Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Saints life History in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saints life History in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 2 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 25 - அர்ச். அத்தனாசியார் (St. Anthanasius, May 2)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2ம் தேதி

🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான  

அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹




🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்;  பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.

கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது!  என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்! 

பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம்  கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு  எதிரானதுமான  ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;

நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்;  5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர்  அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்;  புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும்,  பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம்   பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝

“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝

🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Tags:

Feast of St. Anthanasius, 

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 21 - அர்ச்.சிலுவை சின்னப்பர் (April 28) St. Paul of Cross

ஏப்ரல் 28 தேதி


ஸ்துதியரும் வேதபாரகருமான அர்ச்.சிலுவை சின்னப்பர் திருநாள்




இவர் வடக்கு இத்தாலியிலுள்ள லிகூரியா மாகாணத்திலுள்ள  ஓவடா என்ற ஊரில் 1694ம் வருடம் ஜனவரி 3ம் தேதியன்று பிறந்தார்; பியட்மோன்ட்டின் அலெஸ்ஸான்டிரியாவிற்கு அருகிலுள்ள காஸ்டலா ஸோவைச் சேர்ந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயாருக்கு, இவர் பிறப்பதற்கு முன் ஏற்பட்ட பிரசவவேதனையின் சமயத்தில், ஒரு அதிசய பரலோக ஒளி இவருடைய தாயார் படுத்திருந்த அறையை ஒளிர்வித்தது! இப்பரலோக ஒளி, இவருடைய வருங்கால பரிசுத்தத்தனத்தினுடைய ஒளியின்  பிரகாசத்தை முன்னறிவித்தது! மேலும், இவர் குழந்தையாயிருந்தபோது, ஆற்றில் விழுந்து விட்டார்; அச்சமயம், பரலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா, புதுமையாக, இவரை எந்தக் கேடும் இல்லாமல் காப்பாற்றினார்கள்! புத்தி விவரம் வந்த நாள் முதற்கொண்டு, இவர், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவர் மீதான அத்தியந்த சிநேகத்தினால் நிறைந்திருந்தார்! மேலும், சிலுவையில் அறையுண்டிருக்கும் திவ்ய இரட்சகர் மீதான  தியானத்தில், அதிக நேரத்தை செலவிடத் துவக்கினார்.

இவர் தனது மாசற்ற சரீரத்தை கண்விழிப்புகளாலும், உபவாசங்களாலும், சாட்டை கசை அடிகளாலும், ஒறுத்துத் தண்டித்து வந்தார்; வெள்ளிக்கிழமைகளில், பிச்சுக் கலந்த காடியைக் குடித்து வந்தார்; மற்ற எல்லா விதமான கடின தபசுகளையும் ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து வந்தார். ஒரு வேதசாட்சியாக, சத்திய வேதத்திற்காக தன் உயிரை விடுவதற்கு ஆசித்தவராக, துருக்கியருக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக, வெனிஸில் திரட்டப்பட்ட  படைவீரர்களின் பட்டியலில் தன்னையும் சேர்க்கும்படிச் செய்தார்; ஆனால், சர்வேசுரனுடைய திருச்சித்தம், இதற்கு மாறாக இருப்பதை, ஜெபிக்கும்போது உணர்ந்தார்;  படைக் கருவிகளுடன் சண்டையிடும் இராணுவத்தில் சேர்வதைக் கைவிட்டார்; ஆனால், தன் சகல வல்லமையுடனும் எல்லா மனிதர்களுடைய நித்திய இரட்சணியத்திற்காகப் பாடுபடுகிற திருச்சபையைப் பாதுகாக்கிற உன்னதமான இராணுவத்தில் சேரத் தீர்மானித்தார்; இவர் வீடு திரும்பியதும், மிக செல்வாக்கும் புகழும் சம்பாதிக்கக் கூடிய திருமணத்தையும், தன் மாமா விட்டுச் சென்ற ஆஸ்தியையும் மறுத்து விட்டார்; குறுகலான சிலுவைப் பாதையினுள் நுழையவும்,மேற்றிராணியாரிடமிருந்து கரடுமுரடான துறவற உடுப்பைப் பெற்றுக்கொள்ளவும் இவர் ஆசித்தார்;  பின் இவர் மேற்றிராணியாருடைய கட்டளையினால், இவர் குருவானவராக இல்லாதபோதே, இவருடைய ஜீவியத்தின் மேம்பட்ட பரிசுத்தத்தனத்தினிமித்தமாகவும், தேவ காரியங்கள் பற்றி இவர் பெற்றிருந்த அறிவின் காரணமாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததினால், ஆண்டவருடைய வயலில் உழுது , மாபெரும் பலனை அறுவடை செய்தார்; அநேக ஆத்துமங்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்தார்;

இவர் உரோமாபுரிக்குச் சென்றார்; வேத இயல் கற்ற பிறகு, 13ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசரின் கட்டளையால், குருப்பட்டம் பெற்றார்; இவர் தன்னுடன் கூட சகக் குருக்களைச் சேர்த்துக் கொள்வதற்கு, பாப்பரசர் அனுமதியளித்தார்; அதன்படி, ஏற்கனவே தன்னை அர்ஜென்டாரோ மலைக்கு வரும்படி மகா பரிசுத்த தேவமாதா அழைத்திருந்த அதே மலைக்குச்  சென்று, ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கச் சென்றார்; மேலும் மகா பரிசுத்த தேவமாதா காண்பித்திருந்த அவர்களுடைய திவ்ய குமாரனுடைய  பரிசுத்தப் பாடுகளைக் குறிக்கும் அடையாள சின்னத்தைப் பொறித்த கறுப்பு உடுப்பை உடுத்திக்கொண்டார்; அங்கே அவர் ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபித்தார்; அது தான் “ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் துறவற சபை”. குறுகிய காலத்தில், சர்வேசுரனுடைய ஆசீர்வாதத்தினால், இத்துறவறசபை மிக துரிதமாக அதிகரித்து வளர்ச்சியடைந்தது! இவருடைய கடினமான அயரா உழைப்பினால் இத்துறவற சபை வளர்ந்து வந்தது; அநேக உயர்குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களும் இச்சபையில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்; இத்துறவற சபைக்கான உறுதிப்பாட்டை ஒரு முறைக்கு மேலாக திருச்சபையின் தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொண்டது! அர்ச்.சிலுவை சின்னப்பர் ஜெபத்தில் பெற்றுக் கொண்ட இச்சபைக்கான விதிமுறைகளையும் திருச்சபை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது; “நமதாண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றிய  ஆசிர்வதிக்கப்பட்ட ஞாபகத்தை ஊக்குவித்துப் பரப்புவது” என்கிற நான்காவது வார்த்தைப்பாடும் இத்துறவற சபையின் வார்த்தைப் பாடுகளுடன் சேர்க்கப்பட்டது!

பரிசுத்த கன்னியர்களின் ஒரு துறுவற சபையையும் இவர் ஸ்தாபித்தார்; இப்பரிசுத்தக் கன்னியர், இடைவிடாமல், தேவ பத்தாவானவருடைய சகலத்தையும் மிஞ்சும் உன்னதமான  சிநேகத்தைப் பற்றி தியானித்துக் கொண்டிருப்பார்கள்!

இந்த எல்லா ஞான அலுவல்களிலும், இவர் ஆன்மாக்கள் மேல் கொண்டிருந்த அயரா சிநேகமானது, ஒருபோதும், இவர் சுவிசேஷத்தைப் போதிப்பதில் சோர்வடையாமலிருக்கும்படிச் செய்தது! இவர் எண்ணிக்கையில்லாத திரளான மனிதர்களை, மிகவும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மனிதர்களையும், பதிதத் தப்பறையில் விழுந்த மனிதர்களையும் கூட மனந்திருப்பி, இரட்சணியத்தின் பாதைக்குக் கூட்டிவந்து சேர்த்தார்! இவருடைய நேர்த்தியான பேச்சுத்திறனுடைய வல்லமை, விசேஷமாக  ஆண்டவருடைய பரிசுத்தப பாடுகள் பற்றி இவர் பேசியபோது, எவ்வளவு ஆச்சரியத்திற்குரிதாயிருந்ததென்றால், இப்பிரசங்கத்தின் போது, இவரும், ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகள் மட்டிலான இவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களும்  கண்ணீர் சிந்தி அழுவார்கள்! மகாக் கடினப்பட்ட இருதயங்களும் இதைக் கேட்டு, மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பினார்கள்!

 அர்ச்.சிலுவை சின்னப்பருடைய இருதயத்தில் தேவசிநேக அக்கினி சுவாலை எவ்வளவாக பற்றியெரிந்ததென்றால், இவருடைய இருதயத்திற்கு அருகிலிருந்த  துறவற அங்கிப்பகுதி, நெருப்பினால் எரிந்ததைப் போல் தீய்ந்து போயிருக்கும்!இவருடைய விலா எலும்புகள் இரண்டு, தேவசிநேக மிகுதியால் இருதயம் விரிவடைந்ததினிமித்தமாக துருத்திக் கொண்டிருந்ததைப் போல் தோன்றின!

இவர் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்போது, இவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தக் கூடாமல் போகும்! இவர் அடிக்கடி பக்திபரவசத்தில் ஆழ்ந்திருப்பார்! இச்சமயங்களில், இவருடைய சரீரம் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தை விட்டு மேலே உயரும்! இவருடைய முகம் பரலோக ஒளியால் பிரகாசிக்கும்! சில சமயங்களில் இவர், பிரசங்கம் நிகழ்த்தும்போது,இவரை ஊக்குவிக்கும் விதமாக பரலோகக் குரலொலி கேட்கப்படும்! மற்ற சமயங்களில், இவருடைய பிரசங்கம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஊர்களுக்கும் கேட்கும்!

தீர்க்கதரிசன வரமும், பலமொழிபேசும் வரமும், பிறருடைய இருதய இரகசியங்களை அறியும் வரமும், தீய ஆவிகள், நோய்கள் மட்டில் இவர் கொண்டிருந்த வல்லமை ஆகியவை இவர் கொண்டிருந்த விசேஷ தேவ கொடைகளாகும்! பாப்பரசர்களால் இவர் மிகுந்த மேரை வணக்கத்துடன் நடத்தப்பட்ட போதிலும், இவர் தன்னை பயனற்ற ஊழியன் என்றும் தகுதியற்ற பாவி என்றும் கருதினார்; இறுதியாக,  இவர் தனது கடின தபசின் மிகுதியால், தனது 81வது வயதில், 1775ம் வருடம் அக்டோபர் 18ம் தேதியன்று  உரோமாபுரியில் பாக்கியமாக மரித்தார்; இவர் ஏற்கனவே  தீர்க்கதரிசனமாக அறிவித்தபடி, அதே நாளன்று மரித்தார்;அதற்கு முன்பாக மகா அழகிய அறிவுரையை தன் துறவியருக்குக் கூறினார்;  அதுவே இத்துறவியருக்கு இவர் அளித்தத் தன் மரண சாசனமாகவும், உயிலாகவும் இருந்தது! திருச்சபையின் இறுதி தேவதிரவிய அனுமானங்களாலும், பெற்று, பரலோகக் காட்சியினாலும் திடம் பெற்றவராக பாக்கியமாய் மரித்தார். 9ம் பத்திநாதர் இவருக்கு முத்திப் பேறு பட்டமும், அர்ச்சிஷ்டப்பட்டமும் அளித்தார்.

அர்ச்.சிலுவை சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read more about Saints - Click Here



Tags: St. Paul of Cross, Saint. Paul of Cross, Saints life History in Tamil, 

திங்கள், 29 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 20 - வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர்

ஏப்ரல் 29ம் தேதி


வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர் திருநாள்




இவர் 1206ம் வருடம் வட இத்தாலியிலுள்ள வெரோனா நகரில் பிறந்தார்; இச்சமயம் இப்பகுதியில் கத்தாரியப் பதிதத் தப்பறை வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; இவர் கத்தோலிக்கப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார்; பின்னர், பொலோஞா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார்.

1221ம் வருடம், இவர் தனது 15வது வயதில், அர்ச்.சாமிநாதரை சந்தித்தார்; அர்ச்.சாமிநாதரின் துறவற சபையில் சேர்ந்தார்; வட இத்தாலியிலும்  மத்திய இத்தாலியிலும் இவர் புகழ்பெற்ற பிரசங்கி யாராகத் திகழ்ந்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, விசேஷமாக வட இத்தாலியில் அநேக மனிதர்களை தன் வசப்படுத்தியிருந்த கத்தாரியப் பததித்தப்பறையை எதிர்த்து கத்தோலிக்க ஞானப் பிரசங்கத்தை நிகழ்த்தினார்; 9ம் கிரகோரி பாப்பரசர்,1234ம் வருடம், இவரை வட இத்தாலியின் பொது தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார். இவர், உரோமாபுரி, ஃபுளாரன்ஸ், பொலோஞா, ஜெனோவா, கோமோ என்ற நகரங்களுக்கும் , இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 1243ம் வருடம் புதிதாக , துவங்கிய மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர்கள் துறவற சபையை ஏற்படுத்துவதற்கான பாப்பரசரின் அனுமதியைப் பெறுவதற்காக, இவர் பரிந்துரை செய்தார்.

1251ம் வருடம், 4ம் இன்னசென்ட் பாப்பரசர் , இவருடைய புண்ணியங் களுடையவும், கடின தபசினுடையவும் ஜீவியத்தைப்பற்றியும், இவர் கற்றறிந்த வேத இயலின் அறிவைப் பற்றியும், இவருடைய பிரசங்கம் செய்யும் திறனைப் பற்றியும், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது இவருடைய இருதயத்தில் பற்றியெரிந்த ஆர்வத்தைப் பற்றியும், அறிந்தவராக, இவரை லொம்பார்டியில் நீதி விசாரணையாளராக ஏற்படுத்தினார். இந்த அலுவலில், இவர் ஆறு மாத காலம், அயராமல் ஈடுபட்டிருந்தார்.

இவர் தனது பிரசங்கங்களில், பதிதத் தப்பறைகளையும், வார்த்தையால் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக, ஆனால், அதே சமயம்,அதற்கு எதிராக பதிதத்தப்பறையில் ஜீவிக்கிற கத்தோலிக்கர்களையும் இவர் மிகக் கடுமையாகக் கண்டித்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவரைச் சந்தித்தனர்; இவரைப் பின்பற்றினர்; ஏராளமான மனந்திரும்புதல்கள் நிகழ்ந்தன! அநேகக் கத்தாரிய பதிதர்களும் மனந்திரும்பி, கத்தோலிக்க வேதத்திற்குத் திரும்பி வந்தனர்.

இவர் அடிக்கடி அர்ச்சிஷ்டவர்களுடன் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்; ஒருநாள், வேதசாட்சிகளாக மரித்த பரிசுத்த கன்னியர் களான அர்ச். கத்தரீனம்மாள், அர்ச். ஆக்னசம்மாள், அர்ச். செசிலியம்மாள் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இச் சமயம், இவருடைய அறையைக் கடந்து சென்ற ஒரு துறவி, மடத்தின் அதிபரிடம், பெண்கள் சிலருடன் இவர் அறையில் பேசிக் கொண்டிருப்பதாக, இவரைப் பற்றி புகார் செய்தார். உடனே, அதிபர் இதைப் பற்றி, இவரிடம் எதுவும் கேட்காமல், எந்த தயக்கமும் இல்லாமல், இவரை ஒரு மடத்திற்கு அனுப்பி, அங்கு எந்த பிரசங்கமும் செய்யக்கூடாது என்று தண்டித்தார்.

அதிபர் இட்ட இக்கட்டளைக்கு, இவர் தாழ்ச்சியுடன் உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், பாடுபட்ட சுரூபத்தில், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது , தன்னுடைய அவப்பெயரினால், அவரைக் கை நெகிழ்ந்ததாகக் கூறி தன்னைப் பற்றியே, முறையீடு செய்தார். உடனே, பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவர், இவரை நோக்கி, “பீட்டர்! நான் கூட மாசற்றவராக இல்லையா? மாபெரும் துயரங்களை சந்தோஷத்துடன் துன்புற என்னிடமிருந்து கற்றுக் கொள்!” என்று கூறினார். இறுதியாக இவருடைய மாசற்றதனம் அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டது! இவருடைய பங்கிற்கு, இந்த ஏகாந்தத்தின் காலத்தில், இவர் நிந்தனையையும், தாழ்வாக நடத்தப்படுதலையும், நேசிக்கக் கற்றுக் கொண்டார். மறுபடியும், இவர் பிரசங்கிப்பதில் ஈடுபட்டார்; இவர் அறிவுறுத்திக்கூறிய பிரசங்கங்களுடன் புதுமைகளும் நிகழ்ந்தன! இத்தாலி முழுவதும் பயணத்தை மேற்கொண்ட இவர் நாடெங்கிலும் புகழ்பெற்றார்.

ஒருசமயம் இவர் மிகப் பெரிய கூட்டத்தில் பிரசங்கம் நிகழ்த்தியபோது, வெயில் மிக உக்கிரமமாக இருந்தது;  பதிதர்கள் இவரைநோக்கி நிழலைக் கொண்டு வரும்படி கூக்குரலிட்டனர்; இவர் அதற்காக ஜெபித்தார்; உடனே, இவர் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு மேகம் புதுமையாக நிழலிட்டது!

ஒவ்வொரு நாளும் நடுப்பூசையின் போது, “ஆண்டவரே! தேவரீர் எனக்காக மரித்ததால், நானும் தேவரீருக்காக இறந்துபோவதற்கான வரத்தை எனக்கு அருளும்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டு வந்தார். இவருடைய ஜெபம் கேட்கப்பட்டது.

1522ம் வருடம் மிலான் நகரைச் சேர்ந்த கத்தாரிய பதிதத்தைச்சேர்ந்த ஒரு கூட்டத்தினர், அர்ச்.பீட்டரைக் கொல்ல சதித்திட்டமிட்டனர்.  ஒருசமயம், கோமோவிலிருந்து மிலானுக்குத் திரும்புகிற சமயத்தில்,  கொலைகாரர்கள் இவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பார்லாசினா என்ற இடத்தில் அர்ச்.பீட்டர், சக துறவியான டோமெனிகோவுடன் தனியாக வந்தபோது, ஒரு கோடரியால் இவருடைய தலையில் ஒரு வெட்டு வெட்டினர்! இவருடைய சக துறவியை அடித்து சாவுக்குரிய காயத்தை ஏற்படுத்தினர். கீழே விழுந்த அர்ச்.பீட்டர்,  எழுந்து முழங்காலிலிருந்தபடி, அப்போஸ்தலர் களின் விசுவாசப் பிரமாணத்தை ஜெபித்தபடி, தனது இரத்தத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக பலி செலுத்தும்விதமாக, தனது விரல்களை தன் இரத்தத்தில் நனைக்கும்படியாக, மூழ்கச் செய்து எடுத்து, அதனால் தரையில் நிசே விசுவாசப்பிரமாணத்தின் “ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன்,” என்கிற முதல்  வாக்கியத்தை "Credo in Unum Deum",  என்று இலத்தீனில் எழுதியபடியே மரித்தார். அந்தகோடரியின் வெட்டு, அர்ச். வெரோனா நகர் இராயப்பரின் தலை உச்சியைத் துண்டித்திருந்தது. இரத்தம் அதிலிருந்து பிரளயமாக தரையில் வழிந்தோடியது.இவருடைய சக துறவி டோமெனிகோ, மேதா என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்; அங்கு இவர் 5 நாட்களுக்குப் பின் மரித்தார்.

கத்தாரியப் பதிதம் என்றால் என்ன?

இத்தப்பறையானது, கெட்ட கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்றும்,உலகத்தில் காணப்படுகிற யாவற்றையும், கெட்ட கடவுள் நல்ல கடவுளிடமிருந்து அபகரித்துக் கொண்டு அவற்றை உலகத்தில் விட்டிருக்கிறதாகவும், மனிதர்களுடைய சரீரங்களுக்குள் இருக்கிற ஆவி, நல்ல கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும், யாராவது மரித்தால், அவர்களுடைய ஆவியை  ஒரு புதிய உடம்பினுள் கெட்ட கடவுள் செலுத்திவிடும் என்றும்,இது அந்த ஆவியின் மறு ஜென்மப் பிறப்பு என்றும்  இத்தொடர் பிறப்புகளிலிருந்து தப்பிக்க துப்புரவுப்படுத்துகிற ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்றும் அபத்தமான போதனைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் பாவம்  உண்டு! என்கிற நம் வேத சத்தியத்தை இப்பதிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அர்ச்.வெரோனா நகர் இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read about more saints : Click Here

செவ்வாய், 30 ஜனவரி, 2024

அர்ச். பல்பீனம்மாள் திருநாள். ST. BALBINE.

மார்ச் மாதம் 31-ந் தேதி க.
அர்ச். பல்பீனம்மாள் திருநாள்.
ST. BALBINE.


உயர்ந்த கோத்திரத்தாரும் அக்கியானிகளுமாகிய தாய் தகப்பனிடத்திலே அர்ச். பல்பீனம்மாள் பிறந்தாள். அவள் தன்னிடத்தில் இருந்த மிகுந்த சவுந்தரிய அலங்கார முகாந்தரமாக வெகு சந்தோஷப்பட்டிருந்தாள். ஆனால் கொஞ்சத்திற்குள்ளே அவளுடைய கழுத்திலே வந்த கண்டமாலையினாலே அழகுஞ் சந்தோஷமும் நீங்கித் துக்கத்தை அடைந்தாள். அவளுடைய தகப்பனாரும் அவள் தாயாரும் அந்த வியாதி தீர வைத்தியருக்கு வெகு பணங் கொடுத்து வெகு செலவு செய்திருந்தாலும் தீராமல் போச்சுது. அக்காலத்திலே இருந்த அலெக்சாண்டர் என்னும் பாப்பாண்டவர் அநேகம் புதுமைகள் பண்ணுகிற சேதி அந்தம்மாளுடைய தகப்பனாராகிய குயிரீனென்கிற துரை அறிந்து அவர் வழியாகத் தன் மகளுக்குக் குணமாகு மென்று நம்பிக்கையாய் இருந்தான்.

 ஆனால் இந்தத் துரை பாப்புவின் பேரில் முந்திப் பகையாயிருந்து அவரை அநியாயமாகக் காவலில் வைத்திருந்தான். ஆயினும் தன் மகள் ஆரோக்கியம் அடைய வேண்டுமென்கிற முகாந்தரமாக அவளைத் தானே காவற் கூடத்திலே கூட்டிப்போய் அவளுக்கு ஆரோக்கியங் கட்டளையிட அவரை மன்றாடினான். அதற்கு பாப்பாண்டவர் சொன்னதாவது : என் கழுத்தில் ஆக்கினையாக வைத்த இருப்பு வளையத்தை எடுத்து உன் மகள் கழுத்திலே போடென்றார். அந்தப்படியே அந்தத் துரை செய்கிறபோது அந்த இருப்பு வளையத்தை அவள் கழுத்திலே போட்டவுட னே புதுமையாக அவள் முழுதும் ஆரோக்கியத்தை அடைந்தாள். அதைக் குயிரீனென்கிற துரை பார்த்து ஆச்சரியப்பட்டுத் தாமுந் தம்முடைய மனைவி மக்களும் ஞானஸ்நானம் பெற்றதும் அல்லாமல் வேதத்திற்காகப் பிராணணையுங் கொடுத்தார்கள், பல்பீனம்மாளோவெனில் தனக்கு ஆரோக்கியங் கொடுத்த ஆண்டவருக்குத் தான் நன்றியறிந்ததனம் காண்பிக்கத்தக்கதாகத் தான் எப்போதுங் கன்னிகையாய் இருக்க வார்த்தைப்பாடு கொடுத்தாள். அவள் அதை உத்தம பிரகாசத்திற்குச் செலுத்தி அநேக தருமங்களையும் உத்தம புண்ணியங்களையும் செய்துவந்த பிற்பாடு நல்ல ஆயத்தத்தோடே பாக்கியமான மரணத்தை அடைந்தாள்.
கிறீஸ்துவர்களே! புண்ணிய வழியிலே நீங்கள் இந்த மட்டுந் தப்பி நடந்திருந்தால் அர்ச். பல்பீனம்மாளுடைய தரும நடக்கையைப் பார்த்து நடந்தால் மோட்சத்திலே சேரலாம். அந்தம்மாள் ஆண்டவராலே புதுமையாக ஆரோக்கியம் அடைந்த பிற்பாடு, அந்த ஆரோக்கியத்தை அவருடைய ஊழியத்திலே செலவழித்தாள். ஐயையோ, சிலர் ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த ஆரோக்கியம், ஆஸ்தி, புத்தி, மகிமை முதலியவற்றைக் கொண்டு ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய ஊழிபம் பண்ணாமல் தங்கள் பாவங்களினாலே அவருக்குத் துரோகம் பண்ணுகிறார்கள். இரா சாஉனக்கு வெகுமானமாகக் கொடுத்த கத்தியைக் கொண்டு இராசாவைத்தானே வெட்டினால் அது மிகுந்த ஆக்கிரமம் ஆகும். சர்வேசுரன் உனக்கு அமைத்திருக்கிற கண், வாய், காது, கை முதலான உறுப்புக்களைக் கொண்டு அவருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்கிறது மிகவும் அக்கிரமமல்லவோ?

மேலும் அர்ச். பல்பீனம்மாள் கழுத்திலே வைத்திருந்த பொற்காறை வெள்ளிக்காறையைக் கொண்டு ஆரோக்கியம் அடையவில்லை. சர்வேசுரனுடைய வேதத்தைப்பற்றி உபத்திரிய வேதனையாக பாப்புவின் கழுத்திலே போட்டிருந்த இருப்பு வளையத்தைக் கொண்டு ஆரோக்கியம் அடைந்தாள். ஆகையால் இவ் வுலகத்தின் நகை உடைமைகளைப் பார்க்க, ஆண்டவரைக் குறித்து அனுபவிக்கிற கஸ்திகளை அதிசமாய் மதிக்க வேண்டும். அல்லாமலும் அர்ச். பல்பீனம்மாளிடத்திலே இருந்த அலங்கார சந்தோஷம் ஒரு வியாதி வந்தவுடனே நீங்கிப் போச்சுது. மனுஷருடைய சரீரம் எத்தனையோ நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டதாய் இருக்கின்றது. துரைகளும், ஆஸ்திக்காரர்களும், வாலர்களும் சவுந்தரியமுள்ளவர்களுமாகிய இவர்களின் சரீரங்கள், வியாதி முதலான நிர்ப்பந்தங்கள் இல்லாதிருக்குமோ, இல்லையே. இப்படியிருக்கையில் ஒரு வியாதியைக்கொண்டு மனுஷர் இழந்துபோகிற சரீர அலங்காரத்தைக் கனமாய் எண்ணலாமோ? குயவனாலே உண்டாக்கப்பட்ட பானை பார்வைக்கு நேர்த்தியாயிருந்தாலும் அதிலே ஒரு கல், ஒரு மரம் மோதினால், அல்லது அந்தப் பானை தானே உயரத்திலிருந்து கீழே விழுந்தால் உடனே தகர்ந்துபோம். மனுஷருடைய சரீரம் மெத்த சொற்பமான மண்ணாயிருக்கிறகினாலே அதை நம்பக்கூடாது. ஆதலால் அழிவுள்ள சரீர நன்மைகளைச் சட்டைபண்ணாமல், அழியாத ஆத்தும நன்மைகளை கனமாய் எண்ணி, ஆசையோடே தேடிக்கொள்ள வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.


saints life history in tamil






வியாழன், 18 ஜனவரி, 2024

அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE

மார்ச் மாதம் 13-ந் தேதி. 

அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள். 

 Ste. EUPHRASIE. 








 கொன்ஸ்காண்டி னொப்பொலி பட்டணத்திலே துரை மக்களான தாய் தகப்பனிடத்தில் அர்ச். எவுப்பிறாசியம்மாள் பிறந்தாள். அவர்கள் அவ்வரசின் இரா யனுக்கு நெருங்கிய உறவாயிருந்ததினால் அவர்களுக்கு வெகு மகிமையாய் இருந்தது. அவளுடைய தாயானவள் மிகப் புண்ணியவதியாயிருந்தமையால் தன்னுடைய மகள் தரும வழியிலே நடக்கப் புத்திமதி சொல்லித் தேவ பத்தியில் பழக்க வெகு பிரயாசைப்பட்டாள். பாவத்தைப் பகைத்துச் சேசுநாதரையும் அவருடைய திருத் தாயாரையுஞ் சிநேகித்திருக்க மகளுக்குத் தாயானவள் அடிக்கடி புத்தி சொன்னதினாலே  ஐந்து வயதுள்ள எவுப்பிறாசியம்மாள் அப்படி நடக்கிறதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறு பிள்ளை தாயாருடன் இராயன் அரண்மனைக்குப் போகிற போது இராயனும் இராணியும் அரண்மனையிலேயிருந்த மற்றவர்களும் இந்தம்மாளுடைய பத்தியையும் புத்தியையுங் கண்டு இவளை மிகவுங் கொண்டாடிப் போற்றுவார்கள். இந்தப் பெண் ஒரு துரைமகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று அரசன் கட்டளையிட்டான். 

எவுப்பிறாசியம்மாளுடைய தகப்பனார் காலஞ் சென்ற பிறகு அவளுடைய தாய் அவள் பேரில் அதிக பட்சம் வைத்து வெகு நேர்த்தியாய் விசாரித்து நடத்தினாள். எவுப்பிறாசியம்மாளுக்கு ஏழு வயது நடக்கும் போது தாயும் இவளும் எஜிப்து தேசத்திற்குப் போய்க் கன்னியர் மடத்திற்குப் போனார்கள். எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்தையுங் கண்டு அவர்களுடைய தரும நடக்கையையும் அறிந்து அவர்களுடன் தானும் இருக்க ஆசைப்பட்டதினாலே தான் அங்கே யிருக்கிறதன்றி வெளியிலே போகிறதில்லை யென்று சொன்னாள். தாயுங் கூடவந்த மற்றவர்களும் அந்த மடத்தை விட்டுத் தங்கள் அரண்மனைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போக எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் எவுப்பிறாசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய் இதைக் கண்டு ஞான சந்தோஷப்பட்டதுமன்றி மகள் கேட்ட காரியத்திற்குஞ் சம்மதித்தாள். ஆதலால் தாய் தன்னுடைய அரண்மனைக்குப் போன போது எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்திலே இருந்து விட்டாள். அவளுக்கு வயது கொஞ்சமாய் இருந்ததினாலே மற்ற கன்னியர்களைப் போல அவள் ஒரு சந்தியாயிருக்கமாட்டாள், செபம் பண்ணமாட்டாள், தபசு பண்ணமாட்டாள், அதற்குத் தக்க பிராயமாகுமட்டும் பிள்ளைகளுக்குரிய விதமாய் அவளை நடத்தவேண்டி இருக்குமென்று அந்தக் கன்னியர்கள் நினைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததற்கு மாறாக மற்றவர்களை விட அந்தப் புண்ணியங்களை அதிக சுறுசுறுப்போடே செய்துகொண்டு வந்தாள். 



அந்தக் கன்னியர்கள் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டு இவள் பேரில் விசேஷமான பட்சம் வைத்தார் கள். இவளுடைய தாய் மரணமடைந்த செய்தியை இராயன் அறிந்து தம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு எவுப்பிறாசியம்மாள் வாழ்க்கைப்பட வேண்டுமென்று இந்தம்மாளுக்குச் சொல்லி அனுப்பினான். ஆனால் எவுப்பிறாசியம்மாள் இராயனுக்கு அனுப்பின கடிதத்தில் எழுதியிருந்ததாவது: இராயரே, உம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட மேலானவர் சேசுநாதர். சேசுநாதருக்கு என்னுடைய கன்னிமையை ஒப்புக்கொடுத்ததினால் என்னை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையினால் நான் சாகுமட்டும் எப்பொழுதுங் கன்னிகையாய் இருக்கிறதன்றி நான் ஒருவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். என்னுடைய ஆஸ்தியெல்லாந் தரும காரியத்திலே செலவழிக்கத் தேவரீரை மன்றாடுகிறேனென்று எழுதினாள். 

இராயன் அந்தக் கடிதத்தை வாசித்த பிறகு ஞான சந்தோஷப்பட்டு அவள் ஆசைப்பட்டதிற்கு விக்கினம் பண்ணினதில்லை. 

அந்தம்மாள் அந்த மடத்திலே பண்ணின ஆச்சரியமான புண்ணியங்களால் அங்கேயிருந்த கன்னியர்கள் மிகவும் அவளைப் புகழ்வார்கள். இந்தப் புகழ்ச்சி அவர் களுக்குள்ளே ஒருத்திக்குப் பொருந்தாமல் பொறாமை வருவித்ததினாலே இவள் அந்தப் புண்ணியவதி பேரிலே வர்மம் வைத்து அவளுக்கு அநியாய தொந்தரவு  பண்ணத் துவக்கினாள். எவுப்பிறாசியம்மாள் மிகுந்த பொறுமை காட்டி தாழ்ச்சியி னாலே அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டாள். பசாசு அவளுக்கு வருவித்த எண்ணப்படாத சோதனைகளை யெல்லாம் வேண்டுதலைக்கொண்டு நீக்கி வென்றாள்.  ஆச்சரியத்திற்குரிய அநேகம் புதுமைகளைச் செய்தாள். 

தனக்கு சாவு கிட்டியிருக்கிறதென்று ஆண்டவராலே புதுமையாய் அறிந்து மரணத்திற்கு உத்தமமான ஆயத்தம் பண்ணினாள். அவளுக்குக் காய்ச்சல் வந்த பிறகு அவள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவநற்கருணையும் அவஸ்தைப் பூசுதலும் பெற்று சேசு மரியே என்னும் திருநாமங்களைப் பத்தியோடே சொல்லி 412-ம் வருஷத்தில் நல்ல மரணத்தை அடைந்தாள். 

கிறீஸ்துவர்களே! ஒரு சிறு பிள்ளையின் ஆச்சரியமான பத்தியுஞ் சாதுரியப் பேச்சும் யாவரும் அதிசயமாய் எண்ணுவதுபோல் கொஞ்ச வயதுள்ள அர்ச். எவுப்பிறாசியம் மாளிடத்திலே உண்டான உத்தம பத்தியையும் நீங்கள் ஆச்சரியத்தோடே பார்த்துக் கண்டு பாவிக்கப் பிரயாசைப்பட வேண்டும். அந்தம்மாளுக்கு ஏழு வயது நடக்கிற போது அவள் மெத்த வயதுள்ளவளைப்போல் புண்ணியங்களைச் செய்து வந்தாளென்று கேட்டீர்களே; அவளுடைய தாய் இந்தச் சிறு பிள்ளைக்குச் சொன்ன நல்ல புத்தியானது அந்த ஆச்சரியமான பத்தி வொழுக்கத்திற்கு ஓர் காரணமா யிருந் தது. 

"தாய் தகப்பன்மார்களே! அத்தகைய நல்லொழுக்கம் உங்கள் மக்களிடத்திலே காண வேண்டுமானால் உங்களுடைய கடனின்படியே அவர்களுக்கான புத்தி சொல்ல வேண்டும். சில தாய்மார் தங்கள் மக்களுடைய சரீரத்தை அலங்கரிக்க மிகுந்த உடமைகளைச் சம்பாதித்துக் கொடுக்கப் பிரயாசைப்படுவதொழிய மக்கள் ஆத்துமத்தை அலங்கரிக்க மக்களுக்குப் புண்ணிய சற்குணம் வருவிக்கப் பிரயாசைப்படுகிறதில்லை. அதினால் தங்கள் பிள்ளைகள் சிலாக்கியம் ஆங்கார முதலிய துராசாபாசங்களினால் கெட்டுப்போவதற்குக் காரணமாகிறார்கள். இத்தகைய தாய்மார்கள் சர்வேசுரனுக்கு என்ன கணக்கு சொல்லப்போகிறார்கள்? அர்ச். எவுப்பிறாசியம்மாள் கொன்ஸ்தான்டினோப்பிள் இராயன் சொன்னபடிக்குத் தனக்கு நியமித்திருந்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டால் உலக செல்வ பாக்கியம்   அவளுக்குத் திரளாய் வந்திருக்கும். ஆனால் அவள் அந்தப் பாக்கிய மெல்லாஞ் சாகிறபோது கட்டாயமாய் விடவேண்டியிருந்ததினாலே அந்தம்மாள் அந்தப் பாக்கியத்தைத் தனக்கு வேண்டாமென்று புத்தியுள்ளவள்போல் சொன்னாள், 

ஊழியம் பண்ணுகிற ஒருவன் தன்னுடைய எசமான் தன்னை இனிமேல் தள்ளுவா னென்று நிச்சயமாய் அறிந்திருந்தால் எசமான் தன்னை அவமானத்தோடே தள்ளுவதற்கு முந்தித் தன் எசமானை விட்டுவிடுவது மேல் அல்லவோ? உலகத்திற்கு ஊழியம் பண்ணுகிறவர்கள் எத்தனை ஆஸ்தி எத்தனை மகிமை அனுபவித்தாலும் வாழ்வு நாளில் அவர்களுக்குப் பல பாவ தந்திரத்திற்குக் காரணமான அந்தப் பாக்கிய மெல்லாம் அவர்கள் சாகும்போது அவர்களை விட்டு விடும். 

இதைக் கேட்கிறவனே உலக பாக்கியம் உன்னை ஏமாற்றி விடுகிறதற்கு முந்தி நீயே அதை விட்டு விடுவது மேல். ஒரு ஆஸ்கிக்காரன் சாகிற போது தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் எட்டுவிட வேண்டுமென்பதினாலே அவனுக்கு வெகு துக்க துயரமுஞ் சலிப்பும் வரும். ஒரு பிச்சைக்காரன் சாகிற போது விடுவதற்கு ஒன்றுமில்லாததினாலே முன் சொல்லப்பட்ட துக்க துயர சலிப்பு அவனுக்கு வருவ தற்கு இடமில்லை. நீங்கள் உலக பாக்கியத்தின் பேரிலே ஆசை விருப்பம் வையாமலிருந்தால் அந்தப் பாக்கியத்தை விட்டுவிடுவதுபோல் ஆகும்.





புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17. - அர்ச். லூசியா (அர்ச். பிரகாசியம்மாள்)

 St.Lucy's Feast - Dec 13 - celebrated as festival of lights

திருநாள்: டிசம்பர் 13


Born .      கி.பி 283

இடம்         Syracuse, Roman Empire

தந்தை     பெயர் தெரியவில்லை 

தாய்          யுற்றிக்கியா

Died      304 Syracuse, Western Roman Empire


பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் வேதசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கத்தோலிக்க கிறிஸ்தவராக  வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை ஆண்டவருக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார் 

இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் அர்ச். ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும்  அர்ச். ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு அர்ச். ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் அர்ச். ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய்? உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு ஆண்டவருக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை சர்வேசுரன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.

லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .

 இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்' "இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள்" என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "ஆண்டவருக்கு சொந்தமானவள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல இஸ்பிரித்து சாந்துவானவர்  துணை நிற்பார் .ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்வோர் யாவரும் இஸ்பிரித்து சாந்துவானவரின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது இஸ்பிரித்து சாந்துவானவர் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள்" என்றார் , லூசியா . 

இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற அர்ச். லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் அர்ச். லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது . 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 16 - அர்ச். ஹென்றி வால்போல் சே.ச - St. Henry Walpole. S.J

 'Sanguis Martyrum Semen Christianorum'

(வேதசாட்சிகளின் இரத்தம் கிறீஸ்துவர்களை விளைவிக்கும் வித்து!)


கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத் விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிகத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது.)



அது 1581 டிசம்பர் முதல்நாள் அன்று அதிகாலையிலிருந்தே மழை · ஒரே அடை மழை! விடாது பெய்யும் அந்த மழையையும் அலட்சியம் செய்து பெரும் கூட்டம் லண்டன் டைபர்ன் (Tyburn)சிறைச்சாலையின் முகப்பிலே நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக அங்கே மரண தண்டனை விதிக்கப்படும். மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படும். தண்டனைக் காட்சியைக் காண மக்கள் வருவர். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியுள்ளனரே? என்ன காரணம், யார் தண்டனை பெறப் போகிறார்கள்? ஆம்! இன்று லண்டன் மாநகரின் புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் சேசு சபை குருவுமான எட்மண்ட் காம்பியன் மரண தண்டனை பெறவிருக்கிறார்.

அங்கே கூடியிருந்த மக்கள் மனதில் “ஐயோ! இப்படி கொடூர தண்டனை பெறுவதற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன? அரசி ஏற்படுத்தியுள்ள புராட்டஸ்டான்ட் பதிதத்தை ஏற்கவில்லை பாப்பரசரை மறுத்து அரசியே திருச்சபையின் தலைவி என்பதை ஏற்க மறுத்தது இங்கிலாந்து நாட்டில் பாப்புவின் வேதமான கத்.திருச்சபையை அரசுக்கு விரோதமாக போதித்தது இவைகளே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள். இதற்காகத் தானே இங்கே தினமும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது" என்றெல்லாம் எண்ண அலைகள் ஓடச் செய்வதறியாது திகைத்தனர். தங்களது பொக்கிஷமான கத். விசுவாசம் தங்கள் நாட்டில் அழிக்கப்பட்டு விட்டதே என்ற பரிதாப ஆதங்கம் உள்ளத்தில் எழுந்தாலும் கொடூர தண்டனையைக் குறித்து வாயடைத்தும் போனார்கள்.

இதற்குள் அங்கே ஆரவாரம் எழ, எட்மண்ட் காம்பியன் குரூரமாக இழுத்து வரப்பட்டார். ஒளி வீசிப் பிரகாசமாக ஜொலிக்கும் அவரது முகத்தில் எந்தவிதமான மரண பயமோ வேதனையோ நடுக்கமோ இல்லாததைக் கண்டு மக்கள் கூட்டம் திகைத்தது. அவர் மக்களை ஆசிர்வதிப்பதும், ஏதோ கூறி ஜெபிப்பதும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கு பரபரப்பை ஊட்டியது. அவர் தூக்குமரத்தின் அருகே நின்று பேசுகிறார். அதனை கேட்க மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சப்தம் சரியாக கேட்கவில்லை. "...நான் சத்திய வேதத்திற்காக மரணமடைகிறேன். இங்கிலாந்து அரசிக்காக ஜெபிக்கிறேன்... என் நாடே - இங்கிலாந்து தேசமே... உன் செல்வமான கத்தோலிக்க விசுவாசத்தை பெற்றுக் கொள்..." என்ற அவரது கடைசி பிரசங்கக் குரல் சன்னமாக பலவீனமாக ஒலிக்கிறது

அங்கே கூட்டத்தை விலக்கியவாறு முண்டி அடித்துக்கொண்டு ஒரு இளைஞன் முன்னேறினான். ஐயோ! தமது மனங்கவர்ந்த "காம்பியன் சுவாமி" மரண தண்டனை அடையவிருக்கிறாரே. நாம் சற்று பிந்தி போய் விட்டோமே, அவரது முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்க்கவேண்டும் என்ற அவனது மனம் பரபரக்க கூட்டத்தை முரட்டுத்தனமாக விலக்கி முன்னேறினான். எரிச்சலடைந்த மக்கள் விலகி வழிவிட "அப்பா! இப்போது முதல் வரிசையைப் பிடித்தாகிவிட்டது. ஐயோ! அங்கே காம்பியன் தூக்கிலிடப்பட்டு விட்டாரே. இதோ அவரது உடல் தூக்குக் கயிறிலிருந்து வெட்டப்பட்டு கீழே விழத்தாட்டப்படுகின்றனவே... ஐயகோ! ஆ! அவரது உடல் கொடுமையாக கை கால்கள் வெட்டப்படுகின்றனவே. ஆ! இதென்னக் கொடூரம்!" அந்த இளைஞனின் உள்ளம் திருதிருவென எரிந்தது. கழிவிரக்கத்தால் துவண்டது. "ஆ! ஏன் இந்த கொடுமை. விசுவாசத்திற்கு பிரமாணிக்கம் காத்ததல்லவா! அப்படியானால் விசுவாசம் எத்துணை மேலானது, உயர்ந்தது, உன்னதமானது. மரணத்தைவிட சிறந்தது... விசுவாசம்". அவனது மனம் விசுவாச உறுதியால் நிரம்பியது. அச்சமயம் "ஆவென்ற" அலறல் அழுகைக் குரல் மக்களிடமிருந்து பெருக்கெடுக்க சலசலப்பு தோன்றியது.

அப்போது சற்று தூரத்தில் உடல் வெட்டப்படும் வேதசாட்சியின் இரத்தத் துளிகள் பீறிட்டு பாய்ந்து நாலா திசையிலும் சிதறி பூமியை நனைத்தது. அதன் ஒரு துளி முன் வரிசையில் மனவேதனையோடும் அச்சத்தோடும் நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் தெறித்து விழுந்தது. வேதசாட்சியின் புனிதமான இரத்தம் தம் மீது தெறித்ததைக் கண்ட அந்த 23 வயதே நிரம்பிய இளைஞன் பதட்டமடைந்தாலும் மிகுந்த பக்தியோடு தமது கைக்குட்டையால் அதனை மெல்ல துடைத்தான். பொக்கிஷமென அதனை பக்தியோடு தம்மிடம் வைத்துக்கொண்டான். அந்த கணத்திலேயே அவனது உள்ளம் உருகத் துவங்கியது. விசுவாச உறுதியடையத் துவங்கியது.... ஆம்! அவன் மாறினான். உலக வாழ்வில் திளைக்க விரும்பிய அவன் இன்று முழு மனமாற்றம் அடைந்தான். அவன் வாழ்வு தலைகீழாகிப் போனது. ஆம்! அவனும் இன்னும் 10 ஆண்டுகளில் தன்னையே சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து குருவாகி, அங்கே கொல்லப்பட்ட காம்பியன் சுவாமியைப் போலவே சுத். விசுவாசத்திற்காக இதே இடத்தில் இதே சித்திரவதையைப் பெற்று மரணமடையவிருக்கிறான். அந்த இளைஞன் யார்? அவன்தான் ஹென்றி வால்போல் ஆம். வேதசாட்சியான அர்ச். ஹென்றி வால்போல் சே.ச.

இளமைப் பருவம்

ஹென்றி வால்போல் லண்டனை அடுத்த நார் ஃபோல்க் (Norfolk) நகரைச் சேர்ந்த கிறீஸ்டோபர் வால்போல் என்பவரின் மகனாக 1558 அக்டோபர் திங்களில் பிறந்தார். தந்தை பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஹென்றியின் மாமன் ஜான் வால்போல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 1720-ல் இங்கிலாந்தின் முதல் பிரதம மந்திரியான சர் இராபர்ட் என்பவரின் கொள்ளுத் தாத்தாவான கால்பட் வால்போல் என்பவர் ஹென்றியின் நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற குடும்பத்தில் வந்த ஹென்றி பிறந்தபோது அரசி மேரி ஆட்சியில் இருந்தாள் எனவே சுத்தோலிக்கர்கள் பயமின்றி வாழ்ந்தனர். 8வது வயதில் நார்விச் இலக்கண பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஹென்றி லத்தீன், கிரேக்கம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இயல்பாகவே பாடல்கள் எழுதுவதில் திறம் பெற்றிருந்தார்.

அவன் பள்ளியில் படிக்கும் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான அலைகள் எழுத் துவங்கின. பாப்பரசருக்கெதிரான செயல்கள் மீண்டும் அரங்கேறத் துவங்கின. தனது 17வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அர்ச். பீட்டர் சுல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்கலானார். அச்சமயத்தில் ஆட்சி பொறுப்பில் வந்த எலிசபெத் அரசி கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான செயல்பாடுகளால் புராட்டஸ்டாண்ட் பதிதம் மீண்டும் தலைதூக்கியது. தங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அரசியான எலிசபெத் தனது தந்தை 8-ம் ஹென்றியையே மிஞ்சும் அளவில் கலாபனையைத் தூண்டி விட்டாள். இங்கிலாந்தில் திருச்சபையின் தலைவர் அரசியே என்ற சட்டத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு உறுதி மொழி வழங்கவேண்டும். அப்படி உறுதிமொழி வழங்கிய மாணவர்கள் மட்டுமே தங்கள் கல்லூரி பட்டப்படிப்பில் தகுதியானவர்களாக உயர்த்தப்பட்டார்கள். இதனை சற்றும் விரும்பாத ஹென்றி அப்படி தேவதுரோகமான சட்டத்தை ஏற்றுப் பட்டம் பெறுவதைவிட, பட்டமே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். எனவே கல்லூரியி விருந்து வெளியேறி 1579-ல் தமது 21-வது வயதில் Grays Inn என்ற விடுதியில் பணியாளராக சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் காம்பியன் குருப்பட்டம் பெற்று, இங்கிலாந்தில் கத். விசுவாசத்தை மக்களிடையே போதிப்பதற்கு இரகசியமாக இங்கிலாந்தில் நுழைந்தார்.

Grays Inn என்ற அந்த விடுதி கத்தோலிக்க இளைஞர்கள் ஒன்று சேரும் இடமாகத் திகழ்ந்தது. அங்கே பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் ஒரு இயக்கமாகச் சேர்ந்து Douai மற்றும் உரோமையிலுள்ள ஆங்கில கல்லூரியில் பயிலும் குருமாணவர்களுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் காம்பியன் சுவாமியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் ஆங்கிலிக்கன் பதிதத்தை எதிர்த்து கத். விசுவாசத்தை பாதுகாக்க 10 காரணங்கள் என்ற தனது புகழ்பெற்ற நூலினை வெளியிட அச்சகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் அர்ச். காம்பியனைக் கண்டு அவரது ஆற்றல்மிக்க விசுவாசம் நிறைந்த பிரசங்கங் களையும், வீர உரைகளையும் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார் ஹென்றி வால்போல். அதனால் தமது விசுவாச வாழ்வில் உறுதியடைந்தவர் காம்பியன் சுவாமி பிடிபட்டு விசாரணைக் கைதியாக்கப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தார். பின்னர் 1581 டிசம்பர் முதல் நாள் அன்று அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது அவரை கடைசி தடவையாக பார்க்கச் சென்றார். அப்போதுதான் காம்பியன் சுவாமியின் இரத்தத் துளிகள் முன் வரிசையில் பதைபதைப்புடன் நின்றிருந்த ஹென்றியின் மீது தெளித்தது. அதுவே அவரது வாழ்வை மாற்றக் காரணமாயிற்று.

தேவ அழைத்தல்

தமது அன்புக்குரிய சங். காம்பியன் சுவாமியின் வேதசாட்சியத்தைப் பார்த்ததிலிருந்து ஹென்றியின் உள்ளம் மாறிப்போனது. அவரைப் போலவே தாமும் விசுவாசத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழத் துவங்கியது.

காம்பியனின் வாழ்வு, அவரது மரணம் பற்றிய நினைவுகள் மனதில் எழ அவைகளை கவிதையாக எழுதினார். "மிகவும் புகழ்பெற்ற புண்ணியம் நிறைந்த குருவான எட்மண்ட் காம்பியனின் வாழ்வும் மரணமும் பற்றிய கல்லறை வாசகம்" என்ற தலைப்பில் 30 பத்தி களைக் கொண்ட கவிதைத் தொகுப்பாக அது உருவெடுத்தது. அதன் இரு பத்திகள் கீழேத் தரப்பட்டுள்ளன: 

"....அவர் வார்த்தைப்பாட்டால் வந்தார் பாவத்தை வென்றிடவே: அவரது ஆயுதம் ஜெபமே, வார்த்தைகளோ காக்கும் கேடயமே; மோட்சமே அவரது ஆறுதல், ஆனமாக்களை வெல்வதே அவரது ஆவல்; பசாசே அவரது எதிரி, பாவ உலகமே அவரது படைக்களம்; மகிழ்ச்சியே அவரது வெற்றி, நித்திய இன்பமே அவரது கூலி; கிறீஸ்துவே அவரது தலைவர், முடிவில்லா காலமுமாகவே அவருக்கு வரப்பிரசாதங்களை அருளிய சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக; தமது வேதசாட்சிகளை வாழ்த்திய கிறீஸ்துவுக்கு நன்றி என்றுமே எஜமானரின் திருமுகதரிசனமே அவரது மகிழ்ச்சி; அவரை எதிரியாகப் பாவித்தவர்களுக்குச் சாபமே. இத்தகைய மனிதரை தோற்றுவித்த கிறீஸ்துவின் நாமமே, எந்நாளும் வாழ்த்தப்பட நமக்குக் கடனே...!"

அவரது இந்த கவிதை தொகுப்பை ஹென்றி வாலேன்கர் (Henry Vallenger) என்ற செல்வந்தர் வெளியிட முன்வரவே அது அச்சிட்டு கத்தோலிக்க மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு நகல் அரசின் கைகளில் சிக்கவே வந்தது ஆபத்து. உடனே அனைத்து பிரதி களையும் கைப்பற்றி அழிக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட, அச்சிட உதவிய ஹென்றி வாவேன்கர் பிடிபட்டார்.

கொடிய வாதனைகளிலும் எழுதியவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட (அர்ச். ஹென்றி வால்போல்) அவருக்கு 100 பவுண்ட் பணம் அபராதம் விதிக்கப்பட்டு அவரது இரு காது மடல்களும் வெட்டப்பட்டன! கவிதை பிரதிகளை வைத்திருந்ததற்காக பல கத்தோலிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே விடுதியில் பணியாற்றி வந்த ஹென்றி வால்போல் தமது சக தோழர்களிடையே காம்பியன் சுவாமியின் வீர வைராக்கிய மரணத்தைப்பற்றி எப்போதும் எடுத்துக்கூறவே, அவர்களில் அநேகர் கத். விசுவாசத்தில் உறுதிப்பெற்றனர். அதனாலேயே அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை ஹென்றியின் மீது விழத் துவங்கியது. கவிதை எழுதியது அவர்தான் என்ற சான்று அரசுக்கு எழவே, கைதா வதிலிருந்து தப்பிக்க விடுதியிலிருந்து வெளியேறி தமது சொந்த Norfolk வீட்டிற்குச் சென்றார். இதற்கிடையில் அரசின் தேடுதல் வேட்டைத் துவங்கவே, சிலநாட்கள் பதுங்கு குழியில் பதுங்கி வாழ்ந்து வந்த அவரது உள்ளத்தில் காம்பியன் சுவாமியைப் போல குருவாக வேண்டும், அவரைப் போலவே தமது நாட்டில் கத். விசுவாசத்தை மீண்டும் மலரச் செய்ய உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியடையத் துவங்கவே, இரவுபகலாக காடுகளில் மறைந்து நடந்தே New Castle என்ற இடத்திற்கு வந்துசேர்ந்து பிரான்ஸ் நாட்டுக் கப்பலில் பயனித்து Rheins நகருக்கு 1582 ஜூலை 7-ம் நாள் வந்து சேர்ந்தார். 

பின்னர் Douai நகர் வந்து அங்குள்ள ஆங்கில கல்லூரியில் சேர்ந்து குருத்துவக் கல்வியை பெறலானார். கர்தினால் ஆலன் ஆண்டகையின் ஆதரவைப் பெற்று Rheins நகரில் 8 மாதங்கள் வேதசாஸ்திரம் கற்ற அவர் 1584 பிப்ரவரி 2-ம் நாளன்று தமது 26-வது வயதில் சேசுசபையில் உட்பட்டார். அங்கே ஆயத்தநிலை தயாரிப்பில் இரு வருடங்கள் செலவிட்டபின், குருத்துவக் கல்வியில் தொடர்ந்து, தமது 30-வது வயதில் 1588 டிசம்பர் 17-ல் பாரீசில் குருப்பட்டம் பெற்றார். Brussels அனுப்பப்பட்ட அவர், வேதம் போதிக்கும் ஆவலால் அதற்கான பயிற்சியைப் பெற்று, சேசுசபை உயர் தலைவரின் அனுமதியோடு இங்கிலாந்துக்கு வேதம் போதிக்க அனுமதிக்கப்பட்டார். அதற்காக 1593, 4-ம்நாள் மாட்ரீட் நகர் வந்து காத்திருந்தார். அப்போது லண்டனில் பிளேக் நோய் பரவியிருந்ததால், சுப்பல் பயணம் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆனாலும் வேதபோதக ஆவலால் நிறைத்திருந்த ஹென்றி வால்போல் சுவாமி எப்படியாவது விரைவில் இங்கிலாந்துக்கு சென்றுவிட வேண்டும் என்று துடித்தார். குருக்கள் இங்கிலாந்திற்குள் வர தடை செய்யப்பட்டிருந்ததால் இரகசியமாகவே அங்கு செல்ல வேண்டும் என்பதால் "போர்கால கப்பல்கள் Vessels of War" என்றழைக்கப்பட்ட கப்பலில் பயணத்தைத் துவக்கினார். வேலை வாய்ப்பைத் தேடி இங்கிலாந்து செல்லும் இரு இளைஞர்களும் உடன் சென்றார்கள். அவர்களில் ஹென்றி சுவாமியின் சொந்த சகோதரனான தாமஸ் வால்போலும் ஒருவர்.

கைதுசெய்யப்படல்!

பயணத்தின் போது கடுமையான புயல் விசியநால் இங்கிலாந்தின் Norfolk பகுதியில் Bridlington என்ற ஊரில் கரைசேர்ந்தனர். அவர்களோடு மேலும் இரு கப்பல்களும் அங்கே சேர்த்து கரை ஒதுங்க, வந்தது. ஆபத்து! ஆம்! அந்தக் கப்பல்களில் ஒன்றில் அரசாங்க ஒற்றனும் இருந்தான், அவன் அவர்களுக்கு முன்பாகவே துறைமுகத்தினுள் இறங்கி யார்க் நகர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினான்.

நடந்ததை அறியாத மூன்று இளைஞர்களும் கரை இறங்கி இரவு வரை பதுங்கியிருந்து இரவு முழுவதும் நடந்தே பயணமாகி Kilham என்ற நகரை அணுகினார்கள். அதற்கு முன்பாக தங்களிடமிருந்த கடிதங்கள் ஆவனங்களை யெல்லாம் பத்திரமாக ஒரு பாறைக் கடியில் புதைத்து வைத்திருந்தனர். அவர்கள் கடுமையாகப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ஒரு கிராமத்தினுள் நுழைந்தனர். பசியோடு விடுதியைத் தேடிய அவர்களைப் பற்றிய செய்தி கிராம அதிகாரிகளுக்குப் பரவ, அவர்கள் குருக்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தோடு காவலர்களால் கைது செய்யப்பட்டனர். வடக்குப் பகுதி கவுன்சிலின் காவலனான Earl of Huntingdon என்ற அதிகாரியின் முன்பாகக் கொண்டுவரப்பட்டனர். இங்கிலாந்தினுள் இரகசியமாக நுழையும் குருக்களைப் பிடிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவனான அவன் மிகக் கடுமையாக விசாரித்தான். விசாரணை யில் ஹென்றி தாம் ஒரு குரு. அதுவும் சேசுசபை குரு என்பதை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் சேசுசபை குருக்களே இங்கிலாந்தில் சுத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் கொண்டுவர மிகவும் முனைந்திருந்தனர். அதனாலேயே பதித ஆட்சியாளர்கள் அக்குருக்களை வேட்டையாடி வந்தனர். தாம் எங்கு செல்கிறோம். யாரால் அனுப்பப்பட்டோம். யாரிடம் செல்கிறோம், உதவியவர்கள் யார். யார் என்ற விபரங்களையெல்லாம் வெளியிட மறுத்த சங். வால்போல் எத்தகைய கொடுமையையும் எதிர்கொள்ள ஆயத்த மானார். ஆனால் அவரோடு பயணித்து வந்த இரு இளைஞர்கள் பயந்துபோய் தாங்கள் ஒழித்து வைத்திருந்த ஆவணங்களைப் பற்றியும் வெளிப்படுத்திவிட அவர்கள் விடுவிக்கப்பட்டு வால்போல் சுவாமி கைது செய்யப்பட்டார்.

சேசுசபை குரு பிடிபட்டார் என்ற செய்தி எங்கும் பரவ, விசாரிப்பதற்காக குருக்களை வேட்டையாடவென்று ஏற்படுத்தப் பட்ட Topcliffe என்ற அதிகாரி லண்டனிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் விசாரித்தும் எந்தவிதமான பதிலையும் வால்போல் சுவாமி யிடமிருந்து பெறமுடியவில்லை. எனவே அவர் York சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே கிடைத்த அவகாசத்தில் சங். வால்போல் தாம் பிடிபட்டது. விசாரிக்கப்பட்டது போன்ற விபரங்களை கடிதங்களில் குறிப்பிட்டு, Yorkshire-ல் இருக்கும் சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹால்ட்பை (Richard Holtby) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதில்: "டாப்கிளிஃப் என்னை லண்டன் டவர் சிறைக்கோ, Bridewell சிறைக்கோ கொண்டுசென்று வதைத்து உண்மையைக் கறந்துவிடுவதாகப் பயமுறுத்தினான். நான் அவனிடம் நமதாண்டவர் என்னை எந்த கொடுமையிலும் வேதனையிலும் பயத்தாலும், அவரது தெய்விக மகத்துவத்திற்கு விரோதமாகவோ அல்லது எனது மனசாட்சிக்கு விரோதமாகவோ எதுவும் செய்ய அனுமதிக்கமாட்டார். அவருக்கு விரோதமாக என்னைப் பேசவிடமாட்டார் என்று ...." (Yepes Historia particular, 1599) πάτη குறிப்பிட்டார்.

எனது விசுவாசத்தின் காரணமென்ன. திருச்சபைக்கு விரோதமான புராட்டஸ்டாண்டாரின் கொள்கை பற்றிய எனது கருத்து என்ன, திவ்விய நற்கருணை. பாப்பரசர் பற்றிய எனது சுருத்து என்னவென்பதையெல்லாம் எழுதி தரும்படி கட்டளையிட்டுள்ளனர். எனவே இக்கடிதத்தை இப்போது சுருக்கமாக எழுதுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்" )Yepes. Hist partic, P. 685) is on. York சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடியாததால் கோபமடைந்த விசாரணை அதிகாரி அவரை கடுமையாக வதைக்க லண்டன் டவர் சிறைச்சாலைக்கு மாற்றும்படி உத்தரவிட்டான். அங்கே வால்போல் சுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!

எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும் சங். ஹென்றி வால்போல் சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடிய வில்லை. இதனால் 1594 பிப்ரவரி 24-ம் நாள் லண்டன் /வர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சால்ட் டவச் (Salt Tower) என்ற கட்டிடத்தில் முதல் தன அறையில் இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே போதிய உணவும். மூட துணியும் வழங்கப்படாது துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் எப்போதும் தேவ சித்தத்தையுடையவராகவே இருந்து அனைத்தையும் இங்கிலாந்து மனத்திரும்ப ஒப்புக்கொடுத்தார்.

தமது கட்டளை ஜெபத்திலுள்ள சங்கீதங்களை வாய்விட்டு பாடிக்கொண்டும், தமது மன ஓட்டங்களை அங்குள்ள மரச்சட்டங்கள். கதவுகளில், கையில் கிடைத்த கற்களால் கீறி, வரைந்து வெளிப்படுத்திக் கொண்டும் வந்தார். அவைகளில் தனது பெயரையும், சேசு சபையின் சின்னமான "IHS" என்ற ஆண்டவரின் திருநாகத்தையும், "பரியே" என்ற வார்த்தைகளையும், கிறீஸ்துவின் காயங்களோடான கைகள், பாதங்கள் ஊடுருவப்பட்ட கிறீஸ்துவின் இருதயம் போன்றவற்றை செதுக்கினார். அவை அவரது விசுவாசத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்தன. அவற்றில் மனதிறைவு கொண்டர். (அவர் செதுக்கிய இந்த எழுத் துக்களையும். படங்களையும் இன்னமும் அங்கே. லண்டன் டவர் சிறையின் சால்ட் டவர் சிறைகூடத்தின் முதல் தளத்தில் அவர் தங்கிமரித்த அறையில் காணவாம்.) மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. வேதம் போதிக்க இங்கிலாந்திற்கு வந்த குருக்கள், அவர்கள் பெயர்கள் அவருக்கு உதவும் சுத்தோலிக்க  மக்கள் யார்,யார் என்றெல்லாம் கேட்டு விசாரித்தனர். அனைத்திற்கும் பதில் தர மறுத்த சுவாமி மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். இடுப்பில் முரட்டுக் கயிற்றால் சுட்டி தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார்.
(அர்ச். ஹென்றி வால்போல் சிறைச் சுவரில் செதுக்கிய எழுத்துக்கள்)
ரங். வால்போல் சுவாமி அனுபவித்த கொடூர சித்திரவதைகளைப் பற்றி இங்கிலாந்தின் ரோ அதிபரான சங் ஹென்றி கார்நெட் சுவாமி 1595 அக்டோபர் 23-ல் எழுதிய கடிதத்தில்: “முத் வால்போல் சுவாமி லண்டன் சிறைச்சாலையில் கொடிய துன்புத்கையும் வறுமை யையும் அனுபவித்தார். படுக்க படுக்கையில்லாமல், உடுத்த உடை இல்லாமல் கடுங்குளிரில் விடப்பட்டார். அவர் மீது இரக்கப்பட்ட சிறை காவலாளிதான், சிறிது வைக்கோல்களைக் கொடுத்துப் படுத்துக் கொள்ள  உதவினான். பொது விசாரணையின் போது தந்தையவர்கள், நான் 14 தடவைகள் கொடூரமாய் வாதிக்கப்பட்டதாகவும், 6 தடவைகள் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும். கூரிய இரும்பு கொக்கிகளால் இரத்தம் வர தசை கிழிய விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டார். சிறிதும் தூங்கவிடாது உபாதிக்கப்பட்டார். அங்கே நீதிபதிகளுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததால் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

அரசி எலிசபெத்தை கொலை செய்ய முயன்றார் என்ற பழி சுமத்தப்பட்டது. இதனை கடுமையாக மறுத்த சங், வால்போல் சுவாமிக்கு மரண தண்டனை விதிக்க பிரபுக்கள் சபை முடிவெடுத்தது. 3 நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்படும் போது தன்னிலை விளக்கம் கொடுத்தார்

வெளியிலிருந்த சங், ஹென்றி வால்போலின் நண்பர்கள் அவரை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அதற்கு அவரை இணங்கச் செய்யவேண்டும் என்று முனைந்தனர். தாம் காம்பியன் சுவாமியைப் போல வேதசாட்சி முடியைப் பெற ஆசித்த அவர், அவர்களது இந்த முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தார். அவர்களது நெருக்கிடை அதிகமாகவே சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹாலட்பை சுவாமிக்கு தமது நிலையையும் நண்பர்களின் முயற்சிகளையும் கூறி தமக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டு அனுப்பினார். அதற்கு அவர், வால்போல் சுவாமி சிறையிலிருந்து தப்பிப்பதானது ஏற்கனவே York Castle சிறையில் அடைபட்டிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு பெரும் கேடாக அமையும் என்று எச்சரித்தார். இதையறிந்து தப்பிக்க வைக்கும் தமது நண்பர்களின் முயற்சிகளுக்கு இணங்க மறுத்து விட்டார். 

இதுபற்றி சங். ஹாலட்பை சுவாமிக்கு எழுதிய கடிதத்தில் "தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களது ஆலோசனை மகிழ்ச்சியைத் தருகிறது. அது நமது ஆண்டவரின் கரத்திலிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ளுகிறேன். (தப்பிக்கும் திட்டம்) மற்றவர்களின் திருப்திக்காக மட்டுமே. ஆதலால் உங்களுக்கு வெளிப்படுத்தி ஆலோசனையைக் கேட்டேன். மற்றபடி எனது விருப்பம் அதுவல்ல... அர்ச். இராயப்பரை, தமது சம்மனசானவரை அனுப்பி சிறையிலிருந்து ஆண்டவர் விடுவித்தாரென்றால், அது எதற்காக? அவர் பரிசுத்த திருச்சபையின் பொதுத் தந்தையாகவும், மேய்ப்பனாகவும் விளங்குவதற்கும் அந்த நமது அப்போஸ்தலிக்க தலைமை இடத்தை உரோமையில் நிறுவுவதற்காகவுமே. ஆனால் எனக்கு அப்படியல்ல, எனக்கு நான் இருக்கும் சிறைகூடமே உரோமை. இதைவிட சிறப்பான முறையில்  ஆண்டவருக்கு ஊழியம் செய்ய என்னால் முடியுமென்று எனக்குத் தெரியவில்லை... இங்கேயிருந்தே எனது விசுவாசத்தை அறிக்கையிட முடியும். என்னை தவறாது காத்துவருவதற்காக நமதாண்டவர் சேசு கிறீஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு விசாரணை கவுன்சில் தலைவரால் ஐந்து தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எனது நோக்கமென்ன? 

"எனது அன்புக்குரிய பிரபுக்களே, தான் மூன்று காரியங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதாக அறிகிறேன். 

1-வது, நான் ரோமை பரிசுத்த ஸ்தானத்தின் (Holy see) அதிகாரத்தால் பட்டம் பெற்ற குருவானவர். 

2-வது. நான் சேசு சபையினன். 

3-வது, குருவானவரும். சேசு சபையினரான எனது அழைத்தளின் ஊழியமான ஆன்மாக்களை சர்வேசுரனுக்கு பெற்றுத் தருவதற்காக எனது நாட்டிற்கு வந்தது. 

இந்த மூன்றில் எதுவும் தேசத் துரோகமான காரியங்கள் அல்ல குருக்கள் கிறீஸ்துவின் அழைத்தலின்படி உலகிற்கு போதித்து மக்களை மனந்திருப்ப அழைக்கபட்டவர்கள். இங்கிலாத்து தேசந்திற்கு முதன் முதலில் சுவிசேஷ ஒளியைக் கொண்டு வந்தவர்களும் குருக்கலே. ஆகையால் குழுக்கள் ஒரு துரோகியாக இருக்க முடியாது" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி Ewenn என்பவர், “அப்படியானால் மத விஷயத்தில் அரசியின் சட்டத்திற்கு கீழ்படித்து, அரசியே திருச்சபையின் தலைவர், பாப்பு அல்ல என்பனத ஏற்றுக்கொள்கிறாயா?" என்று கேட்டார். அதற்கு சங். வால்போல் சுவாமி மறுமொழியாக, நாம் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்ததால் இங்கிலாந்தில் என்ன சட்டத்தைக் கொண்டு வத்துள்ளனர் யன்பதை அறியவில்லை. ஆகையால் அதற்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை என்று கூறியவர், ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வேசுரனுடைய சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லாதே போனால் அது உடன்பாடற்றதுதான். உலக அரசர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிவது, பரலோக பூலோக உன்னத அரசரான சர்வேசுரனுக்கு நாம் கீழ்ப்படியும் கடமையைவிட மேலான நல்ல சர்வேசுரனுக்கு கீழ்ப்படிவதே மேலானது" என்று பதிலளித்தார்.

பின்னர் தொடர்ந்து, "அரசிக்காக நான் ஆண்டவராகிய கடவுளிடம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறேன். அவரே அவளை தமது இஸ்பிரித்துசாத்துவால் ஆசீர்வதிப்பாராக... சர்வேசுரனே எனது சாட்சி இங்கே கூடியிருக்கும் எனது மரணத்தை விரும்பும் மேன்மை மிக்கவர்களின் முன்னிலையில் கூறுகிறேன். நான் உங்களது ஆண்ம இரட்சணியத்தையே விரும்புகிறேன். இதற்கு, நித்திய மகிழ்ச்சிக்கு ஒரே மார்க்கமாகத் திகழும் மெய்யான கத் விசுவாசத்தில் வாழ்வீர்களாக..." என்று கூறினார்.

நீதிபதிகளில் ஒருவரான சர். ஜான் சவிலா (Sir John Savila) என்பவன்  வால்போல் சுவாமியை துரோகி என்று குற்றம் சாட்டி அதற்கு ஆதாரமாக ஸ்பெயின் நாட்டு அரசரோடும், சேசு சபை குருக்களான சங். பெர்சன்ஸ் (Persons) சுவாமி மற்றும் சங். ஹோல்ட் (Holtby) சுவாமியிடமும் அவர் சில காலம் தங்கியிருந்து நட்புறவு கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தினான். பின்னர் நீதிபதிகள் சங், வால்போல் சுவாமி மேன்மை மிக்க அரசியின் குடிமக்களை ஈட்டத்தால் நிறுவப்பட்ட மதத்திலிருந்து மனம் மாற்றுவதற்காகவும், குழப்புவதற்காகவும் ரோமை ஸ்தானத்தோடு அவர்களை ஒப்புர வாக்குவதற்காகவும் அவர் திரும்பி வந்துள்ளார் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பதில்மொழியாக சங், வால்போல் சுவாமி, “விசாரணை அதிகாரிகளான பிரபுக்களே! இதோ! நானே விரும்பி இவைகளை ஏற்று அறிக்கையிடுகிறேன்: ஆம்! நான் ஒரு குருவானவர் சேசு சபையின் உறுப்பினர். எனது தேசத்தை சுத்தோலிக்க சத்திய விசுவாசத்திற்கு மனந்திருப்பவும். பாவிகளை மனஸ்தாபத்திற்கு அழைக்கவும்தான் வந்தேன். ஆம்! இவைகளை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன். மறுக்கவில்லை. இவை எனது அழைகத்தலின் கடமை. எனது இந்த அழைத்தலுக்கு வேறுபட்டு எதுவும் இருப்பின் எனக்குச் சொல்லுங்கள். அதே சமயம் உங்கள் மனசாட்சியின்படியும் நீங்கள் ஒருநாள் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

அவரது பதிலில் தொனித்த யதார்த்தத்தையும். உண்மையையும் உணர்ந்து உள்ளம் கலங்கினாலும், நீதிபதிகள் "இவன் குற்றவாவி தேசத்துரோகி" என்று தங்களது தீர்ப்பைக் கூறினார்கள். அதன் பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சங், வால்போஸ் சுவாமி, சங். ஹோல்ட்பி (Holtby) சுவாமி என்பவருக்கு கடைசியாக எழுதியக் கடிதத்தில் "... நாளை மறுநாள் நான் தூக்கிலிடப் படவுள்ளேன். நமது தந்தையர்கள், சகோதரர்களின் மேலான ஜெபங்களைக் கேட்கிறேன். உண்மையான கத்தோலிக்க இதயங்கள் அனைவரோடும் நான் மகிமையோடு இணைந்து, நமது சர்வேசுரனும் சிருஷ்டிகரும், மீட்பரும், அர்ச்சியசிஷ்டவர்களிடமும் ஜெபிக்கிறேன் என்பதை இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை... லண்டன் டவர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த நாட்களைப் பற்றி உங்களிடம் எதுவும் கூறவில்லை. அதனை மோட் சத்தில் நாம் மீண்டும் சந்திக்கும்போது அறிந்து கொள்வீர்கள்" என்று குறிப்பிட்டார்.

1595 ஏப்ரல 7 ல் சங். ஹென்றி வால்போல் சுவாமி Douai குருவான ச. அலெக்ஸாண ராவ்லின்ஸ் சுவாமியுடன் York Castleலில் இருந்து இழுத்துவரப்பட்டார். ஒரே கயிற்றால் தலைவிலிருந்து கால் வரைக் கட்டப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ளும் ஆறுதலைப் பெற்றனர். கைகிகள் இருவரும் Knavesmire என்ற கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் ராவ்லின்ஸ் சுவாமி தூக்கிலிடப்பட்டு உடல் வெட்டப்பட்டு வேதசாட்சியமடைந்தார். அதனைக் கண்டாவது, மனம் மாறுவார் என்று நினைக்கப்பட்ட வால்போல் சுவாமி மிகுந்த துணிவோடும் உற்சாகத்தோடும் தூக்குமேடையில் ஏறினார். அருகி லிருந்த அதிகாரிகள் அரசியின் புராட்டஸ்டாண்ட் ஆங்கிலிக்கன் சபையை ஏற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறினார்கள். அப்போது "அரசியே திருச்சபையின் தலைவர்" என்பதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு, “அவள் தானே உயர்ந்தவள் என்று கூறிக் கொள்கிறாள். ஆனால் நான் அதனை ஏற்கமாட்டேன். கடுமையாக மறுக்கிறேன்" என்று திடமாகக் கூறினார். அதனைக் கேட்ட அதிகாரிகள் "ஆஹா! இது தேசத் துரோகம்” என்று கூறினர்.

... ஆனால் சங். வால்போல் சுவாமி அமைதியாக தமது சாவுக்குக் காரணமானவர்களுக்காக ஜெபித்தார். பின்னர் சற்று உரத்தக் குரலில் "பரலோக மந்திரத்தை" ஜெபித்தார். பிறகு "அருள்நிறை" மந்திரத்தை தொடங்கி ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நின்றிருந்த ஏணி அகற்றப் பட முட்டு சுருக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. அவரது புனித உடல் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் விரைத்தவாறு தொங்கியது. இறக்கும்வரை அவர் உடல் தொங்கவிடப்பட்டு, பின்னர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. அன்று 1595 ஏப்ரல் 7-ம் நாள். ஆம்! அவரது மனங்கவர்ந்த சங். எட்மண்ட் சுவாமியின் வேதசாட்சியத்தின் போது சிதறிய இரத்தத் துளிகள் தம்மீது பட்டு சரியாக 14 ஆண்டுகள் 97 நாட்களுக்குப் பிறகு வேதரா'சியமடைத்தார் ஹென்றி வால்போல்!

அர்ச். ஹென்றி வால்போலே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!





சனி, 18 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 14 - அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ (Margaret Clitherow)


அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ





 அன்று 1586 மார்ச் 25-ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். 30 வயதே நிரம்பிய குடும்பத் தலைவியான மார்க்கரேட் கிளித்தேரோ என்ற பெண்மணி தண்டனை

நிறைவேற்றப்படும் இடத்திற்கு மிகவும் அமைதியாக ஆனால் மிகுந்த உற்சாகத்துடன் வந்தாள். அவளது நிர்மலமான முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிய, சற்று நின்றவள் குனிந்து தனது காலுறைகளையும், காலணிகளையும் கழற்றி வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் அன்னாளிடம் கொடுத்து அனுப்பினாள். அவளும் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் எழவே, மகளுக்கு அந்தப் பரிசு!

இரவு வெகு நேரம் விழித்திருந்து பாப்பரசருக்காகவும், கர்தினால்மார், ஆயர்கள், குருக்கள், ஏன் தன்னை சாவுக்குத் தீர்ப்பிட்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்திற்காகவும் மன்றாடியிருந்தவளது உள்ளம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. அங்கே மேடையில் இருந்த நகர அதிகாரி அவளது குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கத் தூண்டவே, "இல்லை, இல்லை அதிகாரியவர்களே!, நான் எனது ஆண்டவர் சேசுவின் அன்பிற்காக சாகப் போகிறேன்" என்று பதிலளித்தாள்.

பின்னர் அவள் கூர்மையான கற்பாறையில் கிடத்தப்பட அவளது கரங்கள் சிலுவை அடையாளம் போல விரிக்கப்பட்டு இரு கம்பங்களில் கட்டப்பட, அவள் உடலில் ஒரு இரும்பு கதவு போடப்பட்டது. அந்த கதவு அவளது தேகத்தை மறைத்துக் கொள்ள அதன் மீது பெரும் பாரச் சுமைகள் போடப்பட்டன! அந்த பாரச் சுமையோடு இரும்பு கதவு அவளை நசுக்க அந்த இளம் பெண்ணின் மெலிந்த, மெல்லிய தேகம் துடித்தது! அவள் அனுபவிக்கும் அந்த வேதனை கைகளின் அசைவுகளில் தெரிய, எந்த விதமான அழுகையோ, அவலக் குரலோ எழவில்லை. 15 நிமிடங்கள் அந்த பாரத்தால் நசுக்கப்பட்ட அவளது கரங்கள் "சேசு! சேசு! என் மீது இரக்கம் வையும்" என்ற இறுதி மன்றாட்டோடு மெல்ல மெல்ல அசைவின்றி விரைத்துப் போயின! ஆம்! அந்த பெண்மணி மரணமடைந்து விட்டாள். உடல் நசுக்கப்பட்டு வேதசாட்சியமடைந்து விட்டாள்!

அவள் செய்த குற்றம் என்ன? கத்தோலிக்கக் குருக்களை தனது இல்லத்தில் பாதுகாத்து காப்பாற்றியது! கத்தோலிக்க பூசையைக் கண்டது!! 

யார் அந்த வேதசாட்சி? அவள் தான் அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ, "யார்க் நகரின் முத்து" என்று போற்றப்படும் மார்க்கரேட் 1556-ம் வருடம் யார்க் நகர ஷெரிப்பின் தலைவரான தாமஸ் மிடில்டோன் என்பவரின் மகளாகப் பிறந்தவர். புராட்டஸ்டாண்ட் மதத்தைச் சார்ந்த அவள் தமது 15-வது வயதில் செல்வந்தரான ஜான் கிளித்தேரோவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இயல்பிலேயே புண்ணியவதியாகத் திகழ்ந்த அவள் திருமணமான 3 வருடங்களில் கணவனின் உத்தரவோடு சத்திய வேதத்திற்கு மனந்திரும்பினாள்.

அக்காலத்தில் 8-ம் ஹென்றியால் ஏற்படுத்தப்பட்ட புராட்டஸ்டாண்ட் பதிதம் நிலைகொண்டிருந்தது. தற்போது ஆட்சி புரிந்த முதலாம் எலிசபெத்தும் கொடூரமாக கத்தோலிக்கத் திருச்சபையை துன்புறுத்தி வந்தாள். எவ்வளவுக்கென்றால், 1585-ல் இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்கக் குருக்கள் எவருக்கும் இருப்பிடமோ, வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தையே பிரகடனப்படுத்தினாள். ஏற்கனவே கத்தோலிக்கப் பூசையில் பங்கேற்கவோ. கத்தோலிக்கப் பிரசுரங்களைக் கொண்டிருக்கவோ கூடாது என்ற கடுமையான தடை இருப்பதால் இங்கிலாந்தில் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் துன்புற்றனர். வெளிப்படையாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற குருக்களும், விசுவாசிகளும் அஞ்சினர். அதற்கான பதுங்கும் இடத்தைத் தேடவேண்டி வந்தது.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்த மார்க்கரேட் தனது இல்லத்திலேயே பதுங்கும் அறைகளை அமைத்து அங்கே குருக்களைப் பாதுகாத்து, அவர்கள் நிறைவேற்றும் பூசையைக் கண்டுவந்தாள். அவள் எந்தவிதமான அச்சத்திற்கும் இடம் தராமல் "சர்வேசுரனின் வரப்பிரசாதத்தால் எவ்வளவு குருக்கள் வரமுடியுமோ, அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடவுளின் கத்தோலிக்க ஊழியத்துக்கு எவ்வளவு முடியுமோ அனைத்தையும் செய்வேன்" என்று அடிக்கடிக் கூறுவாள்.

அவளது கணவன் தனது மனைவியின் அனைத்து காரியங்களிலும் உறுதுணையாக இருந்தார். தங்களது பிள்ளைகளான ஹென்றி, வில்லியம், மற்றும் அன்னாளை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கவும் விரும்பினர். இதற்காக மூத்த மகன் ஹென்றியை கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அதுவே அரசு அதிகாரிகள் அவள் மீது சந்தேகம் கொள்ள காரணமாயிற்று. அதனால் அவளது இல்லம் படை வீரர்களால் சோதிக்கப்படவே, பூசை புத்தகங்களும், ஆயத்தங்களும். பூசை மந்திரங்களும் இறுதியாக குருக்களின் பதுங்கு அறைகளும் கண்டுபிடிக்கப்படவே மார்க்கரேட் சிறைபிடிக்கப்பட்டாள்.

சொந்தப் பிள்ளைகள் சாட்சியாக்கப்பட்டதால் கொலை பாவம் அவர்கள் மீது விழ விரும்பாத மார்க்கரேட் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, தான் செய்த காரியங்களுக்கு நியாயம் கற்பித்தாள். தனது கத்தோலிக்க விசுவாசத்தை வீரத்தோடு அறிக்கை யிட்டாள். அவள் விசாரணைக்கு மறுத்ததால் இங்கிலாந்து சட்டப்படி அவள் நசுக்கப்பட்டு மரணமடைய தீர்ப்பிடப்பட்டாள். அதனைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த அவள் ஓ! சர்வேசுரா உமக்கு நன்றி. இத்தகைய நல்ல மரணத்திற்கு நான் தகுதியானவள் அல்ல" என்று கூறினாள்.

மரண தண்டனை பெறும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் கொண்ட கத்தோலிக்க விசுவாசத்துக்காக நசுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

அவள் கொல்லப்படும் போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. மரண தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் சற்று நேரம் ஜெபிக்க விரும்பிய அவளிடம் அருகே இருந்த புராட்டஸ்டாண்ட் போதகன் "மார்க்கரேட் நானும் உன்னோடு ஜெபிக்கிறேன்" என்று கூறினான். அதற்கு உடனே "இல்லை, இல்லை என்னோடு நீ ஜெபிக்க முடியாது. பதிதர்களோடு விசுவாசிக்குப் பங்கில்லை. நான் உமக்காக ஜெபிக்கிறேன். நமது அரசி எலிசபெத்துக்காக அவள் மனந்திரும்பி, கத்தோலிக்க மதத்திற்கு வரவும், திருச்சபைக்கு சுயாதீனம் கொடுக்கவும் ஜெபிக்கிறேன்" என்று மறுப்புத் தெரிவித்தவள். சற்று நேரம் ஜெபித்தபின் தன்னையே கொலைஞர்களிடம் கையளித்தாள். கூரியக் கற்பாறையில் கிடத்தி, உடல் மேல் கனமான இரும்புக் கதவை போட்டு அதில் அதிகமான பாரத்தை வைத்து உடல் நசுக்கப்பட்டு அவள் வேதசாட்சியத்தைத் தழுவினாள்.

அவளது குழந்தைகளான ஹென்றி, வில்லியம் ஆகியோர் கத்தோலிக்கக் குருவாகவும், ஒரே மகள் அன்னாள் பிரான்ஸ் நாட்டில் லூவேன் நகர் அர்ச், உர்சுலா கன்னியர் சபையில் சேர்ந்தாள்.

பாப்பரசர் 6-ம் சின்னப்பர் 1970, அக்டோபர் 25-ம் நாளன்று அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கினார்.

அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


source: Salve Regina - March 2008 issue.


To Read more about saints in Tamil - Click Here


வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38 


அர்ச். சாமிநாதரை சந்தித்த டயானா , அவரிடம், தான் சகோ. ரெஜினால்டுவின்ஞானதியானபிரசங்கங்களினால் சர்வேசுரன்பால் கவர்ந்திழுக்கப்பட்டதைப் பற்றி தெரிவித்தாள். மேலும் இதற்கு, தனது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தாள். உத்தம கத்தோலிக்க ஜீவியத்தை முன்னிட்டு, தான் அவருடைய கன்னியர் சபையில் சேர விரும்புவதாகவும், அதற்கு அவர் உதவ வேண்டுமென்றும், அர்ச். சாமிநாதரிடம் விண்ணப்பித்தாள். சாமிநாதர் அவளிடம், "குழந்தையே! நீவிசேஷ விதமாக சர்வேசுரனை சேவிக்க விரும்பவதை, உன் வீட்டில் இருந்து கொண்டே செய்ய முடியும். இது, உனக்கு விளங்கும் என்று நம்புகிறேன்" என்றார். "ஆம் சுவாமி. என் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசிக்கிறேன். 

ஆனால், அது மட்டும் பற்றாது. நான் எனது நேசத்தை மட்டுமல்லாமல், என்னிடமுள்ள அனைத்தையும், இதுவரைக்கும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இனி எனக்கு சொந்தமாகப்போகும் யாவற்றையும் நம் நேச ஆண்டவருக்குக் காணிக்கையாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்வது போல, துறவற ஜீவிய அந்தஸ்துடன் சர்வேசுரனுக்கு ஊழியம் புரிய ஆசிக்கிறேன்" என்று டயானா கூறினாள். சாமிநாதர், அவளிடம், "மகளே! ஞான காரியங்களில் எப்பொழுதும் நிதானமாகவே முடிவு எடுக்க வேண்டும். தற்பொழுது, உன் இருதயத்தை அர்ப்பணிப்பதையே, ஆண்டவர் விரும்புவார். உத்தமமான துறவற அந்தஸ்திற்கு ஏற்ற காணிக்கைகளை நம் ஆண்டவருக்கு, நீ பிறகு அர்ப்பணிக்கலாம்'' என்றார். அதற்கு டயானாவும் சம்மதித்தாள். அதன்படி, அர்ச்.சாமிநாதர் தேர்ந்தெடுத்த ஒரு நாளில் அர்ச். நிக்ககோலாஸ் தேவாலயத்திற்கு டயானா வந்து பெரிய பீடத்திற்கு முன் முழந்தாளிட்டாள். அங்கு சகோ.ரெஜினால்டுவும், சகோ.குவாலா, சகோ.ருடால்ஃப் முன்னிலையில், டயானா , தன் நேச ஆண்டவருக்கு தன்னை முழுவதும் நித்தியத்திற்குமாக அர்ப்பணிக்கும் ஜெபத்தை ஜெபித்து துறவற வார்த்தைப்பாடு கொடுத்தாள். அர்ச். சாமிநாதருடைய இருதயம் அகமகிழ்வால், திடீரென்று மேலே வெகு தூரம் தாவியது. அவருடைய புதுமைமிகு தேவவரப்ரசாத சலுகையினால், தனக்கு முன்னால், முழங்காலில் இருக்கும் இச்சிறுபெண்ணிற்கு நிகழவிருக்கும், எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார். அவை அதிர்ச்சிக்குரியவை களாகவும், அதேநேரத்தில் ஆறுதலளிப்பவையாகவும் இருந்தன. அதன்பிரகாரம், டயானா , வார்த்தைப்பாடு கொடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாக மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாள். பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய கன்னியர்மடம் நிறுவப்படும் என்று காத்திருக்கும் வேளையில் தன் வீட்டாருக்கு தெரியாமல், பொலோஞாநகரின் எல்லைப்புறத்திலிருக்கும் ரொன்சானோ என்ற ஊரிலுள்ள அர்ச். அகுஸ்தினாருடைய கன்னியர் சபைமடத்தில் சேர்ந்தாள்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளை வீட்டிற்கு இழுத்துவந்தனர். வீட்டிற்கு எதிரான அவளுடைய போராட்டத்தை நிரந்தரமாக முடமாக்கிவிட்டனர். இருப்பினும், அவள் தனது வார்த்தைப்பாட்டின்படி, இவ்வுலக சிருஷ்டிகளிடமிருந்து விலகி, தன் இருதயத்தை தம் சிநேக தேவனான திவ்ய இரட்சகரிடமே நிலைத்திருப்பதில் பிரமாணிக்கமாக இருந்தாள். இறுதியில் தனது குடும்பத்தினருடைய உதவியினாலேயே பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய முதல் கன்னியர்மடத்தை நிறுவுவதில் டயானா வெற்றி பெற்றாள். விரைவில், சகோ.டயானா உத்தம சாங்கோபாங்கத்தில் வெகுவாய் உயர்ந்து, அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தாள். அதன்படி, அர்ச்சிஷ்டவளாக மரித்தபிறகு, அர்ச்.சாமிநாத சபைகுருக்கள், கன்னியர், மூன்றாம் சபையினர் அனைவரும், "முத்தி பேறுபெற்ற டயானாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று மகிழ்ச்சியுடன் அவளிடம் ஜெபிக்கும்படியாக, விரைவிலேயே, அவள் பீடத்திற்கு உயர்த்தப்பட்டாள்.


திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 4 - Life History of Rose of Lima in Tamil

 அர்ச்.லீமா ரோசம்மாள்(1585-1617):

ஜீவிய சரித்திரம்:

திருநாள்:ஆகஸ்ட் 30ம்தேதி


தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1585ம் ஆண்டு ஸ்பானிய பெற்றோரான கஸ்பார், ஒலிவா தம்பதியருக்கு 11வது குழந்தை யாக அர்ச். ரோசம்மாள் பிறந்தாள். பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால், பிறந்த உடனே அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து இசபெல் என்று அதற்கு அதனுடைய பாட்டியினுடைய பெயரையே வைத்தனர். குழந்தையின் முகமானது ஒரு அழகிய ரோஜா மலராக தோற்றமளித்துக் கொண்டு அந்த முகத்தை தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததையும் கண்டதால் அந்நகரத்து மேற்றிராணியாரான அர்ச்.துர்பியுஸ் குழந்தைக்கு “ரோஸ்” என்று பெயர் வைத்து கதிட்ரல் தேவாலயத்தில் ஆடம்பரமாக ஞானஸ்நானம் கொடுத்தார். “லீமா ரோஸ்” என்ற இப்பெயரே இறுதி வரை நிலைத்தது. குழந்தை பருவத்திலேயே ரோசம்மாள் சர்வேசுரனுடைய விசேஷ தேவவரப்ரசாத சலுகைகளை அடையப் பெற்றிருந்தாள். தவழ்ந்து நடக்கும் குழந்தை பருவத்திலேயே அவளுடைய தாயாருடைய அறைக்குள்ளிருந்த பெரிய பாடுபட்ட சுரூபத்தையே உற்று நோக்கியவளாக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தாள். 3 வயது குழந்தையாக இருந்தபோது, ரோஸ், அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிட்டது.

அப்போது அவள் அனுபவித்த மிக கொடிய உபாதனையை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் தாங்கிக் கொண்டாள். அப்போது அவள், “இதைவிட மாபெரும் வேதனையை நமது திவ்ய இரட்சகர் நமக்காக அனுபவித்தாரே” என்று கூறினாள். மற்றொரு சமயம், அவளுக்குக் காது வலி வந்தது. அது வலிக்கிறதா என்று அவளிடம் வினவியபோது, அவள், “ ஆமாம். கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் தமது முள்முடியினால் நமது நல்ல நேச ஆண்டவர் எவ்வளவு அதிகமாக வேதனையுற்றார்!” என்று பதில் கூறுவாள். ரோஸூக்கு நான்கு வயதானபோது திடீரென்று ஒரு நாள் ஜெபபுத்தகத்தை சரளமாக வாசிக்கலானாள். அவள் எப்படி அதை வாசிக்கக் கற்றுக்கொண்டாள் என்று வினவியபோது, திவ்ய குழந்தை சேசுவே அவளுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினாள். சின்ன ரோஸ் ஆடம்பரமான ஆடையலங்காரங்கள், அழகான உடைகளையெல்லாம் அணிவதற்கு விரும்ப மாட்டாள். இப்பூவுலகத்தைவிட பரலோகத்திற்கே அதிகம் சொந்தமானவளாக திகழ்ந்த தமது குமாரத்தியைப் பற்றி கவலையுற்றவளாக ரோஸின் தாயார், ஒலிவா, ரோஸிடம் பல சமயங்களில் உலகக் காரியங்களின் பொருட்டு மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள். சில சமயங்களில் வீண் உலக ஆடம்பரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்துவாள். இவ்வாறு பல சமயங்களிலும் ரோஸின் பொறுமையை சோதிப்பாள்.

 சின்ன ரோஸ் ஒருபோதும் பொறுமையை இழந்துவிடாமலும் தாய்க்கும் மற்ற பெரியவர்களுக்கும் கீழ்ப்படிவதிலும் எப்போதும் பிரமாணிக்கமுடன் இருந்தாள். அவளுக்கு 12 வயதானபோது, அவளுடைய தாய், ஒலிவா, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, ரோஸ், தான் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையில் உட்பட்டு விட்டிலேயே ஜெபதப பரிகார ஜீவியம் ஜீவிக்கப்போவதாகத் தெரிவித்தாள். அதை பலவிதத்திலும் வெகுநாட்களாக எதிர்த்தாலும் ஒலிவா, இறுதியில் அதுவே சர்வேசுரனுடைய திருவுளம் என்று அறிந்து கொண்டாள். லீமாவில் இருந்த அர்ச்.சாமிநாதரின் மடத்தில் அச்சபையின் துணைச் சகோதரராக ஜீவித்துவந்த மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.மார்டின் தே போரஸூம் அர்ச். லிமா ரோசம்மாளும் ஞான ஜீவியத்தில் இணைந்த நண்பர்களாக ஜீவித்தனர். அவர்கள் இருவரும் எல்லாம் வல்ல சர்வேசுரனுடைய மகத்துவமான இலட்சணங்களைப்பற்றியும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றியும் அடிக்கடி தியானித்து மகிழ்வர். பெரு நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த வறுமை பிணியைப் போக்குவதற்காக மூலிகை மருந்துகளை தயாரித்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களுடைய பிணியையும் வறுமையையும் நீக்குவர்.

அர்ச். லீமா ரோசம்மாள், அவளுடைய சகோதரர் ஃபெர்டினான்டுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கட்டிய, தபோதனர்களுக்கான ஒரு குகையிலேயே வாழ்ந்து வர திர்மானித்தாள். அது மிகச் சிறியதாக இருக்கிறதே என்று எல்லாரும் எதிர்த்தனர். உடனே அதற்கு அவள், “இது நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்கும் எனக்கும் தங்குவதற்கு போதுமான இடமாக இருக்கிறது” என்று கூறினாள். இந்தக் குகையிலேயே அவள் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், இரவு பகல் முழுவதும் நேச இரட்சகருடைய திவ்ய பாடுகளைப் பற்றிய தியானத்திலும் அதற்கு காரணமான தன்னுடையவும் உலகினுடையவும் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, ஜெபதவ பரிகார ஜிவியத்திலும் செலவழித்தாள். அவளுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆயினும், அவளுடைய 4வது வயதிலிருந்தே அவள் அப்பழங்களைத் தொட மாட்டாள். அதே போல் அர்ச்.லீமா ரோசம்மாள் மாமிச உணவை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை. காய்ந்த உரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் சில கசப்பான கீரைகளுமே அவளுடைய அன்றாட உணவாக இருந்தது. தபசு காலத்தில் அந்த உரொட்டித் துண்டுகளையும் சாப்பிட மாட்டாள். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ தான் அவள் உறங்கும் நேரம். அவள் தன் தலைமாட்டில் கரடுமுரடான பாறைகளையும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்திருப்பாள். அந்த சொற்ப நேர தூக்குமும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். 

அங்கு ஏற்படும் கொடூரமான கோடை உஷ்ணகாலத்திலும் பல நாட்கள் தண்ணீரே உட்கொள்ளாமல் தன்னையே ஒறுத்து ஜீவித்தாள். ஒரு முள்முடியை பின்னி அதைத் தன் முடி அலங்காரத்திற்குள் வைத்து மறைத்திடுவாள். எப்பொழுதும் அவள் தலைக்குள் குத்திக் கொண்டிருக்கும் இந்த முள்முடியுடனேயும் அதனால ஏற்படும் இரத்தக் காயத்துடனும் ஜீவித்து வந்தாள். மேலும், ரோஸ், தான் உடுத்தியிருந்த உடைக்குள் தன் உடல் முழுவதையம் ஒரு முரட்டு கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டவளாக, அதனால் ஏற்படும் வலியை ஒறுத்தலாக ஒப்புக் கொடுத்தும் ஜீவித்தாள். இரவு நேரங்களில் வெறுங்காலுடன் தோட்டத்தில் மிகப் பாரமான சிலுவையை சுமந்தபடி நடப்பாள். ஒரு வேலைக்காரியிடம் அதிக பளுவான விறகுக் கட்டைகளை தன் மேல் சுமத்தும்படி செய்வாள். அதுவும் அப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் அதனடியில் தான் விழும் வரைக்கும் அப்படிச் செய்யச் சொல்வாள்.

இவ்வாறு, தனது திவ்ய இரட்சகர் மேல் கொண்ட சிநேகத்தை முன்னிட்டு, ஒறுத்தல் செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் மிக நுட்பமான விதத்தில் அர்ச்.லீமா ரோசம்மாள் கடைபிடித்துவந்தாள்.

புண்ணிய கிரியைகளிலும் சாங்கோபாங்கத்திலும் உத்தமமான விதத்தில் ஜீவித்த அர்ச்.ரோசம்மாள், தன் குடும்பத்தினருக்குத் தேவைகளை சமாளிப்பதற்காக உழைத்து வருவாள். நல்ல பூவேலைபாடுகளுடன் துணிமணிகளையும் ஆடை ஆபரணங்களையும் நூற்பதில் கை தேர்ந்தவள். இத்தொழில் மூலம் தன் குடும்பத்திற்கு போதிய வருவாய் ஈட்டி வந்தாள். இவள் தன் தோட்டத்தில் பலவித பூச்செடிகளை பராமரித்து வந்தாள். அவற்றில் மலரும் பூக்களை விற்று வருவாள். தன் தோட்டத்து மலர்களால் அர்ச்.சாமிநாதருடைய மடத்துக் கோவிலில் இருந்த தேவமாதாவின் பீடத்தை தினமும் அலங்கரிப்பது இவளுக்கு மிகப்பிடித்தமான காரியம். அர்ச்.சாமிநாதர் சபையைச் சேர்ந்த மற்ற அர்ச்சிஷ்டவர்களைப் போலவே இவளும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று கலங்குவாள். ஏனென்றால், அதில் 10 மணி நேரம் வேலைக்குப் போய் விட்டால் மிதியான நேரம் ஜெபிப்பதற்கும் மற்ற புண்ணிய கிரியைகள் புரிவதற்கும் பற்றாமல் போகுமே என்று நினைப்பர். 

இப்பிரச்னையை இருவழிகளில் திர்த்தாள்: 

1) தூங்கும் நேரத்தை தவிர்த்தாள். 

2) மற்ற வேலை நேரம் முழுவதும் சர்வேசுரனுடன் ஐக்கியமாக ஒன்றிணைந்திருந்தாள். 

அதாவது அவள் வேலை நேரத்தில் தனது கரங்களில் நூற்கும் ஊசியைப் பிடித்திருந்தாலோ அல்லது மலர்களை பறித்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஜெபநேரத்தில் அவளுடைய கரங்கள் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டிருந்தாலோ, 24 மணி நேரமும், எப்பொழுதும், அவள் தனது பரலோக பத்தாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாள். அவள் நுட்பமாக எவ்வளவுக்கு தன்னைமுழுதும் சர்வேசுரனுடன் ஒன்றிணைத்து எப்பொழுதும் ஜீவித்தாளோ, அதே அளவிற்கு தான் செய்த அனைத்தையும் ஒறுத்தலாகவும் தபசாகவும் ஒப்புக் கொடுத்து வந்தாள். அநேக நேரங்களில் அவள் ஆழ்ந்த பரவசநிலையிலேயே தொடர்ந்து இருப்பாள்:

அவளுடைய தோட்டத்தில் அவள் வசித்து வந்த சிறு குகைக்கு தினமும் ஏராளமான மோட்சவாசிகள் வந்து அவளைப் பார்த்து செல்வர். கோவிலில் திவ்ய பலிபூசையின் போது திவ்ய நன்மை உட்கொண்டபிறகு, பல மணி நேரத்திற்கு காட்சி தியான பரவச நிலையிலேயே இருப்பாள். அவளை சுற்றிலும் மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கூட உணராதவளாக இருப்பாள். நரகிலிருந்து பசாசு கொடூரமான உருவத்துடன் அவள் முன்பாக நேரிடையாகவே தோன்றி அவளை வாதித்தது, சோதித்தது. ஞான வறட்சியில் நீண்ட நேரம் ரோசம்மாள் தனிமையில் விடப்பட்டாள். அத்தகைய தருணங்களில், அவள் ஆண்டவரிடம், “ஆண்டவரே! நீங்கள் என்னுடனிருந்திருந்தால், நான் இத்தகைய கொடூரமான சோதனைகளில் விடப்பட்டு சஞ்சலமடைந்திருக்க மாட்டேன்” என்பாள். அப்போது ஆண்டவர் அவளிடம், “ரோஸ்! நான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த சோதனைகளில் இவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறாயா?” என்று வினவினார். அர்ச். லீமா ரோசம்மாள் வேதசாட்சிய முடி பெறுவதற்காக அதிகம் ஜெபிப்பாள். வேதபோதக ஜீவியத்தின் மேலும் அதிகம் பற்றுடையவளாக இருந்தாள். அவள் வேதபோதகர்களுக்காக இடைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தாள். ஜப்பானில் நாகசாகியில் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட வேதபோதக குருக்கள் அந்த உன்னத முடியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அர்ச்.லிமா ரோசம்மாள்.

ஏனெனில் அவள் இறந்த அதே வருடத்தில் தான் அவர்களும் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டனர். ஒரு சமயம் டச்சுக்கார பதிதர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஸ்ப்ரில்பெர்கன் என்ற கடற்கொள்ளைக்காரன் 6 கப்பல்களில் கொள்ளையருடன் பெரு நாட்டின் காலவோ என்ற துறமுகத்தைக் கைப்பற்றினான். லீமா நகரத்தின் ஆண்மக்கள் அனைவரும் அவனுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முந்தின நாள் இரவு முழுவதும் சாந்தோ டோமிங்கோ என்ற தேவாலயத்தில் திவ்ய சற்பிரசாதநாதருக்கு முன்பாக அர்ச்.லீமா ரோசம்மாளும் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையைச் சேர்ந்த பெண்களும் சிறுபிள்ளைகளும் தொடர்ந்து 40 மணிநேர ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். லீமா நகரத்தையும் கைப்பற்றி அதன் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் பீரங்கியால் தரை மட்டமாக்குவதற்கு திட்டமிடுகிறான் என்ற செய்தி அறிந்ததும் அர்ச்.லீமா ரோசம்மாள், தன் முழங்காலுக்குக் கீழ் தொங்கிய தன் உடுப்பினை கத்திரியால் வெட்டினாள். “நமது திவ்ய சற்பிரசாதநாதரைப் பாதுகாப்பதற்கான போருக்காக என்னைத் தயாரிக்கிறேன். இப்போரில் நம் நேச ஆண்டவருக்காக உயிரைக் கொடுக்க விரும்புவோர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று மற்ற பெண்களிடம் கூறினாள். பிறகு மகா பரிசுத்த திவ்ய நற்கருணையில் விற்றிருக்கும் தன் நேச ஆண்டவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நம் திவ்ய இரட்சகர் கதிர்பாத்திரத்திற்கு மேலே தோன்றினார்.

ஆண்டவருடைய திவ்ய திருத்தலைமுடியிலும், திவ்ய நெற்றியிலும், திவ்ய திருக்கண்களிலும் முள்முடியிலும், திரு இரத்தம் ஒழுகி வடிந்துக் காய்நதிருப்பதைக் கண்டாள். ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்திலிருந்து கை கால்கள் மற்றும் மணிக்கட்டுகளிலும் திரு இரத்தம் ஓடி வழிந்து காய்ந்திருப்பதையும் கண்டாள்.

சேசுநாதர்சுவாமியின் திவ்ய திருவாய், இறுதி வாக்கியத்தை கூறியபடியே திறந்திருப்பதையும், காயப்பட்டும், விங்கியும் இருப்பதையும் கண்டாள். பிறகு அவள் தன் சிநேக ஆண்டவருடைய திவ்ய திருக்கண்கள் தன்னையே நேருக்கு நேராக உற்றுப் பார்ப்பதையும் கண்டாள். உடனே அவள் தன் நேச ஆண்டவரிடம், “ திவ்ய சற்பிரசாதத்தில் விற்றிருக்கும் என் நேச இரட்சகரே! இன்று உம்மை நான் காப்பாற்றுவேனாகில் நீர் மறுபடியும் சிலுவையிலறையப்பட மாட்டீர். நீர் எனக்காக சிலுவையில் தொங்கி மரித்தபோது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இப்பொழுது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறினாள். பிறகு அவள் தன்னைச் சுற்றி இருந்த மற்ற பெண்களிடம், “நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னோடு யாரெல்லாம் முன்வருவிர்கள்? அவருடைய எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு என்னுடன் யார் நிற்கப்போகிறிர்கள்? இதோ இங்கே, நமது சரீரங்களினால் மட்டுமே பாதுகாக்கப்படும்படியாக, நம்மேல் கொண்ட எல்லையில்லா சிநேகத்தின் பொருட்டு, நம் நேச ஆண்டவர் நம்மிடையே வீற்றிருக்கின்றார்! சகோதரிகளே உதவிக்கு வாருங்கள்! நாம் அனைவரும் நமது திவ்ய இரட்சகருக்காக ஒன்றாக இறப்போமாக! தேவநற்கருணையிலுள்ள நமது நேச ஆண்டவருடைய பரிசுத்த திவ்ய சரீரத்தை அவர்கள் அடைய வேண்டுமானால், முதலில் அவர்கள் நமது சரீரங்களை வெட்டி விழ்த்தட்டும். பிறகு வெட்டப்பட்ட நமது சரீரங்களின் வழியாக மட்டுமே அவர்கள் நம் ஆண்டவரை நெருங்க முடியும் என்பதை அந்த கடல் கொள்ளையருக்கு பறைசாற்றுவோம்!” என்று கூறினாள். 

மனித சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு உன்னதமான பரலோக சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டவளாக, அர்ச்.லீமா ரோசம்மாள் இவ்வாறு கூறக் கேட்டதும், தமது உன்னதமான பலவினத்தில், அதாவது ஒரு அப்பத்தின் வடிவில் விற்றிருக்கும் தங்களுடைய திவ்ய இரட்சகரைப் பாதுகாக்கும் கேடயங்களாக தங்கள் சரீரங்களையும் தங்களுடைய உயிரையும் கையளித்தல் என்ற ஏக தேவசிநேகமுயற்சியில் அங்கிருந்த பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவருடைய ஆத்துமங்களும் அசாதாரண முறையில் ஒன்றிணைந்தன. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலிருந்து தங்களுக்காகவோ அல்லது தங்களுடைய குடும்பத்தினருக்காகவோ பயத்தால் ஏற்படும் யாதொரு ஒரு அசைவுமின்றி, விரைவில் அந்த தேவாலயத்தில் நிகழப்போகும் (என்று அவர்கள் எண்ணியிருந்தனர்)

அவசங்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் எதிராக ஒரே ஆத்துமமாக ஒன்றித்து செயல்படுவதற்கு தயாராக இருந்தனர். இவ்வாறு அர்ச்.சாமிநாதர் 3ம்சபை உறுப்பினர்களான அர்ச்.ரோசம்மாளும் மற்ற பெண்களும் சாந்தோ டோமிங்கோ தேவாலயத்தில் மகா பரிசுத்த தேவநற்கருணையில் விற்றிருக்கும் தங்கள் நேச ஆண்டவரைப் பாதுகாப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த அதே சமயம், காலவோ என்ற இடத்தை கடற்கொள்ளையர் பீரங்கியால் இருமுறை தாக்கினர். அங்கிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்த சில வீடுகளை தரைமட்டமாக்கினர். கப்பல் தளத்தில் இருந்த தனது அறையில் கடற்கொள்ளையரின் தலைவன் ஸ்பில்பெர்கன் வெற்றிக்களிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மேஜை மீது காலவோ மற்றும் லிமா நகரத்தின் வரைபடம் இருந்தது. அந்நகரங்களின் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் தகர்ப்பதற்காக குறித்தான். அவன் வானத்தை நோக்கி ஆணவத்துடன் சிரித்தான். ஏனெனில் அவன் தன் ஆத்துமத்தை வெகுகாலத்திற்கு முன்பாகவே பெரும்பாவங்களினால் இழந்திருந்தான். பிறகு அவன் தன்னிடமிருந்த தொலைநோக்கிக் கருவியை எடுத்து அதன் லென்ஸைத் துடைத்தான். பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே புறப்படும் சமயத்தில் அவன் ஒருவித திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக, திடீரென்று அலறிக் கீழே விழுந்தான். 

அவன் விழுந்த 15வது நிமிடத்தில் அவனுடைய 6 கப்பல்களுடன் கடற்கொள்ளையர் அனைவரும் பெரு நாட்டைவிட்டு விரைந்து ஓடி மறைந்தனர். ஏனெனில் தலைவன் இல்லாமல் அவர்களால் சண்டைபோடமுடியாது. இவ்வாறு அர்ச்.லீமா ரோசம்மாளுடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் தயவாய் செவிசாய்த்தார். லீமா நகரத்தை சர்வேசுரன் அர்ச்.ரோசம்மாளின் ஜெபத்தினால் இவ்வாறு காப்பாற்றியதற்காக லீமா நகர மக்கள் அர்ச்.லீமா ரோசம்மாளை நன்றிபெருக்குடன் கொண்டாடியது.

ரோசம்மாள், தன் தந்தை, கொன்சாலோவின் உதவியுடன் கோவிலிலிருந்து விட்டிற்கு சென்றாள். “நமது நேச ஆண்டவருக்காக நம் உயிரை விடுவதற்கு என்ன அருமையான சந்தர்ப்பம் இது!” என்று கூறினாள். தொடர்ந்து கடைபிடித்துவந்த கடின தபசினால், பரலோகத்தின் தேவபத்தாவுடன் அவள் அடைந்த உன்னதமான காட்சி தியான ஜீவியத்தின் உச்சநிலை ஐக்கியமானது, பல சரீர அடையாளங்களினால் அர்ச்.ரோசம்மாளிடம் வெளிப்படையாக காணப்பட்டது. அவளுடைய சரீரம் முழுவதும் வேதனையாலும், பலவினத்தாலும் காய்ச்சலாலும், தலை முழுவதும் இடைவிடாத வலியாலும் வாதிக்கப்பட்டாள். தண்ணீர் அருந்தினால் கூட இறந்துவிடுவாள் என்பதால் குடிக்க தண்ணீரின்றி கொடிய தாகத்தினால் இறக்கும் வரைக்கும் வருந்தினாள்.

1617, ஆகஸ்ட் 24ம் நாளன்று, 31வது வயதில் இறுதி அவஸ்தை பூசுதலைப்பெற்று திவ்ய நற்கருணை நாதரை தனது இருதயத்தில் வரவேற்றபடியே பாக்கியமான மரணமடைந்தாள். லீமா நகர மக்கள் அனைவரும் துக்கித்தனர். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவள் மருத்துவம் செய்து குணமாக்கிய எண்ணற்ற நிக்ரோக்கள், செவ்விந்தியர், தேவதிரவிய அனுமானத்திற்கு அவளால் திரும்ப அழைத்து வரப்பட்ட மனந்திரும்பிய ஸ்பானியர்கள் மற்றும் எல்லா உயர்குடிமக்கள் அனைவரும் அவளுடைய பிரேதப்பெட்டிக்கு இருமருங்கிலும் முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தனர். 1671 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அர்ச்சிஷ்டவளாக பாப்பரசர் லீமா ரோசம்மாளை பீடத்திற்கு உயர்த்தினார்.†