Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்



அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் 'சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

Redmi Note 4 Cover
பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றன
வென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத்தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் "பிரிவினைக்காரருடைய சம்மட்டி' என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.
அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்
மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். - ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.
மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

ஆண்டவர் உங்களை அன்பு செய்கிறார்.

ஆண்டவர்  உங்களை அன்பு செய்கிறார்.

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய  ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப்     போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9;  உரோ. 5:8.)
உலகத்துக்கு ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார்.

நாம் அனைவரும் நமது கெட்ட சிந்தனைகளாலும் செயல்களாலும் பாவம் செய்கிறோம். அந்த பாவங்கள் நம்மை ஆண்டவரிடம் இருந்து பிரித்து விடுகிறது.

 நம்முடைய பாவங்களுக்காக மரிக்க சர்வேசுரன் தமது ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.

சேசுநாதர் பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அவர் பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்முடைய பாவங்களை கழுவ அவர் ;சிலுவை மரத்தில் மரித்தார். "நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (Rom.5:8)
 சேசுநாதர் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து, நாற்பதாம் நாள் பரலோகத்துக்கு ஆரோபணமாகி பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது  பக்கத்தில் இருக்கிறார். அவர்களே நமக்கு நித்திய ஜீவனை தருபவர்கள். 

 சேசுநாதர் திருவுளம் பற்றினத்தாவது :  "வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை"( Jn . 14 : 6)

சேசுநாதர் சுவாமி நம்மை எல்லாம் அழைக்கிறார். நாம் அவரது அழைப்பை ஏற்று என்றும் அவரது பிள்ளைகளாக இருக்க வேண்டும்
  
யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (Jn . 1: 12)





சனி, 26 அக்டோபர், 2019

அர்ச் பிலோமினா ஒரு அற்புதமான புனிதர்


அர்ச். பிலோமினா 1961 இல் கத்தோலிக்க காலெண்டரிலிருந்து நீக்கப்பட்டார், அது
 அவருக்குபிடிக்கவில்லை. அவள் உண்மையிலேயே இருக்கிறாள் என்பதையும், 
அவளுடைய எந்த சக்தியையும் அவள் இழக்கவில்லை என்பதையும் நாம் தெரிந்து
 கொள்ள வேண்டும் என்று அவள் விரும்புகிறாள், 
அவள் ஒரு "அற்புதங்கள் செய்கிறவர்" என்று அறியப்பட்டாள்.
அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை பிலோமினாவின் சக்தியையும் பாதுகாப்பையும் அனுபவித்து 
வருகிறது, நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், அதனால்தான்
ஆகஸ்ட் 11 அன்று அவருக்காக ஒரு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்தோம். உண்மையில்,
அர்ச். பிலோமினா எங்கள் தேவாலயத்தை நிரப்பியதால் நன்றியுள்ளவர்களாக 
இருக்க எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன, 
அர்ச். பிலோமினா எங்கள் ஆலயத்தை எவ்வாறு மக்களால் நிரப்பினார்? எங்கள் 
தேவாலயத்தில் அவளிடம் ஜெபிக்க வருபவர்களுக்கு அல்லது எங்கள் ஊழியத்தின் மூலம்
அவளுக்கு  உதவி செய்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு கோரிக்கைகள் வழங்குவதில்.
அர்ச். பிலோமினா பெற்ற சமீபத்திய உதவிகளில் ஒன்று இங்கே:
ஆகஸ்ட் 7 புதன்கிழமை, சகோதரரும் (Br பிரான்சிஸ்) நானும் வெலிசரா மருத்துவமனையில்
ஒரு நோயாளியை ஆசீர்வதிக்கச் சென்றோம் (கடுமையான வழக்குகள்).
அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பாக்டீரியா வந்தது, அது அவரது உடலில்
மூன்று காயங்களை ஏற்படுத்தி நுரையீரலை பாதித்தது.

நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவருக்கு எப்படி சிகிச்சையளிக்க வேண்டும்
 என்று தெரியாமல் மருத்துவர்கள் இருந்தார்கள். அவர் ஏற்கனவே கடந்த இரண்டு 
மாதங்களாக மருத்துவமனையில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, ​​பெரிய மற்றும்
ஆழமான காயங்களைக் கண்டோம். நுரையீரலில் இருந்து திரவத்தை சேகரிக்கும் விலா
எலும்புகளுக்கு இடையில் ஒரு குழாய் இருந்தது, 
நான் அவரை ஆசீர்வதித்து புனித பிலோமினாவின் எண்ணெயால் அபிஷேகம் செய்தேன்.
 
 சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்
 போவதாக என்னிடம் சொல்ல தொலைபேசி ஒலித்தது. அவர் எப்படி விரைவாக
 குணமடைய முடியும் என்பதை மருத்துவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்புள்ள புனித பிலோமினா ஒருபோதும் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை.
எல்லா புனிதர்களும் (செயிண்ட் ஜான் மேரி வியானி, பாட்ரே பியோ…)
 மற்றும் பாப்பரசர்கள்  (Pius VII, Leo XII, Gregory XVI, Pius IX, Leo XIII, St. PIus X, Benedict XV 
 மற்றும் Pius XI) அவளுக்கு மிகுந்த பக்தி. கொண்டிருந்தனர்.
 நாம் அவளை நம்பலாம் என்று எங்களுக்குத் தெரியும்!
 
Father Fabrice Loschi
FSSPX 
 
 
https://fsspx.asia/en/news-events/news/saint-philomena-incredible-saint-49986 


புதன், 9 அக்டோபர், 2019

St. Therese quotes in Tamil



நம் இயேசு எவ்வளவு நல்லவர்! 
எவ்வளவு அன்பும், கனிவும் உள்ளவர்! 
அவரது திரு இருதயத்தைத் தொடுவது
எவ்வளவு எளிதானது!








செவ்வாய், 24 செப்டம்பர், 2019

Are SSPX priests sedevacantists?


Society of St. Pius X Is Not Sedevacantist
 




















No they are not, because sedevacantists believe there is no valid pope. The Society of St. Pius X (SSPX) recognizes the validity of all legitimate popes, including Pope John II, under whom its founder, Archbishop Marcel Lefebvre,  and the four bishops he unlawfully ordained were excommunicated in 1988. In 2009, Pope Benedict XVI lifted those excommunications, though Archbishop Lefebvre had died in the interim. The SSPX has not yet been fully reconciled to the Catholic Church, including because of some doctrinal issues. For more on the SSPX, please see this Catholic Answers Magazine article.

திங்கள், 16 செப்டம்பர், 2019

Tamil Catholic Name for Boys (Baptismal name)









  St. Abel  - ஏபல்
 St. Abraham - ஆப்ரகாம், ஆபிரகாம்
  St. Adrian  - அட்ரியன்
St. Agilbert  - அகில்பெர்ட்
St. Aidan  - ஐடென்
Bl. Alan - ஆலன்
 St. Alban - ஆல்பன் , அல்பன்
St. Alexander - அலிக்ஸ், அலெக்ஸ், அலெக்சாண்டர்
St. Alfred the Great - அல்பிரேட்



ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

Download Tamil Catholic Audio Book

Download Tamil Catholic audio book called Porumai (பொறுமை ).
Its a very useful. Now a days we can't find any catholic books. So Here you can find all the catholic books.

https://drive.google.com/drive/folders/1-cgPWnH1AKaH7aW63r1HEEkhr1FcqZyl


வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிலுவை அடையாளம்


நாம் வழக்கமாக ஜெபிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.  

திருச்சபையில் நாம் எந்த ஒரு செயலை செய்யும் முன்னும், அல்லது முடிந்த போதும் சிலுவை அடையாளம் இல்லாமல் இருக்காது.

நாம் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்ட உள்ள பொதுவான வழி சிலுவை அடையாளம் தான்.

சிலுவை அடையாளம் நம்முடைய இரட்சணியத்தின் அடையாளம்.
எனவே நாம் அதனை மெதுவாகவும் மிகுந்த மரியாதையுடனும் வரைய வேண்டும்.

நாம் எப்பொழுது எல்லாம் சிலுவை அடையாளம் வரையலாம்?

  • நாம் காலையில் படுக்கையில் இருந்து எழும் போது 
  • நாம் இரவில் தூங்க செல்லும் முன் 
  • ஜெபிப்பதற்கு முன்னும் பின்னும் 
  • ஒரு வேலையை தொடங்குவற்கு முன்னும், வேலை முடிந்த பிறகும்.
  • எப்பொழுது எல்லாம் பாவ சோதனையில் விழுகிறோமோ அப்பொழுது எல்லாம் 
  • ஆபத்தில் இருக்கும் போது எல்லாம்.
  • பூசையின் பொது, ஆசிர்வாதத்தின் போது குருவானவர் நம்மை ஆசிர்வதிக்கும் போது நாம் சிலுவை அடையாளம் வரையவேண்டும் .
  • நாம் வாகனத்தில் பயணம் செய்யும் முன்பாக சிலுவை அடையாளம் வரைந்து நமது பயணத்தை தொடங்கலாம்.
 
 
 

புதன், 21 ஆகஸ்ட், 2019

ஆகஸ்ட் 22 மரியாயின் மாசற்ற இருதய திருநாள்

மரியாயின் மாசற்ற இருதயமே ‡ எங்கள் இரட்சணியமாயிரும்

ஆகஸ்ட் 22
மரியாயின் மாசற்ற இருதய திருநாள்


வெள்ளி, 26 ஜூலை, 2019

Our Lady Quotes

சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீ­னையும் கண்ட போது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார்.
பின்னும் சீ­னை நோக்கி:    இதோ உன் தாய் என்றார். 

சேசுவின் திரு இருதயமே

ஓ சேசுவின் திரு இருதயமே! உம்முடைய இராச்சியம் வருக!  சகல ஜாதி ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக!  உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திர மல்ல, ஊதாரியைப் போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கும் தேவரீர் உத்தம அரசராயிருப்பீராக.



புதன், 26 ஜூன், 2019

St. Anthoy Quotes

நாம் எப்போது எல்லாம் செபம் மற்றும் ஒறுத்தல் செய்கிறோமோ
அப்போதெல்லாம் சாத்தான் பயப்படுகிறான்.
‡ அர்ச். அந்தோணியார்

St. Joseph Quotes

அர்ச். சூசையப்பருக்கு நமது அனைத்து காரியங்களிலும், நமது அனைத்து தேவைகளிலும் உதவி செய்யக்கூடிய வல்லமை உள்ளது.

‡ அர்ச். தாமஸ் அக்வினாஸ்


வியாழன், 20 ஜூன், 2019

Feast of Corpus Christi

பரலோகத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.  இது உங்கள் பிதாக்கள் மன்னாவைப் புசித்ததுபோல் அல்ல; அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 



திங்கள், 17 ஜூன், 2019

சேசுவின் திரு இருதய வணக்க மாதம் Tamil Audio Book



சேசுவின் திரு இருதய  வணக்க மாதம்.


You can download Audio books for all 30 days.  The month of June is dedicated to Sacred heart of Jesus.  So here is the 30 days reading of the Book called  சேசுவின் திரு இருதய  வணக்க மாதம்.


Here is the Link : Click Here to Download

வியாழன், 6 ஜூன், 2019

சேசுவின் திரு இருதயமே,

சேசுவின் திரு இருதயமே, என்னுடைய நம்பிக்கை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்.

வெள்ளி, 17 மே, 2019

Guardian Angel

தூதர்கள் தாங்கள் துய்த்து மகிழும் அன்பு, மற்றும்
பேரின்பத்தின் பெருங்கடலில் நாமும் பங்கு பெறச் செய்வதற்கு
எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது
தாராள குணத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும்
எல்லைகளே இல்லை.



St. Bridget on Guardian Angel

""ஒரு தேவதூதரை அவரது முழு
அழகோடும் நாம் காண நேர்ந்தால்,
அக்காட்சி தரும் மகிழ்ச்சியால் நாம்
இறந்தே போவோம்!'’
        அர்ச். பிரிட்ஜித்தம்மாள்


St. Therese Tamil Quotes

 அஞ்சாதீர்கள். நீங்கள் சிறு காரியங்களில்
இயேசுவை மகிழ்விப்பதில் பிரமாணிக்கமாக
இருந்தால், பெரியகாரியங்களில் உங்களுக்கு
உதவ அவர் கடமைப்பட்டவராக இருப்பார்

    அர்ச். குழந்தை தெரசம்மாள்


புதன், 15 மே, 2019

St. John Maria Vianney Tamil Quotes

யார்  ஒருவர் சோதனை வரும்போது, பக்தியோடு சிலுவை அடையாளம் வரைகிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு பயங்கரத்தையும், மோட்சத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள்.

அர்ச். ஜான் மரிய வியான்னி


Tamil CAtholic Quotes on St. Joseph

சேசுநாதர் தான் இந்த உலகில் எவ்வாறு அர்ச். சூசையப்பருக்கு கீழ்படிந்திருந்தார் என்று நமக்கு படிப்பித்திருக்கிறார்.  இப்பொழுது அர்ச். சூசையப்பர் மோட்சத்தில் நமக்காக மன்றாடுகிற எல்லா வரங்களையும் சேசுநாதரிடம் இருந்து பெற்று தர வல்லமை மிக்கவர்.

அர்ச். அவிலா தெரசம்மாள்.

செவ்வாய், 14 மே, 2019

TAmil Quotes

""படைப்புயிர்கள் முன் சிறுமைப்படுத்தப்படுதல் என்ற
 வழிமுறையினால் அன்றி சிலுவையில் அறையுண்ட
                           என் ஆண்டவரை நான்  நெருங்குவது சிரமமே''                                                                                      
                                                                                - அர்ச். பாசி மரிய மதலேனாள்


St. Antony Quotes in Tamil

தேவதாயினுடைய நாமம், அவருடைய பக்தர்களுடைய மனதிற்கு ஒரு நீங்காத மகிழ்ச்சி, தேவிட்டாத தேன் அமுது,  அவர்களுடைய காதுகளுக்கு அது ஒரு மெல்லிசை. 

                                                                                                      அர்ச். அந்தோணியார்.



 

St. Antony Quotes 1

"Seek refuge in Mary because she is the city of refuge. We know that Moses set up three cities of refuge for anyone who inadvertently killed his neighbor. Now the Lord has established a refuge of mercy, Mary, even for those who deliberately commit evil. Mary provides shelter and strength for the sinner."

 ~ Anthony of Padua


ஞாயிறு, 12 மே, 2019

சனி, 11 மே, 2019

Our Lady Quotes in Tamil

ஓ ஆசீர்வதிக்கப்ட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்கு கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம்மீது அவர்கள் கொள்ளும் பக்தி

அர்ச். தாமசின் அருளப்பர்.
மரியாயின் உண்மை பக்தி: எண்: 41



CAtholic Quotes 2

நாம் எவ்வாறு நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்?

    நாம் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.       என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

சிறு மனவல்லய ஜெபங்கள் சொல்லலாம்.

திவ்விய சேசுவே என் இருதயத்தையும் ஆன்மாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்
சேசு மரிய சூசையே என் ஆத்துமத்தையும் சரிரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்

மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லலாம்.


Catholic Quotes

நாம் நினைவில் கொள்ள வேண்டிய கடைசி நான்கு காரியங்கள்

        மரணம்
        கடைசி தீர்வு
        மோட்சம்
        நரகம்






செவ்வாய், 7 மே, 2019

St Anthony Quotes in Tamil 2

தாழ்ச்சி என்பது தேனைவிட இனிமையானது.
யாரெல்லாம் தாழ்ச்சியால் போஷிக்கபடுவார்களோ
அவர்கள் மிகுந்த பலனை தருவர்.

‡ அர்ச். அந்தோணியார்.


St Anthony Quotes in Tamil

தேவதாய், பாவிகளுக்கு அடைக்கலமாகவும்,
பாவங்களை எதிர்ப்பதற்கு போதுமான
பலத்தையும்  தருகிறார்.

‡ அர்ச். அந்தோணியார்.



சனி, 4 மே, 2019

OUr Lady Quotes 3


சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன்.  உமது அடிமையாக, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் என் உள்ளத்தையும் ஐம்புலன்களையும் என் ஜீவிய காலம் முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  என்னையும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்திற்காக, உமது பிரியப்படி, நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன்.
‡ ஆமென்.

மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சண்யமாயிரும்.

மரியாயின் மதுரமான இருதயமே
எங்கள் இரட்சண்யமாயிரும்

சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.


Our lady Quotes in Tamil

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சரணமாக ஒடிவந்தோம்.  எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்கொள்வதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.  ஆசீர்வதிக்கப்பட்டவருமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துகளிலேயும் நின்று  எங்களை தற்காத்துக் கொள்ளும்.
‡ஆமென். 


 

வெள்ளி, 3 மே, 2019

Sacred Heart Quotes - (Tamil Quotes)

நேசமுள்ள சேசுவே!  எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாற செய்தருளும்



Sacred Heart Quotes - Tamil Quotes


சேசுவின் திரு இருதயமே, உம்முடைய இராச்சியம் வருக!  

சகல ஜாதி ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக! 
 உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல, உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கும் தேவரீர் உத்தம அரசராயிருப்பீராக!

 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

திருச்சபை கட்டளைகள் (Commandments of Church) in Tamil

திருச்சபை கட்டளைகள்
திருச்சபையின் பிராதான கட்டளைகள் : ஆறு
  1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்கிறது.
  2.  வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.
  3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.
  4. வெள்ளிக்கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது. 
  5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாமலிருக்கிறது.
  6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.