Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

அர்ச். செபஸ்தியார் (St. Sebastian life History in Tamil)


அர்ச். செபஸ்தியார் (St. Sebastian)

Bornc. 256
Diedc. 288
Honored in
Catholic Church
Eastern Orthodoxy
Oriental Orthodoxy
Anglicanism
Aglipayan Church
FeastJanuary 20 (Catholic),
December 18 (Eastern Orthodox)
AttributesTied to a post, pillar or a tree, shot by arrows, clubbed to death
PatronageSoldiers, plague-stricken, archers, holy Christian death, athletes

அர்ச். செபஸ்தியார் 256ம் ஆண்டு பிறந்தார்.  அவர் ஒரு கிறிஸ்தவர். இவர் ஒரு மறைந்த கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து வந்தார். 283ம் ஆண்டு அவர் ரோமன் போர்ப்படையில் பணியில் சேர்ந்தார்.  அவருடைய பணித்திறமையை பார்த்து வியந்தனர். ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று அறியாமலேஅவரை ரோமானிய படையின் தளபதியாக மிக பதவி உயர்த்தப்பட்டார்.  ஆனால் அவர் பல கைதிகளை நல்ல கிறிஸ்தவர்களாக மரிக்க உதவி செய்தார்.  

அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தெரியவந்தபோது அவரையும் கொலை செய்ய வேண்டும் என்று ரோமன் உயர் அதிகாரி உத்தரவிட்டான்.  அவருக்கு ஒரு வரம் கொடுக்கப்பட்டிருந்தது. அது என்னவென்றால் சிலுவை அடையாளத்தினால் குணமாக்கும் வரம்.  அந்த வரத்தினால் அவர் பலரை குணமாக்கினார்.  ரோமன் உயர் அதிகாரி செபஸ்தியார் தன்னை இனத்தை காட்டிக் கொடுத்த துரோகி. எனவே அவரை மிக கொடூரமாக கொல்ல வேண்டும் என்று எண்ணி, அவரை ஒரு மரத்தில் கட்டி அம்பால் எய்து கொல்ல உத்தரவிட்டான். செபஸ்தியாரின் மீது அம்புகள் எய்தனர்.  அவர் விரைவில் இறந்து விடுவார் என்று எண்ணி அவரை எய்த அம்புகளோடு அப்படியே வி;ட்டுவிட்டு சென்றனர்.  ஆனால் ஐரின் என்ற பெண் விரைந்து வந்து அவரது உடலை கல்லறையில் அடக்கம் செய்;ய வந்தாள்.  செபஸ்தியார் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கண்டு, செபஸ்தியாரை தன் வீட்டில் மறைவாக வைத்து மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.  அவரும் விரைவில் குணமாகினார்.

விரைவில் மீண்டும் தன்னை கொலை செய்ய ஆணையிட்ட அந்த ரோமன் அதிகாரியிடம் சென்று கிறிஸ்துவைப் பற்றி போதித்தார்.  தன்னால் கொலை செய்யப்பட்ட செபஸ்தியார் மீண்டும் உயிருடன் தன்னிடம் வந்து போதிப்பதைப் பற்றி அதிசயப்பட்டான்.  அந்த ரோமன் அதிகாரியால் மீண்டும் அவரை கொலை செய்ய ஆணையிட்டான்.  இந்த முறை செபஸ்தியாரை அடித்துக் கொன்று சகதியில் எரிந்து விட்டனர்.  அவர் ஐரின் என்ற பெண்ணுக்கு காட்சியளித்து தன் உடல் இருக்கும் இடத்துக்கு சென்று அதை அடக்கம் பண்ண கேட்டுக் கொண்டார்.  அவரும் சென்று அவரது உடலை நல்ல முறையில் அடக்கம் செய்தார். 

அர்ச். செபஸ்தியார் பல பிணி, நோய்களை குணமாக்க வல்லவர்.  அதனால் தான் எப்பொழுது எல்லாம் பிளேக், காலரா போன்ற நோய்கள் வருகிறதோ அப்போது அர்ச். செபஸ்தியார் உருவ சுருபத்தைக் ஊர் முழுவதும் பவனியாக வருகிறார்கள் நம் கிறிஸ்தவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக