Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

காவல் சம்மனசுக்கள்


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் யார்?


                         
          காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்ட  ஒரு சம்மனசு. இவர்கள் நாம் பிறந்தது முதல் நாம் இறக்கும் வரை நம்மோடு இருக்கிறார்கள். நாம் அவர்களை காண முடியாது.  ஆனால் நாம் அவர்களோடு பேசலாம். நாம் அவர்களை தொட முடியாது. ஆனால் அவர்களை உணரலாம். 
அவர்களை எப்படி உணர்வது என்றால் நம் மனது பாவமான ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறது.  உடனே நம் மனதில் மற்றொரு சிந்தனையும் வருகிறது.  இந்த காரியம் ஒரு பாவம் என்றும், இதை செய்யாதே என்றும் நமக்கு நினைவு படுத்துகிறார்.   

அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறவர். நாம் புண்ணியங்கள் செய்யும் போது சந்தோஷபடுகிரவறாகவும் , நாம் பாவம் கட்டி கொள்ளும் போது வேதனை படுபவராகவும் இருக்கிறார்.  சர்வேசுரன் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காவல் சம்மனசு இருக்கிறார். அவர்கள் நாம் வெளியில் செல்லும் போதும், நாம் பயணம் செய்யும் போதும், நாம் விளையாடும் போதும், நாம் தூங்கும் போதும் நம்முடனே இருக்கிறார். 

காவல் சம்மனசுக்கள் நம் கண்களுக்கு தென்படுவார்களானால்  நாம் இந்த பூமியில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.  என் என்றால் கடவுள் மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவன் வசிக்கும் வீடு, தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு என அனைத்திற்கும் அவர் ஒவ்வொரு காவல் சம்மனசுக்களை கொடுத்து இருக்கிறார்.

நம் வாழ்வில் பல வேளைகளில் மிகவும் கஷ்டமான சூழலில் மாட்டிக்கொள்கிறோம். அந்த வேளையில் நமக்கு  அறிமுகம் இல்லாத சிலரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும். அவர்கள் தான் நம் காவல் சம்மனசுகள்.
இவ்வாறு பல உதவிகளை அவர்கள் நமக்கு செய்கிறார்கள். நாம் அவர்களிடம் பேச வேண்டும்.  நாம் இரவில் தூங்க செல்லும் முன் இந்த நாளில் நம்மை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காலையில் எழும் போதும் நாம் அவர்களிடம் "இந்த நாள் முழுவதும் சேசுவுக்கு எதிராக எந்த வித பாவங்களையும் செய்யாமல் இருக்க செய்யும்" என்று வேண்டிக் கொள்வது உத்தமம்.


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


Click Here To Download ...





Sermon about Our Lady of Fatima in Tamil (Audio)





சனி, 11 ஏப்ரல், 2015

Download the Preaching about Our Lady in Tamil (தேவமாதா பற்றிய பிரசங்கம்)

தேவமாதா பற்றிய பிரசங்கம்
பிள்ளை தன் தாயை மறந்தாலும் தாய் ஒரு போதும் தன் பிள்ளையை மறப்பது கிடையாது.  தேவமாதா ஒருவரே நம் எல்லோரையும் மோட்சம் அழைத்து செல்ல ஒரே வழியாக இருக்கிறார்.  ஏனெனில் அவர் தான் வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாக இருக்கிறார். சேசு நாதர் தம் தாயின் மூலமாக வரப்பிரசாதங்களை நமக்கு தருகிறார். 
தேவதாயை நாம் மறப்பதினால் தான் நாம் வெகு எளிதாக பாவம் கட்டிக் கொள்கிறோம். இன்று திருச்சபையில் தேவமாதா மீதான பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.  அனைவரும் பிரிவினைகாரர்களைப் போல் பைபிள் மூலமாக நாம் இரட்சிக்கப் படுவோம் என்று சொல்லுகிறார்கள். அன்பியம், போன்ற கூட்டங்களில் அனைவரும் சேர்த்து பைபிளை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் கூட்டங்களில் செபமாலை சொல்லுவது இல்லை.
ஒரு முறை ஞான தூதன் பத்திரிக்கையை வாசிக்க நேர்ந்தது.  அதில் ஒரு பெண் எழுதி இருந்தது.  "கோவிலில் தான் செபமாலை சொல்லுகிறார்களே ஏன் அன்பிய கூட்டங்களிலும் சொல்ல வேண்டும்."  இத்தகைய அன்பிய கூட்டங்களினால் கோவிலில் செபமாலை சொல்லுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.  
இப்போது வரக் கூடிய கத்தோலிக்க பத்திரிக்கைகள் எல்லாமே உலகம் சார்ந்த பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன.  நம்முடைய ஞான வாழ்வுக்கு தேவையான எதையும் அவைகள் சொல்லுவதில்லை.

இப்போதைய காலகட்டத்தில் நமது தேவ அன்னையின் உதவி எவ்வளவு அவசியம் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.  இதை நீங்கள் download செய்து பிறருடன் பகிருங்கள்.  அன்னை எவ்வளவு முக்கியம் என்பதை உலகுக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.


To Download right click on the below link and Save As

my email id is Click here.......


புதன், 1 ஏப்ரல், 2015

தினமும் மூன்று அருள் நிறைந்த மரியாயே (dAILY THREE HAIL MARY)

நம்முடைய இரட்சணியதிருக்கும், நாம் மோட்சம் செல்ல மிக முக்கியமான பக்தி முயற்சி தான் நாம் அன்னை மரியிடம் வைக்கும் பக்தி.  திருச்சபையின் அணைத்து வேத போதகர்களும் ஒரு மித்த கருத்து "அன்னையிடம் செல்வோருக்கு எதுவும் மறுக்கப் படுவதில்லை."
நாம் மிகப் பெரிய பக்தி முயற்சிகள் செய்ய வேண்டும் என்று அன்னை ஒரு போதும் நம்மை கேட்பது இல்லை.  ஒரு தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மிக கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்லுவது இல்லை.  அதை போல் நம் பரலோகத் தாய் ஒரு போதும் நம்மை கடினமான பக்தி முயற்சிகளை செய் என்று  கேட்பதில்லை. 
தேவதாய் குறித்து நிறைய பக்தி முயற்சிகள் இருக்கின்றன. நம் அன்னை நம்மை கேட்பது வெறும் மூன்று அருள் நிறைந்த மந்திரம் மட்டுமே.  அதுவும் நாம் வேலை செய்யும் போதோ அல்லது நாம் விளையாடும் போதோ அந்த பக்தியை அனுசரிக்க சொல்லவில்லை.  

தினமும் நாம் காலையில் எழுந்தவுடனும் இரவு நாம் தூங்க செல்லும் முன்னும் மூன்று அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை சொல்ல சொல்லுகிறார்.  இது எவ்வளவு எளிதான பக்தி முயற்சி.  

இந்த பக்தி முயற்சியை உலகுக்கு முதலில் சொல்லியது அர்ச் . பதுவை  அந்தோணியார்.  இந்த பக்தி முயற்சி நோக்கமே இந்த உலகில் உள்ளவர்களால் மாதாவிற்கு எதிராக செய்யப்படும்
நிந்தைகளுக்கு பரிகாரமாக இந்த பக்தியை பரப்பினார்.  பலரும் இந்த பக்தி முயற்சிக்கு ஆதரவு தந்து அதனை பரப்பினர்.

பின்னர் St. Leonard of Port-Maurice, இந்த பக்தி முயற்சியை ஒவ்வாரு  நாளும் நாம் படுக்கும் முன்னும், காலையில் எழுந்தவுடனும் சொல்லி நம்மை சாவான பாவத்தில் விழாதபடி நம்மை காக்க வேண்டும் என்று அன்னையிடம் வேண்டி இந்த பக்தி முயற்சியை அனுசரிக்க சொன்னார்.  அவர் இந்த பக்தி முயற்சியை தினமும் பக்தியாக அனுசரிகிரவர்களுக்கு தேவதாய்  நித்திய இளைப்பற்றியை தருவதாக அவர் வாக்குறுதி அளித்து இருக்கிறார்.




His Holiness, Benedict XV raised the Confraternity of the Three Hail Marys to an Archconfraternity and accorded it indulgences.
Our Lady requested the daily recitation of three Hail Marys, revealing the following to St. Melchtilde:

"The first Hail Mary will be in honor of God the Father, Whose omnipotence raised my soul so high above every other creature that, after God, I have the greatest power in Heaven and on earth. In the hour of your death I will use that power of God the Father to keep any hostile power from you.

"The second Hail Mary will be in honor of God the Son, Who communicated His inscrutable wisdom to me . . . In the hour of your death I will fill your soul with the light of that wisdom so that all the darkness of ignorance and error will be dispelled.

"The third Hail Mary will be in honor of God the Holy Ghost, Who filled my soul with the sweetness of His love and tenderness and mercy . . . In your last hour I will then change the bitterness of death into Divine sweetness and delight."



PROMISE:
During an apparition to St. Gertrude, the Blessed Mother promised, "To any soul who faithfully prays the Three Hail Marys I will appear at the hour of death in a splendor of beauty so extraordinary that it will fill the soul with Heavenly consolation."