Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 31 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 31-ம் தேதி*

*St. John Bosco, C.*
*அர்ச். ஜான் போஸ்கோ*
*துதியர் - (கி.பி.1888).
1815-ம் வருடம், ஆகஸ்டு மாதம்    16-ம் தேதி இத்தாலியில் பெக்கி என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் ஜான் போஸ்கோ பிறந்தார்.  இவருக்கு இரண்டு வயது ஆகுமுன்னே இவர் தமது தந்தையை இழந்தார்.  பிற்காலத்தில் லட்சக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருப்பதற்காக, ஜான் போஸ்கோ தாமே இளம் வயதில் அனாதையாக வேண்டுமென்று கடவுள் சித்தங்கொண்டார். புண்ணியவதியான இவருடைய தாய் மார்கரீத் மரியம்மாள் இவரைத் தெய்வப் பக்தியிலும், கிறீஸ்தவ ஒழுக்கத்திலும் நன்றாக வளர்த்தாள்.  

ஜான் போஸ்கோ சிறுவயதிலே அன்பான வார்த்தைகளினாலும், இனிய பாடல்களினாலும், நல்ல விளையாட்டுகளினாலும் தனது தோழர்களைத் தன் வசப்படுத்தி, அவர்கள் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட விளையாட்டுக்களையும் விலக்கும்படி செய்தார். திடீரென்று விளையாட்டை நிறுத்தி, எல்லோரும் தன்னோடு சேர்ந்து ஜெபமாலை ஜெபிக்கும்படி செய்வார். இவருடைய குடும்பத்தின் வறுமையினால் இவர் அநேக கஷ்டங்களை அனுபவிக்க                  வேண்டியிருந்தாலும், தான் ஒரு குருவானவர் ஆகி ஏழைப் பிள்ளைகளுக்காகவும் அனாதைகளுக்காகவும் உழைக்க வேண்டுமென்கிற ஒரே எண்ணம் இவர் மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது.

குருப்பட்டம் பெற்ற பிறகு தூரின் பட்டணத்திற்குச் சென்று, அங்கு தேவ ஏவுதலால் கிறீஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையான சத்தியங்களையும் ஒழுங்குகளையும் வாலிபர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, “ஆரட்டரி” என்று சொல்லப்படும் சலேசியன் ஸ்தாபனத்திற்கு அஸ்திவாரமிட்டார்.  சிறிது காலத்திற்குப்பின், வரப்போகிற நிகழ்வுகளை இவருக்குச் சிறு வயதிலே கனவுகளின் வழியாக முன்னறிவித்த பரிசுத்த கன்னிமரியாயின் சகாயத்தினால், ஆண்களுக்காக சலேசியன் சபையையும், பெண்களுக்காக      கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயின் கன்னியர் சபையையும் ஸ்தாபித்தார். சலேசியருடைய பற்பல பணிகளுக்கு ஜெபத்தினாலும் பொருளினாலும் உதவி புரிவதற்காகப் “பரோபகாரிகளின் சபை” ஒன்றையும் ஏற்படுத்தினார். ஜான் போஸ்கோ ஆத்துமங்களின் இரட்சணியத்தின் மீது தணியாத தாகங்கொண்டிருந்தார். ஏழைப் பிள்ளைகளுக்காக அநாதை மடங்களையும், பள்ளிக்கூடங்களையும், தொழிற்சாலைகளையும், தேவ வழிபாட்டிற்காக தேவாலயங்களையும் உலகமெத்திசையிலும் கட்ட முயற்சி செய்தார்.  விசுவாச வாழ்வில் ஓங்கி வளரவும், கிறீஸ்தவர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை வாங்கவும் கடினமாக உழைத்தார். பிறமதத்தினரை மனந்திருப்பத் தமது சபை குருக்களைப் பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இவர் எதார்த்தமும் நேர்மையுமுள்ள தேவ மனிதனாக விளங்கினார். கற்பு என்னும் புண்ணியத்தை அதிகமாய் நேசித்தார்.  

இடைவிடாமல் கடவுளோடு மனதால் ஒன்றித்திருந்து, ஏராளமான தேவ வரங்களை நிரம்பப் பெற்றார். அநேக புதுமைகளைச் செய்து, தேவ பராமரிப்பில் மட்டற்ற நம்பிக்கை வைத்திருந்தார். தமது மக்களுக்கு மூன்று வித பக்தியை ஊட்டினார். அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ நற்கருணை உட்கொள்ளவும், கிறீஸ்தவர்களின்  சகாயியான அர்ச். மரியாயை அதிகமாய் நேசிக்கவும், பரிசுத்த பாப்பானவருக்குப் பிள்ளைக்குரிய பாசத்துடன் பணிந்து நடக்கவும் கற்றுக்கொடுத்தார். அர்ச்.ஜான் போஸ்கோ “சிறுவரின் அப்போஸ்தலர், அனாதைகளின் தந்தை, பாவசங்கீர்த்தனத்தின் அப்போஸ்தலர், திருச்சபையின் காவலர்” என்ற அழியாத பெயர் பெற்றார். கடின உழைப்பினால் பலம் குன்றி வியாதியுற்ற இவர், 1888-ம் வருடம் பெப்ருவரி மாதம் 7-ம் தேதி தமது 73-வது வயதில் பாக்கியமாய் மரித்து, மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

அர்ச். ஜான் போஸ்கோவின் படிப்பினையையும், முன்மாதிரிகையையும்  பின்பற்றி, தேவநற்கருணையையும், தேவதாயையும், பரிசுத்த தந்தையையும் உள்ளன்புடன் நேசிப்போமாக.

*ஜனவரி மாதம் 30-ம் தேதி*

*St. Bathildes, Q.*
*அர்ச். பத்தில்தேஸ்*
*அரசி - (கி.பி. 680).*

பத்தில்தேஸ் என்ற இந்தப் பெண்மணி இங்கிலாந்தில் பிறந்து, சிறு வயதில் பிரான்ஸ் தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டாள். இவளை விலைக்கு வாங்கின பிரபு, இவளுடைய புண்ணிய வாழ்வையும் ஒழுக்கத்தையும் அறிந்து, இவளைத் தன் அரண்மனைக்குத் தலைவியாக நியமித்தான். இவளுடைய புகழ் அத்தேசமெங்கும் பரவியதினால், பிரான்சு தேசத்து அரசனான  2-ம் குளோவிஸ் என்பவர், தன் தேசம் முழுவதும் சந்தோஷித்து மகிழ அப்புண்ணிய மாதை மணமுடித்துக்கொண்டார். பத்தில்தேஸ் இராணி தனக்கு உண்டான உந்நத மகிமையால் பெருமை கொள்ளாமல், முன்னிலும் அதிகமாய் நற்குணத்தில் சிறந்து விளங்கி, அரசனுடைய அனுமதியுடன் அநேக கோவில்களையும், மடங்களையும் கட்டினாள். தன் கணவன் இறந்தபின், பட்டத்திற்குரிய தன் மகன் இளைஞனானபடியால், இப்புண்ணியவதியே அரசு புரிந்து, தன்னால் இயன்ற நன்மைகளையெல்லாம் அத்தேசத்திற்குச் செய்துவந்தாள். ஆயர் வேத விஷயமாக செய்த திருத்தங்களை நிலைநிறுத்தப் பிரயாசைப்பட்டாள். தம் குமாரனுக்கு பட்டாபிஷேகம் செய்தபின் பத்தில்தேஸ் இராணி கன்னியர் மடத்தில் சேர்ந்து, அங்கே தாழ்ச்சிக்குரிய அலுவல்களையும் அரிதான புண்ணியங்களையும் செய்துவந்தாள். இவளுக்கு அடிக்கடி உண்டான கடின நோய் நொடிகளைப் பொறுமையுடன் சகித்துப் பெரிய புண்ணியவதியாய் மரித்தாள். 

*யோசனை*


சர்வேசுரன் நமக்கு அளிக்கும் புத்தி, திறமை, அழகு, படிப்பு, செல்வம் முதலியவைகளைப்பற்றி பெருமை கொள்ளாமல் தாழ்ச்சியாயிருப்போமாக.

வியாழன், 30 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 29-ம் தேதி*

*St. Francis Sales, B.C.*
*அர்ச். பிரான்சிஸ் சலேசியார்*
*ஆயர், துதியர் - (கி.பி. 1622).*


இவர் உயர்ந்த குடும்பத்திலுள்ள, பக்தியுள்ள தாய் தந்தையரிடமிருந்து பிறந்தார். இவர் பாரிஸ், பதுவா முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றறிந்தார். தம்மைப் போல பிரபு குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணை தனது தந்தை தனக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்ததையறிந்து, அதற்குச் சம்மதிக்காமல் குருத்துவத்திற்கு படித்து, குருவாகி, ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் சுற்றித் திரிந்து அநேகரை நேர்மையாய் வாழ மனந்திருப்பினார். இவருக்கு இயற்கையாகவே முன்கோபம் அதிகமாயிருந்ததால், அத்துர்குணத்தை தம் இடைவிடா முயற்சியால் முற்றிலும் ஜெயித்து சர்வ சாந்தமும், பொறுமையுமுள்ளவரானார். இவருடைய புண்ணியங்களினிமித்தம் பரிசுத்த பாப்பரசராலும், அரசர்களாலும் இவர் வெகுவாய் மதிக்கப்பட்டார். கல்வீன் என்னும் பதிதர் இவரைப் பகைத்து, இவரைக் கொல்வதற்குப் பலமுறை முயற்சித்தனர். ஆனால் இவர் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டார். இவர் ஆயராக நியமிக்கப்பட்டபின், முன்னிலும் அதிக ஊக்கத்துடனும் பிரயாசையுடனும் சத்திய வேதத்திற்காக உழைத்துவந்தார். 72000 பதிதரைச் சத்திய வேதத்தில் சேர்த்து கணக்கற்றப் பாவிகளை மனந்திருப்பினார். அர்ச். ஷாந்தாள் பிரான்சிஸ்காவோடு, “தேவதாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த கன்னியர் சபையை” உண்டாக்கினார். கடைசியாய் இவர் புண்ணியங்களை ஒழுங்காய் அநுசரித்து 56-ம் வயதில் தமது ஆன்மாவை, நமது கர்த்தர் கையில் ஒப்படைத்தார்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவரைப் பின்பற்றி பொறுமையுள்ளவர்களாக முயற்சிப்போமாக.

*ஜனவரி மாதம் 28-ம் தேதி

*

*St. Peter Nolasco, C.*
*அர்ச். நொலஸ்கோ இராயப்பர்* 
*துதியர் - (கி.பி. 1258).*

இவர் உத்தம குலத்தில் பிறந்து, சிறுவயதிலேயே ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி, அவர்களுக்குத் தர்மம் கொடுத்துவந்தார். இராயப்பருக்குத் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் முயற்சிக்கையில், இவர் தமது கற்பை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை தேவ காரியங்களுக்காகக் கையளித்தார். அந்நாட்களில் ஸ்பெயின் தேசத்தின் பெரும் பகுதியையும், ஆப்பிரிக்காவையும் முகமதியர் கைப்பற்றிக்கொண்டு கிறீஸ்தவர்களைக் குரூரமாய் உபாதித்துவந்தனர். இதைக் கண்ட இராயப்பர் மனம் சகிக்காமல், அவர்களை மீட்கும்படி முயற்சிக்கையில், தேவதாயார் இராயப்பருக்கும், ரேய்மன்ட்டுக்கும், அத்தேசத்து அரசனுக்கும் தோன்றி, கிறீஸ்தவர்களை மீட்பதற்காக ஒரு சபையை உண்டாக்கும்படிக் கூறினார்கள்.  இவ்வலுவலில் இராயப்பர் அதிக உற்சாகத்துடன், பாப்பரசருடைய அனுமதியைப் பெற்று அச்சபையை ஸ்தாபித்தார். அரசரும், மக்களும் இத்தேவ காரியத்திற்கு உதவினபடியால், அடிமையாயிருந்த அநேகக் கிறீஸ்தவர்கள் முகமதியரிடமிருந்து மீட்கப்பட்டார்கள். இராயப்பர் இச்சபைக்காகக் கடினமான பிரயாணங்களை மேற்கொள்ளும் வேளையில், ஒருநாள் முகமதியர் இவரை நடுச்சமுத்திரத்தில் பாயில்லாத ஒரு தோணியில் ஏற்றிவிட்டு ஓடிப்போனார்கள். அப்போது இவர் தமது போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறிக்கொண்டு பிரயாணம் செய்து சுகமாய் கரை வந்து சேர்ந்தார். இவ்வாறு இவர் அடிமைகளுக்காக துன்பங்கள், வேதனைகள் பட்டு சாகும் தறுவாயில் ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்து, அடிமைகளை மீட்கும்படி சபையோரை மன்றாடி உயிர் துறந்தார். 

*யோசனை*

நாமும் ஜெபத்தாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருடைய ஆன்ம சரீரக் காரியங்களுக்கு உதவிடுவோமாக.

*ஜனவரி மாதம் 27-ம் தேதி*


St. John Chrysostom, A.B.M.*
*அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர்*
*மடாதிபதி, ஆயர், வேதசாட்சி*
*(கி.பி. 407)*
இவர் அந்தியோக்கியா நகரில் 344-ம் வருடம் பிறந்து, சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்து சகலராலும் புகழப்பட்டார். இவர் சிறந்த பேச்சாளராக சிறப்புடன் பிரசங்கித்ததினால் கிறிசோஸ்தோம் அதாவது “பொன் வாயோன்” என்னும் சிறப்பு பெயர் பெற்றார். இவர் தமக்குக் கிடைத்துவந்த பெயரையும் புகழையும் விட்டொழித்து, ஆறு வருட காலம் மௌனத்தை அனுசரித்து, தனிமையாக காட்டில் வாழ்ந்துவந்தார். உத்தமதனத்தை அடைந்தபின் குருப்பட்டம் பெற்று, பிறகு கான்ஸ்தாந்திநோப்பிள் நகருக்கு ஆயர் ஆனார். இவர் தமது வாக்கு சாதுரியத்தினால் பிரசங்கங்கள் பல செய்து, அநேக மக்களை மனந்திருப்பினார். நாள்தோறும் திவ்விய பலிபூசை காணும்படி சகலருக்கும் புத்திமதி கூறினார். பெருமை பாராட்டிக்கொண்டு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணியும் ஸ்திரீகளைக் கண்டித்தார். ஏழைகள்மேல் அதிக இரக்கம் காட்டி, தமது கையில் பணமில்லாதபோது தமது வீட்டிலுள்ள பாததிர பண்டங்களை விற்று அவர்களுக்கு உதவி செய்தார். இவர் முகத்தாட்சண்யமின்றிப் பாவிகளைத் தமது பிரசங்கத்தால் கண்டித்தபடியால், துஷ்ட மந்திரிகளின் துர் ஆலோசனைப்படி, சக்கரவர்த்தி அருளப்பரை நாடுகடத்திவிட்டான். அன்றிரவே பயங்கரமான பூகம்பம் உண்டானதால் அருளப்பர் மறுபடியும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டார். ஆனால் சில காலத்திற்குபின் இவருடைய விரோதிகளின் முயற்சியால் இவர் மறுபடியும் நாடுகடத்தப்பட்டார். அப்போது பிரயாணத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் வழியில் நோயுற்று, கடைசி தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று உயிர் துறந்து மோட்சம் சேர்ந்தார். 

*யோசனை*

நாள்தோறும் திவ்விய பலிபூசை காண முயற்சிப்போமாக.

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 26-ம் தேதி*



*St. Polycarp, B.M.*
*அர்ச். பொலிக்கார்ப்* 
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 156).*

இவர் அப்போஸ்தலர் காலத்தில் வாழ்ந்து, அவர்களுடன் பேசிப்பழகி, அர்ச். அருளப்பருக்கு சீஷராகி, அவரால் ஸ்மெர்னா நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டவர். இவர் பதிதர்களையும், சத்திய வேதத்தை மறுதலித்தவர்களையும் காண சகிக்கமாட்டார். ஒரு நாள் மார்ஸியோன் என்னும் ஒரு பதிதன் பொலிக்கார்ப்பைப் பார்த்து “நீர் என்னை அறிவீரோ” என்றதற்கு, “ஆம், நீ பசாசின் தலைச்சன் பிள்ளையென்று அறிவேன்” என்றார். இவர் வேதத்திற்காக வெகு ஊக்கத்துடன் உழைத்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்தார். வேத கலாபனையில் பொலிக்கார்ப் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிபதி பொலிக்கார்ப்பைப் பார்த்து “வயோதிகனே! கிறீஸ்துவை மறுதலித்து, நாட்டுத் தேவர்களை ஆராதிப்பாயாக” என்று கூறினான். அதற்கு பொலிக்கார்ப், “கடந்த 86 வருடகாலமாய் என் இரட்சகருக்கு ஊழியம் புரிந்தேன். மேலும் எனக்கு அவர் ஒரு தீங்கும் செய்தவரல்ல. இப்பேர்ப்பட்டவரை நான் எப்படி மறுதலிப்பேன்” என்றார். “அப்படியானால் நீ நெருப்பில் சுட்டெரிக்கப்படுவாய்” என்று கோப வெறிகொண்டு கூறினான் அதிபதி. “என் இரட்சகரை மறுதலித்து நித்தியமாய் நெருப்பில் வேகிறதைவிட இப்போது அதில் சற்று நேரம் வேதனைப்பட்டு நித்திய சம்பாவனையைப் பெறுவது உத்தமமல்லவா?” என்று பொலிக்கார்ப் பதிலளித்தார். இதைக் கேட்ட அதிபதி மிகவும் சினங்கொண்டு, இவரைச் சுற்றிலும் மரக்கட்டைகளை அடுக்கி, நெருப்பில் சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். அவ்வாறே மூட்டப்பட்ட அக்கினிச் சுவாலை, இவரைத் தொடாததைக் கண்ட அதிபதி கோபாவேசங் கொண்டு இவரை ஈட்டியால் குத்திச் சாகடிக்க கட்டளையிட்டான். அப்படியே இவர் குத்திக் கொல்லப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டார். அங்கு கிடந்த இவருடைய எலும்புகளை விசுவாசிகள் வெகு பக்தியாய் எடுத்துக்கொண்டு போனார்கள். 

*யோசனை*

வேத விரோதிகளுடன் தர்க்கிப்பதைவிட, அவர்கள் கூட்டத்தைவிட்டு விலகுவது நலமாகும்.

*ஜனவரி மாதம் 25-ம் தேதி*


*Conversion of St. Paul*
*அர்ச். சின்னப்பர் மனந்திரும்பின திருநாள்.*


அர்ச். சின்னப்பர் யூத பெற்றோரிடமிருந்து பிறந்தார். இளமையில் கல்வி கற்கும்படி இவரை ஜெருசலேம் நகருக்கு அனுப்பிவைத்தார்கள். அவ்விடத்தில் இவர் உலகக் கல்வியுடன் வேதாகமங்களையும் வாசித்துவந்தார். இவர் பரிசேயர் வகுப்பைச் சேர்ந்து, மோயீசனின் ஒழுங்கு ஆசாரங்களை வெகு கவனமாய் அனுசரித்து வந்தார். அர்ச். முடியப்பர் கிறீஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வேதத்தைக் கடைபிடித்ததினால், யூதர் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்போது சின்னப்பர் அவர்களுடைய வஸ்திரங்களைப் பத்திரமாய் பார்த்துக்கொண்டு இருந்தார். மேலும் இவர் கிறீஸ்தவர்களைத் தேடிப் பிடித்து, அவர்களை யூத சங்கத்தாரிடம் இழுத்துக்கொண்டுபோய் விடுவார். ஆகையால் கிறீஸ்தவர்கள் இவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி நடுங்குவார்கள். தமாஸ்கு நகருக்குச் சென்று, அங்குள்ள சகல கிறீஸ்தவர்களையும் பிடித்துக் கட்டி ஜெருசலேமுக்கு கொண்டுபோகும்படி, யூத சங்கத்தின் உத்தரவு பெற்று, சின்னப்பர் அவ்விடத்திற்கு புறப்பட்டார். இவர் மத்தியான வேளையில் தமாஸ்கு நகரின் அருகில் செல்லும்போது, சூரியனின் ஒளியைவிட அதிக பிரகாசமான ஒளி இவர்மேல் படவே, இவர் கீழே விழுந்தார். அப்போது, “சவுலே, சவுலே! என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்னும் சப்தத்தை இவர் கேட்டு, “நீர் யார் ஆண்டவரே?” என்று வினவியபோது, “நீ உபாதிக்கும் சேசு நானே. என்னை ஏன் உபாதிக்கிறாய்?” என்றார். அதற்கு சின்னப்பர், “ஆண்டவரே! உமது சித்தத்தை அறிவித்தால் அதன்படி செய்கிறேன்” என்றார். பிரகாசமான ஒளியினால் கண் பார்வை இழந்த இவர், தேவ உத்தரவின்படி தமாஸ்கு நகருக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டு, அங்கு மூன்று தினங்களாக உண்ணாமலும் குடியாமலும் தன் பாவங்களுக்கு அழுது துக்கப்பட்டுகொண்டிருந்தார். அந்நேரம் அனனியாஸ் என்பவர் தேவ கட்டளைப்படி சின்னப்பர் தலையின்மேல் தமது கரங்களை நீட்டவே, அவர் கண்பார்வை அடைந்தார். அது முதற்கொண்டு, சின்னப்பர் கிறீஸ்தவ வேதத்திற்காக சகல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து, சத்திய வேதத்தை தேசமெங்கும் போய் போதித்து அதற்கு சாட்சியாகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரணமடைந்தார்.

*யோசனை*

தேவ ஏவுதலுக்கு நமது இருதய வாசலைத் திறந்துவைப்போமாக.

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*



*St. Timothy, B.M.*
*அர்ச். திமோத்தி*          
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 97).*
திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது, திமோத்தியும் இவருடைய தாயும் மற்றும் பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். திமோத்தியின் பக்தி, அறிவை அறிந்த அப்போஸ்தலர், இவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் இவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். அர்ச். சின்னப்பர் இவரைத் துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்பினார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடமும் இவரை அனுப்பிவந்தார். தமது குருவும், ஆசிரியருமான அர்ச். சின்னப்பரின் புத்திமதியை கேட்டு, அவருடைய ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால், எபேசு நகருக்கு ஆயராக இவர் நியமிக்கப்பட்டார். அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில், தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். இவர் அநேக புண்ணியங்களையும் தவச்செயல்களையும் செய்து, பிறமதத்தினரால் வேதத்திற்காக தடிகளால் அடிக்கப்பட்டு மரித்து, வேதசாட்சி முடி பெற்றார்.            

*யோசனை*

அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்களுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.


ஜனவரி மாதம் 23-ம் தேதி



*St. Raymund, C.*
*அர்ச். ரேய்மன்ட்*
*துதியர் - (கி.பி. 1275).*

இவர் ஸ்பெயின் தேசத்தில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து மேலான சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றார். தம்முடைய 20-ம் வயதில் கல்லூரியில் சேர்ந்து பல கலைகளைக் கற்றுப் பெயர் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்று, தமது உத்தம அலுவலை அதிக ஊக்கத்துடன் செய்து வந்ததினால் சகலருக்கும் ஞானக் காரியங்களில் முன்மாதிரிகையாய் விளங்கினார். இவருடைய அரிதான ஞானத்தையும் பக்தியையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் இவரை உரோமைக்கு அழைத்து, இவருக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்தார். தாழ்ச்சியை முன்னிட்டு, பாப்பரசரால் தமக்கு அளிக்கவிருந்த பேராயர் பட்டத்தைத் தடுக்க, இவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக வியாதியில் விழுந்தார். இதைப் பாப்பரசர் அறிந்து, தமது விருப்பத்தை மாற்றி, ரேய்மன்ட் தம்முடைய சொந்த தேசத்துக்குப் போகலாம் என்று உத்தரவளித்தார். தம்முடைய தேசத்தில் இவர் பூரண சுகமடைந்து, வேதத்திற்காக வெகு ஆவலுடனும், உற்சாகத்துடனும் பிரயாசைப்பட்டதன் பலனாக, கணக்கற்றப் பாவிகள் மனந்திரும்பினார்கள். மேலும் 20,000 சரசேனருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இவர் அர்ச்.டொமினிக் சபையில் சேர்ந்து, உத்தம சந்நியாசியாய் வாழ்ந்ததால் அநேக அரசரும் பிரபுக்களும் இவரைத் தம் ஆன்ம குருவாக தெரிந்துகொண்டார்கள். அத்தேசத்து அரசன் இவரை மஜோர்க்கா என்னும் தீவுக்கு அனுப்பினபோது, அவ்விடத்தில் இவரால் அநேக ஞான நன்மைகள் உண்டாயின. ஆனால் அரசன் தன் பாவ நடத்தையை விடாததினால், இவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். இதை அரசன் அறிந்து, எவரும் இவரைக் கப்பலில் ஏற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தான். ரேய்மன்ட் தம்மேல் போர்த்தியிருந்த போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறி 150 மைல் தூரம் கடலில் பிரயாணம் செய்து, தமது மடம் போய்ச் சேர்ந்தார். இதையறிந்த அரசன் அதிசயித்து, தனது கெட்ட நடத்தையை முற்றிலும் ஒழித்துவிட்டு, சாகும் வரையில் புண்ணியவாளனாய் நடந்துவந்தான். ரேய்மன்ட் சகல புண்ணியங்களிலும் உத்தமமாய்ப் பிரகாசித்து, தமது 100-வது வயதில் மரித்து மோட்சமடைந்தார்.

*யோசனை*

யாரொருவர் தங்களைத் தாழ்த்தி, தங்களுக்கும் உலகத்திற்கும் மரித்தவர்கள் ஆகிறார்களோ அவர்களே அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவார்கள்.

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 22-ம் தேதி*



*St. Vincent, M.*
*அர்ச். வின்ஸென்ட்*
*வேதசாட்சி - (கி.பி. 304).*
இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து கல்வியில் தேர்ச்சியடைந்தபின்   6-ம் பட்டம் பெற்று, ஆயர் இட்ட உத்தரவினால் பிரசங்கம் பல செய்துவந்தார். வேதக் கலாபனையில் இவரும், இவருடைய ஆயரும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நடுவனுடைய உத்தரவின்படி, இருவரும் குரூரமாய் உபாதிக்கப்பட்டும், இவர்கள் வேதத்தை மறுதலியாததினால், ஆயர் நாடுகடத்தப்பட்டும், வின்ஸென்ட் சிறையிலும் அடைக்கப்பட்டார். வின்ஸென்டை கொடூரமாய் உபாதித்தபின் கொலைஞர் அவரைக் கீழே கிடத்தி இவர் கை, கால்களைக் கட்டியிருந்த கயிறுகளில் கம்பிகளை மாட்டி இழுத்தபோது, இவர் கைகால் மூட்டுகள் பிசகி, வெகுவாக வேதனைப்பட்டார். பிறகு அவர்கள் இவரை கொடூரமாய் அடித்ததினால், உடல் முழுவதும் காயமாகி, இரத்தம் வெள்ளமாகத் தரையில் ஓடியது.  மேலும் இவரை ஒரு இரும்பு கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டியபோது, இவர் சிறிதும் அஞ்சாமல் வேதத்தில் தைரியமாயிருப்பதை அதிகாரி கண்டு, இவரை அதிகக் கடுமையாய் உபாதிக்க நினைத்து இவருடைய காயங்கள் ஆறும் வரையில் இவரைச் சிறையில் அடைத்துவைத்தான். அங்கு காணப்பட்ட அதிசயப் பிரகாசத்தைக் கண்ட காவல் சேவகன் உடனே மனந்திரும்பினான். கிறீஸ்தவர்கள் இவரைச் சந்தித்து இவருடைய இரத்தத்தை வஸ்திரங்களில் நனைத்து பக்தியோடு கொண்டுபோனார்கள். அர்ச். வின்ஸென்ட் சிறையில் உயிர் விட்டு, வேதசாட்சியாய் மரித்து, மோட்சம் போய் சேர்ந்தார்.            

*யோசனை*

நமக்கு வரும் துன்ப துயரத்தால் மனம் கலங்காமல் ஜெபத்தால் தேவ உதவியைத் தேடுவோமானால், அவை நமக்கு நித்திய சம்பாவனை கிடைக்க வழிவகுக்கும்.

*ஜனவரி மாதம் 21-ம் தேதி*



*St. Agnes, V.M.*
*அர்ச். ஆக்னேஸ்*
*கன்னிகை, வேதசாட்சி - (கி.பி. 304).*
ஆக்னேஸ் உரோமையில் பிறந்து, சிறுவயதிலேயே தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள்.  இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் இவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்’’என்று கூறினாள். அவர்கள் இதைக் கேட்டு சினங்கொண்டு இவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். இவள் அதற்குச் சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, இவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். ஆக்னேஸ் அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு, இவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குத் தூபம் காட்டும்படி கட்டளையிட்டான். இவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, தூபக்கலசத்தைத் தொடவில்லை. இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, இவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே இவள் கற்பை அழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் இவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் இவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான ஒளியால் அவன் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய நண்பர்களின் மன்றாட்டின்பேரில், ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைக் கொடுத்தாள். இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமும் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடம் சென்றாள்.            

*யோசனை*

தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.

y



*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக. Bu மாதம் 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*
நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.fcc 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*

செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.

*ஜனவரி மாதம் 19-ம் தேதி*


*St. Canutus, K.M.*
*அர்ச். கனூத்துஸ்*
*இராஜா, வேதசாட்சி - (கி.பி. 1086).*
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார்.  இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருடம் மரித்தபடியால், கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறீஸ்தவர்களாக்கினார். தன் தேசத்தில் நிலவிய அநேக அலங்கோலங்களைத் திருத்தியமைத்து, மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றி, எங்கும் சமாதானமும், திருப்தியும் உண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு, மக்கள் வேண்டிய உதவி புரியும்படி நாட்டில் சட்டம் இயற்றினார். கடைசியாய் சகலமும் ஆண்டவரால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார். இந்த நல்ல அரசர், வேதம் பரவுவதற்காக பல சட்டதிட்டங்களைக் கொண்டுவந்தார். இதனால் இவர்மீது கோபம்கொண்ட சில துஷ்டர், ஒருநாள் இவர் ஜெபித்துக்கொண்டிருக்கும் போது இவரை ஈட்டியால் குத்திக் கொன்றார்கள். இவருடைய மரணத்துக்குப்பின், இவரை ஆண்டவர் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, இவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.            

*யோசனை*


தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.

*ஜனவரி மாதம் 18-ம் தேதி*



*St. Peter’s Chair at Rome*
*உரோமையில் அர்ச். இராயப்பருடைய* 
*பத்திராசனத் திருநாள்.*

நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்துவந்தார்கள். அவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதிக நன்மை உண்டாகும் என்று                                                                                                                                                                            அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். அவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்பரசர்களும்                                 அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.           

*யோசனை*

திருச்சபைப் போதகர்களாகிய ஆயர், குருக்கள் இவர்களை நாம் மதித்து இவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.

சனி, 18 ஜனவரி, 2020

ஏழு தேவதிரவிய அனுமானங்கள்




  • ஞானஸ்தானம்
  • உறுதிபூசுதல்
  • தேவநற்கருணை
  • பாவசங்கீர்த்தனம்
  • மெய்விவாகம்
  • குருத்துவம்
  • அவஸ்தை பூசுதல்


வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 17-ம் தேதி

**

*St. Antony, A.*
*அர்ச். பெரிய அந்தோணியார்*
*மடாதிபதி - (கி.பி. 356).*
இவர் எஜிப்து தேசத்தில் செல்வந்தரான பெற்றோரிடமிருந்து பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்துவந்தார். இவருடைய பெற்றோர் இறந்தபின்  “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, காட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு ஊழியம் செய்தார்.  கெட்ட எண்ணம் கொண்ட பசாசோவெனில், இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் இவரைத் துன்புறுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமான தோற்றங்கள் எடுத்து இவரை அடிக்கடிப் பயமுறுத்தியது.  பெண்போல் வடிவமெடுத்து இவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயன்றது. அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாய் சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்தினார். இந்த சோதனைகளுக்கு இவர் உட்படாததைக் கண்ட பசாசு, இவரை ஒருநாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமதாண்டவர் இவருக்குத் தரிசனையாகி, இவருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் புசித்துவந்தார். ஆட்டுத்தோலை ஆடையாகத் தரித்துக்கொண்டு வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் வரை முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்டுணர்ந்த அநேக மக்கள் இவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி இவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியநெறிகளையும் ஒழுங்காய் அநுசரித்து,  105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.         

*யோசனை*

பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும், ஒறுத்தலாலும் ஜெயிப்போமாக.

வியாழன், 9 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 8-ம் தேதி*

*

*St. Apollinaris, B.*
*அர்ச். அப்போலினார் - ஆயர்*
*(கி.பி. 175).* 
ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது.  அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் உண்மையான கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ், ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சூழப்பட்டு, பின்னடைவதற்கு வசதியற்ற இடமாய் இருந்தபடியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லாதிருந்தது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையினாலும் அவனுடைய படைகள் வருந்தித் தவித்தது. அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறீஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஒரு பகுதியார் முழந்தாளிலிருந்து ஆண்டவரைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடிமுழக்கத்துடன் ஓரு பெரும் மழை பெய்தது.  மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள்.  இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து, அந்தக் கிறீஸ்தவ படைக்கு “இடிமுழக்கப் படை” என்று பெயர் கொடுத்தான். அர்ச். அப்போலினார், இராயனுக்கு ஓரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக்கொண்டார். இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறீஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஒரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச். அப்போலினார் பல நூல்களை வெளியிட்டு, இறுதியில் அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

*யோசனை*

சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, வெகு விமரிசையுடன் பேசுவோமாக.

*ஜனவரி மாதம் 7-ம் தேதி*



*St. Lucian, P.M.*
*அர்ச். லூசியான் - குரு,வேதசாட்சி*
*(கி.பி. 312).* 

இவர் சிரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாயும் தந்தையும் இறந்துபோனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,         புண்ணியவாளரான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியச் செயல்களைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார்.  இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார்.  அக்காலத்தில் எழுந்த வேத கலகத்தில்             அர்ச். லூசியான் பிடிபட்டு, சிறைப்படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் இவருக்கு உணவு கொடுக்கப்படாததால், இவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராய் இருந்தார். அந்நேரத்தில், பசாசுக்குப் படைக்கப்பட்ட பண்டங்களை இவருக்குக் கொடுக்க, இவர் அவைகளை உண்ணாமல் ஒதுக்கிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் இருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டுவந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரம் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.  மறுபடியும் இவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவன் என்று தைரியமாக சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலைசெய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான். அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவன் என்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறுதலிக்காதிருப்போமாக.

திங்கள், 6 ஜனவரி, 2020

திருச்சபை வழிபாட்டு நிறங்கள்



திவ்விய பலி பூசையின் பொது பல்வேறு நிறங்களில் பூசை ஆயத்தங்களை பயன்படுத்துவார்கள். அந்த நிறங்கள் திருச்சபையின் ஒவ்வொரு காலங்களை அல்லது திருவிழாக்களை குறிக்கும்.

1. வெள்ளை

2. சிகப்பு

3. பச்சை

4.  ஊதா

5. கருப்பு




*ஜனவரி மாதம் 6-ம் தேதி*

*The Epiphany of our Lord*
*கர்த்தர் மூன்று இராஜாக்களுக்குத்* 
*தம்மைக் காட்டியத் திருநாள்.* 



நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதரும் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள்.  கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இம்மூவரும் ஞானஸ்நானமும், பிறகு ஆயர் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்திற்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.

*யோசனை*

நமக்கு ஆண்டவர் பலவிதத்திலும் அருளும் ஞான ஒளியில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.


ஞாயிறு, 5 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 5-ம் தேதி*



*St. Simeon Stylites, C.*
*தூணில் நின்று தவம் புரிந்த* 
*அர்ச். சிமெயோன் - துதியர்.* 

இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார்.  தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தரின் மலைப் பிரசங்கத்தைக் கேட்டு, அவைகளின்படி நடக்க
விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபமும் தியானமும் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவம் செய்துவந்தார். இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்டு அதிசயப்பட்டார்கள். இவர் மேலும் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாக உடுத்தி, கடுமையாக ஒருசந்தி இருப்பார். ஒரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு ஆண்டவரை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியச் செயல்களைப் பரிசோதிக்கும் எண்ணத்துடன் அருகாமையில் இருந்த மேற்றிராணிமார் சிலர், இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயற்சிப்பதை அவர்கள் கண்டு, இவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து, இவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்துவந்த கடின தபசையும் பல புதுமைகளையும் கண்ட அரசர்கள் இவரைச் சந்தித்து, இவர் ஆலோசனையைக் கேட்டுவந்தனர். இவர் ஒருநாள் தூணில் அசைவற்று இருந்ததைக் கண்ட சிலர், அதன்மேல் ஏறிப் பார்த்தபோது இவர் மரித்திருப்பதைக் கண்டார்கள். அர்ச். சிமெயோன் தமது 69-ம் வயதில் இவ்வாறு மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கம் செய்யப்பட்டார்.

*யோசனை*

நாம் கடினத் தவம் செய்யாவிடினும் நமது ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.

சனி, 4 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*St. Titus, B.*
*அர்ச். தீத்துஸ் - ஆயர்*. 
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் அவருடனே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ்  அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு அன்போடு புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு கொண்டுவந்தார். இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட அர்ச். சின்னப்பர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் அடைந்தார்.  தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப்பின் அர்ச். சின்னப்பர் தீத்துசுக்கு ஆயர் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். ஆயர்களின் மேலான கடமைகளைக் குறித்தும், விசுவாசிகளை நடத்திச்செல்ல வேண்டிய ஒழுங்கு திட்டங்களைக் குறித்தும் ஒரு நிருபத்தை அர்ச். சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அர்ச். சின்னப்பர் போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத்துடன் வேதம் போதித்து, நல்ல மரணமடைந்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார். 

*யோசனை*

நாம் செய்யும் தவறுகளை அறியும் நமது ஞானப் போதகர்கள், நமக்கு அறிவுரை கூறும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 3-ம் தேதி


*St. Genovieve, V.*
*அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை*

*(கி.பி. 422).* 


அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள்.  நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள்.  மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 2-ம் தேதி

*ஜனவரி மாதம் 2-ம் தேதி*
*St.Macarius, A.*
*அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி*
*(கி.பி.394)*

அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* *The Circumcision of Our Lord*. *விருத்தசேதனத் திருநாள்

*LIVES OF SAINTS*
*அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்*

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த  அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே.  நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

*ஜனவரி மாதம் 1-ம் தேதி*
*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத் திருநாள்*
  
*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு*
*நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு.  மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது.  இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.  இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும்.  நமது திவ்விய
கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக.  மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.