Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - விபூதி (Ash)

விபூதி

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

விபூதி என்பது சாம்பல், தபசுகாலத்துக்கு ஆரம்பமாகியிருக்கிற புதன்கிழமை விபூதித் திருநாள் என்று பெயர் வழங்கிவருகிறது. தபசுகாலம் நாற்பது நாள் அடங்கியது. நாம் நமது சரீரத்தைத் தண்டித்து அடக்க வேண்டும் என்பதின் அவசியத்தைத் திருச்சபை நமக்கு இந்த நாட்களில் நினைப்பூட்டுகிறது. தபசு செய்யாமல் அலட்சியமாயிருக்கிறவன் கெட்டழிந்துபோகும் ஆபத்தைத் தேடிக் கொள்கிறான். கிறீஸ்தவன் தனது கடைசி முடிவையும், மண்ணுக்குத் திரும்பிப் போகவேண்டியதையும் எக்காலமும் மறந்துபோகக் கூடாது என்பதும் திருச்சபையின் கருத்து.



நாம் பிறக்கும்பொழுதே, பாவத்தோடு பிறக்கிறோம். பின்னும் புத்தி விபரம் அறிந்தது முதல் எத்தனையோ பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். இவைகளால் சர்வேசுரனுக்கு உண்டாகும் கோபத் தைத் தபசினாலும் பரித்தியாக முயற்சிகளினாலும் தணிக்கப் பிரயாசப்பட வேண்டுமென்று திருச்சபை வலியுறுத்துகிறது. நம் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கடமையை நமக்கு எடுத்துரைப்பதற்காகவே விபூதி திருநாள் அன்று சாம்பலை மந்திரித்து நெற்றியில் பூசுகிற சடங்கு ஏற்படலாயிற்று.

பூர்வீக வழக்கம்:

இருச்சபையில் வழங்கி வருகிற மற்ற அநேக ஆசாரங்களைப் போலவே, சாம்பலின் உபயோகமும் ஜனங்களுக்குள். ஏற்கனவே அநுசரிக்கப்பட்டுவந்த வழக்கங்களில் ஒன்றுதான். பழைய ஆகமங்களில் இதன் உபயோகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாவீது இராஜா தன் பாவங்களுக்காகப் பச்சாதாபப்பட்டு, "சாம்பலைப் போஜனம் போலும் புசித்துக் கண்ணீரால் என் பானத்தைக் கலந்தேன்" என்று கூவினார். யோனாஸ் தீர்க்கதரிசி செய்த பிரசங்கத்தின் பயனாக, நினிவே நகரத்தார் தபசு செய்யத் தீர்மானித்து சாக்குத் துணியை உடுத்திக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்து இருந்தார்கள். ஆகையால் திருச்சபை ஆரம்பத்தில் மனந்திரும்பின யூதர் இந்த வழக்கத்துக்குக் காரணமாயிருந்தார்கள் என்று சொல்ல நியாயமுண்டு.

திருச்சபை ஆரம்ப காலங்களில் சாம்பல் பெரும் பாவிகளுக்கு விதித்த தண்டனைகளில் ஒன்றாயிருந்தது. கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டவர்கள் மன்னிப்படைய வேண்டுமானால், விபூதித் திருநாட் காலையில் தபசுக்குரிய உடை உடுத்திக் கோவில் வாசற்படியில் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களுக்குச் சாக்குத்துணியை அணிந்துகொள்ளக் கொடுத்துச் சாம்பலை அவர்கள் மேல் தூவுவார்கள். அன்று முதல் பெரிய வியாழக்கிழமை வரைக்கும் கோவிலில் பிரவேசிக்கக்கூடாது என்று சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பிரசித்தமான பாவிகளல்லாதவர்களில், பக்திமான்கள் சிலர் தாழ்ச்சியின் காரணமாக மேற்கூறினவர்களுக்குப் போலவே தங்கள் பேரிலும் சாம்பலைத் தூவும்படி கேட்டுக் கொண்டார்கள். இதிலிருந்துதான், நாளாவட்டத்தில் கத்தோலிக்கர் யாவருக்கும் சாம்பல் பூசுகிற வழக்கம் உண்டானது. 1090-ம் வருடத்தில் இதைப்பற்றிச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

தற்கால வழக்கம்:

முந்தின வருடக்கில் குருத்து ஞாயிறன்று மந்திரித்த குருத்துகளைச் சுட்டு அந்த சாம்பலைத்தான் விபூதித் திருநாள் அன்று உபயோகிக் கிறார்கள். சில ஞான ஆசிரியர் இதற்கு ஓர் அர்த்தமுங் கூறி விளக்கி யிருக்கிறார்கள். குருத்து வெற்றிக்கு அடையாளம். பாவத்தின் பேரி லும், பசாசின் பேரிலும் நாம் வெற்றி அடையவேண்டும். தாழ்ச்சியும் தபசுமின்றி இந்த வெற்றியை நாம் அடைய முடியாது என்பதற்குச் சாம்பல் அடையாளம் என்று சொல்கிறார்கள்.


சாம்பலை மந்திரிக்கும் போது குருவானவர் சொல் கிற நான்கு ஜெபங்களில் வெகு நேர்த்தியான கருத் துக்கள் நிறைந்துள்ளன. பாவிகளாகிய நம்மை சர்வேசுரன் காப்பாற்றி, சாம்பலும் தூசியுமான நமது பேரில் இரக்கமா யிருந்து, இந்த சாம்பலை  நமக்கு இரட்சண்ய மருந் தாக்கி, நினிவே நகரத் தார் தபசு செய்யத் தீர்மானித்ததைக் கண்டு சர்வேசுரன் அவர்களை அழித்துப் போடாமல் காப்பாற்றின வண்ணம் தபசு செய்து மன்னிப்படைய விரும்புகிற நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடுவதே இந்த ஜெபங்களில் உள்ள சாராம்சம்.

சாம்பலை மந்திரித்தபின் குருவானவர் அதை எடுத்து இதர குருக்கள் உச்சியிலும் விசுவாசிகளின் நெற்றியிலும் பூசி, "மனிதனே. நீ தூசியாயிருக்கிறாய், மீண்டும் தூசியாய் போவாய் என்று நினைத்துக்கொள்” என்று சொல்கிறார். நாம் எல்லோரும் ஒருநாள் மரிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை இது நமக்கு நினைப்பூட்டு கிறது. ஓர் ஞான ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல் சுட்ட சாம்பலை இன்னும் சுடாத சாம்பலோடு கலக்கிறார். ஆண், பெண், பெரியோர், சிறியோர் சகலரும் இதை நெற்றியில் தரித்துத் தங்கள் கடைசி முடிவை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக. சாம்பலை மந்திரித்துப் பூசுவது நாம் ஒருநாள் மரிக்க வேண்டும் என்பதையும், தாழ்ச்சியும், தபசு முயற்சிகளும் பாவத்துக்குப் பரிகரிக்க அவசியம் என்பதையும் நினைப்பூட்டுவதற்காகவேயன்றி வேறல்ல.

விபூதி மந்திரிக்கும் சடங்கு:

முந்தைய ஆண்டு குருத்து ஞாயிறன்று மந்திரித்த ஒலிவ மரக் கொம்புகள் அல்லது குருத்தோலைகளைச் சுட்டெரித்து எடுத்த சாம்பலைக் குருவானவர் பூசைக்குமுன் மந்திரிக்கிறார். (குரு ஊதா காப்பாவைத் தரித்துக்கொண்டு, பீடத்திலேறி நடுவில் முத்தஞ்செய்து, நிருபப்பக்கஞ் சென்று பின்வருமாறு சொல்லுவார். பாடகர் பாடுவார்கள்.)

ஆரம்ப வாக்கியம் - சங். 68:17:

ஆண்டவரே. உமது இரக்கம் மகா பட்சம் நிறைந்த தாகையால், எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்தருளும். ஆண்டவரே, தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்திற் கேற்றபடி எங்களை நோக்கியருளும். (சங். டிெ:2) சர்வேசுரா. தேவரீர் என்னை இரட்சியும்; ஏனெனில் வெள்ளம் என் ஆத்துமம் மட்டும் பெருகி நுழைந்தது. பிதாவுக்கும். (மறுபடியும்: "ஆண்டவரே...."சங்கீதம் வரையில்)

 (குரு அங்கேயே நின்றுகொண்டு, கரங்களைக் குவித்த வண்ணம்:)

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக;
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.

செபிப்போமாக: (செபம் 1)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, பச்சாதாபப் படுகிறவர்களை மன்னித்தருளும்; தேவரீரை மன்றாடுகிறவர்கள்மீது இரக்கமாயிரும்: பரமண்டலங்களிலிருந்து உமது பரிசுத்த சம்மனசானவரைத் தயவுகூர்ந்து அனுப்பி, இந்தச் சாம்பலை (இரு முறை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு) ஆசீர்வதித்து அர்ச்சிக்கும்படி செய்தருளும். உமது பரிசுத்த நாமத்தைத் தாழ்ச்சியோடு மன்றாடு கிறவர்களுக்கும். தங்கள் பாவங்களைத் தாங்களே மனதார உணர்ந்து தங்கள் குற்றங்களைக் தாங்களே ஒப்புக்கொண்டு, உமது தெய்வீகத் தயவின் சமுகத்தில் தங்கள் அக்கிரமங்களை நினைத்து, மனம் நொந்து வருந்துகிறவர்களுக்கும், அல்லது உமது தாராளம் நிறைந்த நன்மை பெருக்கத்தைத் தாழ்மையோடும் தளரா நெஞ்சத் தோடும் இரந்து மன்றாடுகிற யாவருக்கும். இந்தச் சாம்பல் இரட் சண்ய சுகந்தரும் மருந்தாயிருப்பதாக! இந்தச் சாம்பலை இட்டுக் கொள்ளுகிறவர்கள் எல்லோரும் மது மகா பரிசுத்த நாமத்தை மன்றாடுவதின் மூலமாகத் தங்கள் பாவங்களினின்று விடுதலை யடையவும், சரீர சுகத்தையும் ஆத்துமப் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளவும் அநுக்கிரகஞ் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

செபிப்போமாக: (செபம் 2)

பாவிகள் அழிந்துபோகவேண்டுமென்றல்ல. ஆனால் அவர்கள் பச்சாதாபப்படவேண்டுமென்று விரும்புகிற சர்வேசுரா, மனித சுபாவத்தின் பலவீனத்தைத் தயவாய்க் கண்ணோக்கி, தாழ்ச்சிக்கு அடையாளமாகவும், பாவமன்னிப்படையப் பேறுபெற்றவர்களாகவும் எங்கள் நெற்றியிலிட்டுக் கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கும் இந்தச் சாம்பலை உமது நன்மைத்தனத்தை முன்னிட்டு (சிலுவை அடையாளம் வரைந்துகொண்டு)ஆசிர்வதித்தருளக் கிருபை செய்து, தாங்களும் சாம்பலாயிருக்கிறோமென்றும், எங்கள் அக்கிரமத்துக் குத் தண்டனையாக மீளவும் சாம்பல் ஆவோமென்றும் அறிந்திருக் கிற நாங்கள் சகல பாவங்களுக்கும் மன்னிப்பையும், மனஸ்தாபப் படுகிறவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிற சம்பாவனையையும் தேவர்ருடைய இரக்கத்தால் அடையும் அநுக்கிரகஞ் செய்தருளும். - எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.


செபிப்போமாக: (செபம் 3)

தாழ்மையைக் கண்டு மனம் இளகுகிறவரும், பாவப் பரிகாரத்தினால் கோபந் தணிகிறவருமான சர்வேசுரா, எங்கள் விண்ணப்பங்களுக்குத் தேவரீருடைய அன்பின் செவிசாய்த்து, இந்தச் சாம்பலைப் பூசிக் கொள்ளும் உம் அடியார்கள் சிரசின் மீது உமது ஆசீர்வாத அருளைப் பரிவுடன் பொழிந்து, அவர்களை மனஸ்தாப உணர்ச்சியால் நிரப்பி, அவர்கள் நியாயமாய் கேட்கும் வரங்களைத் தவறாமல் தந்து, தந்தருளிய கொடைகள் எந்நாளும் பழுதின்றி நிலைத்திருக்கும்படி கட்டளையிட்டருளும். -எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துளின் பேரால் -ஆமென்,

செபிப்போமாக: (செபம் 4)

சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, சாம்பலும் சாக்குத் துணியும் அணிந்து தவம் செய்த நினிவே நகரத்தாருக்கு தேவரீருடைய இரட்சண்ய சுகந்தரும் மன்னிப்பையளிக்கச் சித்தமானீரே; தாங்களும் அவர்களைப் போல் மன்னிப் படைவதற்கு ஏற்ற வண்ணம், அவர்களுடைய தவத்தை வெளியரங்கமாய்ச் சாம்பல் பூசிப் பின்பற்றும்படி எங்களுக்குத் தயவாய் அநுக்கிரகஞ் செய்தருளும் எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் -ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக