Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிலுவை அடையாளம்


நாம் வழக்கமாக ஜெபிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.  

திருச்சபையில் நாம் எந்த ஒரு செயலை செய்யும் முன்னும், அல்லது முடிந்த போதும் சிலுவை அடையாளம் இல்லாமல் இருக்காது.

நாம் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்ட உள்ள பொதுவான வழி சிலுவை அடையாளம் தான்.

சிலுவை அடையாளம் நம்முடைய இரட்சணியத்தின் அடையாளம்.
எனவே நாம் அதனை மெதுவாகவும் மிகுந்த மரியாதையுடனும் வரைய வேண்டும்.

நாம் எப்பொழுது எல்லாம் சிலுவை அடையாளம் வரையலாம்?

  • நாம் காலையில் படுக்கையில் இருந்து எழும் போது 
  • நாம் இரவில் தூங்க செல்லும் முன் 
  • ஜெபிப்பதற்கு முன்னும் பின்னும் 
  • ஒரு வேலையை தொடங்குவற்கு முன்னும், வேலை முடிந்த பிறகும்.
  • எப்பொழுது எல்லாம் பாவ சோதனையில் விழுகிறோமோ அப்பொழுது எல்லாம் 
  • ஆபத்தில் இருக்கும் போது எல்லாம்.
  • பூசையின் பொது, ஆசிர்வாதத்தின் போது குருவானவர் நம்மை ஆசிர்வதிக்கும் போது நாம் சிலுவை அடையாளம் வரையவேண்டும் .
  • நாம் வாகனத்தில் பயணம் செய்யும் முன்பாக சிலுவை அடையாளம் வரைந்து நமது பயணத்தை தொடங்கலாம்.
 
 
 

புதன், 21 ஆகஸ்ட், 2019

ஆகஸ்ட் 22 மரியாயின் மாசற்ற இருதய திருநாள்

மரியாயின் மாசற்ற இருதயமே ‡ எங்கள் இரட்சணியமாயிரும்

ஆகஸ்ட் 22
மரியாயின் மாசற்ற இருதய திருநாள்