ச். மர்த்தீனம்மாள் பொய்யான தேவர்களைக் கும்பிட கட்டளையிடுமிடத்தில் அவள் அப்படிக்கொத்த தோஷத்தை நான் ஒருக்காலுஞ் செய்யமாட்டேன் என்றாள். ஆதலால் அந்த இராயனுடைய கட்டளைப்படி யே அப்பொல்லொனென்னும் பொய்த் தேவனை அவள் ஆராதிக்கும்பொருட்டு அவளை அவன் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால் அவள் சிலுவை வரைந்து சேசுநாதரை வேண்டிக்கொண்ட மாத்திரத்தில் பூமி அதிரவே அந்தப் பேய்க் கோவிலில் ஓர் பங்கு இடிந்ததினாலும் அந்தப் பொய்த் தேவனுடைய விக்கிரகந் துண்டு துண்டாய் உடைந்து விழுந்ததினாலும் அவனுடைய பூசாரிகளும் மற்றனேக பிற மதத்தினரும்  கொல்லப்பட்டார்கள். இரண்டு முறை அவளை நிஷ்டூரமாய் அடித்தார்கள்.

 அதன் பிறகு இருப்புச் சீப்பினாலே அவளுடைய தோத்தின் மாமிச மெல்லாம் பீறி வகிர்ந்து அவளுடைய காயங்களுக்குள்ளே கொதித்திருந்த எண்ணெய்யையும் நெய்யையும் ஊற்றினார்கள். அந்தம்மாள் அந்த நிஷ்டூர கொடுமைகளால் மிகவும் வாதைப்பட்டிருந்தாலும் பசாசைக் கும்பிடாத படிக்கு அந்த வேதனைகளைப் பொறுமையோடே அநுபவித்தாள். அதற்குப் பிறகு சிங்கம் புலி முதலான துஷ்ட மிருசங்கள் அடைக்கப்பட்டிருக்கிற வாடியிலே அவளைத் தூக்கிப்போட்டார்கள். ஆனால் அந்த மிருகங்கள் புதுமையாக அவளைத் தொடவில்லை. ஓர் துஷ்ட சிங்கம் அவளுடைய பாதத்திலே படிந்து ஓர் நாய்க்குட்டியைப்போல அவளுடைய காயங்களை நக்கினது. ஆனால் அதை மறுபடி அதின் கெபியிலே கூட்டிக்கொண்டு போகிறபோது இராயனுடைய பந்துக்களில் ஒருவனைக் கொன்று போட்டது.

பின்னும் அவளை நெருப்பிலே தள்ளினாலும் நெருப்பும் புதுமையாக அவளைச் சுடவில்லை. இப்படிக்கொத்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டவர்களில் அநேகர் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய ஞானப்பிரகாசத்தைக் கொண்டு கிறீஸ்துவர்கள் வேதம் மெய்யான
வேதமென்று சொல்லிச் சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தலைகொடுத்து வேதசாட்சிகளானார்கள்.

அர்ச், மர்த்தீனம்மாளின் வேண்டுதல் பலத்தினாலே பூமி நடுங்கிற்று. ஆகாசத்திலேயிருந்து மகா சத்தத்தோடே நெருப்பு சுட்டிகட்டியாய் கட்டிக் விழுந்து பசாசின் கோவில்களும் இடிந்து அதிலிருந்த பேய்ச் சுரூபங்களும்   இடிந்து  வானத்தினின்று பெய்த நெருப்பினால் எரிந்து நொறுங்கிப் போயிற்று. அந்தம்மாள் சரீரத் திலுள்ள காயங்கள் வழியாக மிகுதியான இரத்தத்தோடே பாலுங் கூடப் புறப்பட்டது. அவளுடைய சரீரத்தில் நின்று மிகுந்த பிரகாசமும் நல்ல வாசனையும் வீசப்பட்டது. அவள் பூமியைவிட்டு உயரப் பத்திராசனத்திலிருந்து மோட்சவாசிகளோடே கூடத் தேவதோத்திரம் பண்ணுவதாகக் காணப்பட்டாள். இத்தனை ஆச்சரியமான காரியங்களெல்லாம் அந்த இராயன் கண்டு அல்லது கேட்டிருந்தாலும் அவளை விட்டுவிடாமல் தலையை வெட்டச்சொன்னான்.

தலையை வெட்டினவுடனே ரோமாபுரியெல்லாங் கிடுகிடென நடுங்கினதுமல்லாமல் மர்த்தீனென்கிறவளே மோட்சத்திற்கு வாவென்கிற சத்தமும் ஆகாசத்திலே கேட்கப்பட்டது. இந்த அற்புதங்களெல்லாம் கண்டவர்களுக்குள்ளே அநேகம் பேர் சர்வேசுரனுடைய வேதத்தை விசுவசித்துப் பற்றிக்கொண்டார்கள்.
கிறீஸ்துவர்களே! வழி தப்பி நடக்கிறவன் சூரியன் உதயமான பிறகு நல்ல பாதையைக் கண்டு அதை அநுசரிக்கிறாப்போலே ஞானச் சூரியனாய் விளங்கின இந்தம்மாள் சரித்திரத்தைக் கேட்ட நீங்கள் அந்தம்மாள் நடந்த  புண்ணிய வழியை ஆவலாய்க் கண்டு அநுசரிக்கவேண்டும். அதெப்படியென்றால் அர்ச். மர்த்தீனம்மாள் தம்முடைய ஆஸ்தியைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கிறபோது தன் ஆசையெல்லாம் அழியாத நன்மையின் பேரிலே வைத்தகேயல்லாமல் அழிந்துபோகிற நன்மையின் பேரிலே வைக்கவில்லை யென்று காண்பித்தாள். அவ்வாறே நீங்கள் பூலோக நன்மைகளை அபேட்சியாமல் பிச்சை முதலான புண்ணியங்களின் பேரிலே தாற்பரியம் வைக்கவேண்டும். சிலபேர் திரவியத்தைக் கனமாகவும் பிச்சை முதலான புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறார்களென்று அறிந்திருக்கிறோம். இவர்கள் மோசம் போகிறதை ஒரு உவமையினாலே வெளியாக்குவோம். மொனோமொத் தப்பாவென்கிற இராச்சியத்தார்களுக்குள்ளே சிலர் தங்கள் நாட்டிலுண்டான திரளான பொன்னைச் சட்டைபண்ணாமல் ஒரு சாயச்சேலைத் துண்டு வாங்க வெகு பொன் கொடுப்பார்கள். இதை நீங்கள் கேட் கிறபோது சேலைத் துண்டு கொஞ்ச நாளிலே கிழிந்துபோம். பொன் வெகு காலம் இருக்குமென்று நினைத்து அவர்களைப் பைத்தியக்காரனென்று  சொல்லுவீர்கள், அப்படியே பொன் முதலான உலக நன்மைகளும் அழிந்து போகிறதல்லாதே சாகிறபோது அவைகளில் அற்பமாகிலுங் கொண்டு போகக் கூடாது. பிச்சை முதலான புண்ணியங்களோவெனில் அழிந்து போகாமல் மனிதன் சாகிறபோது கூடவரும். ஆதலால் உலக நன்மைகளைக் கனமாகவும் பிச்சை முதலிய புண்ணியங்களை அற்பமாகவும் எண்ணுகிறவர்கள் பைத்தியர்தானே. அவர்களைப் பிடித்த பைத்தியம் அவர்களுக்கு இப்போது தோன்றாதிருந்தாலுஞ் சாகிற சமயத்திலே பெரிதாய்த் தோன்றும். ஆனால் மரணத்துக்குப் பின்பு மாத்திரந் தெளிவது தீராத கஸ்தி வேதனை கொடுப்ப தொழியப் பிரயோசனமாயிராது. பின்னையும் அர்ச். மர்த்தீனம்மாளிடத்திலே சம்பவித்த புதுமைகளைப் பிறமதத்தினர் கண்டு சேசுநாதருடைய வேதம் மெய்யான வேதமென்று நிச்சயித்துப் பேய் ஆராதனையை விட்டுச் சத்திய வேதத்துக்கு உட்பட்டார்களென்று கேட்டீர்களே; அந்த அம்மாளிடத்திலே சம்பவித்த இத்தனை புதுமைகளைக்கேட்டு நீங்கள் அவள் அநுசரித்த வேதமே மெய்யான வேதமென்று உறுதியாய் நம்பி அதிலே நீங்கள் தேவகிருபையாற் சேர்ந்திருக்கிறதின் பேரிலே மிகுந்த சந்தோஷப்பட்டு அதைப் பத்தியோடே அநுசரிக்க வேண்டும். அந்தம்மாள் பெண்பிள்ளை யாயிருந்தாலும் பொய்யான தேவனாகிய பசாசைக் கும்பிடாதபடிக்கு மிகுந்த பிரியத்தோடே வெகு கொடூரமான வேதனைகளை அநுபவித்தாள்.

இப்படியிருக்க நீங்கள் கொஞ்ச அடிகளுக்கஞ்சி அல்லது கொஞ்ச இலாபத்தை விரும்பிப் பசாசுக்கு ஊழியஞ் செய்யலாமோ? உங்களைத் துண்டு துண்டாய் வெட்டினாலும் அர்ச். மர்த்தீனம்மாளைப் போலே வேதத்தில் தைரியமாயிருக்க வேண்டும். சர்வேசுரன் தம்முடைய வேதத்துக்காக மர்த்தீனம்மாள் உயிரைக் கொடுத்ததைப்பற்றி அவளுக்கு ஞான சந்தோஷ இன்பத்தைக் கொடுத்து அவள் முகாந்தரமாக மிகுந்த நன்மைகளைப் பண்ணி அவளை வெகு மகிமைப்படுத்திப் பரலோகத்தில் அவளுக்கு அளவில்லாத பாக்கியத்தைத் தந்தருளினார். சில சேவகர் தங்கள் இராசாவுக்காகச் சண்டையிலே காயம்பட்டாலுஞ் செத்தாலும் அநேகம் விசை இராசா அவர்களுக்கு வெகுமானம் பண்ணாதிருப்பது மன்றி, இன்னான் இன்னான் தனக்காகக் காயம்பட்டான், செத்தானென்று முதலாய் அறியாதிருப்பான். இத்தகைய குறை ஆண்டவரிடத்தில் வராது. தமக்காக வாதை உபத்திரியப்படு கிறவர்களுக்குந் தமது தோத்திரத்துக்காகப் பிரயாசைப்படுகிறவர்களுக்குஞ் சர்வேசுரன் உதாரமாய் வெகு பலனைக் கொடுப்பாரென்கிறதினாலே அப்படிக்கொத்த நல்ல சுவாமிக்கு நீங்கள் பிரமாணிக்கத்துட னே நல்ல ஊழியஞ் செய்து அவருக்குப் பிரியப்படப் பிரயாசைப்பட வேண்டும்.

St. Martina Life History

The daughter of an ex-consul and orphaned at an early age, she was described as a noble and beautiful virgin. She so openly testified to her Christian faith that she could not escape the persecutions under Severus Alexander. Arrested and commanded to return to idolatry, she refused, whereupon she was subjected to various tortures and was finally beheaded.

These tortures according to her vita include being scourged. She was condemned to be devoured by wild beasts in the amphitheater but was miraculously untouched by them. She was then thrown onto a burning pyre, from which she also escaped unhurt, and was finally beheaded. Her hagiography asserts that some of her executioners also converted to Christianity and were themselves beheaded.




செவ்வாய், 30 ஜனவரி, 2024

உக்கிரமான மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

 

ஆர்வமுள்ள மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

ஜனவரி 29, 2024
ஆதாரம்: fsspx.asia 
உக்கிரமான மனிதர் மற்றும் வெதுவெதுப்பான மனிதர்

கீழே உள்ள பரிசீலனைகள் துறவறத்தில் உள்ளோருக்கு  எழுதப் பட்டுள்ளன, ஆனால் சில தழுவல்களுடன், எந்த கிறிஸ்தவருக்கும் பொருந்தும். அவை உண்மையில், மந்தமான தன்மையின் அறிகுறிகள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள், ஏனென்றால், பெரும்பாலும், நம்மை அறியாமலேயே நாம் பாதிக்க படுகிறோம்.

ஆர்வமுள்ள மனிதன் சிறிய விஷயங்களில் கூட தனது நடவடிக்கை(விதி)களை கவனிக்கிறான்; சர்வேசுரனை  அதிருப்தி அடையச் செய்யும்  என்ற சிறிதளவு பயம் அவரை எல்லாவற்றிற்கும் கட்டாயப்படுத்த போதுமானது. மாறாக, ஒரு மந்தமான மனிதன் அடிக்கடி தனது விதியை மீறுகிறான், பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை தன்னால் முடிந்தவரை வழங்குகிறான், செபம், படிப்பு அல்லது ஆன்மீக வாசிப்பை விரும்புவதில்லை; அவர் மனித தீர்ப்புகளுக்கு மிகவும் உணர்ச்சி வசம் படக்கூடியவர் மற்றும் எண்ணற்ற அற்ப விஷயங்களில் தனது நேரத்தை வீணடிக்கிறார்.

ஒரு ஆர்வமுள்ள மனிதன் பொதுவாக தனது கடமையில் மகிழ்ச்சி அடைகிறான். சில சமயங்களில் அவர் சிரமங்களை எதிர் கொண்டால், அவர் சோர்வடைவதில்லை; அவரது ஆன்மாவில் பரவும் அபிஷேகத்தின் மூலம் அவரது உற்சாகம் கஷ்டங்களை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. செபம், துறவுகள் மற்றும் பக்தி நடைமுறைகளை கட்டாய வேலைகளில் சேர்க்க இது அவரை வழிநடத்துகிறது. இவை அனைத்தையும் அவர் தனது மேலதிகாரியின் அனுமதியுடன் செய்கிறார். எனவே, அவர் எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பதோடு, பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியவர்களிடம் கூட மென்மையான மற்றும் கருணையுள்ள நடத்தைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

மாறாக, ஒரு மந்தமான மனிதன் தனது கடமைகளை தாங்க முடியாத சுமையாக கருதுகிறான். அவர் இனிமையை உணராமலும் தகுதிக்கு தகுதியற்றவராகவும் அனைத்து கசப்புகளையும் தாங்குகிறார். இதன் விளைவாக, அவர் எப்போதும் தனக்கு ஒரு சுமையாக இருக்கிறார், அதை வெளியில் தெரியப்படுத்தாமல் இருக்க முடியாது.

ஒரு ஆர்வமுள்ள மனிதன் மனசாட்சியின் ஒரு சிறந்த தூய்மையைப் பேணுகிறான், மேலும் அற்ப தவறுகளைச் செய்வதைத் தவிர்க்கிறான், அவதூறானவை கூட. தீமைக்கு இட்டுச் செல்லும் மற்றும் பரிசுத்ததணத்திலிருந்து அவரைத் திசைதிருப்பக்கூடிய சிறிய சந்தர்ப்பங்களிலிருந்து அவர் விலகிச் செல்கிறார். மறுபுறம், ஒரு மந்தமான மனிதன் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க தன்னால் முடிந்ததை  முடியாது; அதற்காக எந்த முயற்சியும் செய்ய மறுக்கிறார். அவர் தொடர்ந்து அற்பத் தவறுகளைச் செய்கிறார், சில சமயங்களில் அவை மிகவும் கணிசமானவை, அவர் சாவான  பாவத்தின் நிலையில் இல்லையா என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார்.

ஒரு ஆர்வமுள்ள மனிதன்,  எவ்வளவு பரிசுத்ததணத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், எப்போதும் பரிசுத்ததணத்தில் முன்னேற வேலை செய்கிறான். அர்ச். அகஸ்டின் பரிந்துரைத்தபடி, : “எப்போதும் சேர், எப்போதும் நடக்கவும், எப்போதும் தொடரவும்; அசையாமல் நிற்காதே, பின்வாங்காதே, விலகாதே; நிற்பவன் தொடரவில்லை; அவர் தொடராது  பின்னே செல்கிறார்; அவர் கலகம் என்று விலகுகிறார்; தன் வழியை விட்டு விலகுகிறவனை விட, தன் வழியிலே கண்டிப்புடன் செல்கிறவன் நன்றாகப் போகிறான்." (அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் பற்றிய பிரசங்கம்). இதற்கு நேர்மாறாக, ஒரு மந்தமான மனிதன் சிறந்து விளங்க கவலைப் படுவதில்லை. அவர் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்லை, அவற்றைக் கவனிக்கவில்லை என்று பாசாங்கு செய்கிறார். அவரது நிலை மரணத்திற்கு அருகில் உள்ளது, அவர் எதற்கும் அஞ்சவில்லை, அதனால் அவர் கண்மூடித்தனமாக இருக்கிறார்: "Vicina mort labes, torpor animarum: ஆன்மாவின் வேதனை மரணத்திற்கு ஒத்த அழிவாகும்."

ஒரு ஆர்வமுள்ள மனிதன் பிறருக்கு உதாரணமாக  மாறுகிறான்; அவரது உதாரணத்தின் மூலமும், அனைத்து பயிற்சிகளிலும் புனித மரபுகளையும் துல்லியத்தையும் பராமரிக்கிறார். அவருடைய இருப்பு மற்றவர்களை தங்கள் கடமையில் வைத்திருக்கும். மாறாக, ஒரு மந்தமான மனிதன் ஒழுங்கை அழிப்பான். விதியின் புள்ளிகள், நடைமுறைக்கு வந்தவுடன், அபூர்வமாக  மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன, புனித பழக்கவழக்கங்கள் படிப்படியாக மறைந்துவிடும், துஷ்பிரயோகங்கள் ஊடுருவி, ஒழுக்கம் மற்றும் நல்ல ஒழுங்கு மந்தமாகிறது. அவர் தன்னுடன் அலட்சியமாக நடந்துகொள்பவர்களை இழுத்துச் செல்கிறார், நீண்ட காலத்திற்கு, ஒரு முழு குடும்பத்தையும் கெடுக்கும் திறன் கொண்டவர், குறிப்பாக அவர் தனது வயதால் பாராட்டப்படக்கூடியவராக இருந்தால் அல்லது அவர் செல்வாக்கு, திறமை அல்லது மனித தகுதியுடையவராக இருந்தால். துரதிர்ஷ்டவசமான மனிதன் குழந்தைகள் மற்றும் சாதாரண விசுவாசிகளை மட்டுமல்ல, சலுகை பெற்ற ஆன்மாக்களையும்-உலகின் இரட்சிப்பாக இருக்க வேண்டிய ஆன்மாக்களை அவதூறு செய்கிறான். இது ஒரு பயமுறுத்தும் பொறுப்பு அல்லவா?

Prayer

I ask you, O my God, for the grace never to be among the lukewarm souls but among the fervent ones. If I do not yet have the fervor I should possess or even that which I had in the early years of my conversion, having relaxed due to my weakness and inconstancy, I will apply myself even more to pray to strengthen one, to establish the other, and to implore all Your Saints to intercede with You so that I do not fall into spiritual lethargy.

Père Hyacinthe-Marie Cormier O.P.

தந்தை ஹயசின்தே-மேரி கோர்மியர் OP





அர்ச். பல்பீனம்மாள் திருநாள். ST. BALBINE.

மார்ச் மாதம் 31-ந் தேதி க.
அர்ச். பல்பீனம்மாள் திருநாள்.
ST. BALBINE.


உயர்ந்த கோத்திரத்தாரும் அக்கியானிகளுமாகிய தாய் தகப்பனிடத்திலே அர்ச். பல்பீனம்மாள் பிறந்தாள். அவள் தன்னிடத்தில் இருந்த மிகுந்த சவுந்தரிய அலங்கார முகாந்தரமாக வெகு சந்தோஷப்பட்டிருந்தாள். ஆனால் கொஞ்சத்திற்குள்ளே அவளுடைய கழுத்திலே வந்த கண்டமாலையினாலே அழகுஞ் சந்தோஷமும் நீங்கித் துக்கத்தை அடைந்தாள். அவளுடைய தகப்பனாரும் அவள் தாயாரும் அந்த வியாதி தீர வைத்தியருக்கு வெகு பணங் கொடுத்து வெகு செலவு செய்திருந்தாலும் தீராமல் போச்சுது. அக்காலத்திலே இருந்த அலெக்சாண்டர் என்னும் பாப்பாண்டவர் அநேகம் புதுமைகள் பண்ணுகிற சேதி அந்தம்மாளுடைய தகப்பனாராகிய குயிரீனென்கிற துரை அறிந்து அவர் வழியாகத் தன் மகளுக்குக் குணமாகு மென்று நம்பிக்கையாய் இருந்தான்.

 ஆனால் இந்தத் துரை பாப்புவின் பேரில் முந்திப் பகையாயிருந்து அவரை அநியாயமாகக் காவலில் வைத்திருந்தான். ஆயினும் தன் மகள் ஆரோக்கியம் அடைய வேண்டுமென்கிற முகாந்தரமாக அவளைத் தானே காவற் கூடத்திலே கூட்டிப்போய் அவளுக்கு ஆரோக்கியங் கட்டளையிட அவரை மன்றாடினான். அதற்கு பாப்பாண்டவர் சொன்னதாவது : என் கழுத்தில் ஆக்கினையாக வைத்த இருப்பு வளையத்தை எடுத்து உன் மகள் கழுத்திலே போடென்றார். அந்தப்படியே அந்தத் துரை செய்கிறபோது அந்த இருப்பு வளையத்தை அவள் கழுத்திலே போட்டவுட னே புதுமையாக அவள் முழுதும் ஆரோக்கியத்தை அடைந்தாள். அதைக் குயிரீனென்கிற துரை பார்த்து ஆச்சரியப்பட்டுத் தாமுந் தம்முடைய மனைவி மக்களும் ஞானஸ்நானம் பெற்றதும் அல்லாமல் வேதத்திற்காகப் பிராணணையுங் கொடுத்தார்கள், பல்பீனம்மாளோவெனில் தனக்கு ஆரோக்கியங் கொடுத்த ஆண்டவருக்குத் தான் நன்றியறிந்ததனம் காண்பிக்கத்தக்கதாகத் தான் எப்போதுங் கன்னிகையாய் இருக்க வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவள் அதை உத்தம பிரகாசத்திற்குச் செலுத்தி அநேக தருமங்களையும் உத்தம புண்ணியங்களையும் செய்துவந்த பிற்பாடு நல்ல ஆயத்தத்தோடே பாக்கியமான மரணத்தை அடைந்தாள்.
கிறீஸ்துவர்களே! புண்ணிய வழியிலே நீங்கள் இந்த மட்டுந் தப்பி நடந்திருந்தால் அர்ச். பல்பீனம்மாளுடைய தரும நடக்கையைப் பார்த்து நடந்தால் மோட்சத்திலே சேரலாம். அந்தம்மாள் ஆண்டவராலே புதுமையாக ஆரோக்கியம் அடைந்த பிற்பாடு, அந்த ஆரோக்கியத்தை அவருடைய ஊழியத்திலே செலவழித்தாள். ஐயையோ, சிலர் ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த ஆரோக்கியம், ஆஸ்தி, புத்தி, மகிமை முதலியவற்றைக் கொண்டு ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய ஊழிபம் பண்ணாமல் தங்கள் பாவங்களினாலே அவருக்குத் துரோகம் பண்ணுகிறார்கள். இரா சாஉனக்கு வெகுமானமாகக் கொடுத்த கத்தியைக் கொண்டு இராசாவைத்தானே வெட்டினால் அது மிகுந்த ஆக்கிரமம் ஆகும். சர்வேசுரன் உனக்கு அமைத்திருக்கிற கண், வாய், காது, கை முதலான உறுப்புக்களைக் கொண்டு அவருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்கிறது மிகவும் அக்கிரமமல்லவோ?

மேலும் அர்ச். பல்பீனம்மாள் கழுத்திலே வைத்திருந்த பொற்காறை வெள்ளிக்காறையைக் கொண்டு ஆரோக்கியம் அடையவில்லை. சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றி உபத்திரிய வேதனையாக பாப்புவின் கழுத்திலே போட்டிருந்த இருப்பு வளையத்தைக் கொண்டு ஆரோக்கியம் அடைந்தாள். ஆகையால் இவ் வுலகத்தின் நகை உடைமைகளைப் பார்க்க, ஆண்டவரைக் குறித்து அனுபவிக்கிற கஸ்திகளை அதிசமாய் மதிக்க வேண்டும். அல்லாமலும் அர்ச். பல்பீனம்மாளிடத்திலே இருந்த அலங்கார சந்தோஷம் ஒரு வியாதி வந்தவுடனே நீங்கிப் போச்சுது. மனுஷருடைய சரீரம் எத்தனையோ நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டதாய் இருக்கின்றது. துரைகளும், ஆஸ்திக்காரர்களும், வாலர்களும் சவுந்தரியமுள்ளவர்களுமாகிய இவர்களின் சரீரங்கள், வியாதி முதலான நிர்ப்பந்தங்கள் இல்லாதிருக்குமோ, இல்லையே. இப்படியிருக்கையில் ஒரு வியாதியைக்கொண்டு மனுஷர் இழந்துபோகிற சரீர அலங்காரத்தைக் கனமாய் எண்ணலாமோ? குயவனாலே உண்டாக்கப்பட்ட பானை பார்வைக்கு நேர்த்தியாயிருந்தாலும் அதிலே ஒரு கல், ஒரு மரம் மோதினால், அல்லது அந்தப் பானை தானே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் உடனே தகர்ந்துபோம். மனுஷருடைய சரீரம் மெத்த சொற்பமான மண்ணாயிருக்கிறகினாலே அதை நம்பக்கூடாது. ஆதலால் அழிவுள்ள சரீர நன்மைகளைச் சட்டைபண்ணாமல், அழியாத ஆத்தும நன்மைகளை கனமாய் எண்ணி, ஆசையோடே தேடிக்கொள்ள வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.


saints life history in tamil






திங்கள், 29 ஜனவரி, 2024

பூசைப் பலிபோல் - Lyrics for Tamil catholic songs

 பூசைப் பலிபோல்



1. பூசைப் பலிபோல் பாக்கியசெல்வம் புவியில் இல்லையே
புவிநிரம்ப பொன்தந்தாலும் பலிக்கு ஈடில்லையே
பரமனே இப்பலிபொருளாய் எழுந்தருள்வாரே
பக்தி ஆவல் நிரம்ப பலியை ஒப்புக்கொடுப்போமே (2) -(பூசைப் பலிபோல்)

2. அள்ள அள்ளக் குறையா சுரக்கும் அமுதம் நிறை சுனையே
அன்பில் சிறந்து உயர்ந்து நின்ற கல்வாரிப் பலியே
எல்லையில்லா பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவநோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே - (2) - (பூசைப் பலிபோல்)

 3. சோம்பல் அசதி சோர்வனைத்தும் தூரத்தள்ளியே
சீர்நிறைப்பலி ஆவல் நிரம்ப செலுத்திடுவோமே
ஆண்டவனுக்கேற்ற நன்றி ஆராதனையுமே
அளித்து பாவமன்னிப்பருளும் அடைந்திடுவோமே - (2) - (பூசைப் பலிபோல்)


Tamil Catholic songs lyrics


அர்ச். கிலிமாக் அருளப்பர் திருநாள்.(ST. JEAN CLIMAQUE.)

மார்ச் மாதம் 30-ந் தேதி. ம.

அர்ச். கிலிமாக் அருளப்பர் திருநாள்.

ST. JEAN CLIMAQUE.

Born          c. 579
                   சிரியா

Died           March 649 (aged 69–70)
                   Mount சினை

Venerated in Catholic Church

Feast
30 March, Fourth Sunday of Great Lent



பலெஸ்தீன் நாட்டில் அர்ச். கிலிமாக் அருளப்பர் பிறந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவராய் ஆசையோடே உலக சாஸ்திரங்களைப் படித்ததினால் அவருக் குப் பதிநான்கு வயது நடக்கிறபோது மற்றவர்கள் அவரைச் சாஸ்திரியென்று அழைப்பார்கள். ஆனால் அவர் விசேஷமாய் ஞான சாஸ்திரங்களைப் படித்ததினால் ஞானியாகி வாலிப வயதாய் இருக்கிற போதே உலகத்தை வெறுத்துத் தபம் பண்ணச் சீனாய் மலை மடத்திற்குப் போனார். நான்கு வருஷம் அதில் கடின தபம் பண்ணின பிறகு சந்நியாசியானார், ஜெபம் பண்ணுவதிலேயும் ஒருசந்தி பிடிப்பதிலேயும், தாழ்ச்சியாய் இருப்பதிலேயும், தியானஞ் செய்வதிலேயும் அவர் மற்றச் சந்தியாசிகளுக்குப் படிப்பினையாயிருந்தார். அவர் நாற்பது வருடம் தர்ம வழியிலே ஒரு சம்மனசைப்போல் நடந்ததினாலே சம்மனசு என்னப்படுவதற்குப் பாத்திரமானார். பசாசு இதைக் கண்டு அவர் பேரிலே மிகவும் பகை வைத்து அவரை மிகவும் தொந்தரவு பண்ணத் துவக்கிற்று. பொல்லாத சோதனைகளும் பொல்லாத நினைப்புகளும் ஓர் படைபோல அவர் பேரில் வந்தன. அர்ச், அருளப்பர் இதைக் கண்டு அவைகளுக்குள்ளே தாம் அகப்படாதபடிக்கு நல்ல ஆயத்தத்தோடே அடிக்கடி தேவநற்கருணை வாங்கினார், அதன் வழியாக அவர் அடைந்த ஞான பலத்தைக் கொண்டு பசாசின் சோதனைகளை வென்றார்.
தியானம் பண்ணுவதிலே அவர் மிகுந்த ஞான ஆனந்தத்தை அனுபவித்ததினால் அதிலே வெகு நேரம் செலவழித்தார். சில முறை தியானம் பண்ணுகிற போது அவருடைய சரீரம் புதுமையாகப் பூமியை விட்டு ஆகாயத்திலே நின்றது. தியானத்தினால் அவர் அடைந்த ஞானம் அவராலே உண்டாக்கப்பட்ட 'பரகதியின் ஏணி' என்னும் வெகு நேர்த்தியான புத்தகத் தில் காணப்படுகிறது. அவருடைய சீஷனாகிய மோயீசென்பவன் ஒரு சமயத்திலே கடின வேலை செய்து ஒரு குகைக்குள்ளே நித்திரை பண்ணுகிறபோது சற்று நேரத்தில் அந்தக் குகை இடிந்து விழப்போகிற தென்று ஆண்டவராலே அர்ச். அருளப்பர் அறிந்து அவனை காப்பாற்ற மன்றாடினார். ஆதலால் தேவ கிருபையால் அர்ச். அருளப்பர் அவனைக் கூப்பிடுகிற குரற் சத்தம் உண்டாயிற்று. அதினால் அந்தச் சீஷன் விழித்து அந்தக்கணமே குகையைவிட்டு வெளியே போனான். வெளியில் வந்தவுடனே அந்தக் குகையி லிருந்த பெருங் கற்பாறை பிளந்து இடிந்து விழுந்தது. அந்தச் சீஷன் அப்போது அந்தக் குகைக்குள்ளே இருந்தால் செத்திருப்பான். அர்ச். அருளப்பருடைய மன்றாட்டினாலே பிழைத்தான். அவரிடமிருந்த ஆச்சரியமான புண்ணியங்களின் பொருட்டு அவர் சீனாய் மலையில் மற்றச் சந்நியாசிகளுக்குச்  சிரேஷ்டராக ஏற்படுத்தப்பட்டார். அந்தச் சமயத்தில் அவ்விடத்திலே அறுநூறு சந்நியாசிகள் கூடியிருக்கையில் ஆச்சரியத் திற்குரிய ஓர் மனிதன் வந்து அவர்கள் எல்லாருக்கும் உணவு பரிமாறி மறைந்து போனான். அவன் ஓர் சம்மனசுதான் என்று நினைத்தார்கள்.

அர்ச், அருளப்பர் தமது ஆளுகையிலிருந்த சந்நியாசிகள் எல்லாருக்குந் தாழ்ச்சியும் தயைப் பட்சமும் காண்பித்ததினாலே எல்லாரும் அவரைத் தங்கள் தகப்பனைப் போல் சிநேகித்தார்கள். அவர் தம்முடைய புத்தகத்திலே எழுதினதாவது: நாம் இருக்கிற மடத்தின் அருகில் சிறையென்னும் ஓர் மடமுண்டு. தாங்கள் செய்த பாவங்களுக்குத் தபம் பண்ணுகிறவர்கள் அத்தகைய மடத்திலே இருக்கிறார்கள் என்றார். அவர்கள் பண்ணின பலவகைத் தபங்களை அவர் தம்முடைய புத்தகத்தில் எழுதிவைத்தார். அந்த நானா வகைத் தபசுகள் மிகக்கடினமாய் இருக்கிறதினாலே அவை களை வாசிக்கிறவன் கண்ணீர் சிந்தாமல் வாசிக்கமாட்டான். அர்ச் அருளப்பர் எண்பது வயதுமட்டுந் தரும வழியிலே சுறுசுறுப்போடே நடந்த பிறகு  வியாதியாய் விழுந்து அவஸ்தைப்படுகிறபோது தீர்க்கதரிசி போல் வருங்காரியங்களை வெளிப்படுத்திக் கர்த்தர் பிறந்த அறுநூற்றைந்தாம் வருஷத்தில் மரணமடைந்தார்.
கிறிஸ்துவர்களே! கல்வி சாஸ்திரம் கற்றவன் புகழப்படுகிறதற்குப் பாத்திரமாயிருக்கிறதை விடத் தரும வழியிலே சுறுசுறுப்போடே நடந்த அர்ச். அருளப்பர் புகழப்படுவதற்குப் பாத்திரமாயிருக்கிறார். அவர் பசாசு தமக்கு வருவித்த எண்ணப்படாத சோதனையினாலே தமக்குத் தோல்வி வராதபடிக்கு தேவ நற்கருணையின் அடைக்கலமாய்ப் போனார். வழியிலே இருக்கிற ஓர் சின்ன குழந்தை தன்னிடம் ஒரு துஷ்ட மிருகம் வருவதைக் கண்டவுடனே பயந்து வீட்டுக்குள்ளே இருக்கிற தன்னுடைய தாய் மடியிலே அடைக்கலமாய்ப் போகுமல்லவோ ? அவ்வாறே நரகத்தின் துஷ்ட மிருகமாகிய பசாசின் சோதனையை நாம் கண்டவுடனே, கோயிலிலேயிருக்கிற திவ்விய நற்கருணையில் நாம் அடைக்கலம் நாடவேண்டும். இதற்கு அர்த்தமேதென்றால், நல்ல ஆயத்தத்தோடே
திவ்வியநற்கருணை வாங்கித் திவ்விய நற்கருணை வழியாக தன் நெஞ்சுக்குள்ளே வருகிற சேசுநாதரைப் பார்த்து, அந்தச் சோதனையை  வெல்வதற்கு வேண்டிய பலனை தாழ்ச்சியோடே கேட்கவேண்டும்.

அடிக்கடி  திவ்விய நற்கருணையைக் கோவிலிலே சந்தித்து மன்றாடத்தகும். சரீரத்திற்கு வியாதி வருவது போல் ஆத்துமத்திற்கு பாவமாகிய 
வியாதி வருகிறதிண்டு. வியாதியுள்ள சரீரம் பிழைக்க வழக்கமாய் கடின பத்தியம் காக்கவுங் கசப்பான மருந்து சாப்பிடவும் வேண்டும். இவைகளைச் செய்யாதிருந்தால் சரீரம் பிழைக்காது என்பதைப்பற்றி இவைகளிலே எவ்வளவு வருத்தமுண்டாயிருந்தாலும் உயிர் பிழைக்க இவைகளுக்கு உள்ளாவார்கள். அவ்வாறே ஆத்துமம் பிழைக்க பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான சகலத்தையும் விட்டுவிட வேண்டியதுமன்றிச் செய்த பாவங்களுக்குத் தபம் பண்ணவேண்டும். இன்றேல் ஆத்துமம் பிழைக்கவும் மோட்சத்திலே சேரவுமாட்டாது. அர்ச். அருளப்பர் தியானம் பண்ணுவதிலே வெகு நரஞ் செலவழிப்பார். நாங்கள் குடியானவர்கள், சேவகர், வர்த்தகர், எளியோர்கள்; ஆதலால் தியானம் பண்ணுவதற்கும் செபம் பண்ணுவதற்கும் எங்களுக்குத் தெரியாதென்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் பயிருக்குச் சேதம் வராதபடிக்குக் குடியானவன் தானே நல்ல யோசனை பண்ணுவான். சண்டையிலே தோல்வியடையாதபடிக்குச் சேவகன் வழி தேடுவான். சந்தையிலே நஷ்டம் வராதபடிக்கு வியாபாரி உபாயந் தேடுவான். நூல் நூற்று எப்படி ஆதாயம் வருமோவென்று புத்தியுள்ளவளான பெண் யோசனை பண்ணுவாள். பிச்சைக்காரன் தன் பேரில் இரக்கம் வர ஆஸ்திக்காரனிடம் தாழ்ச்சியோடேயும் நல்ல வகையோடேயுங் கெஞ்சிப் பிச்சைக் கேட்டால் கிடைக்குமென்று யோசித்து அப்படி இரந்து பிழைப்பான். ஆகையால் அவரவர் சரீரம் பிழைக்க தங்களுக்கிருக்கிற புத்தியைக் கொண்டு நல்ல யோசனை செய்திருக்க, ஆத்துமம் பிழைக்கத்தக்க வகை தேடி அதற்குத் தக்க யோசனையாகிய தியானம் பண்ணத் தனக்குத் தெரியாதென்று சொல்ல இடமில்லை. பிச்சைக்காரன் ஆஸ்திக்காரனிடத்தில் தாழ்ச்சியோடே பிச்சைக் கேட்பதுபோல் ஆத்துமம் பிழைப்பதற்கு வேண்டியதெல்லாந் தாழ்ச்சியோடே சர்வேசுரனிடத்திலே கேட்பது உத்தமமான செபமென்றும் அப்படி செபம் பண்ண எவனாலும் கூடுமென்றும் உணர்வோமாக.




ஞாயிறு, 28 ஜனவரி, 2024

அர்ச். எவுஸ்தாசியார் -. ST. Eustase(March 19)

மார்ச் மாதம் 29-ந் தேதி ம.
அர்ச். எவுஸ்தாசியார் திருநாள்.
ST. EUSTASE.

பிரான்ஸ் நாட்டிலே செல்வாக்குள்ள தாய் தகப்பனிடத்திலே அர்ச், எவுஸ்தாசியார் பிறந்தார். அவர் வளர்ந்த பிறகு தாய் தகப்பன் சொன்னபடி உலக சாஸ்திரங்களைப் படித்ததுமன்றி புண்ணிய வொழுக்கத்தையும் நன்றாய்க் கற்றுக் கொண்டார். மனிதர் பட்சிகளைப் பிடிக்க அங்கங்கே கண்ணி வைக்கிறது போல் உலகம் பசாசு சரீரமென்கிற இந்த மூன்று சத்துருக்களும் ஆத்துமங்களைப் பிடிக்க உலகத்தில் பலவகையில் கண்ணி வைத்திருக்கிறதென்று அவர் கண்டுபிடித்து உலகத்தை வெறுத்துச் சந்நியாசியானார். அதற்குப் பிறகு மிகச் சுறுசுறுப்போடே செபத் தியானம் பண்ணித் தபம் செய்துகொண்டிருந்தார். அதனால் அவருடைய ஆத்துமத்தில் மிகுந்த பத்தி தேவ சிநேகாக்கினி பற்றி வேகமாய் எரியும். அவரிடத்திலே விளங்கின புண்ணியங்களினிமித்தம் அவர் இருந்த மடத்திலே மற்றச் சந்நியாசிகளுக்குச் சிரேஷ்டராக ஏற்படுத்தப்பட்டார்.

அவர் பற்பல புண்ணியங்களுக்குத் தருமப் படிப்பினையாய் இருந்ததினாலேயும், மற்றவர்களைத் தயை விமரிசையோடே நடத்தினதினாலேயும் அந்த மடத்திலே சந்நியாச வொழுக்கம் வளர்ந்து அநேகம் பேர் அதிலே சேர்ந்து, சந்நியாசிகள் தொகை அறுநூறு ஆயிற்று, அவர் சொன்ன உருக்கமுள்ள புத்தியினாலே மற்ற அநேகர் பாவத்தை விட்டுத் தரும வழியிலே நடந்தார்கள். அவர் அக்கியானிகளுக்கும் பிரசங்கித்து அநேகரைச் சத்திய வேதத்திலே திருப்பினார்.

மார்ச் மாதம் 29-ந் தேதி. பசாசானது இதைக் கண்டு அவரைப் பகைத்து அவருக்குத் தீங்கு வருவிக்க ஓர் உபாயம் பண்ணிற்று. அதாவது: அந்த மடத்திலே இருந்த ஒரு சந்நியாசிக்குப் பசாசு துர்ப்புத்தி சொல்லிற்று; அதை கேட்டு அந்தச் சந்நியாசி சில பிரிவினைக்காரரைச் சேர்த்து அர்ச். எவுஸ்தாசியார் பேரிலே வர்மம் வைத்து அநேக மேற்றிராணிமார்களிடம் போய் அர்ச். எவுஸ்தாசியார் பேரிலும், அவருடைய மடத்து ஒழுங்குகள் பேரிலும் இல்லாத குற்றங்களைச் சாட்டினான். மேற்றிராணிமார்கள் அந்தக் காரியங்களை விசாரிக்கிறபோது அர்ச். எவுஸ்தாசியார் பேரிலும், அவருடைய மடத்து ஒழுங்குகளின் பேரிலுங் குற்றமில்லையென்று தீர்ப்புக் கூறினார்கள். அர்ச். எவுஸ்தாசியார் தமது பேரில் கோள் சொன்ன சந்நியாசியைத் தயையுடன் நல்ல வழியில் திருப்பப் பிரயாசைப்பட்டார்.  ஆயினும் அவன் மூர்க் கத்துடனே அவருக்கு விரோதஞ் செய்து அர்ச்சியசிஷ்டருடைய சீஷர்களில் சிலரை மயக்கித் தன் விரோதத்திற்கு உட்படுத்தினான். ஆனால் இவர்களும் இவனும் சில காலத்திற்குப்பின் நிர்ப்பாக்கியமாய்ச் செத்தார்கள். பின்பு அங்கு அமரிக்கை ஏற்பட்டது. அவர் கட்டளையிட்டபடியே அந்த மடத்திலிருந்த அறுநூறு சந்நியாசிகள் பகலும் இரவும் இடைவிடாமல் சர்வேசுரனைத் தோத்திரம் பண்ணிவருவார் கள்.

அவர்களுக்குள்ளே அநேகர் பெரிய அர்ச்சியசிஷ்டர்களும் மேற்றிராணிமார்களும் ஆனார்கள். சாவு தமக்குக் கிட்டி வருகிறதென்று அவர் ஆண்டவராலே அறிவிக்கப்பட்டு அதற்கு ஆயத்தமாக அதிக சுறுசுறுப்போடே தரும வழியிலே நடந்தார். கடைசியிலே அவருக்கு வந்த கடினமான வியாதியினாலே அவஸ்தையானார். அந்தச் சமயத்திலே சர்வேசுரன் அவருக்கு ஓர் தரிசனை காட்டி அவரைக் கேட்டதாவது: நீ முப்பது நாளைக்குள்ளே சாகவேண்டுமோ அல்லது நாற்பது நாள் பொறுத் துச் சாகவேண்டுமோ? முப்பது நாளைக்குள்ளே சாக வேண்டுமானால் இந்த முப்பது நாளும் கடின வலி அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. நாற்பது நாளைக்குப் பிற்பாடு சாகவேண்டுமானால் முன் சொல்லப்பட்ட வலி தணிக்கப்படும். இவ்விரண்டு காரியத்திற்குள்ளே ஒன்றைத் தெரிந்துகொள் என்று ஆண்ட வர் கேட்டார். அவர் இதை யறிந்து சீக்கிரமாய்ச் சர்வேசுரனைக் காண ஆசையாயிருந்ததினாலே முப்பது நாளைக்குள்ளே சாகச் சம்மதித்தார். இப்படி அந்த முப்பது நாள் அவர் கடின வலியைப் பொறுமையோடே அனுபவித்த பிறகு கர்த்தர் பிறந்த 525-ம் வருஷத்தில் பேரின்பப் பாக்கியத்தை அடைந்தார்.

அதற்குப் பிறகு அவருடைய சரீரத்தினிடம் அநேகம் புதுமைகள் நிகழ்ந்தன. அவர் தமது சீவிய காலத்திலுஞ்சில புதுமைகளைச் செய்திருந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். எவுஸ்தாசியார் சீக்கிரமாய்ச் சர்வேசுரனைத் தரிசிக்க ஆசையாயிருந்ததினால் சீக்கிரமாய்ச் சாகிறதற்கும் அதிக வலி அனுபவிக்கிறதற்குஞ் சம்மதித்தாரென்று கேட்டீர்களே. சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்கிறதிலே எவ்வளவு ஞான ஆனந்தம் இருக்குமென்று சற்றாவது நீங்கள் அறிந்திருந்தால் இந்த அர்ச்சியசிஷ்டரைப்போல் அதை ஆவலுடன் விரும்புவீர்கள். உலகிலுள்ள எந்த நன்மை சந்தோஷத்தையும் இலட்சம் வருஷம் அனுபவிக்கிறது பெரும் காரியம்; ஆகையால் அத்தகைய சந்தோஷத்தின் பேரில் அநேகருக்கு ஆசை உண்டு. சகல இலட்சம் வருஷம் உலக சந்தோஷமெல்லாம் அனுபவிக்கிறதைவிட ஒரு கணமாவது சர்வேசுரனை முக முகமாய்த் தரிசிக்கிறது மேல் என்பதற்குச் சந்தேகமில்லை. அப்படியிருக்க என்றென்றும் அவரைத் தரிசிக்கிறது எப்படிப்பட்ட பேரின்ப சந்தோஷமாயிருக்கும்.

ஒரு பெரிய சாஸ்திரியோடு பேசுவது எல்லாருக்கும் ஆசையாயிருக்கிறது. மிக அலங்காரமுள்ள ஒரு வஸ்துவைப் பார்ப்பதற்கும் எவனும் ஆசைப்படுவானல்லவோ? இன்பமான ஓசை கேட்பதற்கும், ருசியுள்ள பொருளைச் சாப்பிடுவதற்கும், ஆஸ்தி பெற்றுக் கொள்ளுவதற்கும் இவை முதலிய காரியங்களின் பேரிலும் அநேகம் பேர்கள் வெகு ஆசை வைப்பார்கள். ஆனால் காணப்பட்ட பொருட்களிடத்திலே இருக் கிற அத்தகைய நன்மைகள் எங்கேயிருந்து வந்தன? சர்வேசுரனிடத்திலே இருந்து வந்ததல்லவோ? ஆண்டவர் சகல பொருட்களையும் படைத்தபோது, புத்தி ஆஸ்தி அலங்கார முதலிய நன்மைகளை அந்தந்த பொருட்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் படைப்புண்ட பொருட்களிடத்தில் இருக்கிற நன்மைகளுக்குஞ் சர்வேசுரனிடத்தில் இருக்கிற நன்மைகளுக்கும் உள்ள வேற்றுமையை நம்மாலே சுண்டுபிடிக்கக் கூடாதிருந்தாலும் அதைச் சற்றாகிலுங் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையைக் கேளுங்கள். சமுத்திரத்திற்கும் ஒரு துளித் தண்ணீருக்குமிடையே உள்ள வேற்றுமை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதைவிட முன் சொன்ன காரியத்திலே அதிக வேற்றுமையிருக்கும். படைப்புண்ட வஸ்துக்களிடத்திலே இருக்கிற நன்மைக ளெல்லாஞ் சர்வேசுரனிடத்திலே இருக்கிற நன்மைகளுக்கு முன்பாக ஒரு துளி தண்ணீர்போல இருக்கிறதுமன்றி அவைகள்  உப்புத் தண்ணீர்போலே சர்வேசுரனிடத்திலே இருக்கிற நன்மைகள் நல்ல அமிர்தமான தண்ணீர்போலேயும் இருக்கிறது. இப்போது சொல்லப்பட்ட உப்புத் தண்ணீராகிய ஒரு துளிமேல் மனிதர் இத்தனை ஆசை வைத்திருக்கையில் பேரின்ப அமிர்தமாகிய நன்மை கடலென்னுஞ் சர்வேசுரன் மேல் ஆசை வையாதிருக்கலாமோ? ஆனால் அத்தகைய ஆசை உங்களுக்கு வருமாறு சர்வேசுரனிடத்திலிருக்கிற நன்மைகளை அடிக்கடி நினைக்க வேண்டும். தேவ விசுவாசத்தின் ஞானக் கண்ணைக் கொண்டு அடிக்கடி சர்வேசுரனைப் பார்க்க வேண்டும். ஒருவனிடம் அதிசயமான புத்தி, வாசாலகம், ஆஸ்தி, நற்குணம், அழகு முதலிய சிறந்த விசேஷங்களிருந்தாலும் இவைகளை நீ அறியாமலிருந்தால், அல்லது நினையாமலிருந்தால் அவன் பேரில் உனக்குப் பட்சம் உண்டாகமாட்டாது. சர்வேசுரனிடத்தில் இருக்கிற அளவில்லாத நன்மைகளை நீங்கள் நினையாமலிருந்தால், அவரைத் தரிசிக்க உங்களுக்கு ஆசை வருவதற்கு வழி காணோம். ஆதலால் அர்ச். எவுஸ்தாசியாரைப் போல் கர்த்தரிடத்திலிருக்கிற நன்மைகளையுத் திவ்விய இலட்சணங்களையும் அடிக்கடி நினைக்க வேண்டும். அப்படி செய்தால் சர்வேசுரனை முகமுகமாய்ச் தரிசிக்க அவர் ஆசைப்பட்டதுபோல் நீங்களும் ஆசைப்படுவீர்கள்.

சனி, 27 ஜனவரி, 2024

காவலான சம்மனசுகளின் திருநாள் (Guardian Angels)October 2

அக்டோபர்  2 ம் தேதி

காவலான சம்மனசுகளின் திருநாள்.
 LES SS. ANGES GARDIENS.


அவரவருடைய ஆத்தும சரீரத்துக்குப் பொல் லாப்பு வராதபடிக்கு அவரவருக்குக் காவலாக ஆண்டவர் ஒவ்வொரு சம்மனசைக் கட்டளையிட்டாரென்று சத்தியவேதம் நமக்குப் படிப்பிக்கின்றது. ஆதலால் அதன்பேரில் கொஞ்சமாவது சந்தேகப் பட இடமில்லை. அரூபியாயிருக்கிற அப்படிக்கொத்த சம்மனசு இஷ்டப்பிரசாதத்தோடு படைக்கப்பட்டுச் சுபாவ நன்மைகளினாலேயும் ஞான நன்மைகளினாலேயும் நிறையப்பட்டு மோக்ஷமடைந்து சர்வேசுரனுடைய தூதராய் இருக்கிறதாமே.

சகாயம் பண்ணுகிறவனுடைய மகிமைக்குத் தக்கது அந்தச் சகாயம் முக்கியமாய் எண்ணப்படுமல்லவோ? ஒரு இராசாவானவன் ஒரு புஷ்பமாத்திரங் கொடுத்தால் அது கொஞ்ச வஸ்துவாயிருந்தாலும் இராசாவினுடைய மகிமை முகாந்தரமாக அதைக் கனமாயெண்ணுவார்கள். இராசாக்களுடைய மகிமையைப் பார்க்கக் காவலான சம்மனசுக்கு அதிக மகிமை இருக்கிறதென்கிறதற்குச் சந்தேகமில்லை. ஆதலால் அவருடைய மகிமை முகாந்தரமாக மண்ணால் உண்டாக்கப்பட்ட மனுஷன் அவர் கையில் அற்ப சகாயமடைந்தாலும் அதைக் கனமாயெண்ண வேண்டும். ஆனால் காவலான சம்மனசுகள் மனுஷருக்கு உபகாரமாக எண்ணப்படாத சகாயங்களையும் வெகு பெரிதான காரியங்களையும் பண்ணுகிறார்களென்கிறதினால் அவைகளை எம் மாத்திரங் கனமாய் எண்ணவேண்டும். அப்படிக்கொத்த சகாயங்களெல்லாம் இன்னின்னதென்று வெளிப்படுத்த நம்மால் கூடாததினால் அவைகளைச் சொல்லிக் காண்பிக்கிறபோது உலோகத்திலுள்ள இராச்சியங்களெல்லாம் அடக்கமான சித்திரத்தில் எழுதுகிற சாஸ்திரிகள் பண்ணுகிற உபாயம் பண்ணுவோம்.

 அதாவது: அவர்கள் மதுரை இராச்சியத்தை எழுதுகிறபோது தலையான பட்டணமாகிற மதுரையை மாத்திரம் எழுதுவார்களேயல்லாமல் அந்த இராச்சியத் திலிருக்கிற பட்டணங்களையும் ஊர்களையும் எழுதவில்லை. தஞ்சாவூர், ஆற்காடு, மைசூர் முதலிய இராச்சியங்களை எழுதுகிறபோதும் அப்படித்தானே எழுதுவார்கள். ஒரு பெரிய இராசாவுக்கு நீ மஞ்சணீர் குடித்த பிள்ளையாயிருக்கும்படி யாதொருவன் பிரயாசப்பட்டுச் செய்தால் அது உனக்குப் பாரமான சகாயமல்லவோ? இராசாக்களுக்கு இராசாவாகிற சர்வேசுரனுக்கு ஞானஸ்நானத்தின் வழியாக நீ சுவீகாரப் பிள்ளையாய்ப் இருக்கிறாய். ஞானஸ்நானம் பெறுகிறதற்கு முன்னே நீ சாகும்பொருட்டுப் பசாசு அநேகம்விசை வெகு உபாயம் பண்ணிற்று, அந்த விக்கினமெல்லாந் தள்ளி நீ ஞானஸ்நானம் பெற்றது காவலாயிருக்கிற சம்மனசின் சகாயமல்லவோ? ஞானஸ்நானம் பெறாதவன் ஞானஸ்தானம் பெறத்தக்கதாகக் காவலான சம்மனசு அவனுக்கு அடிக்கடி நல்ல புத்தி வருத்துவிக்கிறார். நீயும் வேறே ஒருவனும் பயணம்போகிறபோது கஷ்டததினாலேயும் வியாதியினாலேயும் பாம்பினாலேயும் நீ சாகாதபடி உன்னைக் காப்பாற்றினதும் அவருடைய உபகாரமல்லவோ? தண்ணீர் நிறைந்திருக்கிற பாழுங்கிணற்றில் நீ விழுகிற சமயத்தில் உன்னோடு கூடவந்தவன் உன்னைக் கைதூக்கினால் அது சனமான உபகாரந்தானே.

சாவானபாவங் கட்டிக்கொள்ளச் சமயம் வந்த போது காவலான சம்மனசின் ஒத்தாசையினால் நீ அந்தப் பாவக்குழியில் விழாதிருந்தாயே, அதைவிட இது பெரிய உபகாரமல்லவோ? இதுவும் இத்தனை விசையென்று கணக்கில்லை. கள்ளர் உன் உடைமை யெல்லாங் களவாடுகிற சமயத்தில் ஒருவனுடைய உதவியினால் அது தப்பினால் அவன் செய்தது பெரிய உபகாரமாயிருக்கும். ஞானஸ்நானத்தின் வழியாக நீ அடைந்த இஷ்டப்பிரசாதமும் அதைக் கொண்டு அடைந்த புண்ணியப்பேறுகளும் விலைமதியாத மாணிக்கமாயிருக்கிறதென்பது நிச்சயம். அதைப் பறிக்கத்தக்கதாக உலகம் பசாசு சரீரம் அநேகம் விசை பிரயாசைப்பட்டது. அந்த இஷ்டப்பிரசாதத்தை நீ இழந்து போகாதிருந்தது காவலான சம்மனசின் அநுக்கிரகமல்லவோ? இப்படிக்கொத்த அநுக்கிரகத்தை நீ அவர் கையில் கைக்கொண்டது ஒரு விசை மாத்திரமல்லவே, அநேகம்விசை அடைந்தாய்.


 சிலபேர்கள் காவலான சம்மனசின் புத்தி கேளாமல் சாவானபாவத்தின் குழிக்குள்ளே விழுந்தபிற்பாடு அந்தக் குழியைவிட்டு எழுந்திருந்து ஆத்தும சுத்திகரம் பண்ணக் காவலான சம்மனசு உதவியாயிருந்தார். இது கொஞ்சமான உதவியோ? வியாதி யுள்ள உன்னை வயித்தியன்கிட்டக் கொண்டுபோகவாகிலும் வயித்தியனை உன் கிட்ட அழைப்பிக்கவென்கிலும் முயற்சி பண்ணினவன் உனக்குக் கனமான சகாயஞ் செய்கிறான். உன்னாத்துமம் பாவமாகிற வியாதியோடு இருக்கிறபோது அதைத் தீர்க்க நீ ஞான வயித்தியராகிற குருக்களிடத்துக்குப் போகவாகிலும் குருக்களை நீ இருக்கிறவிடத்துக்கு வரவென்கிலும் அநேகம்விசை கிருபை பண்ணினவர் காவலான சம்மனசல்லவோ? உன்னுடைய குற்றத்தைப் பற்றி உன்னைப் பிடிக்கச் சேவகர் தேடுகிறபோது யாதொருவனுடைய உதவியினால் நீ அவர்கள் கையில் அகப்படாதபடிக்குத் தப்பினால் அவன் பண்ணின சகாயத்தைக் கனமாய் எண்ணியிருப்பாயே, நீ சாவான பாவத்தோடு இருக்கிறபோது அசுப்பிலே சேத்தால் தப்பாமல் உன்னாத்துமந் தங்கள் கையில் அகப்பட்டு நரகத்திற்கு கொண்டு போகப்படுமென்று பசாசுகள் நினைத்திருந்தாற்போல் நீ சாகும்படியாகப் பசாசுகள் அநேகஞ் சமயம் வரப்பண்ணிற்று, அதையெல்லாங் காவலான சம்மனசு விலக்கினார். இதுவும் ஒருவிசை மாத்திரமல்லவே.

எத்தனை க்ஷணம் நீ சாவான பாவத்தோடிருந்தாயோ அத்தனை விசையும் அந்தப் பொல்லாப்பு வராதபடிக்குக் காவலான சம்மனசு விலக்கினார். உன் குற்றத்தினாலே நீ இழந்துபோன ஊர், மானியம், சம்பளம், பொருள் முதலிய ஆஸ்தியெல்லாந் திரும்புகிறதற்கு யாதொருவன் உதவிசெய்தால் அவனை நன்றாய்க் கொண்டாடுவாயே. உன்னிடததிலுள்ள சாவான பாவத்தினால் நீ இழந்துபோன இஷ்டப்பிரசாத முதலான நன்மைகளெல்லாந் திரும்பி வருகிறதற்குக் காவலான சம்மனசுதானே வழிபண்ணுகிறார். பஞ்சத்தில் உனக்குச் சாப்பாடு விசாரித்தவனை உன்னைக் காப்பாற்றின பிதாவென்று கூப்பிடுவாயே. உன்னாத்துமத்திற்கு ஞானப்போசனமாகிற புத்திகளைக் காவலான சம்மனசு தினந்தினம் உனக்குச் சொல்லியும் போதிவித்தும் வருகிறதல்லவோ? சண்டையில் சேவகன்பேரில் மழை சொரிகிறாப்போல் வருகிற அம்புகளையுங் குண்டுகளையும் அவன் கிட்ட இருக்கிறவன் தடுத்து விலக்கினால் அவன் அந்தச் சேவகனைக் காப்பாற்றினவனல்லோ? அம்புகள்போலவுங் குண்டுகள் போலவும் பசாசுகள் அடிக்கடி விடுகிற பொல்லாத விசாரங்கள் முதலிய சோதனைகள் உன் ஆத்துமத்தில் தையாதபடிக்குக் காவலான சம்மனசு ஒத்தாசை பண்ணுகிறாரல்லவோ?
நீ செபதபம் பண்ணவும் மற்ற அந்தந்தப் புண்ணியங்களைப் பண்ணவும் அவர் உன்னைக் கிளப்பி ஏவுகிறதுமல்லாமல் உன்னுடைய புண்ணியங்கள் எல்லாமும் ஆண்டவரைக் குறித்து நீ வைத்த சகல அடியுமுதலாய் எண்ணிக்கைப் பார்த்துச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார். உன்னுடைய சரீரத்துக்கு அவர் பண்ணுகிற சகாயங்களைப் பார்க்கவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேள். தாயானவள் தன்னுடைய மகள் சரீரத்துக்குப் பண்ணுகிற சகாயத்தைப் பார்க்க வேறொருவரும் அதிகஞ் செய்யமாட்டார்கள். ஆயினும் அதைப் பார்க்கக் காவலான சம்மனசு உன் சரீரத்து க்கு அதிக உபகாரங்களைப் பண்ணினார். விசேஷமாய் நீ குழந்தையாய் இருக்கிறபோது பாம்பு முதலான விஷ ஜந்துகள், நாய், நரி, பூனை, நெருப்பு, தண்ணீர், கிணறு, சூரிக்கத்தி முதலியவற்றால் எத்தனை ஆபத்து உனக்கு வந்திருக்கும். உயரத்திலிருந்து கீழே விழுகிறதும், கல்லெறி இது முதலானவைகள் வழியாகச் சாவு, காயம் வரக்கிட்டின தறுவாயும் அநேகம்விசை உனக்கு வந்தது. அந்தச் சமயத்தில் நீ தனித்திருந்து அவைகளைத் தள்ள உள்ள புத்தியும் பெலனும் பற்றாதிருக்கையில் காவலான சம்மனசல்லவோ உன்னைத் தப்புவித்தது.

பஞ்சத்தில் தாய் மார்கள் பிள்ளைகளை விற்றுப்போடுகிறதானாலும் விட்டுவிட்டு அப்பாலே போகிறதென்கிலும் அநேகம் விசை சம்பவித்தது. ஆனால் காவலான சம்மனசால் அப்படிக்கொத்த குறை வராது, தாயானவள் பிள்ளைகளைச் சில வருஷங் காப்பாற்றின பிற்பாடு அவைகளைவிட்டுப் பிரிந்துபோவாள். ஆனால் காவலான சம்மனசு ஒருகாலும் உன்னைவிட்டுப் பிரிகிறதில்லை. சில தாய்மார்கள் தாங்கள் சொன்னபடி பிள்ளைகள் கேட்கவில்லையென்று கண்டு அவர்களைக் கைவிடுவார்கள் காவலான சம்மனசின் சொற்படி நீ கேளாதிருந்தாலும் அவர் உன்னைக் கைவிடுகிறதில்லை.
ஆகையால் தாய்மாரைப் பார்க்கக் காவலான சம்மனசு உன் சரீரத்துக்கு அதிக சகாயம்பண்ணுகிறார். உன் நம்பிக்கையுள்ள ஊழியக்காரன் எப்போதும் எங்கும் உன்னிடத்தில் காத்திருந்தாலும் அவன் நித்திரை போகிறபோதும் சாப்பிடுகிறபோதும் வெவ்வேறே அவசரமான காரியம் அவன் செய்கிற போதும் அவன் உன்கிட்டக் காத்திருக்கவில்லை. காவலான சம்மனசோவெனில் இடைவிடாமல் உன்னைக் காத்திருக்கிறார். : நித்திரைபோகிறபோது உன்னை அறியாமல் உன்கிட்டவந்த பாம்பு முதலான துஷ்ட ஜெந்துக்கள் உன்னைக் கடியாதபடிக்கு விலக்குகிறது காவலான சம்மனசல்லவோ? உனக்கு வந்த துக்கமான வேளையிலும் அவதிநேரத்திலும் உன்னுடைய சிநேகிதர் உன்னை விட்டுவிட்டாலுங் காவலான சம்மனசு அந்தச் சமயங்களில் ஆறுதலாயிருப்பார். நீ போகிற பயணத்தில் காட்டில் உன்னைத் துடர்ந்த புலி கடியாத படிக்கு ஒருவன் அதைத் துரத்தினால் அது கனமான சகாயமென்பாய். நரகப் புலியாகிற பசாசு இரவும் பகலும் எப்போதும் உன்னைச் சுற்றித்திரிந்து உன் குடியைக் கெடுக்கத் தேடுகையில் அந்தப் பொல்லாப்பில் நின்று காவலான சம்மனசு உன்னைக் காப்பாற்றினார். இன்று வரைக்கும் உன்னாத்துமத்துக்குஞ்சரீரத்துக்குங் காவலான சம்மனசு செய்த புதுமை கணக்கிலடங்குமோ?

ஆயினும் நீ நூறு வருஷத்துக்கு மேலே பூலோகத்திலிருந்தாலும் அவர் உனக்குச் செய்து கொண்டுவந்த உபகாரங்கள் நீ சாகிறசமயத்தில் காணப்படும். நம்பிக்கையுள்ள சேவகன் சண்டையில் தன் எசமானைக் கைவிட்டதினால் சிலவிசை சத்துருக்கள் கையில் அகப்படுவான், சீ சாகிறபோது பசாசுகளோடு செய்யப்போகிற கனமான யுத்தத் தில் காவலான சம்மனசு உன்னைக் கைவிடாமல் வே நே சம்மனசுகளையும் அழைப்பித்து உனக்குத் தோர்வை வராதபடிக்குச் சுறுசுறுப்போடு உதவியாயிருப்பார்.

நீ வேண்டுமென்று கெட்டால் கெடுவாயொழிய அவர் உதவிக் குறையினால் உனக்குக் கேடு வரமாட்டாது. மீளவும் உன்னுடைய தலையை வெட்ட அரண்மனையில் ஆலோசனை நடக்கிற போது அந்த ஆக்கினை வராதபடிக்கு ஒருவன் உனக்காகப் பேசினால் அது கனமான சகாயந்தானே. தனித்தீர்வையில் சுவாமி உனக்கு அகோரமான தீர்வையிடாமல் நல்ல தீர்வையிடத்தக்கதாக உன்னுடைய நற்கிரியை புண்ணியங்களெல்லாம் காவலான சம்மனசு ஆண்டவர் சந்நிதியில் காண்பித்துச் சர்வேசுரனை உனக்காக வேண்டிக்கொள்ளுவார். நீ செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் போனால் அந்த நெருப்பிற்தானே காவலான சம்மனசு வழியாக உனக்கு ஆறுதல் வரும். கடன்முகாந்தரமாக நீ விலங்கில் கிடக்கிறபோது அந்தக் கடன் தீர்க்க வகையில்லாத நீ சுற்றித்திரிந்து யாசகம் பண்ணக் கூடாததை ஒருவன் கண்டு அவன் தானே அங்கங்கே போய் யாசகம் பண்ணி அந்தப் பணத்தைக் கொடுத்துக் கடனைத் தீர்த்து உன்னை விலங்கைவிட்டு விடுவித்தால் அதுவுங் கனமான உபகாரந் தானே. அந்தப்பிரகாரமாய் நீ உத்தரிக்கிறஸ்தலத்திற் போனால் அக்கினிவிலங்கு போடப்பட்ட நீ கிறீஸ்து வர்கள் செய்கிற புண்ணியங்கள் வழியாய் உன் உத்தரிப்புக்கடனைத் தீர்க்க நீ சுபாவமாய்ப் பூலோகத்துக்கு வரக்கூடாதிருக்கும். ஆண்டவர் உத்தாரத்தின்படி யே உனக்குக் காவலான சம்மனசு உலோகத்திற் போய் அந்தந்த மனுஷர் உன்னை நினைக்கப்பண்ணி உன்னாத்துமத்தைக் குறித்து அவர்கள் புண்ணியம் பண்ணப் புத்திசொல்லுவார்.

உன்னை இராசபட்டத்திலே வைக்கக் கூட்டிக்கொண்டு போகிறவன்பேரில் உனக்குப் பூரண சந்தோஷம் வருமே. நீ உத்தரிக்கிறஸ்தலத்தில் உத்தரித்து முடிந்த பிற்பாடு மோக்ஷத்தில் உன்னைக் கொண்டுப் போகிறவர் காவலான சம்மனசு அல்லவோ? ஆகையால் நட்சத்திரங்களை எண்ணக்கூடாதென்கிறாப்போல் - காவலான சம்மனசு செய்கிற சகாயங்களை எண்ணக் கூடாது. இப்போது சொல்லப்பட்டதெல்லாங் கேட்டவனே, அப்படி சம்மனசு உன்னைக் காத்திருக்கத்தக்கதாகக் கட்டளையிட்ட ஆண்டவரை நீ முந்தமுந்தத் தோத்திரம் பண்ண வேண்டும். இதல்லாமல் சங்கை, பத்தி, நம்பிக்கை இந்த மூன்றையும் உன் காவலான சம்மனசுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர் மகா மகிமையுள்ள வராயிருக்கிறதினால் அவருக்கு வெகு சங்கை பண்ணவேண்டும்.
😍
நீ குருவானவரைச் சங்கித்தால் அவர் முன்பாகப் பாவமுள்ள தூர் கிரியைச் செய்யமாட்டாயே? அப்படியிருக்கக் குருவின் முன்பாகச் செய்யலாகாத பாவங்களைக் காவலான சம்மனசின் முன்பாகச் செய்யலாமோ? ஆகையால் அவர் எப்போதும் உன்னோடேயிருக்கிறதினால் அவருக்குப் பண்ணவேண்டிய சங்கை முகாந்தரமாக ஒருக்காலும் பாவஞ் செய்யாதிருக்க வேண்டும். இதன்றியே அவர் உனக்கு எண்ணப்படாத சகாயங்களைப் பண்ணினதினால் அவர்பேரில் வெகு பத்திவைக்க வேண்டியிருக்கின்றது. யாதொரு துரை உனக்குக் கொஞ்சம் பட்சங் காண்பித்தால் உன்னுடைய மனதை அவனுக்கு ஒப்புக்கொடுத்து அவனை மறவாதிருக்கையில் காவலான சம்மனசை மறந்துபோகலாமோ?

அவருக்கு நன்றியறியாதத்தனங் காண்பிக்கலாமோ? ஆகையால் உனக்காக மன்றாடுகிற அந்தந்த அர்ச்சியசிஷ்டர்கள் பேரில் நீ வைத்த பத்தியைப்பார்க்கக் காவலான சம்மனசின் பேரில் அதிக பத்திவைக்கவேண்டும். பின்னையும் அவர் மிகுந்த வல்லமை சத்தியுடையவராகவுந் தயையுள்ளவராகவும் விசுவாசப் பிரமாணிக்கமுள்ளவராகவும் இருக்கிறதினாலே உன்னுடைய நம்பிக்கையைக் குறையற அவர்பேரில் வைக்கிறது நியாயந்தான். உன்னுடைய ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் எத்தனை பெரிய அவதிவந்தாலும் அதைத் தள்ளுகிறதற்கு அவர் பலமுள்ளவர்தானே . நீ எத்தனை பாவியாயிருந்தாலும் உன்பேரில் அவர் தயையாயிருப்பார். அவர் உனக்கு ஆண்டவரால் குறிக்கப்பட்டதினால் உன்னைக் கை விடார்,
ஆகையால் உன் ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் ஆபத்து வருகிற சமயத்தில் எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசே, இதோ எனக்குக் கேடுவருகிறாப் போலிருக்கிறது, என்னை இரட்சியுமென்று மகா விசுவாசத்தோடு சொல்லவேண்டும். ஆனால் உன் பாவங்களினால் உன் காவலான சம்மனசின் உபகாரங்களுக்குத் தடைவைக்காமல் உன் சுகிர்த நடக்கையாலும் பத்தியுள்ள மன்றாட்டினாலும் அவருடைய உதவி சகாயங்களுக்குப் பாத்திரவானாகக் கடவாய். தினந்தினங் காலமே விழித்தபிற்பாடு அவரைப் பார்த்து வேண்டிக்கொள்ளத் தக்கதாவது:
எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசானவரே! இந்த இராத்திரியில் என்னாத்துமத்துக்குஞ் சரீரத்துக்குந் தேவரீர் செய்த உபகாரங்களை நான் நன்றி யறிகிறேன். இன்றைக்குத் தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையுஞ் காக்க உம்மை மன்றாடுகிறேன். ஆமென்சேசு

 இராக்காலத்தில் நித்திரை போகுமுன்னே அவரைப்பார்த்து வேண்டிக்கொள்ளத் தக்கதாவது:

எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசானவரே ! இன்றைக்குத் தேவரீர் என்னாத்துமத்துக்குஞ் சரீரத்துக்குஞ் செய்த உபகாரங்களை நான் நன்றியறிகிறேன். இந்தவிராத்திரி தேவரீர் என்னாத்துமத்தையுஞ் சரீரத்தையுங் காப்பாற்றத் தக்கதாக உம்மை மன்றாடுகிறேன். ஆமென்சேசு.

விவரம். காவலான சம்மனசின்பேரில் விசேஷ தோத்திரமறிய ஆசையுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைப் புதுமைகளை வாசிக்கவேண்டுமென்று அறியக்கடவீர்களாக.





வெள்ளி, 26 ஜனவரி, 2024

அர்ச். ரெமிஜியார் திருநாள் St. Remigius (Oct. 1)


அக்டோபர் மீ முதல் தேதி
அர்ச். ரெமிஜியார் திருநாள். St. REMI.

பிராஞ்சிராச்சியத்திலே உயர்ந்த வமிசமும் ஆஸ்தியும், மிகுந்த பிராயமுமுள்ள தாய் தகப்பனிடத்திலே அர்ச். ரெமிஜியார் பிறந்தார். அவர் வளர்ந்து நல்ல குணமாய் இருந்ததினாலேயும் அநேகம் புண்ணியங்களை அடைந்ததினாலேயும் அவரை அறிந்தவர்கள் அவர்பேரிலே பட்சமாயிருந்து அவரோடே கூடச் சஞ்சரிக்கிறதற்கு ஆசையாய் இருந்தார்கள். அவருக்கு இருபத்திரண்டு வயது நடக்கிறபோது அவரிட த்தில் விளங்கின அதிசயமான அர்ச்சியசிஷ்டத்தனமுஞ் சாஸ்திரங்களு முகாந்தரமாக றென்ஸ் என்கிற பட்டணத்தார் அந்தப் பட்டணத்துக்கு அவரை மேற்றிராணியாராகக் கேட்டித் துணிந்தார்கள். ஒரு வரை ஏற்படுத்த வந்திருந்த மேற்றிராணிமார்களும் அதற்குடன்பட்டுப் பிராயக்குறையினாலே இருந்த விக்கினத்தை விசேஷ உத்தரவினாலே நீக்கினார்கள். ரெமிஜியார் அந்தப் பட்டத்துக்கு வேண்டிய சாமர்த்தியமும் வயதூந் தம்மிடத்தில் இல்லையென்று சொல்லி அதற்குச் சம்மதிக்கமாட்டேனென்று இருக்கையிலே அந்தப் பட்டத்துக்கு அவர் பாத்திரந்தானென்கிற அடையாளமாகப் புதுமையாகப் பரமண்டலத்திலிருந்து பிரகாசமிறங்கி அவர் தலைமேலே நிற்கிறதை எல்லாருங்கண்டு அந்தப் பட்டத்திலே அவரை வைத்தார்கள். அந்தப் பட்டத்தைப்பற்றி அர்ச். ரெமிஜியார் என்கிறவர் தாம் தமது விசரரணைச் சனங்களுக்கு ஞானத்தகப்பனாராய் இருக்கிறோமென்று நினைத்து அவர்களுடைய ஆத்துமத்தையுஞ் சரீரத்தையும் பட்சமுள்ள தகப்பன்போலே குறையில்லாமல் விசாரித்து வந்தார்.

சர்வேசுரன் தமது விசாரணைக்கு ஒப்பித்த ஆத்துமாக்களின் இரட்சணியத்துக்கு அவர் அத்தியந்த சாக்கிரதையோடே மிகவும் பிரயாசைப்பட்டார். அடிக்கடி வேத வசனங்களைத் தியானித்துத் தேவ வாக்கியத்தைப் பிரசங்கித்து வருவார். அதனால் திரளான பாவிகளும் பதிதர்களும் அக்கியானிகளும் மனந்திரும்புவார்கள். அவரிடத்தில் விளங்கின அர்ச்சியசிஷ்டத்தனமும் அவர் செய்த பத்தியுள்ள செபங்களுந் தேவ வரத்தால் பண்ணின பற்பல புதுமைகளும் அவருடைய தாழ்ச்சி சாந்த குண முதலிய புண்ணியங்களும் மனுஷர்களைச் சத்திய வேதத்துக்குத் தேவ ஊழியத்துக்கும் உட்படுத்த மிகவும் உதவியாயிற்று. ஆகையால் அவர் பிராஞ்சுக்காரர்களுடைய அப்போஸ்தலராவதற்கு பாத்திரமானார். ஏறக்குறைய 50 வருஷந் துவக்கிக் கலியா தேசம் உரோமை இராயர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தது, மாவர்களின் ஆளுகையில் அதிலே கிறீஸ்துவே தம் விஸ்தாரமாய்ப் பாம்பியும் விளங்கியுமிருந்தது.

அப்படியிருக்க பிரெஞ்சுக்காரர் வடகீழ்த்திசையினின்று புறப்பட்டு வந்து அத்தேசத்தில் ஒரு பெரும் பங்கு தங்கள் வசமாக்கிக்கொண்டு அத்தேசத்தார்களோடே கலந்திருந்தார்கள். அக்காலத்தில் அவர்களை ஆண்டிருந்த க்ளோவீஸ் என்கிற இராசா தன் சனங்களோடே இன்னம் அக்கியானியாய் இருந்ததால் க்ளோத்தீல்தென்னும் பத்தியுள்ள கிறீஸ்துவளை விவாகஞ்செய்து அவளுடைய நல்ல புத்தியைக் கேட்டுச் சத்தியவேதக் கோவில்களின்பேரிலும் மேற்றிராணியார்களின் பேரிலும் விசேஷமாய் அர்ச். ரெமிஜியார் பேரிலுந் தயவாயிருந்தான். அப்படியிருக்க ஜெர்மனி தேசத்தினின்று ஓர் பெரும்படை பிராஞ்சு இராச்சியத்தின் மீது போர் தொடுத்ததினால் க்ளோவீஸ் இராசா தன் சேனைகளோடே அவர்களை எதிர்க்கப் போய்ச் சண்டை தொடுத்தான். அதிலே அவன் பாரிசமாயிருந்த ஓர் சிற்றரசன் காயம்பட்டதினால் அவனுடைய சேனை கலங்கி பயந்தோடவே இராசாவின் படையும் பயப்படத்துடங்கிற்று.

அப்போது க்ளோவீஸ் என்கிற இராசா கண்ணீர் நிறைந்த நேத் நிரத்தோடே வானத்தை நோக்கிக் க்ளோத்தீல் தென்பவளால் சுயஞ்சீவியரான கடவுளின் சுதனாக நிச்சயிக்கப்பட்டிருக்கிற சேசுகிறீஸ்துவே உம்மை நம்பிக் கேட்கிறவர்களுக்குச் செயங்கொடுக்கிறவராகச் சொல்லப்பட்டிருக்கிறீரே, உமது உதவியை கேட்கிறேன் ; நான் உமது உதவியை இரந்து கேட்கிறேன். என் சத்துருக்களை வென்று செபசீலனாகும்படிச் செய்வீராகில் உம்மில் விசுவாச நம்பிக்கை வைத்து உமதுபேரால் ஞானஸ்நானம் பெறுவேன்; என் தேவர்களை வியர்த்தமாய் மன்றாடி 
வேனென்றான். இந்த மன்றாட்டைச் சொன்ன மாத்திரத்தில் தெய்வச் செயலால் செயமானது பிசாஞ்சுக்காரருடைய பாரிசமாய்த் திரும்பிற்று.

இராசா தான் கொடுத்த வார்த்தைப்பாட்டின் படி கிறீஸ்துவனாகத் தீர்மானித்து காதறவுத்தார்களுக்குப் புத்திசொல்லி அவர்களையும் அதற்கு உடன்படுத்தினான். அர்ச். ரெமிஜியார் அநேகங் குருக்களோடே கூட அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் போதித்து ஞானஸ்நானத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார். அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கப்போகிற சமயத்தில் அவர்களுக்கு உத்தம பிரசங்கஞ் செய்கிறபோது அவருடைய முகம் அதிசயமான பிரகாசத்தால் விளங்கவே இனி பிராஞ்சு இராசாக்களுக்கிருக்கும் மகிமை வல்லமையைத் தீர்க்கத்தரிசனமாய் அறிவித்தார்.
 இராசாவோடே அவருடைய சகோதரிகள் இருவரும் மூவாயிரம் பிரபுக்கள் முதலிய துரைகளுந் திரளான இராணுவத்தாரும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அர்ச். ரெமிஜியார் இராசாவுக்கு ஞானஸ்நானங் கொடுக்கப்போகிற நேரத்தில் அவனை நோக்கிக் கர்வமுள்ள சிக்காம்பர் சனத்தானே தலை குனிந்து சாந்தகுணத்தைப் பற்றிக்கொள். நீ வணங்கினதைச் சுட்டெரித்து முந்திச் சுட்டெரித்ததை வணங்கென்றார். அச்சமயத்தில் அர்ச். தைலங் கொண்டுவரவிருந்த தேவ ஊழியன் சன நெருக்கத்தைப்பற்றி சேரக்கூடாமற் போனதினால் அர்ச்சியசிஷ்டவர் வானத்தை நோக்கி மன்றாடினார். உடனே அதிசயமான வெண்மையுள்ள ஓர் புறாவானது வானத்தினின்றுவந்து தன் மூக்கினால் கவ்வியிருந்த தெய்வ தைலம் நிறைந்த ஓர்குப்பியை அர்ச். ரெமிஜியார் கையிற்
கொடுத்தது. அத்தைலம் இராசாவின் ஞானஸ்நானத்துக்கும் அவருக்குப் பண்ணின இராச பட்டாபிஷேகத்துக்கும் உதவினது. பின்னும் அந்நாள் வரைக்கும் பிராஞ்சு இராசாக்களின் பட்டாபிஷேகத்துக்கு அனவே வழங்கிவந்தது. ஞானஸ்தானம் பெற்ற பின்பு க்னோவீஸ் இராசா அர்ச், ரெமிஜியாரை மிகவும் வணங்கி அவருக்குங் கோவில்களுக்கும் அநேக மானிய முதலான நன்மை உதவிகளைக் செய்து வந்தார். பின்னையும் அர்ச். ரெமிஜியார் பட்ட பிரயாசத்தினாலும் அவர் செய்த அற்புதங்களினாலுங் காட்டின உத்தம புண்ணிய மாதிரிகைகளினாலுஞ் சத்தியவேதஞ் சீக்கிரத்தில் பிராஞ்சுக்காரர்களுக்குள்ளே பரம்பிற்று. தாங்களும் அர்ச்சியசிஷ்டர்கள் ளான அவருடைய சீஷர்களில் அநேகர் அவர்களைச் சத்தியவேதத்துக்குட்படுத்த அவருக்கு மிகவும் உதவியாய் இருந்தார்கள். அவர்களிற் சிலரை அவர் சில பட்டணங்களில் மேற்றிராணிமார்களாக ஏற்படுத்தினார்.

அவர் இருந்த பட்டணத்தில் ஒரு சமயத்தில் பற்றின நெருப்பினால் வெகு சேதமாகிறதை அறிந்து அங்கே போய் அந்த அக்கினிமேலே அர்ச்சியசிஷ்ட சிலுவையை வரைந்தார். அப்போது அந்த நெருப்பெல்லாம் உருண்டையாய்ச் சேர்ந்து அப்புறம் போகிறதை அவர் கண்டு பிறகேபோனார். மறுபடியும் அது அப்பாலே போயிற்று. பின்னும் அவர் அதைத் துரத்துகிறாப்போலே கூடவே போ னதினாலே அது பட்டணத்துக்குப் புறத்தியிலே போயிற்று. இதுவுந்தவிர வரப்போகிற பஞ்சத்தை அவர் ஆண்டவரால் அறியப்பட்டு அந்தப் பஞ்சத்தில் பிச்சைக்காரர் பிழைக்கத்தக்கதாக வெகு தானியங்களை விலைக்கு வாங்கிப் பத்திரமாய்க் கட்டிவைத்தார் சிலபேர்கள் அதைக்கண்டு அவர் இனிமேல் அதை விற்று ஆதாய்மெடுக்கிற முகாந்தரமாகத் தானியம் வாங்கிக் கட்டுகிறாரென்று நினைத்து அவர்பேரில் புறணியாகிற வெகு புறணி பேசிக்கொண்டார்கள்.

அந்தப் பாவமுகாந்தரமாகச் சர்வேசுரன் அவர்களுக்கு ஆக்கினையாகக் கனமான வியாதியைக் கொடுத்ததுமல்லாமல் அவர்களுடைய பிள்ளைகளும் பேரன்மாரும் அந்த வியாதியோடு பிறந்தார்கள். அர்ச். ரெமிஜியார் தொண்ணூற்றாறு பிராயம் வரைக்குஞ் சுறுசுறுப்போடு புண்ணியங்களைச் செய்து கடைசியாய் மோக்ஷத்தில் அளவில்லாத பலனை அடையத் தக்கதாகக் காலம்பண்ணினார்.

கிறீஸ்துவர்களே! இராசாவானவன் சர்க்கரை அளிக்கிற சமயத்தில் அநேகம் பேர்கள் அதை ஆசையோடு வாங் குவார்கள். அதைவிட அர்ச். ரெமிஜியாரிடத்திலுண்டான ஞானச் சர்க்கரையாகிற புண்ணியங்களை நீங்கள் ஆசையோடு கைக்கொள்ளவேண்டும். அவரிடத்தில் நல்ல குணமிருந்ததினாலே அநேகம் பேர்கள் அவர்பேரிலே பட்சம்வைத்து அவரிடத்தில் சஞ்சரிக்கத் தேடிக்கொள்ளுவார்களென்று கேட்டீர்களே. தாமரைப்புஷ்பத்திலிருக்கிற தேனைக் குடிக்க அன்னமானது காத்திருக்கிறாப்போல் தேன்போலேயிருக்கிற நல்ல குணமுகாந்தரமாக அதையுடையவனிடத் தில் அநேகம்பேர் காத்திருப்பார்கள். பிரேதத்தைக் கண்டவர்களோவெனில் தூரமாய்ப் போகிறாப்போல் ஆகாத குணமுள்ளவர்களைக் கண்டவர்கள் ஓடிப்போவார்கள். ஆகையால் நீங்கள் நற்குணத்தால் வருகிற நன்மையைக் கைக்கொண்டு துர்க்குணத்தால் விளைகிற பொல்லாப்பைத் தள்ளத்தக்கதாக ஆகாதகுணத்தை மாற்றிவிட்டு அர்ச். ரெமி ஜியாரைப்போலே நல்ல குணத்தை அடையவேண்டும். பின்னையும் இந்த அர்ச்சியசிஷ்டர் முன் சொல்லப்பட்ட இராசாவிடத்திற்போய்ச் சத்தியவேதத்தைப் போதித்து அவனுக்குப் புத்திசொல்லுமிடத்தில் அவன் இதற்கு இடங்கொடுத்து நல்ல ஆயத்தத்தோடு ஞானஸ்நானம் பெற்றதினால் தேவகிருபையடைந்து பலத்த இராச்சியத்துக்கு அஸ்திவாரமானான். இக்காலத்தில் அக்கியானிகளுக்கு விசேஷமாய் மகிமை பெருமை பெற்றவர்களுக்கு மெய்யான சர்வேசுரனுடைய வேதங் கேட்கக் குருவானவர் புத்திசொல்லுமிடத்தில் சிலர் சொல்லுகிறதாவது: எங்கள் கிட்டின உறவின்முரையார் தேவர்களைக் கும்பிடவேண்டுமென்று சொன்ன புத்தியை நாங்கள் தள்ளித் தூர தேசத்தாராயிருக்கிற நீர் சொல்லூகிற புத்தியை நாங்கள் கேட்போமோ வென்பார்கள். அதற்கு காஞ்சொல்லுகிற மறுவுத்தாரமாவது: நீங்கள் வியாதியாயிருக்கிறபோது உங்களுடைய கிட்டின உறவின் முறையார் வழியாக அடையக்கூடாத ஆரோக்கியத்தைத் தூரத்திலிருந்துவந்த நல்ல வயித்தியனிடத்தில் ஆசையோடு தேடி அடைவீர்களே.

அந்தப்பிரகாரமாய் உங்களுடைய ஆத்தமங்களுக்குள்ள அக்கியான மென்கிற வியாதி சத்தியவேதக் குருவாகிற ஞான வயித்தியன் வழியாய் நீங்கிப் போவதேயல்லாமல் உங்களுடைய உறவின்முறையாராகிற அக்கியானிகளாலே நீங்காது, மேலும் நீங்கள் சாகும் போது உங்கள் உறவின்முறையார் உங்களுக்கு மோட்சங் கொடுப்பார்களோ? அவர்களால் ஆகாது. மெய்யான சர்வேசுரன் அதைத் தம்மைச் சேவித்தவர்களுக்குக் கொடுப்பார். ஆகையால் மோட்சத்தையடைய அகத்தியமாய் அவரைச் சேவிக்கவேண்டும். பின்னேயும் அர்ச். ரெமிஜியார் பேரில் புறணிசொன்னவர்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்ட ஆக்கினையாகக் கனமான வியாதி வந்ததென்று கேட்டீர்களே. நீங்கள் உங்கள் ஆத்துமத்துக்குஞ் சரீரத்துக்கும் ஆக்கினை வராதபடிக்குப் புரணியாகிற பாவத்துக்குப் பயந்து விலகவேண்டும். அர்ச். ரெமிஜியாரென்கிறவர் தானியத்தைத் தரும கருத்தோடு வாங்கிக் கட்டினாலுந் துர்க்குண முள்ளவர்கள் அவர்பேரில் புறணி பேசினார்கள். அப்படி பொல்லாதவர்கள் மற்றவர்கள் தங்கள் குணத்தை அநுசரிக்கிறதாக நினைப்பார்கள்.

கள்ளன், ஒருவன் எங்கேயாவது போகிறதைக் கண்டு அவன் களவுக்குப் போகிறானென்று 
நினைப்பான். மோகபாவத்தில் பழகினவன், ஒருவன் ஒரு வீட்டுக்குப் போகிறதைக்கண்டு மோகபாவத்தைக் கட்டிக் கொள்ள அவன் அங்கே போகிறானென்று நினைப்பான். நீங்கள் அந்தந்தப் பாவத்தில் பழகாகிருந்தால் அவரவர் செய்கிற பாவமில்லாத கிரியைகளை நீங்கள் காண்கிறபோது அவர்கள் அவைகளைத் தரும கருத்தோடு செய்கிறார்களென்று உங்களுடைய நல்ல மனதில் நினைப்பதேயல்லாமல் பாவமுள்ள கருத்தோடு செய்கிறார்களென்று நினைக்கமாட்டீர்களென்று அறியக்கடவீர்களாக.

புதன், 24 ஜனவரி, 2024

தேவதிரவிய அனுமானங்கள் III - Extreme Unction (Part 1)

 அவஸ்தைப்பூசுதல்


 நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி. 1941

ற்ற தேவதிரவிய அநுமானங்களைப் போலவே, அவஸ்தை  பூசுதலும் நமது திவ்விய இரட்சகரால் ஏற்படுத்தப்பட்டது தான்; ஆனால், சுவிசேஷங்களில் அதைப் பற்றி விபரம் ஒன்றுமில்லை என்பது உண்மை. ஆயினும், அர்ச். இயாகப்பருடைய நிருபத்தில் இது தெளிவாய் கூறப்பட்டிருக்கிறது. அவர் சொல்வதாவது: "உங்களில் யாதொருவன் வியாதியாயிருக் கிறானோ. அவன் சபையின் குருக்கனை வரவழைப்பானாக, அவர்கள் ஆண்டவரு டைய நாமத்தினாலே, அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணுவார்கள். அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார் அன்றியும் அவன் பாவங்களோ டிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும்" (இயாக. 3:14-15).

குருவானவரை அழைத்தல்

1. வியாதிக்காரன் வைத்தியரால் கைவிடப்படும் வரையில் காத்திராதே. இன்னும், பேச்சு மூச்சின்றிக் கிடக்கு வரையில் காத்திருப்பது பெருந்தவறு.

2. வியாதிக்காரன் புத்தித் தெளிவோடு இருக்கும் போதே குருவானவரை அழைக்கும்படி அவனது உறவினர்கள் முயற்சிக்க வேண்டும்.

3. குருவானவரை அழைப்புதற்கு. சிறு பிள்ளைகளையாவது, வீரம் சொல்லத் தெரியாதவர்களையாவது அனுப்ப கூடாது. வியாதிக்காரனுடைய இருப்பிடம், வியாதியின் தன்மை. இவைகளைப்பற்றிய விபரங்களும், திவ்விய நற்கருணை உட்கொள்ளக்கூடுமா, அன்னபானம் உள்ளே செல்கிறதா, வாத்தி அல்லது இடைவிடாத இருமல் உண்டா என்னும் கேள்விகளுக்குச் சரியான பதிலும் சொல்லத் தெரிந்த்த ஆளை அனுப்பவேண்டும்.

4. குருவானவரை அழைப்பதில் தாமதிக்கக் கூடாது என்பது சரி, ஆனால், அநாவசியமாய் அல்லது காத்திருக்கக் கூடியபோது, இராத்திரியில் அழைப்பது சரியன்று.


திவ்விய நற்கருணை கொடுப்பது

1. குருவானவரை அழைக்குமுன், பின் வருங் காரியங்களைக் கவனித்துத் திட்ட மிட்டுக் கொள்ள வேண்டும்.

(1) ஒரு சிறு மேசையும், அதன்மேல் ஓர் வெள்ளைத் துணியும் விரித்து வைக்கவும்.

(2) மேசையின்மேல், ஒரு பாடுபட்ட சுரூபமும், இரண்டு மெழுகுவர்த்திகளும் (மந்திரித்தவைகள்) ஓர் சிறு பாத்திரத்தில் தண்ணிரும் இருக்கவேண்டும். இந்தத் தண்ணிர் குருவானவர் நற்கருணை கொடுத்தபின், தமது விரல் நுனியில் ஓட்டிலிருக்கக்கூடிய நற்கருணை துகள்களைக் கழுவி, வியாதி யுற்றவருக்குக் கொடுப்பதற்காக; ஆகையால். இந்தத் தண்ணீர் அடங்கிய பாத்திரம் வெகு சிறிதாயிருக்க வேண்டும்.  

(3) குருவானவர் கடைசியில் தமது கரங்களைக் கழுவிக் துடைப்பதற்காக வேறொரு பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு துவாலையும் வைத்திருப்பது நல்லது.

(4) வியாதியுற்றிருப்பவரின் முகம், சுரங்கள், பாதங்களை கழுவிச் சுத்தமாய் வைத்துக்கொள்ள வேண்டும்

2. மேற்கூறியவைகளைத் தயாராக வைத்துக்கொண்டு. குருவானவருண ய வருகையை எதிப்பார்த்திருக்கவும்.

3. குருவானவர் வருகிறாரென்று அறிந்தவுடன், எதிர் கொண்டுபோய். அவரை அறைக்குள் அழைத்துச் செல்லவும்.

4. அவர் பிரவேசித்ததும், அங்குள்ள அனைவரும். திவ்விய நற்கருணைக்கு ஆராதனையாக முழத்தாளிலிருக்க வேண்டும்.

5. குருவானவரை அழைத்தாயிற்று. கடமை முடித்து போயிற்று என்றாற்போல், அவர் வந்ததும் வீட்டிலுள்ளவர்கள் வழக்கம் போல் தங்கள் வேவைகளைக் கவனித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பது திவ்விய நற்கருணைக்கு அவசங்கையும், அநாச்சாரமும், தகுதியற்ற செயலுமாகும்.

6. வியாதியுற்றவர் அருகிலிருந்து, சமயத்திற்கு ஏற்ற உதவிபுரிந்து, அவருக்காக வேண்டிக்கொள்வதே தகுதியானது.

7. குருவானவர் வீட்டிற்குள் பிரவேசிக்கையில், "இந்த வீட்டிற்கும் இதில் வசிக்கிறவர்களெல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக" என்று சொல்கிறார். உடனே. "ஆண்டவரே, என்னை ஈசோப் என்கிற புல்லினால் தெளிப்பீர், நானும் சுத்தமாவேன் : என்னைக் கழுவுவீர், நானும் பணிக்கட்டி யிலூம்  வெண்மையாவேன்" என்னும் சங்கீத வசனங்கனைக் கூறிக்கொண்டு, வியாதியுற்றவர் மேலும், அறையையும், அங்கு இருக்கிற மற்றவர்கள் மேலும் தீர்த்தத்தைத் தெளிப்பார்.

8. பிறகு, வியாதியற்றவர் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டியிருந்தால். அவர் அதை செய்துமுடிக்கிறவரையில், மற்றவர்கள் அறையைவிட்டு அகன்றுபோய், பாவமன்னிப்பு அளித்தபின்னர், திரும்பிவந்து முழத்தாளிலிருப்பார்கள்.

9. அப்போது, இலத்தீனில் அல்லது தமிழில் பாவசங்தீர்த்தன மந்திரம் சொல்லவேண்டும். அதற்குப்பின் திவ்விய நற்கருணை கொடுக்கப்படும்.

10. திவ்விய நற்கருணை கொடுப்பதற்காக மாத்திரம் குருவானவர் வந்திருந்தால், அவர் வீட்டிலிருந்து திரும்பிப் போகுமுன், திவ்விய நற்கருணைச் சிமிளைக்கொண்டு ஆசீர்வதிக்கிறாராவென்று கவனிக்கவும்: அவ்விதம் செய்வாராகில், இன்னும் திவ்விய நற்கருணை அவரது கரங்களில் இருக்கிறதென்று அறித்து. அவர் போகும்வரையில் அதற்கு ஆராதனை செய்யவும்.

11. இல்லாவிடில், வியாதியுற்றவர் அருகிலிருந்து. அவரது உள்ளத்தில் இப்போது வீற்றிருக்கும் ஆண்டவருக்கு அவர் நன்றி செலுத்துவதற்கு உதவிபுரியுமாறு, திவ்விய நற்கருணை உட்கொண்டபின் சொல்லத்தகும் முயற்சிகளை வாசிப்பாயாக.

திவ்விய நற்கருணை (அவஸ்தை நன்மை) கொடுத்த பின், இந்தத் தேவதிரவிய அநுமானமாகிய அவஸ்தைபூசுதல் கொடுப்பது வழக்கம்; வியாதியுற்றவர் திவ்விய நற்கருணை கொள்ளக்கூடாதாகில் முத்தின 7-வது பிரிவில் கூறியுள்ள பிரகாரம் செய்தானவுடன், அவஸ்தைபூகதல் கொடுக்கப்படும்.

அவஸ்தைப்பூசுதல் யாருக்கு கொடுக்கக் கூடாது?

1. ஞானஸ்தானம் பெறாதவர்களுக்கும்:

2. திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்களுக்கும்; உதாரணமாக: பதிதர், பிரிவினைக்காரர், திருச்சபையால் சபிக்கப்பட்டவர்கள் முதலியவர்கள்,

3. புத்திவிபரம் அறியாத குழத்தைகளுக்கும்;

4. பிறந்த நாள் துவக்கி எப்போதும் பைத்தியம் பிடித்து இருப்பவர்களுக்கும்:

5. தங்கள் பாவங்களுக்குக் கஸ்தியும், மனஸ்தாபமும் இல்லாதவர்களுக்கும்: இப்படியே புறத்தியாருடைய சொத்துக்காவது, நல்ல பேருக்காவது வருவித்த நஷ்டத்துக்கும் பரிகாரம் செய்யக் கூடுமாயிருத்தும். அதைச் செய்ய மனது இல்லாதவர்களும், பகை வர்மமாயிருந்து, தங்கள் எதிராளிகளோடு சமாதானமாய்ப் போக சம்மதியாதவர்களும்.

6 பாவ அந்தஸ்தில் பகிரங்கமாய் ஜீவிப்பவர்களுக்கும்; உதாரணமாக: திருச்சபைக் கலியாணம் பண்ணாமல் தனக்கு மனைவியாக ஏற்றுக்கொண்ட வைப்பாட்டியை அகற்றிப் புறம்பாக்க மனமில்லாதவர்கள்.

மேற்கூறப்பட்டவர்களுக்கு அவஸ்தை பூசுதல் கொடுக்கக் கூடாது. இது திருச்சபைக் கட்டளை.




செவ்வாய், 23 ஜனவரி, 2024

அர்ச்சியசிஷ்டவர் அர்ச். கிறகோரியார் திருநாள். ST. GRÉGOIRE LE GRAND.

மார்ச் மாதம் 12-ந் தேதி.
 வேதபாரகரும் பாப்புவுமான அர்ச். கிறகோரியார் திருநாள்.
ST. GRÉGOIRE LE GRAND.


மிகப் பெயர்பெற்ற அர்ச். கிறகோரியார் ரோமாபுரியில் உயர்ந்த கோத்திரமுள்ள தாய் தகப்பனிடத்திலே பிறந்தார். அவர் சிறுவயதிலேயே கல்வி சாஸ்திரங்களைப் படித்து புண்ணிய வழியிலே சுறுசுறுப்போடு நடந்ததால் புண்ணியத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். 34-ம் வயதில் இராயனால்  ரோமாபுரிக்கு முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆயினும் அந்த மேலான பட்டத்தின் மகிமையைவிட பத்திக் கிருத்தியங்களை விரும்பி அனுசரிப்பார். அவருடைய தகப்பன் காலஞ் சென்ற பிறகு அவர் உலகத்தை வெறுத்துச் சந்நியாசியாய் சிசிலியென்னும் திவிலே ஆறு சந்நியாச மடமும் ரோமைப் பட்டணத்தில் தமது மாளிகையில் மற்றோர் பெரிய மடமுங் கட்டி அவைகளுக்கு வேண்டிய செலவுக்குத் தக்க காணியாட்சிகளை ஏற்படுத்தி வைத்தார். அவருடைய நடக்கை எப்போதும் புண்ணிய மாதிரிகையாய் இருந்தபடியினால் அவர் சந்நியாசியான பின்பு குருப்பட்டம் வாங்கிக் கொஞ்சத்திற்குள்ளே சிரேஷ்டர் பட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டார். ஆங்கில மக்கள் இன்னும் அறியாமையில் அமிழ்ந்திருக்கிறதை அறிந்து, அர்ச் பாப்பாண்டவருடைய உத்தரவு பெற்று அவர்களுக்குச் சத்திய வேதத்தைப் பிரசங்கிக்கப் போவதற்குப் பயணப்பட்டார். ஆனால் அவர் போவது தங்களுக்கு பெரிய கஷ்டமென்று ரோமையர் மிகவும் முறையிட்டு அர்ச். பாப்பாண்டவரிடத்தில் விண்ணப்பஞ் செய்ததினால் இவர் அவரை அனுப்பாமல் நிறுத்திட்டார்.

பிறகு அவரிடத்தில் விளங்கின ஆச்சரியமான கல்வி சாஸ்திரமும் பத்தியும் முகாந்தரமாக அர்ச், பாப்பரசர் அவருக்குக் கர்தினாலென்னும் மகிமையுள்ள பட்டம் கொடுத்து அவரைக் கொன்ஸ்தாண்டி னோப்பொலி இராயனிடத்தில் தமது ஸ்தானாபதியாக அனுப்பினார், கிறகோரியார் அவ்விடத்திலிருந்த போது அந்தப் பட்டணத்தின் அதிமேற்றிராணியாராகிய எவுதிக்கியுஸ் என்பவர் சரீர உத்தானத்தை விசுவசிப்பதற்கு விரோதமாய் ஒரு புத்தகத்தை இயற்றினார் என்றறிந்து இராயனிடத்திலும் எவுசிக்கியுஸென்பவர் இடத்திலும் சொன்ன பலத்த நியாயங்களினாலே சரீர உத்தான மென்னும் சத்தியத்தை மெய்ப்பித்தார். ஆதலால் இராயன் முன் சொல்லப்பட்ட புத்தகத்தை கொளுத்திவிட்டதுமின்றி எவுதிக்கியு ஸென்கிறவர் மனது திரும்பிச் சாகிற சமயத்திலே அநேகம் பேர்கள் முன்பாகத் தம்முடைய கையின் தோலைப் பிடித்துக் காண்பித்து இந்த சரீரத்தோடே நடுத்தீர்க்கிற காலத்திலே நாம் உயிர்த்தெழுந்திருப் போமென்று உறுதியாய் விசுவசிக்கிறேன் என்றார்.

 அர்ச். கிறகோரியார் தமது ஸ்தானாபதி அலுவல்களை அனுகூலமாய்த் தீர்த்து ரோமாபுரியிலே வந்த அக்காலத்திலிருந்த பெலாஜெ அர்ச் பாப்பாண்டவர் மரணத்தை அடைந்த பிறகு அவருக்குப் பதிலாய் அந்த மேலான பட்டத்திற்கு ஒருமனமாய் நியமிக்கப்பட்டார். அந்தச் சேதியை அர்ச். கிறகோரியார் அறிந்து அந்தப் பெரிய மகிமையுள்ள பட்டந் தமக்கு வராதபடிக்குப் பற்பல முயற்சி செய்தார். அவைகள் வியர்த்தமாய்ப் போகிறதைக் கண்டு தமது வழக்கமான உடைகளை விட்டு வேஷம் மாறிக் காட்டிலே போய் ஒரு குகைக்குள்ளே ஒளிந்திருந்தார். ஆனால் அவரிருந்த ஸ்தலத்திற்கு மேலே பிரகாசமுள்ள ஒரு ஒளித் தூண் புதுமையாகத் தோன்றிற்று. அவரைத் தேடுகிறவர்கள் அதை கண்டு அங்கே போய் அவரைக் கண்டவுடனே வெகு சந்தோஷப் பட்டு அவரை மிக மகிமையோடு ரோமாபுரிக்குக் கூட்டிக்கொண்டுபோய் அர்ச். பாப்புவின் பட்டத்திலே வைத்தார்கள்.

 அந்தப் பட்டத்தில் அவர் இருந்த போது மிக மகத்தான பல காரியங்களை நிறைவேற்றினார். அவர் தினந்தோறும் பரதேசிகளுக்குச் சாப்பாடு கொடுத்துவந்த தருமஞ் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியப்பட்டதினால் சம்மனசுகளுஞ் சம்மனசுகளுடைய ஆண்டவராகிய சேசுநாதரும் பரதேசிகள் ரூபமாக வந்து அந்தப் பத்தியிலே சாப்பிட்டார்கள். அநேகம் பிச்சைக்காரருக்கும் உதவியில்லாத மற்ற அநேகம் பேர்களுக்கும் அவர் அன்னவஸ்திரங் கொடுப்பார்.

பற்பல இராச்சியத்து மக்களையும், பதிதர்களையும், பிரிவினைக்காரரையுஞ் சத்தியவேத நெறியில் திருப்பினார். சில விடங்களிலிருந்து மூர்க்கமான பதிதரைத் துரத்தினார். இவர் இங்கிலாந்துக்கு அநேக குருக்களை அனுப்பி, அவர்கள் வழியாக அதிலே சர்வேசுரனுடைய வேதத்தைப் போதிப்பித்தார். அவர் வியாதியினாலே மெலிந்து எப்போதுஞ் சரீரத்திலே பலவீனமா யிருந்தாலும் அவர் குறையின்றி அர்ச். பாப்புவின் பட்டத்திற்கு வேண்டிய பிரயாசையெல்லாம் பட்டுத் திருச்சபையின் ஆளுகைக்குரிய பற்பல பெரிதான காரியங்களை நிறைவேற்றினதுந் தவிர, உத்தமமான அநேக ஞான புத்தகங்களையும் இயற்றினார். அந்தப் புஸ்தகங்களை அவர் இயற்றுகிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் வெள்ளை மாடப் புறா ரூபமாக அவர் தலைமேலே இறங்கினதை ஒரு மகாத்துமாவான இராயப்பர் என்கிறவர் அநேக முறை கண்டார். அவர் காலத்திலே ரோமாபுரிக்கு வந்த கொள்ளை நோய் முகாந்தரமாக வெகு பேர் இறந்ததைப் பாப்புவாகிய அர்ச். கிறகோரியார் கண்டு அந்தப் பொல்லாப்பு நீங்குமாறு அவர் தேவ மாதாவின் அடைக்கலமாய்ப் போய் அந்த ஆண்டவளை மிகச் சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்ட பிறகு அர்ச். லூக்கா சுவிசேஷகர் தமது கையால் வரைந்த தேவமாதாவின் படத்தைப் பகிரங்கமாகப் பட்டணத்திலே கொண்டுபோகச் செய்தார். அதை அப்படிக் கொண்டுபோகிறபோது அந்தத் திருப்படம் போகிற அந்தந்தத் தெரு வீதியிலே புதுமையாக உடனே அந்த வியாதி நீங்கிப்போயிற்று . இதல்லாமல் அத்திருப்படம் பவனி வருகிறபோது ஓர் கோபு சத்தின்மேல் வானத்திலே ஒரு சம்மனசு இரத்தந் துவைக்கப்பட்ட கத்தியைச் சுத்தம்பண்ணி உலையில் போடுகிறதை அர்ச். கிறகோரியார் கண்டு பாவத்தால் வந்த கொள்ளை  நோயாகிற ஆக்கினை தேவமாதாவின் உதவியினாலே முடிந்ததற்கு இது அடையாளமென்று கண்டுபிடித்து மிகுந்த சந்தோஷப்பட்டார்.

 மேலுந் தேவமாதாவின் திருப் படத்தைச் சுற்றி சம்மனசுகள் பாடின இன்பமான பாடலைக் கேட்டு வெகு ஆனந்தத்தை அடைந்தார். அவர் தேவமாதாவுடைய வியாகுலங்களின் பேரிலே வைத்த பத்தி முகாந்தரமாக அந்த வியாகுலங்களின் தோத்திரமாக அநேக மந்திரங்களை இயற்றினதுமன்றி அவைகளை அவர் அடிக்கடி அழுகையோடே சொல்லுவார். அத்தகைய ஆண்டவள் உதவியினாலே அர்ச். கிறகோரியார் பண்ணின ஆச்சரியமான நன்மைகளும் புதுமைகளும் புண்ணியங்களும் முகாந்தரமாகப் பெரிய கிறகோரியார் என்னும் பெயரை அடைந்தார்.

ஆயினும் மிகுந்த தாழ்ச்சியினாலே அவர் தம்மைச் சர்வேசுரனுடைய ஊழியர்களின் ஊழியனென்று சொல்லுவார். அவர் அரச். பாப்பு பட்டத்திலே பதிமூன்று வருஷமும் ஆறு மாதமும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த அறு நூற்று நான்காம் வருடத்திலே இந்தத் தேதியிலே பெரிய அர்ச்சியசிஷ்டவராய் மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். கிறகோரியார் தேவமாதாவின் பேரிலே மிகப்பத்தி வைத்ததினாலே இப்போது சொன்ன பிரகாரத்திற்கு அவர் அநேக நன்மைகளை கைக்கொண்டார். அப்படியே நீங்களும் அந்த ஆண்டவள் பேரிலே மிகுந்த பத்தி நம்பிக்கை வைத்து உங்கள் அவசரத்திற்கு தக்கபடி மிக விசுவாச நம்பிக்கையோடே அவளை மன்றாடவேண்டும். அர்ச். கிறகோரியாரைப்போல தேவமாதாவின் வியாகுலங்களைக் குறித்து நீங்கள் புண்ணியங்களைப் பண்ணினால் அவர் அதினால் அநேக நன்மைகளை அடைந்ததுபோல் நீங்களும் நன்மைகளை அடைவீர்கள் இந்த அர்ச்சியசிஷ்டவருடைய தாழ்ச்சியைப் பாருங்கள். அர்ச். பாப்பு பட்டத்திற்கு வெகு மகிமை உண்டாயிருந்தாலும் அந்த மகிமை தமக்கு வராத படிக்கு மிகப் பெயர்பெற்ற அர்ச். கிறகோரியார் வெகு பிரயாசைப்பட்டார்.

 உலக மகிமையின் பேரில் ஆசைப்படுகிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் புண்ணியத்திலுந் தருமத்திலும் பிரியப்படுகிற சேசுநாதர் தம்மைக் குறித்து அர்ச். கிறகோரியார் பரதேசிகளுக்குப் போசனங் கொடுத்த புண்ணியந் தமக்கெவ்வளவோ பிரியமாயிருக்கிறதென காண்பிக்க தாமும் சம்மனசுகளும் பரதேசி ரூபமாகப் பந்தியில் வந்திருக்கச் சித்தமானார். அத்தகைய புண்ணியத்தை நீங்களும் நிறைவேற்றினால் அதின் வழியாகக் கர்த்தருக்கு சந்தோஷமும் உங்களுக்கு வெகு பலனும் உண்டாகும்.

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள் (STE. CATHERINE DE BOLOGNE.)

மார்ச் மாதம் 11-ந் தேதி.
பொலொஞா பட்டணத்து அர்ச். கத்தரீனம்மாள்
STE. CATHERINE DE BOLOGNE.


பிறப்பு :  8 September 1413
இடம்    :  Bologna, Italy
இறப்பு :  9 March 1463 (aged 49)
இடம்     :  Bologna, Italy

Beatified
1524, Old St. Peter's Basilica by Pope Clement VII

Canonized
22 May 1712, St. Peter's Basilica by Pope Clement XI

Feast
9 March
இத்தாலி இராச்சியத்தில் பொலொஞா என்னும் பட்டணத்திலே உயர்ந்த கோத்திரத்தில் நல்ல கிறீஸ்துவர்களாகிய தாய் தகப்பனிடம் அர்ச். கத்தரீனம்மாள் பிறந்தாள். அச்சமயத்தில் தூரமான பட்டணத்திலிருந்த அவளுடைய தகப்பனாருக்குத் தேவமாதா தரிசனையாகி, அன்று அவனுக்குப் பிறக்கும் மகள் திருச்சபைக்குப் பிரகாசமாயிருப்பாளென்று அவனுக்கு அறிவித்தாள். தாய் தகப்பன் சொன்ன புத்தியை கேட்டுக் கத்தரீனம்மாள் சிறுவயது துவக்கிப் புத்திச் சுறுசுறுப்போடே புண்ணிய வழியிலே நடந்தாள். புத்தி விவரம் அறிந்த மாத்திரத்தில் அவள் பெற்றோர் பிரபுவின் மனைவியிடம் வளர வைக்கப்பட்டாள். ஆனால் அவளுக்கு ஒன்பது வயதானபோது அரண்மனையின் மகிமை வாழ்வையும் உலகத்தையும் வெறுத்துச் சில பக்தப் பெண்களோடு கன்னியாகத் தன்னைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தாள். பின்னும் அர்ச். கிளாரம்மாள் கன்னியாஸ்திரி சபையில் உட்பட்டாள். அதிலே பத்தி, தேவசிநேகம், பிறசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலான புண்ணியங்களால் உச்சிதமான விதமாய் விளங்கினாள். எல்லாருக்கும் ஊழியம் பண்ணத் தேடுவாள். அதிக தாழ்மையுள்ள அலுவல்களையும், எளிமையான வஸ்திரங்களையுஞ் சந்தோஷமாய் தனக்குத் தெரிந்து கொள்வாள். ஆயினுந் தேவ சித்தத்தால் மடத்து முதலாளியானாள். கர்த்தர் அவளுக்குத் தீர்க்கதரிசன வரம் முதலான சில விசேஷ தயை செய்தருளினார். ஆயினும் ஓர் சமயத்தில் அவள் தன்னிடத்திலே வெகு புண்ணி யங்கள் இருப்பதைக் கண்டு கர்வம் கொண்டு பேசினதால் அதற்கு அபராதமாக ஐந்து வருஷம் அவளுக்கு வெகு துக்கம் வருகிறதற்குச் சர்வேசுரன் சித்தமானாரென்று அவள் தான் இயற்றிய புத்தகத்திலே எழுதி வைத்தாள். அந்தத் துக்கத்தின் மிகுதிக்குத் தன் பாவங்கள் காரணமென்று அவள் நினைத்து அதை மிகப் பொறுமையோடே அனுபவித்தாள்.

அந்தப் புண்ணியவதி தேவநற்கருணையின் பேரிலே வைத்த பத்தியினாலே அதின் பேரில் அவள் தியானம் பண்ணும்போது சந்தோஷத்தினால் அழுவாள். அவள் பூசை காண்கிறபோது மிகுந்த தாழ்ச்சி பத்தியாயிருந்ததினால் ஒரு பூசையிலே சம்மனசுகள் பாடுகிற திருப்பாடல்கள் புதுமையாக அவளுக்குக் கேட்கப்பட் டது. கர்த்தர் பிறந்த திருநாள் இரவில் அந்தம்மாள் தியானத்திலிருந்தபோது தேவமாதா குழந்தை சேசு நாதரை ஏந்தின வண்ணம் அவளுக்குத் தரிசனையாகி அந்தத் திவ்விய குழந்தையை அவள் கையிற் கொடுத்தாள். அந்தத் திவ்விய குழந்தையை வாங்கி அணைத்து முத்தி செய்தபோது எத்தனை சந்தோஷத்தை அனுபவித்தாலென்று சொல்லக்கூடாது.

 அர்ச். பிரான் சீஸ்கென்பவரும் அவளுக்கு இரண்டு விசை தரிசனையானார். அந்தப் புண்ணியவதி ஐம்பது வயது வரை தரும வழியிலே நடந்த பிறகு, 1463-ம் வருஷம் மார்ச் மாதம் 9-ம் தேதி காலம்பண்ணி மோட்ச பாக்கியத்தை அடைந்தாள்.

 கிறீஸ்துவர்களே! அர்ச். கத்தரீனம்மாள் தன் வாயினாலே கட்டிக்கொண்ட அற்ப குற்றத்திற்கு ஐந்து வருஷம் வெகு துக்க துயரத்தை நல்ல மனதோடே அனுபவித்தாள். தம்பீ ! வாயினாலும், மனதினாலும், கிரியையினாலும் நீ கட்டிக்கொண்ட பெரிய பாவங்களுக்கு அபராதமாகக் கொஞ்ச நாளாகிலும் கொஞ்ச மாதமென்கிலும் அனுபவிக்க வேண்டிய கஸ்தி பொல்லாப்புகளைப் பொறுமையோடே அனுபவிக்க வேண்டாமோ? அவைகளைப் பொறுக்க மனதில்லாமல் சர்வேசுரன் பேரிலே நீ முறையிட இடமுண்டோ? உனக்கு வருகிற கஸ்திக்கு நீ செய்த பாவங்கள் காரணமென்று இந்த அர்ச். கத்தரீனம்மாளைப் போல அடிக்கடி நினைத்தால் அந்தம்மாளுடைய பொறுமைக்கொப்ப நீயும் பொறுமை அடைவாயே இதல்லாமல் உன்னிடத்திலே அநேகம் நன்மையிருந்தாலும் அதினாலே உன்னையே புகழ்ந்து பேச வேண்டாம். ஏனெனில் உன்னிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் ஆண்டவருடைய உதவியினால் அல்லவோ வந்தன. சுவாமி உன்னைக் கைவிட்டால் நீ பாவங்கள் நிறைந்தவனாய் இருப்பதல்லாமல் அற்ப புண்ணியமாகிலுஞ் செய்ய மாட்டாய். உன்னிடத்திலுள்ள நன்மைகளுக்குள்ளே ஒரு நன்மையாகிலும் அவரிடத்திலிருந்து வாங்காத நன்மையுண்டோ? நன்மைகளெல்லாம் ஆண்டவராலே நீ கைக்கொண்டிருக்கையிலே அந்த நன்மைகள் முகாந்தரமாக நீ உன்னைக் கொண்டாடலாமோவென்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் திருவுளம்பற்றினதை நன்றாய் யோசித்துத் தாழ்ச்சியாய் இருக்கக்கடவாய். ஒரு சுரூபத்திற்கு உயிர் வந்து அது தன்னிடத்திலுள்ள பொற்பூச்சு முதலான சித்திர வர்ணங்களைக் கண்டு, தன்னைக் கொண்டாடுகிறதைச் சித்திரக்காரன் கேட்பானேயாகில், நான் இந்த வர்ணமெல்லாம் உனக்குக் கொடுத்திருக்கையில் நீ என்னை நினையாமல் உன்னைக் கொண்டாடலாமோ வென்று சொல்லுவது நியாயந்தானல்லவோ ? அவ்வாறே உன்னிடத்திலிருக்கிற நன்மையைக் குறித்து யோசிக்கவேண்டும். அர்ச். கத்தரீனம்மாள் மிக விசுவாசத்தோடேயும் பத்தியோடேயுந் திவ்விய பூசை கண்டதினால் சம்மனசுகளுடைய திருப்பாட்டுகளைப் புதுமையாகக் கேட்பதற்குப் பாத்திரமானாள். பராக்காயிருந்து அநேகங் குறையோடே பூசை காண்கிறவர்கள் இதைக் கேட்டு வெட்கப்படவேண்டும். பெரிய வெள்ளிக்கிழமையிலே சேசுநாதர் கபால மலையிலே மரணத்தை அடைந்தபோது நீங்கள் அங்கே இருந்திருப்பீர்களேயாகில், பராக்கில்லாமல் மிக உருக்கத்தோடேயும் பத்தியோடேயும் இரத்தஞ் சிந்தின அந்தப் பலிபூசையைக் காண்பீர்களல்லவோ? உங்களுக்கு மெய்யாகவே விசுவாசமிருந்தால், இரத்தஞ் சிந்தாத இந்தப் பலிபூசையைக் காண்கிறபோது அவ்வாறே இருக்கவேண்டும். அதேனென்றால், அந்தப் பலியிலே பிதாவாகிய சர்வேசுரனுக்கு நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த சேசுநாதர் தாமே இந்தப் பூசைபலியிலும் பிதாவுக்குக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறார். ஆதலால் பூசைகாண்கிற பாக்கியம் உங்களுக்கு எத்தனைமுறை அகப்படுமோ அத்தனை முறையும் நீங்கள் உயிருள்ள விசுவாசத்தோடும் பத்தியோடும் பூசை காணவேண்டும். தேவமாதா அர்ச். கத்தரீனம்மாள் கையிலே தமது திவ்விய குழந்தையாகிய சேசுநாதரைக் கொடுத்தபோது அந்தம்மாள் மிகுந்த பாக்கியத்தை அடைந்தாள். அப்படிக்கொத்த பாக்கியத்திற்கு நீங்கள் பங்காளிகளாயிருக்க வேண்டுமானால் நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கவேண்டும். அதன் வழியாகச் சேசுநாதர் உங்கள் இருதயத்திலே வருவாரென்பதினாலே அதைவிட மேலான பாக்கியங் கிடையாதென்று உணர்வோம்.

 விவரம்:- இந்த அர்ச்சியசிஷ்டையுடைய திருச்சரீரம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. அவள் மரித்து அநேக வருஷத்திற்குப் பிறகும் அது இன்னும் உயிராய் இருப்பதுபோல் தோன்றுவதுமன்றி உஷ்ணமுள்ளதுமாயிருந்தது.