Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

St. Anthony Sermon in Tamil - அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங்கம்

 

கடவுள் சிநேகமாக இருக்கிறார்.


(அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங்கம் ) இஸ்பிரீத்து சாந்து திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு நிருபத்தின் முதல் பகுதி , "கடவுள் சிநேகமாயிருக் கிறார்" (1 அரு. 4:8) என்னும் இந்த முதல் வாக்கியத்தோடு பொருந்துவதாக இருக்கிறது. சிநேகம் எல்லாப் புண்ணியங் களிலும் மேலான புண்ணியம் என்பதால், நாம் ஒரு சுருக்க மான, தனிப் பிரசங்கம் ஒன்றை அதன்பேரில் தருவோம். நாம் கடவுளையும் நம் அயலானையும் ஒரே வித அன்பைக் கொண்டு, இஸ்பிரீத்து சாந்துவானவராகிய அன்பைக் கொண்டு நேசிக்கிறோம், ஏனெனில் கடவுள் சிநேகமாயிருக் கிறார். அர்ச். அகுஸ்தினார் இதைப் பற்றி, "சர்வேசுரனை, அவர் பொருட்டு, உன் முழு இருதயத்தோடு நேசிப்பாயாக, உன் அயலானை உன்னைப் போல நேசிப்பாயாக என்ற அன்பின் கட்டளை கடவுளால் தரப்பட்டுள்ளது. கடவுளின் நிமித்தம் உனக்கு நன்மையானது எதுவோ அதைத் தேடுவதன் மூலம், உன்னை நீ நேசிக்க வேண்டும். இதே முறையில், அதே கடவுளின் நிமித்தம் உன் அயலானுக்கு நன்மையானதும், அவனுக்குத் தீங்கா யிராததுமான காரியத்தைத் தேடுவதன் மூலம், அவனையும் நீ நேசிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உன் அயலான்தான்; நீ தீங்கு செய்யக்கூடிய மனிதன் யாருமில்லை" என்று கூறுகிறார்.

''உன் முழு இருதயத்தோடும் (புத்தி), உன் முழு ஆத்துமத்தோடும் (சித்தம்), உன் முழு மனதோடும் (நினைவு) உன் தேவனாகிய ஆண்டவரை நேசிப்பாயாக" என்ற வார்த்தைகளில் நாம் கடவுளை நேசிக்க வேண்டிய முறைமை குறித்துக் காட்டப்படுகிறது. நம் புத்தியும், சித்தமும், நினைவுமாகிய ஆன்ம சத்துவங்கள் யாரிடமிருந்து வருகின்றனவோ, அந்த சர்வேசுரனுக்கே அவை அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதற்கு நம் வாழ்வின் எந்த பாகமும் விதிவிலக்கு அல்ல. நம் மனதிற்குள் வரும் எந்த ஒரு காரியமும் அன்பினால், அதன் கடைசி இலக்காகிய கடவுளையே நோக்கியதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட நிருபத்தில், அர்ச். அருளப்பர் கடவுள் மீதும், அயலான் மீதும் கொள்ளும் அன்பைப் பற்றி நமக்கு அதிகம் எடுத்துச் சொல்லி, அதைக் கடைப்பிடிக்கும்படி நம்மை உற்சாகப் படுத்துகிறார். "தம்முடைய ஏக குமாரனால் நாம் ஜீவிக்கும்படிக்குச் சர்வேசுரன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினாலே, சர்வேசுரன் நமது பேரில் வைத்த சிநேகம் வெளிப்பட்டது'' (1அரு.4:9). பிதாவானவர் நம் மீது வைத்த இந்த நேசம் எவ்வளவு பெரியது! நாம் அவரால் வாழும்படியாகவும், அவரை நாம் நேசிக்கும்படியாகவும், அவர்தம் ஏகபேறான திருச்சுதனையே நமக்காக நம்மிடம் அனுப்பினார். ஏனெனில் அவரின்றி வாழ்வது உண்மையில் மரணமாகவே இருக்கிறது. "சிநேகியாதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்" (1 அரு.3:14).

யார் வழியாக சர்வேசுரன் உலகத்தைப் படைத்தாரோ, அந்தத் தமது நேச குமாரனையே நமக்குத் தரும் அளவுக்கு மிக அதிகமாக அவர் நம்மை நேசித்தார் என்றால், நாமும் ஒருவரை யொருவர் நேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். "நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை யைத் தருகிறேன், நீங்கள் ஒருவர் ஒருவரை நேசியுங்கள்" (அரு. 13:34). ஆடம்பரமாக உடை அணிந்திருந்த அந்தப் பணக்காரன் இந்தக் கட்டளையை நிறைவேற்றவில்லை, எனவே அவன் மரணத்தில் நிலைகொண்டிருந்தான். நேசமாகிய உண்மையான வாழ்வு அவனிடம் இல்லாத தால் அவன் உயிருடன் புதைக்கப்பட்டான் என்றும் கூட நீங்கள் சொல்லலாம். தனது முன்னுரிமைகளைத் தவறான வழியில் அவன் பயன்படுத்துவதால் பாவம் செய்கிறான்.

அர்ச். அகுஸ்தினார் இப்படிச் சொல்கிறார்: "நேசிக்கப்பட வேண்டிய நான்கு காரியங்கள் இருக்கின்றன. ஒருவர் நமக்கு மேலே இருக்கிறார். அவர் கடவுள். இரண்டாவதாக நாம் இருக் கிறோம். மூன்றாவது காரியம், நம் அருகில் இருக்கிறது. அது நம் அயலார். நான்காவது காரியம் நமக்குக் கீழே இருக்கிறது, அது நம் சரீரம்." அந்த செல்வந்தன் தன் உடலை எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தான். கடவுளையும், தன் சொந்த ஆன்மாவையும், தன் அயலானையும் பற்றியோ அவன் சற்றும் கவலைப்படவில்லை. அதனால்தான் அவன் தண்டனைத் தீர்ப்படைந்தான்.

"நம் சரீரத்தை நம் பொறுப்பிலுள்ள ஒரு நோயாளியைப் போல நாம் நடத்த வேண்டும். அது விரும்பினாலும், அதற்கு நன்மையாக இராத பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை அதற்குத் தர நாம் மறுக்க வேண்டும். அதற்கு நன்மையானதும், ஆனால் அது விரும்பாததுமான பல காரியங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் அதற்கு வற்புறுத்தித் தர வேண்டும். நம் சரீரம் நமக்குச் சொந்தமல்ல, மாறாக, மிகப் பெரும் விலை கொடுத்து நம்மை வாங்கியவரை நம் சரீரத்தில் மகிமைப்படுத்தும்படியாக, அது உண்மையில் அவருக்கே சொந்தமாயிருக்கிறது என்பது போல நாம் நம் சரீரத்தை நடத்த வேண்டும்" (காண்க. 1 கொரி.6:20) என்கிறார் அர்ச். பெர்னார்ட்.

"நீ நம்மை மறந்து நம்மை உன் முதுகின் பின்னாலே தள்ளிப்போட்டதினிமித்தம் நீயும் உன் குற்றத்தையும், உன் வேசித்தனத்தையும் சுமந்து கொள் என்று தேவனாகிய ஆண்டவர் சொல் கிறார்" (எசேக். 23:35) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறும் கடவுளின் கண்டனத்தை நம்மீது வருவித்துக் கொள்ளாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். நாம் நம் சரீரங்களை நான்காவது, கடைசி இடத்தில் வைத்துத்தான் நேசிக்க வேண்டும், "சரீரத்தின் பொருட்டே நாம் வாழ்கிறோம் என்பது போல் அல்லாமல், அது இல்லாவிடில் நாம் வாழ முடியாது என்பதற்காகவே அதை நாம் நேசிக்க வேண்டும்.'' ஆமென். (இக்கட்டுரை அர்ச். பதுவை அந்தோனியாரின் பிரசங் கங்கள் அடங்கிய Antonius Patavinus Sermones என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

Matha Parikara Malar – March – June 2020

மகா பரிசுத்த தேவ நற்கருணைத்திருநாளன்று மனந்திரும்பிய அஞ்ஞானியாக இருந்த விஞ்ஞானி

 மகா பரிசுத்த தேவ நற்கருணைத்திருநாளன்று மனந்திரும்பிய அஞ்ஞானியாக இருந்த விஞ்ஞானி

பல வருடங்களுக்கு முன், லண்டனில், ரிச்சர்டு என்ற 30 வயதுடைய ஒரு இளம் விஞ்ஞானி வாழ்ந்து வந்தான். அவன், கத்தோலிக்க வேதத்தை முற்றிலுமாக வெறுத்து வந்தான்; சத்திய கத்தோ லிக்க வேதத்திற்கும், திருச்சபைக்கும் எதிராக அநேக புத்தகங்கள் எழுதியும், பேசியும் வந்தான். கத் தோலிக்க வேதத்தை அனுசரித்து வந்த அயர்லாந்து நாட்டைப் பற்றியும், அந்நாட்டின் கத்தோலிக்க

குருக்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த பாமரர்களான கத்தோலிக்கர்கள் பற்றியும், அவதூறாகவும், ஏளன மாகவும் எழுதி வந்தான். கடவுள் என்று ஒருவர் இல்லை, என்று அவன் கூறி வந்தான். ஒரு நாள், திடீ ரென்று, அவனுக்கு மூச்சு விடுவதற்கு மிகக் கஷ்ட மாயிருந்தது. உடனே, மருத்துவரிடம் சென்றான். அவனுடைய இருதயத்தையும், நுரையீரலையும் மருத் துவர் பரிசோதித்தார்.

பரிசோதனைக்குப் பிறகு, உன் இடது சுவாசப்பை

யில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு நீ நன்கு ஓய்வெடுக்க வேண்டும். ஓய்வெடுக்காவிட்டால், இரு மாதங்களுக்குள், இறந்து போய் விடுவாய்! எச்சரிக்கையாயிரு , என்று கூறினார். அதைக் கேட்டதும், திடுக்கிட்ட ரிச்சர்டு, டாக்டர், நான் நீங்கள் சொன்னபடி, ஓய்வெடுத்தால், எவ்வளவு காலம் உயிருடனிருப்பேன்? என்று கேட்டான். ஒன்று, அல்லது இரண்டு வருடங்கள் உயிருடன் வாழலாம், என்று, மருத்துவர் பதிலளித்தார். இதைக் கேட் டதும் , ரிச்சர்டின் முகம் வெளுத்துப்போனது. அவன், மருத்துவரிடம், டாக்டர், என்னால், இதை நம்ப முடியவில்லை! எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லையே! பயனற்ற மனிதர்கள் பலர் உயிருடன் இருக்கின்றனரே! நான், ஏன் இந்த வயதில் சாக வேண்டும்? என்று கேட்டான். அதற்கு, மருத்துவர், அவனிடம் , ரிச்சர்டு! இந்தத் துயரச் செய்தியை அறிவிப்பது எனக்கே மிகக் கஷ்டமாக இருக்கிறது! உனக்கு, ஒரு ஆலோசனையை நான் கூறுவேன். அயர்லாந்திற்குச் செல். அங்கு நல்ல சுத்தமான காற்று கிடைக்கும். அமைதியும், இளைப்பாற்றியும் கிடைக்கும், என்று கூறினார்.

ரிச்சர்டு , விதி எனக்கு இரக்கமின்றி துரோகம் செய்திருக்கிறது, என்று கூறிக்கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பினான். சமீப காலத்தில், அவன் உடல் நலமில்லாமலிருந்தான்; கடின உழைப்புடன் கூடிய விஞ்ஞான ஆராய்ச்சியில், ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிக நாட்கள் ஈடுபட்டிருந்தான். தன் ஆராய்ச்சியில் உயர்ந்த பட்டங்கள் பெற்றிருந்தான்; பலரிடமிருந்தும், பாராட்டுக்கள் கிடைத்தன! ஆனால், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தன்னை விஞ்ஞானத்தில் வளர்த்த இந்த லண்டன் நகரமே , தன்னை எங்கேயோவது ஓடி ஒளிந்துகொள்! என்று கூறுவது போல் , ரிச்சர்டுக்குத் தோன்றியது! தான் இறந்த பிறகு, தான் விஞ்ஞானத்தில் பெற்ற பட்டங்கள், சாதித்த சாதனைகள் எல்லாம் எங்கே போகும்? என்று ஆழ்ந்து சிந்தித்தான்; தன் நண்பர்களும், தன்னைப் பாராட்டிய கல்வியாளர்களும், பகுத்தறிவாளர்களும், சகல மனிதர்களும், தனது இறப்பிற்குப் பிறகு, தன்னை மறந்து விடுவார்களே, என்று சிந்தித்தபோது, அவனுடைய உள்ளத்தில், ஒரு திட்டம் உதித்தது. தன்னுடைய வீழ்ச்சியை, உலகம் அறிந்துகொள்ளக்கூடாது. அதற்கேற்ற ஒதுக்குப்புறமான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற திட்டம் தான், அது. அப்போது, அயர்லாந்து நாட்டிற்குச் செல்ல வேண்டும், என்று கூறிய மருத்துவரின் ஆலோசனை, அவனுடைய மனதில் உதித்தது.

புராட்டஸ்டன்டு பதித் தப்பறையைப் பின்பற்றுகிற நாடாகிய இங்கிலாந்தினுடைய தலை நகர் லண்டனில் இயங்கி வந்த ஒரு பதித பத்திரிகையில், வேத விசுவாசமில்லாத அஞ்ஞானியாக இருந்த இளம் விஞ்ஞானி ரிச்சர்டு , அயர்லாந்து நாட்டைப் பற்றிக் கடுமையாகத் தாக்கி எழுதியிருந் தான். அயர்லாந்து நாடு, கத்தோலிக்கக் குருக்கள் மலிந்த நாடு. விஞ்ஞானத்தில் வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடு தான் அயர்லாந்து, என்று எழுதியிருந்தான். ஆனால், இப்போது, அந்த நாட்டிற்கே செல்லும்படியாயிற்றே, என்று முதலில் சிறிது தயங்கினான். விஞ்ஞானத்தில் பிரபலமாயிருந்த சகல நாடுகளிலிருந்தும் ஒதுக்குப்புறமாயிருந்த அயர்லாந்து நாட்டிற்குச் செல்வதன் மூலம், அகில உலக விஞ்ஞானிகளிடமிருந்து, தனது வீழ்ச்சியை, அதாவது, தனது இறப்பை மறைத்துக் கொள்ளலாம், என்பதால், அயர்லாந்திற்கே செல்ல தீர்மானித்தான்.

இறுதியில் அயர்லாந்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று வசித்து வந்தான். அந்த கிராமம் மிக அழகாகக் காட்சியளித்தது. அன்று வியாழக்கிழமை. அந்த கிராமம் இன்னும் கூடுதல் அழகு டன் காட்சியளித்தது. நகரின் முக்கியமான பாதையை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். இருபுறமும், வயல்வெளிகளும், ரோஜா மலர்களும் கண்குளிரக்காட்சியளித்தன. முக்கியமான பாதை யின் அருகில் சென்றபோது, மக்கள் கூட்டம், கூட்டமாக எங்கோ விரைந்து செல்வதைக் கண்டான். அவர்கள் சிறந்த ஆடை அணிந்திருந்தனர். சிறுமிகளும், பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்; சிறுமிகள், மலர்களைக் கரங்களில் ஏந்திச் சென்றனர். ஒரு முதியவர், நொண்டியபடியே, அந்த பக்கம்

வந்தார். அவரிடம், ரிச்சர்டு, இன்றைக்கு , இந்த ஊரில் என்ன விசேஷம்? என்று, கேட்டான். அவர், அவனிடம், நீ என்ன இந்த ஊருக்குப் புதிதா? இன்று, என்ன திருநாள் என்று, இந்த ஊரிலிருக்கும் சிறு குழந்தைகள் கூட சொல்லுமே! இன்று, தேவ நற் கருணைத் திருநாள் ! கத்தோலிக்கத்திருச்சபை கொண் டாடும் திருநாட்களிலெல்லாம் மிகப் பெரிய திரு நாள் , இது தான்! இந்நகரின் முக்கியமான தெரு வழி யாக, தேவ நற்கருணை சுற்றுப்பிரகாரம் நிகழும், என்று பதிலளித்தார். சுற்றுப்பிரகாரமா, அப்படியென் றால் என்ன? என்று ரிச்சர்டு கேட்டான். அதற்கு அம் முதியவர், அவனிடம், திவ்ய நற்கருணையில் திரு ஆத்துமத்துடனும், திருச்சரீரத்துடனும், தேவ சுபாவத்துடனும், மனித சுபாவத்துடனும் எழுந்தருளியுள்ள சேசுகிறீஸ்துநாதருக்குத் தோத்திரமாக சுற்றுப்பிர கார பவனி நடக்கும். அப்ப வடிவில் ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் திவ்ய நற்கருணையை, ஒரு பொற்கதிர்பாத்திரத்தினுள் வைத்து ஸ்தாபிப்பார்கள்; குருவானவர், அல்லது மேற்றிராணியார், அக் கதிர்பாத்திரத்தை மிகுந்த சங்கை மேரையாக எடுத்து, தேவாலயத்திலிருந்து கிளம்பி, நகரத் தெருக்க ளில் பீடப்பரிசாரகர் புடை சூழ, நடந்து வருவார்; விசுவாசிகள் ஜெபமாலை ஜெபித்தபடி, அல்லது தேவ தோத்திரப் பாடல்கள் பாடியபடி, பக்தி பற்றுதலுடன் பின்தொடர்ந்து வருவார்கள். வழியில் வருபவர்கள் எல்லோரும், சுற்றுப்பிரகாரமாக வரும் தங்களுடைய திவ்ய கர்த்தரை, அந்தந்த இடங்க ளிலேயே முழங்காலிலிருந்து, பணிந்து ஆராதிப்பார்கள். இறுதியில், சுற்றுப்பிரகாரப் பவனி, தேவா லயத்தில் வந்து முடிவடையும், அதன் பின், தேவாலயத்தில் பிரசங்கமும், தேவநற்கருணை ஆசீர்வா தமும் நடைபெறும். அங்கே தான் நான் போகிறேன். நீயும், வரலாம்,

முதியவர் பேசியதை அவ்வளவு நேரமும், அலட்சியமாகக் கேட்டுக் கொண்டிருந்த ரிச்சர்டு, அவரிடம், உங்கள் முதிர்வயதில், நொண்டியபடி, கஷ்டப்பட்டுக்கொண்டு, இப்படி கட்டாயமாகப் போக வேண்டுமா? வீட்டில் இருக்கக் கூடாதா? என்று கேட்டான். அதற்கு அந்த நல்ல முதியவர், அவனிடம், நம் எல்லோரையும் சிருஷ்டித்த சர்வேசுரன், ஆடம்பரமாக சுற்றுப்பிரகார பவனி வரும் போது, நான் எப்படி வீட்டில் தங்கியிருக்க முடியும்? நானும் சென்று, நம்மைச் சந்திக்க வரும் திவ்ய கர்த்தரைத் தோத்தரித்து வணங்கி ஆராதிக்க வேண்டுமல்லவா? பாலஸ்தீனத்தில், ஆண்டவர் நடந்து சென்றபோது, ஜெருசலேம் நகர மக்கள், ஆர்ப்பரித்து அவரை ஸ்துதித்தார்களல்லவா? இப்போது, அதே போல், நம் ஊரின் தெருக்களிலும், அதே கடவுள் நம்மைச் சந்திக்க வருகின்றார்; நானும், அவரை ஆராதிப்பதற்குச் செல்கிறேன், என்று பதிலளித்தார். அதற்கு, ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு அப்பத்தில், கடவுள் உண்மையாக இருக்கிறார் என்று , நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டான். இதைக் கேட்டதும், முதியவர், அதிர்ச்சியடைந்தார்; பிறகு, அவனிடம், நீ , ஒரு புராட்டஸ்டன்டு பதித மதத்தைச் சேர்ந்தவனா? என்று கேட்டார். அதற்கு, அவன், கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, என்று கூறினான். அதற்கு, அவர், கடவுளிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியென்றால், உனக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். அதற்கு, அவன், நான் ஒரு விஞ்ஞானி. கடவுள் இருக்கிறார், என்பதைப்பற்றி உங்களுக்கு சந்தேகமே கிடையாதா? என்று கேட்டான். முதியவர், அவனிடம், என்ன? நீ , ஒரு விஞ்ஞானியா? உண்மையில், ஒரு விஞ்ஞானி, கடவுளை அறியாத அஞ்ஞானியாக இருக்க முடியாது. அப்படியென்றால், உண்மையில், நீ ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியாது. இந்த உலகைப் பார்க்கும் ஒரு சாமானிய பாமர மனிதனாலேயே இப்பரந்த பிரபஞ்சத்திற்கு அதன் காரண கர்த்தவாகிய சர்வேசுரன் ஒருவர் இருக்கிறார், என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடுமாயிருக்கும் போது, அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு விஞ்ஞானியால், இந்த உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாமல் போனது? அப்படியென்றால், அஞ் ஞானிகளால், கடவுள் இருப்பதை நம்ப முடியாததற்குக் காரணம், அவர்களுடைய ஆங்காரம் தான்; அது தான், அவர்களுடைய அறிவை இருட்டடிப்புச்செய்து, சர்வேசுரனிடமிருந்து, அவர்களைப் பிரித்து விடுகிறது, என்று, சிறு ஞான உபதேசத்தைக் கற்பித்தார்.

ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு அப்பத்தில், கடவுள் இருக்கிறார், என்று நம்புகிறீர்களா? என்று மறுபடியும், கேட்டான். அதற்கு, நான் இந்த அழகிய உலகத்தை நோக்கிப் பார்க்கிறேன். கடவுளைத் தவிர, வேறு யார் இதை உண்டாக்கியிருக்க முடியும்? கடவுள் எல்லாம் வல்லவர். அந்த சிறு அப்பத்தினுள் தம்மை மறைத்து வைப்பது, அவருக்குக் கடினமல்ல, என்று கூறினார். அயர்லாந்து, பாமர மக்கள் நிறைந்த நாடு என்று மிக ஏளனமாக, முற்காலத்தில், லண்டன் நகரப் பத்திரிகையில் தான் எழுதியிருந்ததை ரிச்சர்டு, நினைவு கூர்ந்தான். ஆனால், அது எவ்வளவு தவறு! உண்மையில், இந்நாட்டு மக்கள், ஞானமுள்ளவர்களாக இருக்கின்றனர், என்பதை, அவன் உணரத்துவக்கினான். அச்சமயம், ஒரு மேட்டிலிருந்து ரிச்சர்டு, மக்கள் கூட்டத்தைப் பார்த்தான்; செல்வந்தர்களும், ஏழைகளும், இளைஞர்களும், முதியவர்களும் அடக்க ஒடுக்கமாக நடந்து செல்வதைக் கண்டான்; பக்தியுடன் நடந்து சென்ற அவர்களின் பார்வையில், வேத விசுவா சத்தைக்கண்டான்; அவர்கள் இருதயம், பரலோகசந்தோஷத்தினால், நிறைந்திருந்தது! ஆண்டவர் சுற்றுப் பிரகாரமாக வரும்பாதையில், சிறுவர்களும், சிறுமியர்களும், ரோஜா மலர்களைத் தூவிக் கொண்டே சென்றனர். இனிய பாடல்கள் பாடியபடி சென்றனர். நான்கு பேர் தூக்கிச் சென்ற ஒரு குடையின் நிழலில், குருவானவர், பொற்கதிர்பாத்திரத்தை பக்தி பற்றுதலுடன் ஏந்தியபடி, நடந்து சென்றார்.

ரிச்சர்டு நின்று கொண்டிருந்த மேட்டுப் பகுதியை சுற்றுப்பிரகார பவனி , அணுகிக் கொண்டிருந்தது. அருகில் வர வர, குருவானவர் கரத்திலிருந்த பொற்பாத்திரத்தினுள்ளிருந்த திவ்ய அப்பத்தை ரிச்சர்டு , நோக்கிப் பார்த்தான். குருட்டாட்டம், விக்கிரக ஆராதனை என்று கத்தோலிக்கர்களின் பக்தி முயற்சிகள் பற்றி லண்டன் பத்திரிகைகளில் அவன் எழுதிய கட்டுரைகள், ரிச்சர்டுக்கு ஞாபகத்திற்கு வந்தன. விஞ்ஞானமே கடவுள், என்று அதில் அவன் எழுதியிருந்தான்; எவ்வளவு பெரிய தப்பறையை எழுதிவிட்டேன்! அதுவும் கடவுளுக்கு எதிராக எழுதிவிட்டேன், என்று சிந்திக்கலானான். ஏனெனில், இப்போது, சாவு, அவன் கண்முன் நின்றது. உலகப்புகழ் பெற்ற , மிகச் சிறந்த விஞ்ஞானியான லூயி பாஸ்டர் எழுதிய வாக்கியங்கள் பற்றி சிந்தித்தான்; அவை உண்மையிலேயே, இந்த அயர்லாந்து நாட்டின் முதியவர், இவ்வளவு நேரம் தனக்குக் கூறிய ஞான உபதேசத்தைப் போலவே இருப்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தான் : பிரிட்டனி நாட்டு , ஏழைக் குடியானவன் சர்வேசுரனிடம் கொண்டிருக்கும் விசுவாசம் என்னிடமும் இன்னும் உறுதியாக இருக்கிறது என்பது பற்றி நான் மகிழ்கிறேன். விஞ் ஞானத்தில் நான் வளர்ச்சி அடைய அடைய , என் விசுவாசமும் இன்னும் கூடுதல் உறுதி பெறும் என்று நம்புகிறேன். பிரிட்டனி நாட்டு ஏழைக்குடியானவனின் மனைவியின் விசுவாசத்தைப் போல், என் விசுவாசமும் உறுதி பெறும் என்பது நிச்சயம், என்று லூயி பாஸ்டர் எழுதியிருந்தார். இவ்வளவு காலமாக, உலகில் தன்னைச் சுற்றியிருந்த சகல பொருட்களும், சர்வேசுரன் இருக்கிறார், என்று உணர்த்திய மாபெரும் சத்தியத்தை ஏற்காமல், அஞ்ஞானியாக வாழ்ந்ததைப் பற்றி, ரிச்சர்டு வெட்கப்பட்டான்;

கடவுள் இல்லை என்று கூறியதுடன், சர்வேசுரனை முழுமையாக அறிந்து, சிநேகித்து, சேவித்து, பரலோக சமாதானத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் கத்தோலிக்கர்களுடைய அயர்லாந்து நாட்டைப் பற்றி ஏளனமாகப் பேசினேன். ஆனால், என் மேல் அளவில்லாத சிநேகமுள்ள திவ்ய கர்த்தர், தயாளம் நிறைந்த தமது பராமரிப்பினால், வேத விசுவாசம் என்கிற உன்னத கொடையை நான் பெற்றுக்கொள்ளும்படி, என்னை, அதே அயர்லாந்து நாட்டிற்கு வரும்படிச் செய்திருக்கிறார்; இந்த உண்மையான விஞ்ஞானியான லூயி பாஸ்டரிடம் இருந்த வேத விசுவாசம், எனக்கும் வேண்டும், என்று முதன் முதலாக சிந்திக்க ஆரம்பித்தான். தேவ வரப்பிரசாத ஏவுதலுக்குச் செவிசாய்த்தான்.

அயர்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில், மக்கள் அனுபவித்து வந்த அமைதியையும், பரலோக சந்தோஷத்தையும், ரிச்சர்டு நேரடியாகப் பார்த்தான். உண்மையி லேயே சர்வேசுரனை விசுவசிப்பவர்களுக்கு, சர்வேசுரன் தாமே அளிக்கும் பரலோகக் கொடைகள் என்பதையும், மேலும் தம் பரலோகக் கொடைகளை தம்மைச் சந்திக்க வருபவர்க்கெல்லாம் வழங்குவதற்காகவும், அதே சர்வே சுரன், அங்கே வந்து கொண்டிருக்கிறார், என்பதையும், ரிச்சர்டு கண்டுணர்ந்தான். இப்பொழுது, குரு அவனுக்கு சமீபத்தில் வந்தார். மோட்சமே, தனக்காகக் கீழே பூலோ கத்திற்கு இறங்கிவந்தது போல், அவனுக்குத் தோன்றியது. பரலோகவாசிகளே, தங்கள் சர்வேசுரனை, ஆடம்பரமா கவும், மிகுந்த பக்தி பற்றுதலுடனும், சுற்றுப்பிரகாரமாகக் கொண்டு வருவதுபோல், அவ்வளவு ஒழுங்குக் கிரம் மும், பரலோக சந்தோஷத்தின் நறுமணமும், அந்த கிராமம் முழுவதும் எங்கும் வியாபித்துப் பரவியிருந்ததை ரிச்சர்டு உணர்ந்தான்; உடனே, பொற்கதிர்பாத்திரத்தினுள்ளிருந்த மகா பரிசுத்த தேவநற்கருணையை உற்று நோக்கியபடி, ரிச்சர்டு, என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன்! என்று உரக்கக் கூறினான்; அந்த இடத் திலேயே முழங்காலிலிருந்து, தாழ்ந்து பணிந்து, தன் மேல் அளவில்லாத சிநேகத்துடன், தன்னை பூலோக மோட்ச மாகத் திகழும் இந்த அயர்லாந்தின் கிராமத்திற்கு வர வழைத்த, திவ்யகர்த்தரை ஆராதித்தான். பிறகு, ஆண்டவருக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக, சுற்றுப்பிரகாரத்துடன் சேர்ந்து, தேவாலயத்திற்குச் சென்றான்; தேவநற்கருணை ஆசீர்வாதத்திற்குப் பிறகு,

நீண்ட நேரம், ஆங்காரத்தினால், இவ்வளவு காலம் ஆண்டவரை விட்டுப் பிரிந்து நீசப்பாவியாக வாழ்ந்ததற்காக, மனஸ்தாபப்பட்டான்; அஞ்ஞானிகளைப் போலவே, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் புராட்டஸ்டன்டு , லூத்தரன் பதித சபையினரும், உண்மையான சர்வேசுரனை அறியாமல், ஆங்காரத்தினால், மனிதர்கள் உருவாக்கிய பதித சபைகளில் சேர்ந்து, முழுமையும் தப்பறையான மதத்தில் வாழ்கின்றனர், என்பதையும் , ரிச்சர்டு உணர்ந்தான் பதித மார்க்கத்திலிருந்து, தன்னைத் தப்புவித்து, சர்வேசுரன் தாமே ஸ்தாபித்த சத்திய திருச்சபையில் தம்மை சேர்த்துக்கொண்ட ஆண்டவருடன், சல்லாபித்த படி, தேவசிநேக முயற்சிகள் செய்து கொண்டு, தேவாலயத்திலேயே தங்கியிருந்தான். Deo Gratias! |

சனி, 23 அக்டோபர், 2021

Fatima In the Light of the History by Coasta Brochado

 PREFACE BY MANOEL CARDOZO 




THE story of Fatima has been told many times in many tongues, but here is a new approach to an old subject that everybody, particularly those who pray to Mary under her latest title, will want to read. This unusual book, which Dr. Boehrer's lucid translation now makes available to a wider public, must surely be considered not only as a means of deepening our understanding of Fatima but also as a significant contribution to the literature of the Marian Year.

 What the author has to say he says in terms of Portugal and of Portuguese history. Our Lady, after all (possibly because of the great devotion to her that has always characterized the Portuguese, as Mr. Brochado points out) chose to appear in Portugal. She might have again appeared in France, as she did at Lourdes and at La Salette, but this time she revealed herself in Portugal. Since our Lady could not have appeared at Fatima unless she wanted to, we may suppose that she wanted Portugal to serve as an example of something of worldwide significance and application. That is why Mr. Brochado's book, though it deals with the Portuguese implications of Fatima, must necessarily have much more than local interest. Our Lady may well be using Portugal as an example to the rest of the world, and if this is in fact what she is doing, the Portuguese experience is of universal value. 

What went wrong in Portugal that made the country seem to need a miraculous intervention in 1917 to save its faith? The answer to this question can be fully appreciated by reading Mr. Brochado's book. With broad strokes of the pen, the author has outlined the introduction of Christianity in Portugal, its development during the Middle Ages, its missionary apostolate at the time of the Renaissance and later, the antireligious movement of the eighteenth century, the Masonic-Liberal offensive of the nineteenth and early twentieth centuries, and finally the more immediate disasters that preceded the apparitions at Fatima. The past two hundred years of a Christian history of almost two millennia do not make a pretty picture, but we may be sure that what happened in Portugal has happened elsewhere. 

Mr. Brochado suggests that our Lady saved the Church in Portugal, and that only through her may we explain its recovery. The facts of history, as he has pieced them together, seem to point in that direction, although no man can pretend to know the super-natural explanation for this historically palpable phenomenon. 

What we can say and what he does say, and this without qualms, is that Fatima has strengthened the faith of Portugal beyond the dreams of those who, only a few years ago, were witnesses to our Lady's presence. Fortunately for us, our Lady did not appear for the exclusive benefit of the Portuguese (though they were favored above all others ). In helping the Portuguese, through a practical application of the message of Fatima, she has indicated a means by which we may be helped, too. 

MANOEL CARDOZO 


Download it Here - Fatima in the Light of History









Download SODALITY OF OUR LADY - By FATHER ELDER MULLAN, S.J.

SODALITY OF OUR LADY


HINTS AND HELPS FOR THOSE IN CHARGE

BY
FATHER ELDER MULLAN, S.J.
AUTHOR AND COMPILER OF
“THE BOOK OF THE CHILDREN OF mary





THE sole aim of this little book is to be useful. The plan is as follows: —The General Statutes, which are given first, are the basis of the whole. The remainder of the book comprises twenty-eight chapters in five parts. 

  1. The first part presents general information and aids. This includes an outline of the Church Law on these bodies, and directions for applying it in their establishment. 
  2. The second part considers the Sodality already in existence, and, after describing the character of the body, proposes general ways of maintaining its successful action. 
  3. The third part deals with the spiritual life of the members and with matters that touch its various occasions and manifestations. Here belong the exercises of piety, individual and collective, and the works of zeal. 
  4. The fourth part has to do with the less frequent Sodality events, treating them in the order of their frequency. Some hints are added as to members no longer active. 
  5. The fifth part consists of a chapter of personal suggestions for the one in charge of the Sodality.
 As to the sources. The General Statutes are a careful translation from the official document. The Points from Church Law have been drawn from Beringer's invaluable work on Indulgences, and from various works on Canon Law. The practical suggestions, which form the main part of the book, are largely the result of repeated experiments made by many directors, sub-directors, and directresses. 

The hints and helps cannot, of course, all be turned to use everywhere. Many things that are possible in one Sodality cannot be done in another. The circumstances have always to be measured. But when one looks about and considers, one often finds much possible and even easy which had been thought so difficult as to be out of the question. Besides, it is very often true that where there is a will there is a way. It will be understood that this little book is meant for sub-directors and directresses as well as priest-directors. The last of these titles has oftenest been used for convenience. 

The good will to lead their Sodalists on to what is best and highest is abundant in Sodality directors, sub-directors, and directresses. It was the hope of somehow stimulating this good will and giving it new objects to work on that led the author, or rather compiler, to put this book together. 

    ELDER MULLAN, S. J. 
      WOODSTOCK COLLEGE. 









        Life History of Fr. Damien in Tamil

         Download the Life History of Fr. Damien in Tamil. 



        வெள்ளி, 8 அக்டோபர், 2021

        Download - HIDDEN GOD - HOW DO WE KNOW THAT GOD EXISTS ?

         

        Fernand Van Steenberghen
        PROFESSOR AT THE UNIVERSITY OF LOUVAIN




        HOW DO WE KNOW
        THAT GOD EXISTS ?

        Vere tu es Deus absconditus,
        Deus Israel Salvator!
        (Isaias, XLV, 15)

        TRANSLATED BY
        THEODORE CROWLEY, O.F.M.

        READER IN SCHOLASTIC PHILOSOPHY AT
        THE queen’s UNIVERSITY, BELFAST



        PUBLICATIONS
        UNIVERSITAIRES  DE LOUVAIN
        2, PLACE CARDINAL MERCIER
        LOUVAIN



        B. HERDER BOOK CO.

        314 NORTH JEFFERSON
        SAINT LOUIS
        MISSOURI 63103
        1966




        ----------------------------Sample pages---------------------------